ஒரு வர்க்கம் என்ற வகையில் அதன் அளவு எவ்வளவு சிறியதாக இருப்பினும் சரி, அதன் வளர்ச்சி எவ்வளவு குறைவாக இருந்தபோதிலும் சரி, பாட்டாளி வர்க்கம் தன்னை முதலில் ஓர் அமைப்பாகவும், பின்னர் ஓர் அரசியல் கட்சியாக வும் அணிதிரட்டிக் கொள்ள வேண்டும்
Category: Podcast
வர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்
உ.வாசுகி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு, சமூக நீதி குறித்த மார்க்சிய அணுகுமுறையை உள்ளடக்கிக் கட்சியின் தெலுங்கானா மாநிலக்குழுவுக்கு அனுப்பிய குறிப்பை விளக்கும் வகையில் எழுதியது) ஒரு மெடலின் இரு பக்கங்கள்: ”ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகளின் கடமைகள்” என்ற தலைப்பில் 1897ல் தோழர் லெனின் எழுதிய ஒரு சிறு பிரசுரம் வர்க்கப் புரட்சியின் உள்ளடக்கத்தில் உள்ள ஜனநாயகம், சோஷலிசம் என்ற இரண்டு கூறுகளை விவரிக்கிறது. ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி, நரோத்னய வோல்யா, நரோத்னய …
Continue reading வர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்
தமிழக பட்ஜெட் 2019-20
வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் பிப்ரவரி மாத தமிழ் மார்க்சிஸ்ட் இதழில் மத்திய மோடி அரசின் மோசடி பட்ஜெட் பற்றி விரிவாக பரிசீலித்தோம். அடுத்து இக்கட்டுரையில் தமிழக அரசின் 2019-2020 நிதியாண்டிற்கான பட்ஜெட் பற்றி பார்ப்போம். 2௦11 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அதிமுக தலைமையிலான மாநில அரசு தமிழகத்தில் ஆட்சி புரிந்து வருகிறது. கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசும், எட்டு ஆண்டுகளாக மாநில அதிமுக அரசும் பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கைகளால் தமிழக மக்கள் தொடர்ந்து …
மோடி அரசின் மோசடி பட்ஜெட் 2019
வெங்கடேஷ் ஆத்ரேயா பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்னும் இரண்டே மாதங்களில் காலாவதியாக உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடந்து புதிய அரசாங்கம் அமையும் வரையிலான, வரும் 2019-20 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்கள் வரை, அரசு நடத்துவதற்கான வரவு செலவு திட்டம் முன்வைக்க மட்டுமே இந்த அரசுக்கு அதிகாரம் உண்டு. இதனை ஏற்று, நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே சமர்ப்பிக்க உள்ளோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் அதை மீறி 2019-20 நிதி …
சிங்காரவேலர் : நகரசபை உறுப்பினராக மக்கள் பணிகள்
உதயகுமார் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூலவரான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக உலக அளவில் அன்றே போற்றப்பட்டவர். கான்பூரில் 1925 இல் நடைபெற்ற இந்திய பொதுவுடமைக் கட்சி மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தியவர் என்ற பெருமையும் உண்டு. சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் தொடர்புடைய சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பும் கொண்டிருந்த சிங்காரவேலர் எந்த ஒரு பொறுப்பையும் தீவிர கொள்கை பிடிப்புடனும் சமரசமற்ற முறையிலும் நிறைவேற்றி வந்தார் என்பது தனிச்சிறப்பாகும். ஈ.வே.ரா பெரியார் …
Continue reading சிங்காரவேலர் : நகரசபை உறுப்பினராக மக்கள் பணிகள்
பிப்ரவரி 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
மார்க்ஸ் பிறந்த 200 ஆம் ஆண்டை முன்னிட்டு மார்க்சிஸ்ட் இதழில் நாம் தொடர்ந்து பல்வேறு சிறப்பு கட்டுரைகளை கடந்த ஆண்டு முழுவதும் வெளியிட்டு வந்தோம். அதன் நிறைவாக, சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மார்க்ஸ் பிறந்த நாள் இருநூற்றாண்டு விழாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மக்கள் சீனத்தின் குடியரசுத்தலைவருமான ஜி ஜின்பிங் மார்க்ஸ் குறித்தும், மார்க்சியத்தை பயில்வதின் அவசியம் குறித்தும், சீனாவில் அதை அமலாகும் விதம் குறித்தும் ஆற்றிய உரையின் பகுதி "மார்க்சை பயில்வது என்பது என்ன?" …

லெனினியம் – ஓர் அறிமுகம்
சில சந்தர்ப்பங்களில் நடைமுறை தேவைகளில் ஆதாயம் காண தத்துவத்தை பலி கொடுக்கும் தவறு நிகழ்வதுண்டு. குறிப்பிட்ட நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்திடாமல் வெறும் தத்துவ சொல்லாடல்களை முழக்கி தவறுகள் செய்கிற நிலையும் ஏற்படுவதுண்டு. இந்த இரண்டு வித தவறுகளையும் களைந்து புரட்சியை நோக்கி முன்னேறிட லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது
திரைப்பட முன்னோடி மிருணாள் சென்
எம். சிவகுமார் 2018-ம் ஆண்டு நம்மிடமிருந்து விடை பெறுவதற்கு சற்று முன்பாக வங்க சினிமாவின் மூவேந்தர்கள் என போற்றப்பட்டவர்களில் கடைசி வேந்தரான மிருணாள் சென்னும் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக் கொண்டார். அவர் மறைவு குறித்த செய்திகளை தேசிய ஊடகங்களில் பார்த்தபோது ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. கொல்கத்தாவிற்கு வெளியே இளம் இயக்குநர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினருக்கு அவர் பற்றிய பல விவரங்கள் அவரது மறைவுக்குப் பின் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் இருந்துதான் தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மேற்கு …

தொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி
குரல்: தேவி பிரியா ச. லெனின் “பிரபுத்துவ மீத மிச்சங்களுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரான எங்கள் போராட்டத்தில், நாங்கள் ருஷ்யாவின் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் ஒன்றுபடச் செய்வதில் வெற்றி பெற்றோம். மூலதனத்தையும், பிரபுத்துவத்தையும் எதிர்த்து விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டதுதான் எங்களுடைய வெற்றி அவ்வளவு சுபலமாக காரணமாய் இருந்தது” என்று குறிப்பிடுகிறார் லெனின். ரஷ்ய புரட்சியின் இந்த அனுபவம் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கான முக்கியமான படிப்பினையாக அமைகிறது. பிரெஞ்சு புரட்சியின் போது " விவசாய வர்க்கம், முதலாளி வர்க்கத்தின் உதவிப்படையாக செயலாற்றியது. …
Continue reading தொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி

இந்தியாவில் அறிவியலும், சமூகமும், தத்துவமும் …
இந்தியாவில் சமூகமும், அறிவியலும், தத்துவமும் என்பதை ஒரு தொடர்ச்சியாகவே நான் பார்ப்பேன். இந்த தொடர்ச்சி சில சமயங்களில் தடைப்படலாம். ஆனால் தொடர்ச்சி இருந்து கொண்டிருக்கும். அந்த தொடர்ச்சியானது, இந்திய மக்கள் தாங்களே வளர்ந்து வருகிறார்கள் என்பதேயாகும். நாம் 1994 ஆம் ஆண்டிற்கு வரவேண்டும். 21 ஆம் நூற்றாண்டுக்கான பார்வையை வசப்படுத்தி செயல்படவேண்டும் என்கிறேன்.