மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை -3


கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-1

கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-2

கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-3

முந்தைய இரு இதழ்களில் கதூர்பா காந்தியின் சிறை அனுபவங்களை பார்த்தோம். ஆகாகான் சிறையில் அவர் காந்தியின் மீது சாயந்து கொண்டே இறந்ததோடு சென்ற இதழ் முடிவுற்றது. இந்த இறுதி பகுதியில் காந்தி குடும்ப விவகாரங்களில் தம்பதிகளின் நிலைபாட்டை பார்ப்போம். அதற்கு முன் உப்பு சத்தியாகிரகத்தில் (1930) கதூர்பா காந்தி பங்கு பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.

நாடெங்கும் திட்டமிட்டபடி மக்களால் வெறுக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசின் உப்பு சட்டத்தை மீறுவதற்கான போராட்டத்தில் காந்தி தலைமையில் 79 சத்தியாகிரஹிகள் சபர்மதி ஆரமத் திலிருந்து கிளம்பி 240 மைல்கள் தெற்குப்புறமாக நடந்து கடலை ஒட்டிய தண்டி கிராமத்தை நோக்கி புறப்பட்டனர். 240 மைல்கள் நடக்கவில்லை என்றாலும் வழி அனுப்பி வைத்தவர் கதூர்பா காந்தி. பங்கு கொண்டவர்களில் காந்தி குடும்பத்தில் அவரைத்தவிர மகன் மோதிலால், பேரன் (ஹரிலால் மகன்) இருந்தனர். நடைபயணம் நகர்ந்தபது காந்தியின் இடிமுழக்கம், நீங்கள் சாவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பது. தென் ஆப்யீபரிக்காவிலிருந்து வந்திருந்த மோதிலால் மனைவி சுசிலா உட்பட பல பெண்கள் அழத் துவங்கியதை பார்த்த கதூர்பா காந்தி அணிவகுப்பின் முன்வைந்து நமது ஆண்கள் எல்லோரும் போர் வீரர்கள். நாம் இந்த வீரர்களின் மனைவிகள். நாம் ஆண்களுக்கு தைரியம் அளிக்க வேண்டும். நாம் நெஞ்சுரத்தோடு இருந்தால் தான் அவர்களும் அவ்வாறு இருப்பார்கள் என்று தனது சுருக்கமான ஆணித்தரமான வாழ்த்துரையை வழங்கினார். ஒவ்வொரு சத்தியாகிரகியின் நெற்றியில் வெற்றிச்சின்னமாக பொட்டு இட்டபின் பேரணி நகர்ந்தது. அப்போது கதூர்பா காந்திமறுமகள் சுசீலாவை பார்த்து, அழுது கொண்டிருக்கும் ஒரு தைரியமற்ற பெண்ணாகவே உன் கணவர் உன்னை நினைக்க வேண்டும் என்று விரும்புகிறாயா? என்றாராம்.

இதையேல்லாம், பார்த்துக் கொண்டிருந்த சுசீலா பின்னால் தன் குழந்தைகளிடம் கூறியதை மகன் அருண் காந்தி பதிவு செய்திருக்கிறார். அப்போது நான் பார்த்த பா மிக வித்தியாசமாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில் காண நேர்ந்த துன்ப துயரங்கள் அவர் முகத்தில் வருத்தம் தோய்ந்த ஆழ்ந்த சுருக்கங்களை விட்டுச் சென்றிருந்தன. ஆனால், இத்தனைக்கும் பிறகு அவருடைய வயதான, இனிய முகத்தில் அப்போது ஒரு பயமற்ற மன உறுதியும் பிரகாசமும் தெரிந்தது. பாசமே உரித்தான அந்தத்தாய் இப்போது ஒரு போரில் ஈடுபட்டு சத்தியாகிரக பேராளியாக காட்சி அளித்தார். உப்பு சத்தியாகிரகத்தில் மிக மோசமாக அடிபட்டு தலையில் எலும்பு முறிந்து நீண்டநாள் சிகிச்சைக்கும் சிறை வாழ்வுக்கும் ஆளானவர்களில் ஒருவர் மோதிலால். சிறையில் இருந்த இவரையும், இவர் தம்பி ராமதாசையும் பார்க்க கதூர்பா காந்தி, சுசீலாவும் போன போது, சுசீலாவின் முகம் வெளிறிப் போய்விட்டது. அதேசமயம் ஒரு சலனமும் இல்லாமல், பெரும் அசம்பாவிதம் ஒன்றும் நடக்காதது போல் தன் மகன்களோடு உறையாடிக் கொண்டிருந்த தனது மாமியரை பார்த்து வியக்கிறார்.

மேலும், மற்ற சிறைக்கைதிகளின் நிலை, அவர்கள் குடும்பங்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி ஆகியவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டார் கதூர்பா காந்தி. மேலும்,மேலும் ஆண்கள் கைது செய்யப்பட்டபோது,  அஹிம்சா போராட்டத்தின் வெற்றி பெண்களையே முழுமையாக நம்பி இருக்கிறது என்ற என் கருத்து வலுவானது. நான் பெண்களையே நம்பியிருக்கிறேன் என்ற காந்தியின் குரல் சிறையிலிருந்து உரக்க ஒலித்துக்கொண்டிருந்தது. இவ்வேண்டுகோளுக்கு முதன்மை அளித்து, கதூர்பா காந்தி ஆரம பணிகளை மற்றவர்களுக்கு அளித்து விட்டு, ஊர் ஊராகச் சென்று சாராயக்கடைகளை மூடும் பணியில் ஈடுபட்டதோடு, ஆங்காங்கு சிறைக் கைதிகளையும் அவர்கள் குடும்பங்களையும் சந்தித்தார். பஞ்சாப் மாநிலத்தில் சிறையில் இருந்த மகன் தேவதா ஐ பார்க்கச் சென்ற போது, வண்டி ரயில் நிலையத்தில் நின்றதும், ஆயிரக்கணக்கான மக்கள் கொடிகளுடன் குவிந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்ததை பார்த்த கதூர்பா காந்தி தொண்டர் ஒருவரிடம் யாருக்கு வரவேற்பளிக்கப்படுகிறது என கேட்டவுடன் அவர்,  அம்மா, உங்களுக்குத்தான் என்றதும் அதிர்ச்சி அடைந்தாராம். வேறு வழியின்றி ஊர்வலத்தின் முன்னணியில் மிக்க கூச்சத்துடன் நடந்தாராம். இதற்கு முன்பு காந்திக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட மான வரவேற்புகளில் அவருடன் முழுமையாக கலந்துவிட்ட துணைவியராக மரியாதை செய்யப்பட்ட போது, இக்கூச்சம் அவருக்கில்லாமல் இருந்திருக்கலாம். புழாரங்கள் மகாத்மாவிற்கே என்ற நம்பிக்கையில். இப்போது நிலமை மாறிவிட்டது.

கதூர்பா காந்தி பூற்றி அருண் காந்தி

அருண்காந்தி தன் பாட்டியின் வரலாற்றை எழுத தனக்கு உந்து கோலாக இருந்தது என்ன என்று வெளிப்படையாக குறிப்பிடுகிறார்.  ஒரு ஆலமரத்தின் கீழ் எதுவுமே வளர இயலாது  என்று ஒரு கிழக்கு தேசத்தை சார்ந்த தத்துவஞானி ஒருவர் கூறினாராம். இது மனிதர்களுக்கும் பொருந்தும். காந்தியின் மதிப்பு, அந்தது ஆகியவை ஆலமரத்தினுடையதைவிட உயர்வானது. மற்றவர்களையெல்லாம் குள்ளமாகக் காட்டியது. எனது பாட்டி, தகப்பனார் மணிலால் ஆகிய இருவரும் காந்தியின் தத்துவம் மற்றும் அடையாளங்களை தங்களுடையதாக ஆக்கி கொண்டு அவரோடு ஒன்றிப்போய் விட்டனர். தந்தையின் விருப்பப்படி மணிலால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து ஏழ்மையான வாழ்க்கை பாணியை ஏற்று, தனது தகப்பனார் 1893 ல் துவங்கிய அகிம்சை மூலம் சமூக, அரசியல் மாற்றத்திற்கான இயக்கத்தில் ஈடுபட்டார்… என் பாட்டியை பற்றி மோசமான ஒரு தோற்றம் வரலாற்றில் பதிந்து விடக்கூடாது என்பது இன்னூலின் நோக்கம். இந்திய சுதந்திர போராட்டத்திலும் காந்தி மஹாத்மா பட்டம் பெற்றதிலும் அவருக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது. அவர் தனது வாழ்வில் செய்த தியாகங்கள் தன் கணவர் கூறியதற்காக அல்ல. இவை மிக நியாயமானவை என்று அவர் நம்பியதால் எதையும் ஒரு அடிமையை போல் பின்பற்றவில்லை. நம்பிக்கையோடுதான் பின்பற்றினார்.

சத்தியத்தோடு எனது பரிசோதனைகள் என்ற நூலில் காந்தி அஹிம்சையை பற்றி தான் தனது மனைவியிடமிருந்து கற்றுக்கொண்டதாக கூறுகிறார். கதூர்பா காந்தி எதற்கும் பணிந்து போகிறவரோ அல்லது எதற்கும் முந்திக்கொண்டு சண்டைக்கு போகிறவரோ இல்லை. அதே சமயம் தான் எது நியாயமானது, சரியானது என்று கருதுகிறாரோ அதை நிலை நிறுத்த தயாராக இருப்பவர். என் தாத்தாவின் நிலைபாடு தவறானது என்று நினைத்தால் அவர் உண்மையை அறிந்து கொள்ளச் செய்வார். இதுதான் அஹிம்சை தத்துவத்தின் உண்மையான சாறு (நளளநஉந) என்று காந்தி கருதினார் என்கிறார் அருண் காந்தி.

கதூர்பா காந்தி பற்றி டாக்டர் சுசீலா நயார்

டாக்டர் சுசீலா நயார் மாணவ நாட்களிலிருந்து விடுமுறைகளை காந்தி ஆரமததில் கழித்தவர். காந்தி குடும்பத்தினரை நன்கு அறிந்தவர். அவர் கருத்து: கதூர்பா காந்திக்கு தனக்கென்று ஒரு மனத்திட்பம், துணிவு, உரம் ஆகியவை உண்டு. தன்னுடைய ஆலோசனை அல்லது செயல்பாட்டை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவரை முதலில் நம்பும் படி செய்யவேண்டும் என்று காந்தி எண்ணினார். இதன் மூலம் தான் சத்தியாகிரகத்தின் ரகசியத்தை தான் தனது மனவியிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாகக் கூறுவர். ஆண்களை விட பெண்கள் தான் சிறந்த சத்தியாகிரகிகள்; காரணம் உலகெங்கும் பெண்கள் ஆண்களால் கஷ்டப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பார். ஆணின் பொறுமையின் மையை தங்களது பொறுமையால் எதிர்திருக்கிறார்கள். பெண்கள் ஆயுதம் எடுத்து சண்டை போடாததால் ஆண்களின் கொடுமைகளை எதிர்க்கத் தனது துன்ப துயரங்களிலிருந்து ஆயுதத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. தியாகம் என்பது பெண்ணிற்கு இயல்பானது. தானாகவே வரக்கூடியது. இதன் மூலமாகத்தான் சத்தியாகிரகம் என்னும் ஆயுதத்தை அவள் உருவாக்கியுள்ளாள்.  மேற்கண்ட கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவை. தியாகம் என்பது பெண்களுக்கு எப்படி இயல்பானது? அவள் உடல் வலிமை ஆணைவிடக் குறைந்தது. இதனால் அவள் ஆணிடமிருந்து உடல், மனோ ரீதியான துன்பங்களை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதை தியாகம் என்று கருதுவது சரியல்ல. மாற்று வழியில்லாமல், மேலும்,  கொடுமைகளைத் தவிர்க்க ஒரு பெண் விட்டுக்கொடுப்பது தியாகமாகுமா? இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே. இப்படி பல கருத்துக்கள் உள்ளன. சத்தியாகிரகம் என்னும் பெயர் காந்தியால் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டை காந்தியின் சத்திய சோதனை எனும் நூலில் குடும்ப/வீட்டு சத்தியாகிரகம் என்ற உபதலைப்பில் கீழ் காணலாம். தான் பல மருத்துவ நூல்களில் படித்ததை மற்றவர்கள் மீது பரிசோதனை செய்வதில் அவருக்கு அலாதி இன்பமாம். தென் ஆப்பிரிக்காவில் கதூர்பா காந்திக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்ட பின் காந்தியின் பரிகாரங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. ஆனால் காந்தி தனது சிகிச்சையை நிறுத்த வில்லை. உப்பு பருப்பு வகைகளை ஓராண்டு சாப்பிடக் கூடாதென்றார். கதூர்பா காந்திக்கு கணவரின் மருத்துவத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை. ஆகவே, இந்த கட்டுப்பாட்டை நீங்கள் முதலில் கடை பிடியுங்கள் என்று சவால் விட்டாராம். உடனே மிக்க மகிழ்ச்சியுடன் காந்தி ஓராண்டுக்கு இவற்றை விடுக்கொடுத்து விடுவதாக சத்தியம் செய்தாராம். கதூர்பா காந்தி பயந்து போய்  நீங்கள் சொன்னது போல் நான் விட்டு விடுகிறேன். நீங்கள் இந்த உறுதி மொழியை திரும்பிப் பெற வேண்டும் என்று அழுதாராம். ஆனால் விடாப்பிடியாக காந்தி விரதத்தை மேற்கொண்டாராம். இந்த சிகிச்சை இதற்கு முன் அவர் எடுத்துக்கொண்டதல்ல. காந்திக்கு வேடிக்கையாக தோன்றிய இச்சம்பவத்தை தனது சத்திய சோதனை நூலில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? இந்நிகழ்ச்சியை ஒரு சத்தியாகிரகமாக பார்த்த காந்தி இது என் வாழ்க்கையில் நினைவுகளில் மிக இனியது என்கிறார்.

