ஆளுமைகள்
-
’நான் என்றும் மக்கள் ஊழியனே’ – ஏ.கே.கோபாலன்
பொதுமக்கள் பார்வையில் இருந்து விலக்கி எங்களை சிறையில் அடைப்பது ஏகாதிபத்தியத்தின் தேவையாக இருந்தது; கைது செய்வதைத் தவிர்ப்பதும், வேலை செய்வதும் எங்களுடைய தேவையாக இருந்தது. எனவே, தலைமறைவாக வேலை செய்வதே, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக நான் கண்டேன். Continue reading
-
லெனின் வாசிப்பு எனும் புரட்சிகர பணி
வரலாறு உருவாக்கியுள்ள இன்றைய காலம், முதலாளித்துவத்தின் இறுதி கட்டம் என்ற அழுத்தமான இடத்திலிருந்துதான் லெனின் தனது அனைத்துச் செயல்பாடுகளையும் அமைத்துக்கொண்டார். புரட்சியை கனவு என்கிற நிலையிலிருந்து, புரட்சியை சாத்தியமான ஒன்றாக அணுகுகிற தனிச்சிறப்பு கொண்டது லெனினியம். Continue reading
-
ஜவஹர்லால் நேரு: அனைத்திற்கும் மேலாக, மதச்சார்பற்றவர் …
மதசார்பற்றதொரு அரசுக்கான நேருவின் தொலைநோக்கும் ஜனநாயக பூர்வமான வழிகளின் மூலம் அத்தகைய ஓர் அமைப்பை உருவாக்குவதற்கான அவரது முயற்சிகளும் என்றும் நிலைத்து நிற்கும் அவரது பாரம்பரியங்களாகத் திகழ்கின்றன. இவை அனைத்துமே இப்போது நேருவின் மிகப் பழைய எதிரிகளான இந்துத்துவ வாதிகளிடமிருந்து மோசமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. நேருவின் இந்தப் பாரம்பரியம்தான் நாம் பாதுகாத்து, வளர்த்தெடுக்க வேண்டிய ஒன்றாகும். Continue reading
-
ஏ.நல்லசிவன் நூற்றாண்டு : போராட்ட வாழ்க்கை தரும் பாடம் !
வர்க்க-வெகுஜன அமைப்புகளை வளர்த்திடாமல் கட்சியை பலப்படுத்திட முடியாது என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார். கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வர்க்க-வெகுஜன அமைப்பில் வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார். செய்ய வேண்டியது என்ன? நூலில் இருந்து பல அம்சங்களை தோழர் ஏ.என். அடிக்கடி மேற்கோள் காட்டுவார். பின்தங்கிய உழைப்பாளி மக்களை வர்க்க-வெகுஜன அமைப்புகளில் சேர்த்து, அவர்களுடைய கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்க வைத்து, அதனூடே கம்யூனிசக் கொள்கையை அவர்களுக்குப் பயிற்றுவித்து அவர்களைக் கட்சிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை… Continue reading
-
பன்முக தளங்களில் செயல்பட்ட தோழர் டி.இலட்சுமணன்
தோழர் DL மார்க்சிஸ்ட் இதழின் ஆசிரியர் குழுவில் நீண்ட காலம் பணியாற்றினார்..அடிப்படை மார்க்சியம், சாதியம், வகுப்புவாதம் என பல தலைப்புக்களில் எளிமையான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தோழர் DL மறைவு மார்க்சிய இயக்கத்திற்கும் மக்கள் இயக்கங்களுக்கும் பேரிழப்பு. Continue reading
-
இன்றைக்கும் வெளிச்சம் தரும் வள்ளலார் ஏற்றிய விளக்கு
நான்கு வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட பழய சமூக அமைப்பை இந்த நவீன யுகத்திலும் கைவிட ஆர்எஸ்எஸ் பரிவாரம் தயாராக இல்லை. மதச்சார்பற்ற, அரசியல் சட்டத்தின் இடத்தில் மநு நூலை வைக்கத் துடிக்கின்றனர். வரலாற்றுச் சக்கரத்தை பின்னுக்குத் தள்ளி வேதகாலத்திற்கு கொண்டு போய் விட முடியுமா என்று முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ‘நான்கு வர்ணங்களும் நால்வகை ஆசிரமங்களும் ஆசாரங்களும் இவை சொன்ன சாத்திர சரிதங்களும்’ வெறும் பிள்ளை விளையாட்டு என்று எள்ளி நகையாடியவர் 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில்… Continue reading
-
சிங்காரவேலர்: சமூக நீதியும் பொதுவுடைமையும்
“இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்” என்று “குடி அரசு” இதழில் வெளியான தலையங்கத்திற்காக 1933 டிசம்பர் 30 அன்று பெரியார் கைது செய்யப்பட்டார். ஒன்பது மாதக் கால சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் பெரியார் விடுதலையாகும்வரை எந்த கூட்டமும் நடத்துவதில்லை என்று செயற்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் ஜீவா போன்ற இளம் சுயமரியாதைக்காரர்கள் வேகமாக வேலை செய்தனர். மே தின கொண்டாட்டத்தை நடத்துமாறு அறிக்கை விடப்பட்டது. Continue reading