சாதி பற்றிய சரியான சித்தாந்தப் புரிதல் குறித்து சென்ற இதழில் பார்த்தோம். நடைமுறையில் கம்யூனிஸ்ட் இயக்கம் சாதியை எப்படிப் பார்த்தது? எதிர்கொண்டது?
இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத் தையும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டத் தையும், சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்துப் பார்த்தவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளே. 1930 களில் இந்திய கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய முதல் திட்ட ஆவண மான, வரைவு செயல்பாட்டுக்கான மேடை என்ற ஆவணத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது சாதி அமைப்பு முறையையும், சாதிய அசமத்துவத்தையும் அதன் சமூக, பண்பாட்டு வடிவங்கள் அனைத்தையும் முழுமையாக ஒழிப்பதற்குப் போராடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது தீண்டப்படா தார் எனப்படும் உழைக்கும் மக்கள் மற்றும் சுரண்டப் படும் அனைத்து மக்களின் முழுமையான, பூரண சமத்துவத்திற்காகவும் உழைக்கிறது.” (காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இந்த தீர்மானம் விநியோகிக்கப்பட்டது)
இன்னும் சிலவற்றை அவர்கள் குறிப்பிட்டிருந் தாலும், சாதிய அமைப்புமுறையை ஒழிப்பது, அனைத்து பிரிவினருக்குமான சமத்துவத்தை உருவாக்குவது ஆகியவற்றை மிகச் சரியாக சுட்டிக்காட்டும் மேற்கண்ட இரண்டு பத்திகளை குறிப்பிட்டேன்.
இயக்கங்களுக்கிடையே ஏற்பட்ட பிளவுகள்
ஏகாதிபத்தியத்தையும், காலனியாதிக்கத்தை யும் எதிர்த்த போராட்டத்தின் இணைந்த பகுதி யாக சாதி எதிர்ப்புப் போராட்டம் மாறவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பின்னாட் களில் தோழர் பி.டி.ரணதிவே சாதி எதிர்ப்பு மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்களைப் பற்றி எழுதும்போது இவ்வாறு குறிப்பிட்டார் : ”ஏகாதி பத்திய எதிர்ப்பியக்கமும், சமூக சீர்திருத்தத்திற் கான போராட்டமும் ஒன்றிலிருந்து ஒன்று துண்டித்துக்கொண்டன. அவ்வாறு துண்டித்துக் கொண்டதால் இரண்டு நீரோட்டங்களுமே பலவீனமாகின.”
அன்றைய காலகட்டத்தில் இயங்கிவந்த முக்கிய மான சமூக சீர்திருத்தவாதிகள், சாதிக்கு எதிரான போராட்டங்களில் முன்னின்ற அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட பலரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலிருந்தும், விடுதலைப் போராட்டத்திலிருந்தும் தங்களைத் துண்டித்துக் கொண்டனர். அவர்கள் எழுப்பிய கேள்வி மிக முக்கியமானது; ‘பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கிடைத்தாலும், என்ன நடக்கும்? பிராமணீய கோட்பாட்டின் அடிப்படையிலான முறைதானே வரும்?’. ஏகாதிபத்திய எதிர்ப்பே முதன்மையானது என்று இயங்கியவர்கள், மேற்சொன்ன வாதத்தை சீர்குலைவாகப் பார்த்தார்கள். ஏகாதிபத்திய ஆதரவு நிலையாகப் பார்த்தார்கள்.
அப்போதிருந்த கம்யூனிஸ்டுகளுக்கு இந்த இரண்டு போராட்டங்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் வலிமை இல்லை. கேரளாவைப் போல விடுதலைப்போராட்டத்தின் தலைமையிடத்தை கைக்கொள்ள முடிந்த பகுதிகளில் மட்டுமே அவ்வாறு செய்ய முடிந்தது. அங்கே காங்கிரஸ் கட்சியின் பெரும்பகுதி கம்யூனிஸ்டுகளின் வழி காட்டுதலை ஏற்றது. அதுவா, இதுவா என்ற ஊச லாட்டம் நிலவிய பகுதிகளில், தேசிய இயக்கத் தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத் தையும் முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட் டோம். ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலை இயக் கம் என்பது, சமூகப் பொருளாதாரப் போராட்ட மும் ஆகும். அதாவது நிலவுடைமைக்கு எதி ரான போராட்டமும் விடுதலை இயக்கத்தின் அங்கம். அதிலிருந்து சமூக சீர்திருத்த இயக்கங் கள் துண்டித்துக் கொண்டதால், அது சாதி எதிர்ப்புப் போராட்டத்தை பலவீனப்படுத்தியது.
மேற்சொன்ன துண்டிப்பிலிருந்து, கம்யூனிஸ்டு களுக்கும் – அம்பேத்கரியர்களுக்குமான இடை வெளி துவங்கியது. இன்றைக்கும் அந்த இடை வெளி களையப்படவில்லை. அதற்குள் இப்போது விரிவாகச் செல்லவில்லை. சாதி பற்றிய காந்தி யின், காங்கிரஸ் கட்சியின் பார்வையின் மீது கடுமையான விமர்சனத்தை கம்யூனிஸ்டுகள் கொண்டிருந்தனர். 1930 ஆம் ஆண்டில் உருவாக் கப்பட்ட’ செயல்பாட்டுக்கான ஆவணம்’ காந்தி யின் சீர்திருத்தப் பார்வை மீதான கடுமையான விமர்சனமேயாகும். காந்தி தீண்டாமை பாவம் என்றார்; நீக்கப்படவேண்டியது என்றார்
ஆனால் ‘நால்வருண அமைப்பு நல்லது’ என்றார்.
சமபந்தி உணவு என்று சிலவற்றை அவர் செய் தாலும். தீண்டாமை உள்ளிட்ட சில கேடுகளை நீக்கிவிட்டால் வர்ணாசிரமம் நல்லது என்பது அவரின் பார்வை. இன்று, ஆர்.எஸ்.எஸ். அமைப் பும் கிட்டத்தட்ட அதைத்தான் சொல்கிறது. காந்தியின் இந்த வாதம் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களுக்கு கடும் கோபத்தை உருவாக் கியது. கம்யூனிஸ்டுகள் காந்தியின் பார்வையை ஒருபோதும் ஏற்றதில்லை. ஆனால், அரசியல், சித்தாந்த ரீதியில் அன்றிருந்த மக்களிடம் செயல் பட்டு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மனநிலையை இணைத்த ஜனநாயக மேடையை உருவாக்கும் அளவுக்கு கம்யூனிஸ்டுகளால் செல்வாக்கு செலுத்த முடியவில்லை.
21 ஆம் நூற்றாண்டில் சாதி எதிர்ப்பு
இன்றைய சமூக நிலைமைகளில், இப்பிரச்சனை களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம். 2000 ஆம் ஆண்டில் நமது கட்சித் திட்டத்தை சமகால நிலைமைகளுக்கு ஏற்ப மேம்படுத்தினோம். அதில் சாதி குறித்த மூன்று பத்திகள் உள்ளன.
அதில் முதலாவது சாதி என்பது ஒரு ஒடுக்கு முறைக்கான, அதிகாரப்படிநிலை அமைப்பாக இருந்துவருகிறது. இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்குக்கு முன்பே அது இருந்தது. எனவே, அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தங்களை நிலைமைகளை மாற்றியமைக்கவும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் போராடு கின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிராக தலித், பிற் படுத்தப்பட்ட மக்களிடையே ஏற்படும் எழுச்சி யில், ஜனநாயக உள்ளடக்கம் உள்ளது.
இரண்டாவது, சாதியைப் பயன்படுத்திக்கொள்ளும் முதலாளித்துவக் கட்சிகள் இருக்கின்றன. அவை, சாதியப் பிளவுகளை நீடித்திருக்கச் செய்கின்றன. முதலாளித்துவ அமைப்பும் தனது வளர்ச்சிப் போக்கில், சாதி அமைப்புக்கு இடமளிக்கிறது. எனவே நமது சமூகத்தை சாதி அடிப்படையில் பிளவுபடுத்துகின்ற முயற்சிகளையும், சாதியத்தை நீடித்திருக்கச் செய்யும் முயற்சிகளையும் எதிர்த் துப் போராட வேண்டும்.
மூன்றாவதாக, சாதிக்கு எதிரான போராட்டம் என்று வரும்போது. மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுடையதும், சாதி அமைப்பினால் ஒடுக்கப் பட்ட இதர மக்களுடையதுமான பிரச்சனை களைக் கையிலெடுத்துப் போராட வேண்டும். சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதிய முறையையும், அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்கு முறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கிய மான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்று. நிலம், கூலி, பொருளாதார கோரிக்கை களை – சமூக உரிமைகளுக்கான கோரிக்கை போராட்டங்களோடு இணைக்க வேண்டும். அந்தப் போராட்டங்கள் நமது இடது ஜனநாயக மேடையின் பகுதியாக மாற்ற வேண்டும். இக்கடமை களை நமது கட்சித் திட்டம் வகுத்துள்ளது.
கட்சியின் அனுபவங்கள்
சாதியை ஒழிப்பதற்கு நமது கட்சித் திட்டம் வகுத்துக் கொடுத்துள்ள இத்தகைய புரிதலை எப்படி நடைமுறைப்படுத்துவது?.
1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி ஏற் படுத்தப்பட்ட பிறகான அனுபவங்களை மட்டும் வைத்து விவரிக்கிறேன். தொடக்க காலத்தில் சாதி வன்முறைகளுக்கு எதிராகப் போராடியிருக் கிறோம். (கீழ வெண்மணியைப் போல, பீகாரில் நடந்ததைப் போல) கிராமப்புற ஏழைகளான விவசாயத் தொழிலாளர் போராட்டங்களை கையிலெடுக்கும்போது, அவர்களின் கூலி, குத்தகை உரிமைகளுக்காக தலையிட்டபோது, அவற்றிற்கு எதிர்வினையாக சாதித் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இவ்வகையில், ஒரு தாக்குதல் நடக்கும்போது அவற்றில் கூடுதலாக தலையிட்டிருக் கிறோம். ஆனால், இப்படியான தலையீடுகளைத் தாண்டி, சாதிய அடக்குமுறைக்கும், சாதிக்கும் எதிரான போராட்டங்களை, தொடர்ச்சியாக முன்னெடுக்கும் ஒரு மேடையை அமைத்து, சாதி அமைப்போடு தொடர்புடைய எல்லாவிதமான பிற்போக்கு நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளும் ஏற்பாடு இல்லை.
இக்காலகட்டத்தில், முதலாளித்துவ கட்சிகளும், பிற சமூக சக்திகளும் சாதி அடிப்படையிலான திரட்டலைச் செய்தார்கள். முக்கியமாக, அவற்றின் பின் தேர்தல் நோக்கங்கள் இருந்தன. இந்தத் திரட்டல்கள் அடிப்படையான சாதி எதிர்ப்பு இயக்கத்தில் தாக்கம் செலுத்தின. வர்க்கச் சுரண்டல் கள், சமூகப் பொருளாதார நிலைமைகள் ஆகிய வற்றை இணைத்து சாதி எதிர்ப்பினை முன்னெடுப் பதற்கான முயற்சிகளுக்கு, மாறுபட்ட நிலையை ஏற்படுத்தின. ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் சாதிகளைச் சார்ந்த மக்களை வெளிப்படை யாக பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், உயர் சாதி ஆதிக்கம் கொண்ட கட்சிகள் என எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் சாதிப் பிளவு களை நீடித்திருக்கச் செய்வது அவசியமென்று கருதுகிறார்கள். அந்தப் பிளவுகள் தேர்தல் தேவை களுக்கான திரட்டலுக்கு பலன் கொடுக்குமென்றும் கருதுகிறார்கள்.
அவர்கள் சாதி ஒழிப்பையும், சாதிய ஒடுக்கு முறையை ஒழித்துக்கட்டுவதையும் பற்றி மேடை களில் பேசலாம். ஆனால் நடைமுறையில் சாதிய வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்டும் தீவிர மான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
நாம் சாதிக்கு எதிராக நடைமுறைச் சாத்திய மளிக்கும் இயக்கங்களை வளர்த்தெடுப்பதற்கான உத்தியை வளர்த்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் மேற்சொன்ன காரணிகள் அதில் இடைவெளியை உருவாக்கின. எனவே, முன்னுக்குவந்த மாற்றங் களுக்கு எதிர்வினையாற்றும் சூழல் ஏற்பட்டது. 1990 ஆம் ஆண்டுகளில் மண்டல் பரிந்துரைகளை அமலாக்கும்போது, அது வட இந்தியாவில் சாதி அடிப்படையிலான கூர்மையான வேறுபாடு களை உருவாக்கியது. (இந்தியாவின் தென் மாநிலங் களில் உள்ள) நீங்கள் சமூக மேம்பாடு உள்ளிட்ட இட ஒதுக்கீட்டின் அடிப்படைகளை அறிவீர்கள். ஆனால் (வட இந்திய மாநிலங்களில்) அவை ஒதுக்கப்பட்டன.
சாதிகளுக்கிடையேயான வேறு பாடுகள் கூர்மையாக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட விளைவுகள் பின்நாட்களில் இந்துத்துவ வளர்ச் சிக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன. இதுபோல நிகழ்வுகள் நடக்கும்போது நாம் அவற்றிற்கு எதிர்வினை ஆற்றிக்கொண்டிருந்தோம்.
இரண்டு கால்களில் பயணிப்போம்
மேற்சொன்ன அனுபவங்கள்தான், சாதிச் சிக்கலை எதிர்கொள்வது குறித்த அடிப்படையான மறு சிந்தனையை நோக்கி மார்க்சிஸ்ட் கட்சியை உந்தித்தள்ளின. அதன் வழியே வர்க்கப் போராட்டத் திலும், ஜனநாயக மேடைகளிலும் ஒரு பகுதியாக சமூக ஒடுக்குமுறைப் பிரச்சனைகளை இணைத்து எடுக்கும் உத்தியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற புரிதலுக்கு நாம் வந்து சேர்ந்தோம்.
மார்க்சிய அடிப்படையில் பார்க்கும்போது, முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பு இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதென அனுபவங்கள் காட்டுகின்றன. முதலாவது, ஆளும் வர்க்கங்கள் வர்க்கச் சுரண்டலை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் உழைக்கும் மக்களிடமிருந்து உபரியை உறிஞ்சுகின்றனர். இரண்டாவது, அவர்கள் சாதியைப் பயன்படுத்தியும், மதம், கலாச்சாரம் ஆகிய மேல்கட்டுமான அங்கங்களைப் பயன்படுத்தி யும் தங்கள் வர்க்க ஆட்சிக்கான ஒப்புதலைப் பெறுகின்றனர். வர்க்கச் சுரண்டல், சாதி ஒடுக்கு முறை ஆகிய இரண்டையும் எதிர்த்துப் போரா டாமல் நம்மால், முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் நமது அணுகுமுறையையும், உத்தியையும் தீர்மானிக்க வேண்டும்.
சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்பு
பல்வேறு அகில இந்திய மாநாடுகளில் இப்பிரச் சனையை விவாதித்தோம், குறிப்பாக 16 வது மாநாட்டுக்குப் பிறகு, சமூக ஒடுக்குமுறைப் பிரச் சனைகளை கையிலெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய உத்தி, அணுகுமுறை குறித்த நிலைப் பாட்டை வகுத்தெடுத்தோம். சமூக ஒடுக்குமுறை கள் என்று மொத்தமாகச் சொல்லும்போது நம் சமூகத்தில் முதன்மையாக அமைந்தது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையாகும். மேலும் இந்தியாவில் பாலின ஒடுக்குமுறைகள் இருக் கின்றன. ஆதிவாசி மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் பெரும்பகுதி சாதி ஒடுக்குமுறை களை ஒத்ததாகவே இருக்கின்றன. அவர்கள் சாதி கட்டமைப்பிற்கு வெளியில் உள்ளவர்களாக நடத்தப்படுகின்றனர்.
சாதி ஒடுக்குமுறையில், பாலின நோக்கிலான அம்சமும் இணைந்தே இருக்கிறது. எனவே நாம் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. சாதி அமைப்புமுறையே ஒரு ஆணாதிக்க அமைப்பாகும். சாதிக்குள் அகமண முறையைப் பராமரிப்பதன் மூலமே, ஒரு சாதி தனது படிநிலை அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. எனவே, அதற்காக ஒரு பெண்ணின் பாலினத் தேர்வையும், சுயேட்சைத் தன்மையையும்
கட்டுப்படுத்துகின்றனர். ஒரு சாதியைச் சேர்ந்த பெண் தன்னை விடவும் ஒடுக்கப்பட்ட சாதியில் திருமணம் செய்வதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்புவது இதிலிருந்துதான். இதனாலேயே, 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற 18 வது கட்சி காங்கிரஸ் ஒரு வழிகாட்டுதலைக் கொடுத்தது. சாதி, பாலினம், ஆதிவாசி மீதான ஒடுக்குமுறைகளானாலும், சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையாக இருந்தாலும் அவை கட்சியின் அரசியல் மேடையின் ஒரு பகுதியாக எடுக்கப்படவேண்டும் என்பது அந்த வழிகாட்டு தல். அதற்கு முன்பிருந்த போக்கு என்ன வென் றால், பெண்கள் பிரச்சனைகளென்றால் அவற்றை பெண்கள் அமைப்புகள் பார்த்துக்கொள்ள வேண் டும், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனை களை விவசாயத் தொழிலாளர் சங்கம் பார்க்க வேண்டும் என்று துறைவாரியாகப் (Compartmentalised) பார்க்கும் போக்கு இருந்தது. சமூக ஒடுக்குமுறை களை எதிர்ப்பது, வர்க்கப் போராட்டத்தின் ஒரு அங்கம் என்ற முறையில் கட்சி ஒரு அரசியல் அமைப்பாக நேரடியாகத் தலையீடு செய்ய வேண்டும். இவ்வகையில், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான மேடையை அமைத்து செயல்படவேண்டும்.
அடையாள அரசியலும், நமது உத்தியும்
இந்தப் புரிதலை அமலாக்க முயலும்போது நமக்கு வேறு சில அனுபவங்களும் கிடைத்தன.
ஏற்கனவே தலித், ஆதிவாசி, சிறுபான்மையினரிடம் பல்வேறு அமைப்புகள் பணியாற்றியிருக்கின்றனர். அவர்களின் தாக்கம் அந்த மக்களிடம் இருக்கும் போது, நம்மால் எளிதாக அவர்களைத் திரட்ட முடியவில்லை. தலித் அடையாளத்துடனும், ஆதி வாசி அடையாளத்துடனும் செல்லும்போது மட்டுமே அவர்களிடம் வரவேற்பு இருந்தது. பொதுவான வர்க்க – வெகுஜன அமைப்பின் பேராலோ, கட்சியின் பேராலோ செல்லும் போது தங்கள் சொந்த அடையாளத்தோடு நெருக்கமாக உணர்வதில்லை. நாம் வலுவோடு செயல்படுகின்ற மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் இப்பிரச்சனையை எதிர்கொள்ள சில சிறப்பான அமைப்புகளும், மேடைகளும் அமைக்கப்பட்டன. அவை குறிப்பிட்ட பிரிவு மக்களின் பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்தும், அதே சமயம் பொதுவான ஜனநாயக, வர்க்கப் பிரச்சனைகளோடு இணைப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும்.
சமூகப் பிரச்சனைகளில் போராடும் வகையில் – தலித் – ஆதிவாசி – சிறுபான்மையினர் பிரச் சனைகளில் போராடும் வகையிலான மேடை களை சில மாநிலங்களில் ஏற்படுத்த கட்சி முடிவு செய்தது. இந்த அனுபவங்களின் அடிப்படையில் சில அகில இந்திய மேடைகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
இவ்வாறு மேடைகளை உருவாக்குவதன் நோக்கம், முதலில் பாதிக்கப்படும் மக்களைச் சென்றடைய வேண்டும். அடுத்ததாக அவர்களின் நியாயமான பிரச்சனைகளை எடுக்க வேண்டும். அதன் வழியே, அந்த மக்கள் திரளை, ஜனநாயக – வர்க்க இயக்கத்தோடு இணையச் செய்ய வேண்டும். இவ்வகையில் தான் இப்போது செயல்படுகிறோம். எவ்வளவு வெற்றிகரமாக செயல்படுகிறோம், என்ன முன்னேற்றம் கிடைத்திருக் கிறது என்பதை ஒவ்வொரு முறையும் பரிசீலிக்கிறோம்.
வர்க்க- வெகுஜன இயக்கங்களும், சமூகப் பிரச்சனைகளும்
வர்க்க வெகுஜன அமைப்புகளில் செயல்பட்டு அவர்களின் வர்க்க, பொருளாதாரப் பிரச்சனை களைக் கையிலெடுப்பதுடன், சமூகப் பிரச்சனைக ளோடு இணைப்பை ஏற்படுத்த வேண்டும். பல மாநிலங்களில், கட்சியின் பல்வேறு மட்டங்களில் இது சாத்தியமாகவில்லை. இதனைக் குறித்தும் பரிசீலித்தோம். உதாரணமாக வட இந்தியாவில், இந்தி பேசும் மாநிலங்களில் சமூகப் பிரச்சனை களை கட்சியின் பணிகளில் ஒன்றாக கையிலெடுப் பதில் முன்னேற்றம் இல்லை. கட்சி ப்ளீனத்திற்கு பிறகு, இந்த நிலைமையை சரிப்படுத்த சில பட்டறைகள் நடத்தப்பட்டன. முதலில் இந்தி பேசும் மாநிலங்களுக்கு ஒரு மத்திய முகாம் நடத்தப்பட்டது. பிறகு மாநில அளவில் முகாம் களை முன்னெடுத்தோம். சாதிய ஒடுக்குமுறைப் பிரச்சனைகளை எப்படி முன்னெடுப்பது என அவற்றில் பயிற்றுவிக்கப்பட்டன.
வேறு பல பிரச்சனைகளும் இருக்கின்றன. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தைக் கையிலெடுத்தால், அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சாதியைச் சார்ந்தவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்ற தயக்கம் சில இடங்களில் காரணமாக இருந்துள்ளது. இவ்வாறான தயக்கத் தோடு ஒரு பிரச்சனையை எடுத்துப் போராடும் உறுதி ஏற்படாது.
மற்றொன்று, பச்சையான பாராளுமன்றவாத வெளிப்பாடு. சமூகப் பிரச்சனைகளை எடுத்தால் அதற்கு எதிரான மனநிலை உள்ளவர்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற புரிதல். எனவே, கட்சிக்கு உள்ளேயே ஒரு போராட்டத்தை அனைத்து மட்டங்களிலும் நடத்த வேண்டியுள்ளது. நாம் சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடி யாக வேண்டும் அப்போதுதான் நம்மால் வர்க்கப் போராட்டத்தையும், ஜனநாயக இயக்கங்களை யும் வலுப்படுத்த முடியும்.
சாதி ஒடுக்குமுறையை ஒழித்துக்கட்டுவது
நமது கட்சிக்குள், கட்சி உறுப்பினர்களிடையே இந்தப் புரிதலை கற்பிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்கிறோம்.
ஜனநாயகம், ஜனநாயகப் புரட்சி என்றாலே சாதிப் பிளவுகளையும், ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக் கட்டுவதுதான். அவ்வாறில்லாமல் ஜனநாயகம் பிறக்காது. சோசலிசத்தை எட்டு வதற்கே இதுவொரு முன் நிபந்தனையாகும். இந்தப் புரிதலை நமது கட்சி உறுப்பினர்களுக்கு கற்பிக்கவேண்டியுள்ளது.
புரட்சியை நடத்தி முடித்துவிட்டால், சாதி உட்பட எல்லாம் ஒழிந்துவிடும் என்று பழைய வாதங்களை நம்பிக்கொண்டிருப்பது தவறு. நாம் முன்னெடுப்பது தலித் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. சாதி அமைப் பையே ஒழித்துக்கட்டுவதற்கான போராட்டமா கும். சாதிப் படிநிலை அமைப்பில், ஒவ்வொரு சாதியும் இன்னொன்றை ஒடுக்குகிறது. தலித் சாதிகளிலும் கூட பல்வேறு துணைப் பிரிவுகள் இருக்கின்றன. ஒருவர் இன்னொருவரோடு அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். எனவே, தலித் மீதான ஒடுக்குமுறை மட்டுமல்ல; அனைத்து அநீதியான சாதிய கட்டமைப்பிற்கும், நியாயங்களுக்கும் முடிவுகட்டவேண்டும். இந்தப் போராட்டம், வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் புரிதலுடன் களத்தில் நமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
(தமிழில்: இரா.சிந்தன்)