வர்க்க-வெகுஜன அமைப்புகளை வளர்த்திடாமல் கட்சியை பலப்படுத்திட முடியாது என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார். கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வர்க்க-வெகுஜன அமைப்பில் வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார். செய்ய வேண்டியது என்ன? நூலில் இருந்து பல அம்சங்களை தோழர் ஏ.என். அடிக்கடி மேற்கோள் காட்டுவார். பின்தங்கிய உழைப்பாளி மக்களை வர்க்க-வெகுஜன அமைப்புகளில் சேர்த்து, அவர்களுடைய கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்க வைத்து, அதனூடே கம்யூனிசக் கொள்கையை அவர்களுக்குப் பயிற்றுவித்து அவர்களைக் கட்சிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை தனது அனுபவத்தில் இருந்து சுட்டிக்காட்டுவார்.