பிரகாஷ் காரத்
வீடியோ: https://youtu.be/EAy2-71_oh8
தோழர்களே! இன்று இந்தியாவின் சாதிய சமூக அமைப்பு பற்றி விவாதிக்கவுள்ளோம். சாதிய சமூக அமைப்புமுறை, இந்திய துணைக் கண்டத்தில் (இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், இலங்கை, நேபாளம்) மட்டுமே காணப் படுகிறது.
வேறெங்கும் காணாத சாதிச் சமூகம்
எல்லா சமூகத்திலும் அதிகாரப் படிநிலை களும், அடுக்கமைவுகளும் இருக்கின்றன. பொது வாக அவை வர்க்கம் சார்ந்ததாக இருக்கும். அதற் குள்ளாக வேறு சமூகப் பிரிவுகளும், அடுக்கு களும் காணப்படுகின்றன. இந்தியச் சமூக அமைப்பு முறையில் காணப்படும் விசித்திரம் என்ன வென்றால், வேலைப்பிரிவினையாகத் தொடங் கிய சமூகப் படிநிலைகள், பல நூற்றாண்டு களாக வடிவமைவு பெற்று, ஒரு அதிகாரப் படிநிலை அமைப்பாக கெட்டிப்பட்டன. சந்தேகத்திற்கிடமின்றி அவை பிறப்பின் அடிப் படையிலானது. சாதிய அமைப்பு, சமூகவியலா ளர்கள் குறிப்பிடும் அகமண முறையைக் கொண்டு பராமரிக்கப்படுகிறது. கண்டிப்பான விதத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த சமூக அமைப்பு முறையினை மத நிறுவனம் அங்கீகரித்து வளர்த் தெடுக்கிறது. இதுதான் சாதி அமைப்புமுறை என்று அழைக்கப்படுகிறது.
தங்கள் சொந்த சமூகங்களோடு ஒப்பிட்டு, இந்திய சாதிச் சமூக அமைப்பினைப் புரிந்து கொள்ள இந்தியாவுக்கு வெளியிலிருந்து பலரும் முயன்றுள்ளனர். அவர்கள் அனைவருமே இந்தச் சமூக அமைப்புமுறை இந்தியாவில் மட்டுமே காணப்படுவதை அங்கீகரிக்கின்றனர். உலகின் பலபகுதிகளிலும் வெவ்வேறு பழங்குடி சமூக அமைப்புக்கள் காணப்படுகின்றன. எனினும், சாதி அமைப்பு, இந்தியா தவிர வேறெங்கும் காணாத ஒன்றாகும்.
சாதி எங்கிருந்து உருவாகி, நூற்றாண்டுகளாகப் பரிணமித்தது என்பது பற்றி பல விவாதங்களும், ஆய்வுகளும் நடைபெற்றுவருகின்றன. சிலர் 2000 முதல் 2500 ஆண்டுகள் பழமையானதென்கின்ற னர். வேதகால இலக்கியங்களில் ஆதாரங்களைத் தேடுகின்றனர். நாம் இங்கே அதை குறித்துப் பேசவில்லை. சாதியையும், சாதி அமைப்புமுறை யினை மார்க்சிய நோக்கில் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையில் அதனை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை வகுத்துக்கொள்ள வேண்டும்.
மார்க்சிய ஆய்வின் அவசியம்:
சாதியை, மார்க்சிய நோக்கில் புரிந்துகொள்வ தும், மார்க்சிய அடிப்படையில் எதிர்கொள்வதும் ஏன் அவசியமாகிறது?.
நாம் இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதற்காக செயல்படுகிறோம். அதற் காக தொழிலாளி, விவசாயி, விவசாயத் தொழி லாளி மற்றும் இதர பகுதி உழைக்கும் மக்களைத் திரட்ட வேண்டும். அவர்கள் நமது சமூகத்தில் வர்க்கமாக மட்டும் வாழவில்லை. வர்க்க மூலங் களையும், வர்க்க பண்பு நலன்களையும் தாண்டி சாதிய அடையாளத்தையும் கொண்டுள்ளார் கள். அதனையும் கணக்கிக் கொண்டுதான், சரியான உத்தியை வந்தடைய முடியும்.
உதாரணமாக விவசாயத் தொழிலாளர் பிரிவினரை, அதாவது கிராமப்புற பாட்டாளிவர்க்கத்தினரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பெரும்பாலும் தலித் அல்லது மிகவும் பிற்பட்ட சாதியினராகவும் உள்ளனர். அவர்களின் சமூக பொருளாதார நிலைமைகளை கணக்கில் கொள்ளாமல், நம்மால் அவர்களைத் திரட்ட முடியாது. அவர்கள் மக்கள் ஜனநாயக முன்னணியின் அடிப்படை வர்க்கங்களாவர். சாதி மற்றும் சாதிய அமைப்பு முறை குறித்த அறிவியல்பூர்வமான புரிதலொடு செயல்பட்டு அவர்களைத் திரட்ட வேண்டும்.
அடித்தளமா, மேல்கட்டுமானமா?
இந்தியாவில் சாதியைப் பற்றி விவாதிக்கும் போது, கடந்தகால அனுபவங்களையும் கணக்கி லெடுக்க வேண்டும். மார்க்சிய ஆய்வு முறையில் கடந்த காலத்தில் காணப்பட்ட ஒரு போக்கு, புரிதல் – சமூக அடித்தளத்தின் மேல்கட்டு மானத்தில் ஒன்றே சாதி என்பதாகும். அடித்தளம் – மேல்கட்டுமானம் ஆகிய கருத்தாக்கங்களை நீங்கள் அறிவீர்கள். அடித்தளம் என்பது உற் பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் உள்ளிட்ட பொருள்முதல்வாத அஸ்திவாரமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மேல் கட்டுமானங்கள் இயங்குகின்றன. உதாரணமாக ஒரு நிலப்பிரபுத்துவ அமைப்பில் அதற்கே உரித் தான நீதியமைப்பும், கலாச்சார உறவுகளும், அரசியல் அமைப்பும் இயங்குகின்றன. முதலாளித்துவ உற்பத்தி முறை ஒரு சமூகத்தில் ஆதிக்கம் பெறுகின்ற போது, அதற்கேற்ப மேல்கட்டுமானத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. அடித்தளமும் மேற்கட்டு மானமும் ஒன்றை ஒன்று இயங்கியல் அடிப்படை யில் சார்ந்திருக்கிறது. அடித்தளத்தில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, மேல்கட்டுமானத்தில் மாற்றங்கள் ஏற்படும். சிலசமயம், மேற்கட்டு மானத்தில் காணப்படும் நகர்வுகள், அடித்தளத் தில் ஏற்படும் மாற்றங்களுக்கு தூண்டுகோலாக அமைந்திடும்.
அடித்தளத்தை மாற்றியமைப்பதன் மூலம் தான் – அதாவது உற்பத்தியின் பொருள்முதல் அடித்தளங்களை மாற்றியமைக்கும்போதுதான் – மேல்கட்டுமானத்தை மாற்றியமைக்க முடியும் என்ற பொதுவான புரிதல் அடிப்படையில் சாதி பார்க்கப்பட்டது. அதாவது, பொருள்முதல்வாத அடித்தளத்தில் மாற்றம் ஏற்பட்ட பின்னர், சாதி சமூகத்திலிருந்து தானாக மறைந்துவிடும் என்ற மதிப்பீடு நிலவியது. இந்தியாவில் மார்க்சிய நோக்கிலிருந்து சாதிகுறித்து எழுதப்பட்ட பல ஆய்வுகளில் இந்த போக்கு காணப்பட்டது.
பொதுவான அந்தப் புரிதல் எங்கிருந்து எழுந்ததெனப் பார்க்க வேண்டும். சாதியும் சாதிய உறவு களும் முந்தைய சமூகத்தின் மிச்ச சொச்சங்கள். அதாவது நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தின் அரை நிலப்பிரபுத்துவ மிச்சங்கள். நாம் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உற்பத்திமுறைகளை ஒழித்திட உழைக்கிறோம். அரை நிலப்பிரபுத்துவ உறவுகளை ஒழித்து சோசலிசத்தை நோக்கியும் பயணப்பட வேண் டும். அதில், ஜனநாயக புரட்சியை நிறைவேற்றுவ தானது – சாதி உட்பட நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்கள் அனைத்தையும் முடிவுகட்டுவதற்கு இட்டுச்செல்லும். எனவே, நாம் விவசாயப் புரட்சியில் கவனம் செலுத்தலாம். இவ்வாறு சொல்வதன் பொருள் நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பது; தீவிரமான நிலச்சீர்திருத்தம் செய்வது. அவற்றைச் செய்துவிட்டால், கிராமப்புற சமூக அமைப்பை அது மாற்றிவிடும். எனவே அது சாதி அமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற பொருள்வருகிறது.
இவ்வாறான புரிதல் ஒரு நிர்ணயவாத (deterministic) அணுகுமுறையை நோக்கித் தள்ளியது. அது முடிந்தால், இதுவும் முடிந்துவிடும் என நினைக்கச் செய்தது. சாதி ஒழிப்பு இயக்கத்தை வளர்த்தெடுப்பதையும், சாதி ஒழிப்பு உணர்வை மக்களிடம் உருவாக்குவதையும், சாதி ஒழிப்புக் கான குறிப்பான தலையீட்டைச் செய்வதையும் – தாமதிக்கச் செய்தது அல்லது தள்ளிவைக்கச் செய்தது. முதலில் அடிப்படையான பணிகளை முடித்தோமானால், சாதி ஒழிந்துவிடும் என் கிற சிந்தனைக்கு சென்றதால், அது புரிதலி லேயே போதாமையை உருவாக்கியது. ஜனநாயகப் புரட்சியின் தன்மையையும், சாதி அமைப்புமுறையின் இயல்பையும் புரிந்துகொள்வதில் சிக்கலை ஏற் படுத்தியது.
சாதி என்பது முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பின் எச்சம் என்ற கருத்து, மார்க் சிஸ்டுகள் மத்தியில் பரவலாக நிலவிவருகிறது. நமது போராட்டங்களிலும், பிரச்சாரங்களிலும் ‘அனைத்து நிலப்பிரபுத்துவ எச்சங்களும் அகற்றப் படவேண்டும்’ என்று பேசுவோம். ஆனால், சாதி நிலப்பிரபுத்துவ எச்சம் என்ற புரிதல் சரியான தல்ல. முதலாளித்துவத்தால் ஆட்கொள்ளப் பட்ட ஒரு சமூக அமைப்பாக சாதி இருக்கிறது. அதாவது அது நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலவியது, முதலாளித்துவ சமூக அமைப்பிலும் நிலவுகிறது. எனவே, சாதியின் பாத்திரம் என்ன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.
அடித்தளத்திலும் சாதி
மார்க்சிய சிந்தனையாளர்கள் மத்தியில் இந்த விவாதம் நடந்துவருகிறது. சாதி மேல்கட்டுமானத் தின் பகுதி மட்டுமே என்று சொல்ல மாட்டேன். அது மேல்கட்டுமானத்தின் பகுதியாக இருப்ப துடன் அடித்தளத்திலும் ஒரு பகுதியாக உள்ளது. அது உற்பத்தி உறவுகளின் ஒரு பகுதியாக இருக் கிறது. இதனை புரிந்துகொள்ளாமல் சாதி குறித்த சரியான வரையறைக்கு வர முடியாது.
சாதி பற்றி டி.டி.கோசாம்பி குறிப்பிடும் பின் வரும் மேற்கோள், அதன் சாரத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது: ”ஆதி உற்பத்தி முறையில் நிலவிய வர்க்கம்தான், சாதியாகும். ஒரு சமூக ஒழுங்கை உருவாக்குவதற்கான மத வழிமுறை. அவ்வழியில், ஒரு சமூகத்தின் முதன்மை உற்பத்தி யாளரிடமிருந்து, மிகக் குறைந்த எதிர்ப்புணர் வுடன், அவரின் உபரி உற்பத்தியை கையகப்படுத் தும் ஒப்புதலை அது பெறுகிறது.”
எளிமையாக விவரித்தால், சாதி என்பது ஆதியில் அமைந்த வர்க்க அமைப்பின் வடிவமாகும். அதற்கு மத அங்கீகாரம் இருக்கிறது. எனவே, மக்களின் உணர்வு நிலையில், நான் இவ்வாறு பிறந்தேன், எனவே இந்த சமூக ஒழுங்கை நான் ஏற்றுக்கொண்டாக வேண்டும், அது கடவுள்/மதம் எனக்கு பணித்துள்ள கடமை என்ற ஒப்புதலை உருவாக்குகிறது. இதன் உதவியோடு, ஒரு உற்பத்தியாளரை நிர்ப்பந்திக்காமலே அவர் படைக்கும் உபரியைச் சுரண்டமுடிகிறது. சுரண்டப் படும் ஒருவர் தனது உழைப்பின் உற்பத்தி, தன்னுடைய சொத்து அல்ல என நம்புகிறார். தான் வாழும் சமுதாய ஒழுங்கில், எனது உழைப்பால் உருவாக்கப்படும் உற்பத்தி, என்னுடையது அல்ல என நம்புகிறார். எனவே, அதில் வர்க்கத்தின் அம்சம் இடம்பெறுகிறது, சமூக அதிகாரப் படிநிலை அம்சமும் உள்ளது, மத அம்சமும் இருக்கிறது. இந்த மூன்றின் பிணைப்பில்தான் சாதி அமைப்புமுறை பரிணமித்தது.
பண்டைய இந்தியாவில் இவ்வாறான சூழல் நிலவிவந்தது. பிற்காலத்தில் அது இந்தியாவின் பல்வேறு மண்டலங்களிலும், பல்வேறு பகுதி களிலும் ஆங்காங்கு நிலவிய சமூக சூழல்களுக்கு தக்க வகையில் ஏற்கப்பட்டது, மாறுதல்களுக்கு உட்பட்டது, விரிவடைந்தது.
வர்க்க உருவாக்கத்தில் சாதியின் பங்கு
இன்று, இந்தியாவின் ஆதிக்கம் செலுத்தும் பிரதான உற்பத்திமுறையாக முதலாளித்துவ உற்பத்திமுறை வளர்ந்திருக்கிறது. சாதி, உற்பத்தி உறவுகளில் சந்தேகமின்றி தொடர்ந்து நீடிக்கிறது. இந்தச் சிக்கல் குறித்த அணுகுமுறையே மார்க் சிஸ்டுகளின் அணுகுமுறையை மற்றவர்களுடையதி லிருந்து தனித்துக் காட்டுகிறது. நாம் சாதியும், வர்க்கமும் ஒன்றோடொன்று உள்ளார்ந்த தொடர் புடையவை என்கிறோம். முன்னர் சாதியின் மறைபொருளாக அமைந்தது வர்க்கம் என்று சொல்லப்பட்டது. அதாவது, சாதியின் உள்ளடக் கமாக அமைந்தது வர்க்கம்தான் என்ற பொருளில் சொல்லிவந்தார்கள். மாறா நிலையில் அமைந்த தல்ல சாதியும், வர்க்கமும். முதலாளித் துவ வளர்ச்சிக்கு ஏற்ப அவற்றில் மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன.
சாதியும் வர்க்கமும் ஒன்றுக்கொன்று இயைந்தவை. முதலாளித்துவம் வளர்ச்சியடையும்போது, சாதி அமைப்புக்குள்ளேயே வேறுபாடுகளும் வளர்ச்சியடைகின்றன. சாதியும் வர்க்கமும் பிணைந் திருக்கின்றன. சிலசமயம் அவை ஒன்றின்மேல் ஒன்று படிந்துள்ளன, சிலசமயம் அவற்றிற் கிடையே முரண்களும், பிரிவுகளும் மேலெழுகின்றன.
பல பத்தாண்டுகள் முதலாளித்துவ வளர்ச்சிக் குப் பிறகு, இன்று சாதி – வர்க்க ஒத்துழைப்பு, மாறா நிலையில் இல்லை. சாதிப் படிநிலையில் கீழ் அமைந்த சாதிப் பிரிவுகளில் ஒரு பகுதி, முதலாளித்துவ வர்க்கமாக – விவசாயம் சார்ந்த முதலாளிகளாகவோ அல்லது நகர்ப்புற முதலாளி களாகவோ – வளர்ச்சியடைந்துள்ளனர். உயர் சாதி என தங்களை அழைத்துக்கொள்ளும் பிரிவின் ஒரு பகுதியினர், பாட்டாளிவர்க்கத்தின் பகுதியாக வும் மாறியுள்ளனர். இப்படி பலவிதமான மாற்றங்கள் நடந்திருக்கின்றன.
அதே சமயம், சாதியின் அதிகாரப் படிநிலை இயல்பும், சமூக முன்னேற்றத்தை பின்னுக்கு இழுக்கும் அதன் தன்மையும், பிற்போக்குத்தன மும் அப்படியே தொடர்கின்றன. எனவே நமது போராட்டம் இந்த இரண்டையும் கணக்கில் கொண்டதாக அமைவதை உறுதி செய்யவேண்டும்.
சாதி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள மார்க்சியர் அல்லாதவர்களும் சாதியை ஒழிப்போம் என்கின்றனர். சாதிக்கும் – வர்க்கத்திற்குமான பிணைப்பை யும், இணைப்பையும் அறியாத, கண்டுணராத ஒருவரால் சாதியை ஒழிக்க முடியாது. சாதி எதிர்ப்பின் சமூக அம்சத்தையும் உள்ளடக்கிய வர்க்கப் போராட்டத்தைக் கட்டமைக்காமல் நாம் விரும்புகிற சமூக மாற்றத்தைச் சாத்தியமாக்க முடியாது. வர்க்கச் சுரண்டலையும், சாதி ஒடுக்கு முறையையும் முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலமே அது சாத்தியமாகும்.
சாதிச் சமூகத்தில் வர்க்கங்கள்
சுருங்கச் சொன்னால், இந்திய முதலாளித்துவ அமைப்பில் வர்க்கங்களின் வளர்ச்சியானது, சாதீய அடுக்கமைவும், பிரிவுகளும் கொண்ட சமூக நிலைமைகளுக்கு உட்பட்டே நிகழ்கிறது. எனவே, இங்கே உருவாகும் வர்க்கங்கள் சாதீயக் காரணிகளுக்கேற்ப வடிவமெடுக்கின்றன; வண்ணம் பெறுகின்றன.
எனவே இந்தியாவின் முதலாளித்துவத்தை, தனித்த இந்திய இயல்புகளுடன் கூடிய முதலாளித்துவமாகப் பார்க்கவேண்டும். பொதுவாக முதலாளித் துவம் என்று மட்டும் பார்க்கும்போது, நமது இலக்கையும், உத்தியையும் தீர்மானிக்க அவசிய மான சிலவற்றை விட்டுவிடுகிறோம். அவற்றில் முதலாவது, இந்திய விடுதலைக்குப் பின், இங்கே வளர்ச்சியடைந்த முதலாளிகள், நிலப்பிரபுத் துவத்துடனும் அரை நிலப்பிரபுத்துவ உறவு களோடும் சமரசம் செய்துகொண்டனர். இரண்டா வது, இந்தியாவில் விவசாயப் புரட்சி முழுமை யடைந்து, உற்பத்தி உறவுகளில் ஜனநாயக மாறு தல்கள் நடக்கவில்லை. மூன்றாவது, வளர்ந்து வரும் முதலாளித்துவ அமைப்பின் ஒரு பகுதியாக சாதீய அதிகாரப் படிநிலைகளும், சாதீய சமூக வடிவங்களும் தொடர்ந்து நீடிக்கின்றன. மேற்கண்ட மூன்று அம்சங்களும் மனதில் கொள்ள வேண்டியவை.
இந்தியாவில் முதலாளி வர்க்கம் உருவான வழிமுறையையும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாட்டாளிவர்க்கம் உருவான வழிமுறைகளையும் ஆராய்ந்தால் அவற்றின் சாதீய வேர்களை கண்டு கொள்ள முடிகிறது. அதுகுறித்து இப்போது விரிவாகப் பேசவில்லை. ஆனால், இந்திய முதலாளிகளில் பெரும்பகுதியினர், சில குறிப் பிட்ட சாதிகளில் இருந்துதான் வந்திருக்கின்றனர். பொதுவாக நால்வருண அமைப்பு குறிப்பிடும் வைசியர்களாக உள்ளனர். அவர்கள் வியாபாரி களாகவும், வட்டித்தொழில் செய்வோராகவும் உள்ளனர். இந்திய முதலாளிகள் யாரென்று பார்த்தால் அம்பானி, சிங்காலியா, பிர்லா என அனைத்து முதலாளிகளும் பனியா சாதியி லிருந்து (வைசியர்) வந்தவர்கள். விடுதலைக்குப் பின் டாட்டா ( பார்சி) தவிர பெரும்பாலான முதலாளிகள் பனியாக்களே. தென்னிந்தியாவை எடுத்துக்கொண்டாலும் ஆரம்பகாலத்தில் செட்டி யார்கள் முன்வந்தார்கள். வர்க்கங்களின் உருவாக் கத்திற்கு பின்னணியாக உள்ள சாதீய அம்சங் களைக் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த முதலாளிகளே, இந்துத்துவத்தின் ஈர்ப்புக்கு இரையாகிறார்கள். சாதீயப் பின்புலம் அதற்கு காரணியாக இருக்கிறது. மறுபக்கம், பாட்டாளி வர்க்கத்தை எடுத்துக்கொண்டால், இந்தியா வில் எட்டரை கோடி ஆதிவாசி மக்கள் உள்ளனர். பெரும்பாலான கொத்தடிமைகளா கவும், ஒட்டச் சுரண்டப்படும் தொழிலாளர் களாகவும் ஆதிவாசிகளும், தலித் மக்களுமே உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்விடங்களி லிருந்து வெளியேற்றப்பட்டு கனிமச் சுரங்கங்கள், கட்டுமானத் தொழில்களிலும், அமைப்புசாராத் தொழில்களிலும் அமர்த்தப்படுகின்றனர். முதலா ளித்துவ சமூகத்தில் உருவாகியுள்ள வர்க்கங்களின் சாதிய மூலங்களையும், வேர்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இவைகளைப் புரிந்து கொள்ளாமல் இலக்கையும், உத்தியையும் வகுக்க முடியாது.
– தமிழில்: இரா.சிந்தன்
(சாதிய சவாலை எதிர்கொள்ளுதல் அடுத்த இதழில்…..)
One thought on “இந்தியாவில் சாதி முறை : ஒரு மார்க்சிய பார்வை”