பிரகாஷ் கராத்
1917ல் முதல்முறையாக, தொழிலாளி வர்க்க தலைமையில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியால், சோஷலிச கட்டமைப்பை வெற்றிகரமாக ஏற்படுத்த முடிந்தது. அத்துடன், தேசிய இன பிரச்சனைக்கு ஒரு சோஷலிச தீர்வை அடைவதற்கான பாதையை ஏற்படுத்த முடிந்தது. லெனினும், போல்ஷ்விக்கட்சியும் புரட்சி நடந்த காலத்திலேயே தேசிய இனங்களின் ஒடுக்குமுறை மற்றும் அவற்றின் சுய நிர்ணய உரிமை தொடர்பான நிலைபாட்டை உருவாக்கி இருந்தனர். தேசிய இனங்களின் சுய நிர்ணய பிரச்சினையில் பூர்ஷ்வா அணுகுமுறை தீர்வு எட்டா நிலைக்கு போய்விட்டது. தேசிய விடுதலை மற்றும் சமத்துவம் பற்றிய பூர்ஷ்வாக்களின் பார்வையும், ஏகாதிபத்தியத்தின் விளைவாக உலகம் ஒடுக்கும தேசிய இனங்கள், ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என்று பிரிந்திருந்த நிலையில், பூர்ஷ்வா பார்வைக்கு முற்றிலும் மாறான நடைமுறையும், ஒடுக்கப்பட்ட மக்களிடம் பூர்ஷ்வா நிலைப்பாடு ஏற்கத்தக்கதாக இல்லாத நிலையை உருவாக்கியிருந்தன.
தேசங்களின் சுய நிர்ணய உரிமை:
தேசிய பிரச்சினையை மார்க்சிய அணுகுமுறையை பின்பற்றி, ஜாரின் ரஷ்யாவில் ஓடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை அளிக்க போல்ஷெவிக் கட்சிக்குள் லெனின் உறுதியான நிலைபாட்டை எடுத்திருந்தார். ஜாரின் எதேச்சதிகார ஆட்சியை தூக்கி எறிய ரஷ்ய உழைக்கும் வர்க்கம், ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இன மக்களுடன் இணைய வேண்டும்.அக்டோபர் புரட்சிக்குப் பின்னர், துவக்கமாக, லெனின் சமமாக உள்ள தேசிய இனங்களின் கூட்டமைப்பு கட்டப்பட வேண்டுமென அறைகூவல் விடுத்தார். உள்நாட்டு கழகம் முடிவுக்கு வந்த பின், லெனினின் வழிகாட்டுதலுடன், போல்ஷ்விக்குகள் தேசிய பிரச்சினையில் விடுதலையிலிருந்து சமத்துவம் என்ற அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தனர் சோவியத் யூனியன் புதிய சோஷலிச அமைப்பை உருவாகிய பொழுது அது, தேசிய இன பிரச்னை தொடர்பான புதிய புரட்சிகர அணுகுமுறையை உட்கொண்டதாக இருந்தது. பூர்ஷ்வா வட்டங்களில் பேசுவது போல, தேசிய இனங்களின் விடுதலை என்று பேசினால் மட்டும் போதாது. இந்த விடுதலை தேசிய இனங்களுக்கு இடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். தேசிய இனங்களுக்கிடையே உள்ள பொருளாதார, சமூக ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்பட்டு சமத்துவத்திற்கான உண்மையான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். லெனின் காட்டிய இந்த பாதையில் சோவியத் யூனியனின் கம்யுனிஸ்ட் கட்சி செயல்பட்ட விதம் சோவியத் யூனியனின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அத்தியாயமாகும் அத்துடன், சோவியத் அரசை தோற்றுவித்த லெனின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த பாராட்டு ஆகும்.
தேசிய இனங்கள் தொடர்பான சோவியத் கொள்கையின் முக்கியத்துவம் பற்றி சோவியத் புரட்சி பற்றி எழுதியுள்ள நிலைத்த புகழ் பெற்ற வரலாற்று அறிஞர்ஈ.எச்.கார் கூறுகிறார்: “போர், புரட்சி உள்நாட்டு கலகம் இதர இடையூ றுகளுக்கு பின்னர் ஜாரின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த அ னைத்து முன்னாள், பகுதிகளையும் மறுசேர்க்கை செய்த பணியானது லெனினின் பிரமிக்கத்தக்க சாதனைகளில் முக்கியமான அம்சமாக கருத வேண்டிய ஒன்றாகும்.”
ஜாரின் சிறை வீடு
அந்த பிரமிக்கத்தக்க சாதனை என்பது என்ன? ஜாரின் ரஷ்யா பல தேசிய இனங்களின் சிறை வீடாக இருந்தது. அதில் பிரதான தேசிய இனமாக இருந்த ரஷ்ய தேசிய இனம் இதர அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்கும் இனமாக இருந்தது.ஜாரின் ஆட்சியில், மாபெரும் ரஷ்ய ஆளும் வர்க்கம் இதர தேசிய இனங்களை காலனிகளாக்கி ஒடுக்குமுறைக்கு ஆட்படுத்தியது. ரஷ்ய மாகாணங்களில் மட்டுமே தொழில்மயம் நடைபெற்றது. ரயில்வேதொழிலாளர் உள்ளிட்ட மொத்த 2.8 மில்லியன் தொழிலாளர்களில் ,2.2 மில்லியன் ரஷ்யர்கள் ஆவர். 1913 ம் ஆண்டு கணக்கின்படி, மத்திய ஆசியா மற்றும் காக்கஸ் பகுதிகளில் உள்ள ஐந்து குடியரசுகளில் மொத்தம் 30 புராதன இயந்திர ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. காலனியாக்கப்பட்ட தேசிய இனங்கள் விவசாய, மற்றும் கச்சாப்பொருட்களை அளிப்பவர்களாக இருந்தனர். அக்டோபர் புரட்ச்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை, கஜககஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானில் 18 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் ரஷ்ய நிலபிரபுக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் குலக்குகளுக்கு கொடுக்க வேண்டி இருந்தது. காலனிய ஆட்சியில் இத்தகைய பொரளாதார பின்னடைவுடன், சமூக பின்னடைவும் சேர்ந்து கொண்டது. ரஷ்ய ஆட்சியாளர்கள் இதர மக்களின் மொழி மற்றும் பண்பாடுகளை ஒடுக்கினர். ரஷ்யர்கள் அல்லாத இதர இன மக்கள் கல்வி அற்றவர்களாகவும் மருத்துவ வசதிகள் அற்றரவர்களாகவும் இருந்தனர்.
சமான தேசியங்ளைக் கொண்ட புதிய யூனியன் :
1918 முதல் 1922வரை, கடுமையான உள்நாட்டு கலகம்நடைபெற்றது. உக்ரைன் ஜியார்ஜியா , அர்மெனியா போன்ற முன்பு ஒடுக்கப்பட்ட தேசங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. 1922 ல் சோஷலிச அமைப்பின் கீழ் பல தேசங்களின் கூட்டமைப்பு தோன்றும் சூழல் உருவாகியது. பல தேசங்கள் தாமாகவே முன்வந்து இணைந்ததன் விளைவாக யு.எஸ்.எஸ்.ஆர் உருவாகியது. இந்த மாபெரும் சாதனைக்குப் பின்புலமாக தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது, அனைத்து தேசிய இனங்களுக்கும் விடுதலை அளிப்பது, தேசிய இனங்களில் உள்ள மிக சிறிய அளவில் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கும் சுய நிர்ணய உரிமை வழங்குவது என்கின்ற கொள்கையை உணர்வுபூர்வமாக போல்ஷெவிக்குகள் அமுலாக்கிய விதம் குறிப்பிடத்தக்கது.
மிகபிரம்மண்டமான இந்த பணியை லெனின் தொடர்ந்து கண்காணித்து வந்தார். 1918ல், தேசிய இனங்களின் விஷயங்களை கவனிக்க ஒரு கமிசா ர் பதவி ஏற்படுத்தப்பட்டது முதல் மக்கள் கமிசாராக நியமிக்கப்பட்டவர் ஸ்டாலின் ஆவார். லினின் வழிகாட்டுதலுடன், தேசிய இனக் கொள்கை பற்றி கட்சியின் முக்கிய பேச்சாளராக அவர் இருந்தார். தேசிய இனங்களின் மக்கள் கமிசாரியத்தின் கீழ் பல்வேறு தேசிய இனங்களின் விஷயங்களை கவனிக்க பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. மிகச் சிறிய குழுக்களான பாஷ்கிர்கள், டா ட்டர்களுக்கு என பிரிவுகள் தொடங்கப்பட்டு சுவாஷ் மொழியில் அவர்களுடைய பிரச்னைகள் பற்றி புகார் அளிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தவிர, மாவட்ட மற்றும் கிராம சோவியத்துகள் மக்கள் கூட்டங்களை நடத்தி, மிகவும் சிறிய குழுக்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில், செய்திதாள்கள் வாசிப்பது, முக்கிய தகவல்கள்,பிரகடனங்களை அவர்கள் மொழியில் வாசித்து காண்பிக்கும் பணியை மேற்கொண்டனர்.
சகாப்தம் படைத்த முன்னேற்றம்
இந்த கொள்கையின் விளைவுகள் உண்மையிலேய அற்புதமானவை. பொருளாதார, சமூக, கலாச்சார தளங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் அடைந்த முன்னேற்றம் மிக வேகமாகவும் முன் எப்போதும் காணாத விதத்திலும் இருந்தது. புதிய சோவியத் அரசு ரஷ்ய இனம் அடைந்த முன்னேற்றத்தை இத ர வளர்ச்சி அடையாத இனங்களும் அடைய உதவ வேண்டும் என்பதை தேசிய இனக் கொள்கையின் அடிநாதமாக வலியுறுத்தியது. 1940ற்குள் மத்திய ஆசிய, காகேசிய குடியரசுகள் அடைந்த முன்னேற்றம் சகாப்தம் படைத்தது. 1940 வாக்கில், தொழில் துறையில், கசகஸ்தான்,கிர்கிஸ்தான், ஜியார்ஜியாமற்றும் அர்மேனியா ரஷ்ய குடியரசுக்கு இணையாக /கூடுதலாக முன்னேறின. 1960. களில் இந்த வளர்ச்சி போக்கு பரவலாகியது. கல்வியில் மோசமாக, பின்தங்கிய நிலையில் இருந்த மத்திய ஆசிய குடியரசுகள் முன்னேற்றம் அடைந்து, பல மேற்கத்திய நாடுகளில், உயர் கல்வி பெறும் மாணவர்கள் எண்ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையில் இருந்தனர். ஆரோக்கியத்தை பொறுத்த வரை, 1940 வாக்கில், மத்திய ஆசிய குடியரசுகளில் ஆயிரம் மக்களுக்கான மருத்துவர் விகிதம் இந்தியாவில் 1956 ல் இருந்ததை விட அதிகமாக இருந்தது. சம வேலைக்கு சம கூலி என்ற கொள்கை தொடர்ந்து கூலியை சமப்படுத்துவதை உறுதி செய்தது.
கசகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான்,அசர்பெய்ஜான் ஆகிய குடியரசுகளில் வாழ்க்கை தரம் வெகுவாக உயர்ந்தது. இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது. கல்வி துறையில்; சேர்க்கை எண்ணிக்கை பல மடங்கு பெருகியது.
லெனினிய தேசிய இனக் கொள்கையால் பல தேசிய இனங்களின் மொழிகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டை மீட்டெடுத்ததை காண முடிந்தது.புரட்சிக்கு பின்னர் கிட்டத்தட்ட ஐம்பது தேசிய இனங்களுக்கு அவர்களுடைய மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் உருவாக்கப்பட்டன. சில மொழிகளுக்கு சிரில்லிக் [ரஷ்ய, ஸ்லாவோனிக் மொழிகளில் இருந்து பெறப்பட்ட] எழுத்துருவாக்கம் செய்யப்பட்டு, எழுதும் மொழியாக அவை மாற்றப்பட்டன. கல்வியாளிப்பதிலும், பல மொழிகளின் பயன்பாட்டையும், வளர்ச்சியையும் காண முடிந்தது”. அனைத்து குழந்தைகளும் முதல் வகுப்பு முதல் உயர் கல்வி வரை, தங்கள் தாய் மொழியிலேயே கல்வி கற்கும் ” கொள்கை அக்டோபர், 29,1917 அன்று வெளியிடப்பட்ட பிரகடனத்தில் உறுதி செய்யப்பட்டிருந்தது. சோவியத் யூனியனில் எந்த பகுதியாக இருப்பினும், அம்மக்கள் எவ்வளவு சிறிய எண்ணிக்கையில் இருப்பினும், தங்கள் குழந்தைகளை அவர்கள் தாய் மொழியிலேயே கல்வி கற்கும் வசதி பள்ளிகளில் இருந்தது.
லெனினின் பங்களிப்பு
சோஷலிச குடியரசுகள், சுயேச்சை அதிகாரம் படைத்த குடியரசுகள்,சிறிய தேசிய இனங்களுக்கும் சிறுபான்மை இகுழுக்களுக்கும்சுயேட்சையான,பகுதிகள் – என தன்னார்வ கூட்டமைப்பு மூலம் சோவியத் யூனியன் உருவாகியது இந்த உருவாக்கம் தேசிய இனக் கேள்வி பற்றிய மார்க்சிீய புரிதலின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. ஒரு தேசிய இனம் மற்ற தேசிய இனங்களை ஒடுக்கும் பொழுது ஒரு நாட்டின் உழைக்கும் வர்க்கம் விடுதலை அடைய முடியாது என்பதே இதன் அடிப்படை ஆகும். தேசிய இனம் பற்றிய விஷயத்தில் லெனினின் ஆழ்ந்த பார்வையும், புரிதலும் சோவியத் யூனியனை உருவாக்க நேரடி பங்களிப்பு செய்துள்ளது. அது மட்டுமின்றி, சர்வதேசிய அளவில், ஏகாதிபாத்தியம் மற்றும் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான உழைக்கும் வர்க்க போராட்டங்களில், தேசிய, காலனியாதிக்கத்திற்குட்பட்ட மக்களின் போராட்டங்கள் கேந்திரமான நேச சக்தியாக பார்க்கப்பட வேண்டுமென்ற முக்கியமான கோட்பாட்டையும் தந்துள்ளது.1920ல் லெனின் கம்யுநிஸ்ட் இண்டர்னஷனலின் இரண்டாவது மாநாட்டில் சமர்ப்பித்த தேசிய மற்றும் காலனியாதிக்கம் பற்றிய ஆய்வறிக்கை என்பது லெனின் உயர்த்திப் பிடித்த சர்வதேசெய கோட்பாடு மற்றும் தேசிய விடுதலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.
லெனினைப் பொறுத்தவரை, சுய நிர்ணயம் என்பது வெறும் எட்டில் உள்ள உரிமை அல்ல. பிரத்யேக நிலைமைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைபடுத்தப்பட வேண்டும். எனவே, அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏற்ப சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியம். உழைக்கும் வர்க்கத்தை பொறுத்தவரை, சுய நிர்ணயம் என்பது அவர்களின் வர்க்க நலனடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, அது ஒரே மாதிரியாக, பூர்ஷ்வக்களுக்கு வால் பிடிக்கும் தன்மையில் இருக்காது. காலனிய ஒடுக்குமுறைக்கு எதிரான, தேசிய விடுதலை என்கிற வரலாற்று கால கட்டத்தில்,நிலப்பிரபுக்களையும், அந்நிய ஒடுக்குமுறையாளர்களையும் எதிர்க்கும் போராட்டத்தில், உழைக்கும் வர்க்கம் பூர்ஷ்வாக்களுடன் இணைந்து நிற்கும். தேச விடுதலை சமூக வர்க்கங்கள், வேறுபாடுகளை உருவாக்க வழி வகை செய்து கொடுத்து, வர்க்க போராட்டத்தை முன்னெடுத்து செல்ல எதுவாக அமையும்.
அடுத்த கட்டமாக, பூர்ஷ்வா அரசிலிருந்து, உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தை நோக்கி செல்கையில், உழைக்கும் வர்க்கம் அனைத்து தேசங்களின் உழைக்கும் மக்களுடனும் ஒற்றுமை வேண்டும் என்பதை வலியுறுத்தும். தேசம் செல்லும் வழியை தீர்மானிக்கும் ஒரே சக்தியாக, பூர்ஷ்வாக்கள் இருந்து தேசத்தின் எதிர்காலத்தை தங்கள்கைகளில் வைத்திருக்க முடியாது. சோஷலிச கால கட்டத்தில், சர்வதேச சோஷலிச நலன்களுக்கு உதவுவதாக இ ருந்தால் மட்டுமே, உழைக்கும் வர்க்கம் சுய நிர்ணய உரிமையை நிலை நாட்டும்.
ரஷ்யர்கள் உயர்வானவர் என்ற நிலைக்கு எதிரான எச்சரிக்கை
ரஷ்யர்கள் தான் உயர்வானவர்கள் என்ற இன கருத்தாக்கத்தை எதிர்த்து லெனின் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்தார். தமது கடைசி கலத்தல், கட்சிக்குள்ளேயும், சமூகத்திலும் அத்தகைய மேலாதிக்கத்தை எதிர்த்து போராடினார். அது உழைக்கும் வர்க்க புரட்சியாளர்கள் அனைவரும் கற்க வேண்டிய பாடம் ஆகும்.
1920ல் உக்ரைனில், மீண்டும் சோவியத் அதிகாரம் நிலைநாட்டப்பட்ட பொழுது “உக்ரைனில் சோவியத் அதிகாரம்” என்ற தீர்மானத்தின் வரைவை சிறப்பு கட்சி மாநாட்டில் முன்வைத்தார். உக்ரைன் மொழி இரண்டாம் இடத்திற்கு தள்ள மேற்கொள்ளப்பட்ட செயற்கையான முயற்சிகள் அதில் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. அனைத்து அதிகாரிகளுக்கும் உக்ரைன் மொழியில் பேச தெரிந்திருக்க வேண்டுமெனக் கோரியது.
பின்னாளில் ஜார்ஜியாவில் சில பிரச்னைகளை கையாண்ட விதம் சரி இல்லை என் தனது நெருங்கிய சக ஊழியர்களான ஒர்ஜோநிகிட்சே. மற்றும் ஸ்டாலினை லெனின் திட்டிய சம்பவம் பரவலாக அறியப்பட்ட ஒன்று. ரஷ்ய மேலாதிக்க உணர்வை அவர்கள் வெளிப்படுத்தியதற்காக, அவர்களை லெனின் கடுமையாக விமர்சித்தார். செர்சின்ச்கி போன்ற ரஷ்யர்கள் அல்லாத போல்ஷெவிக் தலைவர்கள் கூட அத்தகைய உணர்வை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
புதிய பிரச்னைகளும், திரிபுகளும்
முந்தைய சில பத்தாண்டுகளில் செய்த நூதனமான சாதனைகளை தொடர்ந்து எடுத்து செல்ல இயலவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. தொடர்ந்து கண்காணிப்பு இல்லாமல், போராட்டங்கள் நடத்தாமல் இருந்தால், ரஷ்ய மேலாதிக்க, மையப்படுத்தும் வளர்ச்சிப் போக்கு தலைதூக்கும் என்று லெனின் நினைத்தது சில விஷயங்களில் உண்மையாகியது. முப்பதுகள், நாற்பதுகளில் நிலவிய அசாதாரண சூழல், மிக அதிக மத்தியத்துவம் நாஜிக்களின் படையெடுப்பின் விளைவுகளை எதிர்க்க வேண்டிய நிலை -ஆகிய அனைத்தும், சமத்துவத்தை வலியுறுத்தும் தேசிய இனக் கொள்கையை பின்னுக்கு தள்ளியது. அதிகார போக்கும், சோஷலிச ஜனநாயகத்தை விரிவடையச் செய்யாமல் இருந்ததும் பல குடியரசுகளிலும், சுயாட்சி பகுதிகளிலும் சமூக பிரக்ஞையையும் வளர்ச்சி தொடர்பான விஷயங்களிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தின. பொருளாதார தளத்தில் நிலவிய தேக்கம், குறிப்பாக, எழுபதுகளின் நடுவில் ஏற்பட்டதென்பது அதிருப்தியை ஏற்படுத்தியது. முன்பு பின்தங்கிய நிலையில் இருந்த அனைத்து தேசிய இனங்களிலும், ஐம்பது முதல் அறுபது ஆண்டுகள் வரையிலான பொருளாதார, சமூக முன்னேற்றம் புதிய வர்க்கங்களை யும், அறிவுஜீவிகளின் வளர்ச்சியையும் தோற்றுவித்திருந்தது. சோவியத் யூனியனில் ஒருங்கிணைப்பு . ஒரு புறம் வலுபெற்றது. அத்துடன் தேசிய உணர்வும் தலை தூக்கியது. தங்களது கலாச்சார, தேசிய பாரம்பரியத்தை கண்டுபிடித்து, தேசிய வாழ்வில் தலை பங்கு வகிக்க வேண்டுமென் புதிதாக கல்வி பெற்ற பிரிவினர் எண்ணியது இயல்பான் ஒன்று. தேவைகளையும்,அபிலாஷைகளையும் சோஷ்லிச, ஜனநாயக அடிப்படையில் இணைத்து கொண்டு போவதில் தோல்வி ஏற்பட்டது.
உலக புரட்சி முறை, தேசியத்தின் பங்கு பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருந்த லெனின், எச்சரிக்கை செய்கிறார்:”உலக அளவில், தொழிலாளி வர்க்க எதேச்சாதிகாரம் அமைந்த பின்னரும் நீண்ட காலம் தேசியமற்றும் அரசு வேறுபாடுகள் தொடர்ந்து இருக்கும்.” ஆனால், சோவியத் யூனியனில் கம்யுனிஸ்ட் தலைவர்களும், சோவியத் கம்யுனிஸ்ட் கட்சியும் தேசிய இன பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டதென்றும் முடிவுற்றது என்ற மேம்போக்கான நிலைப்பாட்டை எடுத்தனர். ஆக்கத்திறன் மிக்க லெனினிய அணுகுமுறை உறைந்து செயலிழக்கச்செய்யப்பட்டதால் [ossification] புதிய வளர்ச்சிப் போக்குகள் மற்றும் பிரச்னைகளை எதிர் கொள்ளும் வகையில் புதிய முன்முயற்சிகளையும் ,நடவடிக்கைகளையும் எடுப்பது நிகழவில்லை. பல குடியரசுகளில் பெரும் அளவில் நடந்த குடிபெயர்வுகளும், பல தேசிய இனங்கள் புதிய பகுதிகளில் மையங்களில் கலந்து பழகியதும், அவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் அமைதியான, இசைந்த வாழ்வை மேற்கொண்டதை வெளிப்படுத்தியது. ஆனால், சோவியத் ஒன்றியத்தின் இறுதி இருபது ஆண்டுகளில் நிலவிய பொருளாதார தேக்கம் , தேசிய அபிலாஷைகள் தலை தூக்குதல் ஆகியவற்றால், புதிய உரசல்கள் வளர்ந்தான.. சோவியத் தேசப்பற்றிற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், தேசிய உணர்வு நிலைக்கு ஏற்ப இல்லாததால், பல திரிபுகளும், எரிச்சல்களும் தோன்றின. தத்துவார்த்த கருத்துக்கள் அரிக்கப்பட்டு, அந்த வெற்றிடத்தை தேசிய கருத்துக்கள் நிரப்பின.
நிலைத்தகு கொடை
அக்டோபர் புரட்சியும், உலகின் முதல் சோஷலிச அரசு கொண்டு வந்த தேசிய இனக் கொள்கையும் நீடித்து நிலைக்கும் கொடைகளாகும். விடுதலை அடைநத முன்னாள் காலனி நாடுகலின் கொள்கைகள் மீதும் தேசிய இயக்கங்களின் மீதும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை இருபதாம் நூற்றாண்டின் வரலாறும் தேசிய இயக்கங்களும் வெளிப்படுத்துகின்றன. இந்தியாவும் சிக்கலான, பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு. அக்டோபர் சோஷலிச புரட்ச்சிக்குப் பின்னர் சோவியத் யூனியன் கடைபிடித்த பிரத்ஏகமான தேசிய இனக் கொள்கையின் அனுபவங்கள் படித்து புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. வருகின்ற காலத்தில், உலக சோஷலிச சக்திகளை முன்னெடுத்து செல்வதும், வியுக மாற்றங்களை மேற்கொள்வதும் கடுமையான, சிக்கலான பணியாகும். அதை செய்வதற்கு, தேசிய பிரச்னையில் லெனின் அவர்களின் கொள்கையிலிருந்து நல்ல பாடங்களை கற்பதுடன், இந்த முக்கிய பிரச்னையில், மார்க்சிீய லெனினிய நிலைபாட்டை மேலும் உருவாகுவது அவசியமாகும்.
Leave a Reply