– க.கனகராஜ்
அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்குமான இந்தியா என்கிற முழக்கத்தோடு 2013ம் ஆண்டு முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய நரேந்திர மோடி அந்த காரணங்களுக்காகவே 2014 தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்றார். ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் மத்திய அரசின் கொள்கையின் தாக்கத்தால் மிகப்பெரிய சரிவை இந்தியா கண்டு வருகிறது. மூன்றாமாண்டு நிறைவு விழாவை கொண்டாட வழக்கம் போல ஒரு பேர் வைத்தார்கள். அதற்கும் MODI (Making of developed India) என்றே பெயர் வைத்தார்கள். அதாவது வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குதல். இந்தியா முழுவதும் 900 நகரங்களில் கொண்டாட்டங்கள் நடத்துவது, மோடியின் கடிதங்களை 10 கோடி குறுஞ்செய்திகளாக பொதுமக்களுக்கு அனுப்புவது, 400 பத்திரிகைகளில் முதல் பக்க விளம்பரங்களை வெளியிடுவது, மோடியின் கண்ணோட்டங்களையே சாதனைகளையும் 30 நொடி, 60 நொடி விளம்பரங்கள் மூலம் தொலைக்காட்சிகளிலும், வானொலி களிலும் 22 நாள் ஒளிபரப்புவது, 300 நகரங்களில் பல்துறை ஊடக கண்காட்சிகளை நடத்துவது, ‘நேற்றும் – இன்றும்’ என புத்தகம் வெளியிடுவது என்றெல்லாம் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த எல்லா திட்டங்களையும் அவர்கள் மூட்டைக்கட்டி வைப்பதற்கு காரணம் ஒவ்வொரு துறையிலும் சரிவை சந்தித்திருப்பது தான்.
ஆயினும் இந்தியா முழுவதும் சமீபத்திய தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது விவசாயிகள் பிரச்சனை தீவிரமாக வெடித்துக் கிளம்பிய மகாராஷ்டிரா, ஹரியானா, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், தேர்தல்களிலும் பிஜேபி மிகப் பெரிய வெற்றிகளை பெற்றுள்ளது. இது இந்தியாவின் எதிர்காலம் குறித்த ஆழமான கேள்விகளையும், கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
(மூன்றாண்டுகளில் அரசியல், வகுப்புவாதம், பொருளாதாரம் ஆகிய முனைகளில் பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து உ.வாசுகி, க.கனகராஜ், வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் எழுதியுள்ளனர்.)
பிஜேபி 2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கை யில் மிகவும் அலங்காரமான வார்த்தைகள், சொற் றொடர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு புதிய இந்தியாவை வளங்களும், அமைதியும் பூத்துக் குலுங்கும் ஒரு இந்தியாவை உருவாக்கப் போவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியது. ஆனால் தேர்தல் அறிக்கையில் கடைசி பகுதியில் உள்ள சில அம்சங்கள் பலராலும், கவனிக்கப்பட முடியாத அளவிற்கு அல்லது கவனித்தாலும் புறக்கணிக்கத் தக்க வகையில், அவர்களின் சொல்லாடல்கள் அமைந்துள்ளன.
தேர்தல் அறிக்கையில்
தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் – சமமான வாய்ப்பு என்றவகையில் ஒரு பகுதி எழுதப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதி பல பத்தாண்டு கள் கடந்த பிறகும் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லீம்கள் வறுமையில் உழல்கிறார்கள், நவீன இந்தியா அனைவருக்கும் வாய்ப்பளிப்பதாக அமைய வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத் தில் அனைவரும் சம பங்காளிகளாக இருக்க வேண்டும். இந்திய மக்களின் எந்தவொரு பகுதி பின்தங்கினாலும் இந்தியா முன்னேற முடியாது என்றெல்லாம் அது தேர்தல் அறிக்கையில் உறுதி யளித்திருந்தது. அதுமட்டுமின்றி முஸ்லீம்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப் படும் என்றும், உருது மொழி பாதுகாக்கப்பட்டு அதை வளர்ப்பதற்கு திட்டங்கள் உருவாக்கப் படும் என்றும் உறுதியளித்திருந்தது.
ஆனால், தேர்தல் அறிக்கையின் இறுதி பகுதி யில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்கு கோயில் கட்டுவோம் என்றும், பசுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அனைத்து நடவடிக்கைகள் எடுப்போம் என்றும், இந்தியா வில் உள்ள அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வும், மேம்படுத்தவும் முக்கியமான நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்றும், பொது சிவில் சட்டத்தை உருவாக்குவோம் என்றும் அறிவித் திருந்தது.
இந்த அறிக்கையை வாசிக்கும் போதே பாஜக எப்படியெல்லாம் சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி வைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். வளர்ச்சி என்கிற தோற்றத்தை முன் னிறுத்தி வகுப்புவாத வெறியை கிளப்புவதன் மூலம் தேசத்தை பிளவுபடுத்தி, வளர்ச்சியின்மை, வளர்ச்சி குறைவு அல்லது பின்னோக்கிய வளர்ச்சி எதுவானாலும் மறைந்து போகும் அளவிற்கு தனது நிகழ்ச்சி நிரலை அது அமைத்துக் கொண்டது.
மோடியின் பொய்யுரைகள்
மக்களின் துயரங்களை அவர்கள் உணராத படி திசை திருப்புவதற்காக பல பிரச்சனைகளில் அது தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இன்னும் குறிப்பாக தான் சிரமத் தில் இருக்கும் போதெல்லாம் முன்வைப்பதை நழுவ விட முடியாத நிகழ்ச்சி நிராக அது வைத் திருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் சில விஷயத்தை போகிற போக்கில் பேசுவது போல சொல்லிவைத்து விட்டு போனார். முதலாவதாக, உத்தரப்பிரதேசத்தில் இடுகாடுகள் இருக்கும் பரப்பளவையும், சுடுகாடுகளுக்கான பரப்பள வையும் ஒப்பீட்டு இடுகாடுகளுக்குத் தான் அதிக நிலம் இருக்கிறது என பேசினார். அதன்பொருள் முஸ்லீம்களுக்கான மயானங்கள் கூடுதல் பரப் பளவில் இருப்பதாக பெரும்பான்மை மக்களுக்கு செய்தி அனுப்புவது தான் நோக்கம். இஸ்லாமி யர்கள் பினங்களை எரிப்பது கிடையாது. ஆனால் பின்னர் கிடைத்த விபரங்கள் பிரதமரின் பேச்சு உண்மைக்கு புறம்பானது என்பதை நிறுவியது. இந்து மற்றும் முஸ்லீம் மக்களிடையே வன்மத்தை யும், பகையையும், முரண்பாட்டையும், தீராத மோதலையும் உருவாக்கும் நோக்கம் கொண்டது. உண்மை விபரங்கள் வெளிப்படுவதற்கு முன் பாகவே மோடி நினைத்தது நிறைவேறிவிட்டது.
இதற்கு முன்பு ஆண்ட அரசாங்கங்கள் எல்லாம் முஸ்லீம்களுக்கு மிக அதிகமாய் சுடு காட்டு இடத்தைக் கூட சலுகை அளிப்பது போன்றும், இந்து மக்களை வஞ்சித்து விட்டது போன்றும் நம்பச் செய்தார். தேர்தல் அறிக்கை யில் இந்தியா சுதந்திரம் அடைந்து பல பத்தாண்டு கள் ஆன பின்பும், இஸ்லாமிய மக்கள் வறுமை யில் வாடுவதாக சொன்ன பிரதமர் தான் இந்த விஷயத்தை ஊதிபெரிதாக்கினார்.
பொய்களின் சங்கிலித் தொடர்
இதேபோன்று தீபாவளி தினத்தன்று உத்தரப்பிர தேசத்தில் செலவழிக்கப்படும் மின்சாரம் ரம்ஜான் தினத்தன்று செலவழிக்கப்படும் மின்சாரத்தை விட குறைவு என்று அவர் கூறினார். எனவே இதை சரிசெய்வதற்கான ஒரு அரசாங்கம் வரவேண் டாமா என்று கேட்டார். அவர் இந்து என்றோ, முஸ்லீம் என்றோ பேசவில்லை. ஆனால், தீபா வளியும், ரம்ஜானும் குறியீடுகளாக்கப்பட்டு வன்மத்திற்கு உரமிட்டன. உண்மையில் அதற்கு பின்பு கிடைத்த புள்ளி விபரங்கள் பிரதமரின் கூற்று உண்மையல்ல என்பது மட்டுமல்ல, அப்பட்டமான பொய்; மோசடி என்பதை வெளிப் படுத்தியது. ஆனாலும் என்ன? ஏற்கனவே பிளவு பட்டிருந்த மனங்களுக்கு இடையே அவரால் மிகப்பெரிய சுவரை ஏற்படுத்த முடிந்தது. அவர் எதிர்பார்த்தது போலவே சுவற்றிற்கு இருபக்கம் இருந்து ஒருவரை எதிர்த்து வன்மத்தை வளர்த் துக் கொண்டனர். எல்லாவற்றையும் விட தேர் தலுக்கு முன்பாக கான்பூரில் நடந்த ரயில் சாவு களுக்கு காரணமான சதிகாரர் நேபாளத்தில் இருக்கிறார் என்று பேசிவிட்டு போனார். அதற்கு பின்னர் தேர்தல் முடிந்த பிறகு ரயில்வேத்துறை உயர் அதிகாரி கான்பூரில் நடந்தது விபத்தே தவிர நாச வேலை அல்ல என்று உறுதிப் படுத்தினார். மோடி அவர்களின் இந்த பற்ற வைப்பு ஏற்கனவே பொதுபுத்தியில் உருவாக்கப் பட்டுள்ள சதிச்செயல், நாசவேலை, தீவிரவாதம், பயங்கரவாதம் இவையெல்லாம் இஸ்லாமியர் களின் இஷ்டபூர்வமான நடவடிக்கை என்று கட்டமைக்கப்பட்டிருந்த பொதுபுத்தியில் எவ்வித மதவெறி நோக்கமும் இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட 100 பேர் வரை உயிரிழக்க காரண மானவர்கள் முஸ்லீம்கள். அதற்கு காரணம் அவர்கள் பின்பற்றுகிற மதம். இவர்கள் கொழுத்து அலை வதற்கான காரணம் இதுவரையிலும் இந்தியாவை ஆண்ட அரசியல் கட்சிகள் அவர்களுக்கு ஏராள மாய் சலுகைகள் அள்ளி கொடுத்துவிட்டார்கள். அவர்களை தட்டிக் கேட்பதற்கு ஒரு துணிச்சல் மிக்க 56 அங்குலம் மார்பு கொண்டு ஒரு மனிதன் வந்துவிட்டார். அவர் தான் இந்த தீய சக்தி களிடமிருந்து தங்களை காக்கப் போகிறார் என் கிற எண்ணத்தை உருவாக்கிவிட்டது.
இவர் இதை இப்படி பற்ற வைத்தப் பிறகு இந்துக்களுக்கு போதுமான இடுகாடு வேண்டும் என்றால், தீபாவளியை ரம்ஜான் போல கொண்டாட வேண்டுமென்றால், தீவிரவாதத்தால் இந்தியர்கள் இறக்காமல் இருக்க வேண்டுமென்றால், மோடி யின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற உணர்வை பொதுவெளியில் உருவாக்கியது. இதற்கு எதிராக எவர் நின்றாலும் அவர் பெரும் பான்மை சமூகத்திற்கு எதிரானவர், இந்தியாவின் மீது தேச பக்தியற்றவர் என்கிற அடுத்த நிலைக்கு மாநிலத் தலைவர்கள் இந்த பிரச்சாரத்தை முன்னிறுத்தி சென்றார்கள்.
முஸ்லீம்கள் குறிப்பிட்ட பகுதியில் கூடுதல் எண்ணிக்கையோடும் பெரும்பான்மை சமூகங் கள் சூழப்பட்டுள்ள பகுதிகளிலும் இந்தப் பகுதி யில் எங்களுக்கு எதிரான வாக்குகள் முஸ்லீம் களின் வாக்குகளாகத்தான் இருக்க முடியும். எனவே தேர்தலுக்குப் பின்பு எங்களுக்கு எதிராக வாக்களித்ததாக தெரியும்பட்சத்தில் முஸ்லீம் குடியிருப்புகள் தாக்கப்படும். அவர்கள் நிம்ம தியாக வாழ முடியாது. இந்த பகுதியில் குடியிருக்க வும் முடியாது என்கிற பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பிஜேபிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் கூட வேறுவழியின்றி ஆதரவாக வாக்களித்தார்கள். இல்லையேல் தங்களுடைய ஒட்டுமொத்த வாழ் வாதாரமும், வாழ்வும், வாரிசுகளும் சிதைக்கப் படும் என்கிற நீங்கா அச்சத்தை அவர்களால் உருவாக்க முடிந்தது. தேர்தலுக்கு பின்பும் கூட இந்த அச்சம் இருப்பதின் காரணமாக எதிர்ப்பு களை செயல்படவிடாமல் செய்ய முடிகிறது. இதனால் இன்னும் பலமாகவும் அச்சுறுத்தல் என் கிற நிலைமையிலிருந்து நேரடியான தாக்குதல் என்ற நிலைமைக்கு இது மாறியது.
மாட்டிறைச்சி வன்முறைகள்
இதேபோன்று தாத்ரியில் இக்லாக் மாட்டி றைச்சி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்ட தினத்திலின்று இன்னும் கூடு தலாக இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள், வெளியி லிருந்து வந்த மதத்தை பின்பற்றுபவர்கள், ஆக்கிர மிப்பாளர்களின் மதத்தை பின்பற்றுபவர்கள், விடுதலைக்கு முன்பு இருந்த தேசத்தை இரண்டா கப் பிரித்து அண்டை நாடாக இருந்து கொண்டு தொல்லைக் கொடுத்து கொண்டிருக்கும் பாகிஸ் தானுக்கு ஆதரவானவர்கள் என்கிற பொதுப் புத்தி தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டு ஒரு பிளவை உருவாக்குவதற்கான முயற்சியை அவர் கள் மேற்கொள்கிறார்கள். அப்பாவி மக்களிடம் இன்னும் சொல்லப்போனால் படித்த இளைஞர் கள் பலரிடமும் கூட இந்த பேச்சுக்கு ஒரு அங்கீ காரமும், ஆதரவும் கிடைத்திருப்பது அவர் களுக்கு ஊக்கமளித்திருக்கிறது.
பிரித்தாளும் சூழ்ச்சி
எனவே ஆளும் வர்க்கம் நெருக்கடியில் சிக்கிக் கொள்கிற போது அதிலிருந்து திசை திருப்பு வதற்கு வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் பயன்படுத்தப் படுகிறது. மக்களின் மீதான தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்கு பதிலாக ஒருவருக் கொருவர் கற்பனையான பிரச்சனைகள் அல்லது எதிரிகள் கட்டமைக்கப்பட்டு பரஸ்பரம் மோதிக் கொள்ள உந்தித்தள்ளுகிறது. இந்தியா இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் மிகக்கடுமையான நெருக்கடிகளுக்கிடையே எவ்வித கவலையும் அற்று பாஜக இருப்பதற்கான காரணம் இந்த வகுப்புவெறியை பொதுவெளியில் கட்டமைத்து வைத்திருப்பது தான். பள்ளி பாடங்கள் மூலமாக ஒவ்வொரு கலாச்சார நடவடிக்கைகயிலும் தலை யிடுவதன் மூலமாக பிற மதத்தவர்களால் தங் களது பொருளாதாரம், வேலைவாய்ப்பு பறிக்கப் பட்டிருக்கிறது என்று நம்ப வைக்கப்படுவதும் இவற்றிலிருந்து மதவெறி கொண்ட ஒருவரால் தான் நம்மை காக்க முடியும் என்கிற மனநிலையில் கட்டமைப்பதுமே அடிப்படையான காரணமாக இருக்கின்றது.
தமிழகத்திலும் மதவெறித்திட்டம்
இதுவே இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலாக முன்நிற்கிறது. சங்பரிவார் அமைப்புகள் சமீப காலத்தில் தமிழகத்தை எவ்வாறு மதத்தின் அடிப்படையில் வன்மத்தை கட்டமைக் கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக் கிறோம். திருப்பூரில் தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் பிணம் தொங்கிக் கொண்டிருந்த இடத்தில் பிரதமர் படத்திற்கும், இந்து முன்னணி பாஜக கொடிகளுக்கு செருப்பு மாலை அணி விக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இது ஒரு கொலை போலவும், அரசியல் எதிரிகள் அல்லது மதவன்முறையாளர்களால் இது நிகழ்த்தப்பட்டது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. பின்னர் இது தற்கொலை என்பது உறுதியானது. அதா வது சங்பரிவார் அமைப்புகள் ஒரு தற்கொலையை கொலை எனவும், அது மத தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்றும் நம்ப வைக்க முயற் சித்தார்கள். அது முறியடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த ஜோடனை செய்தவர்கள் அதுவும் ஒரு பிணத்தைச் சுற்றிலும் இவ்வளவு ஏற்பாடு களை செய்தவர்கள் யார் எங்கிற கேள்வி வெளி யில் வராமல் பார்த்து கொண்டார்கள். ஆனால் அது கொலை என்று அவர்கள் கூறியது பொது மக்களிடம் ஏற்புத்தன்மை பெற்றிருந்தால் மிகப் பெரிய வன்முறை வெடித்து இஸ்லாமிய மக்களும், அவர்களது சொத்துக்களும் அழிவுக்குள்ளா கியிருப்பார்கள்.
இதேபோன்று சமீபத்தில் ஜூன் 22ந் தேதியன்று ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் ஒருவரும், அவரது தகப்பானாரும் தாக்கப்பட்ட சம்பவத்தை யொட்டி பாஜக நிர்வாகிகள் அது முஸ்லீம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட வன் முறை என்று பொதுவெளியில் பிரச்சாரம் செய்தார் கள். நல்லவேளை சில நாட்களுக்குள்ளேயே உண்மை யான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தனை பேரும் இந்து பெயர் களை தாங்கியவர்கள். ஆனால் ஒரு மத மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு உடனடி யாக முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்கி விட்டார்கள் என்று பாஜகவின் மூத்த நிர்வாகிகளே பேசுகிறார் கள். இது தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் அடிப்படையான செயல் படும் முறையாக இந்தியா முழுவதும் இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் ஆட்சியதிகாரத்தை பயன் படுத்திக் கொண்டு சமூக அமைப்பில், அரசமைப் பில் ஒவ்வொரு துறையிலும் இதைச் செய்வதன் மூலமாக தங்கள் அரசியல் பலத்தை மேம்படுத் திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.