சுசீலா மருத்துவ மாணவியாக இருந்த போது விடுமுறைகளை காந்தி ஆரமத்தில் கழிப்பாராம். அவர் நினைவுகள்: கதூர்பா காந்தி எல்லா ஆரமங்களிலும் ஒரு தாயாகவே இருந்தார். என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான்தான் செய்வேன் என்று பிடிவாதமாக செய்வார். இருப்பிடம் குடிசையாக இருந்தாலும் அதை மிக சுத்தமாக வைத்திருப்பார். சமையல் அறையில் தனக்கு உதவுபவர்களை செமையாக வேலை வாங்குவார். ஆரமத்திற்கு வரும் விருந்தாளிகளை பராமரிப்பதில் அவருக்கு ஈடு இணை இல்லை. இந்திய பண்பாட்டில் சீதாராம், ராதா கிருஷ்ணா என்று மனைவிகளின் பெயர்கள்தான் முதலில் வருகிறது. ஆகவே நாம் பாபுவிற்கு முன் பா வை நினைப்பது தான் இயல்பு. தங்கள் கணவன் மார்களை தெய்வப் பிறவிகளாக ஆக்குவதில் ராமர், கிருஷ்ணன் ஆகியோரின் மனைவிமார்களுக்கு எந்த பங்கும் இல்லை. ஆனால், மோஹன்தாசை மஹாத்மா ஆக்குவதில் கதூர்பா காந்திக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது. கதூர்பா காந்தி மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவர். வசதியாக வாழ்ந்தவர். ஆனால், ஆப்பிரிக்காவில் காந்தி ஏழ்மையாக வாழ்வது என்று உறுதி எடுத்துக்கொண்ட போது கதூர்பா காந்தி அதை ஏற்றுக்கொண்டார்.  ஏற்றுக்கொள்ளாமல் என்ன செய்வது? அவருடைய சூழலில் கணவரை விட்டுப்போக முடியுமா? இந்தியாவில் அவர் பெற்றோர்களும் இறந்துவிட்டார் களே? என்பதும் நியாயமான கேள்வியே. ஒரு ஆணுக்கு தன்னுடைய சூழலை மாற்றிக்கொள்ள சுதந்திரம் உண்டு. அதற்கு மனைவியை கேட்க வேண்டியதில்லை. ஆனால் பெண்ணுக்கோ…? இந்த பழம் கோட்பாட்டி;ன படியே வளர்க்கப்பட்ட கதூர்பா காந்திதென் ஆப்பிரிக்காவிற்கு வந்த சில ஆண்டுகளில் ஆரம வாழ்க்கையை ஏற்று சாதி பாகுபாடு பார்க்காமல் பலரோடு சேர்ந்து எல்லா வேலைகளையும் பங்கிட்டுக்கொண்டு வாழ வேண்டி இருந்தது.

காந்தியும் மகன் ஹரிலாலின் படிப்பும்

கதூர்பா காந்தியின் வாழ்க்கையில் அவர் மிகவும் கவலைப்பட்டது அவர் மூத்த மகன் ஹரிலால் பற்றிதான். தனது தாய் இறந்த அன்றுகூட (1944) ஹரிலால் ஆகாகான் சிறைக்கு வரவில்லை. தந்தையின் சாம்பலை அலகாபாத்தில் கங்கயை;ல கரைக்கும் போதும் அவர் வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை சுசீலா நய்யார் விவரிக்கிறார். காந்தியின் மூத்த மகன் ஹரிலாலின் வரலாறு உருக்கமானது. மஹாத்மாக்கள் சிறந்த தந்தைகளாக இருக்க இயலாது என்ற கருத்தைக் கூட இது உருவாக்கலாம். தனது தந்தை தனக்கு அநீதி இழைத்து விட்டார் என்ற உணர்வு ஹரிலாலிற்கு இளமையில் ஏற்பட்டுவிட்டது. தன்னுடைய தகப்பனாரைப்போல் தானும் வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பினார்.மோதிலாலிற்கும் இதே ஆசை. ஆனால், இதற்கு இரு வித தடைகள் இருந்தன. காந்தி இதை விரும்பவில்லை. காந்தியக் கோட்பாடு மிக வித்தியாசமானது. சிறந்த  குணாம்சங்களை வளர்த்துக்கொள்வது தான் கல்வியின் நோக்கம். ஒருவர் செய்ய வேண்டிய அன்றாட வேலைகளை புத்திசாலித்தனம், கவனம், ஈடுபாடு, உழைப்பு போன்றவைகளோடு செய்ய வேண்டும். தன்னை முதலிடத்தில் நிறுத்திக் கொள்ளாமல் பணிகள் எதையும் கீழ்த்தரமாக நினைக்காமல் அவற்றிற்கு முன் தனது உழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து எதையும் கீழ்ததரமாக நினைக்காமல் அவற்றிகே முன்னுரிமை அளிக்க வேண்டும். தனது தேவைகள், ஆசைகள் ஆகியவற்றிற்கு முன் தனது உழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து எதையும் தனது கண்ணியம், கவுரவம் ஆகியவற்றிற்கு கீழாகப் பார்க்கக்கூடாது. இரண்டாவது தடை வெளிநாடு சென்று படிப்பது அவசியமல்ல. பி.ஏ., பி.எல் போன்ற பட்டங்களில் தங்களுடைய தந்தைக்கு நம்பிக்கை இல்லை என்றால் கடன் வாங்கி இங்கிலாந்து சென்று ஏன் படித்தார்? என்ற கேள்வி அவர் மகன்களுக்கு நிச்சயம் எழுந்திருக்கும். தன் தந்தை வழக்கறிஞரானது போல் தானும் ஆவதற்கு உரிமையுண்டு என்று ஹரிலால் நம்பியதில் ஆச்சரியம் இல்லை.

காந்தியின் நிலைபாட்டிற்கு மாறாக, தனது மகன்கள் முறைசார் கல்வியை பெற வேண்டும் என்பது தாய் கதூர்பா காந்தியின் ஆவல். தான் மட்டும் இந்தியாவில் இருந்து படிக்கப் போவதாக ஹரிலால் கூறியது கதூர்பா காந்தி மகிழ்வித்தது. ஒரு மகன் தனது கல்விக்கான உரிமையை நிலை நாட்டிக் கொள்வது மிகச் சரியானது என்றே நினைத்தார். குடும்பத்தினரும் நண்பர்களும ஹரிலாலை அறிவுஜீவி என பாராட்டினார். அப்போது தென் ஆப்பிரிக்க இந்தியர்களுக்கு பாதுகாப்பாக சட்ட நிபுணர்கள் தேவையாக இருந்தது. காந்தி இந்தியாவிற்கு வந்து தேசீய விடுதலை இயக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வலுவடைந்து வந்ததால் அவரைத் தவிர வேறு இந்திய வழக்கறிஞரை தயார் செய்ய வேண்டியிருந்தது. இது பற்றிய விவரங்களை சுசீலா நய்யார் தனது நூலில் தருகிறார். லண்டனில் வசித்து வந்த பிரன்ஜீவன் மேதா என்பவர் காந்தியின் மகன்களில் ஒருவரை தான் லண்டனில் படிக்க வைப்பதாக கூறினார். அதை ஏற்றுக் கொண்ட காந்தி இந்த படிப்பிற்கு யார் மிகவும் தகுதி உள்ளவர்களோ அவரை தானே தேர்ந்தெடுப்பதாகக் கூறினார்.  இதற்கு மணிலால் மிகவும் தகுதியுள்ளவன் என்று நான் நினைத்தால் அவனை அனுப்புவேன் என்றார். அப்பேபாது கூட அவர் ஹரிலால் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இறுதியில் தனது சகோதரியின் மகன் சகன்லாலை அனுப்பி வைத்தார். சகன்லால் உடல்நிலை மோசமாகி 6 மாதங்களில் திரும்பிவிட்டார். அடுத்து சொராப்ஜி என்பவர் அனுப்பப்பட்டார். இதற்கு காந்தி ஹரிலாலுக்கு அளித்த விளக்கம்:  சொராப்ஜி பார்சிக்காரர். ஒரு இந்து, பார்சிக்காரரை வக்கீலாக்க ஊக்குவிக்க வேண்டும். ஆனால் உன்னுடைய நடவடிக்கையை பாராட்ட முடியவில்லை. இதற்கான நிதியும் திரட்டப்பட்டது. சொராப்ஜி அங்கேயே நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். ஆனால் இத்தேர்வு பரிட்சை எழுதியவர்களில் முதலிடம் பெற்றவர் மோதிலால். இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டவரோ இரண்டாவது இடம் பெற்றவர். காரணம் தன் மகனுக்கு சலுகை காட்டியதாக யாரும் நினைக்கக் கூடாதென்ற காந்தியின் கவலையே. இருமுறைகளும் தனது தகுதியை தன் தந்தை மதிக்கவில்லை; மாறாக, அவர் தனது மகனையே அனுப்பிவிட்டார் என்று யாரும் பேசி தனக்கு இழுக்கு வரக்கூடாதென்ற கவலைதான் இதற்கு காரணம் என்று ஹரிலால் நினைத்தார். இது சரியான கணிப்புதான் என்கிறார் நூலாசிரியர் அருண்காந்தி. இதற்குப்பிறகு ஹரிலால் இந்தியா திரும்பினார். போகும்போது ஹரிலால் தனது தகப்பனார் பற்றி தன்னிடம் கூறியதுகதூர்பா காந்தி மனதிற்குள் மீண்டும் மீண்டும ஒலித்துக்கொண்டிருந்தது. அவருக்கு நாம் யார் பற்றியும் கவலை கிடையாது. கொஞ்சம் கூட கிடையாது. ஆனால் இத்தகைய விஷயங்களில் கதூர்பா காந்தி தலையிட்டு தன் மகனை இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க வைக்க வாய்ப்பிருந்த போது அதை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை. காந்தி தனது மகனை ரயிலில் ஏற்றிவிடும் போது கூறியது :  உன் தகப்பனார் உனக்கு தவறு செய்துவிட்டார் என்று நீ நினைத்தால் தயவு செய்து அவரை மன்னித்துவிடு. ஆனால் தனக்கு கல்வி வாய்ப்பை அளிக்க மறுத்த தந்தையை மகன் என்றும் மன்னிக்கவில்லை.

ஹரிலாலின் மதமாற்றம்

ஹரிலால் வேலையை இழந்து குடும்பத்தையும் பராமரிக்காத சூழலில் கெட்ட பெயரே வாங்கிக் கொண்டிருந்தார். 1936 ல் காந்தி தம்பதிகள் ரயில் பயணம் செய்து கொண்டிருந்தபோது நாக்பூர் டேஷனில் ரயில் நின்றது. வழக்கம் போல் மக்கள் கூடி மஹாத்மா காந்திக்கு ஜெய் என்று கோஷமிட்டனர். அப்போது ஒரு குரல் உரக்க ஒலித்தது. அன்னை கதூர்பா காந்திக்கு ஜெய் என்று. மிக்க வியப்போடு கதூர்பா காந்தி ஜன்னல் வழியாக பார்த்தபோது ஹரிலால் கிழிந்த துணிகளோடு வயதிகர் போல் காணப்பட்டார். ஜன்னல் அருகே வந்து அவரிடம் ஒரு ஆரஞ்சுப்பழத்தை நீட்டி, அம்மா, இதோ உங்களுக்கு என்னுடைய அன்பின் சின்னம் என்றார். பின் காந்தியை பார்த்து நீங்கள் மிகப் பெரிய மனுஷன் என்றால் அதற்கான முழு காரணமும் என் அம்மா தான் என்றார். ரயில் கிளம்பிய போதும் ஹரிலால் மீண்டும் எழுப்பிய கோஷம் கேட்டது. கதூர்பா காந்தியின் மனம் குழம்பிற்று. ஹரிலாலின் நடத்தையை எப்படி நியாயப்படுத்த முடியும்? மகனின் குடிப்பழக்கம், தன்னுடைய குழந்தைகளிடமிருந்தே பணம் வாங்குவது; தன் தகப்பனாரை தாக்கி பத்திரிக்கைகளில் எழுதுவது; சிறையில் அடைபடுவது. இத்தனைக்கும் பொட்டு வைத்தாற்போல் 1936ல் பம்பாய் முலீமாக மாறியது. இந்த மதமாற்றம் பணத்திற்காகவே என்றும் பரவலாக பேசப்பட்டது.

மகனின் மதமாற்றம் பற்றிய வேதனையை பத்திரிக்கையில் தன் மகனுக்கு  கதூர்பா காந்தி ஒரு கடிதமாக  எழுதினார்…. நீ ஏன் உன்னுடைய மூதாதையர்களின் மதத்தை மாற்றிக்கொண்டாய்? எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் இது உன்னுடைய விவகாரம். ஆனால்நீ வெளியிட்டிருந்த அறிக்கையில் உன்னை நீ மேலும் மேம்படுத்திக்கொண்டு ஒரு ஒழுங்கான வாழ்க்கையை துவங்குவாய் என்று பார்த்ததும் எனக்குள் ரகசியமாக மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இந்த நம்பிக்கையும் இப்போது தூள் தூளாகிவிட்டது. உனக்கு மதம் பற்றி என்ன தெரியும்? நீ இந்த வழியிலேயே போனால் உன்னை யாரும் தீண்டமாட்டார்கள். தன் மகன் முலீம் அனாலும் பரவாயில்லை; அது அவனுடைய விவகாரம். இனிமேலாவது நல்ல பழக்க வழக்கங்கள் வந்தால் போதும் என்றகதூர்பா காந்தியின் பரந்த மனோபாவத்தை இது காட்டுகிறது. முலீம் ஆன பிறகும் ஹரிலாலின் வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லையென்று தெரிந்தபோதுதான் அவர் விரக்தி அடைகிறார். இதே சமயம் ஹரிலாலின் மத மாற்றத்திற்கு காரணமானவர்களுககு கடிதம் இந்திய பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது. அதன் சில பகுதிகள்:

…. ஹரிலாலிற்கு உள்ள மோசமான பழக்கங்களிலிருந்து அவனை வெளிக்கொண்டு வராமல் அவனுக்கு மௌல்வி பட்டம் எப்படி அளிக்கப்போகிறீர்கள்?… என் மகனை உங்கள் சகோதரனாக நினைத்தால் இப்படியெல்லாம் செய்யமாட்டீர்கள். என் மகனை ஏளன்ம் செய்ய வேண்டும் என்பதே உங்கள் விருப்பமானால் உங்களிடம் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை. ….ஆண்டவனின் பார்வையில் நீங்கள் செய்வது சரியில்லை.

டாக்டர் சுசிலா நயாரின்  நூலிலிருந்து: ஹரிலாலின் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக  அமையும் என்று எல்லோரும் எண்ணியபோது அது ஒரு சோக முடிவை தழுவியது. ஹரிலால் உருவான உருக்கமான நிகழ்வுகளுக்கு யார் பொறுப்பு? முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் ஒரு இளைஞனின் கனவுகளும் ஆசைகளும் நொறுங்கிவிட்டது. காந்தியடிகளின் வாழ்க்கையில் உருவான நிர்பந்தங்கள் என்னவாக இருந்தாலும் அவர் தன்னுடைய மனைவி மகன்களுக்கு ஒருதலைசார்பற்ற நியாயம் சொல்லவில்லை.  தன் மனைவி சீதையின் உணர்வுகளை மதிக்காமல் அவளைப்பற்றி ஒரு வண்ணான் என்ன சென்னார் என்பதற்கு அதிகமுக்கியத்துவம் அளித்த ராமனைப்போல் காந்தி தனது மனைவி, மகன்களின் உணர்வுபூர்வமான தேவைகளையும் மற்றதையும்விட தனக்கு உண்மை எனத் தோன்றிய கோட்பாடுகளுக்கே அதிக மதிப்பளித்தார். தனது தந்தை முன்வைத்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாத ஹரிலால் தனது வாழ்க்கையை தான் விரும்பிய ஒரு வரையறையில் கொண்டு வர முடியாமல் சேர்ந்துவிட்டார். காந்தியின் நான்கு மகன்களிலும் நன்கு திறமையானவர் ஹரிலால் என்று கூறலாம். தன்னுடைய திறமையை நிரூபிக்க அவருக்கு வாய்ப்பு கிட்டியிருந்தால் அவருடைய தகப்பனாரின் சாதனைகளைக்கூட அவர் எட்டியிருக்கலாம். அவருடைய வாழ்க்கையின் முடிவு ஒரு பெரும் சோக நிகழ்வுமட்டுமல்ல. மிகப்பெரிய தேசிய இழப்புமாகும். தன் தந்தை இறந்து ஆறு மாதங்களுக்குப்பின் ஹரிலால் இறந்துவிட்டார்.

மகன் மோதிலால் கலப்பு திருமணத்திற்கு காந்தியின் மறுப்பு

தென்ஆப்பிரிக்காவில் காந்தி துவங்கிய இந்தியன் ஒப்பீனியன் எனும் பத்திரிக்கையை அவர் இந்தியாவிற்கு திரும்பிய பின் அவருடைய மகன் மோதிலால் நடத்தி வந்தார். தான் ஒரு இலாமியப்பெண்ணை மணக்க விரும்பியதாக மோதிலால் தகப்பனாருக்கு எழுதிய போது, அதை சற்று காட்டமாகவோ நிராகரித்து விட்டார்  காந்தி. இதற்காக அவர் அளித்த சில காரணங்கள்: இத்திருமணத்தை நீ விரும்புவது உன் மதத்திற்கு எதிரானது. இது இரு வாள்களை ஒரே உறையில் போடுவதற்கு சமமாகும். உங்கள் குழந்தைகள் எந்த மதத்தை பின்பற்றுவார்கள்? அவர்கள் மீது யாருடைய தாக்கம் அதிகமாக இருக்கும். உன்னை மணப்பதற்காகவே பாத்திமா தனது மதத்தை விட்டு கொடுத்து விட்டால் தனது மதத்திற்கு  எதிரக ஒரு பெரும் குற்றத்தை செய்தவராவார். அல்லது நீங்கள் இருவரும் மதநம்பிக்கைகளை கைவிட்டுவிடுவீர்களா? இந்து முலீம் நல்உறவிற்கு உங்கள் செயல் பேரதிர்ச்சியாக இருக்கும். இந்து -முலிம் பிரச்சனையை கலப்பு திருமணங்களால் தீர்க்க முடியாது. நீ எனது மகன் என்பதை மறக்கக்கூடாது. சமூகமும் இதை மறக்காது. இத்திருமணத்தின் மூலம் நீ உன் மக்களுக்கு சேவை புரிய முடியாது. இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையை நடத்துவதற்கான தகுதியை நீ இழந்துவிடுவாய் என நான் கருதுகிறேன். உன் தாயின் சம்மதம் பற்றி நான் கேட்க முடியாது. அவள் கொடுக்க மாட்டாள். அவள் மனது வாழ்நாள் முழுவதும் புண்பட்டுவிடும். அவளிடம் இதுபற்றி பேச தைரியம் இல்லை. இறைவன் உனக்கு சரியான பாதையை காட்டட்டும். மோதிலாலின் செய்தி கதூர்பா காந்தியை எப்போதாவது சென்றடைந்ததா என்பது தெரியாது.

ஆனால் அருண்காந்தி தனது பாட்டிக்கு தெரிந்திருந்தால் அவர் காந்தி எழுதியதைப்போல் அவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கமாட்டார் என்கிறார். பிரச்சனையை காந்தி மிகைப்படுத்தியதாகவே தெரிகிறது. ஆனால் காந்தி தனது மகனின் திருமணம் அவனது விவகாரம் என்று மட்டுமே பார்க்கவில்லை. இதை அன்றைய அரசியலோடும் அதில் தனது பங்கோடும் இணைத்துப் பார்க்கிறார். சுதந்திரப்போராட்டத்திற்கு அடிப்படையான இந்து – முலீம் ஒற்றுமையை பலப்படுத்தும் முயற்சியை இத்திருமணம் பலவீனப்படுத்தும் என்று அவர் நினைத்திருக்கலாம். அதில் உண்மையும் உண்டு. ஆனால் இத்திருமணம் உன் மதத்திற்கு எதிரானது என்று காந்தி கூறியதை ஏற்கமுடியாது. இது இந்து மதத்தை பிராமணியத்திற்கு சமமாக்கி அதற்குள் அடக்குகிறது. மேற்கண்டதை படிக்கும்போது, பலருக்கும் காந்தியின் பிராத்தனை கூட்டங்களில் பிரசித்தி பெற்ற ஒரு பாட்டு நினைவுக்கு வரும். ஈவர அல்லா தேரே நாம்: சப்கோ சன்மதி தே பகவான் இதன் பொருள்: ஆண்டவனின் பெயர் ஈவரன், அல்லா என்ற இரண்டுமே தான். கதூர்பா காந்தியின் இறுதி காலத்தில் அவருக்கு என்று ஒரு வீடு இல்லை என்பதுமட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவிலேயே தனிவீடு என்ற கருத்தை அவர் விடவேண்டி வந்தது. பிறகு ஆரமங்கள்தான் வீடு. பலரோடு கூடிவாழும் ஆரமும் இல்லை. காந்தி வார்த்தாவிற்கு அருகே ஒரு மண்குடிசையில் இருந்தார். அவரோடு இருக்கலாம் என்று எண்ணி அங்கு போனபோது காந்திக்கு தனிமையும் தியானமும் எவ்வளவு தேவையானது என்று புரிந்து கொண்டார். கதூர்பா காந்திக்கு தனிமை தேவையில்லை. தொடர்ந்து குடும்பத்திற்கும் நாட்டிற்கும் உழைப்பதையே விரும்பினார் என்கிறார் அருண் காந்தி.

காந்தி தம்பதிகளிடையே பல முரண்பாடுகள் கோபதாபங்கள் இருந்ததற்கான சில ஆதாரங்கள் (துவக்கத்தில் குறிப்பிட்ட அவருடைய கொள்ளு பேத்தி உமா துபேலியாவின் 2005ம் ஆண்டு வெளிவந்த நூலில் உள்ளன. இவை நமக்கு அதிர்ச்சியை தந்தாலும் அவர்களுடைய பிரச்சனைகள் மல்கிய வாழ்க்கையில் இவற்றை சகஜமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

III



%d bloggers like this: