மரணதண்டனையின் மீது சோசலிசம் முன்வைக்கும் ஆட்சேபனை என்பது
‘சமூகப் பொறுப்பு’ (அதாவது ஒரு தனி நபரின் செயலானது, ஒவ்வொரு தனி நபருக்கும் அமைந்த சமூக நிலைமைகளினால் ஏற்படுகிறது – குற்றத்திற்கான தனிப் பொறுப்பை ஏற்கிறார் எனவே அவரின் உயிரை மட்டும் எடுப்பது சரியல்ல) என்ற வரையறைக்குள் நிற்பதல்ல
அல்லது அது
‘மனித நேயத்தை’ (ஆயுதமற்ற எந்த உதவியுமற்ற ஒரு தனிமனிதனை ரத்தம் சொட்டச் சொட்ட படுகொலை செய்வது, அதுவும் ஒரு அரசே அதனை மேற்கொள்வது ‘குற்றவாளியின்’ நடவடிக்கையிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல என்கிற) அடிப்படைகளுக்குள் அடங்குவது மட்டுமல்ல.
அத்தோடு மற்றொரு கூடுதல் விமர்சனமும் இணைந்தது, ஒரு “குற்றவாளி”யின் மீது சுமத்தப்படும் குற்றத்தில் – அவரின் உடந்தை எப்போதும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது – எனவே, அநீதி இழைக்கப்படாமலிருக்கவும் ஒருவரை கொல்வது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
– பேராசிரியர் பிரபாத் பட்நாயக், ஜூன் 2, 2013 (பீப்பிள்ஸ் டெமாக்ரசி)