மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


விவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …


– அசோக் தாவாலே

தமிழில்: வீ.பா.கணேசன்

குரல்: நிவேதா

விவசாயப் புரட்சியின் நோக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டம் இந்தியப் புரட்சியின் தற்போதைய கட்டத்தை  மக்கள் ஜனநாயகம் என்ற கட்டமாக விவரிக்கிறது. அது வரையறுத்துள்ள மூன்று முக்கிய கடமைகள் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகபோக மூலதன எதிர்ப்பு, நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு ஆகியவை ஆகும்.

விவசாயப் புரட்சியே மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணியாகக் கருதப்படுகிறது.

இதை விளக்கும் வகையில் பாரா 3. 15-ல் கட்சித் திட்டம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது

“விவசாயப் பிரச்சனை என்பதே இந்திய மக்களின் முன்பாக உள்ள மிக முக்கியமான தேசியப் பிரச்சனையாகத் தொடர்ந்து நீடிக்கிறது. அதனை தீர்த்து வைப்பதற்கு கிராமப்புறத்தில் நிலவி வரும் நிலப்பிரபுத்துவம், வட்டிக்காரர்-வியாபாரிகளின் கூட்டுச் சுரண்டல், சாதி-பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒடுக்குமுறை போன்றவற்றை முற்றாக நீக்குவதையே இலக்காகக் கொண்ட தீவிரமான, முழுமையான விவசாய சீர்திருத்தங்கள் உள்ளிட்ட புரட்சிகரமான மாற்றம் தேவைப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆட்சியின் திவால் நிலைமை விவசாயப் பிரச்சனையை முற்போக்கான, ஜனநாயகபூர்வமான வழியில் தீர்ப்பதற்கல்ல; அதை அவ்வாறு அணுகுவதிலும் தவறியுள்ளது என்பதை மிகத் தெளிவாக வெளிப் படுத்துகிறது.”

ஒரு விவசாயப் புரட்சியை நோக்கி முன்னேறு வதற்காக 1940களில் கம்யூனிஸ்ட் கட்சியும் அகில இந்திய விவசாயிகள் சங்கமும் தொடர்ச்சியாக வரலாற்றுச் சிறப்புமிக்க, மகத்தான போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியுள்ளன. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே இந்தியாவின் விவசாய இயக்கத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் தெரிந்தது போலவே, வஙகாளத்தில் தேபகா, கேரளாவில் வடக்கு மலபார் மற்றும் புன்னப்புரா-வயலார், திரிபுராவில் கணமுக்தி பரிஷத், அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு, தமிழ் நாட்டில் கீழத்தஞ்சை, மகாராஷ்ட்ராவில் தானே மாவட்டத்தில்  வொர்லி ஆதிவாசிகள் ஆகிய போராட்டங்கள் உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் விளங்கு வதுதான் தெலுங்கானாவில் நடைபெற்ற விவசாயி களின் ஆயுதந்தாங்கிய போராட்டம்.
இந்தப் போராட்டங்கள் அனைத்துமே நிலப் பிரபுத்துவத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்து நடைபெற்றவை ஆகும். ஜமீன்தாரி முறையை ஒழித்து, தீவிரமான நிலச்சீர்திருத் தங்களை கொண்டுவர வேண்டுமென அவை கோரின. நிலப்பிரச்சனையை தங்களின் முக்கியமான நிகழ்ச்சி நிரலாகக் கொண்டே அவர்கள் போராடினர். விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் இதற்கான சட்டங்களை இயற்றி, கணிசமான அளவிற்கு நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் நிலமற்றவர்களுக்கு நிலத்தை மறுபங்கீடு செய்து தருவது ஆகியவற்றுக் கான ஒரு திட்டத்தை கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் நிறைவேற்றியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான, இடதுசாரிகளின் தலைமையிலான அரசுகள் மட்டுமே என்பதொன்றும் தற்செயலான விஷயமல்ல. இந்த நிலச்சீர்திருத்தங்களின் மூலம் பயன் பெற்றவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினரே ஆவர்.

விடுதலைக்குப் பிந்தைய பயணத்தின் பாதை
விடுதலைக்குப் பின்பு தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசுகளின் விவசாயம் தொடர்பான கொள்கைகள் என்பவை அரை நிலப்பிரபுத்துவ நிலப்பிரபுக்களை முதலாளித்துவ நிலப்பிரபுக்களாக மாற்றுவதையும், பணக்கார விவசாயிகள் என்ற பிரிவை வளர்த்தெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகவே இருந்தன. இந்தக் கொள்கைகள் விவசாயிகள் மத்தியில் இருந்த வர்க்க வேறுபாடுகளுக்கு வழிகோலுவதாகவும், அதை மேலும் தீவிரப்படுத்துவதாகவும் இருந்தன.

பசுமைப் புரட்சி குறித்து ஆய்வு செய்த எஸ். ஆர். பிள்ளை எழுதியிருந்தார்: மூன்று தெளிவான நோக்கங்களுக்காகவே ஆளும் வர்க்கங்கள் பசுமைப் புரட்சிக்கான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தன:

ஒன்று, விவசாயப் புரட்சி குறித்த அச்சம்; இரண்டாவது, விவசாயத்தில் முதலாளித்துவ வகைப்பட்ட (உற்பத்தி) உறவு களை வளர்த்தெடுப்பது; மூன்றாவது, இரண்டு வகையான நலன்களுக்கு, அதாவது இந்திய முதலாளிகள் மற்றும் உரங்கள், பூச்சிக் கொல்லி கள், களைக்கொல்லிகள், விவசாயத்திற்கான இயந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்கும் விவசா யம் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் நலன்களுக்கு, சேவை செய்வது. பசுமைப் புரட்சியின் தொழில்நுட்பமானது அதிக விளைச்சல் தரும் விதைவகைகள், நவீன இடுபொருட்களைப் பயன்படுத்தி விவசாயத்தில் உற்பத்தித்திறன், உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கும் நோக்கம் கொண்டதாக இருந்தது.

இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியா திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அதைத் தொடர்ந்து முடிவேயில்லாத விவசாய செழிப்பு மிக்க ஒரு புதிய சகாப்தம் உருவாகும்.

விவசாயத்துறையின் நோய்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கான இந்த மருந்து அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்துப் பகுதிகளுக்குமானது அல்ல என்பதும் மிக விரைவிலேயே தெளிவாகத் தெரிய வந்தது.

பாசன வசதி, கடன் வசதி மற்றும் இதர அம்சங் களைக் கொண்ட நிறுவனரீதியான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ள பகுதிகளுக்கு மட்டுமே இந்த விதைகளையும், உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும், விவசாய கருவிகளையும் விநியோகம் செய்வது என்ற  ‘தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறைத் தந்திரம்’ என்பதன் அடிப்படையில் அமைந்ததாக இருந்தது. உற்பத்தித் திறனையும், உற்பத்தியையும் அதிகரிப் பதற்கு உதவி செய்வதாக இது இருந்தது.

எனினும் அதனோடு கூடவே இரண்டு வகையான அசமத்துவமும் வளர்ந்தது –“பகுதிகளுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வு; விவசாயிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு.”
இந்த அனுபவத்தின் அடிப்படையில், 1979-ம் ஆண்டில் வாரணாசியில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 23வது தேசிய மாநாடு வழக்கத்தை விட மாறுபட்ட ஒரு முடிவை மேற்கொண்டது. அது கீழ்க்கண்டவாறு துவங்கியது:

“ கட்டமைப்பு ரீதியான இந்த மாற்றங்கள், அவற்றின் பல்வேறு வகைப்பட்ட விளைவுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, நிலப்பிரபுத்துவத்தை முழு மையாக ஒழிப்பது; நிலமற்றவர்களுக்கும் ஏழை களுக்கும் நிலத்தைப் பகிர்ந்தளிப்பது ஆகியவை விவசாயப் புரட்சியின் மைய முழக்கமாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதோடு, இந்த முழக்கத்தை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும்  என்ற முடிவுக்கும் நாம் வந்துள்ளோம். எனினும் இந்த கோஷத்தை வைத்துக் கொண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நம்மால் செயலில் இறங்க முடியாத நிலையே நீடிக்கிறது. (நமது) மையமான கோஷமாக இதைத் தொடர்ந்து எழுப்பி வந்தாலும் கூட, உபரி நிலம், பினாமி நிலங்கள், தரிசு நிலங்கள் போன்றவற்றுக் கான போராட்டங்களை தொடர்ந்து நாம் நடத்தி வந்தாலும் கூட, விவசாயத் தொழிலாளர்களின் கூலி, வீட்டு மனை, குத்தகைக் குறைப்பு, குத்தகைதாரர்களுக்கு உற்பத்தியில் 75 சதவீதப் பங்கு, நிலத்திலிருந்து வெளியேற்றுவது, கிராமப் புற கடன்சுமையை முற்றிலுமாக அகற்றுவது அல்லது குறைப்பது, விவசாய விளைபொருட் களுக்கு கட்டுப்படியாகும் விலை, மலிவான கடன்வசதி, வரிச்சுமையைக் குறைப்பது, தண்ணீர், மின்சாரம் போன்றவற்றுக்கான கட்டணங்களைக் குறைப்பது, காவல்துறை யின் மறைமுகமான அல்லது நேரடியான உதவியுடன் நிலப்பிரபுக்களின் குண்டர்படை யின் தாக்குதல்கள், தலித்துகள் மீதான சமூகரீதியான ஒடுக்குமுறை, நிர்வாகத்தில் நிலவி வரும் ஊழல் போன்ற பல்வேறு பிரச் சனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை விவசாய சங்கத்திற்கு ஏற்படுகிறது.

விவசாயத்தில் ஈடுபட்டு வரும் ஏழை, நடுத்தர, பணக்கார விவசாயிகள் என அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கக் கூடிய விஷயங்களாக இவை அமைகின்றன. இவற்றின் மீதான இயக்கங்களில் இவர்கள் அனைவரையும் அணிதிரட்ட முடியும். மிகச் சிறிய அளவில் இருக்கும் நிலப்பிரபுக்களை தனிமைப்படுத்த விவசாயத் தொழிலாளர்கள், ஏழைவிவசாயிகள் ஆகியோரை மையமாகக் கொண்டு விவசாயி களின் அதிகபட்ச ஒற்றுமையை வளர்த்தெடுக்க இந்தப் பிரிவினர் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்.”

நவதாராளவாதக் கொள்கைகளின் தாக்குதல்கள்

மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால் நவதாராள வாதக் கொள்கைகள் நாட்டில், குறிப்பாக விவசாயத் தில், 1991-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. கட்சித் திட்டத்தின்  பாரா 3.22 மற்றும் 3.23 ஆகியவை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“அரசினால் தொடங்கி வைக்கப்பட்ட முதலாளித் துவ வளர்ச்சி முடிவுற்றதைத் தொடர்ந்து வந்த தாராளமயக் கொள்கைகள் விவசாய, கிராமப்புற வளர்ச்சிக்கான கொள்கைகள் 20-ம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் அபாயகரமான, பிற் போக்குத்தனத்தை நோக்கித் திரும்புவதற்கு வழிவகுத்தது. விவசாயம், பாசன வசதி மற்றும் இதர கட்டமைப்பு பணிகள் ஆகியவற்றில் அரசின் முதலீடு குறைவது; கிராமப்புறக் குடும்பங்களை பெரிதும் பாதிக்கும் வகையில் முறைப்படுத்தப் பட்ட பிரிவிலிருந்து கிடைத்து வந்த கடன் வசதி மிகக் கூர்மையாக குறைந்தது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தக் கொள்கைகள் இருந்தன. கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான திட்டங்கள் ஆகியவையும் வெட்டிக் குறைக்கப்பட்டன. நில உச்சவரம்பு சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவும், பெரும் நிறுவனங்கள், விவசாயப் பொருட்கள் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டுவரும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நிலத்தை குத்தகைக்கு விடவும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தரப்பட்டது. விவசாய உற்பத்தியிலும் கூட பன்னாட்டு நிறுவனங்கள் இப்போது நுழைந்து வருகின்றன…

இந்த தாராளமயமாக்கலின் விளைவாக, மிக உயரிய தொழில்நுட்பங்களை தங்கள் கைகளில் வைத்துள்ள, உலகச் சந்தையை செயல்படுத்தி வருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகளின் மீது அதிகமான, நேரடியான கட்டுப்பாட்டை செலுத்துகின்றன. பாரபட்சமான பரிமாற்ற விலைகள், அதன் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றின் மூலமாக விவசாயிகளைத் தீவிரமாகச் சுரண்டுவ தென்பது நிரந்தரமான அம்சமாக மாறிவிட்டது. இதன் விளைவாக விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பவர் என்ற வகையிலும், (விவசாயத்திற்காக) தொழில்துறை உற்பத்திப் பொருட்களை வாங்குபவர் என்ற வகையிலும் விவசாயி அறவே சுரண்டப் படுகிறான்.”

மத்திய அரசின்  கொள்கைகள்  ஏழை, சிறு, நடுத்தர விவசாயிகளை மேலும் ஓட்டாண்டி யாக்குவதை அது விரைவுபடுத்தும்: நகர்ப்புறத் திலும் கிராமப்புறங்களிலும் இருக்கின்ற வேலை யில்லாத இளைஞர்களின் எண்ணிக்கையை அது மீண்டும் இதுவரை கண்டிராத அளவிற்கு உயர்த்தும் என்று ஹர்கிஷன்சிங்  சுர்ஜித் அன்று குறிப்பிட்டார்.

இந்த எச்சரிக்கைகள் எவ்வளவு சரியானவை என்பதை கடந்த 25 ஆண்டுகளில் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகத் தெளிவாக நிரூபிக்கின்றன.

2003-ல் அ இ வி ச வும் அ இ வி தொ ச  – வின் ‘மாற்று விவசாயக் கொள்கை’ என்ற ஆவணம் நாட்டின் விடுதலைக்குப் பின்பு விவசாயத் துறையில் முதலாளித்துவ ரீதியான வளர்ச்சியை இரண்டு கட்டங்களாக விரிவாகப் பிரித்திருந்தது.

1) 1947முதல் 1990 வரையிலான அரசின் ஆதரவுடன் கூடிய காலகட்டம்.

2) 1991லிருந்து துவங்கிய தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல் கால கட்டம்.

இந்தப் பின்னணியில் கிராமப்புறங்களில் இரண்டு முக்கிய முரண்பாடுகளை அந்த ஆவணம் கீழ்க்கண்டவாறு விவரித்திருந்தது:

“இந்திய விவசாயத்தில் தற்போதைய சூழ்நிலை யானது இரண்டு முக்கிய முரண்பாடுகளை சித்தரிப்பதாக உள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வு தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இவற்றில் முதலாவது நிலப்பிரபுக்கள், பெருமுதலாளித் துவ விவசாயிகள், பெரும் வணிகர்கள், வட்டித் தொழில் செய்வோர் ஆகியோரையும் அவர் களது கூட்டாளிகளையும் உள்ளடக்கிய பிரி வினருக்கும் விவசாயத்தொழிலாளர்கள், ஏழை, நடுத்தர விவசாயிகள், கிராமப்புறக் கைவினைஞர் கள் உள்ளடங்கிய பிரிவினருக்கும் இடையே யான கூர்மையான பிளவு. இரண்டாவது ஏகாதி பத்தியத்தின் கட்டளைக்கு இணங்க செயல்படுத் தப்படும் அரசின் தாராளமய, தனியார் மய, உலகமயக் கொள்கைகளுக்கு பெருந்திரளான விவசாயிகளிடமிருந்து மட்டுமின்றி கிராமப்புற செல்வந்தர்களில் ஒருபிரிவினரிடமிருந்தும் அதிகரித்துவரும் எதிர்ப்புணர்வு ஆகும்.”

இந்தத் தாராளமயமாக்கல் கட்டத்தில் ஆரம்ப மூலதனக் குவிப்பு இந்திய விவசாயத்தை அழித்து இந்திய விவசாயிகளின் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. நிலச்சீர்திருத்தம் என்பதற்கான அர்த்தமே இப்போது தலைகீழாக மாறி யுள்ளது. நிலத்தில் உழைப்பவர்களுக்கு நிலம் என்பதாக அது இல்லை; மாறாக, பெருநிறு வனங்களுக்கே நிலம் என்பதாக அது மாறி யுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், திட்டமிடப்பட்ட தொழில் வளாகங்கள் ஆகிய வற்றுக்கான கொள்கையிலும், மோடி தலைமை யிலான பாஜக ஆட்சி பதவியேற்ற துவக்க நாட்களிலேயே  நிலம் கையகப்படுத்தலுக்கான அவசர சட்டத்தை கட்டாயமாக திணிப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் மிகவும் வெளிப்படையாகவே தென்பட்டது. ஒன்றுபட்ட விவசாயி களின் கள அடிப்படையிலான போராட்டங்கள், நாடாளுமன்றத்தின் மேலவையில் எதிர்க்கட்சி களின் ஒன்றுபட்ட முயற்சிகள் ஆகியவை இணைந்த வகையில் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

விவசாயம் குறித்த நவதாராளமயக் கொள்கை கள் மூலமாக விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து லாபத்தை அதிகரிக்க முயற்சி செய்யப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக கடன்சுமையால் வாடிய லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்ற பேரழிவான அம்சத்தை இந்தக் கொள்கைகள்தான் தீவிரப்படுத்திவந்தன.

மானியங்களை வெட்டிக் குறைப்பது; உற்பத்திச் செலவை பெருமளவிற்கு அதிகரிக்க வழிவகுக்கும் வகையில் விவசாய இடுபொருட்களின் உற்பத்தித் துறையில் பேராசை பிடித்த பன்னாட்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களுக்கு நாட்டின் கதவுகளை அகலத் திறந்து வைப்பது; அந்நிய நிதிமூலதனத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான, கட்டுப்படியாகும் விலையைத்தர தொடர்ந்து மறுப்பது; விவசாய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதும் அதன் விளைவாக விவசாயிகளின் நிலைமை மேலும் மோசமாவது; சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை வரிசையாக கையெழுத்திடுவது; விவசாயத்திற் கான முறையான கடன்வசதியை சுருக்குவது; அதை பெருநிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்வது; இதன் விளைவாக விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களையே பெரிதும் நம்பியிருக்கச் செய்வது; வறட்சி, வெள்ளம், சூறைக்காற்று போன்ற இயற்கைப் பேரழிவுகள் மட்டுமின்றி, பூச்சிகள், காட்டுவிலங்குகள் ஆகியவற்றின் தாக்குதல்களுக்கும் பயிர்கள் இலக்காவது; விவசாயிகளுக்குப் பயனளிப்பதற்குப் பதிலாக காப்பீட்டு நிறுவனங்களுக்கே பயனளிக்கும் வகையில் போலியான காப்பீட்டு வசதியை வடி வமைப்பது; நீர்ப்பாசனம், மின்சாரம் போன்ற விவசாயிகளுக்கு அத்தியாவசியமான துறைகளில் அரசு முதலீட்டை கடுமையாக வெட்டிக் குறைப்பது ஆகிய நவதாராளமயத்தின் முக்கிய அம்சங்கள் விவசாயத்தின் மீது தொடுத்துள்ள தாக்குதல் கள் விவசாயிகள் கடன்சுமையில் அழுந்துவதை அதிகரிக்கச் செய்துள்ளதோடு, அதிர்ச்சியூட்டத் தக்க வகையில் விவசாயிகளின் தற்கொலைகளையும் அதிகரித்துள்ளன.

மிக மோசமான குற்றவாளி – பாஜகவின் மோடி ஆட்சி

ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து விவசாயம், தொழில்துறை மற்றும் இதர துறைகளில் நவதாராளமயக் கொள்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதில் நரேந்திர மோடியின் தலைமை யிலான தற்போதைய பாஜகவின் மத்திய அரசு தான் மிக மோசமான குற்றவாளியாக உள்ளது.

இயற்கையாகவே, பாஜக தலைமையிலான மாநில அரசுகளும் இக்கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றி வருகின்றன.
தாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட காலத்தில் விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய பரிசீலனையை கல்கத்தா ப்ளீனத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க ‘விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அரங்கங்களில் குறிப்பிட்ட சில கடமைகள்’ என்ற ஆவணத்தை யும் விவசாய அரங்கத்தில் செய்யப்பட்ட வேலைகள் குறித்த பரிசீலனை ஆகியவற்றை 2017 ஜனவரியில் திருவனந்தபுரத்தில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு விவாதித்து ஏற்றுக் கொண்டது.
2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக வின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் முன் வைத்த  ‘அச்சே தின்’ (நல்ல நாள்) தொடர்பாக கூறிய ஒவ்வொரு வாக்குறுதிக்கும் துரோகம் செய்த அரசு, நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக ஆட்சி.

கடந்த நான்காண்டு கால பாஜக ஆட்சி ஏற்பத்திய விளைவுகள்:

  • தீவிரமாகியுள்ள விவசாய நெருக்கடியும், விவசாயி களின் தற்கொலைகள் குறையாத நிலையும்;
  • நிலமில்லாத நிலையும், நிலம் தொடர்பான ஏற்றத்தாழ்வும் மிக வேகமாக அதிகரித்திருப்பது;
  • இதுவரை கண்டிராத வகையில் நிலங்கள் பறிக்கப் படுவதும், விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்படுவதும்;
  • (ஆதிவாசிகளின்) வன உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் வன ஆதாரங்கள் கொள்ளையடிக்கப்படுவது;
  • நிதி தொடர்பான தாராளவாதமும் கடனில் மூழ்கும் நிலையும்;
  • சுதந்திரமான வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியான தாராளவாதம் மீதான கவர்ச்சி;
  • பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி என விவசாயி களின் மீதான தாக்குதல்;
  • விவசாயத்தை நிறுவனமயமாக்கல்;
  • விவசாயி களின் வருமானத்திற்கு பதிலாக துயரங்களே இரட்டிப்பானது;
  • விவசாய விளைபொருட்களின் விலைகள் முடிவேயின்றி வீழ்ந்து கொண்டே போவது;
  • வறட்சி, வெள்ளம், அரசின் கவலையற்ற போக்குகளுக்கிடையே மனிதர்களின் துயரங்கள் தீவிரமானது;
  • மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புறுதித் திட்டம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு ஆகியவற்றின் மீதான தாக்குதல்;
  • விவசாயத்துறையில் பணிபுரியும் பெண் களின் மீதான தாக்குதல் அதிகரிப்பு;
  • கால்நடை வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் அரசின் அறிவிக்கை;
  • காட்டு விலங்குகள் மற்றும் அலைந்து திரியும் கால்நடைகளின் அச்சுறுத்தல்கள்;
  • பருவநிலை மாற்றம் மற்றும் பாரீஸ் உச்சிமாநாட்டில் மேற் கொள்ளப்பட்ட சமரசம்;
  • இவை அனைத்திற்கும் மேலாக கவலைதரத்தக்க வகையில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை மீதான எதேச்சாதிகார, வகுப்புவாதத் தாக்குதல்கள்.

நாடுதழுவிய அளவில் விவசாயிகளின் எதிர்ப்பு
இத்தகைய பின்னணியில் பாஜக அரசின் விவசாயக் கொள்கைகளுக்கு விவசாயிகளின் எதிர்ப்பு மேலும் விரிவடைந்துள்ளதும் தீவிரமாகி யுள்ளதும் வியப்பை ஏற்படுத்தாது.

விவசாயி களின் இந்த எதிர்ப்பு இரண்டு முக்கிய பகுதி களைச் சுற்றியே அமைந்துள்ளது:

நிலம் மற்றும் நிலம் தொடர்பான விஷயங்களுக்காக நடை பெறும் போராட்டங்கள்; இயற்கையாகவே கடனிலிருந்து விடுதலை பெறுவது மற்றும் விவசாயப் பொருட்களுக்கான கட்டுப்படியாகும் விலை ஆகியவற்றைச் சுற்றியுள்ள விவசாயிகளின் துயரங் களுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை ஆகும்.

தமிழில்: வீ.பா.கணேசன்



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: