உ.வாசுகி
நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தீர்மானகரமான வெற்றியை ஈட்டி ஆட்சியை அமைத்திருக்கிறது. பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் தனியாக 37.4ரூ, கூட்டணியாக 45ரூ பெற்றிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அது 50ரூ வாக்கு சத வீதத்தைத் தாண்டியுள்ளது. இமாசல பிரதேசத் தில் 69.11ரூ, உத்தராகண்டில் 61ரூ பெற்றுள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, ஓரளவு தெலுங் கானாவில் இந்தப் போக்கு பிரதிபலிக்கவில்லை. மறுபக்கம் இடதுசாரிகள் பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர். அவர்களின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. இவை குறித்துப் பரிசீலித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு, இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்தி, நிலைமைகளில் முன்னேற்றம் காணவும், அடுத்து மக்கள் மீது வரவிருக்கும் கடும் தாக்குதல்களை எதிர்கொள்ள வும் சில கடமைகளை முன்மொழிந்திருக்கிறது.
உலக அளவில் முதலாளித்துவத்தின் தொடர் நெருக்கடி பல்வேறு நாடுகளில் அரசியலில் வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இதைப் பட்டியலிட்டுள்ளார். இஸ்ரே லின் நேதன்யாகு மீண்டும் தேர்வு, துருக்கியில் எர்டோகன் மீண்டும் தேர்வு, ஆஸ்திரேலியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி. லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் வலதுசாரிகள் முன்னேறி வருகிறார்கள். பிரேசிலில் போல் சனோரோ இதற்கு மோசமான ஓர் உதாரணம். ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் பிரான்சில் லே பென் தலைமையிலான தீவிர வலதுசாரி கட்சி மிகப்பெரும் கட்சியாகவும், இத்தாலியில் மாட்டியோ சால்வினியின் மிக மோசமான பிற்போக்கான கட்சி அந்நாட்டின் ஆகப்பெரும் கட்சியாகவும் தேர்வாகியுள்ளன. ஜெர்மனியில் ஆல்டர்னேடிவ் ஃபார் ஜெர்மனி என்ற வலதுசாரி கட்சி 10ரூ வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக் கிறது. ஹங்கேரியில் விக்டர் ஓப்ரான் தலைமை யிலான வலதுசாரி கட்சி வெற்றிபெறும் நிலை யில் உள்ளது. இங்கெல்லாம் நவீன தாராளமய கொள்கைகளின் தொடர் விளைவுகளால் அனைத்துப் பகுதி மக்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். வலதுசாரி சக்திகள், பிரச்னைகளை மறைப்பது என்பதை விட, பிரச்னைகளுக்குக் காரணம் புலம்பெயர் தொழிலாளி கள், கறுப்பின மக்கள், இசுலாமியர்கள் என்று கைகாட்டி பெரும்பான்மை மத/இன/உள்நாட்டு மக்களின் ஆதரவைப் பெறுகின்றனர்.
வெகுமக்கள் அதிருப்தியை சரியான அரசியல் பாதையில் கொண்டு செல்ல இடதுசாரிகள் வலுவாக இல்லாத போது, மாயத்தோற்றங் களால், வார்த்தை ஜாலங்களால், இன, மத, தேசிய வெறியைக் கிளப்பும் வலதுசாரிகள் அதை அறுவடை செய்கிறார்கள் என்ற மதிப்பீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்திலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. எந்த நவீன தாராளமயப் பாதை மக்களுக்குக் கொடுமையான பிரச்னைகளை ஏற்படுத்துகிறதோ, அதே கொள் கைகளைத்தான் வலதுசாரி கட்சிகளும் கடைப் பிடிக்கிறார்கள் என்பது பல்வேறு காரணிகளால் மறைக்கப்படுகிறது. இந்த சர்வதேச போக்கினைப் போலவே இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வலதுசாரி அரசியல் திருப்பம் தற்போது வலுவாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
பாஜகவின் தீவிர மதவெறி, தேசியவாதப் பிரச்சாரம்
செல்லா நோட்டு, ஜிஎஸ்டி, வேலையின்மை, விவசாயிகள் நெருக்கடி உள்ளிட்ட ஏராளமான வாழ்வுரிமை பிரச்னைகளில் பாஜக அரசுக்கு எதிராக மக்களின் கடும் அதிருப்தி தலை தூக்கி யிருந்ததை வெளிப்படையாகக் காண முடிந்த போதும், அது ஏன் தேர்தலில் பிரதிபலிக்கவில்லை? பாஜகவுக்கும், அதன் கூட்டணிக்கும் வாக்குகள் எப்படி குவிந்தன? என்பது முக்கியமான கேள்வி. ஆர்.எஸ்.எஸ்.சின் வழிகாட்டுதலில் தேர்தலை சந்தித்த பாஜக, 2014 தேர்தலைப் போல் வளர்ச் சியை மையப்படுத்தி பிரச்சாரத்தைக் கட்டமைக்க வில்லை. ஐந்தாண்டுகளில் அனைத்து துறைகளி லும் பெரும் தோல்வியை அடைந்துள்ள சூழலில் அது சாத்தியமும் இல்லை. எனவே 2019ல் தேசத் தின் பாதுகாப்பு, பாகிஸ்தானுக்கு பதிலடி, அதை மோடியால்தான் செய்ய முடியும் என்கிற ரீதியில் ‘இந்து’ இந்தியாவைப் பாதுகாக்க ‘இசுலாமிய’ பாகிஸ்தானை முறியடிக்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட பாஜகவின் தீவிர மதவெறி, தேசியவாத குரல் வலுவாக எடுபட்டுள்ளது. 5 ஆண்டுகளில் நடந்த சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களும், பசு பாதுகாப்பு, கர் வாப்சி, லவ் ஜிகாத் கருத்தியல் பிரச்சாரங்களும் இதற்குக் களம் அமைத்துக் கொடுத்துள்ளன.
தேசம், தேசிய அரசு, தேசிய உணர்வு போன் றவை முதலாளித்துவ வளர்ச்சியின்போது முழு மைப்பட்ட கருத்தியல்கள். இவற்றுக்கு வர்க்க பரிமாணம் உண்டு. ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக இவற்றைப் பயன்படுத்தும். எனவே தொழிலாளி வர்க்கத்தின் கண்ணோட்டத்தி லிருந்து இவற்றின் உள்ளடக்கத்தை வரையறை செய்ய வேண்டும். இந்த வித்தியாசத்தைக் கணக்கில் எடுக்காமல் தேசியம் என்ற ஆளும் வர்க்கத்தின் ஒற்றை வார்த்தையில் வீழ்ந்து விட முடியாது. தீவிர தேசியம், தேசிய வெறி, மதவெறி யின் அடிப்படையிலான கலாச்சார தேசியம் போன்ற கருத்தியல்கள் இந்துத்வ கோட்பாட்டின் அம்சங்கள் என்பதைப் பார்க்கத் தவறக் கூடாது.
புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் அதன் அனைத் துப் பரிமாணங்களிலும் தேசிய வெறியை ஏற்ற பயன்படுத்தப்பட்டது. பாலாகோட்டில் இந்திய விமானப்படை கொடுத்த பதிலடி பெருமிதம் ஏற்படுத்த உதவியது. இதோடு சேர்த்து, இதனை எதிர்கொள்ள, பலமற்ற காங்கிரஸ் உதவாது, தேசத்துக்கு வலுவான தலைவர், பாதுகாவலர் தேவை, அது மோடி தான் என்ற வகையில் பிரச்சாரம் முன்வைக்கப்பட்டது. தொகுதி வேட்பாளர் யாராக இருந்தாலும் பரவாயில்லை. மோடிக்கு வாக்களியுங்கள் என்பதே ஜனாதிபதி தேர்வு போல பிரச்சார உத்தியாக அமைந்தது. சவுகிதார் என்று பெயர் சூட்டிக் கொண்டதோ, பாலாகோட்டில் தாக்குதல் தொடுக்க இந்திய விமானப்படையே தயங்கிய போது, எனது அடிப்படை அறிவில் பட்டதை அதிகாரிகளுக் குச் சொல்லி தாக்குதல் நடத்த வழி காட்டினேன் என்று மோடி கூறியது, ஒரு புறம் கேலிக்கு உரிய தாக இருந்தாலும், கவனமாகத் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் என்பது தெளிவாகிறது. பாஜகவின் ஒட்டுமொத்த பிரச்சாரம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்களின் கதை வசனம் இயக்கம் தயாரிப்புதான். உதாரணமாக, இமாச்சல பிரதேசத் தில் 4 தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்கு கள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றிருக் கிறது. அநேகமாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஆயுத படையில் பணியாற்றுபவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்கள் அல்லது போரில் கணவனை இழந்த பெண்கள் உள்ளனர். இப்பிரச்சாரம் அவர்கள் மத்தியில் வெகுவாக எடுபட்டிருக்கிறது. இத்தகைய நிலைமை வாழ்வுரிமை பிரச்னை களைப் பின்னுக்குத்தள்ளியிருக்கிறது.
இது சமூக வலைத்தளத்தின் மூலம் நுட்பமாக மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி யும், புதிய தகவல்-தொடர்பு சாதனங்களும் பயன்படுத்தப்பட்டு, 25 கோடி பேருக்கு அவரவர் மொழியில், தனிப்பட்ட முறையில் செய்தி அனுப் பப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய அளவிலான, சிக்கலான புள்ளிவிவரங்களை படு வேகத்தில் ஒழுங்குபடுத்தி, ஆய்வு செய்து கொடுக்கும் பிக் டேட்டா அனலிட்டிக்ஸ் (அதிக அளவிலான புள்ளிவிவரங்களை அலசி ஆராயும்) முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
உயர் கல்வி நிறுவனங்கள், அரசியல் சாசன அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு பிரிவு, ரிசர்வ் வங்கி என பல்வேறு இடங்களில் தலைமைப் பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ். நபர் கள் அமர்த்தி வைக்கப்பட்டார்கள். தீவிர மத வெறி, தேசிய வெறி உணர்வுகளை உருவாக்கித் தக்க வைப்பதில் இந்நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்தன.
கார்ப்பரேட்டுகளின் ஆதரவும், பணப் பயன்பாடும்
இந்திய கார்ப்பரேட்டுகளும், பெரும் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரும் அளவில் பாஜக வுக்கும், மோடிக்கும் ஆதரவு அளித்துள்ளனர். மொத்த தேர்தல் செலவில் 45ரூ (சுமார் ரூ.27,000 கோடி) பாஜகவால் மட்டுமே செலவழிக்கப் பட்டிருக்கிறது. தேர்தல் செலவினங்களை தேர்தல் ஆணையமே செய்திட வேண்டும். அதுவரை வேட்பாளர் செலவுக்கு மட்டுமல்ல; கட்சிகளின் தேர்தல் செலவுக்கும் உச்சவரம்பு வைக்க வேண் டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பொருளாதாரத்தில் ஓரளவு சம தளத்தில் நின்று கட்சிகள் போட்டியிட முடியும். ஆளும் கட்சி என்ற அடிப்படையிலும், மிக வெளிப்படையான ஆளும் அரசியல்வாதி கள்- அதிகார வர்க்கம்- கார்ப்பரேட்டுகளின் கள்ளக் கூட்டணி (குரோனி கேபிடலிசம்) காரண மாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மிகப் பெரும் நிதியாதாரம் பாஜகவின் கைக்கு வந்திருக்கிறது.
மோடியின் ஆட்சியில் முகேஷ் அம்பானியின் தொழில் சாம்ராஜ்யம் 23 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்து 55 பில்லியன் டாலராக உயர்ந் திருக்கிறது. அதாவது, அம்பானியின் வாழ்நாள் காலத்தில் சேர்த்த சொத்தை விட, மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சி அவருக்கு அதிக சொத்தைக் கொடுத்திருக்கிறது. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போதே கவுதம் அதானி யின் சொத்து 5000ரூ உயர்ந்தது. 2014-18ல் அது 4 மடங்குக்கு மேலாக அதிகரித்து 2.6 பில்லியன் டாலராக உள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி சாதாரணமாக ஆரம்பித்து, தற்போது 2018ல் 6 பில்லியன் டாலர் பிசினசாக மாறி, இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களில் ஒருவராக ராம்தேவ் ஆகிவிட்டார். தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த ரூ.4,794 கோடி நன்கொடையில் சுமார் 95ரூ பாஜகவுக்கே சென்றிருக்கிறது.
சமூக ஊடகத்துக்கு, விளம்பரத்துக்கு, நமோ டிவி துவங்கி நடத்துவதற்கு, ஊழியர்களும், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் தங்கிப் பணியாற்றவும், கட்டமைப்பு வசதிகளுக்கும், உப கரணங்களுக்கும், ஊடகங்களுக்கும் என கோடிக் கணக்கில் பாஜகவால் பணம் செலவிடப்பட்டிருக் கிறது. பல மாநிலங்களில் இதர கட்சியின் முன்னணி ஊழியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர் கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கின்றனர். மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஸ்லீப்பர் செல்லாகப் பணியாற்ற பாஜக ஊழியர்களை அனுப்பியுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில், ஒரு பக்கத்துக்கு ஒருவர் பொறுப்பு, அதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாக்காளர்களின் ஆதரவைப் பெற செயல்படு வதற்கு ஒருவர் பொறுப்பு எனப் போடப்பட்ட னர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வேட் பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளுக்கு இறுதி செய்யப்பட்டு, அவர்களை வெற்றி பெற வைக்க, ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்து தங்கிப் பணியாற்றிய உதாரணங்கள் உண்டு. குடும்பங்களை நேரிலும் சந்தித்தனர். வாக்களித்தால் அந்தக் குடும்பத்துக்கு வேண்டிய அரசு நலத் திட்டங்களை வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். சில தொகுதிகளில் எதிர்கட்சியினரின் போட்டி வேட்பாளரை நிறுத்த பாஜக நிதி செலவழித் திருக்கிறது. மஹாராஷ்டிராவில் ஓவைசியின் எம்.ஐ.எம். கட்சியும், பிரகாஷ் அம்பேத்கரின் பகுஜன் மஹாசங் கட்சியும் சேர்ந்து வாஞ்சித் பகுஜன் அஹாதி என்ற அணியாக நின்று தேர்தலை சந்தித்தனர். இது மதச்சார்பற்ற கட்சிகளின் வாக்குகளைப் பிரித்தது. ஹெலிகாப்டரில் பறந்து பறந்து இவர்கள் பிரச்சாரம் செய்ய பாஜக நிதி கொடுத்திருப்பார்கள் என்ற ஊகங்கள் நிலவு கின்றன.
மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்ததை ஒட்டி, நீண்ட கால காங்கிரஸ் தலை வர் மறைந்த பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியின் மனைவி தீபா தாஸ் முன்ஷியைத் தாங்கள் ஆதரிப்ப தாகக் கூறி பாஜக போட்டியிட வைத்தது. அதே போல் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அம்பரீஷின் தொகுதியான மாண்டியாவை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு விட்டுக் கொடுத்த சூழலில், அம்பரீஷின் மனைவி சுமலதாவை சுயேச்சை வேட்பாளராக நிற்க வைத்துத் தன் ஆதரவைத் தெரிவித்தது. அவரை வெற்றி பெறவும் வைத்தது. இவ்வாறு பல்வேறு தளங்களில் ஆர்.எஸ்.எஸ்./பாஜகவின் உத்திகள் அமல்படுத்தப்பட்டன.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு
நேர்மையான, நியாயமான தேர்தலை நடத் தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகள் இருக்கவில்லை. பாஜக தரப்பில், குறிப்பாக மோடி, அமித் ஷா போன்றவர்கள், தீவிரவாத தாக்குதல்களை அரசியலாகப் பயன்படுத்தியது; சட்ட விரோதமாக நமோ டிவியைத் துவக்கியது; மத வெறியை எழுப்பும் வகையில் பேசியது போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இத்தகைய அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது இனியும் பதவியில் இருக்கும் அரசாங்கம் மட்டுமே தேர்தல் ஆணைய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் முறை நீடிக்கக் கூடாது. லோக் பால் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய ஒரு குழு (கொலிஜியம்) இருப்பதைப் போல், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் தேர்வுக்கும் ஒரு குழு அமைக்க வேண்டும். பதவிக் காலம் முடிந்த பின், தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு வேறு பொறுப்பு/பதவிகள் அளிப்பதைத் தடை செய்ய வேண்டும். மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்வதற் கான அனுமதி தேர்தல் ஆணையத்திடம் பெறுவ தும் கடினமாக இருந்தது. டயமண்ட் ஹார்பர் தொகுதியில் தேர்தல் காலத்தில் 90 நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிய போது 18க்குத்தான் அனுமதி கிடைத்தது.
இதர காரணிகள்
அரசு நலத் திட்டங்கள், குறிப்பாக உஜ்வாலா இலவச எரிவாயு இணைப்பு திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் போன்றவை பல ஏழை குடும்பங்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக் கிறது. பெண்களின் வாக்குகள் கடந்த தேர்தலை விட அகில இந்திய அளவில் பாஜகவுக்கு 7ரூ அதிகரித்திருப்பது இதன் விளைவாக இருக்கக் கூடும். தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பாக அல்லது தேர்தல் அன்று பலரின் வங்கிக் கணக்குக்கு மானியங்கள் நேரடி பணப்பலனாக சேர்க்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் பயிர் காப் பீடு, உதவி தொகை, பல்வேறு விஷயங்களுக் கான மானிய தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் 86ரூ சிறு குறு விவசாயி களுக்கு 4 ஆண்டு கால நிலுவை மானிய தொகை ஒரேயடியாக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டிருக்கிறது.
இதர கட்சிகளின் சாதிய அணி திரட்டலை முறியடித்து, தமக்கு சாதகமாக அதனை மாற்ற பல நுட்பமான திட்டமிடல் (மைக்ரோ சோஷி யல் என்ஜினியரிங்) பாஜக தரப்பில் செய்யப் பட்டிருக்கிறது. உதாரணமாக, உபி மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சி, தலித் வகுப்பினரில் ஜாதவ் என்ற பிரிவினரைத் தன் செல்வாக்கில் வைத்துக் கொண்டபோது, ஜாதவ் அல்லாத தலித் பிரி வினரை பாஜக தன் வசமாக்கியது. சமஜ்வாதி கட்சி யாதவ சமூகத்தில் செல்வாக்கு செலுத்திய பின்னணியில், யாதவ் அல்லாத பிற்பட்ட வகுப் பினரை பாஜக அணி திரட்டியது. அதே போல் பல்வேறு பழங்குடியின சமூகங்களை ஒருங்கிணைத்தது. ‘இந்துக்கள்’ என்ற அடையாளம் கொடுத்து பல்வேறு சாதிகளை திரட்டியது.
மின்னணு வாக்கு இயந்திரங்கள்
இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி, தவறான முறையில் வாக்குகளை பாஜக பெற்றதாக ஊடகச் செய்திகள் வருகின்றன. ஃபிரண்ட்லைன் பத்திரிகை, மஹாராஷ்டிராவில் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெற்ற விவரங்களைப் பயன்படுத்தி, தேர்தல் ஆணையம் வாங்கிய இயந்திரங்களுக் கும், பயன்படுத்திய இயந்திரங்களுக்கும் இடையே 19 லட்சம் இயந்திரங்கள் இடைவெளியாக இருந்தன; அப்படியானால் அவை எங்கே என்ற கேள்வியை எழுப்பியது. 370 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், மின்னணு இயந்திரத்தில் எண்ணப் பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடு இருந்தது என்று ஊடகச் செய்திகள் வந்துள்ளன. உதாரணமாக, பீஹாரில் பாட்னாசாஹிப் தொகுதியில் 65,000 வாக்குகளும், குஜராத்தில் ஆனந்த் தொகுதியில் 1,32,000 வாக்குகளும் பதிவான வாக்குளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக இருந்துள்ளன. இப்பிரச்னை காரணமாகத் தேர்தல் ஆணையத் தால் இதுவரை அகில இந்திய அளவில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்கு சதவீதத்தை அறிவிக்க முடியவில்லை. மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி இவ்வாறு எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து ஆய்வு செய்வது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது.
காங்கிரசின் தோல்வி
2014 தேர்தலை விட 8 தொகுதிகளில் கூடுதலாக 52ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு சதவீதத்தையும் அது தக்க வைத்துக் கொண் டுள்ளது. பாஜகவைத் தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை, செல் வாக்கு சரிந்துள்ள நிலையில் இடதுசாரி கட்சி களால் செய்ய இயலவில்லை. அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட காங்கிரஸ் அப்பணியை செய்திருக்க வேண்டும். ஆனால் அதில் மிகுந்த பலவீனம் இருந்தது. உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மியுடனும், உபியில் பகுஜன் சமாஜ், மற்றும் சமஜ்வாதி கட்சிகளுடனும் காங்கிரஸ் கூட்டு வைத்திருந்தால் சில தொகுதிகளிலாவது பாஜகவை முறியடிக்க முடிந்திருக்கும். அவர்கள் சமீபத்தில் சட்டமன்றத்தில் வெற்றி பெற்ற ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திலும் இதர கட்சிகளை ஒருங்கிணைக்கவில்லை. மேற்கு வங்கத்தில் ஏற்கனவே அவரவர் வெற்றி பெற்ற 6 தொகுதிகளில் பரஸ்பரம் போட்டி வேண்டாம் என்ற இடது முன்னணியின் குறைந்தபட்ச வேண்டுகோளைக் கூட அக்கட்சி நிராகரித்து விட்டது. கேரளாவில் வயநாட்டில் அதன் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இடது ஜனநாயக முன்னணியை எதிர்த்துப் போட்டியிட்டார். பாஜக எதிர்ப்பைக் காட்டிலும் இடதுசாரிகளுக்கு எதிரான போட்டிக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்ததான தோற்றமே ஏற்பட்டது.
பாஜகவின் மதவெறி நடவடிக்கைகளைத் தேர்தலுக்கு முன்னும், தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தேவையான அளவு அம்பலப்படுத்த காங்கிரஸ் தவறி விட்டது. மென்மையான இந்துத்வாவைக் கடைப்பிடித்தது. முரண்பாடு இந்துத்வாவுக்கும் மதச்சார்பின்மைக்கும் தானே தவிர, மென்மையான இந்துத்வாவுக்கும், கடுமை யான இந்துத்வாவுக்கும் அல்ல. இதர கட்சிகளும் இது குறித்த திறன் மிக்க பிரச்சாரத்தை நடத்த வில்லை.
மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் உத்தி
பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும்; நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் கூடுதலாக இடம் பெற வேண்டும்; மத்தியில் ஒரு மதச்சார்பற்ற அரசை அமைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் உத்தியின் உள்ளடக்கமாக இருந்தது. மாநிலத்துக்கு மாநிலம் நிலைமைகள் வித்தியாசமாக இருந்த பின்னணி யில், அகில இந்திய அளவில் ஒரு கூட்டணி சாத்தியம் இல்லை என்ற புரிதலோடு, பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்தி குவிக்க வேண்டும் என்ற அளவில், மாநிலங்களில் இந்த உத்தியை அமல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பாஜக தோற்கடிக்கப் பட்டது. பொதுவாக உத்தியின் 3 அம்சங்களும் நிறைவேறவில்லை என்பதே தேர்தல் முடிவுகள் காட்டும் செய்தியாகும்.
கேரளாவைப் பொறுத்தவரை இடது ஜனநாயக முன்னணிக்கு 5.1ரூ வாக்குகள் குறைந்துள்ளன. காங்கிரசுக்கு 5.10ரூம், பாஜகவுக்கு 4.76ரூம் அதிகரித்துள்ளன. பொதுவாக சட்டமன்றத்துக் கும் நாடாளுமன்றத்துக்கும் வித்தியாசமாக வாக்களிப்பது கேரளாவின் அனுபவம். மேலும், இடது ஜனநாயக முன்னணி 1977ல் ஒரு தொகுதி கூட வெற்றி பெறாததும், 2004ல் 20க்கு 18ல் வெற்றி பெற்றதும் நிகழ்ந்திருக்கிறது. பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த சிறுபான்மை வகுப்பினரும் (மக்கள் தொகையில் இவர்கள் சுமார் 45ரூ), இதர சக்திகளும் மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரசால் முடியும் என்ற நம்பிக்கையோடு அவர்களுக்கு வாக்களித்தனர். மேலும், சபரிமலை பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியும், மாநில அரசும் எடுத்த நிலைபாடு சரியானது, இதைத் தவிர வேறு நிலைபாட்டை எடுத்திருக்க முடியாது. ஆனால், துவக்கத்தில் நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்த காங்கிரஸ், பாஜக கட்சிகள், மாநில அரசுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் எதிராக இதனை மாற்ற முடியும் என்ற நிலையில், எதிர் நிலை எடுத்து, கடுமையான பிரச்சாரம் செய்ததில், மத நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. அதில் ஒரு பகுதியினர், பாரம்பர்யமாக மார்க் சிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பவர்கள், மாற்றி வாக்களித்துள்ளனர். இவர்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. சபரிமலை பிரச்னையில் சரியான நிலைபாடு எடுத்திருந்தாலும், வெவ் வேறு அளவில் பல்வேறு பகுதிகளில் இதனால் பாதிப்பு நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் மாநில அரசின் நடவடிக்கைகள் மீது பொதுவாக இருக் கும் நன்மதிப்பு வாக்குகளாக ஏன் மாறவில்லை என்று பரிசீலிக்க வேண்டும். பாஜக ஒரு தொகுதி யில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், வாக்கு சதவீதம் 15ரூக்கு மேல் என்பது ஒரு அபாய எச்சரிக்கையே. பல்வேறு தொகுதிகளில் பாஜக, தன் ஒரு பகுதி வாக்குகளை காங்கிரசுக்கு மடை மாற்றம் செய்யும் வழக்கமான வேலை இந்தத் தேர்தலிலும் நடந்தது.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அடைந் திருக்கும் படு தோல்வி, கட்சியின் வரலாற்றிலேயே இதுவரை காணாதது. இடது முன்னணிக்கு 7.44ரூ மட்டுமே வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. கடும் வன் முறை, அச்சுறுத்தல்கள், வாக்குச்சாவடி கைப் பற்றல் ஆகிய பிரச்னைகளுக்கு மத்தியில் தேர்தல் நடந்தது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீதான எதிர்ப்புணர்வு வலுவாக இருந்தது. அவர்களின் வன்முறையை முறியடிக்க இடது சாரிகளை விட பாஜகவால்தான் முடியும் என்ற உணர்வு இருந்தது. அதேபோல் பாஜகவைத் தோற்கடிக்க நினைத்தவர்கள், திரிணமூல் காங் கிரசையே மாற்றாகப் பார்த்தார்கள். பாரம்பரிய மாக இடதுசாரிகளுக்கு வாக்களிக்கும் ஒரு பகுதியினர் திரிணமூல் மீதான வெறுப்பின் காரணமாக பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இது மதவெறியைக் குறைத்து மதிப்பிடுவதாகும். மக்கள் பிரச்னைகளில் போராட்டங்களை உருவாக் கும்போது இடது முன்னணிக்கு ஆதரவாக வரும் மக்கள், தேர்தலில் அதே அளவு ஆதரிக்கவில்லை.
பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடது முன்னணியின் சரிந்து வரும் வாக்கு சதவீ தம், அதிக அளவு வன்முறையை சந்திக்க வேண்டிய நிலை போன்றவையும் இதற்கு ஒரு காரணம். சிறுபான்மை மத அடிப்படைவாதிகளை திரிண மூல் காங்கிரஸ் தாஜா செய்யும் முறையானது, பெரும்பான்மை மதவாதத்தை தூண்டி விட பாஜகவுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு மத வெறியைக் கிளப்பி விடும் சூழலில், ஜனநாயகத் துக்கான இடதுசாரிகளுக்கான வெளி குறைகிறது. தேர்தல் களத்தில் திரிணமூல், பாஜக இரண்டு கட்சிகள்தான் நிற்கின்றன; மற்ற கட்சிகள் அருகில் கூட இல்லை என்ற திட்டமிட்ட பிரச் சாரத்தை ஊடகங்கள் செய்தன. கடந்த 50 ஆண்டு களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ முடியாத மேற்கு வங்கத்தில் திரிணமூல் ஆட்சியில் ஷாகாக்கள் அதிகரித்துள்ளன. 47 மதவெறி தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் 209 மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் சேர்த்து சுமார் 40,000 பேர் குடியிருப்பிலிருந்து வெளி யேற்றப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில்தான் கட்சி உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். மத வெறிக்கு எதிரான வலுவான, சித்தாந்த ரீதியான போராட்டத்தை மக்கள் மத்தியில் செய்வதன் மூலமாகத்தான் இந்த இரு கட்சிகளின் போட்டி மதவெறி அபாயத்தைக் குறைக்க முடியும். இடது சாரிகளின் அரசியல் செல்வாக்கிலிருந்து விலகிச் சென்றவர்களை மீட்டெடுப்பது முன்னுரிமை கடமையாக இருக்கிறது.
திரிபுராவில் வன்முறை, அச்சுறுத்தல், நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முழு உதவி, தேர்தல் ஆணையத்தின் பாராமுகம் போன்றவை பாஜக வெற்றி பெற உதவி செய்தன. திரிபுரா மேற்கு தொகுதியில் மொத்த வாக்குச்சாவடிகளில் 50ரூக்கும் மேல் கள்ள ஓட்டு, வாக்குச்சாவடி கைப் பற்றல் நடந்த பின்னணியில் மறு வாக்குப்பதிவு கேட்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் ஒரு குழுவும் விசாரணை செய்து, பிரச்னை நடந் தாகவே அறிக்கை கொடுத்தது. ஆனாலும் 168 வாக்குச்சாவடிகளில், அதாவது நாம் கோரியதில் 20ரூ வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. இந்த 168 வாக்குச்சாவடி களில் மறுவாக்குப்பதிவு என்பதும் கூட, இந்தியாவிலேயே மிக அதிகமான ஒன்றாகும். கிழக்கு தொகுதியிலும் பல பிரச்னைகள் நடந்தன. பெரும்பாலான இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி யின் ஊழியர்கள் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யவே போக முடியவில்லை. தொடர்ச்சி யான வன்முறைக்கு மத்தியில் கட்சி கிளைகளில் பெரும்பகுதியை கூட்டவே முடியவில்லை.
பொதுவாக
மார்க்சிஸ்ட் கட்சியின் சொந்த பலமும், மக்கள் பிரச்னைகளில் தலையீடு செய்யும் திறனும் பல வீனமடைந்துள்ளது. வாக்கு சதவீதம் தொடர்ந்து சரிகிறது. வர்க்க, வெகுஜன அமைப்புகள் மூலமாகக் கிடைக்கும் தொடர்புகளை அரசியல்படுத்துவ தில் குறைபாடு உள்ளது. போராட்டங்களில் வருபவர்களை அரசியல்படுத்தத் தவறும்போது, வெகுஜன தளம் உருவாகாது; தேர்தல் வாக்குகளி லும் அது பிரதிபலிக்காது. இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டியிருக்கிறது. அடிப் படை வர்க்கங்களின் வாக்குகள் கிடைப்பதில்லை. இவற்றை சரி செய்வதற்கு கூடுதல் கவனத்தோடு அரசியல் ஸ்தாபன பணிகளை ஆற்ற வேண்டும். இழந்த தளங்களை மீட்க வேண்டும். ஸ்தாபன பிளீனம் எடுத்த முடிவுகளை அமல்படுத்தியது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்ற ஸ்தாபன பிளீனத்தின் சாராம்சத்தை உள்வாங்க வேண்டும்.
வரவிருக்கும் 5 ஆண்டுகளில், பாஜக அரசு உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை மீது கூடுதல் தாக்குதல்களைத் தொடுக்கும். மத அடிப்படை யில் மக்களைப் பிரிக்கும் வேலையைக் கடுமை யாக முன்னெடுக்கும். கருத்துச் சுதந்திரம் பறிப்பு, போராட்டங்கள் ஒடுக்கப்படுவது போன்ற நட வடிக்கைகள் அதிகரிக்கும். பொதுத்துறை தனி யார்மயமாக்கப்படுவது விரைவாகும். கார்ப் பரேட்டுகளுக்கு சாதகமாக நிலங்கள் பறிக்கப் படும். தலித், சிறுபான்மை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரிக்கும். மதச்சார்பின்மை மீது பெரும் தாக்குதல் வரும். மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான இந்திய கட்டமைப்பு இந்து ராஷ்டிர மாக மாற்றப்பட திட்டமிட்ட முயற்சிகள் தீவிர மாக மேற்கொள்ளப்படும். திரிபுரா, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளைப் பின்னுக்குத் தள்ளிய பின், கேரளாதான் அடுத்த குறி. பரந்து பட்ட மக்களைத் திரட்டியே நம்மால் இவற்றை எதிர்கொள்ள முடியும்.
இது சோர்வடையும் தருணமல்ல; பரிசீலனை செய்து, படிப்பினைகளைப் பெற்று, துணிச் சலாக முன்னேற வேண்டிய நேரம். சவால்களை எழுச்சியோடு சந்திக்க வேண்டிய நேரம். தேர்தல் வெற்றி தோல்விகளைத் தாண்டிய கண்ணோட்டம் இடதுசாரிகளுக்கு உண்டு. சமூக மாற்றத்தை ஏற்படுத்த, அரசியல் மாற்றை முன்னெடுக்க, சோஷலிசத்தை நோக்கி முன்னேற உறுதி பூண்டுள்ள இயக்கம் இது. இடதுசாரிகள் எதிர்ப்பது இந்த அல்லது அந்த அரசியல் கட்சி மட்டுமல்ல. ஏகாதி பத்திய, ஏகபோக, நிலப்பிரபுத்துவ சக்திகள், சாதியம், மத வெறி, பணபலம் உள்ளிட்ட எதிரி களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. இடதுசாரிகள் வீழ்ந்து விட்டனர் என்று பிரச் சாரம் செய்யப்படுகிறது. உலக அளவிலும், இந்தியாவிலும் இதை விட மோசமான நிலைக் குத் தள்ளப்பட்டபோதெல்லாம் மீண்டு வந்திருக் கும் இயக்கம்தான் மார்க்சிய இயக்கம். அரசியலில் வலதுசாரி திருப்பத்துக்கு ஒரே பதில் இடதுசாரி திருப்பம்தான். இதை அடைய குறுக்கு வழி எதுவும் கிடையாது. இடை விடாத அரசியல், ஸ்தாபன, சித்தாந்த செயல்பாடு கள் இதற்குத் தேவைப்படுகின்றன.
Leave a Reply