பொது சுகாதாரம்: முதலாளித்துவ பார்வையின் குறைபாடுகள்

(பொது சுகாதாரம் குறித்து முதலாளித்துவ அறிஞர்களிடம் இருந்த நம்பிக்கைகள் சிதைந்திருக்கும் சூழலில் அதற்கான அடிப்படை காரணங்களை ரிச்சர்ட் லெவின்ஸ் பட்டியலிடுகிறார். குறுகலான முதலாளித்துவ பார்வையிலிருந்து, முற்போக்கான மார்க்சிய பார்வையை அவர் வேறுபடுத்துகிறார். இந்தப் பார்வையை முன்னெடுப்பது வர்க்கப் போராட்டத்தில் தவிர்க்க முடியாதது என்கிறார். மந்த்ளி ரிவியூ இதழில் அவர் எழுதிய கட்டுரையின் சுறுக்கமான மொழியாக்கம். – ஆசிரியர் குழு)

– ரிச்சர்ட் லெவின்ஸ்

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ‘மேற்குலக’ நாடுகளின் அறிவியல் பாரம்பரியமானது. “இது எதனால் ஆனது” மற்றும் “இது எப்படி இயங்குகிறது” என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் அறிவியல் கண்ணோட்டங்களில் மிகப்பெரும் வெற்றிகளை சாதித்திருக்கிறது. நூற்றாண்டுகளாக இந்த கேள்விகளுக்கான விடை அறியும் எளிய வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். பொருட்களை உடைத்து திறந்தும், செதுக்கி மெலிதாக்கி, கீரியும் அவை எதனால் செய்யப்பட்டிருக்கிறது என கூறுகிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் சிக்கலான அமைப்புகளை புரிந்துகொள்வதில் இந்த வெற்றி சாத்தியமாகவில்லை.

மக்கள் நலவாழ்வு சார்ந்த விசயங்களை ஆய்ந்து பார்த்தால் இந்த பலவீனம்  தெளிவாகவே புலப்படுகிறது. கடந்த நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் மாறிக் கொண்டேவந்துள்ள மக்கள் நலவாழ்வு குறித்தான போக்குகளில் கொண்டாடுவதற்கு உள்ள காரணங்களைப் போலவே, அச்சுறுத்தும் காரணங்களும் உள்ளன. கடந்த இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் முப்பது ஆண்டுகள் அதிகரித்தது. வினோதமான உயிர்க்கொல்லி நோய்கள் மட்டுப்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட அழிக்கப்பட்டன. பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டது.  தொழுநோய் அரிதான ஒன்றாக மாறிப் போயுளளது.  போலியோ நோய் உலகின் பல பகுதிகளில் ஒழிக்கப்பட்டு விட்டது. ஒரே மாதிரியான வெவ்வேறு கிருமிகளை வேறுபடுத்தி சோதித்து அறியும் அளவிற்கு அதி நவீன அறிவியல் தொழில் நுட்பத்தில் நாம்  முன்னேறியிருக்கிறோம்.

அதே சமயம் ஏழை பணக்காரர் இடைவெளி அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் உலக மக்கள் திரளில் பெரும் பகுதியினருக்கு கிடைகாத சூழல் உருவாகியுள்ளது. இப்படியான சூழலில் புதுப்புது நோய்கள் தோன்றுகின்றன, ஒழித்துவிட்டதாக கருதிய நோய்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன. இது பொதுசுகாதார வல்லுனர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

1970-களிலேயே தொற்று நோய்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டன. அதாவது தொற்றுநோய்கள் கொள்கையளவில் ஒழிக்கப்பட்டுவிட்டன.  எதிர்கால சுகாதாரப் பிரச்சனை என்பது சிதைவுறுதல் நோய்கள் (Degenerative diseases), வயது முதிர்வு காரணமாக ஏற்படும் நோய்கள், நாட்பட்ட நோய்கள் போன்ற நோய்களாகும்.  அவ்வாறு நினைத்தது ஒரு இமாலயத் தவறு என்பதை இன்று உணர்கிறோம். 

மலேரியா, காலரா, காசநோய், டெங்கு மற்றும் நவீன நோய்கள் வந்துள்ளன. புதிய, வேறுபட்ட வகையிலான நோய்கள் பீடித்திருப்பதும், அதில் மிகவும் அச்சப்படத்தக்க நோயான ‘எய்ட்ஸ்’ நோய், ‘லிஜனேர்’ நோய் (Legionnaire’s disease), எபோலா தொற்று, நச்சு அதிர்வு பாதிப்பு (Toxic shock syndrome) பல்வேறு மருந்துகளுக்கும் கட்டுப்படாத காச நோய் மற்றும் இதர நோய்களின் தாக்குதல் அதிர்ச்சி தருகின்றன.

இது எப்படி நடந்தது?  பொதுசுகாதாரம் இவ்வாறு சிக்கலுக்குள்ளானது எப்படி?  சுகாதார நிபுணர்கள் தொற்று நோய் மறைந்து விடும் என கருதியது எப்படி? அது ஏன் தவறாகியது?

பொய்யாகிப்போன சில காரணங்கள்

கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தொற்று நோய்த் தாக்கம் குறைந்து வந்தது உண்மைதான்,  இந்த போக்கு அப்படியே தொடரும் என்பது வழக்கமான கணிப்பு ஆகும். அவ்வாறு கணித்த சுகாதார வல்லுனர்கள் முன்வைத்த வாதம் தொற்று நோய்கள் முற்றாக மறைந்து விடும் என்பதாகும்.

முதலாவதாக அதனை எதிர்கொள்ள அனைத்து விதமான புதிய தொழில்நுட்பங்களையும் கடைபிடித்துள்ளோம் என்பதால் அவர்கள் அவ்வாறு நம்பினார்கள்.

உண்மையில் சில நோய்களைக் கண்டுபிடிப்பதில் விரைவாகச்  செயல்பட்டிருக்கிறோம். இரண்டே நாளில் ஆளைக் கொன்றுவிடும் அபாயமான நோய் பீடித்த நோயாளருக்கு ஆய்வக பரிசோதனைகளின் மூலம் நோயை விரைவாகக் கண்டுபிடித்து உடனே சிகிச்சை அளிக்க முடிகிறது.  வாரக் கணக்கில் பாக்டீரியா கிருமிகளை வளர்த்து அதன் மூலம் நோயைக் கண்டறிவதற்குப் பதிலாக மரபணு சோதனை மூலம் ஒரே மாதிரி தெரிகிற நோய்க்கிருமிகளையும் கூட விரைவாக வேறுபடுத்தி அடையாளம் காண முடிகிறது.  

நோய் பரப்பும் நுண் உயிரிகளுக்கு எதிரான போர்க் கருவிகளாகிய  மருந்துகளையும், தடுப்பூசிகளையும் உருவாக்கியுள்ளோம். கொசு மற்றும் சிறு பூச்சிகளை (Ticks) அழிப்பதற்கு மருந்துகள் உருவாக்கியுள்ளோம்.  உயிர்வகை மாற்றம் மற்றும் இயற்கை தேர்வு மூலம் நுண்ணுயிரிகள் தொடர்ந்து அச்சுறுத்தும் என்பது நாமறிந்ததே. எனவே நோய்கள் உருவாகும் செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும்.  அதே சமயம் அதனை எதிர்கொள்ள இதுவரை கண்டிராத புதுப்புது ஆயுதங்கள் உருவாக்கப்படும்.

குறிப்பிட்டுச் சொன்னால் நமக்கும், நோய் உருவாக்கும் நுண்ணுயிரிகளுக்கும் போர் நடக்கிறது. நாம்தான் இதில் முன்னணியில் இருப்போம். ஏனெனில் நமது ஆயுதங்கள் மென்மேலும் வலுவானதாகவும், ஆற்றல் மிக்கதாகவும் உள்ளன.

மற்றொரு காரணம் – இதைத்தான் உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் சுட்டிக் காட்டுகிறது – பொருளாதார வசதி வறுமையை ஒழித்துவிடும், செல்வத்தைப் பெருக்கிவிடும் எனவே அனைத்து புதிய தொழில்நுட்பங்களும் அனைவருக்கும் கிடைக்கும்.

மூன்றாவதாக மக்கள் தொகை வல்லுனர்கள் ஒரு காரணத்தை முன்வைத்தார்கள். தொற்று நோய்கள் குழந்தைகள் மீதே கடுமையாக இருக்கின்றன, நமது சமூகத்தில் வயது மூத்தவர்கள் அதிகம் எனவே நோய் தாக்கத்திற்கு குழந்தைகள் ஆளாகும் வாய்ப்பு குறைவாகும்.

இவ்வாறு அனுமானக்கும்போது ஒரு விசயத்தை அவர்கள் கவனிக்க தவறியுள்ளார்கள். குழந்தைகளை நோய்கள் அதிகம் தாக்குவதற்கு காரணம் அவர்கள் கிருமிகளை எதிர்கொண்டதில்லை என்பதாகும். வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். இப்போது குறைவாக உள்ள குழந்தைகளுக்கு வயதாகும்போது அவர்கள் நோய்க்கு ஆளாகும் சாத்தியம் அதிகம். அம்மை போன்ற வியாதிகள் குழந்தைகளை விடவும் வயதானவர்களுக்கே அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

குறுகிய கண்ணோட்டமே பிரச்சனை

மருத்துவமும் அது சார்ந்த அறிவியல் துறையும் கொண்டிருக்கும் வரலாற்று அறிவும், தத்துவ புரிதலும் ஒரு வரம்புக்கு உட்பட்டவையே ஆகும். பொது சுகாதார கணிப்பில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட அனைவரும் பூகோள ரீதியிலும், வாழ்வுரிமை பற்றியும் குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள். அவர்கள் கடந்த நூற்றாண்டு அல்லது இரண்டு நூற்றாண்டுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.  முழுமையான வரலாற்றுக் காலத்தை எடுத்துக் கொள்வதில்லை.  நீண்ட கால நோக்கில் அவர்கள் பார்த்திருப்பார்களென்றால் மக்கள் தொகையிலும், உணவு மற்றும் நிலப்பயன்பாட்டிலும் ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றங்களின் விளைவாக, நோய் உருவாக்கம் ஏற்படுவதையும், மறைவதையும் கணக்கில் எடுத்திருப்பார்கள். இயற்கையோடான உறவில் மாற்றம் ஏற்படும்போது தொற்று நோய் பரவலுக்கும், தாக்குதலுக்கும் ஆளாகிறோம்.

