இலங்கைத் தமிழர் பிரச்சனை இந்த நூற்றாண்டின் துயரம். அரசியல் அதிகாரம், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிங்கள மேலாதிக்க ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது.
முப்பது ஆண்டுகளுக்கு மேல் அமைதியான வழியில் உரிமைக்காகப் போராடியவர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை உருவானதற்கு சிங்கள மேலாதிக்கம் தான் காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று.
“சமரசம் என்பது கெட்ட சொல் என்று கருதக் கூடாது” என்று “மாவீரன் பகத்சிங்” ஒருமுறை குறிப்பிட்டார். புலிகளுக்கும் அரசுக்கும் உருவான சமரசத் தீர்வுகள் ஒவ்வொரு முறையும் தட்டி விடப்பட்ட உண்மையை மறைக்க முடியாது. அதுவும் இன்றைய துயரத்திற்கு முக்கியமான காரணமாகும்.
நேபாள மாவோயிஸ்ட், இதே காலத்தில் உலக சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கணக்கில் எடுத்து ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, தேர்தலில் வெற்றி பெற்று – நேபாள மன்னனை நீக்கி ஜனநாயகத்தை உருவாக்கினார் கள்.
தமிழ் ஈழ வரலாறு, பண்டைய மன்னர்கள் பெருமை, சிங்களத்தை வென்ற பெருமைகள் இப்போதும் பேசப்பட்டு, எழுதப்பட்டு அதன் பின்னணியில் ஈழம் தவிர எந்த யோசனையையும் ஏற்காத இயக்கங்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தத்துவார்த்த ரீதியாக கடுமையாக விமர்சிக்கிறார்கள். நய்யாண்டி செய்கிறார்கள். இந்திய வர லாற்றில், தமிழக வரலாற்றில் அதிகமாக துப் பாக்கி ரவைகளை தாங்கிய கட்சி, சித்திரவதை களை சந்தித்த கட்சி. இதை விமர்சிக்கும் சாய்வு நாற்காலி அரசியல்வாதிகள் சற்று நிதானமாக உண்மைகளை பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழர் நலனில் சிபிஐ(எம்)-க்கு மற்றவர்களுக்கு உள்ள அக்கறை உண்டு என்பது அவர்களுக்கும் தெரியும். கடந்த 30 ஆண்டுகளில் தனக்குரிய பங்கை சிபிஐ(எம்) நிறைவேற்றியுள்ளது. மற்ற இயக்கங்கள் பேசுவது போல் சிபிஐ(எம்) பேசவில்லை என்பது உண்மை. எங்கள் எழுத்துக்கள், நாடாளுமன்ற விவாதங்களை கேட்டவர்கள், படித்தவர்கள் எந்த இடத்தில் தவறு என்று இன்று வரை சுட்டிக் காட்டவில்லை.
கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் காலத்து வரலாறுகளையும் தத்துவார்த்த விளக்கங்களையும் தாராளமாக எடுத்து வைக்கிறார்கள்.
“மார்க்சியத்தின் பால் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை நம்மை புல்லரிக்க செய்கிறது”. அவர்களுடைய மார்க்சிய பக்தி சுயநிர்ணய உரிமை பற்றி மட்டுமே என்பதும் நமக்குத் தெரியும். தங்களுக்கு உதவும் வார்த்தை களை பெருத்த நம்பிக்கையுடன் அள்ளி வீசுவார்கள்.
இந்த பிரச்சனையின் உண்மையான ஆர்வம் உள்ளவர்களுக்கு சில உண்மைகளை எடுத் துரைக்க வேண்டியுள்ளது:
அரசியல் போராட்டங்களில் வரலாறு ஓர் ஆயுதமாக பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. பலர் இதுகுறித்து தங்கள் கவலைகளை தெரிவித்துள்ளனர்.
பிரபல வரலாற்று அறிஞராகிய பேராசிரியர் ஏரிக் ஹோப்ஸ்பாம் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது.
“ஹெராயின் என்ற போதைப் பொருளுக்குப் பொப்பி மலர் மூலப்பொருள். அதுபோல தேசியவாதக் கருத்துக்கள், இனக்குழு சார்ந்த கருத்துக்கள் மற்றும் அடிப்படை வாதங்கள் ஆகியவற்றிற்கு வரலாறு மூலப் பொருளாக அமைகிறது. இப்படியுமான கருத்துக்கு கடந்த காலம் என்பது ஓர் அத்தியாவசியமான கூறு. இக்கருத்துக்கு பொருத்தமான கடந்த காலம் இல்லை என்றால், அதனை வேண்டிய வகையில் ஆக்கிக் கொள்ள முடியும். எதையும் நியாயப்படுத்த கடந்த காலம் உதவுகின்றது. மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு அதிகம் இல்லாத நிகழ்காலத்துக்கு ஒரு புகழ் பூத்த பின்னணியை கடந்த காலம் வழங்குகிறது”.
அவர் மேலும் கூறுகிறார்,
“வரலாறு எழுதும் தொழிலானது அணு ஆய்வுப் பௌதீகவியல் போல அல்லாது யாருக்கும் தீங்கு விளைவிக்காத ஒரு தொழில் என நான் எண்ணிப் பார்த்தேன். ஆனால், இத்தொழில் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை இப்போது உணர்கிறேன்”. பிரித்தானியாவில் ஐரிஷ் குடியரசுப் படையினர் ரசாயன உரத்தை வெடிகுண்டாக மாற்றுவதற்குப் பயன்படுத்திய தொழிற்சாலைகள் போல் எங்கள் படிப்பறைகள் குண்டு தொழிற்சாலைகளாக மாறக்கூடியவை. இந்நிலை எங்களை (வரலாறு எழுதுவோரை) இருவகையில் பாதிக்கிறது.
ஒன்று, வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதைப் பொதுவாக உணர்ந்து கொள்வது.
இரண்டாவதாக, அரசியல் தத்துவ நோக்கங்களுக்காக வரலாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதை சிறப்பாக உணர்ந்து கொள்வது.
“உலகம் இன்றைய நிலையை எப்படி அடைந்தது என்பதை விளங்க வைப்பதில் வரலாறு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது பேராசிரியர் ஏரிக் ஹோப்ஸ்பாம் கருத்தாகும்”.
தற்போது காணப்படும் அரசியல் நிலைக்கு அடிகோலிய தமிழர் உரிமைப் போராட்டம் இன்றைய உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டியது. இது அவர் அவர் வரலாற்றின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை ஆகாது.
இரண்டாவது உலக யுத்தத்திற்கு பின் உலகின் விடுதலை அடைந்த நாடுகளில் இன்று இனப்பிரச்சனை, மொழிப் பிரச்சனை, மதப் பிரச்சனை, ஏற்றத்தாழ்வுகள் போன்ற ஏராளமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரித்தது ஒரு விபத்து. இதை அன்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் ஆதரித்தது உண்மை.
பாகிஸ்தான் கோரிக்கை பலம் பெற்றவுடன் சீக்கியர்கள் தனிநாடு கோரினர், இந்து மகாசபை இந்துராஷ்புரா என்ற கோஷத்தை முன்வைத்தன. தெற்கே திராவிட நாடு என்கிற கோரிக்கை உருவானது. பல மொழிகள், பல இனங்கள் கொண்ட மக்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்குவது என்பது கம்யூனிஸ்ட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது. 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் மீண்டும் உருவாவது வளர்ச் சிக்கு உதவாது. இதுகுறித்து ,
கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் வலுவான வாதங்கள், பிரதிவாதங்கள் உருவானது மார்க்சிய ஆதாரங்கள் கொடுக்கப்பட்டது.
தென்னகத்தைப் பொருத்தவரை மொழியால் பிரிந்து (திராவிடம்) இனம் நாடு உருவாக்குவது.
சுயநிர்ணய உரிமை குறித்து திமுக தலைவர்கள் இன்று வைக்கும் வாதங்களை விட ஆயிரம் மடங்கு வாதங்கள், தத்துவார்த்த சான்றுகள், வரலாறு போன்றவற்றை திராவிட இயக்கம் வைத்தது. அன்று திமுக விடம் 60-க்கு மேற்பட்ட வார இதழ்கள் இருந்தது. ஒரு ஜனசக்தி அதற்கு எதிரானப் போராட்டத்தை நடத்தியது.
சோவியத் ஒன்றியம் உருவானபோது இதர சிறிய இன மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய தேவை அன்றைய ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கு இருந்தது. அந்த சிறிய இன மக்கள் சாரிஸ்ட ரஷ்ய மேலாதிக்கத்தினால் ஒடுக்கப்பட்டு இருந்தனர். ஆகவே தான், தோழர் லெனின் சோவியத் அரசியல் சட்டத்தின் பிரிவு 17-ல் தேசிய குடியரசுகளுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு என்று வடிவமைக்கப்பட்டது: சிலகாலம் யூகோஸ்லாவியாவின் அரசியல் சட்டத்தில் இருந்து பிறகு அது நீக்கப்பட்டுவிட்டது.
“சுயநிர்ணய உரிமை குறித்து குரல் கொடுக்கும் நண்பர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் என்று முடித்து விடுகிறார்கள். அவர்கள் வாதத்திற்கு அது உதவுகிறது”.
“1948 மக்கள் சீனத்தில் மாவோ தலைமையில் ஆட்சி அமைத்த கம்யூனிஸ்டுகள் தங்கள் அரசியல் சட்டத்தில் லெனின் பாதையை பின்பற்றவில்லை. திபெத்தியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற தலாய் லாமா-வின் கோரிக்கையை மக்கள் சீனம் ஏற்கவில்லை. அவருடைய மடத்தை சார்ந்த பஞ்சன் லாமா சீன நிலை சரி என்று சீனாவில் இருந்துவிட்டார்”.
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இதுகுறித்து 1942 காலங்களில் விவாதம் தொடங்கிவிட்டது. பல பிரச்சனைகளுக்கு மார்க்ஸ், லெனின் உரைகளில் இருந்து மேற்கோள் காட்டி பல தோழர்கள் பேசினர்.
