பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு
-
லெனினியம் வெல்லும் !
பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு……7 ஒரு நாட்டில் உழைக்கும் வர்க்கம் தனக்கு வழிகாட்டுகிற புரட்சிகர கட்சியின் தலைமையை ஏற்று, திரள்கிறபோதுதான் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெறும்.இதுவே ரஷ்யப் புரட்சி அனுபவம். ஜார் மன்னராட்சியும்,பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு வந்த கெரென்ஸ்கி அரசும் வீழ்த்தப்பட்டு, ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றது. அதாவது, முதலாளித்துவ,நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசை வீழ்த்தி,அந்த வர்க்கங்களால் ஆண்டாண்டுக் காலமாக அடக்கி ஒடுக்கபப்ட்டு,சுரண்டப்பட்டு வந்த பாட்டாளிவர்க்கம், ரஷ்யப் புரட்சியை நிகழ்த்தியது.இதனை தொழிலாளி,விவசாயி உள்ளடங்கிய பாட்டாளி வர்க்கம் சாதிக்க முடிந்ததற்கு கம்யூனிஸ்ட்… Continue reading
-
மக்கள் பேராற்றலின் அடையாளமாக சோவியத்துக்கள்
பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு-6 “போல்ஷ்விக் கட்சியின் வரலாறு என்பது, எங்களது வாழ்க்கையின் வரலாறு. “ – புரட்சியில் பங்கேற்ற மூத்த தலைமுறை கம்யூனிஸ்ட் ஒருவர் 1965-ஆம் ஆண்டு சொன்னது. மனித குல வரலாற்றில் ரஷ்யாவில் நடந்த புரட்சி, ஒரு முக்கிய திருப்பு முனை. முதன்முறையாக காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள், ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, அரசு நிர்வாகம், பொருளாதார நிர்வாகம் அனைத்தையும் தங்கள் கையில் எடுத்துக்கொண்ட ஒரு மகத்தான மாற்றமே, ரஷ்யப்புரட்சி. இதனை சாதித்தது, மாபெரும்… Continue reading
-
புரட்சிப் பயணத்தில் கருத்து மோதல்கள் …
என்.குணசேகரன் பிப்ரவரியிலிருந்து அக்டோபர் புரட்சி வரை நிகழ்ந்த சம்பவங்கள், எந்த அளவில் முக்கியமானதோ, அதே அளவில் அப்போது வெடித்தெழுந்த கருத்து மோதல்களும் முக்கியமானவை. இந்தக் கருத்து மோதல்களின் ஊடாக, சரியான முடிவுகளும், சரியான பார்வைகளும் உருப்பெற்றன. லெனின் தலைமையில் நடந்த இந்த கருத்துப்போர் பாட்டாளி வர்க்கத்தை புரட்சிக்கு தயார் செய்தது. புரட்சியின் ஒவ்வொரு அசைவிலும் நடைபெற்ற இந்தக் கருத்துப்போர், பல புதிய கருத்தாங்கங்கள் உருவாக வழிவகுத்தது. இந்தக் கருத்தாக்கங்கள், ரஷ்ய நிலைமைகளை சார்ந்து உருவானவைதான். ஆனால் ரஷ்யப்… Continue reading
-
சமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது?…
“….பொருளியல்ரீதியான சமுக உறவுகளை ஆராய்வது என்று துவங்குகிறபோதே உடனடியாக “சமுக அமைப்பாக்கம்” பற்றிய புரிதல் ஏற்படுகிறது….. Continue reading
-
விவசாயிகளும் புரட்சியும் …
வேலை நிறுத்தம்,சட்டவிரோதக் கூட்டங்கள்,தலைமறைவு வாழ்க்கையின் போதே நடத்தப்பட்ட மார்க்சிய பயிற்சி வட்டங்கள்,தெருமுனை ஆர்ப்பாட்டங்கள், காவல்துறையோடும், இராணுவத் துருப்புகளோடும் நடைபெற்ற கடும் மோதல்கள் போன்ற நடவடிக்கைகள்தான் புரட்சியை கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களாக மாறின. Continue reading
-
ரஷ்யாவின் தனித்தன்மை …
1917 பிப்ரவரியில் நடந்த புரட்சி உண்மையில் முதலாளித்துவப் புரட்சி. அது நடந்த பிறகு, எட்டு மாதங்கள் கழித்து, அக்டோபரில் சோசலிப் புரட்சி நடந்தது. இந்த இரண்டு புரட்சிகளுக்கும் முன்னோடியாக ஒரு நிகழ்வு அமைந்தது. அது 19௦5-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய எழுச்சி. அது தோல்வியில் முடிந்தது. Continue reading