மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது …


 

(குரல் : யாழினி)

  • ஹர்கிசன் சிங் சுர்ஜித்

(மார்க்சியத்தை திரித்து முன்வைக்கும்)  திரிபுவாதத்துக்கெதிரான பத்தாண்டு காலப் போராட்டம் 1964 கல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது கட்சி மாநாட்டில் அதனிடமிருந்து மொத்தமாக பிரிந்து செல்வதில் முடிவடைந்தது…

முதல் கட்டத்தில்  1964, ஏப்ரல் 11 அன்று ஒன்றுபட்ட (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) தேசிய கவுன்சிலிலிருந்து வெளியேறிய முப்பத்து இரண்டு உறுப்பினர்களின் அறிக்கை மிக முக்கியத்துவமுடையது.  இந்த அறிக்கை இந்தியாவில் ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கும், பெரும் தியாகங்களால் அது உருக்குப் போல் வலுப்பெறவும் பங்களித்தது.  ஒற்றுமைக்கான விவாதங்களில் அனைத்து பகுத்தறிவுள்ள முன்மொழிவுகளையும் நிராகரித்த (அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) டாங்கே தலைமையிலான திரிபுவாதிகளுடன் ஏற்பட்ட கடைசிப் பிரிவை விளக்கும்போது அறிக்கை கூறுகிறது, “இரண்டு நாட்கள் சூழலை மீளாய்வு செய்யும்போது, டாங்கேயைப் பின்பற்றுவோரின்   அணுகுமுறைக்கெதிரான எங்களது போராட்டம் கட்சி விரோத குறுங்குழு முறைக்கும், திரிபுவாத அரசியல் வழிமுறைக்கும் எதிரான போராட்டம் என்ற ஒருமனதான முடிவுக்கு நாங்கள் வந்தோம்”.  சில தத்துவார்த்த விஷயங்களில் எங்களுக்கிடையே எந்த வேறுபாடுகளும் இல்லையென்பதில்லை, ஆனால் தற்காலிகமாக ஏற்கப்பட்டுள்ள நகல் திட்டத்தில் நாங்கள் ஒன்றுபட்டு நின்றோம்.  தத்துவார்த்த, அரசியல் கேள்விகளில் மேற்கொண்டு கருத்துப் பரிமாற்றத்தை ஒட்டுமொத்த கட்சி உறுப்பினர்களையும் இந்த விவாதத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.  நாடு முழுவதிலும் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு, ஊக்கமளிப்பதாக இருந்தது.  ஏழாவது மாநாட்டை நடத்த அழைப்பு விடுக்கவும், முந்தைய பத்தாண்டுகளுக்கு நடந்த விவாதங்களின் அடிப்படையில் நகல் கட்சித் திட்டத்தை நிறைவேற்றவும் தெனாலியில் நாங்கள் கூடினோம்.

1964இல் கல்கத்தாவில் நடந்த கட்சியின் ஏழாவது மாநாடு ஒன்றுபட்ட கட்சியிக்குள் திரிபுவாத்துக்கெதிரான நமது போராட்டத்தின் முடிவைக் குறித்தது.  அது திரிபுவாதத்திடமிருந்து ஒரு திட்டம் சார்ந்த, ஸ்தாபன, தத்துவார்த்த உடைப்பைக் குறித்தது.  அதனுடன் நீண்டகால உத்தியில் ஒட்டுமொத்த வரையறையும் சேர்ந்தது.  இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறில் கட்சியின் ஏழாவது மாநாடு நிச்சயமாக ஒரு திருப்புமுனை.   அது ஒரு புதிய கட்சித் திட்டத்தையும், கடமைகள் குறித்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியது.  அதில் இந்தியப் புரட்சியில் நீண்ட கால உத்தியும், உடனடி உத்தியும் தீர்மானிக்கப்பட்டு விரிவாக விளக்கப்பட்டிருந்தன.  இந்திய நிலைமை குறித்த அனைத்து திரிபுவாத உருவாக்கங்களையும் அது நிராகரித்து நாட்டின் வர்க்க குணாம்சத்தை சரியான முறையில் நிர்ணயித்து பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படும் பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவ வர்க்கம் என வரையறை செய்து விளக்கியது.  இந்திய அரசு தேசிய முதலாளிகளால் தலைமை தாங்கப்படுவது, எனவே அதை ஆதரிக்க வேண்டுமென்ற அன்றைய  சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை அது நிராகரித்தது.  அதே நேரத்தில் கட்சி மாநாடு சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுத்திருந்த நிலைபாட்டையும் ஏற்கவில்லை.  ஜவஹர்லால் நேருவால் தலைமை தாங்கப்படும் அரசு ஒரு பொம்மை அரசு, தரகு முதலாளித்துவத்தின் பிரதிநிதி என்ற நிலைபாடு ஏற்கப்படவில்லை.  அணிசேராக் கொள்கையில் முன்னணியில் அது இருந்த நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சார்ந்துள்ளது என்ற நிலைபாட்டையும் கட்சியானது ஏற்கவில்லை.

ஒரு மார்க்சிய-லெனினியப் பாதைக்கான நமது கட்சியின் போராட்டம் மிகவும் தீவீரமான, கடினமான சூழலில் நடத்தப்பட்டது.  1962 இந்திய-சீனப் போரின்போது ஒன்றுபட்ட கட்சியின் நமது தலைவர்கள் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறை வைக்கப்பட்டனர்.  இது வர்க்கக் கூட்டணி என்ற பாதையை ஆதரித்தோருக்கு “கடவுளே” அளித்த வாய்ப்பாகி விட்டது.  அவர்கள் புதிய சூழலில் தேசிய கவுன்சிலில் பெரும்பான்மை பெற்று விட்டனர்.  அவர்கள் இந்த வாய்ப்பை காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் ஒற்றுமை என்ற திரிபுவாதப் பாதையை எதிர்த்தவர்களுக்கெதிராக அரசியல், ஸ்தாபனத் தாக்குதலைத் தொடுக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.

மொத்தத்தில் ஏழாவது மாநாடு 1951இன் நீண்டகால உத்திப் பாதையை ஏற்றதுடன், ஒரு புரட்சிகரக் கட்சிக்குத் தேவையான சில மாற்றங்களையும் அமைப்புச் சட்டத்தில் செய்தது.

ஏழாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கட்சியின் நீண்டகால உத்திக்கான பாதைக்கான தீர்மானம் அந்த சூழலில் இயக்கத்தை வளர்த்தெடுக்க சரியான திசையை அளித்தது.  தொழிற்சங்க இயக்கம், விவசாயிகள் இயக்கம் மற்றும் கட்சி ஸ்தாபனங்களில் நிலவிய பலவீனங்களை விரைவில் அகற்றுமாறும், அனைத்து வகையிலும் ஒரு கட்சி உணர்வை ஊட்டுமாறும் அது உத்தரவிட்டது.  ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சியை வளர்த்தெடுக்க, தீர்மானம் ஒரு எச்சரிக்கையை விடுத்தது: “மார்க்சிய லெனினியத்தின் மதச்சார்பற்ற அடித்தளத்தை தொடக்கமாக, வளர்ப்பதாக, தலைவராக வெகுஜன இயக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் மாற்றி கட்சியை வளர்க்காமல் இந்தப் பணிகளை நிறைவேற்ற முடியாது.  நமது செயல்பாடு அடிப்படை வர்க்கங்களின் பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.  அது மட்டுமே ஒட்டுமொத்த கட்சியையும் புத்துயிரூட்டும் இணைப்பை ஏற்படுத்த முடியும்.

”கட்சிக்குள் திரிபுவாதத்துக்கெதிரான போராட்டம் திட்டமுறையில் நடத்தப்பட வேண்டும்.  அதே நேரத்தில், குறுங்குழுவாத வெளிப்பாடுகளுக்கெதிராகக் கட்சி விழிப்புடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.   இந்த நோக்கத்துக்காக மத்தியக்குழு கட்சிக்குள் இவற்றின் வெளிப்பாடுகள், அவற்றின் அரசியல், தத்துவார்த்த வேர்கள், திரிபுவாதத்துக்கெதிரான போராட்டத்தின் பலவீனங்கள் ஆகியவற்றை விளக்கும் ஒரு ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும், ஒட்டுமொத்த கட்சிக்கும் கற்பிக்க வேண்டும்.

”கட்சி மூலப்புத்தகங்களைப் படிப்பதை ஏற்பாடு செய்து ஊக்குவிப்பதுடன், நமது நாடு மற்றும் இயக்கத்தின் சரியான பிரச்சனைகளை திட்டமிட்ட முறையில் ஆய்வு செய்து, அவற்றை மாற்றிட மார்க்சியக் கோட்பாட்டைப் பயன்படுத்தக் கற்க வேண்டும்.”

இந்த விஷயத்தில் ஏங்கெல்சின் வலியுறுத்தலை நினைவில் கொள்ளலாம்.  ஜெர்மெனியில் விவசாயிகள் போராட்டம் என்ற புத்தகத்தின் முன்னுரையில் அவர் வர்க்கப் போராட்டம் மூன்று வகைகளில் நடத்தப்படுவதாகச் சுட்டிக் காட்டுகிறார்.   அவை தத்துவார்த்த, அரசியல், நடைமுறைப் பொருளாதார வழிமுறைகள் ஆகும். இவற்றில் அவர் சரியான போராட்டங்களின்  முக்கியத்துவத்தை அழுத்தமாகக் கூறினார்.  அதில்தான் இயக்கத்தின் வலுவும், வெல்லமுடியாத தன்மையும் அடங்கியுள்ளன.

ஏழாவது மாநாடு கட்சியின் உருவாக்கத்திலிருந்து மிகவும் முக்கியமான, தீர்மானகரமான கட்சி மாநாடாக நிலைத்துள்ளது.  மார்க்சிய லெனினியத்தை மிகச்சரியாக புதிய, புதிய சூழ்நிலைகளில் எப்படி செயல்படுத்துவது என்பதை நாம் அதிகமாகக் கற்க வேண்டியுள்ளது.  இந்தத் தொகுதியில் ஏழாவது மாநாட்டின் உறுதிப்பாடு இந்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

 

(இந்திய கம்யூனிஸ்ட் இயக்க ஆவணங்கள், முதல் பாகத்திற்கு எழுதிய  முன்னுரை)

 



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: