குதிரைக்கு முன்பாக வண்டியைப் பூட்ட முடியாது …


பிரகாஷ் காரத்

நேர்காணல்: இரா.சிந்தன்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி யுள்ளன. உத்தரபிரதேசத் தேர்தலில் பாஜக அடைந்துள்ள வெற்றியை எப்படிப் பார்க் கிறீர்கள்?
2014 மக்களவைத் தேர்தலை பாஜக எதிர் கொண்டதை கவனித்தால், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் முசாபர் நகர் உள்ளிட்ட இடங்களில் மதவாத வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. அதில் பாஜக பலனடைந்தது. 2012 -ம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் தொடர்ச் சியாக மத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் பட்டன. அவற்றில் ஆர்எஸ்எஸ் மற்றும் பரிவார அமைப்புகளுக்குத் தொடர்பிருந்தது. முசாபர் நகர் உட்பட சுமார் 40க்கும் அதிகமான இந்த வன் முறைகள், உ.பி., ஊரகப் பகுதிகளிலும் நடை பெற்றதை கவனிக்க வேண்டும். ஊரகப் பகுதி களில் இதற்கு முன்பாக கலவரங்கள் நடை பெற்றதில்லை.

மேலும், மோடி ‘வளர்ச்சியின்’ பிம்பமாக முன்நிறுத்தப்பட்டார். அனைத்து சாதியைச் சேர்ந்த இளைஞர்களிடம் இந்த பிரச்சாரத்திற்கு கவனம் கிடைத்தது. இந்த இரண்டும் இணைந்த போது அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. சட்ட மன்றத் தேர்தலில் அந்தப் போக்கு தொடராது என வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தொடர்ந்துள்ளது. இந்தியத் தேர்தல் முறையில் ஒரு கட்சி 35 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு கள் பெற்றாலே பெரும்பான்மை கிடைத்துவிடும். உத்தரப் பிரதேசத்தில் பாஜக சுமார் 40 சதவீத வாக்குகளைப் பெற்றது.
பாஜக தனது பிரச்சாரத்தில் இந்து -முஸ்லிம் வெறுப்பை தொடர்ந்து விதைத்தது. மோடியும், மத்திய அமைச்சர்களும் தொடங்கி எல்லோருமே பேசினார்கள். சாதி உணர்வுகளை மிகத் திட்ட மிட்ட வகையில் பயன்படுத்தினார்கள். யாதவ் அல்லாத பிற்படுத்தபப்ட்ட சாதிகள், யாதவ் அல்லாத தலித்துகள் மற்றும் உயர்சாதிகளின் ஆதரவுகளைப் பெற்றார்கள். சிலர் கோருவதைப் போல பாஜக சாதி உணர்வுகளை மட்டுப்படுத்த வில்லை; மாறாக சாதி உணர்வுகளைப் பயன் படுத்திக் கொண்டார்கள்.

மோடியை முன்நிறுத்தித்தானே பாஜக வின் பிரச்சாரம் அமைந்தது?
உத்தரப் பிரதேச மக்கள் அதற்கு காது கொடுத் துள்ளனர். மோடியை இந்து தேசியவாதத்தின் பிரதிநிதியாகப் பார்க்கிறார்கள். அப்படி அவரை முன்நிறுத்தியதற்கு வாக்குகள் கிடைத்துள்ளன. உத்தரப் பிரதேசம் நிர்வாக அடிப்படையிலான மாநிலம். நான் தமிழன்; நான் பஞ்சாபி என்று சொல்வதைப் போல நான் உத்தரப் பிரதேசத்த வன் என்ற உணர்வு அங்கே இல்லை.

உ.பி. மாநிலத்திற்கு பிராந்திய அடையாளம் இல்லை. உ.பி. மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சி களும் கூட தங்களை இந்தியத் தலைவர்களா கவே முன்நிறுத்திக் கொள்கிறார்கள். எனவே இந்து மற்றும் தேசியவாதம் ஆகிய முழக்கங் களுக்கு வரவேற்புக் கிடைத்திருக்கிறது. பாஜக வின் முழக்கத்திற்கு மாற்றான ஒரு முழக்கத்தை சமாஜ்வாதியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ முன் நிறுத்த முடியவில்லை.

இந்த சூழலில் வகுப்புவாதத்தை எதிர் கொண்டு வீழ்த்த, மகா கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை பலரும் வெளிப்படுத்துகிறார்கள் அல்லவா?
வகுப்புவாதத்தை மட்டுமல்ல, தெளிவான தத்துவப் பின்னணியோடு இயக்கப்படும் ஒரு கட்சியையும் அதன் கொள்கையையும் எதிர்த்து வீழ்த்தவேண்டும். சில கட்சிகள் ஒரே மேடையில் நின்றால் மட்டும் அது சாத்தியமாகாது. இந்துத் துவா தத்துவத்தின் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்தவேண்டும். அதற்கு எதிரான தெளிவான தத்துவப் பார்வையை முன்நிறுத்த வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் உள்ள கட்சி களிடம் அத்தகைய பார்வை இல்லை. தத்துவம் மட்டுமல்ல; ஒரு மாற்றுத் திட்டமோ கொள்கை களோ கூட இல்லை.

மோடியின் செல்லா நோட்டு அறிவிப்பின் காரணமாக மக்கள் அவதியுற்றார்கள். சமாஜ்வா தியும், பகுஜன் சமாஜ் கட்சியும் நாடாளுமன்றத் தில் அதனை எதிர்த்தார்கள். அதே சமயம் மக்களைத் திரட்டிப் போராடவோ, அம்பலப்படுத்தவோ இல்லை. இப்படி குதிரைக்கு முன் வண்டியைக் கட்டி பயணிக்க முடியாது.

பாஜகவின் அரசியலை எதிர் கொள்ள எத்தகைய அணி அவசியம்?
பாஜகவின் கொள்கைகளால் மக்கள் பாதிக் கப்படுகிறார்கள். இத்தகைய கொள்கைகளுக்கு எதிராகப் போராடவேண்டும். கொள்கைகளின் அடிப்படியிலான எதிர்ப்பின் அடிப்படையில் ஒற்றுமை உருவாக வேண்டும். யாரெல்லாம் அப்படி இணைவார்களென்று பார்க்கலாம்.
அப்படி அல்லாமல் ஒரு ஒற்றுமை சாத்திய மில்லை. பாஜக அல்லாத கட்சிகளெல்லாம் ஒன்றுசேர வேண்டுமென்றால் திமுகவும் அதிமுக வும், திரிணாமுலும், மார்க்சிஸ்ட் கட்சியும், காங்கிரசும், பிஜூ ஜனதாதளமும் இணைந்து ஓரணியில் நிற்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத் திலும் உள்ள சூழல்கள் வேறு வேறு. இதுவும் அதுவும் சேரவே கூடாதென்று சொல்லவில்லை. ஆனால் எந்த இலக்கினை நோக்கி? என்பது மிக முக்கியம்.
இன்று பாஜக முன்னெடுக்கும் பொருளா தாரக் கொள்கைகள் காங்கிரசால் தொடங்கி வைக்கப்பட்டவை. ஆதார் கட்டாயமாக்குவதற்கு காங்கிரஸ் தொடங்கியது. அப்போது மோடி எதிர்த்தார்; இப்போது முன்னெடுக்கிறார். பொதுத்துறை பங்குகளை விற்பதும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடும் காங்கிரஸ் கொண்டுவந்தது. அப்படி இருந்துகொண்டு நான் பாஜகவை எதிர்க்கிறேன் என்று சொன்னால் மக்கள் எப்படி நம்புவார்கள்?

உத்தரப் பிரதேசத்தில் பாஜக யோகி ஆதித்யநாத்-ஐ நியமித்ததும், மதச் சார் பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றுபட மார்க் சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்த தல்லவா?

உத்தரப் பிரதேசத்தில் தாக்குதல் தொடங்கி யிருக்கிறது. அதற்கு எதிரான ஒற்றுமை அவசியம். யோகி அரசின் முடிவுகளால் சாமானிய மக்கள் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. சிறு பான்மையினர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந் துள்ளனர். கள அளவில் இதற்கான எதிர்ப்பைக் கட்டமைக்க வேண்டும். ஒன்றுபட்ட எதிர்ப்பு அவசியம். இது தேர்தலுக்கான ஒற்றுமை அல்ல. இடதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்துவதைப் போல, ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும், பாஜகவின் சித்தாந்தத்தையும் – தேர்தல் அணி அமைப்பதன் மூலம் மட்டும் எதிர்கொள்ள முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s