சாதி, மத வேற்றுமை இல்லாமல் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று அறைகூவல் விடுத்த நாராயணகுரு, 'மனிதர்களுக்கு ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்' என்ற புதிய கொள்கையை நிறுவினார். அப்படியே அவர் சங்கராச்சாரி நடைமுறைப்படுத்திய சாதி வேற்றுமையை எதிர்த்தும் வந்தார். சாதி, மதம் தொடர்பான ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகள், உலகமெங்கும் எழுந்துவந்த மனித நேயம், ஜனநாயகம், சமத்துவம் போன்ற புதிய முழக்கங்களுக்கும், அளவுகோல்களுக்கும் ஏற்றதாக இருந்தது. சங்கராச்சாரியாரின் நால்வருண போதனைகள், ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகளுக்கு ஒருபோதும் ஈடாகாது.