அந்த விவாதத்திற்கு பதில் உரைக்கும் போது தோழர் மாவோ கூறுகிறார்:
இப்போதும் கூட சிலர் மார்க்சிய-லெனினிய எழுத்தாளர்கள் அவையிலிருந்து சில மேற்கோள்களை எடுத்துச் சொல்லி அவைகளே அனைத்து தீங்குகளையும் எளிதாக தீர்க்கவல்லது என்று கருதுகின்றனர். அறியாமையில் உழலும் அத்தகையோர் தான் மார்க்சிசம்-லெனினிசத்தை ஒரு வகையான சமயகோட்பாடாக கருதுகின்றனர். அவர்களிடம் மழுப்பல் எதுவுமில்லாமல் தெளிவாகச் சொல்லிட வேண்டும்.
“உங்கள் கோட்பாடு எந்தப் பயனுமற்றது நம்முடைய கொள்கை வறட்டுச் சிந்தாந்தமல்ல; செயலுக்கான வழிகாட்டி என மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க மிகமிக முக்கியமான வழிகாட்டுதலை இந்த மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள்”.
சுயநிர்ணய உரிமைக்காக வாதாடுகிறவர்கள் மார்க்ஸ், லெனின், ஸ்டாலினுடன் நின்றுவிடு வார்கள். தோழர் மாவோவிடம் நெருங்கமாட் டார்கள். இந்த வியாபாரிகள் தேவைப்பட்டால் மாவோ – கம்யூனிஸ்ட் அல்ல என்றும் எழுதுவார் கள். உலக வரலாற்றில் இயற்கையை புரிந்து கொள்ள நிக்கோலஸ் கோபர்நிக்கஸ், கலிலியோ போன்றவர்கள் எடுத்த முயற்சிக்கு மேல் புதிய கண்டுபிடிப்புக்களை ஐசக் நியூட்டன் கண்டு பிடித்தவுடன், மற்றவர்களை ஐசக் நியூட்டன் நிராகரிக்கவில்லை. மாறாக 1676-ல் ஐசக் நியூட்டன் ராபர்ட் ஹீக்குக்கு எழுதிய கடிதத்தில் எனக்கு முன்னோடியாக இருந்த பேரறி வாளர்களின் தோள்களின் மீது நின்று தான் என்னால் முன்னோக்கி பார்க்க முடிகிறது என்று கூறினார். இன்றைய உலக நிலைகளை புரிந்து கொள்ள திட்டவட்டமான நிலைமைகள் குறித்து திட்ட வட்டமான பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் மார்க்சிய-லெனி னியத்தின் மீற முடியாத கருவியாக இக்கோட் பாடு கருதப்படுகிறது. இதைத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பின்பற்றுகிறது.
எந்த அரசும், முதலாளித்துவ அரசாகவோ, சோசலிச அரசாகவோ இருந்தாலும், பிரிவினையை கொண்டுவரும் வழிமுறைகளுக்கான அடிப்படை விதியினை எடுத்து விளம்பியதில்லை: அப்படிச் செய்யும் என எதிர்பார்க்கவும் இயலாது. ஆப்ரகாம் லிங்கன் சொன்னது போல் எந்த அரசும் தானே கலைந்து (கரைந்து) போவதற்கான வழி வகுப்பதில்லை.
எதற்காக இந்த நண்பர்கள் சிபிஐ (எம்) ஐ தாக்குகிறார்கள். இந்தியாவில் சிபிஐ, சிபிஐ(எம்-எல்), சிபிஐ(எம்) ஆகிய அனைவரும் இலங்கை இனப்பிரச்சனை குறித்து ஒரே நிலை எடுத்துள்ளது. உலகில் எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கையில் பிரிவினை கோருவதும் ஈழம் அமைவதும் தேவை என்று கூறவில்லை என்பது புரிந்தும், சிபிஐ(எம்) கட்சியை விமர்சிக்கும் இவர்களுக்கு ஓர் அரசியல் நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் நிறைவேறாது…
“தொழிலாளிகளிடையே சமூக-ஜனநாயகவாத (கம்யூனிச) உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் அவர்களுக்கு கொண்டுவரப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே அதாவது தொழிற் சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, இன்றியமையாமையாத தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின் இன்றியமையாமைப் பற்றிய துணிவு மட்டுமே – வளர்த்துக்கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறு புலப்படுத்துகிறது. ஆனால் சோஷலிசத்தின் கொள்கை, மெய்யறிவுவகைப்பட்ட, வரலாறு வழிப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட கொள்கைகளிலிருந்து வளர்ந்ததாகும். சொத்துள்ள வர்க்கங்களின் பிரதி நிதிகள், அறிவுத்துறையினர், அவற்றை வகுத்து விளக்கினர். நவீன விஞ்ஞான சோசலிஸத்தின் மூலவர்களான மார்க்சும், எங்கெல்சும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப் பகுதியினரைச் சேர்ந்தவர்கள்” – லெனின் – என்ன செய்ய வேண்டும் என்ற நூலிலிருந்து.
Leave a Reply