ஐரோப்பாவில் பிளேக் நோய்

ஆறாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசில் ஜஸ்டினன் என்ற அரசருடைய முடியாட்சிக் காலம் வீழ்ச்சியுற்ற சமயத்தில் ஐரோப்பாவில் முதன்முறையாக பிளேக் நோய் பரவியது.  சமூக சீர்குலைவும், உற்பத்தி வீழ்ச்சியும் ஏற்பட்டு ஐரோப்ப கண்டமே துயரில் ஆழ்ந்தது.  அந்தக் காலகட்டத்தில் மிகப் புகழ் பெற்ற நகரங்களில் சுகாதார வசதிகள் சீர்குலைந்தன.  பிளேக் நோய் பரவிய காலத்தில் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.  14 ஆம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவத்திற்கு நெருக்கடி உருவாகி வளர்ந்த காலத்தில் பிளேக் நோய் மீண்டும் தோன்றியது, பிளேக் நோய் பரவுவதற்கு முன்பாகவே மக்கள் தொகை வீழ்ச்சியுற்றதை பார்த்தோம்.  1338-ஆம் ஆண்டில் ஆசியாவிலிருந்து கருங்கடல் துறைமுகங்களில் வந்திறங்கிய மாலுமிகள் மூலம் பிளேக் நோய் கடத்தப்பட்டு பின்னர் அது அங்கிருந்து குறுகிய கால இடைவெளியில் மேற்கு முகமாக பயணம் செய்து ரோம், பாரீஸ், லண்டன் நகரங்களைத் தாக்கியது என்பதே பிளேக் நோய் பரவல் குறித்த பொதுவான வரலாறு ஆகும்,  வேறு வார்த்தைகளில் சொன்னால், பிளேக் நோய் வேறு இடத்தில் தோன்றி இங்கு பரப்பப்பட்டது என்பதாகும்.  இதற்கு முன்னர் பல கால கட்டங்களில் பலமுறை பிளேக் நோய் தோன்றியிருக்கக்கூடிய சாத்தியப்பாடு இருந்தும், எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை. மக்கள் அதனை எதிர்த்து நிற்கும் சக்தியை இழந்திருந்த போதுதான் அந்த நோய் வெற்றிபெற்றது. எலிகளை கட்டுப்படுத்தி வந்த  நமது சமூகத்தின் கட்டுமானம் தகர்க்கப்பட்ட பின்னணியில், எலிகளினால் பரப்பப்படும் நோயினை எதிர்க்கும் சக்தியை இழந்தோம்.

சூழலியலை கணக்கில் கொண்ட பார்வை

இதர நோய்களைப் பார்த்தோமானால், அவைகள் வரலாற்றில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக உருவாவதும், மறைவதும் நிகழ்கிறது. நாடு வளர்ச்சியடையும்போது தொற்று நோய் மறைந்து விடும் என்ற கோட்பாட்டிற்கு  மாற்றாக ஒரு சுற்றுச்சூழல் பார்வை முன்வைக்கப்பட்டது.  மக்களின் வாழ்வியலில் ஏற்படும் பெரிய மாற்றங்கள் காரணமாக (மக்கள் தொகை பெருக்கம், தங்குமிட அமைப்பு முறை, உற்பத்தி முறைகள்) நோய்க்கிருமிகள், அவைகளின் உற்பத்தி மற்றும் பரவல் ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்படுகிறது

லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இதர பகுதிகளில் பரவிய ரத்தக்கசிவு நோய் எலிகள் மூலம், நேரடியாக இல்லாமல் விளைந்த தானியக் கதிர்களை கடித்து உண்ட மிச்சத்தை சுத்தம் செய்ததன் வழியாக பரவியது.  தானியங்கள் எலிகளின் உணவாகும்.  எலிகள் தானிய விதைகளையும், புற்களையும் உண்டு வாழ்கின்றன.  காடுகள் அழிக்கப்பட்டு, தானிய பயிர் விளைச்சல் துவங்கிய பொழுது ஓநாய், சிறுத்தை, பாம்புகள் மற்றும் எலிகளை தின்னும் ஆந்தை போன்ற உயிரினங்கள் அழிக்கப்பட்டன.  அதன் இறுதி விளைவாக எலிகளுக்கான  உணவுத் தேவை கூடியது, எலிகளின் இறப்பு விகிதம் குறைந்தது.

தற்போது தொற்று நோய்களின் வாகனமாக இந்த சமுக விலங்குகள் உள்ளன.  அவைகள் தங்களுக்கான வளைகளை கட்டிக் கொண்டன.  தங்கள் இனத்தை கட்டிக் காத்தன.  எப்பொழுது எல்லாம்  புதிய தலைமுறை உருவாகிறதோ, அப்பொழுது இளமையான எலிகள் புதிய இடங்களைத் தேடி வளைகள் அமைக்கச் சென்று விடுகின்றன.  அவைகள் பெரும்பாலும் உணவுக் கிடங்குகளையும், குடியிருப்புகளையும் நோக்கிச் சென்றன.  அதன் மூலம் நோயைக் கடத்துபவைகளாக  மாறிப்போயின.

இதே போன்ற மற்றொரு மனித நடவடிக்கை நீர்ப்பாசன ஏற்பாடுகள் ஆகும்.  இதனால் கல்லீரல் புளூக் நோயை பரப்பும் நத்தை, மலேரியா, டெங்கு மற்றும் மஞ்சள் காமாலை நோயை பரப்பும் கொசு போன்ற உயிரினங்களுக்கான வாழ்விடங்கள் உருவாகின்றன. நீர்ப்பாசனம் பெருகிய பொழுது, உதாரணமாக எகிப்தில் அஸ்வான் அணை கட்டிய பின்னர் கொசுக்களின் வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டன.  எப்போதாவது வரும் ‘ரிப்ட் பள்ளத்தாக்கு காய்ச்சல்’ எகிப்தில் இப்போது எல்லாக் காலங்களிலும் காணப்படும் நோயாக மாறியுள்ளது. 

மூன்றாம் உலக நாடுகளில் பிரம்மாண்டமான நகர உருவாக்கம் காரணமாக  டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்களால் “ஏடெஸ் எகிப்தி”  எனும் மஞ்சள் காமாலை நோய் பரப்பப்படும் புதிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.  நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழ அவை பழகிக்கொண்டன.  காடுகளில் இருக்கக்கூடிய இதர கொசுக்களோடு போட்டி போட முடியாத சோனி கொசுக்கள் வெப்ப மண்டலங்களில் பெரிய நகரங்களில் கைவிடப்பட்ட பொருட்களான குட்டைகள், நீர்த்தொட்டிகள் மற்றும் பழைய டயர்கள் மூலம் இனப் பெருக்கம் செய்ய வசதியாக ஒரு சிறப்பு சூழலை உருவாக்கித் தந்துள்ளோம். வெப்ப மண்டலங்களில் நகரமய வளர்ச்சி, குறிப்பாக பெருநகரங்களான பாங்காக், ரியோ டி ஜெனீரோ. மெக்சிகோ மற்றும் பத்திலிருந்து இருபது மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் டெங்கு மற்றும் மஞ்சள் காமாலை நோய் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

மக்கள் தொகை நெருக்கம்

மக்கள் தொகை நெருக்கமானது புதிய புதிய நோய்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.  தட்டம்மை நிலைத்து நிற்க சில நூறு ஆயிரம் மக்கள் தொகை போதும். எண்ணிக்கை குறைவாக இருந்தால் தட்டம்மை அனைவரையுமே தாக்கும், அதிலிருந்து மீள்வோருக்கு எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது அந்த நோய் நீடித்திருக்க முடியாமல் மறைந்துவிடும். மீண்டும் அது உருவாகித்தான் வளர வேண்டும். இரண்டரை லட்சம் பேர் வாழுகிற ஒரு நகரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையானது தட்டம்மை நோய் நிலைத்து தொடர போதுமான அளவாகும்.  அதுவே ஒரு கோடிப்பேர் அல்லது இரண்டு கோடிப்பேர் வாழும் நகரமாக இருந்தால் எம்மாதிரியான நோய்கள் தோன்றவும், பரவவும் முடியும் என எண்ணிப் பார்க்க வேண்டும்.  வாழ்க்கை நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டால் அது நோய்க்கான வாய்ப்பு வாசல்களை திறந்து விடும் என்று தெளிவாக தெரிகிறது.

நுண்ணுயிர்கள் பரவலுக்கான சூழல்

பொது சுகாதாரம் பற்றி குறுகிய பார்வை கொண்ட மருத்துவர்கள், மனிதனுக்கு தோன்றும் நோய்கள் மீது மட்டுமே அக்கறை கொள்வார்கள், காட்டு விலங்குகள் அல்லது வளர்ப்பு பிராணிகள் மற்றும் தாவரங்களைத்  தாக்கும் நோய்கள் மீது போதிய அக்கறை செலுத்துவதில்லை. அவ்வாறு கவனம் செலுத்தினால் எல்லா உயிரினங்களும் நோய்களை பரப்புகிற உண்மையை அவர்கள் எதிர் கொள்ள நேரிட்டிருக்கும்.  ஒட்டுண்ணிகளால் தான் நோய்கள் பரப்பப்படுகின்றன.  நோய்த்தொற்று ஒன்று தோன்றினால் அதன் அறிகுறிகள் தென்படலாம் அல்லது தென்படாமலும் இருக்கலாம். ஆனால் எல்லா உயிரினங்களும் ஒட்டுண்ணிகளுடன் தொடர்பு உடையவையே.  நீரிலோ அல்லது நிலத்திலோ உயிர்வாழ்வதற்கான போட்டியில் தப்பி பிழைக்கும் வழியாகத்தான் ஒட்டுண்ணிகள் உயிரினங்களில் தொற்றுகின்றன.

உதாரணமாக லிஜனேர் நோய்க் கிருமி தண்ணீரில் தான் வாழ்கிறது. இந்த பாக்டீரியா கிருமி உலகமெங்கும் காணப்பட்டாலும் அதன் வலுவற்ற தன்மை காரணமாக, பரவலாக நோயை உருவாக்கவில்லை. அதன் நுணுக்கமான உணவுத்தேவைகளின் காரணமாக, மனிதர்களை பெரும்பாலும் தொற்றுவதில்லை. அதற்கு சில தன்மைகள் உண்டு.   ஒன்று கடுமையான வெப்பநிலையைத் தாங்கும் சக்தி, இரண்டு ஓர் அமீபாவிற்குள் ஒளிந்து கொண்டு குளோரின் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் ஆற்றல். அரங்கங்கள், உணவு விடுதிகள், சாலையோரக் கடைகளில் தண்ணீரை கொதிக்கவைத்து, குளோரின் கலந்து பயன்படுத்துகிறார்கள். சில தங்கும் விடுதிகளில் ‘ஷவர்’ (நீர்த்தூவல்) வசதி இருக்கும். அதில் நீர் பொழியும்போது அதனால் கிருமிகளை நுரையீரலின் இடுக்குகளுக்கு கொண்டு சேர்க்க முடியும். லினேஜர் கிருமிக்கு தகுந்த சூழலை இந்த வகையில் நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். குளோரினும், நீரை கொதிக்க வைப்பதும் லினேஜர் கிருமி அல்லாத பிற கிருமிகளை அழித்துவிடும். குழாய்களின் உட்பகுதிகளில் லினேஜர் கிருமிகள் தங்கிக் கொள்கின்றன.

உயிரினங்களை நாம் கவனித்தோமானால், ஒட்டுண்ணி மற்றும் அதன் புரவலர் உயிரினங்கள் மீது அமர, போட்டி போடுகின்றன.  ஒரே பண்புடைய உயிரினங்கள், ஒட்டுண்ணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை, எனவே ஒட்டுண்ணிகள் அவற்றை நோக்கி படையெடுக்கின்றன.  நோய் பரவல், குறிப்பாக, காலரா பரவல் குறித்து உற்று நோக்கினால், அது  பூமிக் கோளத்தின் கிழக்கு பகுதியிலிருந்து அமெரிக்கா சென்று பின்னர் பெரு நாட்டிற்குள் புகுந்து மத்திய அமெரிக்கா வரை பயணப்பட்டுள்ளது.  ஆரஞ்சு மர நோய், பீன்ஸ் மற்றும் தக்காளியைத் தாக்கிய நோய்க் கிருமிகள், அதே போல விலங்குகளை தாக்கிய நோய்கள் இதே பாதையில் பயணப்பட்டுள்ளன.  நாம் காண்பது என்னவென்றால் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கையில் நோய்க்கிருமிகள் மற்றும் அதன் புரவலர்கள் ஓர் இணையான பரிணாம வளர்ச்சியை கொண்டுள்ளன.  ஆனால் இவை மனிதர்களிடம் காணப்படுவதில்லை என்பது ஒரு வேறுபாடு ஆகும். இந்தக் கண்ணோட்டத்தில் மனிதனைத் தாக்கும் நோய்கள் குறித்து புரிதல் ஏறிபட்டால் அதன் மூலம் ஏற்படும் சாத்தியமான ஆபத்துகளை கண்டுகொள்ள முடியும்.

நோய்க் கடத்தல்  முறை

எந்த மாதிரியான பூச்சிகள் நோயைப் பரப்புகின்றன. கிட்டத்தட்ட அவைகள் கொசுக்களாகவோ அல்லது ஈககளாகவோ உள்ளன அல்லது உண்ணி, வண்டு மற்றும் பேன் போன்ற பூச்சிகளாக இருக்கின்றன, பல்லாயிரக்கணக்கான பூச்சியினங்கள் இருந்தாலும், இந்த இரு பிரிவுகள் தான் பெரும்பாலும் நோய்க்கிருமிகளை மனிதனிடம் பரப்புகின்றன.   பட்டாம்பூச்சி மற்றும் தட்டான்பூச்சி போன்ற பூச்சிகள் மூலம்  நோய்கள் பரப்பப்படுவதில்லை.  அது ஏன் இப்படி நடக்கிறது?  அதற்கான காரணம் என்ன?

இந்த இரு பிரிவுகளும் ஒரே மாதிரியான உறிஞ்சு குழல் வாயமைப்பு கொண்டவை.  அவர்களின் புரவலர்களிடமிருந்து ஒரு வித திரவத்தை உறிஞ்சுகின்றன.  கொசு ரத்தத்தினை உறிஞ்சுகிறது. அபிட் வண்டு தாவரத்தின் சத்துக்களை உறிஞ்சுகிறது.  ஏதாவது பானத்தை உறிஞ்சு குழல் மூலம் உறிஞ்சிப் பழகியிருந்தால் நீங்கள் அறிவீர்கள், அதாவது உறிஞ்சிய சில நேரம் கழித்து உறிஞ்சு குழலில் ஓர் இடைவெளி உண்டாகும். தொடர்ந்து பானத்தை உறிஞ்ச வேண்டுமானால் ஒரு சிறு அளவாவது அந்தத் திரவம் அக்குழாய்க்குள் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.  கொசு மற்றும் அபிட் வண்டின் உமிழ்நீர் சுரப்பி உறிஞ்சு குழல் மூலம் திருப்பி அனுப்பப்பட்டு ரத்தம் அல்லது உயிர்ச்சத்தை மீண்டும் பருகுகிறது.  அதனால் தான் கிருமிகள் குறித்து ஆராயும் போது, கொசுக்களின் உமிழ்நீர் சுரப்பி மற்றும் உண்ணியின் உமிழ்நீரையும் சோதிக்கிறோம். குறிப்பிட்ட நோய் அல்லது குறிப்பிட்ட சூழலை மட்டும் ஆய்வு செய்யாமல், மேற்சொன்ன வகையில் ஒட்டுமொத்தத்தையும் ஆய்வு செய்தால் நம்மால் பொதுத் தன்மையை அறிந்துகொள்ள முடியும். ஆனால் அப்படியான ஆய்வுகள் நடப்பதில்லை.

பரிணாமம் மற்றும் சமுதாயம் குறித்த பார்வையில் குறைபாடு

பொது சுகாதார அறிவியலில் நிலவக்கூடிய மற்றுமொரு குறுகிய நோக்கு – அறிவுக்கு தாமே திணித்துக்கொண்ட கட்டுப்பாடு – பரிணாம வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியை வளர்த்தெடுப்பதின் பின்னடைவாகும். பரிணாமம் என்றால், சூழலில் ஏற்படும் சவால்களுக்கு தக்க உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்பதே உடனடியான புரிதலாக இருக்கிறது. உதாரணமாக உடல் தனக்கு எழக்கூடிய சவாலை ஆன்டிபாடி மூலம் எதிர்க்கிறது. பல நுண்ணுயிர்கள் ஆன்டிபாடிக்களை எதிர்கொண்டு நிலைத்திருக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். வேளாண் துறையில் பல பூச்சிகள், பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்து தங்களை தகவமைத்துக்கொண்ட அனுபவங்கள் நமக்கு உள்ளன. சில நுண்ணுயிர்கள், ஆன்டிபாடிக்களை எதிர்கொள்வதற்கு முன்பே அதற்கு எதிரான ஆற்றலை உருவாக்கிக் கொண்டிருப்பதையும் கூட பார்க்கிறோம்!. இதற்கு காரணம் புதிய பெயரோடு சந்தைக்கு வரும் மருந்துகள் அதற்கு முந்தைய மருந்துகளை பெரும்பாலும் ஒத்து இருப்பதும், பெயர் மட்டுமே புதிதாக இருப்பதும் ஆகும். எனவே கிருமிகளுக்கு அந்த ஆன்டிபாடிக்களை எதிர்கொள்வது சிரமமாக இல்லை. ஒரு நோய்க்கான காரணிகளை மட்டுமே பார்ப்பது போதாது, மக்களை பலவீனமாக்கும் பிற காரணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

குறைபாடுள்ள பொது சுகாதார சிந்தனையானது, பிற உயிரிகள் குறித்தும், பரிணாம வளர்ச்சி, சூழலியல் ஆகியவை குறித்தும் கண்டுகொள்ளவில்லை. அதே போல அது சமூக அறிவியலையும் கண்டுகொள்ளவில்லை. எல்லா விதமான சுகாதார சிக்கல்களுக்கும் ஏழைகளும், ஒடுக்கப்பட்டோருமே அதிகமாக ஆளாகிறார்கள். ஆயுட்காலம், முதுமையினால் வரும் நோய்கள், மாரடைப்பு ஏற்படும் கால இடைவெளி போன்றவைகளை வெளிப்படுத்துவதாக வர்க்க வேறுபாடுகள் அமைகின்றன.

ஒரு முற்போக்கான திறனாய்வாளர் 

ஒரு முற்போக்கான மருத்துவ திறனாய்வாளர் என்றால் எது மக்களை நோயாளிகளாக ஆக்குகிறது, எந்தவித சுகாதார வசதி மக்களுக்கு கிடைக்கிறது என்பது குறித்து செயல்புரிபவராக இருக்க வேண்டும்.

மக்களின் குறைவான வருமானம், பருவநிலை மாற்றத்தின் மூலம் உண்டாகும் வெப்பம் ஆகியவை பொது சுகாதாரத்தை பாதிக்கும் முக்கியமான காரணிகளாகும். இலையுதிர் காலத்தின் இறுதியில் அல்லது குளிர் காலத்தின் ஆரம்பத்தில், மண்ணெண்ணெய் அடுப்பு, மின் அடுப்பு, மற்றும் வெப்பம் குறைவான அறைக்கு வெப்பமூட்டும் சாதனங்கள் மூலம் ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற அதிக எண்ணிக்கையில் மக்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருவார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு உடல் வெப்ப நிலையில் ஒரு சிறு மாற்றம் அவரின் உடல்நலத்தைப் பாதிக்கும்.  ஆனால் வசதி படைத்தவர்களை அது பாதிக்காது.  அதுவே தான் உணவு விஷயத்திலும் இருக்கும்.  மக்கள் வேலையில் இல்லாமல் இருந்தால், அல்லது விலைவாசி உயரும் போது, அவர்கள் உணவிற்கு செலவிடுவதை குறைத்துக் கொள்வார்கள்.  அதன் உடனடி விளைவு ஊட்டச் சத்து குறைபாடு ஆகும். 

தெரிவு எனும் கற்பனை

உடல் நலத்தில் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு, புறந்தள்ளப்படுவதால் ஏற்படும் வேறுபாடுகள், உடல்நலத்தில் கடுமையான பாதிப்பை உருவாக்கும்.  ஒருவேளை ஒரு மாணவர் கிட்டப்பார்வை உடையவர் என வைத்துக் கொள்வோம். ஆனால் அவள் உயரமானவளாக இருந்த காரணத்தினால், கடைசி இருக்கைக்கு மாற்றப்பட்டாள்.  ஆசிரியர் கூடுதல் பணியில் இருந்தபடியால் அவளால் கரும்பலகையை பார்க்க முடியவில்லை என்பதை கவனிக்கவில்லை.  படபடப்பு காரணமாக அவள் பக்கத்து மேசையில் இருந்த குழந்தையோடு சண்டையில் ஈடுபட்டாள். திடீரென அவள் கற்றல் குறைபாடுடைய குழந்தையாகப் பார்க்கப்பட்டு தொழில் பயிற்சி வகுப்பிற்கு மாறறப்பட்டாள்.  அவள் ஒரு சிறந்த கவிஞராக வந்திருக்கும் வாய்ப்புள்ளவளாக இருந்திருக்கலாம்.  மிகவும் வசதி படைத்த சமூகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்கள் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பும் இருக்கும்.  இப்பெண் அங்கிருந்தால், இறுதியில் கண்ணாடி அணியும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

நச்சு வாயுவை வெளியேற்றும் ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை புற்று நோய் கடுமையாகத் தாக்கும். முக்கியமான வாழ்க்கை விளைவுகள் அற்பமான உயிரியல் வேறுபாடுகளினால் தான் உருவாகின்றன.

தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பற்றி

மனிதர்கள் தம் தெரிவு செய்யும் உரிமையை பயன்படுத்துவது கூட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. 

புகை பிடித்தல் பழக்கம் ஒரு உதாரணம். பணியில் சுதந்திரமாக இருக்கும் சூழலைப் பொறுத்து புகைபிடிக்கும் எண்ணிக்கை உயரும்.  வாழ்க்கையில் குறைவான  வாய்ப்பு உள்ளவர்கள், புகை பிடிக்கும் வாய்ப்பை பயன்படுத்துகிறார்கள்.  ஒரு சில பணிகளின் போது இடைவேளை எடுத்துக் கொண்டு வெளியில் செல்ல வாய்ப்பாக இது பயன்படுகிறது.  இதனை தெரிவு செய்பவர்கள் கூறுவது “ஆமாம்.  புகைபிடித்தால் இன்னும் இருபது ஆண்டுகளில் புற்று நோயை உருவாக்கும். ஆனால் நிச்சயமாக இன்று என்னை அது உயிருடன் வாழ வைக்கிறது”. இந்த புத்திசாலித்தனமற்ற முடிவுகளை எடுக்கும் மக்கள், தங்களின் சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு, அதற்கான பொருத்தப்பாடுகளை உருவாக்குகின்றனர்.  ஆகையால் போதனைகள் மூலம் அவர்களை மாற்றி விடலாம் என்பது நடவாத காரியமாகும்.  தெரிவு எதனடிப்படையில் செய்யப்பட்டுள்ளது என்பதின் உள்ளடக்கத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.

மக்கள் தங்கள் வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தி அர்த்தமுள்ள தெரிவைச் செய்ய வேண்டுமென்றால், அவர்கள் வாழ்க்கையை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கும் நிலை ஏற்பட வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு கூட்டத்தில் நான் பங்கேற்றபோது கேள்வித்தாள் ஒன்றை கொடுத்தார்கள். அந்தக் கேள்வி பின்வருமாறு :  நாம் ஜனநாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு எல்லா மக்களுக்கும் ஓட்டுப் போடும் உரிமை இருக்கும் போது, சுகாதாரத்தில் இது போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும், அசமத்துவத்தை அனுமதிக்கும் கொள்கைகளை ஏன் தொடர அனுமதிக்க வேண்டும்? நாம் விவசாயத்தை மேம்படுத்த திட்டங்கள் தீட்டுகிறோம், ஆனால் அது பசியை உருவாக்குகிறது.  நாம் மருத்துவமனைகளை உருவாக்குகிறோம், ஆனால் அவைகள் புதிய நோய்களை பரப்பும் இடமாக உள்ளது.  நாம் வெள்ளத்தை கட்டுப்படுத்த, பொறியியல் திட்டங்களில் முதலீடு செய்கிறோம்,  ஆனால் அது வெள்ள அபாயத்தை கூட்டுகிறது.  என்ன தவறு நிகழ்ந்தது? 

அதற்கு ஒரு விடை, நாம் போதுமான அளவு புத்திசாலித்தனம் அற்றவர்களாக நாம்  இருக்கலாம். அல்லது அந்தப் பிரச்சனைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கலாம்; அல்லது நாம் சுயநலவாதிகளாக இருக்கலாம்; அல்லது நம்மிடம் கோளாறு ஏதோ இருக்கலாம் என்பதாகும். அல்லது, ஒருவேளை, இயற்கையுடன் இயைந்து கூட்டுறவு வாழ்வு வாழ தகுதியற்ற ஜந்துக்களாக நாம் இருக்கிறோம் என சொல்லலாம்.

இது போன்ற எதிர்மறை முடிவுகளை நிராகரிக்க வேண்டும்.   போராட்ட வரலாறு நீண்டது, கடினமானது; ஆனால் போராட்டங்களே வெற்றியை சாதித்துள்ளன. ஜனநாயகம் என்ற மாயையை நம்பிக்கொண்டிருப்பதும், ஒரு சாதகமான அரசு நமது பிரச்சனைகளை தீர்க்கும் என நம்புவதும் மிக எளிது.   சமூக ஜனநாயக அரசுகளால் உருவாக்கப்பட்ட மிகவும் தொலைநோக்கு கண்ணோட்டம் கொண்ட திட்டங்கள் எந்தவிதத்திலும் முதலாளித்துவத்திற்கு சவால் விடவில்லை.  அவைகள் செய்தது சற்றுக் கூடுதல் சமத்துவம், அதாவது முற்போக்கான வருமான வரித் திட்டம், தாராள வேலையில்லாக் கால காப்பீடு போன்றவைகளாகும்.

சரக்கு உந்து ஓட்டுநர்கள் மத்தியில் காணப்படும் இதய நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, மேம்படுத்தப்பட்ட உணவு வழங்க வேண்டுமென ஸ்வீடனில் போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் தெருவோர உணவு கடைகளில் மேம்படுத்தப்பட்ட தரமான உணவு கிடைத்திட நகர உணவகங்கள் (restaurant) மற்றும் உணவு கடைகள் (canteen) ஆகியவற்றின் முதலாளிகளுடன் இணைந்து  தரமான உணவு கிடைக்கச் செய்தனர். மற்ற பகுதிகளில் தொழிற்சங்கங்கள் கூட்டுப்பேர ஒப்பந்தங்கள் மூலம் ஷிப்ட் பணி நிலைமைகள், ஷிப்ட் பணி நேரங்கள் மற்றும் பணி நிலைமைகளில் மாற்றம் கண்டன.  தொழிற்சங்கங்கள், சுகாதாரப் பிரச்சனை வர்கக உறவுகளில் ஒரு கூறு என்பதை அங்கீகரித்தன.

ஒரு சில விஷயங்களில் பணியிட மேம்பாடு செலவில்லாததாக உள்ளது.  கட்டிட பணிகளில் ஈடுபடும் தொழிலாளிகள் கடினமான அந்த தலைக்கவசம் அணிய வற்புறுத்தும் விளம்பரப் பலகை வைக்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்.  பணி மறுசீரமைப்பு மற்றும் செலவு பிடிக்கும் பணி குறித்து பேசினால் தந்திரமாக நழுவி செல்லப்படுகிறது. 

சுகாதாரத்தை மேம்படுத்தும் அரசு திட்ட செலவிற்கு, வரி மூலம் ஈடுகட்ட அரசு முயன்றால், வணிக வர்க்கம் கடுமையாக எதிர்க்கும்.  புதிய செலவினங்கள், தங்களது போட்டித் தகுதியில் குறிக்கிடுவதாக கருதுவார்களேயானால், அவர்களது எதிர்ப்பு, அரசியல் வடிவம் எடுக்கும் – உதாரணம்.  சில சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகள் நீக்கம்.  தொழிற்சங்கத்தினால் முன்வைக்கப்படும் ஒரு சில செலவுகள் தனியார் முதலாளிகள் செய்ய வேண்டி வந்தால், அக்கோரிக்கை கடுமையாக எதிர்க்கப்படும்.  அவர்கள் கூறுவார்கள்,  போட்டிச்சூழலில் இது கடுமையான பாதிப்பை உருவாக்கும், எனவே, வியாபாரத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப் போவதாக அச்சுறுத்துவார்கள். ஒருவேளை, தொழிற்சங்கம் பணிச்சூழல் குறித்து கோரிக்கை வைத்தால், நிர்வாகம் அதனை வர்க்க முன்னுரிமையின் அடித்தளமாக பார்க்கத் துவங்குவர்.  இந்த சூழ்நிலையில், ஒரு வலுமிக்க, திறமையாக கட்டமைக்கப்பட்ட தொழிற்சங்கத்தினால் மட்டுமே அதனை சாதிக்க முடியும்.

சுகாதார வாழ்வு என்பது தொழிலாளர்களுக்கு அவர்களின் திறனின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.  ஆனால் மேல்தட்டு மக்களுக்கு சுகாதாரம் ஒரு நுகர்வுப் பொருளாகும்.  தங்களுக்கான மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதியை காசு கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். குடிநீர் தரம் மேம்படுத்தப்படுவதற்கு மாறாக, பாட்டில் குடிநீர் வாங்குவார்கள், காற்றின் தரம் உயர்த்தப்படுவதற்கு மாறாக தாங்கள் வாழும் அறைகளுக்கு பிராணவாயு உருளைகள் வாங்குவார்கள். சுகாதாரமும் ஒரு விற்பனை பண்டமாகும்.  அதனால், மருத்துவமனை, சுகாதார பராமரிப்பு அமைப்புகள் (Health Maintenance Organisations). மருந்து உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுகாதார அமைப்புகள் அனைத்தும் இதில் முதலீடு செய்துள்ளன.

ஒருவருடைய சிறப்பான உடல்நலம் அமைவது என்பது அவர் தேவையான மற்றும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் திறன், அவர் வாழ்க்கையில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பவைகளைப் பொறுத்தது ஆகும்.  அந்த இடம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாகும். கொள்கைகளை தீர்மானிக்கும் இடத்தில் யார் இருக்கிறார்கள், எந்த வர்க்கம் இருக்கிறது என்பது முக்கியமாகும்.

சமூகம், தொற்றுயியல் மற்றும் வரலாற்றியல் அடிப்படையில்  எழுப்பும் கேள்விகளையும், மற்றும் சுகாதார சேவை, சுகாதாரக் கொள்கைகளையும் விரிவாக பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இது எல்லாமே ஒருங்கிணைந்த அமைப்பாகும், அதை உருவாக்குவதுதான் வருங்கால போர்க்களமாகும்.  நாம் சுகாதாரப் பிரச்சனையையும் பரவலாக்க வேண்டும்.  அவைகள் வர்க்கப் போராட்டத்தின் கூறுகளாகும்.  அதற்கு மாற்று வேறு எதுவும் கிடையாது.

(தமிழாக்கம் – ரமணி)

அவனது ரத்தம் போதிய அளவு வெளியேற்றப்படவில்லை!

  • பி. சாய்நாத்

(ஃப்ரண்ட்லைன் ஆகஸ்ட் 14, 2020 இதழில் வெளியானது. PARI Link )

இரத்தம் வெளியேற்றுவது என்பது பொதுவான சிகிச்சை முறையாக கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்திருக்கிறது. உடலில் உள்ள இரத்தம், கபம், கரும்பித்தம், மஞ்சள் பித்தம் ஆகிய சுரப்பிகளிடையேயான சமனின்மையே நோய்களுக்காக காரணம் என நம்பிக்கை நிலவியது. இந்த நம்பிக்கையை ஹிப்போகிரேட்டஸ் என்பவர் வெளிப்படுத்தினார், அவரைத் தொடர்ந்து இந்தக் கருத்து  மத்திய கால ஐரோப்பா கண்டம் முழுவதுமே பரவலாக காணப்பட்டது.

ரத்தம் வெளியேற்றலுக்கு அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன. மருத்துவர்களின் மருத்துவ-தத்துவ மாயைகளின் காரணமாக இரத்தம் வெளியேறி செத்தவர்கள் எத்தனை பேர் என்பது நமக்கு தெரியாது. இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ் மரணத்திற்கு முன் அவருடைய உடலில் இருந்து 24 அவுன்ஸ் ரத்தம் வெளியேற்றப்பட்டதை அறிவோம். ஜார்ஜ் வாஷிங்டன் தொண்டையில் ஏற்பட்ட கிருமித் தொற்றினை குணப்படுத்த, (அவரது வேண்டுகோளின் பேரில்) மிகுதியான ரத்தம் அவர் உடலில் இருந்து  வெறியேற்றப்பட்டது. உடனடியாக. அவர் இறந்தும் போனார்.

முதலாளித்துவத்தின் பிரேதப் பரிசோதனை

கொரோனா வைரஸ் நோய் நவ தாராளமயக் கொள்கையின், அதன் வழியே முதலாளித்துவ அமைப்பின், முழுமையான, தெளிவான பிரேதப் பரிசோதனை அறிக்கையை நமக்குக் கொடுத்திருக்கிறது. பிரேதம் மேசை மீது கிடத்தப்பட்டிருக்கிறது. பிரகாசிக்கும் வெளிச்சத்தில், அதன் நாடி நரம்புகளும், எலும்புகளும், தசைகளும் நம் முகத்திலடித்தாற்போல் தெளிவாகத் தெரிகின்றன. அட்டைப்பூச்சிகளை தெளிவாகப் பார்க்க முடிகிறது – தனியார்மயம், கார்ப்பரேட் உலகமயம், அதீத சொத்துக் குவியல், இதுவரை பார்த்திருக்காத ஏற்றத்தாழ்வின் உண்மை நிலை என எல்லா அட்டைப்பூச்சிகளுமே நன்கு தெரிகின்றன. சமூக, பொருளாதாரப் பிணிகளுக்கு மருந்தாக முன்வைக்கப்பட்ட ‘இரத்தம் வெளியேற்றும் வழிமுறையின்’ காரணமாக, உழைக்கும் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படைகள் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

ஐரோப்பிய கண்டத்தில் மூன்றாயிரம் ஆண்டுகளாக நிலவிய அந்த மருத்துவமுறை, 19ஆம் நூற்றாண்டில் அதன் உச்சத்தை அடைந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டிலும்தான் இந்த மூட நம்பிக்கை அதன் மதிப்பை இழந்தது. எனினும் அதன் கோட்பாடுகளும், நடைமுறைகளும் பொருளாதார, தத்துவ, தொழில் மற்றும் சமுதாயத் துறைகளில் இப்போதும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

தம்மிடம் வந்த நோயாளியை சாகக் கொடுத்துவிட்ட மத்தியகால மருத்துவர்கள், சோகத்துடன் தம் தலையை ஆட்டியபடியே ‘அவனுடைய ரத்தம் போதுமான அளவு வெளியேற்றப்படவில்லை’ என்று சொல்வார்கள் என அலெக்சாண்டர் காக்பர்ன் குறிப்பிட்டதைப் போலத்தான் இவர்களும் பேசுகின்றனர். உலக வங்கியும், சர்வதேச நிதியமும் தங்கள் அதிர்ச்சியூட்டும் நடைமுறைகளால் ஏற்பட்ட அச்சமூட்டும் பேரழிவுகளை, சிலசமயம் இனப்படுகொலைகளை ஒத்த பாதிப்புகளையும் பார்த்து, இந்த அழிவுகளெல்லாம் தனது ‘சீர்திருத்த’ நடவடிக்கைகள் எல்லை மீறியதால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று சொல்லவில்லை. சீர்திருத்தங்களை போதுமான அளவு மேற்கொள்ளாத காரணத்தாலேயே ஏற்பட்டதாகவும், உண்மையில் சீர்திருத்தங்களை சமூக விரோதிகளும், அழுக்கடைந்த மனிதர்களும் தடுத்து விட்டதன் காரணமாகவே அழிவுகள் ஏற்படுவதாகவும் ஊளையிட்டு வந்துள்ளனர்.

தத்துவக் கிறுக்கர்களின் வாதங்களின்படி, ஏற்றத்தாழ்வு என்பது அச்சப்பட வேண்டிய விசயம் அல்ல. அதன் மூலமே போட்டி மனப்பான்மையும், தனிநபர் முயற்சிகளும் ஊக்கம்பெறும். எனவே ஏற்றத்தாழ்வுகள் மேலும் மேலும் தேவை என்பதுதான் அவர்களின் வாதம்.

கடந்த 20 ஆண்டுகளாக, மனித சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் தொடர்பில்லை என்று கருணையற்ற முறையில் கூறிக் கொண்டிருந்தனர். இந்த புத்தாயிரமாண்டின் தொடக்கத்தில். புரூக் கிங்ஸ் என்ற நிறுவனம் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விவாதத்தை அலட்சியப்படுத்துவது; பலவீனப்படுத்துவது குறித்து எச்சரிக்கை செய்தது.  இந்த எகனாமிஸ்ட் இதழில், கொரோனா நோய் தொற்று உலகையே வாரிச் சுருட்டுவதற்கு சரியாக 90 நாட்களுக்கு முன்னதாக “சமத்துவமின்மை என்பது மாயை” “செல்வமும், வருமான இடைவெளியும் நமக்குத் தோன்றுவது போல உண்மையானதல்ல” என்ற அட்டைப்படச் செய்தியை வெளியிட்டது. கோழிக்கு முன் அதன் நுரையீரலைக் காட்டுவதைப் போன்ற கசப்பான இந்தச் செய்தியில், “வருமான ஏற்றத்தாழ்வு செல்வக் குவிப்பு தொடர்பான புள்ளிவிபரங்கள் குறித்து அது கடுமையாக விமர்சனம் செய்தது; புள்ளிவிபரங்கள் திரட்டப்பட்ட ஆதாரங்களை மறுத்தது”

தொடர்ந்து அந்தக் கட்டுரையில் “போலிச் செய்திகளும், சமூக ஊடகங்களும் நிறைந்த இந்த உலகத்தில், இப்புள்ளிவிபரங்களைப் போன்ற நம்பிக்கைகளும் நகைப்புக்குரிய வகையில் நீடித்துக்கொண்டுள்ளன” என ஏகடியம் பேசியது.

கொரோனா வைரஸ் நோய் பரவல் இப்போது நமக்கு அதிகாரப்பூர்வமான பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தந்துள்ளது. இப்போதும் கூட அவர்களின் தரப்பு சிந்தனையாளர்கள், கார்ப்பரேட் ஊடகங்கள், கடந்த மூன்றாண்டுகளில் நடந்துவரும் அழிவுகள் எதுவும் முதலாளித்துவத்துடன் தொடர்புடையவை அல்ல என்று காட்டுவதற்கான வழிகளை மும்முரமாக தேடிக் கொண்டிருக்கின்றன.

இயல்பு நிலையே பிரச்சனை

பிரச்சனைக்கு எத்தனை சீக்கிரமாக தீர்வை அடைந்து ‘இயல்புக்கு திரும்பிட’ முடியும்?.  ஆனால் இயல்புக்குத் திரும்புவதல்ல பிரச்சனை.

‘இயல்புநிலைதான்’ பிரச்சனையாக இருந்தது. (ஆளும் வட்டாரங்களில் ‘புதிய இயல்பு’ என்பது பற்றிய வாதங்கள் கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளது)

கொரோனா வைரசுக்கு முந்தைய இயல்பு நிலை: 2020, ஜனவரி மாதம் வாக்கில் ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து, உலகின் 22 பணக்கார ஆண்களின் கைவசம் உள்ள சொத்து, ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் வசிக்கும் பெண்களின் கைவசமுள்ள சொத்துக்களை விட அதிகம் என அறிந்துகொண்டோம்.

அதே போல உலகின் 2,153 கோடீஸ்வரர்கள், இந்த பூமியில் வாழும் மக்களின் மொத்த சொத்தில் 60 சதவீதத்தை  தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

புதிய இயல்பு நிலை: கொள்கை ஆய்வு நிறுவன அறிக்கை சொல்கிறது, அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள், பெருந்தொற்று பரவிய முதல் மூன்று வாரங்களில், தங்கள் சொத்துக்களில் 282 பில்லியன் டாலர்களை கூடுதலாக சேர்த்திருப்பதாக எடுத்துக் காட்டுகிறது. 1990களில் அவர்களின் வசமிருந்த மொத்த சொத்துக்களை விட இது அதிகம். (240 பில்லியன் டாலர்கள்)

இயல்பு நிலை என்பது,  உலகில் உணவுக் கையிருப்பு பிதுங்கி வழிந்து கொண்டிருந்தபோதும், கோடிக்கணக்கானவர்கள் பசியில் வாழ்ந்து வந்ததுதான் ‘இயல்பு நிலை’ எனப்பட்டது. இந்தியாவில் ஜூலை 22 வாக்கில் 91 மில்லியன் டன் அளவிலான உணவு தானியங்கள் ‘உபரி’ அல்லது  அவசர கையிருப்பு என்ற பெயரில் அரசின் வசம் இருந்தது – ஆனால் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை, உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகமாக இருந்தது.

புதிய இயல்பு நிலையில் என்ன ஆனது? தானிய கையிருப்பில் மிகக் குறைந்த அளவு கையிருப்பு தானியங்களை மட்டுமே அரசு இலவசமாக  விநியோகித்தது. ஆனால். மிகப் பெரிய அளவிலான அரிசி கையிருப்பை கிருமி நாசினி தயாரிக்க தேவைப்படும் எத்தனால் தயாரிப்புக்காக வழங்கியது.

உணவுக் கிடங்குகளில் நாம் 50 மில்லியன் டன் அளவுக்கான உணவுப் பொருட்களை கிடங்குகளில் தேக்கி வைத்திருந்த பழைய இயல்பு நிலை காலத்தில், பேராசிரியர் ஜீன் டிரெஸ் அந்த சூழலை ரத்தினச் சுருக்கமாக இவ்வாறு விளக்கினார்: “உணவுக் கிடங்குகளில் தானியங்களை வைத்திருக்கும் சாக்குப் பைகளை வரிசையாக அடுக்கினால், அவை பூமியிலிருந்து நிலவுக்குச் சென்றுவரும் தொலைவை இரண்டுமுறை நிரப்புவதற்கு ஒப்பாகும்.” புதிய இயல்புநிலை காலத்தில் அந்த அளவு இரண்டு மடங்காகி 104 மில்லியன் டன்களாக ஆனது. நிலவிற்கு சென்றுவர இரண்டு பாதைகளை அமைக்கலாம். அதில் ஒன்று பெரும்பணக்காரர்களுக்கான ராஜபாட்டையாக அமைந்த நெடுஞ்சாலையாகவும், இன்னொன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சோர்வுடன் நடந்து பயணிப்பதற்கான அழுக்கடைந்த சர்வீஸ் சாலையாகவும் இருக்கும்.

1995 முதல் 2018 வரையிலான காலத்தில் 3,15,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது அரசு புள்ளிவிபரங்களின் அடிப்படையிலான எண்ணிக்கை. இதுவே குறைவான மதிப்பீடுதான். பல பத்து லட்சம் பேர் விவசாயத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். துணைத் தொழில்களும் நசிந்து போனதால், மேலும் பல லட்சம் பேர் கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்தனர்.

நல வாழ்வு

மருத்துவத் துறையில் பெருகிவரும் தனியாரும், ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளும் இயல்பு நிலையாக இருந்தது. அமெரிக்காவில் ஓட்டாண்டிகளாக மாறிய தனிநபர்களில் பெரும் எண்ணிக்கையினர் மருத்துவச் செலவுகளின் காரணமாகவே அந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில் காணாத வகையில், மருத்துவச் செலவுகளின் காரணமாக 5.5 கோடிப்பேர் ஒரே ஆண்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டனர்.

புதிய இயல்புநிலை காலத்தில், மக்கள் நல்வாழ்வின் மீது கார்ப்பரேட் கட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்தியா போன்ற நாட்டின் தனியார் மருத்துவமனைகள் அதீத லாபமீட்டுகின்றன, லாபம் குவிக்கும் பல்வேறு செயல்பாடுகளோடு சேர்த்து கொரோனா வைரஸ் பரிசோதனைகளின் வழியாகவும் பணத்தைச் சுருட்டுகிறார்கள்.

தொழிலாளர்

மாநிலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொழிலாளர் நலச் சட்டங்களை நிறுத்தி வைக்கத் தொடங்கியுள்ளன. அல்லது சட்ட மீறல் சாதாரணமாகியுள்ளது. எட்டுமணி நேர வேலை எனப்படும் தனிச்சிறப்பான சட்ட விதியும் கூட சில மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு, ஒரு நாளுக்கு 12 மணி நேரம் என ஆக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கூடுதல் 4 மணி நேர உழைப்புக்கு ஓவர்டைம் சம்பளம் இல்லை என ஆக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் நடைமுறையில் உள்ள 38 தொழிலாளர் நலச் சட்டங்கள் இடைநிறுத்தப்பட்டு, தொழிலாளர்கள் ஒன்றுகூடவோ, போராடவோ கூட சாத்தியங்கள் மறுக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை என்பதை முதன் முதலில் ஏற்றுச் செயல்படுத்திய முதலாளி ஹென்றி போர்டு (1914). ஃபோர்டு நிறுவனம் அடுத்துவந்த இரண்டாண்டுகளில் இருமடங்கு லாபம் ஈட்டியது. எட்டுமணி நேரத்திற்கும் கூடுதலாக உழைக்கும்போது, உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைவதைக் காண முடிந்தது. புதிய இயல்பு நிலையில் இந்திய முதலாளிகள், அவசர சட்டங்களின் மூலம் கொத்தடிமை நிலையை உருவாக்கவேண்டுமென விரும்புகிறார்கள். இதில் கிளர்ச்சியடைந்த ஊடக ஆசிரியர்களும் ‘நல்ல நெருக்கடியை வீணாக்காதீர்கள்’ என்று வற்புறுத்தத் தொடங்குகின்றனர். இத்தனைக்குப் பிறகும், அந்த அழுக்கடைந்த தொழிலாளர்கள் முட்டி போட்டு நிற்குமளவுக்கு தெம்புடன் இருப்பதை அவர்கள் காரணமாக முன்வைக்கின்றனர். அட்டைப்பூச்சிகளை ஏவி விடுங்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ‘தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை’ வேகப்படுத்தாமலிருந்தால், அது பைத்தியக்காரத்தனமே என்கிறார்கள் அந்த பத்திரிக்கை ஆசிரியர்கள்.

விவசாயம்

விவசாயத்தில் அச்சமூட்டும் சூழல் உருவாகிக் கொண்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில், வங்கி நிதியுதவியுடன் இனிய வார்த்தைகள் மூலமும், பலவந்தமாகவும், துன்புறுத்தியும் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் பணப்பயிர்களுக்கு மாற்றப்பட்டதை நினைவில் கொள்ளுங்கள். பணப்பயிர்களை ஏற்றுமதி செய்யலாம். கத்தையாக பணம் கிடைக்கும். நாடுகளுக்கு டாலர் வந்து குவிவதன் மூலம் ஏழ்மையை விரட்டமுடியும் என்றார்கள்.

என்ன நடந்ததென்பதையும் நாம் அறிவோம். சிறு பணப்பயிர் விவசாயிகள், குறிப்பாக பருத்தி விவசாயிகள்தான், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள். கடன் சுமை அதிகம் ஏற்றப்பட்டவர்களும் அவர்களே.

நிலைமை இப்போது மேலும் மோசமடைகிறது. மார்ச் – ஏப்ரல் வாக்கில் ராபி விளைச்சலை விற்பனை செய்யமுடியாமல் குவிக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் அழுகக் கூடிய விளைச்சலாக இருந்தால், ஊரடங்குக் காலத்தில் விளை நிலங்களிலேயே அழிக்கப்பட்டன. பருத்தி, கரும்பு போன்ற பணப்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு லட்சக்கணக்கான குவிண்டால் அளவில், விவசாயிகளின் வீட்டுக் கூரையை முட்டும் அளவுக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போர்க் காலத்திற்கு பின் இப்போதுதான் கடுமையான பொருளாதார தேக்க நிலையை எதிர்கொள்கிறோம் என்றும், 1870ஆம் ஆண்டுக்கு பின் மக்கள் வருமானத்தில் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொள்வதாகவும் ஐ.நா., பொதுச் செயலர் அந்தோனியோ குந்தரேஸ் கூறுகிறார். உலக அளவில் வருமானம் மற்றும் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி இந்தியாவையும் விட்டுவைக்கப் போவதில்லை.

கொரோனா வைரஸ் பற்றி இன்னொன்றையும் குந்தரேஸ் குறிப்பிட்டார், “எல்லா இடங்களிலும் நிலவிவரும் பொய்களையும், தவறான நம்பிக்கைகளையும் கொரோனா வைரஸ் தொற்று அம்பலப்படுத்தியுள்ளது. சுதந்திர சந்தைகள், அனைவருக்கும் மருத்துவத்தை உறுதி செய்யும் என்ற பொய் அம்பலமாகிவிட்டது. கட்டணம் செலுத்தாத சேவை, சேவை அல்ல என்பதும் பொய்யாகிவிட்டது”

இணையவழிக் கல்வி

கோடிகளில் லாபம் குவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இணையவழிக் கல்வியை பரவலாக்கிக் கொண்டிருப்பதுதான் ‘புதிய இயல்புநிலை’ ஆகும். ஏற்கனவே பெரிய அளவில் பணம் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள், இப்போது இரண்டு மடங்கு லாபம் கொழிக்க திட்டமிட்டுள்ளனர். சாதி, வர்க்கம், பாலினம் மற்றும் மண்டல அளவிலான விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள் பிரம்மாண்டமான அளவில் கொள்ளை நோயின் பெயரால் சட்டப்பூர்வமாகவே கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேற்றப்படுவார்கள். (குழந்தைகளின் கல்வி தடைபடலாமா என்ற புலம்பல் காதில் கேட்கிறதா?)

இப்போது புதிதாக வேலை இழந்த பெற்றோர்கள் நொடித்துப்போனதால்,  பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாததால் எத்தனை பெண் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடைவிலகப் போகின்றனரோ? நிதி நெருக்கடியின்போது பெண் குழந்தைகளை இடைநிறுத்துவது பழைய இயல்பு நிலைதான். ஆனால் ஊரடங்கில் அந்த இடை விலகல்கள் தீவிரமடைந்துள்ளன.

இயல்பு நிலை காலத்திலேயே, இரண்டு டிரில்லியன் மதிப்புள்ள ஊடகம் (பொழுதுபோக்கு) தொழிற்சாலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி எந்த செய்தியும் வெளியானதில்லை. தேசியப் பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சிகள் எதிலும் தொழிலாளர், விவசாயிகளுக்கென சிறப்புச் செய்தியாளர்களே இல்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதமே உள்ள மக்களைக் குறித்த செய்திகள் ஏதுமில்லை. அவர்களிடமிருந்து செய்திகளை எடுத்துச் சொல்லவோ, அவர்களுக்கு செய்திகளைப் பேசுவதற்கோ ஊடகங்கள் விரும்பவில்லை.

மார்ச் 25 ஆம் தேதிக்கு பிறகு, பல வாரங்களாக கையறு நிலையில் உதவிக்காக நின்ற புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றி, ஊடக நெறியாளர்கள் அறிந்து வைத்திருக்கவே இல்லை. ஒரு சில ஊடகவியலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த செய்திகள் இன்னும் சரியாக சொல்லப்பட்டிருக்க வேண்டும் என ஒப்புக்கொண்டனர். கார்ப்பரேட் ஊடக முதலாளிகள் ஆயிரக்கணக்கான பத்திரிக்கையாளர்களையும், தொலைக்காட்சி ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றிய விரிவான செய்தி சேகரிப்பு மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கவே ஊழியர்களும், செய்தியாளர்களும் வீட்டுக்கு அனுப்பபட்டனர். இந்த பணி நீக்கங்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டதுதான். இவ்விசயத்தில் மோசமான குற்றவாளிகள் ஏராளமாக லாபமீட்டும் ஊடக நிறுவனங்கள்தான்.

தொலைக்காட்சி வழி ரியாலிட்டி ஷோ

இப்போதெல்லாம், தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ வருவதைப் போல ஒரு மனிதர் அவ்வப்போது தொலைக்காட்சியில் தோன்றி நாட்டை வழிநடத்துகிறார். அவருடைய தற்பெருமையை நாட்டின் எல்லா சேனல்களும், முக்கிய நேரத்தில் ஒளிபரப்பு செய்கின்றன. அமைச்சரவை, அரசாங்கம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், சட்ட மன்றங்கள், எதிர்க் கட்சிகள் என எதுவுமே தேவையில்லை. நாம் எத்தனை தொழில்நுட்ப மேம்பாட்டை அடைந்திருந்தபோதிலும், ஒரே ஒரு நாள் கூட நாடாளுமன்றத்தை கூட்ட சாத்தியப்படவில்லை. மெய் நிகர் வழியில், ஆன்லைன் மூலமாக, தொலைக்காட்சி மூலமாகக் கூட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 125 நாட்களில் ஒருமுறை கூட நாடாளுமன்றம் கூடவில்லை. தொழில்நுட்ப வலிமையில் நம்மைப்போல் கடுகளவும் இல்லாத, பரிதாபமான மற்ற நாடுகளும் கூட சிரமமில்லாமல் நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்திவிட்டன.

முற்போக்கு இயக்கங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்கள் என்றுமே பழைய இயல்பு நிலையை ஏற்றுக் கொண்டது கிடையாது. ஆனால் நீதிக்கான போராட்டம், சமத்துவம் மற்றும் பூமிப் பந்தை பாதுகாத்துக் கொண்டே மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான போராட்டம் ஆகிய சில பழைய விசயங்களுக்குத் திரும்ப வேண்டியுள்ளது. நீதியே நமது சட்டகம். சமத்துவமின்மைக்கு முடிவுகட்டுவதே இலக்கு. அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் சில ஏற்கனவே இருக்கின்றன. இன்னும் சிலவற்றை கண்டடைய வேண்டியுள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் இயக்கங்கள் இனி பருவநிலை மாற்ற பிரச்சனையையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஏற்கனவே விவசாயத்தை நாசமாக்கியிருக்கும் பருவநிலைமாற்ற பிரச்சனையை விவசாயப் பிரச்சனைகளில் ஒன்றாக சேர்க்காவிட்டால் விவசாய இயக்கங்களும், விவசாயத் தொழிலாளர் இயக்கங்களும் சிரமங்களை எதிர்கொள்ளும். வேளாண் சூழலியல் அணுகுமுறையை இணைத்து போராட வேண்டும்.

தொழிலாளர் இயக்கங்கள், பெரிய ரொட்டித் துண்டுக்காக நடத்தும் போராட்டங்கள் அவசியம்தான். சாதாரண காலங்களில் முன்வைக்காத, ரொட்டி கடையின் உரிமையையே கோரும் முழக்கங்களையும் எழுப்ப வேண்டிய காலம் இது.

மூன்றாம் உலக நாடுகளின் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்துவது மிகத் தெளிவான முழக்கமாகும். இந்தியாவில் மக்கள் மீதான கடன் சுமைகளை ரத்து செய்ய கோருவது மிகச் சரியான முழக்கமாகும்.

கார்ப்பரேட் ஏகபோகங்களை அகற்ற வேண்டும். முதலில்,  மருத்துவம், உணவு, விவசாயம் மற்றும் கல்வி ஆகியவற்றில் இருந்து கார்ப்பரேட் ஏகபோகங்களை அகற்றுதல் ஆரம்பிக்க வேண்டும்,

அரசுகளை நிர்பந்தப்படுத்தி, வள ஆதாரங்களை மறுவிநியோகம் செய்ய வைப்பதற்கான தீவிரமான இயக்கங்கள் வேண்டும். பணக்காரர்கள் மீது ஒரு சதவீதமாவது வரி விதிக்கக் கேட்பது துவக்கமாக அமையும். எவ்வித வரியும் செலுத்தாமல் லாபத்தை அப்படியே கொண்டு செல்லும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் மீது வரி விதிக்க வேண்டும். பல்வேறு நாடுகளும் பல பத்தாண்டுகளாக நிறுத்திவிட்ட அந்த வரி விதிப்பு முறையை மேம்படுத்த வேண்டும்.

