தமிழில்: ஆர்.சந்திரா
1917ல் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் புரட்சியின் வெற்றியை மார்க்சிய-லெனினிய கோட்பாடு எந்த அளவுக்கு சரியானது என்பதை நிரூபித்த முதல் அறிவியல் பூர்வமான அத்தாட்சி எனலாம். அதுவரையிலும் அது ஒரு கோட்பாடகவே இருந்தது. போல்ஷ்விக் கட்சி யின் தலைமையில் நடைபெற்ற புரட்சியின் வலிமை அதற்கு தேவைப்பட்டது. அதன் மூலம் விஞ்ஞான சோசலிசம் என்ற கோட்பாட்டின் சரியான நிலைப்பாட்டை உலகின் முன்வைத்து அதை விமர்சித்தவர்களின் தவறை சுட்டிக் காட்டியது. விஞ்ஞான சோசலிசத்தை உருவாக்கி, சிறப்பாக வளர்த்த கார்ல் மார்க்சும், பிரெடெரிக் எங்கெல்சும், மனிதகுல வளர்ச்சியின் வரலாறு முதலாளித்துவத்திலிருந்து சோசலிசம், அதன் பின்னர் கம்யுனிசம் என்ற பாதையில் செல்லும் என்பதை வகுத்து கொடுத்திருந்தனர். இத்தகைய மாற்றத்தை கொண்டு வரும் சக்திகள் மற்றும் அதன் பொதுவான வழி தெரிந்திருந்த போதிலும், அதை அடைவதற்கான திட்டவட்டமான வழி முறைகள் என்பவை, சர்வதேச நிலைமை மற்றும் அந்த குறிப்பிட்ட நாட்டின் புறச்சூழலை பொறுத்தே அமையும் என்பதால் அது நாட்டிற்கு, நாடு வேறுபாடும் தன்மை கொண்டதாகும்.
ஒரு புதிய பாதை துவங்கியது:
1917ல் லெனின் கீழ்கண்டவாறு கூறினார்:
“சோசலிச பாதையின் கடைசி விவரம் வரை மார்க்சுக்கு அல்லது மார்க்சிஸ்டுகளுக்கு தெரி யும் என நாங்கள் சொல்லவில்லை. அப்படி உரிமை கோருவதும் பொருளற்றதாகும். ஆனால், அந்த பாதை வழி எது, அதில் பின் தொடர வேண்டிய சக்திகள் எவை என்பது பற்றி எங்க ளுக்கு தெரியும். லட்சக்கணக்கான மக்கள் அதை தங்கள் கையிலெடுத்து, அவர்களின் அனுபவங் கள் மூலமாக தான் குறிப்பான, யதார்த்தமான விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும். “.
லெனின் மேலும் சுட்டிகாட்டுவது:
” மார்க்சிய கோட்பாடு உலக நாகரீக வளர்ச் சிப் பாதையிலிருந்து விலகி தோன்றியது மாறாக மார்க்சின் பேரறிவால், , மனிதகுலத்தின் மிக சிறந்த அறிஞர்கள் முன்பே எழுப்பிய வினாக் களுக்கு பதில் அளிக்க முடிந்தது . தத்துவம், அரசி யல் பொருளாதாரம், சோசலிச ஆகிய கோட் பாடுகளை விளக்கிய மிகச் சிறந்த தலைவர்கள் நேரடியாகவும், தொடர்ந்தும் எடுத்துரைக்கும் பாடங்களில் இருந்து அவரது கோட்பாடு தோன்றியது..”
முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் ஏகாதிபத்தியம் என விளக்கிய லெனின் மார்க்சிய கோட்பாட்டை செழுமைபடுத்தும் அரிய பங்களிப்பை செய்தார். ஏகாதிபத்திய கட்டத்தில் புரட்சி பற்றி மதிப்பீடு செய்த லெனின், சோசலிச புரட்சி முதலாளித்துவ நாடுகளில் மட்டுமின்றி , ஓரளவு பின் தங்கிய, ஏகாதிபத்திய சங்கிலியின் பலஹீன மான கண்ணி உள்ள நாடுகளிலும் வெற்றி பெரும் என்ற முடிவுக்கு வந்தார்.புதிய காலம் மற்றும் ரஷியாவில் அன்று நிலவிய திட்டவட்டமான நிலைக்கு ஏற்ப, அந்த கோட்பாட்டை திட்ட வட்டமாக பின்பற்றியதால் லெனினின் கீழ் செயல்பட்ட போல்ஷெவிக் கட்சி வெற்றிகரமாக புரட்சியை நடத்த முடிந்தது. ரஷியாவின் பழைய காலண்டர் படி புரட்சி அக்டோபர் 25,1917அன்று வெற்றி அடைந்தது. எனவே அது பிரபலமாக அக்டோபர் புரட்சி என அழைக்கப்பட்டது
புரட்சியின் பங்களிப்புகள்:
சோசலிச அரசு அமைந்தவுடன் பிறப்பிக்கப்பட்ட முதல் பிரகடனம் அமைதி மற்றும் நிலம் பற்றியதாகும். அதன் மூலம், லெனினின் தலைமை யிலான் கட்சி புரட்சியைக் காப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தின் பின்னால் விவசாயிகளைத் திரட்டும் பணியைச் செய்ய முடிந்தது. இவ்வாறு பெறப் பட்ட வலிமையின் மூலம் குழந்தைப் பருவத்தி லிருந்த சோசலிச அரசு ஏகாதிபத்திய தலை யீட்டை முறியடிக்கவும், உள்நாட்டு கலகத்தை ஒடுக்கவும் முடிந்தது. சுரண்டலின் பல வடிவங் களைக் கொண்ட வர்க்க ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும் என்பதை புரட்சியின் வெற்றி உணர்த் தியது. அத்துடன், உற்பத்திக்கு அனைவரும் தமது பங் கை செலுத்துவது, அவரவர் திறமைக்கேற்ப உழைப்பது, உழைப்புக்கு ஏற்ற கூலியை பெறுவது என்கிற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ப தையும் உணர்த்தியது. இது, ஒவ்வொருவரும் உற்பத்திக்கு தன பங்களிப்பை தன திறமைக்கேற்ப செலுத்தி, தனது தேவைக்கேற்ப ஊதியம் பெறலாம் என்கின்ற சமுதாயத்தை நோக்கி ஒரு அடி முன் வைப்பதாகும்.
இந்த கோட்பாடு, இன்று வர்க்க சமுதாயத் திலும் கூட பல அமைப்புகள், அதிலும் குறிப் பாக, சேமநல அரசு என்ற கருத்து வருவதற்கு ஏதுவாக இருந்துள்ளது. இன்று நமது காலத்தில் க, ல்லாமையை ஒழிக்க,இலவச கட்டாய கல்வி அளிக்கத் தேவையான இலவச பள்ளிகள், கல்லூரி கள், பல்கலை கழகங்கள் தோற்றுவித்தல் என்பது சோவியத் ரஷ்யாவிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆகும்.
எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில், சோவியத் யூனியன் இது வரை கேள்விபடாத உரிமைகளையும், உத்தரவாதங்களையும் தனது மக்களுக்கு வழங்கியது. முதல் சோசலிச அரசில் மக்கள் அனுபவித்த வேலைக்கான உரிமை, கல்வி, ஆரோக்கியம், இருப்பிடம் ஆகியவற்றிற்கான உரிமைகள் மற்றும் கணக்கிலடங்காஉரிமைகளும் சலுகைகளும் மற்ற நாடுகளில் வசித்த மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை. இது மற்ற நாடுகளில் வாழ்க்கை நிலை முன்னேறுவதற்காக நடத்திய போராட்டங் களுக்கு உந்து சக்தியாக விளங்கியது. அத்துடன், அந்நாடுகளில் உள்ள முதலாளிகள் அங்கிருந்த வசதியற்றவர்களுக்கு, சில சலுகைகளை வழங்க வேண்டி வந்தது. இதன் மூலம், ” சேம நல அரசு” என்பது உருவாகியது.
தாறுமாறாக செயல்படும் சந்தை மற்றும் நுகர்வோருக்கு எந்த மாற்றும் இல்லாத வண்ணம் கொள்ளை லாபம் ஈட்டும் நோக்கத்துடன் சந்தையை கைப்பற்றும் ஏகபோக வணிகர்களுக்கு பதிலடியாக பொருளாதார திட்டம் என்பது உருவாக்கப்பட்டது. இதுவும் புரட்சியின் மூலம் நமக்கு கிடைத்தது தான். அதே போன்று, சோஷ லிச பொருளாதார திட்டம் மூலமாக, வேலை யின்மையை ஒழிப்பது, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது, அவர்களிடமிருந்து அதிகபட்ச லாபத்தை ஈட்டுவதை தவிர்ப்பது போன்றவை ரஷிய புரட்சியின் மூலம் கிட்டியவை ஆகும். உலகின் அனைத்து உழைக்கும் மக்களையும் விவசாயிகளையும் இணைக்கும் அமைப்புகளான இலவச பொது மருத்துவ வசதி, அரசுடமையாக் கப்பட்ட தொழில்கள், கூட்டுறவு அமைப்புகள், முதியோர் பென்ஷன் முதியோர் இல்லங்கள் பஞ்சாயத்து ராஜ் போன்ற உள்ளாட்சி அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் ரஷிய புரட்சி யின் வெற்றியில் பிறந்தவை ஆகும். இந்த வெற்றி யின் காரணமாக, பல நாடுகளில் இவை பெரிய அளவில் அமுல்படுத்தப்பட்டன. இல்லையெனில், சிறிய குழுக்கள் நடத்திய பரிசோதனைகள் போல் அவை இருந்திருக்கும்.
நம்மை பொறுத்தவரை, இந்த புரட்சி உலக அளவில் ஏகபோகங்களுக்கு இடையேயும், சாம்ராஜ்யங்களுக்கு இடையேயுமான போட்டிக்கு மாறாக, உலக அளவில் பரஸ்பர ஒத்துழைப் பிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி தந்தது. காலனிகள் இல்லாத, போர்கள் இல்லாத ஒரு உலகிற்கான கதவுகளை இது திறந்து விட்டது. ரஷிய புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட ப்ரெஸ்ட் லிடோவ்ச்க் ஒப்பந்தம் முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர உதவியது. சோவியத் யூனியனின் முனைப்பான தலையீடு இல்லாமல், ஹிட்லரின் 75 துருப்புக்களை அவனது மண் ணிலேயே தோற்கடித்து, இரண்டாம் உலகப் போரை வென்றிருக்க முடியாது பாசிசத்தையும் தோறகடித்திருக்க முடியாது. அந்தப் போரின் பிந்தைய காலங்களில் சோவியத்யூனியன் இருந்த ததால் தான் மூன்றாவது உலகப் போர் வெடிக் காமல் இருந்ததுடன் சால்ட் (கேந்திர ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம்) மற்றும் சால்ட் ஒப்பந் தங்கள்கை யெழுத்தாகி, அணுஆயுத தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது.
விடுதலை அடைவதற்கு ஊக்குவிப்பு:
தேசீய விடுதலை இயக்கங்களுக்கு சோவியத் யூனியன் அளித்த ஊக்குவிப்பு இந்தியாவில் நம் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.சோவியத் யூனியன் ஒரு புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுப்பதற்கு முன்னர், காலணிகள் ஒரு ஆதிக்க சக்தியை தூக்கி எறிந்தால் கூட வேறொரு காலனிஆதிக்க சக்திகளிடம் சென்றன. முதல் உலகப் போரின் போது ஓட்டோ மான் பேரரசை எதிர்த்து வெற்றிகரமாக போரிட்ட அரபுகள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பிடிக்குள் வந்து , மீண்டும் தங்கள் விடுதலைக்காக போரிட்டனர். தற்போது நடைபெற்று வரும் சுதந்திரமான பாலஸ்தீனத்திற்கான போராட்டம் என்பது அத்தகைய முடிவுக்கு வராத ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதன் ஒரு அங்கமே ஆகும். அமெரிக்கா இராக்கை ஆக்கிரமிப்பு செய்ததும் யூத மத வெறி அரசான இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதும் மேலும் சிக்கலாக்கியுள்ளளது. இரண்டாம் உலகப் போருக் குப் பின்னர் 60 நாடுகள் காலனியாதிக்கத்தி லிருந்து விடுதலை பெற்றதும் மேலும் பல தேசீய விடு தலை இயக்கங்களுக்கு தூண்டுகோலாக அமைந்த தும் ரஷிய புரட்சியின் வெற்றியின் மிகவும் முக் கியமான அம்சம் ஆகும். சிறிய நாடுகளான, வியத் னாம், கம்போடியா, லாவோஸ், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு மற்றும் கியூபா ஆகியவை ஜெர்மனி, இத்தாலி,மற்றும் ஜப்பான் ஆகிய தோல்வியடைந்த அச்சு சக்திகளின் பிடி மானத்தை எதிர்த்ததுடன், வெற்றிபெற்ற நேச சக்திகளான பிரிட்டன் அமெரிக்க, பிரான்ஸ் ஆகிய நாடுகளையும் எதிர்கொள்ள முடிந்தது. முக்கியத்து வம் வாய்ந்த இந்த புரட்சி, உலக அளவில் உழைக் கும் வர்க்க இயக்கங்களுக்கும் காலனி எதிர்ப்பு போராட்டங்களுக்கும் பெரும் உந்துசக்தியாக அமைந்தது. சோசலிச அரசின் தோற்றமும் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டதும் ஜார் மன்னனின் சிறையில் அடைக்கப்பட்டு, ஒடுக்கப் பட்ட ,பல தேசிய இன மக்களுக்கு விடுதலை அளித்தது. தற்கால வரலாற்றை உருவகப்படுத் தியதில் சோவியத் யூனியனின் பங்களிப்பை உலகம் முழுவதும் அங்கீகரிக்க வேண்டி வந்தது.
கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள்:
ஒரு அரசின் ஸ்தூலமான நிலைக்கேற்ப மார்க்ஸ்- எங்கெல்ஸ் கோட்பாட்டை முதல் முறையாக, வெற்றிகரமாக ரஷிய புரட்சி அமுல் படுத்தியது. புரட்சியின் வெற்றியானது, உலகெங் கிலும் உள்ள புரட்சிகர இயக்கங்களின் மனசாட் சியை குறிப்பாக சீனா, வியதனாம், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், போலாந்து, கிழக்கு ஜெர்மனி, யுகொஸ்லாவியா ஹங்கேரி,செக்கொஸ்லாவியா, ரொமேனியா, பல்கேரியா, போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒனறு சேர்ந்து சோசலிச முகாமை உருவாக்கி உலக சக்திகளை சோசலிசத்திற்கு சாதகமாக நிலையை ஏற்படுத்தின. சோசலிச முகாமிற்குள் ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு எதிரான போராட்டத் தில் இறுதிவரை நிற்கவில்லை என்பது உண்மை தான். தவறுகள் செய்யப்பட்டன. ஆனால், இந்த தவறுகள், இன்று நாம் அறிந்துள்ள அறிவியல் கோட்பாடான இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதத்தின் சரியான தன்மையை புறக்கணிக்க முடியாது.
இதன் அடிப்படையான அம்சம் என்ன வெனில், அனைத்து வகையான பொருட்களின் அனைத்து வடிவங்களும், உறவுகளும் மாற்றத்திற்கு உட் பட்டவை என்பதாகும். ஒவ்வொன்றிலும் உள்ள எதிர்மறை சக்திகள் முரண்பாடுகளாக வெளிவரு கின்றன. பழையதை தூக்கி எறிந்து, புதியதை உருவாக்கி முரண்பாடுகளை தீர்க்க முடியும். தீர்க்கப்பட வேண்டிய புதிய முரண்பாடு உருவா கும். பொருள்முதல் உலகில் தோன்றும் புதிய வளர்ச்சிகள் , மற்றும் மனித உழைப்பு,டன் தொழில்நுட்ப வளர்ச்சியும், திறமைகளும் கருவி களாகி, புதிய நிலைமைகளை உருவாக்குகின்றன அவற்றை சார்ந்தே ஒரு சமுதாயத்தில் உற்பத்தி சக்திகள் அமைகின்றன. ஆனால், அதே சமயம அவை சமு தாயத்தை பல வர்க்கங்களாக பிளவு படுத்தி , உற்பத்தியை அபகரித்துக் கொள்ள போராடும் நிலையை தோற்றுவிக்கிறது. அபகரிப்பு என்ற நிலை வர்க்க போராட்டத்திற்கு இட்டு செல்வதுடன் புரட்சிகரமான மாற்றங்களை ஏற் படுத்துகிறது. வரலாற்றில் உற்பத்தி சக்திகள் தொடர்ச் சியாக வளர்ச்சி அடை கின்றன. புதிய சுரண்டல் உறவுகள், ஏற்படுகின்றன. அவற்றுடன் வர்க்கங் கள் இணைகின்றன.இவை முன்னுக்கு வரும் பொழுது, வளர்ச்சியின் தேவைகளை ஒட்டி, சிலவற்றை தூக்கி எறிய வேண்டி வரும். இந்த செயல்முறையில் புதிய திறம் வாய்ந்த தொழில் நுட்ப வடிவங்கள், திறமைகள் புதிய போராட்டங் கள் வருவதை நாம் காண முடியும். அடிமை சமூகம் நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், கம்யூனி சம் என்கின்ற, சமுதாயத்தின் முக்கியமான நான்கு கட்ட வளர்ச்சியில் இது தொடர்கிறது. சோசலி சத்திற்கான மாற்றம் ஏற்படும் பொழுது, மூலதன சர்வாதிகாரம் தூக்கி எறியப்பட்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அமைகிறது. இதில், பாட்டாளி வர்க்கம, முதலாளித்து வர்க்கத்தை தூக்கி எறிந்து உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுகிறது. அந்த வர்க்கம் பல நூற்றாண்டுகளாக, மற்றவர்களுக்கு செல்வத்தை உற்பத்தி செய்து கொடுத்துள்ளது. உற்பத்தியை தங்கள் வசம் கொண்டு வந்த உடன், சுரண்டலுக்கும், அதோடு தொடர்புடைய வர்க்க போராட்டத்திற்கும் முடிவு கட்டுகிறது.
இத்துடன், மனித குலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, திட்டமிட்ட உற்பத்தி துவங்குகிறது. அதன் வெற்றி என்பது, சோவியத் ரஷியாவின் வெற்றி மட்டுமல்ல.இதர சோசலிச நாடுகளான சீனா, கியூபா போன்ற நாடுகளில் பொருள் உற்பத்தி அதிகரித்து, மனித வளர்ச்சி உள்ளிட்ட ஒட்டு மொத்த வளர்ச்சியை அடைய முடிந்துள்ளது. இத்தகைய சாதனைகளை பணக்கார முதலாளித் துவ நாடுகள் அடையவில்லை அவர்களின் மக் களுக்கு அவற்றை அளிக்க விரும்பவும் இல்லை. உலகிலேயே ஒரே வல்லரசு என இன்று கருதப் படும் அமெரிக்க தந்து மக்களுக்கு சிறந்த கல்வி, ஆரோக்கியம் மற்றும் இதர கட்டுமான வசதி களை அளிப்பதற்கு பதிலாக, தந்து எல்லைக்கு வெளியேயிருந்து வளங்களை பெற்று வேறு இடங்களில் முதலீடு செய்ய விழைகிறது. மனித குல ம் அமைதியுடனும் முன்னேற்றத்துடனும் மேம்பட வாழ தேவையானதை வலுப்படுத்துவ தற்கு பதிலாக, ராணுவ தளவாடங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதையே விரும்புகிறது. அதன் வீழ்ச்சியின் விதைகள் இதில் அடங்கி யுள்ளன.. பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் உள்ள அரசு உலகில் குண ரீதியான மாற்றத்தை கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்க முடியும் என்று யதார்த்தத்தில் நிரூபித்து காட்டியதை அக்டோபர் புரட்சியின் மிக முக்கிய பங்களிப்பு எனலாம். சோவியத் யூனியன் இருந்ததனால் தான் இரண் டாம் உலகப் போருக்கு ப பின்னர், காலனியாதிக்க தகர்வு சாத்தியமாயிற்று.ஏகா திபத்திய நாடுகள் முன்னேறிய தொழில்நுட்பத்தை கொடுக்க விரும்பாத சூழலில், புதிதாக விடுதலை பெற்ற நாடுகள் சோவியத் யூனியனிடமிருந்து அவற்றை பெற முடிந்தது. அதே போல, அது ஷேம நல அரசு மற்றும் உலக அமைதிக்கான நிறுவனங்கள் ஏற் படவும் காரணமாக இருந்தது. என்றும் அழியா புரட்சி:
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு போர் தேவை என்ற கருத்து தவறு என்பதை சோவியத் யூனியன் தனது வெற்றிகரமான வளர்ச்சி மூலமாகவும், உலகில் தான் ஆற்றிய பங்கின் மூலமும் வெளிப்படுத் தியது. மாறாக, போர் படைப்பாற்றளுக்கு எதி ரான நிலையினையும், அழிவையும் ஏற்படுத்தக் கூடியது. சோவியத் யூனியனின் சர்வதேச உறவு கள் தொடர்பான் முதல் பிரகடனம் அமைதி பற்றியதாகும். அதன் மூலம் சர்வதேச உறவுகளில் ஒரு புது சகாப்தம் துவங்கியது என அறிவித்தது.
வரலாற்றைப் பற்றிய நமது புரிதலில் உலகில் “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்” என்று ஒன்று கிடையாது என்பதை ரஷிய புரட்சி உணர்த் தியது, அதனுடைய மிக முக்கியமான பங்களிப்பு ஆகும். எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து மக்களும் உள்நாட்டிலும், வெளியேயும் சக்தி களை ஒன்று திரட்டி, வர்க்கமற்ற சமுதாயத்தை நோக்கி முன்னேறும் பணியை மேற்கொள்ள வேண்டும். இதில் வெற்றி பெற உலகில் , மாறி வரும் வளர்ச்சிப் போக்குகளை நமது ஸ்தூலமான நிலைமைகளுடன் பொருத்தி படிப்பதும், அதை உணர்ந்து செயல்படுவதன் மூலம் உலக அளவில் பாட்டாளி வர்க்கம் உற்பத்தி கருவிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷிய புரட்சி வழி காட்டி உள்ளது. இன்று, சோவியத் யூனியன் என்பது இல்ல. ஆனால், அதன் பங்களிப்புகளை ஒதுக்க இயலாது. உலக அளவில், குறிப்பிடத்தக்க தாக்கத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள். எனவே, அவை நமது நினைவில் என்றும் நிலைத்து நிற்கும். சோவியத் யூனியன் சிதறுண்ட பின், முன்னாள், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளில் முதலாளித்துவம் தலை தூக்கியது துரதிர்ஷ்ட மானது சோசலிசத்தை நிர்மாணிப்பதில் , மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை அப்போது நிலவிய சூழலுக்கு ஏற்ப பொருத்தி பார்பதில் ஏற்பட்ட திரிபுகள், விலகல்களினால், நிறைய தவறுகள் நேர்ந்தன. தவறான புரிதல் தோன்றி யதார்த்த நிலைமை புறந்தள்ளப்பட்டது. ஏகாதி பத்திய சவால்களை எதிர்கொள்ள, அவற்றிக்கு சமமாக ராணுவ தளவாடங்களை வைத்திருப் பதில் கவனம் செலுத்தியது சரியானது என்ற போதிலும், அதே அளவு அழுத்தம் தொழில் வளர்ச்சக்கு கொடுப்பதில் பின் தங்கிய நிலை இருந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தில் மேற்கொள்ளப்பட்ட வியக்கத்தகு முன்னேற்றங் கள் மீது போதிய கவனம் செலுத்தப்படவில்லை. பொருளாதார அரங்கில் இந்த பிரச்னைகள் கண்கொடுள்ளப்படவில்லை. என்பது மட்டு மின்றி , முடிவெடுக்கும் இடங்களில், மக்களின் பங்கேற்பை உறுதிபடுத்தி, உண்மையிலேயே, மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது கைவிடப் பட்டது. கட்சிக்கும் அரசுக்கும் இடையிலான வேறுபாடு என்பது இல்லாமல் போயிற்று. ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடு அதிகமாக மீறப்பட்டு, அதற்கு பதில் மத்தியத்து வம் என்பதற்கு அழுத்தம் தரப்பட்டது. கட்சிக்கு பதிலாக தலைமை, அந்த தலைமைக்கு பதிலாக ஒரு சிறு தனிகுழு செயல்பட்டது. இந்த தவறு கள் குறைபாடுகள் பின்னடைவுக்கு காரணமாக அமைந்தன. முதலாளித்துவம் முந்நூறு ஆண்டுகளுக் கும் மேலாக செயல்பட்டு வருகிறது. சோசலிசம் என்பது ஒரு புதிய கருத்தாகும். சோசலிசத்தின் சாதனைகள் ஏராளமாக இருந்த போதிலும், அதை அமுல்படுத்துவதில் இருந்த எதிர்மறை விஷயங்களினால், சோவியத் யூனியன் சிதறுண் டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் பின்னடைவு ஏற்பட்டது.
வியூக மாற்றம் தொடர்தல்:
ஆனால், சுரண்டல் அமைப்பின் முக்கிய அமசங்களான, பசி, வறுமை, கைவிடப்படுதல் ஆகிய வற்றையும், முதலாளித்துவம் என்கிற யதார்த்தத்தை சந்தித்த கிழக்கு ஐரோப்பிய நாட்டு மக்களும், முன்னாள்சோவியத யூனியனில் இருந்த குடியரசுகளின் மக்களும் தற்போது போராட துவங்கிவிட்டனர். அந்நாடுகளில் கடும் எதிர்ப்புகளை அந்த அரசுகள் சந்திககின்றன. தொடர்ச்சியான ஏகாதிபத்திய தாக்குதல்களிடம் சரணாகதி அடைந்த கட்சிகள், தற்போது, புதிய சவால்களை எதிர்கொள்ள மீண்டும் வியுகங்கள் அமைத்துக் கொண்டு வருகின்றன.மக்கள் மீண் டும் கம்யுனிஸ்ட் கட்சிகளின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ரஷிய பெடரேஷனின் கம்யூனிஸ்ட் கட்சி தான் இன்று ரஷியாவில் அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட மிகப் பெரிய சக்தியாகும். சோசலி சத்தை பின்பற்றும், சீனா, கியூபா, வியத்னாம், லாவோஸ் கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகளில், ஆளும் கட்சிகள் கடந்த கால தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு, அங்கே நிலவும் புறசூழலுக்கு ஏற்ப சரி எனக் கருதப்படும் போதிய ,பொருத்தமான மாற்றங் களை செய்து வருகின்றன. சோசலிசத்தை நிர் மாணிக்க ஒரேயொரு முன்மாதிரி என்பது இல்லை என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. ஒவ்வொரு நாடும் அதன் புறசூழலுக்கு தகுந்தவாறு, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ற படி, வர்க்க சக்திகளின் கூட்டு எப்படி உள்ளது என்பதை அறிந்து தனது பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். வளர்ச்சி குன்றிய நாட்டில் சோசலிச கட்டுமானம் எவ்வாறு இருக்க வேண் டும் என்பதில் சீன முன்மாதிரி மேலும் பங் களிப்பை செலுத்தி உள்ளது. அடிப்படை கோட் பாடுகளை பின்பற்றிக் கொண்டே உற்பத்தி சக்தி களின் வளர்ச்சிக்கு சீனா அ ழுத்தம் தருகிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, தொழிலாளி-விவசாயி கூட்டு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஆகிய மூன்றும் சோசலிசம் வெற்றி பெற தேவைப் படும் மூன்று பொதுவான கோட்பாடுகள் ஆகும். இந்த நாடுகளின் அனுபவங்களை கணக்கில் கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் இடங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப, மார்க்சிய-லெனினிய விஞ்ஞான அடிப்படையில் செயல் படுவது வெற்றியை தரும். சீனர்கள் மாவோவின் சிந்தனை கள், டெங் சியா பிங்கின் கோட்பாடுகள் என்றனர். கொரியர்கள் சுசே கருத்து என்றனர். வியத்நாமி யர்கள் ஹோ சி மின்னுடன் அடையாளப்படுத் திக் கொண்டனர். வேறு சிலர் தங்களுடைய முன்மாதிரிகள் அல்லது ஸ்தூலமான நிலைமை யுடன் அடையாளப்படுத்தி கொண்டனர். 1991ல் நடைபெற்ற பேரதிர்வுகளை ஏற்படுத்திய சம்ப வங்களை தொடர்ந்து, சோசலிசம் வீழ்ந்து விட்டது என்றும், கம்யுனிசம் செத்து விட்டது என்றும் கட்டவிழ்த்து விடப்பட்ட பிரச்சாரம் இனிமேல் எடுபடாது. முன்னாள் சோவியத் குடியரசுகளின் மக்களும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்ம க்களும் முதலாளித்துவம் தீர்வு அல்ல என்பதை உணர்ந்து கொண்டு விட்டனர். இந்த நாடுகளில்,ஏற்றத் தாழ்வுகள் அதிகரித் துள்ளது. வேலையின்மமை அதிகரித்து பாது காப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், சோசலிசம் அமைப்பை தகர்க்கும் ஏகாதிபத்தியத்தின் கனவு நனவாகாது. சீன, வியத்னாம், கொரியா, கியூபா மற்றும் லாவோஸ் ஆகிய சோசலிச நாடுகளில் உலக மக்களில் கால் வாசி பேர் வசிக்கின்றனர். இவை மிகவும் பின் தங்கிய நாடுகள் தான், அமெரிக்க கடல்பகுதியி லிருந்து வெறும் 90 மைல்கள் தொலைவில் உள்ள கியூபா அதை நிலைகுலையச் செய்யும் அனைத்து முயற்சிகளையும் வீரத்துடன் எதிர் கொண்டு தோற்கடித்துக் கொண்டு வருகிறது. குழந்தை பருவத் தில் சோசலிசம் நிலவும் கியூபாவின் மீதும், அதன் மக்கள் மீதும் ஏகாதிபத்தியம் பொருளா தார தடைகளை விதித்து பெரும் கஷ்டங்களை ஏற்படுத்தியது. அவர்களுக்கு நிறைய பிரச்னை கள் இருந்த போதிலும், கியூபா இதர விடுதலை இயக்கங்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. அந்நாட்டின் புரட்சி ஒட்டு மொத்த லத்தீன் அமெரிக்காவுக்கும், கரீபிய பகுதிக்கும் பரவியுள்ளது.
மார்க்சியம் -லெனினியம் என்பது இன்றைக்கும் பொருந்தும் கோட்பாடு ஆகும். அதன் பொருத்தப்பாட்டை, தேவையை வரலாறு நிரூபித்துள்ளது. கம்யுனிச எதிர்ப்பாளர்களும், பிற்போக்கு சக்திகளும் கடும் தாக்குதல்களை தொடுத்த போதிலும், தடம் பதித்த மாபெரும் அக்டோபர் புரட்சியும் அதனால் உருவாகிய முதல் சோசலிசம் அரசின் முக்கியத்துவத்தை யும் அவர்களால் நிராகரிக்க முடியாது.
1992ல் , “சமகால நிலைமையும் மார்க்சியத்தின் பொருத்தப்பாடும்” என்ற தலைப்பில் நடை பெற்ற சர்வதேச கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் கட்சி யின் கருத்துத்தாள் மிகச் சரியாக கூறியுள்ளது: தற்போது நிலவும் உலக வளர்ச்சிபோக்குகளின் தன்மை ஒரு அறிவியலாக ஒரு வழிமுறையாக, செயல்படுவதற்கு ஒரு வழிகாட்டியாக மார்க் சியத்தின் பொருத்தபாடும் , தேவையும் நியாய மானது என்பதை காட்டுகிறது. மனிதகுல விடு தலையை முழுமை பெறச் செய்ய தேவையானவை என்ன என்பதை நிறுவ மார்க்ஸ் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். பின்னர் வந்த மார்க்சிஸ்டுகளும் அதே பணியில் ஈடுபட்டனர். மனிதனை மனிதன் சுரண்டுவதும், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டுவதும் முதலாளித்துவத் தின் அடிப்படையாக இருக்கும் வரை மனித குலத்தின் விடுதலைக்கான தேடலை நிறுத்திவிட முடியாது. இன்றைய உலகில் மனிதம் ஏற்றுக் கொண்டுள்ள உரிமைகள் அனைத்தும் மக்களின் போராட்டங்களின் பங்களிப்பாகும். இந்த வர்க்க போராட்டம் தான் தற்கால வளர்ச்சிப்போகு களை உருவகபடுத்துவதுடன், மனித மனசாட்சி யுடன் இணைந்ததாக உள்ளது.
தற்கால சமுதாயத் தின் மீதும் மனித குலத்தின் அறிவு வளர்ச்சி மீதும் மார்க்ஸ் பதித்துள்ள தடயம் அழிக்க முடியாதது “முதலாளித்துவத்தின் நியாயமற்ற, மனித நேயம் அற்ற தன்மையை தற்கால உலக நிலைமை தெளிவாக வெளிப்படுத்துகிறது. முதலாளித்துவ அமைப்பு அடிக்கும்கொள்ளை யால் வளர்ந்து வரும் நாடுகளில், கோடிக்கணக் கான மக்கள் பசி, பட்டினி, நோய் கல்லாமை போன்றவை நிலவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அணுஆயுத அழிவு அபாயங் களுக்கும், மோசமாகிவரும் சமமற்ற சுற்று சூழலுக்கும் அதுவே நேரடி பொறுப்பாகும் முதலாளித்துவ சமூகங்களில்அதிகரித்து வரும ஒழுக்கக் கேடுகள், போதை பழக்கம்,வன்முறை, பாலின, இன பாகுபாடுகள் .மனிதர்களின் நல்ல குணங்களை கீழே தள்ளுவது தொடர்கிறது. சோசலிச பின்னைடைவுக்குப் பின்னர், முன்பு போலவே, தற்போதும், “முதலாளித்துவமே நிரந்தரமானது” என்ற இடைவிடா பிரச்சாரம் இருந்தபோதிலும் தலாளித்துவ அமைப்பினால் மனித குலம் சந்திக்கும் பெரிய பிரச்னைகளை தீர்க்க இயலாது என்பதை அதுவே நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
இவற்றிக்கு மாறாக:
“மார்க்சியம்-லெனினியம் என்பது இயல் பாகவே பொருள்முதல்வாதத்தை உள்ளடக் கியது, புத்தாக்க தன்மை கொண்டது. இயக் கவியலை உள்ளடக்கியது. எனவே அது வரட்டு தனமற்றது. விடுதலை என்ற பார்வையும், அதற் கான உயர்ந்த நோக்கங்களையும் வெளிப் படுத்தும் உலகப் பார்வையை கொண்டது. அது மாறிவரும் வரலாற்று நிலைமைகளை கொண்ட பல விஷயங்களை புரிந்து கொள்ளவும் கூர் ஆய்வு செய்யவும் உதவுகின்ற ஒரு கருவியாகும். விடுதலைக்கான மக்கள் போராட்ட திட்டங் களின் நோக்கங்களை வரையறுத்துக் கொடுக்கும் ஓ ர்வழிகாட்டியாகவும், அதே சமயம் மாறி வரும் வரலாற்று சூழலுக்கேற்ப தேவைப்படும் மாற்றங் களை செய்து கொள்ளும் தன்மை கொண்டது.”
1992
Leave a Reply