பொருளாதாரம்
-
திராவிட கட்சி அரசுகளுடைய பொருளாதார கொள்கைகள் பற்றி
திராவிட கட்சிகளின் ஆட்சிகள் ஒன்றிய அரசின் தாராளமய கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டது இல்லை. ஏனெனில் அவர்கள் அந்தக் கொள்கையினுடைய பல அம்சங்களை ஏற்றுக் கொண்டவர்களாக மாறியுள்ளனர். தொடர்ந்து பல பத்தாண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஒன்றிய அரசில் அங்கம் வகித்தும் உள்ளனர். Continue reading
-
உலகமய காலத்தில் வாழ்விட உத்தரவாதமும் சமூக நீதியும்
துவக்கத்தில் குடிசை பகுதிகள் இருந்த இடங்களிலேயே அதை மேம்படுத்திடும் திட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். புதிய பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் உழைக்கும் மக்கள் குடியிருக்கும் நிலத்தின் மதிப்பின் மீது தனது பார்வையை செலுத்தியது. அதன் விளைவாக, குடிசை பகுதிகளை மேம்படுத்துவது என்பதிலிருந்து குடிசை பகுதிகளை அகற்றுவது என்கிற நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் வந்தனர். அதற்கு தேவையான காரணங்களையும் கட்டமைத்தனர். Continue reading
-
ஐஃபோன்: லாபம் எங்கிருந்து குவிகிறது?
காலனி ஆதிக்கம் நிலவிய காலத்தில், ஏகாதிபத்திய நாடுகள் உற்பத்தி ஆலைகளை கட்டுப்படுத்தி வந்தன. இன்று ஏகாதிபத்திய நாடுகள் தொழில்நுட்பத்தையும் உற்பத்தி திறனையும் கட்டுப்படுத்துகிறார்கள். மேலைநாடுகளே பெரும்பான்மையான தொழில்நுட்பத்தை தங்கள் வசமாக வைத்துள்ளார்கள். Continue reading
-
பணவீக்க எதிர்ப்பு கொள்கையும், நவ தாராளமயமும்!
அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயரும்போது, உலகம் முழுவதுமே வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் (அப்படி செய்யாவிட்டால், விளிம்பில் இருக்கும் நாடுகளில் உள்ள நிதி மூலதனமானது, மையத்தில் இருக்கும் அமெரிக்காவை நோக்கி திரும்பிவிடும். அதனால் விளிம்பு நாடுகளின் செலவாணியின் டாலருக்கு நிகரான மதிப்பு சரியும்). வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்காவில் நடக்கும் ஊக நடவடிக்கைகளை நேரடியாக எதிர்கொள்ளாமல், நிதி ‘தாரளமயமாக்கல்’ என்ற வழிமுறையால் எதிர்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாகவே உலகம் முழுவதும் மிகப்பெரும் வேலையின்மையை உருவாக்கப்படுகிறது. Continue reading
-
தமிழ் நாடு பட்ஜெட் 2022-23: தாராளமய தாக்கம் !
மாநில பட்ஜெட் பற்றிய பரிசீலனையை, ஒரு வரம்பிற்குள் தான் செய்ய முடியும். அதில் திராவிட மாடலை தேடுவதோ, அது இல்லை என்று சொல்வதோ, இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. நாம் சொல்வது என்னவென்றால், தமிழக நிதி அமைச்சர் ஒன்றிய அரசும் பதினைந்தாவது நிதி ஆணையமும் முன்வைக்கும் நெறிமுறைகளை தட்டிக் கேட்க வேண்டும்… Continue reading
-
விவசாயிகள் போராட்டத்தின் படிப்பினைகள்
பிரகாஷ் காரத் அண்மையில் வெற்றிகரமாக நடந்தேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டம் குறித்தும், அதன் அரசியல் பின்புலன் மற்றும் தாக்கங்கள் குறித்தும் புரிந்து கொள்வது அவசியமாக உள்ளது. மத்திய மோடி அரசின் மூன்று வேளாண் (விரோத) சட்டங்களுக்கு எதிரான இந்த போராட்டம் இக்கால அரசியல் சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டம். செப்டம்பர் 2020இல் மோடி அரசு, பாராளுமன்ற ஜனநாயக மாண்புகள் அனைத்தையும் மீறி, எந்த விவாதமும் இன்றி, பாராளுமன்றத்தில் அநீதியான முறையில் உட்புகுத்தி… Continue reading
-
உடைமை… உரிமை… பறிக்கும் அந்நிய நேரடி முதலீடு…
எஸ். கண்ணன் இந்தியா போன்ற வளரும் நாட்டில் வேலைவாய்ப்பு, தொழில் நுட்பம், ஆகியவை அதிகரிக்க வேண்டுமெனில் அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்கின்றனர். வேலைவாய்ப்பும், தொழில் நுட்பமும் வளர்ச்சியின் பிரதான அடையாளம் என சித்தரிப்பதோடு, அதற்கு அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்ற பிரச்சாரத்தை, தாராளமயம் மற்றும் வலதுசாரி கொள்கையை பின்பற்றும் பாஜக போன்ற அரசுகள் தீவிரமாக மேற்கொள்கின்றன. இந்த பிரச்சாரம் உண்மையென்றால், இந்தியாவில் மட்டுமல்ல; வளர்ந்த நாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து, வேலையின்மை அதிகரித்துள்ளது ஏன்?… Continue reading
-
பெருநிறுவன-நிதி மூலதன கூட்டாளிகளும் அதற்குள் அமைந்த அடுக்குகளும்
பேராசிரியர் பிரபாத் பட்நாயக் தமிழில்: வயலட் நாம் முழுமையான ஒன்றாக காண்கிற அனைத்துமே வேறுபாடுகள் கொண்ட பல்வேறு கூறுகளால் ஆனது என்பதையும், அவைகளுக்குள்ளாக முரண்பாடுகள் உள்ளன என்பதையும் மார்க்சியப் பார்வை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. அவ்வாறு நாம் முழுமையாக பார்க்கிற ஒன்றை கருத்தாக்க அளவில் முழுமையாகவே குறிப்பிடுகிற போதும், அதன் உள்ளார்ந்த பகுதியாக அமைந்திருக்கும் இந்த முரண்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டும். எதேச்சதிகார, ஃபாசிசத்தனமான அரசுகளின் அரசியல் பொருளாதாரத்தைப் படிக்கும்போது இந்த கட்டளையை மறந்துவிடக்… Continue reading
-
மநுவாத பொருளாதாரமும், இந்து வலதுசாரிகளும்
கடந்த ஆறு ஆண்டுகளில் தாங்கள் ஏற்படுத்திய பொருளாதாரச் சீர்குலைவுகளை மறைத்து மக்களிடையே பிரிவினையைத் தூண்ட முட்டி மோதிப்பார்த்தனர். அதே சமயம் இந்த நிதியறிக்கையை உற்று நோக்கும்பொழுது, இந்த அரசின் பொருளாதாரப் பார்வை கார்ப்பரேட் மூலதனத்தின் நலன்களை முன்னிறுத்துவது தெரிகிறது. மேலும், இந்த அரசின் கொள்கைகளை பார்ப்பனீயம் வழிநடத்துவதும் புலப்படுகிறது. Continue reading
-
மத்திய பட்ஜெட் 2020: வருமான மறு பங்கீட்டில் பெரும் அநீதி
தொழில் மந்தம், கிராக்கி வீழ்ச்சி, வேலையின்மை, சிறு தொழில் நசிவு, விவசாய வருமானங்களில் சரிவு, உணவுப் பொருள் பணவீக்கம், அரசின் வருமான திரட்டலில் தோல்வி, ஏற்றத்தாழ்வு இடைவெளி அதிகரிப்பு என பல பரிமாணங்களில் வெளிப்படுகின்றன. ஆனால் அரசு நெருக்கடி இருப்பதாகவே ஏற்றுக் கொள்ளாமல் நவீன தாராள மயப் பாதையிலேயே பயணிக்க முனைந்துள்ளது. Continue reading