காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரில் விவசாயி களை ஈர்க்க காங்கிரஸ் கட்சி ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தது. ஆனால் நாடு விடுதலை அடைந்த பின்னர் நீர்த்துப்போன நில உச்சவரம்பு சட்டங்கள் பெரும்பாலும் அமலாக வில்லை. (விதி விலக்கு: இடதுசாரிகள் தலைமையிலான மாநில அரசுகள்) 1950 களின் இறுதியில் நாடு முழுவதும் சுமார் 6 கோடியே 3 லட்சம் ஏக்கர் நிலம் உச்சவரம்புக்கு மேல் உள்ளதாக பேராசிரியர் மகாலாநோபிஸ் அறிக்கை தெளிவாக்கியது.
இன்றுவரை இதில் பத்தில் ஒரு பங்கு கூட கையகப்படுத்தப்பட்டு ஏழை மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்யப்பட வில்லை. நில ஏகபோகம் தொடர்வது இந்திய முதலாளிவர்க்கம் – குறிப்பாக அதன் பெரு முதலாளித்தலைமை – நிலப்பிரபுக்களுடன் செய்து கொண்டுள்ள சமரசத்திற்கான முக்கிய வெளிப்பாடு.
கிராமப்புறங்களிலும் விவசாயத்திலும் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கட்சி திட்டம் கவனத்தில் கொள்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் கிராமப்புறங்களிலும் குறிப்பாக விவசாயத்திலும் முதலாளித்துவ உறவுகள் வலுப்பெற்றிருக்கின்றன.
1960-ளில் உணவு நெருக்கடி ஏற்பட்ட பின்புலத்தில் பசுமை புரட்சி என்ற பெயரில் புதிய வேளாண் கொள்கைகள் அமலுக்கு வந்தன.
நவீன தொழில் நுட்பத்தை கொண்டுவந்து நிலப்பிரபுக்களையும் பணக்கார விவசாயிகளை யும் ஊக்கம் அளித்து விவசாயத்தை (முதலாளித்துவ உறவுகளின் அடிப்படையில்) நவீனப்படுத்துவதே பசுமை புரட்சியின் வர்க்க உள்ளடக்கம். “உழுபவனுக்கு நிலம்” உள்ளிட்ட நிலச்சீர்திருத்த முழக்கங்கள் பின்னுக்குப் போயின. இந்த மாற்றத்தில் அரசு கேந்திரமான பங்கு வகித்தது.
உயர்மகசூல் விதைகள், மான்ய விலை யில் உரம் உள்ளிட்ட ரசாயனங்கள் பயன்பாடு, பாசன வசதி உத்தரவாதம், அரசின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகள் மூலம் தொழில்நுட்ப உதவி, நாட்டுடைமையாக் கப்பட்ட வங்கி அமைப்பின் மூலம் கடன் வசதி ஆகியவற்றை அரசு பெருவிவசாயிகளுக்கு கொண்டு சென்றது. அவர்கள் மூலம் இதர விவசாயிக ளையும் நவீன உற்பத்திக்கு ஈர்த்தது. “பசுமை புரட்சி” என்று அறியப் பட்ட இந்த நடவடிக்கைகள் வேளாண் உற்பத்தி திறனை உயர்த்தவும் உணவு தானிய உற்பத்தி மக்கள் தொகையை விட வேகமாக அதிகரித் திடவும் வழிவகுத்தன. மகசூல் உயர்ந்து, உற்பத்தி ஒருபுறம் பெருகினாலும், இதன் முதலாளித்துவ உள்ளடக்கத்தை கட்சி திட்டம் கறாராக வரை யறுத்தது.
1980 களின் பிற்பகுதியில் தொடங்கி அரசு பின்பற்றி வந்த முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் முரண்பாடுகளின் விளைவாக வேளாண் துறையில் அரசு முதலீடு சரியத்துவங்கியது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஏற்பட்ட உள் நாட்டு பொருளாதார நெருக்கடி, உலகளவில் சோசலிசம் பின்னுக்குத் தள்ளப்பட்ட பன்னாட்டு சூழல், இவையிரண்டும் இந்திய ஆளும் வர்க்கங் களை நவீன தாராளமய கொள்கைகளுக்கு இட்டுச் சென்றது. இதன் தொடர்ச்சிதான் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வரும் தாராளமய, தனியார்மய உலகமய கொள்கைகள். இக்கொள்கைகள் வேளாண் துறையில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளன.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளை கடந்த பதினைந்து ஆண்டுகளில் தற்கொலைக்கு தள்ளியுள்ளன. 2000 – ஆண்டில் திட்டம் சமகாலப்படுத்தப் பட்ட பொழுது, பத்தாண்டு காலம் இக்கொள் கைகள் அமலாக்கப்பட்டதன் விளைவுகளை கட்சி திட்டம் சரியாக மதிப்பீடு செய்தது. முதலாளித்துவ உறவுகள் வேளாண் துறையில் கணிசமாக வளர்ந்துள்ளதையும், அந்நிய கம்பனிகள் முதல் முறையாக நேரடியான தாக்கத்தை நமது வேளாண்துறையில் ஏற்படுத்திவருவதையும் திட்டம் தெளிவாகக் குறிப்பிட்டது.
அதே சமயம், அனைத்துப்பகுதி விவசாயி களும் வேளாண் நெருக்கடியில் வேறுபாடின்றி பாதிக்கப்படவில்லை. ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் அரசின் வேளாண் கொள் கைகளால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்
பணக்கார விவசாயிகள் அரசின் கொள்கைகள் காரணமாக ஓரளவு பயன்பெற்றிருந்தாலும், அரசின் கொள் கைகள் அவர்களில் பலரையும் பாதித்துள்ளது என்பதையும் அவர்களையும் ஆளும் வர்க்கங் களுக்கு எதிராகத் திரட்டமுடியும்.
கணிச மான நிலங்களை கையில் வைத்துக்கொண்டும், பல நவீன உற்பத்திகருவிகளிலும் ஏகபோக வலுப் பெற்றும், கூட்டுறவு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு இயந்திரத்தின் பல்வேறு பகுதிகள் இவற்றையும் இயக்குபவர்களாகவும் கிராமப்புறங்களில் பெரும் நிலப்பிரபுக்கள், பெரு முதலாளித்துவ விவசாயிகள் கொண்ட ஒரு ஆளும் வர்க்கம் உருவாகியுள்ளதை திட்டம் பதிவு செய்தது.
திட்டம் அங்கீகரிக்கப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அண்மையில் அரசியல் தலைமைக்குழு அமைத்த வேளாண் துறையில் நிலவும் வர்க்க முரண்பாடுகள் குறித்த ஆய்வுக்குழுவும் இந்த நிர்ணயிப்பை உறுதி செய் துள்ளன.
இந்த ஆளும் வர்க்கம் கிராமங்களில் சாதி ஆதிக்க பாதுகாவலனாகவும், பாலின ஒடுக்கு முறையை பராமரிக்கும் வண்ணமும் செயல்பட்டு வருவதை எதிர்த்தும் பாலின மற்றும் சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் நடத்த வேண்டிய போராட்டங்கள் மக்கள் ஜனநாயக முன்னணி அமைக்கும் பணியின் பகுதியாகும்.
கிராமப் புற செல்வந்தர்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் பொருளாதார மட்டத்தில் மட்டும் அல்ல, பழங்குடி மக்கள், தலித்துகள், பெண்கள் உரிமை பாதுகாப்பு, விடுதலை ஆகியவற்றுக்கான அரசியல், சமூக தளங்களிலும் நடத்தப்பட வேண்டும்.
மக்கள் ஜனநாயகப்புரட்சி ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், ஏகபோக முதலாளிவர்க்கம் ஆகிய மூன்று எதிரிகளை வீழ்த்தும் போராட்டம் என்பதையும் இதன் அச்சாணி தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான தொழிலாளி – விவசாயி கூட்டணி என்பதையும், இந்த வர்க்கக் கூட்டணியின் மிகவும் நம்பகமான ஆணிவேர் ஏழை விவசாயிகள் மற்றும் வேளாண் தொழி லாளிகள் உள்ளிட்ட கிராமப்புற தொழிலாளி கள் என்றும் திட்டம் நமக்கு உணர்த்துகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 4

One response to “கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 4”
-
[…] […]
LikeLike
Leave a Reply