மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அடையாள அரசியல் எங்கிருந்து வந்தது?


தமிழக அடையாள அரசியல் பற்றி ஏராள மான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20-வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல், தத்துவார்த்தத் தீர்மானங்களில் அடை யாள அரசியல் எவ்வாறு உழைக்கும் மக்கள் ஒற்றுமையை குலைத்து வருகிறது என்பதை விரிவாக எடுத்துரைத்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி பல நேரங்களில் அடையாளப் பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன. அனைத்து அடையாள அரசியல் சார்ந்த மக்கள் திரட்டல்கள் வர்க்க ஒற்றுமையை குலைத்தாலும் ஒடுக்குமுறைக்கு ஆளான மக்கள் உருவாக்கும் இயக்கங்களை வேறுபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது. எனினும், அத்தகு ஒடுக்கப் பட்ட மக்களின் எழுச்சிகளும் வர்க்க ஒற்றுமை எழுச்சியோடு இணைக்க வேண்டிய அவசிய முள்ளது. இதுவே, பெரும்பான்மையான உழைப் பாளி மக்கள் சுரண்டல் வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியாக அமைந் துள்ளது. சோசலிசம் நோக்கிய பாதையும் இதுவே.

தமிழக அடையாள அரசியல் விவாதத்தில் ஒரு முக்கியப் பங்கினை பேராசியர் ந.முத்து மோகன் ஆற்றியுள்ளார். அவரது தமிழ் அடை யாள அரசியலின் இயங்கியல் என்ற நூல் அடை யாள அரசியலின் பல பரிமாணங்களை விளக்கு கிறது. மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல் வாத அடிப்படையில் தமிழக அடையாள இயக் கங்களின் வரலாற்றை ஆராய்வதற்கு பேராசிரி யர் கடுமையாக முயற்சித்துள்ளார். ஆனால், அடையாள அரசியலுக்கு ஆதரவான அவ ருடைய அணுகுமுறை இடதுசாரி இயக்கங்களை கட்டுவதற்கு உதவிகரமாக அமையாது என்ற விமர்சனத்தை அழுத்தமாக குறிப்பிட வேண்டியுள்ளது.

அவரது நூலில் பொதுவான சில கருத்துக்கள் ஏற்கனவே அடையாள அரசியல் தமிழக நல னுக்கு உகந்ததா? என்ற இக்கட்டுரை ஆசிரியரின் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது (தீக்கதிர், ஜனவரி 09, 2013). பின்வரும் கட்டுரையில் நூலில் பேராசிரியர் விவாதிக்கத் தவறிய அல்லது ஏற்றுக் கொள்ளாத ஒரு கருத்து விவாதிக்கப்படுகிறது.

தாராளமயம், அடையாள அரசியல்

அடையாள அரசியல் ஒரு வீச்சாக உரு வெடுத்தது, இருபதாம் நூற்றாண்டு காலத்தில் தான். குறிப்பாக, புதிய தாராளமயம், உலகம் முழுவதும் வேகமாக அமலாகத் துவங்கிய காலகட்டத்தோடு இணையான ஒரு நிகழ்வுப் போக்காக அடையாள இயக்கங்களின் வளர்ச்சி ஏற்பட்டது. பின் நவீனத்துவம் என்கிற தத்து வார்த்தக் கருத்துக்களும் இதையொட்டி வேக மாகப் பரவின. புதிய தாராளமயம், அடையாள அரசியல், பின் நவீனத்துவம் ஆகியவற்றின் இணைப்பை பேராசிரியர் கவனம் செலுத்த தவறியிருக்கிறார். மேலும். புதிய தாராளமயம் உழைக்கும் மக்களின் வாழ்வினை அழித் தொழிப்பு செய்கிற போது, அடையாள அர சியல் இயக்கங்கள் உழைக்கும் மக்களை ஒன்று பட்ட போராட்டத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உறுதுணையாக அமைந்தன. ஆனால், பேராசிரியர் அடையாள இயக்கங் கள் ஒரு மீள் பார்வை என்ற கட்டுரையில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார். அடையாள இயக் கங்கள் தோற்றம் பெற்றதே பின்னை நவீனத் துவத்திற்கு பிறகுதான் என்பது மிகவும் குறுக்கப் பட்ட சித்திரமாகத் தெரிகிறது (பக்கம் 2). இதில் பின் நவீனத்துவத்திற்கும் அடையாள அரசிய லுக்குமான வலுவான தொடர்பினை குறைத்து மதிப்பிடுகிறார் பேராசிரியர். புதிய தாராளமயம் தான் அடையாள அரசியல் மற்றும் பின் நவீ னத்துவ ஆதிக்கத்திற்கு உந்து சக்தியாக இருந் துள்ளது.

உலகமயம், தாராளமயம் ஏற்படுத்திய பொரு ளாதார சீரழிவுகள் அதிகம் பேசப்படுகின்றன. வர்க்க ஒற்றுமையை சீரழிக்க அது அடையாள அரசியலின் பெயரால் ஏற்படுத்தியிருக்கிற சேதாரம் அதிகம். ஆனால், பேராசிரியர்  உலக மய நிகழ்வோடு உருவான அடையாள இயக்க எழுச்சியை உயர்த்திப் பேசுகிறார்.

இன்று உலகமயமாக்கச் சூழலில் உலக மெங்கும் ஒவ்வொரு சிறு கூட்டமும் தன்னைத் தன் சொந்த மொழியிலேயே எடுத்துரைக்க  முன் வருகிறது. இது ஒரு மாபெரும் ஜனநாயக அசைவு, மக்கள் அரசியல் (பக்கம் – 26). அத் துடன் இடதுசாரி இயக்கங்கள் மீதும் குறை பட்டுக் கொள்கிறார்.

20-வது நூற்றாண்டு முழுவதிலும் சோச லிசம்/முதலாளியம் என்ற மிகப்பெரிய சர்வதேச முரண்பாட்டின் உக்கிரத்துனுள் சிக்கிக் கொண்ட நாம் நமது காலுக்கடியில் மிக அண் மையில் கொந்தளித்த எண்ணிலடங்காத நுண் முரண்பாடுகளை காணத் தவறிப் போனோம் (பக்கம் -25) என்று துயரத்தில் ஆழ்ந்து போகி றார். இதன் அர்த்தம் என்ன? இடதுசாரி இயக் கங்களும் தங்களது வர்க்கப் பார்வைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அடையாள அடிப்படையில் மக்களை கூறுபோடுகிற பணி யில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது தான்.

பேராசிரியரின் பல வாதங்கள் ஆழ்ந்த விமர் சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவை. அதற்கு முன்னர் இந்தியாவில் பின் நவீனத்துவ தத்துவார்த்த கருத்துக்களும் அடையாள அரசி யலும் எப்படி ஒரு பகுதி மக்களை கவ்விப் பிடித் துள்ளது என்று சற்று ஆராய வேண்டியுள்ளது. இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் முக்கியமானவர் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. இந்திய அடையாள அரசியலின் உண் மையான முகத்தை அறிந்து கொள்ள அவரது ஆய்வு உதவுகிறது.

விடுதலைக்குப் பிறகான இந்திய வரலாற்றை மூன்றுக் கட்டங்களாகப் பிரித்து மூன்றாவது கட்டத்தில் அடையாள அரசியல் ஊடுருவுவதற் கான வாய்ப்பு எப்படி ஏற்பட்டது என்று விளக்கு கிறார்.

இந்திய அரசியல் மூன்று சட்டங்கள்:

முதல்கட்டம் என்பது 1947-லிருந்து 1970-களின் முற்பகுதி வரை. நேருவின் மாடல் என்றழைக்கப் படும் நடைமுறை கடைபிடிக்கப்பட்ட காலமாக இது இருந்தது. பல துறைகளில் தேசியமயம், வறுமை ஒழிப்போம் என்ற கோஷங்கள் போன் றவை எழுந்த காலமிது. இந்த காலகட்டத்தில், ஆட்சியிலிருந்த முதலாளித்துவ நிலப்பிரபுத் துவக் கூட்டணி வலுப்பெற்றது. முதலாளித்துவ மூலதனம் மெதுவாக வளர்ச்சி கண்டுவந்தது. வலுவான பொதுத்துறை, அரசு நிதி உதவியோடு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, அரசு நிதி ஒடுக்கீடு செய்த கல்விமுறை, அரசின் உடைமை யான வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊட கங்கள் என அரசு தலைமை தாங்கிய முதலாளித் துவ வளர்ச்சி ஏற்பட்டது. இவையனைத்துமே முதலாளித்துவ மூலதன வளர்ச்சிக்கு உதவின. இந்த காலகட்டத்தில் மொழி, உள்ளூர் மரபு கள், சாதி, உப சாதி பிரிவுகள் மாறுபட்ட  கலாச் சார நடைமுறைகள் என பல வகையில் இந்திய மக்கள் பிரிந்திருந்தனர். இது வேற்றுமையில் ஒற்றுமை என்று விளக்கப்பட்டது. மதச்சார் பின்மை, சமூக நீதிக் கருத்துக்கள் பரவலாக இந்திய சமூகத்தில் நிலவியிருந்தன. கூடவே, ஆர்.எஸ்.எஸ், சாதி அடிப்படையிலான இயக்கங் கள் போன்ற பல பிளவுபடுத்தும் இயக்கங்களும் செயல்பட்டு வந்தன. பிற்காலத்தில் அடையாள அரசியல் எழுச்சிக்கு இவை ஏற்கனவே களம் அமைத்திருந்தன. விடுதலைக்குப் பிறகான இந்திய வரலாற்றில் இரண்டாவது கட்டம் நெருக்கடி நிலை பிர கடனம் செய்யப்பட்ட காலத்தில் (1975-ஆம் ஆண்டுகளில்) துவங்குகிறது. காங்கிரஸின் ஏக போகம் ஆட்டம் காண்கிற நிலை ஏற்படுகிறது. இந்திய அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்படத் துவங்கியது. நரசிம்மராவ்-மன்மோகன் சிங் கூட்டணி 1990-ஆம் ஆண்டு துவக்கத்தில் புதிய தாராளமய சீர்திருத்தங்களை வேகமாக அமலாக்க துவங்கினார்கள். அவை ஏற்படுத்திய அதிருப்தி மற்றும் பல நெருக்கடிகள் எல்லாம் சேர்ந்து, 1990-களின் இறுதியில் வகுப்புவாத பாரதிய ஜனதா கட்சி ஆளுங்கட்சியாக உரு வெடுக்க வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் தான் நவீன இந்தியா வின் தூண்களாகப் போற்றப்பட்ட பொதுத் துறை, சுயசார்பு, மதச்சார்பின்மை, சுயேட்சை யான வெளியுறவுக் கொள்கை ஆகியன அனைத் தும் தாக்குதலுக்கு உள்ளாகின. 21-ஆம் நூற் றாண்டு துவக்கத்தில் காங்கிரஸ் கூட்டணியும் அதற்கு போட்டியாக வகுப்புவாதக் கொள்கை கொண்ட சங்பரிவாரும் ஆட்சி அதிகார போட்டிக்கான மையங்களாக மாறின. ஆனால், இந்த இரண்டுமே புதிய தாராளமயம், ஏகாதி பத்திய ஆதரவு ஆகிய இரண்டிலும் ஒருமித்த கருத்து கொண்டவையாக இருந்தன. 1975-1990 என்கிற காலகட்டம் நேருவின் காலத் திலிருந்து புதிய தாராளமயம் என்கிற கட்டத் திற்கு மாறிய காலகட்டமாகும். 1991-க்குப் பிறகு இன்று வரையிலான இந்த மூன்றாவது கட்டம் புதிய தாராளமயம் வலுவாக உறுதிப்பட்ட காலமாகும். 20 ஆண்டு கால புதிய தாராளமயம் உண்மையில் பின் நவீனத்துவ கருத்துக்கள் உள்ளே வருவதற்கான காலமாக அமைந்தது. பின் நவீனத்துவ கருத்துக்களில் மக்கள் அடையாள அடிப்படையில் தனித்தனி கூறுகளாக பிரிந்திட வேண்டும் என்கிற அந்த நிகழ்வு மிக ஆழமாக இந்த மூன்றாவது காலகட்டத்தில் உருவெடுத் தது. பெரும் ஏகபோக பணக்காரர்கள் ஒருபுறம் வறிய வாழ்க்கையில் அல்லாடிக் கொண்டிருக் கும் கோடானு கோடி மக்கள் மறுபுறம் என்கிற சமூக நிலை இந்த பின் நவீனத்துவ போக்கு களுக்கு அடித்தளமாக அமைந்தது.

அரசியல் மீது வெறுப்பு:

உயர் நடுத்தர வர்க்கம் மட்டுமல்லாது சாதா ரண நடுத்தர வசதிபடைத்தவர்களிடம் மேலோங் கியது. இதில் விவசாயம் சார்ந்த மேட்டுக்குடி மக்களும் அடங்குவர். புதிய நுகர்வு கடன் வசதி முறைகளால் சேமிப்பிற்கான முக்கியத்துவம் குறைந்து செலவு செய்வது ஒரு கலாச்சாரமாக மாறும் போக்கு வளர்ந்தது. மின்னணு ஊடகங் களின் வளர்ச்சி, சூறாவளி போன்ற தனியார் மயம், தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி போன்றவை அனைத்தும் இளைய மற்றும் வளர்ந்த தலைமுறை பிரிவினரிடம் மாறுபட்ட சமூக பார்வைகளை உருவாக்கின. அரசு அதிகாரிகள், கார்ப்பரேட் மூலதன சக்திகள், சட்ட விரோதமான செயல்களில் ஈடு படுவோர் என ஒரு பெரும் கூட்டுப் படையே உரு வாகத் துவங்கியது. இது அரசியலின் மீது கணிச மான பகுதியினரிடம் வெறுப்பு ஏற்படுத்தியது. இவ்வாறான முக்கியமான மாற்றங்கள் பின் நவீனத்துவ கருத்துக்களையும், அடையாள அரசி யலையும் கணிசமான பகுதியினர் வரவேற்பதற் கும் ஏற்றுக் கொள்வதற்கும் களம் அமைத்தன.

இந்திய பின் நவீனத்துவ அரசியல் வடிவங்கள் ஐரோப்பிய வடிவங்களிலிருந்து வேறுபட்டவை. பேராசிரியர் ந.முத்துமோகன் ஐரோப்பிய வகை அடையாள அரசியலையும் இந்திய அடையாள அரசியலையும் வேறுபடுத்தித்தான் ஆராய்கி றார். ஆனால், இந்திய அடையாள அரசியலின் தனித்த இயல்புகள் அவர் கருதுவது போன்று மெச்சத்தக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை. சமூக இயக்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்கிற பெயர்களில் ஏராளமான மக்கள் திரட் டப்பட்டார்கள். இப்படிப்பட்ட அமைப்புகள் அரசு சாரா அமைப்புகளின் நிதி உதவியோடு செயல்பட்டன. இந்த வார்த்தைகளை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சமூக இயக்கம் என்று சொல்லுகிற போது அது அர சியல் இயக்கம் என்கிற கருத்தாக்கத்திலிருந்து மாறுபட்டது. அரசியல் அதிகாரம், அரசு ஆகிய அனைத்தும் ஊழல், நேர்மையற்ற நடைமுறைகள் நிறைந்ததாக  அவை ஒதுக்கப்பட வேண்டும்; அரசியல் கட்சிகளே தேவை இல்லை.

அரசியல் பார்வை கொண்ட தொழிலாளர் இயக்கங்களும் தேவை இல்லை என்கிற இந்தப் பார்வையி லிருந்துதான் அரசியல் என்கிற வார்த்தை அகற்றப்பட்டு சமூக என்கிற வார்த்தை சேர்க்கப் பட்டு சமூக இயக்கம் என பரவலாக பேசப்பட்டது.

அரசியல் அதிகாரம் என்கிற பிரச்சனையைத் தவிர்த்து தனிநபர்கள், உள்ளூர் சமூகக்குழுக்கள் ஆகியவற்றை பலப்படுத்துவதும் அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளில் செலுத்துவதுதான் முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டது. சிவில் சமூகம் என்கிற வார்த்தை இடையறாமல் பயன் படுத்தப்படுகிறது. இதன் அர்த்தம் அரசு, அரசின் பொறுப்புகள் என்பன பற்றி அதிக முக்கியத் துவம் கொடுக்காமல் சிவில் சமூகத்திலுள்ள மக்களைப் பற்றியும் அவர்களின் பிரச்சனை களைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இவையனைத்தும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகளால் ஊக்கமளிக்கப்படுகிறது. இத்தகைய பல அமைப்புகள் அரசிடமிருந்து சுயேட்சைத் தன்மையோடு இருக்க வேண்டு மென்பதற்காக அரசிடம் நிதி பெறுவதில்லை. மாறாக வெளிநாட்டு அரசுகளின் நிதி, ஜெர்மன் பவுண்டேசன்கள், ஐ.நா.வின் பல நிறுவனங்கள், பிரிட்டிஷ் அரசின் ஆக்ஷன் எய்டு அமைப்பு, உலக வங்கி, போர்டு பவுண்டேசன் போன்ற அமைப்புகளிடமிருந்து பல தன்னார்வ நிறுவ னங்கள் நிதி பெற்று வந்தன. சமீப காலங்களில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசு சாரா அமைப்புகளுக்கு நிதியளித்து அவற்றை வளர்த் திட பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்த செயல்பாடுகளுக்கு இந்திய அரசு தேவை இல்லை. அரசுக்கு வெளியிலிருந்து நிதி பெறுவது தான் சரியானது என்ற கண்ணோட்டம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

உள்ளூர் செயல்பாடு:

உள்ளூர் மட்டத்திலான பணி, பிரச்சனைகள் அடிப்படையில் உள்ளூர் சமூகங்களைத் திரட்டு வது இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் புதிதல்ல. கம்யூனிஸ்ட்டு கட்சிகள் உள்பட பல அமைப்பு கள் நீடித்த உள்ளூர் மட்ட மக்கள் திரட்டல் களில் இயக்கங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இவை தேசிய அளவில் விவசாயிகளை யும் உழைக்கும் வர்க்கங்களையும் சுரண்டலி லிருந்து விடுதலை செய்வதற்கான தேசம் தழுவிய இயக்கத்தின் பகுதியாகத்தான் உள்ளூர் இயக் கங்கள் அமைந்தன.

தற்போதைய அரசு சாரா அமைப்புகளின் தன்மை என்னவென்றால் அவர்கள் முழுவதும் உள்ளூர் செயல்பாடு, சிறு சிறு குழு என்பன வற்றை மையமாக வைத்து செயல்படுகின்றன. தேர்தல் அரசியல் மீது வெறுப்பு உருவாக்கப் படுகிறது. வர்க்கங்கள், சுரண்டலிலிருந்து விடு தலை, தொழிற்சங்கப் பணி என அனைத்தும் வெறுத்து ஒதுக்கப்படுகிறது. கம்யூனிச எதிர்ப்பு இதில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கிறது. இடதுசாரி போர்வையில் செயல்படும் பல குழுக்கள் கம்யூனிஸ்ட்டு கட்சிகளை குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பவை யாக செயல்பட்டு வருகின்றனர். கம்யூனிஸ்ட்டு எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு நீண்ட காலமாக தன்னார்வ குழுக்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்க சிஐஏ-வின் பணம் இத்தகு செயல்பாடுகளுக்கு ஆசிய நாடுகளுக்கும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் தொடர்ந்து அனுப்பப் பட்டு செலவிடப்படுகிறது.

புதிய தாராளமயத்தில் கல்வி, சுகாதாரம் போன்ற சமூக நல நடவடிக்கைகளிலிருந்து அரசு விலகுவது முக்கியமானது. அந்த இடத்தில் தன்னார்வ குழுக்கள் முக்கியப் பங்கினை வகிக் கின்றன. சமூக நல நடவடிக்கைகளை மேற் கொள்வது என்ற பெயரில் ஒரு சிறு பகுதி யினருக்கு சில நன்மைகளை ஏற்படுத்தி மக்கள் துண்டு துண்டான இயக்கங்களில் அணி சேர்க் கப்படுகின்றனர். இப்படி அரசியலே துண்டு துண்டாக சிதறடிப்பது, அமைப்பு ரீதியான வலுவான ஆளும் வர்க்கத்தையும் அரசையும் எதிர்க்கிற மாற்று அரசியல் உருவாவது தடுக்கப் படுகிறது. இத்தகு நிலை உலக மூலதனத்தின் நலன்களைப் பாதுகாக்க ஏற்றதாக அமைந் திருக்கிறது. இந்தப் பின்னணியில் பேராசிரியர் ந.முத்துமோகன் கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழங்கியிருக்கிற அறிவுரையை பரிசீலிக்க வேண்டும். இன்று திராவிட அரசியல் அம்மணமாகி நிற்கிறது…. ஆயின் அடையாள அரசியலுக்கு இன்னும் ஆற்றல்கள் உள்ளன. இவ்வேளையில் கீழிருந்து தமிழ் அடையாளத்தை கட்டியெழுப்பும் வேலை களை கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டியுள்ளது. கீழிருந்து தமிழ் அடையாளம் என்பது விவசாயிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. நிலம், சுற்றுச் சூழல், நீராதாரங்கள், நாட்டுப்புற மக்கட் பண்பாட்டு, போர்க்குணம் சார்ந்த தமிழ் அடையாளம் கட்டியெழுப்பப்பட வேண்டும். (பக்கம் – 28) இந்த அறிவுரை தெரிந்தோ தெரியாமலோ உலக மூலதன சக்திகளின் நலனை பாதுகாக்கிற முயற்சிகளுக்கு வலுசேர்ப்பதாக அமைந்திடும்.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாது காக்க நடத்தப்படும் போராட்டங்கள் அவசியம். ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்த அடையாளங் கள், முற்போக்கான பண்பாட்டு கூறுகள் ஆகிய வற்றிற்கான போராட்டங்கள் வலுவடைய வேண் டும். ஆனால், இவை நாடு தழுவிய தொழிலாளி-விவசாயி வர்க்கக் கூட்டணியை பலப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த வர்க்கத் திரட்டல்தான் சமூக ஒடுக்குமுறைகளை ஒழிப்பதோடு சோசலிச சமூக மாற்ற கடமை யையும் நிறைவேற்றிடும்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: