மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்தியாவில் வேலையின்மை நெருக்கடி


வெங்கடேஷ் ஆத்ரேயா

முதலாளித்துவ அமைப்பிற்கு முந்தைய சமூகங்களில் பொதுவாக கூலி உழைப்பு என்பது கிடையாது. எனவே பகிரங்கமாக வேலை தேடித் திரியும் வேலையில்லா பட்டாளங்களும் கிடை யாது. இதன் பொருள் அச்சமூகங்களில் மனித உழைப்பு என்ற உற்பத்திக்கான வளம் முழுமை யாக பயன்பட்டது என்பதல்ல. அவரவர்கள் சுய தொழில் செய்துவந்த நிலையில் லாப வேட்டை யாலும் போட்டியாலும் உந்தப்படாத சூழலில் உழைக்கும் அளவும் நேரமும் பல்வேறு தொழில் களுக்கு இடையேயும் பருவங்கள் சார்ந்தும் வேறு பல காரணங்களாலும் சமூகத்தில் ஒரே சீராக இருந்ததில்லை. உற்பத்தி சக்திகளின் அளவு குறை வாகவும்  அவற்றின் வளர்ச்சி மெதுவானதாகவும் இருந்த அச்சமூகங்களில் சராசரி உழைப்பு நேர மும் குறைவாக இருந்திருக்க வாய்ப்பில்லை. குடும்பங்கள் தம்மை மறு உற்பத்தி செய்து கொள் வதற்கு தங்கள் உழைப்பை அதிகம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தனர். (விதிவிலக்கு சுரண்டும் வர்க்கத்தினர் – பிறர் உழைப்பில் சுகபோக மாக வாழ்ந்துவந்த எஜமானர்களும் நிலப்பிரபுக் களும் அரச குடும்பங்களும் அவர்களது அடிவருடி களும்) 

முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகங்களில் உழைப்போர் ஒருபுறம் கடுமையாக சுரண்டப் பட்டாலும் அவர்களது உழைப்பு நேரத்தின் மீதும் உழைப்பு சக்தியின் மீதும் அவர்களுக்கு முழு உரிமை மறுக்கப்பட்ட போதிலும் அவர் களுக்கான அடிப்படை ஜீவாதார உத்தரவாதங் கள் இருந்தன. இவை இன்றைய நிலையில் இருந்து காணும்பொழுது மிகத் தாழ்வான வாழ்க்கை நிலையைத்தான் தந்தன என்றாலும், முதலாளித்துவத்திற்கு முந்தைய காலங்களில் உழைக்கும் மக்கள் அடிமைகளாகவோ, விவசாயி கள் உள்ளிட்ட சிறு உற்பத்தியாளர்களாகவோ இருந்தமையால் பகிரங்கமாக வேலை தேடித் திரியும் காட்சிகள் இல்லை. வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்ற தாக்குதல்கள் அவர்களை புலம் பெயரச் செய்ததுண்டு.  ஆனால் வேலையில்லா பட்டாளம் என்ற ஒரு சமூக நிகழ்வு அச்சமூகங் களில் இல்லை.  முதலாளித்துவத்தை நோக்கி நிலப்பிரபுத்துவ சமூகம் வேகமாக மாறிய காலத்தில்தான், உற்பத்திக்கருவிகளில் இருந்து அன்னியப்படுத்தப்பட்ட, பலவந்தமாக பிரிக்கப் பட்ட இத்தகைய பட்டாளங்கள் சமூகத்தின் அன்றாட காட்சிகளாக மாறத் துவங்குகின்றன.

வேலையின்மை

முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியில் பெரும்பகுதி உழைப்பாளிகள் கூலி தொழிலாளி களாக மாறுவதும், முதலாளிகளிடம் வேலைக்கு சேருவதும் இயல்பான நிகழ்வாக தோன்றுகிறது. முதலாளித்துவ அமைப்பில்தான் முதல்முதலாக பெருமளவில் மனிதர்கள் வேலை தேடி அலைவ தும், வேலை கிடைக்காமல் தவிப்பதும் நிகழ் கிறது. இதனை இங்கு ஏன் சொல்கிறோம் என்றால் இந்தியா இன்னமும் முழு முதலாளித் துவத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் சமூகம் என்பதை நினைவுபடுத்தவேண்டியுள்ளது. எனவே, இங்கு பகிரங்கமான வேலையில்லா பட்டாளங்கள் ஒருபக்கம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் சுயவேலை செய்வோர் மத்தியில் தங்கள் உழைப்பை முழுமை யாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. ஆனால் இவையெல்லாம் வேலையின்மை கணக்கில் வருவதில்லை. அதே சமயம், வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டோர்க்கு சமூகப் பாதுகாப்பு அற்ற நமது நாட்டில், ஏழை கள் ஏதாவது வகையில் உழைப்பை செலுத்திக் கொண்டேயிருந்தால்தான் வயிற்றை கழுவிக் கொள்ள முடியும். இதன் பொருள், பலரும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இவர்களின் வரு மானம் மிகவும் சொற்பமாக இருந்தாலும் இவர் கள் வேலையில்லாதோர் கணக்கில் வரமாட்டார் கள். இவற்றை எல்லாம் மனதில் நிறுத்திக் கொண்டு இன்று இந்தியா  எதிர்கொள்ளும் வேலை யின்மை பிரச்சினையை பரிசீலிப்போம்.

வேலையின்மை அன்றும் இன்றும்

நாடு விடுதலை பெற்ற காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் (1928-1940) கால மகத்தான வளர்ச்சியும் மேலை நாடுகள் எதிர்கொண்ட (1929-1939) கால நீண்ட பொருளாதார பெரும் வீழ்ச்சியும் பொருளாதார வளர்ச்சியில் அரசாங் கம் மையப்பங்கு ஆற்ற வேண்டும் என்பதையும், மையப்படுத்தப்பட்ட  திட்டமிடுதல் அவசியம் என்பதையும், சுதந்திர இந்தியாவின் ஆளும் வர்க்கத்திற்கு உணர்த்தியிருந்தன. 1950 – 1966 காலத்தில் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் அமலாக்கப்பட்டன. கணிசமான அளவில் தொழில் துறை, கட்டமைப்பு துறை, நிதித் துறை, கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட மனிதவளத் துறை சார்ந்த முதலீடுகளை பொதுத்துறை மூலம் அரசாங்கம் மேற்கொண்டது. பொதுத் துறை முதலீடுகள், இறக்குமதிக்குப் பதில் உள்நாட்டில் உற்பத்தி, குறுகிய வரம்புகளுக்குட்பட்ட நிலச் சீர்திருத்தம் ஆகிய நடவடிக்கைகள் உள்நாட்டு சந்தையை விரிவடையச்செய்தன. 1900-1950  கால ஐம்பது ஆண்டு தேக்க நிலையில் இருந்து இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 4ரூ என்ற வேகத்தில் வளர்ந்தது. நகர்ப்புறங்களில் விவசாயம் அல்லாத துறைகளில் வேலை வாய்ப்புகள் வேகமாக வளர்ந்தன. மூன்றாம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் (1961 – 66) ஆலைத்துறை வேலை வாய்ப்பு ஆண்டுக்கு கிட்டத் தட்ட 6ரூ என்ற வேகத்தில் வளர்ந்தது.  நிலச்சீர் திருத்தம் கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்கள் கிடப்பில் போட்டிருந்த நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வர உதவியது. பொதுத்துறை முதலீடு கள் மூலம் பாசனமும் மின்சார உற்பத்தியும் அதிகரித்ததால் ஒரு பகுதி நிலங்களில் இரண்டு, மூன்று போக சாகுபடி சாத்தியமாயிற்று. 1960 களின் நடுப்பகுதியில் இருந்து திட்டமிடுதல் நெருக்கடிக்கு உள்ளாகிய போதிலும், அரசின் முதலீட்டு முடக்கத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்ட போதிலும், பசுமை புரட்சி மூலம் 1966 முதல் 1980கள் வரை விவசாயத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரித்தன. அரசின் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டமும் (ஐ ஆர் டி பி – IRDP) வேலை வாய்ப்புகளை கூட்டியது. ஆனால் துல்லியமான ஆய்வுகளின் அடிப்படையிலான  வேலை வாய்ப்பு கள் மற்றும் வேலையின்மை பற்றிய தரவுகள் சேகரிக்கப்படும் முயற்சி 1970களில்தான் துவங்கி யது.

தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO – National Sample Survey Organization) 1972-73 ஆம் ஆண்டில் வேலை வேலை யின்மை பற்றிய நாடு தழுவிய ஆய்வை முதல் முறையாக நடத்தியது. அதன்பின் ஒவ்வொரு ஐந்தாண்டு காலத்திற்குப்பின் இத்தகைய ஆய்வு கள் தொடர்ந்து மேற்கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு 1972-73, 1977-78, 1983, 1987-88, 1993-94, 1999-2000, 2004-05, 2009-10 ஆகிய ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 2009-10 வறட்சி ஆண்டு என்ற காரணத்தை கூறி அன்றைய திட்டக்குழு 2011-12 ஆண்டில் மீண்டும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுகள் அனைத்தும் பொதுவாக சிறப்பாக செய்யப்பட்டன. இவற்றில் கிடைத்த புள்ளி விவரங் கள், அவை மீதான கருத்தாழமிக்க ஆய்வுகள் அடங்கிய அறிக்கைகள் ஒவ்வொரு ஆய்வுக்குப் பின்பும் தயார் செய்யப்பட்டு அச்சடிக்கப்பட்ட வடிவிலும் கூடுதலாக அண்மை ஆண்டுகளில் இணைய தளம் வாயிலாகவும் வெளியிடப் பட்டன. வேலையின்மை பற்றியஇந்த வெளிப் படையான அணுகுமுறையை மோடி தலைமை யிலான பாஜக அரசு பின்பற்ற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வெளிவந்துள்ள இவ்வறிக்கைகள் தாராளமய காலத்தில் வேலை வாய்ப்ப்புகள் முன்பைவிட குறைவான வேகத்தில் தான் அதிகரித்துள்ளன என்பதையும் வேலை யின்மை பிரச்சினை இக்கால கட்டத்தில் அதிகரித் துள்ளது என்பதையும் காட்டு கின்றன.

2011-12க்குப்பின் 2016-17இல் அடுத்த ஆய்வு நடந்திருக்க வேண்டும். ஆனால் பாஜக அரசு ஆய்வை நடத்தவில்லை. அந்த ஆண்டில் நவம்பர் மாதம் எட்டாம் நாள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி பிரகடனம் செய்தார். அதற்குப் பிறகு பணமதிப்பிழப்பு சூறாவளி ஒருபுறமும், அதன் மோசமான விளைவுகளை மறைக்க முயலும் மோடி அரசின் பிரச்சார சூறாவளி மறுபக்கமும் மக்களை தாக்கின. பல கேள்விகள் எழுப்பப்பட்டபின் 2017-18 ஆண்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. களஆய்வு முடிந்து அறிக்கையும் தயாராகி விட்டது. டிசம்பர் 2018 இல் தேசிய புள்ளியியல் ஆணையம் அறிக்கையை ஏற்று ஒப்புதலும் அளித்துவிட்டது. ஆனால் மோடி அரசு அறிக்கையை வெளியிடா மல் இன்றுவரை இழுத்தடித்துவருகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் 2017-18க்கான ஆய்வு அறிக்கை வேலையின்மை விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதை படம் பிடித்துக்காட்டுகிறது என்பதாகும். தாராளமய கொள்கைகள் மட்டு மின்றி, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக் கையும், குழப்பம் நிறைந்த ஜி எஸ் டி அமலாக்க மும் வேலையின்மை பிரச்சினையை தீவிரப்படுத்தி யுள்ளன என்பதை ஆய்வின் தரவுகள் உறுதி செய்கின்றன.

வேலையின்மை புள்ளிவிவரங்கள்: சிறு விளக்கம்

வேலையின்மை பிரச்சினையின் இன்றைய அளவு மற்றும் தன்மை ஆகியவற்றுக்குள் செல்வ தற்கு முன், வேலையின்மையை கணக்கிடுவதில் உள்ள சில நுட்பமான அம்சங்கள் பற்றி பார்ப் போம். முதலில், உழைப்பு படை என்பதன் இலக்கணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் உள்ள அனைவரும் உழைப்புப் படை யில் இல்லை. குழந்தைகள், மிக அதிக வயதில் உள்ளவர்கள், பல காரணங்களால் வேலை செய்ய இயலாத நிலையில் உள்ளோர், படித்துக் கொண்டிருப் பவர்கள் என்று மொத்த மக்கள் தொகையில் ஒரு குறிப்பிடத்தக்க விகிதத்தினர் பொருளாதார உற்பத்தி சார்ந்த வேலை செய்வதும் இல்லை; அத்தகைய வேலை தேடுவதும் இல்லை. இவர் களை உழைப்பு படைக்கு அப்பால் உள்ளவர்கள் என்று அழைக்கிறோம். இவர்களில் ஒரு கணி சமான பகுதியினர் வீட்டு வேலைகளில், குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவு செய்வ தில் கடுமையாக உழைக்கும் பெண்கள் ஆவர். இவர்களின் உழைப்பு இன்றியமையாதது என்றா லும், இவ்வித உழைப்பு அதிகாரபூர்வ புள்ளிவி வரக் கணக்குகளில் தேச உற்பத்திசார் உழைப் பாக கருதப்படுவதில்லை. இந்த உழைப்பை மட்டுமே செலுத்துவோர் உழைப்பு படை என்ற கணக்கில் வருவதில்லை. மற்றொரு முக்கிய பகுதி பல்வேறு நிலை படிப்புகளில் உள்ள மாணவ மாணவியர் ஆவர்.

வேலையில் இருப்போர், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் என்ற இரண்டு வகையினர் சேர்ந்ததுதான் உழைப்பு படை. இதில் வேலையில் உள்ளவர்கள் வேலைப்படை யில் உள்ளனர். உதாரணமாக, கடந்த ஒரு ஆண்டை கால வரம்பாக வைத்து  1,000 பேரிடம் கணக்கு எடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு கணக்கெடுக் கப்படும்பொழுது 600 பேர் கடந்த ஒரு ஆண்டில் சில நாட்களாவது ஏதோ ஒரு பணியில் – சுய தொழில் அல்லது கூலி/சம்பள உழைப்பு – ஈடுபட்டிருக்கலாம். மேலும் ஒரு சிலர் – 25 பேர் என்று எடுத்துக்காட்டுக்காக கொள்வோம் – கடந்த ஒரு ஆண்டில் வேலை தேடியும் வேலை கிடைக்காதவர்களாக இருக்கலாம். ஆக உழைப்பு படையின் எண்ணிக்கை 625. மீதி 375 (1000 – 625 = 375) பேர் குழந்தைகளாகவோ படித்துக் கொண்டிருப் பவர்களாகவோ மிகவும் முதியோர் அல்லது வேறு காரணங்களுக்காக உழைக்கும் நிலையில் இல்லாதவர்களாகவோ இருக்கலாம். இவர்கள் உழைப்பு படையில் இல்லாதவர்கள். இந்த உதாரணத்தில் வேலையின்மை விகிதம் = வேலை கிடைக்காதவர்கள் / மொத்த வேலைப் படை =  25 / 625 அல்லது 1/25, அதாவது 4%.

வேலையின்மை விகிதத்தை கணக்கிடும் பொழுது என்ன கால வரம்பை வைத்து ஒருவர் வேலை யில்லாதோர்  பட்டியலில் இடம் பெறுகிறார் என்பது ஒரு முக்கிய கேள்வி. ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு வேலையில் (சுய வேலை, கூலி/சம்பள வேலை) இருந்திருக்கலாம். ஆனால் கடந்த ஒருவாரம் அவருக்கு எங்கும் வேலை கிடைக்காமல் இருந்திருக்கலாம். கடந்த ஒரு ஆண்டை வரம்பாக வைத்துக்கொண்டால், இந்த நபர் வேலையில்லாதோர் பட்டியலில் இடம் பெற மாட்டார். கடந்த ஒருவாரம்தான் காலவரம்பு என்றால், இந்த நபர் வேலையில்லாதோர் பட்டியலில் இடம் பெறுவார். 

நமது நாட்டில் வேலையில் இல்லை; எனவே வருமானம் இல்லை என்றால் சாப்பாட்டுக்கு வழியில்லை என்பதுதான் பெரும்பகுதி மக்களின் நிலைமை. இதற்கு விதிவிலக்கு செல்வந்தர்கள் மட்டுமே. தமது செல்வம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வேலை செய்யாமலே அவர்கள் வசதியாக வாழ முடியும். ஒரு ஆண்டு என்பதை கால வரம்பு என்று கொண்டால் உழைப்பு படையில்  மிகச்சிலரே வேலைஇல்லாதோர் பட்டியலில் இடம் பெறுவர். மற்றவர்கள் ஏதோ ஒரு கூலி / சம்பள வேலையில் அல்லது சொந்த விவசாயம், வர்த்தகம், தொழில் வேலைகளில் இருப்பார்கள். இவை எதுவும் கிடைக்காத நிலை யில், ஏதோ ஒரு சுய வேலையை உருவாக்கிக் கொண்டு வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருப் பார்கள். மிகச் சிலர்தான் வருடம் முழுவதும் வேலை தேடியும் கிடைக்காமல் இருப்பவர்களாக கணக்கில் வருவர்.

கடந்த ஒரு ஆண்டை கால வரம்பாக வைத்து ஒருவர் வேலையில் இருந்தார்; அல்லது இல்லை என்று முடிவுசெய்வதை  மாமூல் வேலை நிலை (usual status – US) என்று அழைப்பது வழக்கம். இதன்படி மேலே கொடுக்கப்பட்ட உதாரணத் தில் மாமூல் நிலை அடிப்படையில் வேலையின்மை விகிதம் 4ரூ. இதற்குப்பதில், “கடந்த ஒருவாரத்தில் நீங்கள் ஏதேனும் வேலை செய்தீர்களா?” என்று கேட்டு விவரம் சேகரிக்கலாம்.  கடந்த ஒருவார மாக வேலையில் இருந்ததாக நிர்ணயிக்கப்படும்  நபர்களின் எண்ணிக்கையையும், “கடந்த ஒருவார மாக வேலை தேடிக்கொண்டிருந்தேன், ஆனால் எந்த வேலையும் கிடைக்கவில்லை”  என்று சொல்லுகின்ற நபர்களின் எண்ணிக்கையையும் கூட்டினால் கிடைக்கும் எண்ணிக்கை நடப்பு வாராந்தர நிலை அடிப்படை யில் மொத்த வேலைப் படையாகும். கடந்த வாரத்தில் வேலைகிடைக்காதோரின் எண்ணிக் கையை வாராந்தர நிலை அடிப்படையிலான மொத்த வேலைப்படையின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பது ஊறுளு வேலையின்மை விகிதம் பொதுவாக, ஊறுளு வேலையின்மை விகிதம்  மாமூல் நிலை வேலையின்மை விகிதத்தை விட அதிகமாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, 1,000 நபர்களிடம் கடந்த ஏழு நாட்களில் ஏதேனும் வேலையில் இருந்தீர்களா என்று கேட்டால் 550 நபர்கள் வேலையிலும் 50 நபர்கள் வேலை இல்லாமலும் மீதம் 400 பேர் உழைப்பு படைக்கு வெளியேயும்  இருக்க வாய்ப்பு உண்டு. இந்த நிலையில், ஊறுளு வேலை  விகிதம் 50/ (550 + 50) = 50/600 = 1/12 அல்லது 8.33%

வேலையின்மை விகிதம் நகரம்/கிராமம், பாலினம், வயது, கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படை யில் வேறுபடும். பொதுவாக இளைஞர்கள் மத்தி யிலும் கல்வி பெற்றவர் மத்தியிலும் வேலையின்மை விகிதம் சராசரியை விட அதிகமாக இருக்கும்.

இப்பொதுவான அறிமுகத்துடன் தற்சமயம் நிலவுகின்ற வேலையின்மை விவரங்களை பரிசீலிப் போம்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி

2017-18க்கான உழைப்பு படை பற்றிய அறிக்கையை வெளியிடாமல் மத்திய அரசு காலம் தாழ்த்து கிறது என்பதை ஏற்கெனவே நாம் குறிப்பிட் டோம். இந்த தாமதமும் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பொறுப்பு தலைவர் திரு பி.சி.  மோகனன் அவர்களும் அதன் உறுப்பினர் தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜே. வி. மீனாட்சி அவர்களும் அந்த ஆணையத்தில் இருந்து தமது பதவிகளை ராஜினாமா செய்து வெளியே வந்த தற்கு ஒரு முக்கிய காரணம். இதுபற்றி திரு மோகனன் அவர்கள் அண்மையில் விளக்கி யுள்ளார். இந்த ஆய்வு அறிக்கையை அரசு வெளியிட மறுத்தாலும் பிசினஸ் ஸ்டான்டார்ட் என்ற ஆங்கில நாளிதழ் ஜனவரி மாத இறுதியில் அறிக்கையின் முக்கிய விவரங்கள் சிலவற்றை வெளியிட்டது.  இதன்படி, 1977-78 இல் இருந்து  2011-12 வரை 2% இல் இருந்து 2.5ரூ க்குள்ளேயே இருந்த மாமூல் வேலையின்மை விகிதம் 2017-18 இல் ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகரித்து 6.1 % ஆக இருந்தது. நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில் மிகவும் அதிகமான அளவிற்கு, பல மடங்கு வேலையின்மை விகிததம் உயர்ந்துள்ளது. பாஜக அரசிற்கே என்ற விவரத்தை மறைக்கவே  எனவே தான்அரசு இதுவரை அறிக்கை வெளிவராமல் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால் விவரங் கள் எப்படியும் வெளியே வந்துவிட்டன. இப்பொழுது தனது தேர்தல் பிரச்சாரத்தில் வேலை வாய்ப்பு பற்றி தப்பி தவறிக்கூட பாஜக பேசுவதில்லை. இந்த அறிக்கை மட்டுமல்ல. இதே காலத்தில் வெளிவந்துள்ள இரு தனியார் துறை ஆய்வுகளும் கிட்டத்தட்ட இதே மாதிரியான தகவல்களை கூறுகின்றன. ஊஆஐநு என்ற தனியார் நிறுவனம் – ‘Centre for Monitoring the Indian Economy’, அதாவது, “இந்திய பொருளாதாரத்தை கண் காணிக்கும் மையம்”, 2017 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் பணமதிப்பிழப்பு பிரச் சினையின் கடும் தாக்குதலால் 15 லட்சம் வேலை கள் இழக்கப்பட்டன என்று தெரிவித்தது. பின்னர், 2017 டிசம்பர் முதல் 2018 நவம்பர் வரையிலான காலத்தில் ஒரு கோடியே பத்து லட்சம் வேலைகள் காணாமல் போய்விட்டன என்று தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் ஆய்வுகள்  2018 மே மாதம் வேலையின்மை விகிதம் 5.14ர% ஆக இருந்தது என்றும்  ஏப்ரல் 2019இல் 7.60% ஆக அதிகரித்துள்ளது என்றும் கூறு கின்றன. இதேபோல் பெங்களூரில் உள்ள  அஜிம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம் தனது ஆய்வு ஒன்றில் நவம்பர் 2016 முதல் 2018 முடிய 50 லட்சம் வேலை கள் இழக்கப்பட்டுள்ளன என்றும் இதற்கு ஒரு முக்கிய காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்றும் குறிப்பிடுகிறது. ஏற்கெனவே, மத்திய அரசின் உழைப்பு வாரியம் – லேபர் ப்யூரோ – தனது செப்டம்பர் 2016 அறிக்கை யில் மாமூல் வேலையின்மை விகிதம் 5% ஐ எட்டி விட்டது என்று பதிவிட்டது. அதன்பின் லேபர் ப்யூரோ அறிக்கைகளும் வெளிவரவில்லை. இது தற்செயலான நிகழ்வு அல்ல என்றே கருதவேண்டி யுள்ளது. பணமதிப்பிழப்பு, அதன்பின் வந்த ஜிஎஸ்டி குளறுபடி இவற்றால் பொருளாதாரம் சிதைவுற்றுள்ள நிலையில் புள்ளிவிவரங்களை வெளியிடுவதே ஆபத்து என்று மோடி அரசு கருதுகிறது. தேசிய குற்றப்பதிவேட்டு வாரியமும் மூன்று ஆண்டுகளாக அறிக்கை களை வெளியிடவில்லை. மோடி அரசின் கீழ் ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வு நிறுவனம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற பல நிறுவனங்கள் சிதைக்கப்பட்டு வருவதைப் போல், மத்திய புள்ளியியல் அமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அரசு தரும் விவரங்கள் நமபகத்தன் மையை இழந்துள்ளன.  வேலையின்மை பிரச் சினையில் அரசுக்கு ஆதரவான விவரங்களை வெளியிடுவதற்கு அரசால் முடியவில்லை. முத்ரா திட்டம் பற்றிய உண்மை விவரங்கள் வெளிவந்த பிறகு பெருமளவில் வேலை உருவாக்கம் நிகழ்ந் துள்ளதான கதையாடலுக்கு அதுவும் கைகொடுக்க வில்லை.

அரசு மறைத்த அறிக்கை தரும் செய்திகள்

மோடி அரசால் இன்றுவரை மறைக்கப்பட் டுள்ள 2017-18க்கான உழைப்பு படை பற்றிய அறிக்கை பல முக்கிய விவரங்களை நமக்கு தருகிறது. இதன் ஒரு முக்கிய அம்சத்துடன் தொடங்கலாம். 2011-12 முதல் 2017-18  வரையிலான ஆறு ஆண்டுகளில் வேலைப்படையில் உள்ளவர் களின் எண்ணிக்கையே குறைந்துள்ளது. 2011-12 இல் நகரப்பகுதியில் 8.915 கோடி நபர்களும் கிராமங்களில்21.488 கோடி நபர்களும் ஆக மொத்தம் 30.4 கோடி மக்கள் வேலைப்படையில் இருந்தனர்.  2017-18 இல் நகரப்புறங்களில் 8.492 கோடி நபர்களும்  கிராமங்களில்  20.10 கோடி நபர்களும் என மொத்தமாக 28.6 கோடி நபர்கள் தான் வேலைப்படையில் இருந்தனர்.  அதாவது, மக்கள் தொகை இக்காலத்தில் பெருகியிருந்தா லும் வேலையில் இருப்போர் எண்ணிக்கை சுருங்கி விட்டது. கடும் வேலைப்பஞ்சம் நாட்டில் உருவாகியுள்ளது. ஏற்கெனவே 1983, 1993-94, 2011-12 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட என் எஸ் எஸ் ஆய்வுகளில் இருந்து தாராளமய கால கட்டத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது. ஆனால், மோடி அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் தாராளமய கொள்கைகளோடு கூடுதல் தாக்குதல்களாக – பெரும் தாக்குதல்களாக வேலை வாய்ப்பை அழித்தொழிப்பதில் பங்களித் துள்ளன. நாடு பாய்ச்சல் வேகத்தில் பொருளா தார வளர்ச்சியை தனது ஆட்சியில் சாதித்து வருவதாக தம்பட்டம் அடித்துவந்த பிரதமரும் ஆளும் கட்சியினரும், இதேகாலத்தில்  வேலை யில் உள்ளோர் எண்ணிக்கையே குறைந்துள்ளது என்ற செய்தியை மூடிமறைக்க கடும் முயற்சி செய்தனர். அதையெல்லாம் தகர்த்து இப்பொழுது இந்த அறிக்கை உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அடுத்து, வேலைவீழ்ச்சி பெரும் அளவிற்கு வேளாண் துறையை  பாதித்துள்ளது. கிராமங் களில் கடந்த ஆறு ஆண்டுகளில் விவசாயத்தில் வேலை செய்யும் (உழைக்கும் வயதில் உள்ள) ஆண்களின் சதவிகிதம் 48 இல் இருந்து  40 ஆக குறைந்துள்ளது. ஆனால் பிற துறைகளில் வேலை கள் அதிகம் உருவாகவில்லை. இதன் விளைவாக வேலையில் இல்லாத ஆண்களின் சதவிகிதம் 20 இல் இருந்து  28 ஆக அதிகரித்துள்ளது. வேலை யில் இல்லாதவர்கள் சதவிகிதம் கிராமப்புற பெண்கள் மத்தியில் 50 இல் இருந்து 76 ஆக உயர்ந்துள்ளது. வேலையின்மை பிரச்சினை கிராமப்புற பெண்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. கிராமப்புறங்களில் வேலைப் படையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை 2011-12 இல் 9.39 கோடியாக இருந்தது. 2017-18 இல் இது 6.48 கோடியாக, ஏறத்தாழ 3 கோடி குறைந் துள்ளது. கிராமப்புறங்களில் வேலைப்படையில் உள்ள ஆண்களின் எண்ணிக்கையும் 21.5 கோடியி லிருந்து 20.1 கோடியாக, 1.4 கோடி குறைந்துள்ளது.

வேளாண் நெருக்கடியின் இன்னொரு பரி மாணம் இது. வேலையின்மை பிரச்சினையும் வேளாண் நெருக்கடியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதையும் நாம் காணமுடி கிறது. குறிப்பாக, கிராமங்களில் கூலி வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 2011-12 இல் 7 கோடியே 63 லட்சமாக இருந்தது. இது    2017-18 இல் 5 கோடியே 67 லட்சமாக சரிந்துவிட்டது. கிராமப்புற பெண்களில் கூலி வேலை செய்தவர் கள் 2011-12 இல் 3 கோடியே 30 லட்சம். 2017-18 இல் இது 2 கோடியே 6 லட்சமாக, 1 கோடியே 24 லட்சம்  சரிந்து விட்டது. மொத்தத்தில், ஊரகப் பகுதிகளில் மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் வேலையின்மை பிரச்சினை மிகவும் கடுமையாக ஆக்கப்பட்டு இருக்கிறது.

அதிகரித்துவரும் வேலை இன்மை விகிதம்

அடுத்தடுத்து 1970களின் பிற்பகுதியில் இருந்து ஐந்தாண்டுக்கு ஒருமுறை வெளிவந்துள்ள என் எஸ் எஸ்ஒ- வின் அனைத்து அறிக்கைகளிலும் 2011-12 அறிக்கை வரை மாமூல் வேலையின்மை விகிதம் 2% லிருந்து 2.5% ஐ தாண்டவில்லை. ஆனால் முதன்முறையாக, 2017-18 ஆய்வறிக்கை மாமூல் வேலையின்மை விகிதம் 6.1% என்று ஆகியுள்ளது என சுட்டிக்காட்டுகிறது. இதுவே வேலையின்மை யின் கடுமையை குறைத்துக் காட்டுவதாகும். ஏனெனில், உழைப்புப் படையில் சரிபாதி பேர் சுய வேலையில் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் மத்தியில் பகுதி நேரம் வேலையில்லா நேரமாக இருக்கும் வாய்ப்பு கணிசமானது. பகிரங்க வேலை யின்மையைத்தான் நமது புள்ளிவிவரங்கள் வெளிக் கொணர்கின்றன. எனினும், கடந்த காலத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த கணக்கின்படியான வேலையின்மை விகிதம் மூன்று மடங்கு ஆகி யுள்ளது என்பது முக்கியமான செய்தி. மாமூல் நிலை வேலையின்மை விகிதத்திற்கு கடந்த ஒரு ஆண்டை கணக்கில் கொள்கிறோம்.  கடந்த ஏழு நாட்களை வைத்தும் வேலையின்மை கணக்கிடப் படுகிறது என்பதை நாம் ஏற்கெனவே குறிப்பிட் டோம். இதில் கிடைப்பது நடப்பு வாராந்தர அடிப்படையிலான வேலையின்மை விகிதம் – CWS (Current Weekly Status) வேலையின்மை விகிதம் என்று இது அழைக்கப்படுகிறது. இது மாமூல் வேலையின்மை விகிதத்தை விட பொருத்தமான அலகு. இதன்படி 2011-12 மற்றும்  2017-18  விவரங் கள் கீழ்க்காணும் அட்டவணையில் தரப்பட் டுள்ளன:

வாராந்தர நிலை வேலையின்மை விகிதங்கள்

2011-12 (ஆண்கள்) 3.5  (பெண்கள்) 4.2   (நகரம்) 4.4 (கிராமம்)   3.4 (மொத்தம்) 3.7       

2017-18       (ஆண்கள்) 8.8 (பெண்கள்) 9.1 (நகரம்) 9.6 (கிராமம்) 8.5 (மொத்தம்) 8.9

கடந்த ஆறு ஆண்டுகளில் வேலையின்மை நிலைமை பெரிதும் மோசமடைந்துள்ளதை பார்க்கலாம். இதில் ஒருபகுதி தாராளமய கொள் கைகளின் தாக்கம். ஆனால் ஒரு கணிசமான பகுதி பணமதிப்பிழப்பு மற்றும் குளறுபடி நிறைந்ததும், அடிப்படையில் மோசமானதுமான ஜிஎஸ்டி அமலாக்கத்தின் விளைவு.

இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை மேலும் தீவிரமாக உள்ளது. 15 வயது முதல் 29 வயது வரையிலானவர்கள் மத்தியில் வேலை யின்மை விகிதம் 13.6ரூ இல் இருந்து 27.2% வரை உள்ளது.

அடுத்து, பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களின் நிலமை கீழே தரப்பட்டுள்ளது:

படித்தவர் வேலையின்மை விகிதம்

                                   2011-12        2017-18                      

கிராமப்புற ஆண்கள்              3.6          10.5

கிராமப்புற பெண்கள்              9.7         17.3

நகர்ப்புற   ஆண்கள்             4.0          9.2

நகர்ப்புற   பெண்கள்             10.3         19.8

பணிசார்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி பெற்றோர் நிலைமையும் மோசமாகவே உள்ளது. அவர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம்  2011-12 இல்  5.9% (ஆண் 5.7%, பெண் 6.4%) ஆக இருந்தது. 2017-18 இல் 12.4% (ஆண் 13.8%, பெண் 10.4%) ஆக உயர்ந்துள்ளது.

பாஜக அரசு இந்த அறிக்கையை வெளியிட ஏன் மறுக்கிறது என்பது இதிலிருந்தே தெளிவாகிறது!

இறுதியாக

இக்கட்டுரையில் நாம் பெரும்பாலும் வேலை யின்மையின் அளவு பற்றிய விவரங்களையும் கருத்துக்களையும் விவாதித்துள்ளோம். அவை நமக்கு சொல்லும் செய்தி தாராளமய கொள்கை களால் ஏற்கெனவே அதிகரித்துவந்த வேலை யின்மை மோடி அரசின் மிகத் தவறான இரு நடவடிக்கைகளால் – பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் – மிக அதிகமான அளவிற்கு சென்றுள்ளது என்பதாகும். முறைசாராத் துறை பெரும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த துறைதான் அதிக வேலை வாய்ப்புகளை கொண்ட துறை. கார்ப்பரேட் முதலீடுகள் மிகக் குறைந்த அளவில்தான் வேலைகளை உருவாக்கு கின்றன. பொதுத்துறை முதலீடுகள் மோடி ஆட்சியிலும் அதற்கு முன்பே அமலாக்கப்பட்டு வந்த தாராளமய கொள்கைகளாலும் சரிந்து வந்துள்ளன. இந்நிலையில் சிறு குறு விவசாயம், சிறு தொழில், சிறு வணிகம், வேளாண்மை, கைவினை தொழில்கள் போன்றவைதான் ஓரள விற்காவது வேலை வாய்ப்புகளை உருவாக்கி வந்தன. மோடி அரசு இத்துறைகள் அனைத்தை யும் அழித்துவிடுவதில் பெரும் முனைப்பு காட்டு கிறது.

கள நிலைமை உழைப்பாளி மக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. கிராமப்புற கூலி தொழிலாளி களின் வருமானம் கடந்த சில ஆண்டுகளில் பெரிதும் சரிந்துள்ளது. விவசாயிகளின் விளை பொருள் விலைகள் மேலும் சரிந்து வேளாண் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அரசு மறைக்க முயலும் ஆய்வறிக்கை பல செய்திகளை சொல்லு கிறது. கூலி தேக்கமாக இருப்பது, சுய வேலையில் சராசரி வருமானம் மிகக் குறைவாக இருப்பது, இந்திய உழைக்கும் மக்கள் வாரம் ஒன்றிற்கு சராசரியாக 50 மணி நேரத்திற்கும் அதிகமாக பாடுபடுவது, அத்தகைய கடும் உழைப்புக்குப் பின்பும் சொற்ப வருமானத்தையே பெறுவது உள்ளிட்ட பல விஷயங்களும் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு நிலைமைகளை மாற்ற போராட்டங் களை திட்டமிட்டு நடத்த வேண்டிய சவால் ஜனநாயக இயக்கத்தின் முன்பு உள்ளது. இக்கட்டுரை யின் அளவு வரம்பு, வாசிப்பவர்களின் பொறுமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு வேலை யின்மை பிரச்சினையின் பல அம்சங்களுக்குள் நாம் செல்ல இயலவில்லை. பெண்கள், தலித்து கள், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புற உழைப்பாளிகள் ஆகியோர் கூடுத லாக பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இவை பற்றியெல்லாம் கள அளவில் திட்டவட்டமாக பரிசீலித்து கோரிக்கைகளை உருவாக்கி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது அவசர அவசியம்.



One response to “இந்தியாவில் வேலையின்மை நெருக்கடி”

  1. […] வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களின் “இந்தியாவில் வேலையின்மை நெருக்கடி” என்ற கட்டுரை […]

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: