ரஷ்ய புரட்சியும் பெண்களும் …


சுரண்டல் சமூகத்தின் தளைகளிலிருந்து மக்களை விடுவிப்பது தான் புரட்சியின் நோக்கம் என்னும் போது, ரஷ்ய புரட்சியானது, சமூக ஒடுக்கு முறைக்கும் வர்க்க சுரண்டலுக்கும் ஆளான பெண்களின் வாழ்க்கையிலும், சமூக அந்தஸ்தி லும் எவ்விதத் தாக்கங்களை ஏற்படுத்தியது, குறிப்பாகப் பெண் விடுதலைக்கான பவுதீக சூழலை ஏற்படுத்தியதா, ஆணாதிக்கமும், வர்க்க சுரண்டலும் அமைப்பு ரீதியாக நிறுவனமய மாக்கப்பட்ட சூழலை மாற்ற என்ன நடவடிக்கை கள் எடுக்கப்பட்டன என்ற சில முக்கிய கேள்வி களுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது. தனியுடைமை, வர்க்க சுரண்டல், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக் கிடையான தொடர்பை எங்கல்ஸ் அவர்களின் ஆய்வு தெளிவாக எடுத்துரைக்கிறது. வரலாற்றில் முதல் வர்க்க முரண்பாடு, பாலினங்களுக்கிடை யான முரண்பாடு நிகழ்ந்ததுடன் ஒத்திசைந்து தோன்றியது என்கிறார் எங்கல்ஸ். இந்த மார்க் சிய கண்ணோட்டத்துடன் முதல் சோஷலிச சமூக அமைப்பில் நிகழ்ந்த மாற்றங்களைப் பார்க்க வேண்டும்.

முதலில் புரட்சிக்கான இயக்கத்தில், வெகுமக் கள் போராட்டங்களில் பெண்கள் பார்வை யாளர்களாக இருந்திருக்கவில்லை. தொழிலாளி வர்க்கப் பெண்களில் கணிசமானவர்கள் தலைமை தாங்குபவர்களாகவும், பங்கேற்பவர்களாகவும் இருந்தனர் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் கள் பங்கேற்பு இன்றி, புரட்சி நடந்தது என்றும், அவர்களின் கஷ்டங்கள் கண்டு மனம் இறங்கி மட்டுமே சோஷலிச சமூக அமைப்பு அவர்களுக் காக செயல்பட்டது என்றும் பார்த்துவிடக் கூடாது..

சம வாய்ப்புகளும் அவற்றுக்கான சூழல் உருவாக்கமும்:
உலகிலேயே முதன் முறையாக சட்டபூர்வமான அரசியல் ரீதியான சமத்துவம் பெண்களுக்கு சோஷலிச சமூக அமைப்பில் தான் அளிக்கப் பட்டது. 1917 துவங்கி 1927 வரை அடுக்கடுக்காக சட்டங்கள் இயற்றப் பட்டன. பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் அச்சாணி தனி உடைமை ஆதிக்கம் – முறிக்கப்பட்டது. சோஷலிச அரசு பொறுப்பேற்ற பின் அனைத்து குடிமக்களுக்கும் முன்னேற்றத்துக்கான சம வாய்ப்புகள் கொடுக்கப் பட்டன. சிவில் சர்வீஸ், தொழிற்சாலைகள், ராணுவம், கட்சி அமைப்பு என அனைத்திலும் பாலின பாகுபாடுகள் இன்றி வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்பட்டன. ஆனாலும், தோழர் லெனினும் இதர போல்ஷ்விக் கட்சி தலைவர் களும் சிந்தித்தனர் இந்த வாய்ப்புகளைப் பெண் கள் பயன்படுத்திக் கொள்ளும் சூழல் இருக்கிறதா என்று. சமையலும், குழந்தை பராமரிப்பும், துணி துவைத்தலும் பெண்ணைக் கட்டிப் போட்டு விடும் என்ற புரிதலின் பின்னணியில் தான் மலிவு விலை சமூக உணவகம், மலிவு விலை சமூக சலவையகம், அனைத்து வேலை தலங்களிலும் சிறந்த குழந்தை காப்பகம் என்ற ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன. சலிப்பூட்டும் வீட்டு வேலை களிலிருந்து விடுதலை கிடைக்காமல், பெண்கள் அரசியல் பொருளாதார சமத்துவத் தைப் பெற்று விடமுடியாது என்பதே சோஷலிச அரசின் கண்ணோட்டமாக இருந்தது. இக்கண் ணோட்டத்தின் அடிப்படையிலேயே, வீட்டு வேலைகள் தனிப்பட்ட பெண்ணின் அல்லது குடும்பத்தின் பொறுப்பு என்ற நிலையிலிருந்து மாறி சமூகமயமாகியது. குழந்தை பராமரிப்பும், அவர்களின் கல்வியும் பொது விவகாரமாக, அரசின் பொறுப்பாக மாறியது. இது மிகப்பெரிய மாற்றம். தோழர் லெனின் கீழ்க்கண்டவாறு கூறினார் பெண் முன்னேற்றத்துக்கான பல சட்டங்கள் வந்தாலும், அவள் வீட்டுக்கு அடிமை யாகவே கட்டுண்டு கிடக்கிறாள். வீட்டுப் பணி கள் அவளை நசுக்கி, நெரித்து மூச்சு திணற வைக் கின்றன. சமையலறையுடனும், குழந்தை பராமரிப் புடனும் அவள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக் கிறாள். எவ்வித பலனும் இல்லாத, காட்டுமிராண்டித் தனமான, சலிப்பூட்டும் வேலைகளில் அவளது உழைப்பு வீணாகிறது. இதிலிருந்து விடுதலையா வதன் மூலமே பெண் உண்மையான விடுதலையை அடைய முடியும். இதற்கான முழுமுதல் போராட்டத்தை அரசு அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பாட்டாளி வர்க்கம் செய்ய வேண்டும். தனிப் பட்ட குடும்ப உழைப்பு, பரந்து பட்ட சோஷலிச பொருளாதாரத்தின் பகுதியாக ஒட்டுமொத்த மாக மாற வேண்டும் இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குடும்ப வேலைகளில் கட்டுண்டு கிடந்து, சுய முன்னேற்றம் குறித்து சிந்திக்க வழியில்லாமல் தவித்த பெண்களின் தளைகளை தகர்க்க உதவின. தனிப்பட்ட பணிகள் சமூகமயமாக்கப்பட்டதன் மூலம், பெண்கள் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற வழி கிடைத்தது. 1927லேயே உயர்கல்வியில் 1/3 பங்கு பேர் மாணவிகளாக இருந்தனர். கிராமப்புற சோவியத்துகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 11 சதவீதமும், நகர சோவியத்துக்களில் 21.5 சதவீதமும் பெண் கள் என்ற நிலை ஏற்பட்டது. தொழிற்சங்க உறுப் பினர்களில் 25சதவிகிதம் பெண்கள்.

அனைத்துப் பெண்களுக்கும் வாக்குரிமை அளித்ததில் முன்னோடி:
வாக்குரிமையைப் பொறுத்த வரை, பெண் களின் வாக்குரிமைக்காக உலக அளவில் நீண்ட நெடிய இயக்கங்கள் முன்னமே நடந்து கொண் டிருந்தன. அதை முதன் முதலில் சாத்தியப்படுத் தியது ரஷ்ய புரட்சிக்குப் பின் ஏற்பட்ட சோஷலிச அரசாங்கமே. முதலாளித்துவ பெண்ணிய அமைப் புகள், சொத்துடைமை ஆண்களுக்கு வாக்குரிமை இருக்கும் போது, சொத்துடைமை பெண்களுக்கு ஏன் இருக்கக் கூடாது என்ற பிரச்சாரத்தை முன் னெடுத்தனர். பெண்கள் மத்தியில் சோஷலிச கருத்துகளை விதைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த பெண் கம்யூனிஸ்டுகள், அனைத்துப் பெண்களுக் குமான வாக்குரிமை என்பதற்கு அழுத்தம் கொடுத் தனர். அலெக்சாண்ட்ரா கொலந்தாய், கிளாரா ஜெட்கின் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர்.

1907ல் ஸ்டட்கார்ட்டில் நடந்த சோஷலிச அகிலத்தில் கிளாரா ஜெட்கின் கீழ்க்கண்டவாறு முழக்கமிட்டார்:
வாக்குரிமை என்பது முதலாளித்துவ வர்க்க பெண்களுக்குத் தடைகளை உடைக்க உதவும் என்பது உண்மையே. ஆனால் தொழிலாளி வர்க்க பெண்களைப் பொறுத்த வரை வாக்குரிமை யானது, சுரண்டல் மற்றும் வர்க்க ஒடுக்குமுறை யிலிருந்து மனித குலத்தை விடுவிப்பதற்கான போரில் ஒரு கருவியாகப் பயன்படும். பெண்களின் பிரச்னைகளுக்கு அடிப்படை தீர்வைத் தர வல்ல சோஷலிச சமூக அமைப்பை நிறுவுவதற்கு அரசி யல் அதிகாரம் தேவைப்படுகிறது. அதைக் கைப் பற்ற பாட்டாளி வர்க்கம் நடத்தும் யுத்தத்தில், ஒரு முன் தயாரிப்பாக சாதக சூழலை ஏற்படுத்த தொழிலாளி வர்க்க பெண்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி பெரும் பங்காற்ற முடியும். அனை வருக்கும் சிவில் உரிமைகளைப் பெற்றுத்தர முதலாளித்துவ வர்க்கப் பெண்கள் தம் வாக்குரிமை யைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதனால், வாக்குரிமைக்காக அவர்கள் நடத்தும் இயக்கத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. பொது எதிரியை எதிர்த்த போராட்டத்தில் தொழிலாளி வர்க்க பெண்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும். ஆனால் வர்க்க வேறுபாடின்றி ஆண்களை எதிர்த்து பெண்கள் நடத்தும் போராட்டத்தின் மூலம் வாக்குரிமை மற்றும் சிவில் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. மாறாக, சுரண்டப்படு பவர்கள் பாலின வேறுபாடு பார்க்காமல் ஒன்று படுவதும், சுரண்டும் வர்க்கத்தைப் பாலின வேறு பாடு பார்க்காமல் எதிர்த்து வர்க்கப் போரில் ஈடுபடுவதும் தான் பிரச்னைக்குத் தீர்வு காணும் வழியாகும்.

எதிர்கொண்ட சவால்கள்:
பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தை வர்க்க பிரச்னையுடன் இணைந்த பாலின பிரச் னையாக கம்யூனிஸ்டுகள் பார்த்தனர். இதற்கு மாறுபட்ட நிலை எடுத்த முதலாளித்துவ பெண்ணிய வாதிகளை ஒரு புறமும், தொழிலாளி வர்க்கத்தில் இருந்த ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை மறு புறமும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1911ல் ஜெர்மனியில் கிளாரா ஜெட்கினும், 1913ல் ரஷ் யாவில் கொலந்தாயும் நடத்திய உலக பெண்கள் தின நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றது மாற்றங்களுக்கான சூழலையும், மன நிலையையும் ஏற்படுத்தியது. தோழர் லெனின் அவர்களின் முன்முயற்சியில் 1914ல் பெண் தொழிலாளிகளுக்கான ஒரு பத்திரிகை பெண் தொழிலாளி (ரபோத்னித்சா) துவங்கப்பட்டது. போல்ஷ்விக் கட்சியின் மத்திய குழு, பெண்கள் பிரச்னைகளைப் பொது தளத்தில் விவாதிக்க என்று ஒரு தனியான குழுவை ஏற்படுத்தியது. இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, புரட்சிக்குப்பின், 1917-லேயே அனைவருக்கும் வாக்குரிமை என்பது சட்டபூர்வமாகியது. ஆஸ்தி ரேலியாவில் பெண்களுக்கு வாக்குரிமை 1902ல் கொடுக்கப்பட்டாலும், அது அனைவருக்குமான வாக்குரிமை அல்ல. அந்நாட்டின் பூர்வகுடி ஆண் களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை 1962ல் தான் கிடைத்தது. எனவே, சோஷலிச அரசு தான், அனைத்துப் பெண்களுக்குமான வாக்குரிமையை முதலில் கொண்டு வந்தது என்று அழுத்தமாகக் கூற முடியும்.

சிரமங்களைக் கடந்தே சிகரங்களை நோக்கி:
ஆனால் இவை எதுவும் சுலபமாக நடந்து விட வில்லை. பழைய ஆணாதிக்க கலாச்சாரத்தின் இழுவையும், நில உடைமை சித்தாந்தக் கூறு களும், பிற்போக்கு சமூக உறவுகளின் தாக்கமும் முற்போக்கு அம்சங்களைத் தடுத்தன. குழந்தை களைக் காப்பகத்தில் விடுவதற்குத் தயக்கம் இருந்தது. அரசாங்கத்தால் இதையெல்லாம் செய்து விட முடியுமா என்ற அவநம்பிக்கை நிலவியது. இவற்றை எதிர்த்த பிரச்சாரத்தையும் கட்சி செய்ய வேண்டியிருந்தது. குறிப்பாக மத்திய ஆசிய பகுதியில் இருந்த குடியரசுகளில் பெண் சமத்துவ அம்சங்களை நடைமுறையாக்குவது பெரும் சவாலாக இருந்தது. அரசியலுக்குப் பெண் களைக் கூடுதலாகக் கொண்டு வருவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்த தோழர் லெனின் மிகச் சரியாக சொன்னார் எவ்வளவு முன்னேறிய நாடுகளானாலும், பழைய முதலாளித்துவ சமூக அமைப்பில், பெண்கள் முக்கியத்துவமற்ற பங்குபாத்திரத்தையே அரசியலில் வகிக்க முடிந்தது. அரசியல் பங்கேற்பை ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டி யது நமது கடமை. அரசியலில் பெண் தொழிலா ளிகளின் பங்கேற்பு அவசியம். கட்சி உறுப்பினர் கள் மட்டுமல்ல, கட்சிக்கு வெளியில் இருக்கும் பெண்களுக்கும், மிகக் குறைவான அரசியல் உணர்வு பெற்றவர்களுக்கும் கூட அரசியல் பங்கேற்பு சாத்தியமாக வேண்டும். லட்சோப லட்சம் பெண்கள் அரசியலில் பங்கேற்கும் போது தான், சோஷலிச அரசு துவங்கியிருக்கும் பணிகளை நிறைவேற்ற முடியும்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பிய விஷயங் களை செய்யும் அளவுக்கு தேசத்தின் நிதி நிலைமை இல்லை. புரட்சிக்குப் பின் உடனடியாக ஏகாதி பத்திய நாடுகளின் ராணுவ தலையீடுகள், உள் நாட்டு போர் போன்றவற்றை இளம் சோவியத் அரசு சந்திக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே நசிந்து கிடந்த பொருளாதாரத்தை இது மேலும் மோசமாக்கியது. 1920களின் பிற்பகுதியில் முன் னேற்ற நடவடிக்கைகள் வேகம் பிடித்தன. பிறகு ஹிட்லரின் பாசிச படையெடுப்பை சந்திக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் மீண்டும் சீர்குலைந்தது. இத்தகைய பெரும் சிரமங்களுக்கு இடையே தான், சோவியத் ஒன்றியத்தில் பெண்கள் பெரும் முன்னேற்றம் அடைந்தனர்.

மாறிய காட்சிகள்:
1924ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தீர்மானம், தொழிற்சாலைகளில் பெண்களின் உழைப்பு படையைப் பாதுகாப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது, முதலாளித்துவ சமூக அமைப்பிலிருந்து சொத்தாகப் பெற்ற பெண்ணடி மைத்தன பிற்போக்கு அம்சங்களுடன் போரிட வேண்டும் என்று அறைகூவி அழைத்தது. ஆலை களில் எப்போதும் துடைப்பத்துடன் காட்சி யளித்த பெண்கள் மெல்ல மெல்ல நம்பிக்கை அடைந்து, பயிற்சி பெற்று இயந்திரங்களை செயல்படுத்தும் தொழிலாளியாக, மேலாளரா கப் பரிணமித்தனர். பெண் மேலாளரை முதலில் கேலியாகப் பார்த்த ஆண் தொழிலாளிகள் பின்னர் பெண்களின் திறமைகளை மதிக்க ஆரம்பித்தனர் என பெண் தொழிலாளர்களின் பத்திரிகையான ரபோத்னித்சா செய்தி வெளி யிட்டது. சோவியத் ஒன்றியத்தில் மிக அதிகமான விற்பனையாகும் பத்திரிகையாக அது செயல் பட்டது.
ஜார் மன்னனின் ஆட்சியில் வேலைக்குப் போகும் ரஷ்ய பெண்களில் 55சதவிகிதத்தினர் நகர்ப்புற கிராமப்புற வீட்டுப் பணியாளர்களா கவும், 25சதம் விவசாய வேலை பார்ப்பவர்களா கவும், 13 சதம் தொழிற்சாலைகளில் பணிபுரி பவர்களாகவும், 4சதம் கல்வி, சுகாதாரம் சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருந்தனர். ஏராளமான பெண்கள் – சுமார் 5 லட்சம் பேர் – பாலியல் வணிகத்தில் ஈடுபடுபட வேண்டிய நிலையில் வாழ்ந்தனர். இவற்றில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டது. 1913ல் மருத்துவர்களில் 10 சதவிகிதம் மட்டுமே பெண்கள் என்ற நிலை மாறி, 1950களில் 50-70 சதவிகிதம்பேர் பெண்கள் என்ற நிலைக்கு உயர்ந்தனர். 1960களில் பொறியாளர் களில் 41 சதவிகிதம் பேர் பெண்கள். வழக்கறி ஞரில் மூன்றில் ஒருபங்கு பெண்கள். 1969 புள்ளி விவரப் படி, அமெரிக்காவில் மொத்த பொறி யாளர்களே 870000 பேர், அதில் 1 சதம் தான் பெண்கள். ஆனால் சோவியத் ஒன்றியத்தில் பெண் பொறியாளர்கள் மட்டும் 775000 பேர். 1959ல் வாகன ஓட்டுநர்களில் 57 சதவிகிதம் பெண்கள். கிரேன் ஆபரேட்டர்களில் பெண்கள் 1926ல் 1 சசதவிகிதம் மட்டுமே, ஆனால் 1959ல் 32 அதாவது 557400 பேர். இது 411 மடங்கு உயர்வு. குமாஸ்தா பணிகளில் 78 சதம், துறைகளின் தலைமை பொறுப்புகளில் 39சதவிகிதம் பெண் கள். 1968ல் முனைவர்களில் 31 சதவிகிதம் பெண் கள். பெரும் மருத்துவமனைகளின் தலைவர் களாகப் பெண்கள் பொறுப்பு வகித்தனர். 20000 டன் கப்பலை இயக்கும் கேப்டனாக ஒரு பெண் செயல்பட்டார். 100க்கும் மேற்பட்ட விண்வெளி கண்காணிப்பு நிலையங்களுக்குப் பொறுப்பாக, புகழ் பெற்ற மாஸ்கோ சிம்பனி இசைக்குழுவின் நடத்துநராக, உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ கல்வி அமைப்பின் தலைவராக பெண் சிறப்பாக செயல்பட்டதெல்லாம் சாதாரணமான விஷயமா? முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், முதல் பெண் விண்வெளி வீரர் என்று பலப்பல சாதனைகள். இந்த முன்னேற்றங்களும், தனிப்பட்ட பெண் களின் சாதனைகளும் ரபோத்னித்சாவில் இடம் பெற்றன. இது ஆணுக்கான வேலை, இது பெண்ணுக் கான வேலை என்று பிரிக்கப்படவில்லை. பாலின வேறுபாடு இன்றி, தகுதியின் அடிப்படையில் வேலைகளுக்கான வாய்ப்பு கிடைத்தது, அதைப் பயன்படுத்தும் சமூக, பண்பாட்டு சூழலும் உரு வாக்கப்பட்டது. திருமணமும் வேலை வாய்ப்பும் எதிரும் புதிருமான முரணாக இல்லை.

பெண்களின் முன்னேற்றத்துக்கான சிறப்பு ஏற்பாடுகள்:
ஆணும் பெண்ணும் சமம் என்கிற பேரில், பெண்ணுக்கான சில சிறப்பு ஏற்பாடுகள் நிரா கரிக்கப்படும் நிலை வந்து விடக் கூடாது என்ப தையும் சோஷலிச அரசு கணக்கில் எடுத்தது. சமத்துவத்தை இயந்திரகதியாக அணுகிவிடக் கூடாது. புரட்சிக்குப் பின் அமைந்த சோஷலிச அரசில், சமூக சேவைகளுக்கான கமிசாராக (அமைச்சர்) அலெக்சாண்ட்ரா கொலந்தாய் நிய மிக்கப்பட்டார். 1917 டிசம்பரில் தாய் சேய் நலத்துக்கான தனி முன்முயற்சி எடுக்கப்பட்டு பிரசவ கால விடுப்பு, கர்ப்ப காலத்தில் வேலை தலத்தில் கடின வேலை கொடுக்காமை போன்ற நடவடிக்கைகள், சட்ட அடிப்படையில் நிலை நிறுத்தப் பட்டன. பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒரு முறை 30 நிமிடங்கள், பாலூட்டுவதற்கு அளிக்கப்பட்டது. குடியிருப்பு, வேலை தலத்திலிருந்து தள்ளி இருந் தால், இந்த நேரம் அதிகமாகக் கொடுக்கப் பட்டது. ஒரு வருடம் வரை, குழந்தை பிறந்த பிறகு வேலை பாதுகாத்து வைக்கப்பட்டது.

1918 துவக்கத்திலேயே திருமணத்திலும், குடும் பத்திலும் அன்பு, பரஸ்பர மரியாதையுடன் பாலின சமத்துவத்தை அங்கீகரிக்கும் கோட்பாடு சட்ட ரீதியாக்கப்பட்டது. திருமணமும், குடும்பமும் இரு பாலாரும் விரும்பி ஏற்கும் ஏற்பாடாக முன்னிறுத்தப் பட்டது. பின்னர் குழந்தை பாது காவலில் பெண்ணுக்கு சம உரிமை கிடைத்தது. இதுவெல்லாம் உலகில் எந்த நாட்டுப் பெண் களும் அது வரை அனுபவித்திராத உரிமைகள்.

சொத்துரிமையில், வாரிசுரிமையில் சம பங்கு உறுதி செய்யப்பட்டது. விவாகரத்து மற்றும் கருக்கலைப்புக்கான சட்டங்கள் உருவாக்கப் பட்டன. தன்பாலின சேர்க்கை மீதான தடை விலக்கப்பட்டது. 1922ல் விபச்சாரத்துக்குக் குற்ற விலக்கு கிடைத்தது. அதே சமயம், விபச்சாரத்துக்கு எதிரான பிரச்சாரம் பெண்கள் கமிட்டிகளால் மேற்கொள்ளப்பட்டது. பெற்றோரிடையே மண முறிவு ஏற்பட்டால், குழந்தைகளுக்கான நிதி ஆதாரம் அரசால் உறுதி செய்யப்பட்டது. குழந்தைகளுடன் பிரியும் பெண்களுக்கு நீதி மன்றங்கள் தாராளமான ஜீவனாம்ச தீர்ப்புகளை வழங்கின. திருமண உறவுக்கு அப்பாற்பட்டு பிறக் கும் குழந்தைகளுக்கும் சம உரிமைகள் வழங்கப் பட்டன. வேலை தலத்தில் சம வேலைக்கு சம ஊதியம் சட்டமாகியது. 55 வயதிலேயே முழு ஓய்வூதியத்துடன் பெண் ஓய்வு பெறலாம், ஆண் களுக்கு அது 60 வயது. ஆண் தொழிலாளிகளை விட கூடுதல் நாட்கள் ஓய்வுக்கான விடுப்பு பெண் களுக்குக் கொடுக்கப்பட்டது. நடன கலைஞர் களாக இருந்த பெண்களுக்கு 35 வயதிலேயே முழு ஓய்வூதியத்துக்கான உரிமை வழங்கப் பட்டது.

கிராமப்புறங்களில்:
வானம் வரை நீ செல்லலாம், ஆனால் உன் சிறகுகள் வெட்டப்பட்டவையாகவே இருக்கும் என்ற ரீதியில், வாய்ப்புகளை முன்வைத்து விட்டு, பெண்கள் சவாலான வேலைகளில் ஈடுபடுவதற்கு உகந்த சூழலை உருவாக்காமல் சோவியத் அரசாங் கம் இல்லை என்பது மிக முக்கியமானது. உதாரண மாக, கிராமப்புறங்களில் விவசாய இயந்திரங் களை செயல்படுத்த ஆரம்பித்த பெண்கள், ஒரு கட்டத்தில் மாநாடு நடத்தி, இயந்திரங்களில் அவர்களுக்கு வசதியாக சில மாற்றங்கள் வேண்டு மென கோரிக்கை விடுத்தனர். 1970ல் அரசாங்க உத்தரவு ஒன்று, அம்மாற்றங்களுடன் இயந்திரங் கள், தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட ஏற்பாடு செய்தது. மாற்றங்களுடன் வந்த இயந்திரங்களை, பெண்கள் மேலும் திறம்பட இயக்க முடிந்தது. பல சவாலான பணிகளைப் பெண்கள் செய்தனர். அவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டன.

விவாதங்களும், முன்னேற்றங்களும் இணைந்து நடந்தன. உஸ்பெகிஸ்தானில், ஒரு கூட்டுப் பண் ணையின் தலைவர் உட்பட அனைத்து முக்கிய பணிகளிலும் பெரும்பான்மை பெண்களாக இருந்தனர். கட்சி கமிட்டியிலும் பெண்கள் கூடு தலாக இருந்தனர். பெண் ஆதிக்கம் என்று சிலர் கேலி பேசிய போது, பெண்கள் பதிலடி கொடுத் தனர். இது சோவியத் அதிகாரத்தின் மிகப்பெரும் சாதனை, இத்தகைய சூழல் ஏற்படத்தானே நமது பெற்றோர்கள் போராடினர் என்று வாதிட்டு மடக்கினர்.

அமெரிக்கா போன்ற முன்னேறிய முதலாளித் துவ நாடுகளிலேயே, பெண்கள் இயக்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள், சோவியத் பெண்கள் அடைந்த முன்னேற்றத்தை ஒட்டியவையாகவும், அவற்றை இலக்காக வைத்தும் அமைந்தன.

சோவியத் ஒன்றியம் சிதறுண்ட போது ரஷ்ய புரட்சியின் பலனாக, பெண்கள் தலை நிமிர்ந்தனர். சலிப்பூட்டும் வீட்டு வேலைகளிலிருந்து விடு தலை பெற்றனர். கல்வி, வேலை வாய்ப்புகள் மூலம் பொருளாதார சுதந்திரம் பெற்றனர். பண்பாட்டு ரீதியாகவும் மாற்றங்கள் நிகழ்ந்தன. சமூகத்தின் பார்வையிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தியது. பெண் சமத்துவத்துக்கான பவுதீக சூழலை சோஷலிச சமூக அமைப்பு ஏற்படுத்தியது. அதாவது, பெண் முன்னேற்றம் சமூக அமைப்பு முறையுடனும், அரசியல் கொள்கையுடனும் தொடர்புடையது. சோஷலிச அமைப்பு வலுப் பெற்றால், முன்னேற்றமும் வலுப்பெறும். சீர் குலைந்தால், இத்தகைய பவுதீக சூழலிலும் எதிர் மறை விளைவுகள் உருவாகும்.
1990களில் சோஷலிசம் பின்னடைவை சந்தித்து, சோவியத் ஒன்றியம் சிதறுண்ட சூழலில், முதல் தாக்குதல் பெண்கள் மீது தான் என்பதை அனுப வத்தின் வாயிலாகவே அவர்கள் உணர்ந்துள்ள னர். வேலையின்மை காரணமாக, மீண்டும் விபச்சாரம் தலை தூக்கியது. வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளதால், பெண்கள் வீடு என்கிற தளத்துக்கே திரும்பிப் போக வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. சமூக நலத் திட்டங்கள் வெட்டப்பட்டன. வேலைக்கு இளம் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதும், பாலியல் சேவை செய்ய வேண்டும் என்பதும் வெளிப்படை விளம்பரமாக வரத் துவங்கியது. பெண்கள் மீதான வன்முறை ஆரம்பித்தது. அரசியலில் பொறுப்புகளுக்குப் பெண்கள் வருவது குறைந்தது. ஆர்மீனியாவில் ஆண்கள் வேலை தேடி ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வர வேண்டிய நிலையில், அங்குள்ள பெண்கள் மீதியுள்ள குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்கும் மொத்த சுமையும் சுமக்க வேண்டி யிருந்தது. குடும்பத்துக்குள்ளேயே பாலியல் வன் முறையை சந்திக்க நேர்ந்தது. பெருமளவில் குறைக்கப்பட்டிருந்த குடிப்பழக்கம் ஆண்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்தது. அதன் பாதக மான விளைவுகள் தொடர்ந்தன. சோவியத் சமூக அமைப்பில் ஏற்பட்ட சிதைவு, சோஷலிச தத்து வத்தினாலோ கோட்பாடுகளாலோ இல்லை, இது வரை யாரும் கடந்து சென்றிராத பாதை அது. முதல் முயற்சி என்ற ரீதியில், சோஷலிச நிர்மாணத்தில் சில தவறுகளும், பலவீனங்களும் ஏற்பட்டன, குறிப்பாக சோஷலிச ஜனநாயகத்தை நிறுவுதல், சோஷலிச பொருளாதாரத்தைக் கட்டுதல், தத்துவார்த்த உணர்வுகளை பலப்படுத்து தல் போன்ற பகுதிகளில் குறைபாடுகள் ஏற்பட்டன என்று 1992ல் சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது கட்சி காங்கிரசில் நிறைவேற்றப் பட்ட, தத்துவார்த்த பிரச்னைகள் குறித்த தீர்மானம் கூறுகிறது. மேலும் சோவியத் ஒன்றியத்தில் கார்பசேவ் தலைமையிலான ஆட்சி யில் கிளாஸ்நாஸ்ட், பெரஸ்த்ரோய்கா போன்ற கருத்தாக்கங்கள் மூலம் சோஷலிசத்துக்கு எதிரான போக்குகள் உருவானது குறித்து அத்தீர்மானம் கவலை தெரிவித்தது. சோஷலிசம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு முதலாளித்துவ மருந்துகள் அளிக்கப்படுவது தவறு என சுட்டிக்காட்டியது. சோஷலிச எதிர்ப்பு சக்திகளின் தாக்குதலை சந்திக்க முடியாமல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் அணிகளும், மக்களும் நிராயுதபாணியாக் கப்பட்டார்கள் என்றும் தீர்மானம் விளக்கியது. 1980களின் பிற்பகுதியிலிருந்தே இவ்விதத் திரிபு கள் முன்னுக்கு வந்தன. கார்பசேவ் முன்வைத்த கிளாஸ்நாஸ்ட் கருத்தாக்கம், பெண்கள், அவர் களது வேலைக்குத் திரும்பிப் போக வேண்டும், குடும்பத்தைப் பாதுகாப்பதே அவர்களது மைய பணி என்பதில் அழுத்தம் கொடுத்தது. அழகிப் போட்டிகள் பிரபலம் அடைந்தன. 1989 தேர் தலில், குறிப்பிட்ட மட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளில் பெண்களின் பங்கு 15 சதவிகி தமா குறைந்தது. வேலையை விட்டு விட்டால் குடும்பத்தை, குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும், ஓய்வெடுக்க முடியும், அது தான் சுதந்திரம் என்ற பிரச்சாரம் செய்யப் பட்டது. சோஷலிசத்தை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்த ஏகாதிபத்திய சக்தி களுக்கு, இத்தகைய சூழல் பயன்பட்டது.

ஏகாதிபத்தியம் விரித்த வலையில் விழுந்தவர் கள், காலப்போக்கில் அதன் வெளிச்சம் மங்கிய பிறகு, பாதிப்புகளைப் புரிந்து கொள்ள துவங்கி யுள்ளனர். பல்வேறு பெண்கள் அமைப்புகள் உருவாகியுள்ளன. ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் பங்களிப்பை செய்து வருகிறது. இழந்த உரிமைகளையும், சமத்துவத்தையும் பெண்கள் மீண்டும் பெற, 20ம் நூற்றாண்டு சோஷலிசம் தன் பலவீனங்களிலிருந்து கற்றுக் கொண்டு, 21ம் நூற்றாண்டில் மாற்றம் காண முன்னைக் காட்டி லும் வீரியத்துடன் புறப்பட வேண்டியிருக்கிறது. இந்தியாவிலும், இந்த அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, பெரு மளவு பெண்களை இடதுசாரி அரசியலின் பங்கேற் பாளர்களாக மாற்றி, புரட்சிகரப் பாதையில் முன்செல்ல வேண்டும்.

One thought on “ரஷ்ய புரட்சியும் பெண்களும் …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s