அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயரும்போது, உலகம் முழுவதுமே வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் (அப்படி செய்யாவிட்டால், விளிம்பில் இருக்கும் நாடுகளில் உள்ள நிதி மூலதனமானது, மையத்தில் இருக்கும் அமெரிக்காவை நோக்கி திரும்பிவிடும். அதனால் விளிம்பு நாடுகளின் செலவாணியின் டாலருக்கு நிகரான மதிப்பு சரியும்). வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்காவில் நடக்கும் ஊக நடவடிக்கைகளை நேரடியாக எதிர்கொள்ளாமல், நிதி 'தாரளமயமாக்கல்' என்ற வழிமுறையால் எதிர்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாகவே உலகம் முழுவதும் மிகப்பெரும் வேலையின்மையை உருவாக்கப்படுகிறது.
