மார்க்ஸ் பற்றி எங்கல்ஸ் – லெனின் …


மார்க்ஸ் பற்றி எங்கல்ஸ்

  1. தனது காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு நிந்திக்கப்பட்டவர் மார்க்ஸ். வெறுக்கப்பட்டவர் மார்க்ஸ்.சர்வாதிகார அரசுகளும் குடியரசுகளும் ஒருசேர அவரை வெறூத்தனர், நாடு கடத்தினர், முதலாளி வர்க்கங்கள், அவை பிற்போக்காக இருந்தாலும், அதிதீவிர ஜனநாயகவாதியாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு மார்க்ஸ் மீது அவதூறுகளைப் பொழிந்தனர். இவற்றையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. தூசுகள் எனக் கருதினார்.மிகவும் அவசியம் எனக் கருதியபொழுது மட்டுமே பதில் அளித்தார். மேலும், அவர் இறக்கும் போழுது, சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிஃபோர்னியா வரை, அனைத்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பலபத்து லட்சம் தொழிலாளிகள் அவரை வணங்கினர், கண்ணீர் சிந்தினர். நான் ஒன்றூ சொல்லமுடியும். மார்க்ஸை எதிர்த்தவர்கள் பலர் இருந்தனர். ஆனால், அவருக்கு ஒரு நபர் கூட தனிப்பட்ட முறையில் எதிரி இல்லை. அவர் பெயரும் அவர் பணியும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

மார்க்ஸ் பற்றி லெனின்

  1. மார்க்சீய தத்துவத்துவம் சர்வ வல்லமை கொண்டது.ஏனென்றால், அது உண்மையானது. அது முழுமையானது. முன்பின் முரண் அற்றது. மனிதனுக்கு ஒன்றிணைந்த உலக கண்ணோட்டத்தை தருகிறது. இக்கண்ணோட்டம், முதலாளித்வ சுரண்டலுக்கான வாதங்களையும் பிற்போக்குத்தனத்தையும் அனைத்துவடிவிலான மூட நம்பிக்கைகளையும் முற்றிலுமாக எதிர்க்கிறது. (லெனின், மார்க்சீயத்தின் மூன்று தோற்றுவாய்களும் அம்சங்களும்)
  2. முதலாளித்வ பொருளியல்  அறிஞர்கள் சரக்குகளின் பரிமாற்றத்தில் பொருட்களிடையே உறவுகளைத்தான் கண்டனர். ஆனால், இதில் மனிதர்களுக்கிடையேயான உறவு உள்ளதை மார்க்ஸ் வெளிப்படுத்திக் காட்டினார். (லெனின், மார்க்சீயத்தின் மூன்று தோற்றுவாய்களும் அம்சங்களும்)