அறிமுகம்
1917 அக்டோபர் மாதத்தில் (அன்றைய ரஷ்ய காலண்டர்படி அக்டோபர் 24-25, நவீன கணக்குப்படி நவம்பர் 6-7 ) மகத்தான ரஷ்ய புரட்சி வெற்றிபெற்று போல்ஷ்விக்கட்சியின் தலைமையில் ஒரு தொழிலாளி வர்க்க ஆட்சி அமைந்தது. இது மானுட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். பத்தொன்பதாம் நூற்றாண் டின் நடுப்பகுதியில் மார்க்சும் எங்கல்சும் உருவாக் கிய சோசலிச இயக்கம், தொடர்ந்து தத்துவமாக வும் மக்கள் இயக்கமாகவும் பெரும் தாக்கத்தை ஐரோப்பாவில் மட்டுமின்றி உலகு முழுவதும் ஏற்படுத்தியது. எனினும், மிகக் குறைந்த காலம் 1871 இல் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் பாரிஸ் கம்யூன் ஆட்சி நடத்தியது என்றாலும், ஒருநாட் டில், அதுவும் பெரிய நாட்டில் சோசலிச ஆட்சி அமைந்தது முதல் முறையாக நிகழ்ந்தது.
1917 ரஷ்யப் புரட்சியில் தான். தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கட்டிலில் அமர்வது என்பது சாதாரண விசயமல்ல. அதுவும், பின்தங்கிய ஜார் மன்னன் சாம்ராஜ்யத்தில் கடும் அடக்குமுறை களை நீண்ட நெடிய மக்கள் போராட்டங்கள் மூலம் தகர்த்து, இடையில் ஆட்சியை கைப்பற்றி தொழிலாளி வர்க்கத்தை வெளியேற்ற முனைந்த முதலாளித்துவ கட்சிகளின் சதிகளை முறியடித்து போல்ஷ்விக் புரட்சி வெற்றி பெற்றது என்பது ஆகப்பெரிய வரலாற்று நிகழ்வாகும். இதை ஏகாதிபத்தியநாடுகளின் முதலாளித்துவ அரசு களும் ஆளும் முதலாளி வர்க்கமும் நன்கு உணர்ந் திருந்தன. அவர்களுக்கு கதிகலங்கியது.
முதலாளிகளே இல்லாமல் ஒருநாட்டை ஆள முடியுமா? உற்பத்தி எப்படி நடக்கும்? வளர்ச்சி என்னாவது? யார் முதலீடு செய்வார்கள்? என் றெல்லாம் கூறி காலம்காலமாக தங்கள் சுரண்டலை நியாயப்படுத்தி ஆண்டுவந்தனர் முதலாளி வர்க் கத்தினர். எனவே, இனி அந்த வர்க்கம் தேவை யில்லை, எல்லா உற்பத்தியையும் செய்துவரும் தொழிலாளி வர்க்கம் ஆட்சியையும் பொறுப் பெடுத்துச் செய்யும், முதலாளிகள் தேவையில்லை என்ற பிரகடனமாக அமைந்த அக்டோபர் புரட்சி அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்ததில் வியப்பில்லை.
தொழிலாளி வர்க்க ஆட்சி அமைந்தவுடன் அதை முளையிலேயே கிள்ளியெறிய ஏகாதிபத் திய நாடுகள் கூட்டாக செயல்பட்டன. 1918 ஜூன் மாதத்திலேயே பதினான்கு நாடுகள் தங்கள் துருப்புகளை ரஷ்யாவிற்குள் அனுப்பி, உள் நாட்டு எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆதரவாக சோசலிச ஆட்சிக்கு எதிரான போரைத் துவக் கின. ஆனால், பெரும் இழப்புகளை சந்திக்க நேர்ந்த போதிலும், மக்களின் பேராதரவுடன் தொழி லாளி வர்க்க செம்படை அவர்களை விரட்டி அடித்தது. புரட்சிகர ஆட்சி உறுதிப்படுத்தப் பட்டது. எனினும், ஏகாதிபத்தியம் தனது ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை பலவடிவங்களில் தொடர்ந் தது. ரஷ்யா மீதும் 1923 இல் சோசலிச சோவியத் ஒன்றியம் உருவான பின்பு அதன் மீதும் மேலை நாடுகள் பொருளாதார பகிஷ்கரிப்பை நடை முறையாக்கினர். (இதையும் மீறி சில மேலை நாட்டுக் கம்பனிகள் சோவியத் ஒன்றியத்துடன் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்றனர் என்பதும் நடந்தது).
முதலாளிகள் இல்லாமல் ஒரு நாடு, பின்னர் பல குடியரசுகள் இணைந்த சோசலிச சோவியத் ஒன்றியம், வாழ முடியும், வளர முடியும் என்று பல ஆண்டுகளின் அனு பவம் காட்டிய பின்பும் பல முதலாளித்துவ அறிவு ஜீவிகள், குறிப்பாக பொருளியல் அறிஞர்கள், முதலாளிகளும் சந்தை யும், லாபநோக்கும் இல்லா மல் பொருளாதாரமே சாத்தியமில்லை என்றும் ஒட்டுமொத்த பொருளா தார திட்டமிடுதல் என்பது இயலாத காரியம் என்றும் சொல்லி வந்தனர். ஆனால், 70 ஆண்டு களுக்கும் மேலாக இருந்த சோவியத் சோசலிசம் பொருளாதார நிர்மாணத்தில் படைத்த பெரும் சாதனைகளை மேலைநாட்டு அறிஞர்களே மறுப்பதற்கில்லை. இவை பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.
புரட்சியின் நுழைவாயிலில் பின்தங்கியிருந்த ரஷ்யா
கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யா, இதர வல்லரசுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கி இருந்தது. எழுத்தறிவு விகிதம் 30 கூட இல்லை. அச்சமயம் அமெரிக்காவின் எழுத்தறிவு விகிதம் 95 , ஜப்பானது 9 . அமெரிக்காவில் சரா சரி ஆயுட்காலம் 1900 இல் 47.3 ஆண்டுகளாக இருந்தது. ரஷ்யாவில் 1896 இல் 32 ஆண்டு கள் தான். இது போலவே, தொழில்துறை, வேளாண் உற்பத்தி, மின்சாரம், போக்குவரத்து என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், புரட்சி நிகழ்ந்த பொழுது ரஷ்யா மிகவும் பின் தங்கிய நாடாகவே இருந்தது. முதல் உலகப் போருக்கு முன்பு நிலைமை இவ்வளவு மோசம் என்றால், அதனை தொடர்ந்து வந்தது முதல் உலக யுத்தம். பின்னர் வந்தது, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் (1918-1921) எதிர்ப் புரட்சியாளர்களையும் ஏகாதி பத்திய துருப்புகளையும் எதிர்த்து புரட்சிகர அரசை காப்பாற்ற நடந்த உள்நாட்டுப்போர். இதன் பின்னர் யுத்தங்களின் விளைவுகளில் இருந்து நாட்டைமீட்க புதிய பொருளாதார கொள்கை கள் பின்பற்றப்பட்டன,
1924 ஜனவரியில் லெனின் மறைந்த பிறகு உட்கட்சி போராட்டங்கள் நிகழ்ந் தன. இவற்றின் இறுதியில் 1927 ஆம் ஆண்டு முடிவில் தான் ஸ்டா லின் தலைமையில் உறுதி யான கொள்கை நிலைப் பாடு அமைந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், சோவியத் ஒன்றியத்தின் ரஷ்யப் பகுதி 1928ஆம் ஆண்டில் தான் அது ஏற்கெனவே 1913 ஆம் ஆண்டில் கொண்டிருந்த உற்பத்தி நிலையை எட்டியது. வேறு வகையில் சொல்வ தென்றால் போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் சோவியத் ஒன்றிய அரசு ஐந்தாண்டு திட்டம் என்ற மாபெரும் – அது வரை வரலாற்றில் மேற் கொள்ளப் படாத புது முயற்சியை, பிரம்மாண்ட மான முயற்சியை துவக்கிய 1928 ஆம் ஆண்டில் மேலைநாடுகளுடன் ஒப்பிடுகையில் சோவியத் ஒன்றியம் மிகவும் பின் தங்கி இருந்தது.
அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளில் 1940 இல் தனது மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் நிறை வடையும் முன்பே, அமெரிக்காவிற்கு அடுத்தபடி தொழில் வளர்ச்சி பெற்ற நாடு என உலகில் இரண்டாம் இடத்தை சோவியத் ஒன்றியம் எட்டியது. திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி சாத்தியமே இல்லை, முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் இல்லையென்றால் சர்வநாசம் என்று கூறிவந்த பொருளியல் அறிஞர்களின், மேலைநாட்டு ஆளும் வர்க்கங்களின் கூற்றுகளை, சோவியத் ஒன்றியத்தின் மகத்தான சோஷலிச பொருளாதார வளர்ச்சி வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தது.
திட்டமிட்ட சோஷலிச வளர்ச்சி
1917 முதல் 1927 வரை ஏராளமான சவால்களை அக்டோபர் புரட்சி எதிர்கொண்டதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதனால் ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை முறியடித்து தனது ஆட்சியை உறுதிப்படுத்தி நவீன நிர்மாணத்தை 1928 இல் துவக்கிய பொழுது எத்தகைய உலகை அது எதிர்கொண்டது? அதன் புரட்சிகர அணிகள் உள்நாட்டுப்போரில் ஏராளமான தோழர்களை இழந்திருந்தன. ரஷ்ய புரட்சியை தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் முன்னேறியிருந்த ஐரோப் பிய நாடுகளில் சோஷலிச புரட்சிகள் வெடிக்கும் என்ற போல்ஷ்விக் நம்பிக்கை பொய்த்துப் போனது. ஜெர்மனியிலும் ஹங்கேரியிலும் புரட்சி கள் வெடித்தன. ஆனால் அவற்றை ஆளும் வர்க் கங்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து முறியடித் தன. இனி நீண்ட காலம் தனித்து நின்று சோஷலிச நிர்மாணத்தை மேற்கொண்டாக வேண்டும் எனற நிலைமையை அது சந்தித்தது. ஏகாதிபத்தியம் சோவியத் புரட்சியை தகர்க்க தொடர்ந்து பல ராணுவ முஸ்தீபுகளையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது. அண்டை ஜெர்மனியில், அதே போல் இத்தாலியில், எதிர்ப் புரட்சி சக்திகளின் வெற்றி பாசிச சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. ஜனநாயக சக்திகளுக்கு சிக்கலான கால கட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. இத்தகைய சூழலில், ட்ராட்ஸ்கி போன்றவர்கள் தனி ஒரு நாட்டில் சோசலிசம் அமைப்பது சாத்தியமல்ல என்ற கருத்தை முன்வைத்த பொழுது தனித்து நின்றும் சோஷலிச நிர்மாணத்தை வெற்றிகர மாக சாதிப்போம் என்று ஸ்டாலின் தலைமை யிலான போல்ஷ்விக்கட்சி முடிவெடுத்தது. இதற் கான முக்கிய ஆயுதமாக, அன்று வரை மானுட வரலாற்றில் கண்டிராத, ஒட்டு மொத்த பொருளா தார திட்டமிடுதல் என்ற அற்புதமான யுக்தியை கடைப்பிடித்தது. திட்டமிடுதல் பற்றியும் ஒவ்வொரு சோவியத் ஐந்தாண்டு திட்டம் பற்றியும் இக்கட்டு ரையில் விளக்குவதும் விவாதிப்பதும் சாத்திய மல்ல. எனினும் அதுபற்றிய சிறிய அறிமுகத்திற்கு செல்வோம்.
சோவியத் ஒன்றியத்தில் திட்டமிடுதல்
ரஷ்ய புரட்சிக்கு முன்பு ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடு வது என்பது நிகழவில்லை. முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த முடிவுகளை முதலாளிகள் எடுக்கின்றனர். நவீன முதலாளித்துவ வளர்ச்சியில் பெரும் கம்பனிகள் தங்கள் முதலீடுகள் எந்தெந்த துறை களில் செய்யப்படவேண்டும் என்பது போன்ற முடிவுகளை திட்டமிட்டு மேற்கொள்கிறார்கள். ஆனால் இவை குறிப்பிட்ட கம்பனி சார்ந்த திட்டமிடுதல் தான். ஒட்டு மொத்த நாட்டுப் பொருளாதாரத்திற்கு மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் என்பது முதலாளித்துவ அமைப் பில் சாத்தியமல்ல. ஒட்டுமொத்த திட்டமிடு தலுக்கும் அதனை அமலாக்கவும் ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பு வேண்டும். முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் அரசுகூட அத்தகைய அதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல. இதற்கு மிக அடிப்படையான காரணம், உற்பத்திக்கருவிகள் முதலாளிகளிடம் உள்ளன என்பதும் அவற்றை அவர்கள் விருப்பப்படி பயன்படுத்த அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு என்பதுமாகும். இந்தியா உள்ளிட்ட பல முதலாளித்துவ நாடுகளில் பொருளா தார திட்டங்கள் தீட்டப்பட்டன. இவை எல்லாமே அரசு முன்வைக்கும் பரிந்துரைகள் தான். ஏனெனில், முதலாளித்வ நாடுகளில் வளங்களை திரட்டி அரசுத்துறை முதலீடுகளை மேற்கொள்ள அரசு முயற்சிக்கலாம். ஆனால் தனியார் துறை முதலாளி களின் முதலீட்டு முடிவுகளை அரசு நிர்ணயிக் கவோ ஆணையிடவோ முடியாது. அக்டோபர் புரட்சி தொழில் துறைகள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கியது. எல்லா தொழில் நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததனால் அவர் களது முதலீடுகளின் அளவு, தன்மை உள்ளிட்ட அனைத்தையும் தனித்தனியாக முடிவு செய்யா மல் ஒட்டுமொத்த நாட்டு நலன் அடிப்படையில் துறைவாரியாக உற்பத்தி இலக்குகள் நிர்ணயித்து அவற்றை அடைய வழிமுறைகளையும் திட்ட மிட்டு அமலாக்குவது என்பது சாத்தியமாயிற்று. துவக்கத்தில், புரட்சி வெற்றி பெற்றவுடன் உள் நாட்டு எதிர்ப்புரட்சி சக்திகளும் ஏகாதிபத்திய நாடுகளும் புரட்சிக்கெதிராக போர் தொடுத்த நிலையில், நீண்ட தொலைநோக்குடன் திட்டமிட சாத்தியப்பாடு இல்லாமல் போனது. அரசின் அனைத்து பொருளாதார திட்டங்களும் கொள்கை களும் நடவடிக்கைகளும் எதிர்ப்புரட்சியாளர்கள் தொடுத்த போரில் அவர்களை தோற்கடிப்பதையே மையமாக கொண்டிருந்தன. இவ்வாறு 1918 முதல் 1921 வரையில் திட்டமிடுதல் என்பது போர் சார்ந்த விஷயமாகத்தான் இருந்தது. போர் கால பொது உடைமை கட்டம் என்று இந்த மூன்று ஆண்டுகள் அழைக்கப்படுகின்றன. துருப்புக ளுக்கு தேவையான உணவை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து உறுதிப்படுத்துவது என்பது முக்கிய திட்ட இலக்குகளில் ஒன்றாக இருந்தது. அதேபோல் போருக்கான தளவாடங் களை உற்பத்திசெய்வது போன்றவை முக்கியமாக இருந்தன. பின்னர் 1921 இல் போரின் பெரும் சேதங்களின் பின்புலத்தில் நாட்டின் மிகவும் பின்தங்கிய வளர்ச்சி நிலையை கணக்கில் கொண்டும், வேளாண் மற்றும் தொழில் மீட்சியை சாதிக்க வேண்டி இருந்தது. இதற்காக, தொழிலாளி வர்க் கத்தின் தலைமையிலான சோசலிச அரசு, தொழி லாளி – விவசாயி வர்க்கக் கூட்டணி யை வலுப் படுத்தும் தன்மையில் சில ஆண்டுகள் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் ஒரு வரம்பிற்கு உட்பட்டு தனியார் துறையையும் சந்தைசார் உறவுகளையும் அனுமதித்தது.
லெனின் 1924 ஜனவரியில் மறைந்தார். அதன் பின்பும் இக் கொள்கை சிறிதுகாலம் தொடர்ந்தது. ஆனால், இக்கொள்கைகள் செயல்படுத்தப்பட்டதனால் கிராமப்புறங்களில் முதலாளித்துவ சக்திகள் வலுப்பெற்று வந்தது சோஷலிச அமைப்பின் வளர்ச்சிக்கு தடையாக உருவெடுக்கும் அபாயம் உணரப்பட்டது. இவை 1927 வாக்கில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. ஓரளவு புரட்சி தன்னை நிலை நாட்டிக் கொண்டுவிட்டதால், நீண்ட கால நோக்குடன் மையப்பட்ட திட்டமிடுதலை நோக்கி செல்ல போல்ஷ்விக் கட்சியும் அரசும் முடி வெடுத்தன. சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டிய அடிப்படையிலும் நிலவிய பன்னாட்டு சூழலில் தொழில் வளர்ச்சியை பெரிதும் விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தை கணக்கில் கொண்டும் சோவியத் அரசின் முதல் ஐந்தாண்டு திட்டம் 1928 -1932 காலத்திற்கான துறைவாரி யான வளர்ச்சி இலக்குகளை உருவாக்கியது. அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் சோவியத் அரசு தீர்மானித்தது. 1928 முதல் 1985 தொடர்ந்து ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டு அமலாக்கப்பட்டன. இவை பல வெற்றிகளை சாதித்தன. காலப்போக்கில் பல காரணங்களால் திட்டங்களின் தன்மையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதில் நிறைகளும் குறைகளும் இருந்தன. இவை பற்றி தனியாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிடவேண்டும். சோஷலிச உடைமை உறவுகளின் கீழ் தான் முழு மையான ஒட்டுமொத்த திட்டமிடுதல் சாத்தியம். அத்தகைய திட்டமிடுதல் லாப நோக்கில் அல்ல. மக்களின் வாழ்க்கைத் தரம் பொருளாதாரம், பண்பாடு என அனைத்து அம்சங்களிலும் உயர வேண்டும் என்பதே அதன் நீண்டகால இலக்காக இருக்க முடியும். சோசலி சம் என்பது வெறும் பொருளாதார வளர்ச்சி பற்றிய விஷயம் அல்ல. அதற்கென. முழுமையான ஜனநாயகம், விரிவான மக்கள் பங்கேற்பு போன் றவை உள்ளிட்ட பல மாண்புகளும் விழுமியங்களும் உண்டு.
1928-1940: வியத்தகு வளர்ச்சி
முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் நிறை வடையும் முன்பே உலகில் இரண்டாம் தொழில் நாடானது சோவியத் ஒன்றியம் என்பதை குறிப் பிட்டோம். அதுவும், எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டது மட்டுமின்றி, பிற நாடுகளை சுரண்டாமல், தனது தொழிலாளி வர்க்கத்தின் நலன்களையும் காத்து இந்த வளர்ச்சி சாதிக்கப் பட்டது. 1928 முதல் 1937 வரையிலான காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் தொழில் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்தது. இதில், குறிப்பாக, 1932 முதல் 1937 வரையிலான ஐந்தாண்டு காலத் தில் இரட்டிப்பானது. (1937 முதல் 1955 வரை யிலான காலத்தில் தொழில் உற்பத்தி மீண்டும் இரண்டரை மடங்கு அதிகரித்தது என்ற செய் தியை இங்கு பதிவு செய்யவேண்டும். ஏனென் றால், 1928 முதல் 1937 வரையிலான காலத்தில் ஏற்பட்ட மாபெரும் தொழில் வளர்ச்சி பின்னர் இரண்டாம் உலகப்போரில் நாஜி படைகளின் தாக்குதலில் பெருமளவு அழிந்துபோனது. அதி லிருந்து மீண்டு, இரண்டாம் உலகப் போர் முடிந்து பத்து ஆண்டுகளில், தீவிரமடைந்த ஏகா திபத்திய எதிர்ப்பையும் சந்தித்து இவ்வளர்ச்சி நிகழ்ந்தது என்பது திட்டமிட்ட சோஷலிச பொருளாதார அமைப்பின் மறுக்க முடியாத விளைவும் சாதனையும் ஆகும். )
நிகழ்ந்தது தொழில் வளர்ச்சி மட்டுமல்ல. புரட்சிக்கு முன் விவசாயிகளும் விவசாயக் கூலி தொழிலாளிகளும் நிலப்பிரபுக்களின் கடும் சுரண்டலுக்கு இரையாக இருந்தனர். புரட்சி நிலப்பிரபுக்களின்ஆதிக்கத்தை அழித்தொழித் தது. எனினும் 1921 முதல் 1927 வரையிலான புதிய பொருளாதாரக் கொள்கைகள் காலத்தில் கிராமப் புற செல்வந்தர்களும் பணக்கார விவசாயிகளும் தங்களை ஓரளவு வலுப்படுத்திக் கொள்ள முடிந் தது. பின்னர் முதல் ஐந்தாண்டு திட்ட காலத்தில் சோஷலிச அமைப்பின் இலக்குகளுக்கு தடை யாக இப்பகுதியினர் மாறும் அபாயம் பற்றியும், தொழில் வளர்ச்சிக்கு வேளாண் துறையில் ஏற்பட வேண்டிய உற்பத்தி உறவு மாற்றங்கள் பற்றியும் போல்ஷ்விக் கட்சியில் நடந்த நீண்ட உட்கட்சி விவாதத்திற்குப்பின் கூட்டுப் பண்ணை கள் அமைக்கப்படவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இது அமலாக்கப்பட்ட முறை யில் சில தவறுகள் நிகழ்ந்த போதிலும், கூட்டுப் பண்ணைகளை அமைத்தது வேளாண் வளர்ச் சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருந்தது என்றும் வேளாண் துறையில் உற்பத்தி திறனை உயர்த்த உதவின என்றும் தான் ஆராய்ச் சிகள் நமக்கு தெரிவிக்கின்றன. கடுமையான இயற்கை பாதிப்புகளை தொடர்ந்து சோவியத் ஒன்றியம் 1930 களில் சந்தித்த போதிலும் அவற்றை சமாளிக்க முடிந்தது. வேளாண் உற்பத்தியில் நவீன முறை களும் இயந்திரங்களும் திட்டமிட்டு அரசு உதவி யுடனும் மான்யங்களுடனும் 1930 களில் (அதன் பின்பும்) விரிவாக கொண்டு செல்லப்பட்டன. வேளாண் உற்பத்தி திறன் சோவியத் ஒன்றியத் தில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இடை யிடையில் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் சோஷலிச அரசு தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடப் படவேண்டும்.
கல்வியில், ஆரோக்கியத்தில், மக்களின் வாழ்க் கைத் தரத்தில், நுகர்வு அளவில், பொதுவான கணிசமான முன்னேற்றம் இக்காலத்தில் நிகழ்ந் தது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் கல்வி பற்றிய ஓரிரு புள்ளி விவரங்களை மட்டும் இங்கு பார்ப்போம். 1917 இல் ரஷ்யாவில் பள்ளியில் படித்துக் கொண் டிருந்த மாணவர் எண்ணிக்கை 80 லட்சம். இது 1934 இல் 2 கோடியே 5 லட்சமாக அதிகரித் திருந்தது. 1926 இல் சோவியத் ஒன்றியத்தில் 9 முதல் 49 வயது என்ற வயது வரம்பில் இருந் தோரின் எழுத்தறிவு விகிதம் 56.6 . 1939 இல் இது 87.4 ஆக உயர்ந்திருந்தது. சோவியத் ஒன்றியத் தின் மத்திய ஆசிய குடியரசுகளான உஸ்பெகிஸ் தான் மற்றும் கஸக்ஸ்தான் நாடுகளில் எழுத்த றிவு விகிதங்கள் 1926 இல் முறையே 11.6 மற்றும் 25.2 என்று இருந்தன. 1939 இல் இவை 78.7 மற்றும் 83.6 என்று அதிகரித்திருந்தன. (1959 இல் சோவியத் ஒன்றியத்தில் எழுத்தறிவு விகிதம்: 98.5) முதலா ளித்துவம் செய்ய முடியாத காரியம் அனைவருக் கும் வேலை உத்தரவாதம் அரசியல் சாசனத்தில் (1936) பிரகடனமாயிற்று. வேலை யின்மை என்ற பெருங்கொடுமை – முதலாளித் துவ அமைப்பில் முதலாளிகளின் பேராயுதம் முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டது. 1936 சோவியத் அரசியல் சாசனம் மறுபுறம், உழைப்பு சாரா வருமானங்களை வர்க்க சுரண்டலை – தடைசெய்தது. பெண்களுக்கு பிரசவகால விடுப்பு வழங்கப்பட்டது. நாடு முழுவ தும் தாய் சேய் நல இல்லங்கள், நர்சரிகள், சிறார் பள்ளிகள் அமைக் கப்பட்டன.
இக்காலத்தில் (1928-1940) பாசிச தாக்குதல்களுக்கு எதிராக தயாராகும் பணி களை அரசு கவனிக்க வேண்டியிருந்த சூழலில் மக்களின் சராசரி நுகர்வு நான்கில் ஒரு பங்கு அதிகரித்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
இதே காலத்தில் உலக முதலாளித்துவ பொருளா தாரம் பெரும் மந்தத்தில் சிக்கியிருந்தது. சோவியத் சோசலிசத்தில் அனைவருக்கும் வேலை, தொடர்ந்து அதிகரித்து வந்த வாழ்க்கை தரம் என்ற நிலைமை சோசலிசத்தின் மேன்மையை பிரகடனப் படுத்தியது. கஷ்டங்களும் சவால்களும் இருந்தன. தவறுகள் நிகழ்ந்தன. அன்றைய சூழலில் எதிரிகளின் தாக்கு தலால் ஒரு முற்றுகை மனப்பான்மையுடன் செயல்படும் பலவீனம் இருந்தது. இதனால் பாட்டாளி வர்க்க ஜனநாயக நெறிமுறைகள் மீறப்பட்டன. எனினும், ஓரளவிற்கு, திட்டமிட்ட முறையில் , ஒட்டு மொத்த சமூக பங்கேற்புடன் சவால்கள் வெற்றிகரமாக எதிர் கொள்ளப்பட்டன. இலக்கு மறவாமல் செயல்பட்டு பொருளாதார வளர்ச்சியை சாதித்ததனால் தான் நாஜி படை களின் தாக்குதலையும் சோவியத் ஒன்றியத்தால் முறியடிக்க முடிந்தது.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் பனிப் போர் காலம் 1940களின் பத்து ஆண்டுகள் இரண் டாம் உலகப்போர் மற்றும் அதை தொடர்ந்து வந்த பிரச்னைகளில் கழிந்தது. இப்போரில் நாஜி படைகளை முறியடித்து உலகில் ஜனநாயகத்தை காப்பதில் பெரும் பங்காற்றிய சோவியத் சோசலி சம் கடும் இழப்புகளையும் சந்தித்தது. 250 லட்சம் மக்களின் இன்னுயிர்களை ஈந்தது மட்டுமின்றி, நாஜி தாக்குதலில் தனது தொழில் கூடங்களில் மூன்றில் இரண்டு பங்கு அழிக்கப்பட்டதையும், நகரங்களில் பெரும்பாலானவை தரை மட்டமாக் கப் பட்டதையும் சோஷலிச சோவியத் ஒன்றியம் எதிர் கொண்டது.
பாசிசத்தை வீழ்த்தி களைப்பாறும் முன்பே மிகப் பெரிய புதிய தலைவலி பனிப்போர் வடிவில் வந்தது. இரண்டாம் உலகப் போர்காலத்தில் வேறு வழியின்றி மேலை ஏகாதிபத்தியம் சோவியத் ஒன்றியத்துடன் ஒத்துழைக்க நேர்ந்தது. பல ஆண்டு கள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நாஜி அரசை வளர்த்து விட்ட மேலைநாடுகள் இரண்டாம் உலகப்போரில் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் போர் முடிந்தபின் சோவியத் ஒன்றியம் தான் முதல் பெரும் எதிரி என்ற நிலைபாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியம் தெளிவு படுத்தியது. அணுகுண்டை உருவாக்கி அதை ஜப்பான் மீது இருமுறை அமெரிக்கா ஏவியது என்பது சோவியத் செம்படைகள் பசிபிக் பகுதியில் நுழைவதை தடுக்கவும் முதலாளித்துவ உலகின் காவல்காரனாக தன்னை அறிவித்துக் கொள்ளவும் அமெரிக் காவிற்குப் பயன்பட்டது. ஆகவே மீண்டும் ஒரு கடும் சவாலை சோவியத் சோசலிசம் எதிர்கொண்டது. 1928 -1940 காலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத தொழில் வளர்ச்சியில் பெரும்பகுதி இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்ட பின்னணியில் மீண்டும் ஒரு நெடிய வளர்ச்சிப் பயணத்தை அது மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்பயணத்தை ஏகாதிபத்தியத்தின் கூர்மையான, இடைவிடாத தாக்குதல்கள் மத்தியில் செய்ய வேண்டியிருந்தது. அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த சவாலை யும் சோஷலிச சோவியத் ஒன்றியம் வெற்றி கரமாக சந்தித்தது. இதனை அடுத்தும் 1970களின் இறுதிவரையும் அதன்பின் சில ஆண்டுகளும் சோவியத் வளர்ச்சி தொடர்ந்தது.
இரண்டாம் உலகப்போர் துவங்கும் முன்பு 1937 இல் இருந்த நிலையை 100 என்று வைத்துக் கொண்டால், தலா தனி நபர் நுகர்வின் அளவு 1944 இல் 66 என சரிந்திருந்தது. ஆனால் 1950 இலேயே இது 135 ஆக உயர்ந்தது. 1955 இல் 159 என அதிகரித்தது. இது மிக வேகமான மீட்சி யாகும். 1950 இல் துவங்கி ஒரு மாபெரும் வீடு கட்டும் திட்டம் அமலுக்கு வந்தது. 1946-50 காலத் தில் மக்களின் வாழ்விடப் பரப்பளவு 12.71 கோடி சதுர கிலோமீட்டர் ஆக இருந்தது. இது 1961-66 இல் 39.44 கோடியாக உயர்ந்தது. சோவியத் மக் களின் உணவு பாரம்பர்ய ரொட்டி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை மையப்பட்டிருந்த நிலைமாறி , இறைச்சி, மீன், முட்டை, பால் சார்ந்த பொருட்கள் என்றாகியது. 1965 இல் ஆண்டுக்கு 38 கிலோ என்றிருந்த தலா இறைச்சி நுகர்வு 1985 இல் 61.7 ஆக அதிகரித்தது. இதே கால இடை வெளியில் நூறு குடும்பங்களில் ரெப்ரிஜி ரேட்டர் வைத்திருந்தவை பதினொன்று மட்டுமே என்ற நிலையில் இருந்து தொன்னூற்று ஒன்று என்ற நிலைக்கு உயர்ந்தது. 1965 இல் 100 குடும் பங்களில் 24 மட்டுமே தொலைக்காட்சி பெட்டிகள் வைத்திருந்தன.1985 இல் இது 97 ஆகியது. தொலை பேசிகளின் எண்ணிக்கை இதே காலத் தில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்தது. ஒட்டுமொத்த தேச வருமான வளர்ச்சி வேகம் எழுபதுகளின் பிற்பகுதியில் குறையத் துவங்கியது என்றாலும் பல துறைகளில் முன்னேற்றம் தொடர்ந் தது. மின்உற்பத்தி ஐம்பது சதம் அதிகரித்தது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் உற்பத்தி ஆறு மடங்கு அதிகரித்தது.
பொதுவாக கூறுவதானால், ஆயிரத்து தொள்ளா யிரத்து இருபதுகளின் பிற்பகுதியில் தான் சோஷ லிச நிர்மாணப்பணிகளை வேகப் படுத்த முடிந் தது. அதன் பின்பு ஏகாதிபத்தியமும் பாசிசமும் தொடுத்த தொடர் தாக்குதல்களை ஒருபுறம் எதிர்கொண்டே மறுபுறம் மகத்தான பொருளா தார வளர்ச்சியையும் சோவியத் சோசலிசம் சாதித்தது என்றால், இதன் மையப்புள்ளி சோஷ லிச உற்பத்தி உறவுகளும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மைய திட்ட அணுகுமுறை யும் என்பதை பதிவு செய்ய வேண்டும். பனிப் போர் காலத்திலும் சோஷலிச அமைப்பின் சாதனைகள் தொடர்ந்தன. சோஷலிச அரசியல் நிலைபாடு இதில் முக்கியத்வம் வாய்ந்தது. சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் முக்கியமாக ஒரு செய்தியைச் சொல்கிறது. அது என்ன? ஒரு திட்டமிட்ட, உற்பத்திக்கருவிகளின் பொது உடைமை அடிப்படையிலான பொருளாதார அமைப்பு இன்று அனைத்து உழைக்கும் மக்களும் விரும்பும் விஷயங்களை தர இயலும் என்பதை காட்டுகிறது. எல்லோருக்கும் வேலை, உத்தரவாதப்படுத்தப் பட்ட ஒய்வு ஊதியம், வரம்புக்கு உட்பட்ட பணி நேரம், போதுமான காலத்திற்கு ஊதியத்துட னான மகப்பேறு விடுப்பு , குறைந்த செலவில் மகிழ்வான சுற்றுலா விடுமுறைகள், உயர்கல்வி உட்பட இலவசமானதும் தரமானதுமான கல்வி, இலவச உடல், மன நல வசதிகள் மற்றும் சிகிச்சைகள், மிகக்குறைந்த செலவில் வீட்டு வசதி, மிகக் குறைந்த கட்டணத்தில் பொது போக்குவரத்து வசதிகள் , தரமான தாய்-சேய்நல ஏற்பாடுகள் என்றுஅவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். சோவியத் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு களும் குறைவு என்பதும் குறிப்பிடப்பட வேண் டும். சுருங்கச்சொன்னால், இன்றைய கேடுகெட்ட முதலாளித்துவ சீரழிவில் உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை ஒப்பிட்டுப்பார்த் தால், சோவியத் சோசலிசத்தின் சாதனைகளின் பிரம்மாண்டம் ஓரளவு புலப்படும்.
சோஷலிச பொருளாதார வளர்ச்சி அறிவியலை முன்னெடுத்துச் செல்ல உதவியது. அறிவியல் தொழில் நுட்ப சாதனைகளை சாத்தியமாக்கியது. விண்வெளி, ஆற்றல், மருத்துவம், பொறியியல் என்று பல துறைகளில் சோசலிச சோவியத் ஒன்றியம் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டி யுள்ளது. இது பற்றி தனியாக விவரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பிரச்னைகள்
எனினும் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் சோவியத் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து குன்றியது. இது நிகழ்ந்ததற்கு சோவியத் அமைப்பில் திட்டமிடலில் ஏற்பட்ட பலவீனங் கள் ஒருபங்கு வகித்தன. இதன் பின்புலத்தில் திருத்தல்வாதம் உள்ளிட்ட அரசியல் திரிபு களுக்கு பொறுப்பு உண்டு. மறுபுறம், ஏகாதிபத் தியம் எழுபதுகளின் நடுப்பகுதியில் இருந்து ஏற் பட்ட தனது பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள சோஷலிச நாடுகளின் மீதான குறிப் பாக சோவியத் ஒன்றியத்தின் மீதான – தாக்கு தலை தீவிரப் படுத்தியது. 1980 இல் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரீகன் தலைமை யிலான அமெரிக்க ஏகாதிபத்தியம் மீண்டும் ஒரு கடுமையான ஆயுதப் போட்டியை சோவியத் ஒன்றியத்தின் மீது திணித்தது. ஆயிரத்து தொள்ளா யிரத்து எழுபதுகளில் சில பதட்டக்குறைப்பு நடவடிக்கைகள் துவக்கப்பட்டிருந்தன. இதில் கேந்திர ஆயுதங்கள் கட்டுப்பாடு ஒப்பந்தம் 1 மற்றும் 2 என இரண்டு ஒப்பந்தங்கள் அமெரிக் காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1980 இல் நுழையும் தருணத்தில் ரீகன் தலைமை யிலான அமெரிக்க ஏகாதிபத்தியம் பதட்டக் குறைப்பு பாதையை நிராகரித்தது. மிக சக்தி வாய்ந்த பெர்ஷிங், க்ரூயிஸ் ஏவுகணைகளை அமெரிக்கா உற்பத்தி செய்து களத்தில் இறக் கியது. அடுத்து, கேந்திர பாதுகாப்பு முன்முயற்சி என்ற பொய் யான பெயரில், விண்வெளிக்கும் யுத்த முஸ்தீபு களை விரிவாக்கியது. இந்த நடவடிக்கைக்கு சரியான நட்சத்திர யுத்தம் என்ற பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகியது. இந்த அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண் டிய கட்டாயத்தில் சோவியத் ஒன்றியம் இருந்தது. சோவியத் மக்களின் உழைப்பால் உருவான வளங்களில் ஒரு கணிசமான பகுதி ஏகாதிபத்தி யம் திணித்த தற்காப்பு நடவடிக்கைகளுக்கு சென்றது.இதனால், மக்கள் தேவைகளை குறிப் பாக நுகர்வு தேவைகளை நிறைவு செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டன. சோவியத் ஒன்றியம் தகர்க்கப்படும் வரை கூட சோஷலிச திட்டமிட லால் மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும், ஏகாதிபத்தியத்தின் ராணுவ நிர்ப்பந்தங்கள் சோவியத் பொருளா தாரத்தை கடுமையாக பாதித்தன. இது மட்டு மல்ல. மேலை நாடுகள் வசம் இருந்த நவீன தொழில் நுட்பங்களை சோவியத் ஒன்றியம் பெறு வதை தடுக்கவும் பல நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தது. இரட்டைப்பயன்பாடு தொழில்நுட் பங்கள் அதாவது, ராணுவம் சாரா பயன்பாடு ராணுவ பயன்பாடு இரண்டையும் ஒருங்கே கொண்டவை முற்றிலுமாக மறுக்கப்பட்டன. இதற்கான வணிகத்தடை ஏற்பாடுகள் கறாராக அமலாக்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் சோவியத் ஒன்றியத்தின் தொழில் நுட்ப வளர்ச் சிக்கு பெரும் முட்டுக்கட்டைகளாய் அமைந்தன. மேலும், இத்தகைய பதட்டமான பன்னாட்டுச் சூழலில் தனது கேந்திரமான மூலப்பொருட்கள் உள்ளிட்ட அவசிய பொருட்களுக்கு இறக்கும தியை சார்ந்திருப்பது ஏகாதிபத்தியத்திற்கு சாதக மாகிவிடும், தனக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விடும் என்ற அபாயத்தை கணக்கில் கொண்டு இவற்றை அதிக செலவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நிலைக்கு சோவியத் ஒன்றியம் தள்ளப்பட்டது.
மேலும், 1970 களில் பல ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலை போராட்டங்களுக்குஆதரவு அளிப்பது, பல வளரும் நாடுகளுக்கு பொருளாதார மற்றும் இதர உதவிகள் அளிப்பது, எழுபதுகளின் இறுதி யிலும் எண்பதுகளின் பல ஆண்டுகளிலும் ஆப் கன் புரட்சிக்கு ஆதரவாக ராணுவ நடவடிக்கை களை எடுக்கவேண்டிய கட்டாயம் என்று பல சர்வதேச கடமைகளை சோவியத் ஒன்றியம் நிறைவேற்ற முனைந்தது. ஆப்கானிஸ்தானிலும், ஆப்பிரிக்காவிலும் இதர வளரும் நாடுகளிலும் சோவியத் சோசலிஸ ஒன்றியம் ஆற்றிய மகத் தான ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணி அதன் சர்வ தேசக் கடமையின் பகுதி என்றாலும், அதுவும் பொருளாதார ரீதியாக கூடுதல் சுமைகளை சோவியத் ஒன்றியத்திற்கு ஏற்படுத்தியது.
இப்படி ஏகாதிபத்திய தாக்குதல்கள், நெருக் கடிகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்கும் நேரத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் பெரும் பலவீனம் உருவாகி வளர்ந்து கொண்டிருந்தது. ஸ்டாலின் மறைவிற்குப்பின்பே, 1956 இல் நடந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாட்டில் வெளிப்பட்ட திருத் தல்வாத அணுகுமுறை சோவியத் கட்சிக்குள் படிப்படியாக வலுப்பெற்று வந்தது. ஏகாதிபத் தியம் பற்றியும் முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசம் நோக்கி பயணிக்கும் சகாப்தத்தின் தன்மை பற்றியும், இக்காலத்தில் பாட்டாளி வர்க்க தலைமையின், ஆட்சியின் அவசியம் பற்றியும் ஒரு சரியான நிலைபாட்டை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கத் தவறியது. சமாதான சக வாழ்வு, சமாதான பொருளாதாரப் போட்டி, சமாதானப் பாதையில் சோசலிசத்தை நோக்கிப் பயணம் என்ற திருத்தல்வாத மும்மூர்த்திகளை சோவியத்கட்சி அங்கீகரித்தது. சமாதான சக வாழ்வின் அவசியத்தை நாம் மறுதலிக்க முடியாது என்றாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாட்டில் இருந்து தான், ஏகாதிபத்தியம் பற்றிய எந்த பிரமைகளும் இல்லாமல் தான் அப் பிரச்சினை யைப் பார்க்க வேண்டியுள்ளது. சமாதான பொருளாதார போட்டியின் அடிப்படையில் சோசலிசம் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும் என்ற புரிதலும் பொருத்தமல்ல. ராணுவ தாக்கு தல்கள், நெருக்கடிகள், போர், வர்த்தக மற்றும் தொழில் நுட்ப தடைகள் உள்ளிட்டு எல்லா ஆயுதங்களையும் அது பயன்படுத்தும் என்பதே அக்டோபர் புரட்சியின் துவக்கத்தில் இருந்து நமது அனுபவம். அக்டோபர் புரட்சிக்குப் பின் உள்நாட்டில் எதிரி வர்க்கங்கள் பெருமளவு பலவீனப் படுத்தப்பட்டன என்பது உண்மை என்றாலும், ஆயிரத்து தொள்ளாயிரத்து எண் பதுகளின் துவக்கத்தில் முதலாளித்துவ உலகில் உருவான பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கப் பின்புலத்தில் சோவியத் ஒன்றியத்திற்குள் நிதி மூலதனம் ஊடுருவ பல வாய்ப்புகள் உருவாகின. வரலாற்று ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து பெரும் முன்னேற்றத்தை சாதிப்பதற்கு திட்டமிட்ட சோஷலிச உறவுகள் அடிப்படை யிலான வளர்ச்சிப் பாதை உதவியது. ஆனாலும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பன்னாட்டு சந்தைகள், பன்னாட்டு நிதித்துறை, பன்னாட்டு ஊடகதுறை ஆகிய அனைத்திலும் ஏகாதிபத் தியத்தின் ஆதிக்கம் நிலவி வந்த சூழலில், மேலை நாடுகளுடன் வர்த்தக, தொழில்நுட்ப, மற்றும் நிதிசார் உறவுகளை தவிர்க்கும் நிலையில் எண்ப துகளில் கூட சோவியத் ஒன்றியம் இல்லை. இத்தகைய வர்த்தக மற்றும் நிதி மூலதன போக்குவரத்து சோவியத் ஒன்றியத்திற்குள் ஊடுருவும் வாய்ப்பு களை ஏகாதிபத்தியத்திற்கு ஏற்படுத்திக் கொடுத் தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவிய திருத்தல்வாதப் பார்வை இந்த அபாயத்தை முழு மையாக உணர்ந்து எதிர்கொள்ள உதவவில்லை. கடந்த நூற்றாண்டின் எண்பதுகளின் பிற்பகுதி யில் சோஷலிச கொள்கைகள கோர்பச்சாவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி படிப்படியாக கைவிட்டது என்பது சோசலிசப் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
நிறைவாக…
மானுட வரலாற்றில் ஒரு சமூகம் உணர்வு பூர்வமாக அறிவியல் அணுகுமுறையை ஏற்று பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டு சாதிக்க முனைந்தது சோவியத் புரட்சியில் தான் முதல் முதலாக நிகழ்ந்துள்ளது. வரலாற்றியல் பொருள் முதல் பார்வையில் இருந்து நோக்கினால், இந்த மகத்தான முயற்சி சாதகமான, பொருத்தமான சூழலில் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக முதலாளித்துவ வளர்ச்சியில் பெரிதும் பின்தங் கியிருந்த ஒரு நாட்டில் மேற்கொள்ளப்பட்டது. எனினும்கூட அப்புரட்சி என்றும் அழியாத சாதனைகளை செய்துள்ளது. சோவியத்புரட்சி யும் அதன் சோஷலிச நிர்மாணத்தில் கிடைத்த வெற்றிகளும் அனுபவங்களும் உன்னதமான பொது உடைமை சமூகம் என்ற மானுடத்தின் இலக்கு நோக்கிய பயணத்தின் ஆரம்ப அடிகள். மார்க்சும் எங்கல்சும் எதிர்பார்த்தபடி ஒரு வளர்ந்த முதலாளித்துவ நாட்டில் அனுபவமிக்க, முன்னேறிய தொழிலாளிவர்க்க தலைமையில் புரட்சி நடந்திருந்தால் அது எதிர்கொண்டிருக்கக் கூடிய சவால்களை விட பல நூறு மடங்கு கூடுதல் சவால்களை எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மகத்தான அக்டோபர் புரட்சி எதிர் கொண்டது. ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பன மாக, தேச விடுதலை இயக்கங்களின் உற்ற நண் பனாக, உலக அமைதியின் பாதுகாவலனாக, உழைப்பாளிகளின் வாளாகவும் கேடயமாகவும் பங்காற்றிய சோவியத் சோஷலிச அனுபவத்தின் ஆகப்பெரிய பங்கு, ஒரு நவீன பொருளாதார அமைப்பை உருவாக்கவும் வளர்க்கவும் ஒரு முதலாளி வர்க்கம் தேவையில்லை என்பதும், உழைப்பாளி மக்களே கூட்டுத் தலைமையின் மூலம் அதை சாதிக்க முடியும் என்பதுமாகும். வேலையின்மை, வறுமை, கல்லாமை, ஆரோக் கியமின்மை உள்ளிட்ட பல முதலாளித்துவக் கேடுகளை அழித்தொழித்த, சுரண்டல் அற்ற உலகத்தை நோக்கி பயணிக்க முனைந்த சோஷலிச அமைப்பின் முதல் அனுபவமான அகோட்பர் புரட்சியை என்றென்றும் நினைவில் நிறுத்து வோம். அதன் மிக முக்கிய படிப்பினை மானுடத் தின் எதிர்காலம் சோசலிசத்தை நோக்கிப் பயணிப் பதில் தான் மேம்படும் என்பதே. சோவியத் அனு பவமும் உலகளவில் தொடரும் முதலாளித்துவ நெருக்கடியும் மானுடம் எதிர்கொள்ளும் எந்த பிரச்னையையும் லாப வேட்டை அடிப்படையி லான முதலாளித்துவ அமைப்பால் தீர்வு காண முடியாது என்று மக்கள் அன்றாடம் கண்டு வருவதும் எதிர்காலத்தில் சோவியத் சோசலிசம் தரும் வெளிச்சத்தில் மானுடம் முன்னேறும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றன.
Leave a Reply