மக்கள் இயக்கங்கள்

மிகப் பெரும் மக்கள் இயக்கங்களை முன்னெடுப்பதன் மூலமே அரசுகளை கட்டாயப்படுத்தி விரிவான பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கான கட்டமைப்புகளை உருவாக்கச் செய்வது சாத்தியமாகும். உணவுக்கான நீதி, நலவாழ்வுக்கான நீதி ஆகிய முழக்கங்களை முன்வைக்கும் மக்கள் இயக்கங்களை கட்டமைக்கும் தேவை உள்ளது. இதுபோன்ற ஊக்கமளிக்கும் முன்னுதாரண மக்கள் இயக்கங்கள் ஏற்கனவே நடைபெற்றிருக்கின்றன. ஆனால் கார்ப்பரேட் ஊடகங்களின் செய்தி சேகரிப்பில் அவை ஓரங்கட்டப்பட்டு மறைக்கப்பட்டுவிட்டன.

தனிப்பட்ட பிரகடனங்களை விடவும், விடுதலைப் போராட்ட பாரம்பரியமும் அதனால் உருவான அரசியலமைப்புச் சட்டமும், மக்களை அணி திரட்டுவதற்கு கூடுதலாக பயன்படும் வாய்ப்புள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக சந்தைப் பொருளாதாரத்தை அமல்படுத்தி, தார்மீக நீதியை அழித்து, ஒவ்வொரு நாளும் இந்திய அரசாங்கங்கள், அரசமைப்பின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியுள்ளன. இவர்கள் முன்வைத்த ‘வளர்ச்சிப் பாதை’ முழுவதும் மக்களையும், அவர்களின் பங்கேற்பையும், ஈடுபாட்டையும், கட்டுப்பாட்டையும் இல்லாமலாக்கும் நோக்கத்தோடே அமைந்திருந்தன.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் பெருந்தொற்றினை, மக்கள் ஒத்துழைப்பின்றி எதிர்த்து வீழ்த்த முடியாது. கொரோனா பரவலுக்கு எதிரான போராட்டத்தில் கேரளா அடைந்திருக்கும் வெற்றியானது உள்ளூர் சமுதாய மட்டத்தில் மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட சமுதாய சமையலறைகள் இல்லாமல் சாத்தியமில்லை. இந்த சமையலறைகளை வலைப்பின்னலாக உருவாக்கி மக்களுக்கு மலிவான விலையில் உணவு வழங்கப்பட்டது. தொற்றின் தடம் அறிதல், நோய் தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்துதல் ஆகிய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் பங்கேற்பின் காரணமாகவே சிறப்பாக நடந்தன. சர்வதேச பரவல் முடிவுக்கு வந்தாலும் கூட, கேரள அனுபவங்கள் நாட்டிற்கு அது பயணிக்க வேண்டிய பாதை எது என்று எடுத்துக் காட்டும் படிப்பினைகளைத் தருகின்றன.

அனைத்து முற்போக்கு இயக்கங்களும், பல்வேறு பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளன. நிறைவேற்றப்படாத நிகழ்ச்சி நிரல்களை எட்டுவதற்காக தொடர்ந்து போராட வேண்டும் என்பதையும் உணர்ந்தே உள்ளன.

இந்திய சுதந்திர தினத்தின் 73வது ஆண்டான இக்காலத்தில், இன்னும் வென்றெடுக்கப்படாத  விடுதலையின்  நிகழ்ச்சிநிரலை சாத்தியப் படுத்துவதற்காக போராடுவதே, வாழ்க்கையை மதிப்பு மிக்கதாக்கும்.

நன்றி: ஃப்ரண்ட்லைன் (ஆகஸ்ட் 14, 2020)

தமிழில்: ம. கதிரேசன்

சீனாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் – சில கேள்விகளும் பதில்களும்

பிரகாஷ் காரத்

கேள்வி: தொடர்ச்சியான பல நடவடிக்கைகளின் மூலம் சீனாவை இலக்கு வைத்து அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்த ட்ரம்ப் நிர்வாகம் நீடித்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் அமைதி, ஸ்திரத் தன்மை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆக்ரோஷமானதொரு சக்தி என சீனாவை சித்தரிக்கும் வகையில் சர்வதேச அளவிலான பிரச்சாரத்தையும் அமெரிக்கா நடத்தி வருகிறது. ஏன் இவ்வாறு நடக்கிறது? தனக்கு விரோதமான இத்தகைய பிரச்சாரத்தை சீனா எவ்வாறு காண்கிறது?

சீனாவிற்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகம் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒரு பின்னணி உள்ளது. சீனாவின் வலிமை அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அதைக் கட்டுப்படுத்தி வைக்கும் வகையிலும் திட்டங்களை உருவாக்கி தனது முக்கிய எதிரி சீனாதான் என்று அமெரிக்கா 20 ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கு நிர்ணயித்தது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அமெரிக்க ராணுவப் படைகளை களமிறக்குவதற்கான திட்டங்களை தீட்டியதோடு, ஆசிய-பசிஃபிக் பகுதிக்கான போர்த்தந்திரம் ஒன்றையும் இறுதிப்படுத்தியது.

‘ஆசியப் பகுதிக்கே முன்னிலை’ என்ற கொள்கையை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம்தான் அறிவித்தது. அதன்படி அமெரிக்காவின் கடற்படையில் 60 சதவீத படைகள் ஆசிய-பசிஃபிக் பகுதிக்கு நிலைமாற்றப் பட்டன.

எனினும் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சீனா பொருளாதார ரீதியாக வலிமையடைந்ததோடு, அதன் உலகளாவிய அணுகல் திறனும் பெருமளவிற்கு அதிகரித்தது.

ட்ரம்ப் அமெரிக்க அதிபரான உடனேயே, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் சீன நாட்டுப் பொருட்கள் அனைத்தின் மீதான சுங்க வரியை  அதிகரித்ததோடு சீனாவுடன் ஒரு வர்த்தக யுத்தத்தையும் தொடங்கினார். கூடவே அமெரிக்காவில் தயாராகும் நுண்ணிய சிப்கள் மற்றும் இதர கருவிகள் ஹுவேயி போன்ற சீன நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கிடைக்காதவாறு செய்யவும் அவர் முயன்றார். இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் கூட கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா சீனாவின் மீதான தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. கூடவே சீன நாட்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியவர்களுக்கு எதிராகவும் பல்வேறு தடை உத்தரவுகளையும் அது விதித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகை மேலாதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது என்ற பூச்சாண்டியைக் காட்டி ஹுவேயி நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டுமென தனது கூட்டாளிகளை சம்மதிக்க வைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

வலுவானதொரு பொருளாதார சக்தியாக சீனா உருவாகி வருவதாலேயே இவை அனைத்தும் நடைபெறுகின்றன. அமெரிக்காவிற்கு அடுத்து உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக இன்று சீனா மாறியுள்ளது. அடுத்த பத்தாண்டு காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்தையும் விஞ்சிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களைப் போலவே செயல்படும் திறன் வாய்ந்த இயந்திரங்களை உருவாக்கும் தொழில்நுட்பமான ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அதி நவீன தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்டு வரும் தொழில்நுட்ப வலுமிக்க ஒரு சக்தியாகவும் சீனா மாறிக் கொண்டு வருகிறது. உயர்தொழில்நுட்பத் துறையில் இதுவரையில் ஏகபோகத்தை அனுபவித்து வந்த அமெரிக்காவிற்கு இந்த அம்சமே மிகவும் அச்சமூட்டும் விஷயமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதிலும் பரவத் தொடங்கிய பிறகு, இந்தப் பெருந்தொற்றினை வெற்றிகரமாக சமாளித்து, மிக விரைவாக பொருளாதாரத்தையும் மீட்கும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது. அதே நேரம் தனது நாட்டுப் பொருளாதாரத்திற்கு மிகப் பிரம்மாண்டமான வகையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ள பெருந்தொற்றினை சமாளிப்பதில் அமெரிக்கா தவறியுள்ள நிலையில் ட்ரம்ப்பிற்கு பயமேற்பட்டுள்ளது. அவரது இந்தப் பயம்தான் சீனாவின் மீதான கண்டனங்களும் தாக்குதல்களும் மீண்டும் ஒரு முறை அரங்கேற வழிவகுத்துள்ளது.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளில் எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்று இந்தப் பெருந்தொற்று வெடித்தெழுவதற்கு முன்பாகவும் கூட சீனா அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. பொருளாதாரத் துறையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு உருவாகும் எந்தவொரு மோதலும் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது தொடர்ந்து கூறி வந்துள்ளது. அதன் கண்ணோட்டத்தின்படி அமெரிக்கா ஒரு மேலாதிக்க சக்தியாக நடந்து கொள்கிறது என்பதே ஆகும். ஐரோப்பாவில் உள்ள பெரும் நாடுகளான ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஆசியாவில் உள்ள ஜப்பான் போன்ற நாடுகளுடன் வழக்கமான பொருளாதார உறவுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அமைதியான வகையில் நிகழ்ந்து வரும் தனது முன்னேற்றம் வேறு எந்தவொரு நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்றும் சீனா தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறது. தனது நாட்டை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பாதையை மேலும் மேலும் அதிகமான அளவில் ட்ரம்ப் பின்பற்றி வரும் அதே நேரத்தில் வெளிப்படையான வர்த்தகம் என்பது உலகிலுள்ள அனைத்து நாடுகளின் வளத்திற்கான வழியாக, அனைத்து நாடுகளுக்கும் உரியதாக இருக்கிறது என உலகமயமாக்கலை சீனா உயர்த்திப் பிடிக்கிறது.

தற்போது நிலவி வரும் மையமான முரண்பாடு என்பது ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலானது என நமது கட்சி எப்போதுமே கூறி வந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக சீனா உருப்பெற்றுள்ள நிலையில் சோஷலிச சக்திகளின் வலிமையை எவ்வாறு நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்கள்? தற்போதைய உலகளாவிய சக்திகளின் பலாபலனில் சீனாவின் செல்வாக்கு எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் எனக் கருதுகிறீர்கள்?

ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டினை மையமானதொரு முரண்பாடாகவே நமது கட்சி கருதுகிறது. சோவியத் யூனியன் சிதறுண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலவிய ஆட்சிகள் வலுவிழந்து உலக அளவில் சோஷலிச சக்திகளை பலவீனப்படுத்திய போதிலும்கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் தற்போது நீடித்து வரும் சோஷலிசமானது பொருளாயத அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு முரணான ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மை தொடர்ந்து நீடிக்கிறது. அனைத்து வகையிலும் வலுவானதொரு நாடாக சீனா தன்னை வளர்த்துக் கொண்டு, உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக அது மாறியுள்ள சூழ்நிலையே மிகவலுவான ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவிற்கு சவாலான ஒன்றாக மாறியுள்ளது. இத்தகையதொரு சூழலில் இருந்துதான் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார, போர்த்தந்திர ரீதியான அதிகாரம் நீண்ட காலமாகவே சரிந்து வரும் அதே நேரத்தில் சீனா தனது வலிமையையும் செல்வாக்கையும் தொடர்ந்து உறுதியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்ற பின்னணியில்தான் அமெரிக்க – சீன மோதல் என்பது நடைபெறுகிறது. உலகத்திலுள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேடிவ் (பிஆர்ஐ – பண்டைக் காலத்தில் சீனாவின் பட்டு வர்த்தகர்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பயணித்த பாதையை மீண்டும் உருவாக்கும் நோக்கத்துடன் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வழியாக புதிய நெடுஞ்சாலைகள், கடல் வழிகள் ஆகியவற்றின் மூலம் இந்த நாடுகளின் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது; அதன் மூலம் சீனாவின் வர்த்தக உறவை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் அந்த நாடுகளின் ஒப்புதலுடன் சீனா மேற்கொண்டுள்ள (கடல்வழி) பாதை மற்றும் (நெடுஞ்) சாலை திட்டம் – மொ-ர்) சீனாவின் பூகோள ரீதியான, அரசியல் ரீதியான வீச்சு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதற்கான வலுவான வெளிப்படாக அமைகிறது.

பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க-சீன நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் என்பது சர்வதேச அரசியலின் தீர்மானகரமான, முக்கியமான ஓர் அம்சமாக இருக்கும். புதியதொரு பனிப்போர் உருவாகி வருகிறது என்ற பேச்சு வெளிப்படத் தொடங்கியுள்ள போதிலும் கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய மோதலைப் போன்றதாக இதைச் சித்தரிப்பது பொருத்தமானதாக இருக்காது. அந்த நேரத்தில் ஏகாதிபத்திய முகாம் என்பது பல நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்காவின் தலைமையிலான ஒரு குழு என்பதாக இருந்தது. மறுபுறத்தில் சோவியத் யூனியன் தலைமையில் சோஷலிச முகாமைச் சேர்ந்த நாடுகள் இருந்தன. அதே போன்று அப்போது சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கணிசமான பொருளாதார உறவுகள் என்று எதுவும் நிலவவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் இன்றைய நிலைமை என்பது முற்றிலும் மாறானதாகும். அமெரிக்காவுடன் மட்டுமின்றி அதன் நேட்டோ கூட்டாளி நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் கூட சீனா விரிவான பொருளாதார உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாகவும் சீனா விளங்குகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களும் சீனாவில் மிகப்பெரும் முதலீடுகளை செய்துள்ளன.

அதேபோன்று அமெரிக்காவின் தலைமையில் அல்லது சீனாவின் தலைமையில் நாடுகளின் குழுக்கள் என்பதும் இப்போது இல்லை. சீனாவிடமிருந்து ‘விலகிக் கொள்வது’ பற்றி அமெரிக்கா பேசி வந்தாலும் கூட, அமெரிக்காவினாலோ அல்லது அதன் கூட்டாளி நாடுகளாலோ அவ்வாறு செய்வது எளிதான ஒன்றல்ல. அமெரிக்க-சீன மோதல் அதிகரித்து வரும் பின்னணியில் சீனாவுடனான பொருளாதார உறவுகள் தொடர்ந்து நீடிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரையில், இந்தப் பிராந்திய குழுவைச் சேர்ந்த நாடுகளின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாக சீனா தொடர்ந்து இருந்து வருகிறது.

இத்தகையதொரு சூழ்நிலையில் சீனாவை கட்டுப்படுத்தி வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள வலதுசாரி சக்திகள் விரும்பிய வகையில் உருவாக இயலாது.  ‘இந்திய-பசிஃபிக்’ பகுதி என்று அழைக்கப்படும் இந்திய பெருங்கடலையும் உள்ளிட்ட பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர்த்தந்திர ரீதியான, ராணுவ ரீதியான முஸ்தீபுகள் இந்தப் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும்.

எனவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் மோதலை ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் பின்னணியில்தான் காண வேண்டும். சோவியத் யூனியன் சிதறுண்டு போனதற்குப் பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் என்பது ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தே வருகிறது. எனினும் சோஷலிச சீனாவின் அதிகரித்துக் கொண்டே வரும் வலிமையானது எதிர்காலத்தில் வெளிப்படவிருக்கும் முரண்பாட்டின் மீது தாக்கம் செலுத்தவும் செய்யும்.

ஏகாதிபத்திய தாக்குதலுக்கு பதிலடி தருகையில் ஒரு சில தருணங்களில் சீனா சமரசம் செய்து கொள்வதைப் போலத் தோன்றுகிறது. சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்தும் கூட சீன கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது. 1960களில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்த திருத்தல்வாத கருத்துக்களை எடுத்துக் கூறி வந்ததையும்  நாம் பார்த்தோம். இப்போது சீனாவும் கூட அதே பாதையில்தான் செல்கிறது என்று இதை எடுத்துக் கொள்ள முடியுமா?

இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையேயான சமாதானபூர்வமான சகவாழ்வு என்பது போன்ற கருத்தோட்டங்களை பற்றிப் பேசும்போது அதன் வரலாற்றுப் பின்னணியையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே, அதாவது முதலாளித்துவம் மற்றும் சோஷலிசம் ஆகிய இரண்டு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டம் என்பது அடிப்படையில் தவறானதொரு கருத்தோட்டம் அல்ல. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை உருவாக்கிய வழியைத்தான் நாம் விமர்சித்தோம். இந்த இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதான பூர்வமான போட்டி, சமாதானபூர்வமான வகையில் சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது  ஆகியவற்றோடு இணைந்த வகையில்தான் இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை அது முன்வைத்தது. இந்த மூன்று கருத்தோட்டங்களைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்தது.

சோஷலிசம் என்பது வலுவானதொரு சக்தியாக இருக்கும் காலத்தில் சமாதானபூர்வமான சகவாழ்வு மற்றும் சமாதானபூர்வமான போட்டி ஆகியவற்றின் மூலம் சோஷலிசத்தின் மேன்மை நிரூபிக்கப்பட்டு விடும்; அதன் மூலம் சமாதானபூர்வமான சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதற்கான வழி திறக்கும் என்ற மாயையை அது பரப்பி விடுகிறது. இத்தகைய கருத்தோட்டமானது ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடுகிறது. அதன் விளைவாக முதலாளித்துவ நாடுகளில் நடைபெற்று வரும் வர்க்கப் போராட்டங்களை அது புறக்கணித்து விடுகிறது. ஏகாதிபத்தியமும், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களும் எந்தவொரு காலத்திலும் சோஷலிசத்தோடு இணக்கமாக இருந்து விட முடியாது என்பதை அங்கீகரிக்கவும் இக்கருத்தோட்டம் தவறுகிறது. எனவேதான் இத்தகைய கருத்தோட்டங்களை நாம் திருத்தல் வாதம் என்று அடையாளப்படுத்தி விமர்சித்தோம்.

இன்றைய நிலைமை என்ன? நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமானதாக மாறியுள்ளது. மீதமுள்ள சோஷலிச நாடுகளும் கூட சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய மேலாதிக்க சூழலையும், முந்தைய சோஷலிச நாடுகளுக்குள் மூலதனத்தின் அதிகாரத்தை மேலும் முன்னேற்றி, தனது உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் தீவிரமாகப் பாடுபட்டு வரும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்கொள்ள வேண்டிய தற்காப்பு நிலையில்தான் இருந்து வருகின்றன.

இத்தகையதொரு சூழ்நிலையில், இரு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவது சரியான ஒன்றே ஆகும். ஏகாதிபத்தியத்துடன் ஒரு மோதலில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தனது உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதன் மூலம் தனது பொருளாதாரத்தை மேலும் வளர்ப்பது;, மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேலும் உயர்த்துவது ஆகியவற்றில்தான் அது கவனம் செலுத்தி வருகிறது. அதன் ராணுவ, பாதுகாப்பு வலிமை உள்ளிட்டு அனைத்து வகையிலும் சீனாவை வளர்த்தெடுப்பதற்கான அமைதியானதொரு சூழலும் அதற்குத் தேவைப்படுகிறது. சோஷலிசத்தின் தொடக்க நிலையில்தான் சீனா உள்ளது என்றே சீன கம்யூனிஸ்ட் கட்சி வகைப்படுத்தியுள்ளது. ஐம்பது ஆண்டுக் காலத்திற்குள் அதனை ஓரளவிற்கு நல்ல வளமானதொரு நாடாக வளர்த்தெடுப்பது என்பதையே அது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அது தற்போது கிட்டத்தட்ட எட்டியுள்ளது. முக்கியமான முதலாளித்துவ நாடுகள் மற்றும் நிதி மூலதனத்துடன் விரிவான உறவுகளை அது ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாகவே இது சாத்தியமானது. இந்தச் செயல்பாட்டின் ஊடேயே, சந்தைப் பொருளாதாரத்தை அது வளர்த்தெடுத்துள்ளதோடு, தனியார் மூலதனம் வளரவும் அனுமதித்துள்ளது. ஏகாதிபத்திய மூலதனம் மேலாதிக்கம் செய்து வரும் ஓர் உலகத்தில் உற்பத்தி சக்திகள், தொழில்நுட்ப செயல் அறிவு ஆகியவற்றை வளர்த்தெடுக்க இத்தகைய செயல்முறை தேவைப்படுகிறது என்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

தனித்துவமான சீன அடையாளங்களோடு கூடிய சோஷலிசத்தை கட்டுவது குறித்த மதிப்பீட்டை நாம் மேற்கொள்ளும்போது சீனா தொடர்ந்து முன்னேறி வருவதையும், மிகப்பெரும் பொருளாதார சக்தியாக மாறியுள்ளது என்பதையும், வறுமையை அகற்றுவதில் மிகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். ஏகாதிபத்தியத்துடனான சமரசப் போக்கின் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்தது என இவற்றை எளிதாகப் புறந்தள்ளி விடக் கூடாது.

எனினும், சமாதானபூர்வமான சகவாழ்வின் அவசியத்தைப் புரிந்து கொள்ளும் அதே வேளையில், உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு சோஷலிச அமைப்பும் வளர்ந்தோங்கி வருவதை ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஏகாதிபத்தியத்தின் சதித்திட்டங்கள், சீர்குலைவு முயற்சிகள் ஆகியவற்றுக்கு எதிரான கண்காணிப்பு எப்போதும் இருந்து வருவது அவசியமாகும்.  ‘ஏகாதிபத்தியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை சீன கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முன்பு கைவிட்டிருந்தது. நமது கட்சியின் 20வது கட்சிக் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த தீர்மானத்தில் இத்தகைய போக்கு ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடவும், ஒரு சர்வதேச கண்ணோட்டத்தை கைவிடுவதற்கும் வழிவகுக்கும் என்று நாம் எச்சரிக்கை செய்திருந்தோம்.

இறுதியாக, முன்னேற்றம் அடைந்ததொரு சோஷலிச நாடாக சீனா தன்னை எப்படி வளர்த்துக் கொள்கிறது என்பதையே உலக அளவில் சோஷலிசத்தின் எதிர்காலம் பெருமளவிற்குச் சார்ந்துள்ளது. அவ்வகையில் அவர்களது இத்தகைய முயற்சிகளுக்கான நமது ஒற்றுமையுணர்வையும், ஆதரவையும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன மக்களுக்கும் நாம்  தெரிவித்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

தமிழில்: வீ. பா. கணேசன்

சோஷலிச கியூபாவும் கொரோனா பெருந்தொற்றும்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

உலகம் முழுவதும் இன்று பெரும்பாலான நாடுகள் கொரோனா பெரும் தொற்று, அதனை எதிர்கொள்வதற்கான யுக்திகளில் ஒன்றாக ஊரடங்கு, அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களும் வருமானமும் சிதைந்துள்ள அவலநிலை, மக்கள் மத்தியில் பரவிவரும் அச்சம் என்று தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய அவநம்பிக்கை நிறைந்த சூழலில் சோசலிஸ சக்திகள் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, பெரும்தொற்றை எதிர்கொண்டு மக்களை பாதுகாப்பதில் சிறப்புற செயல்படும் அரசுகளாக சோசலிச அமைப்பை கொண்டுள்ள மக்கள் சீனம், வியத்நாம், கியூபா, இவை தவிர இந்திய முதலாளித்துவ அமைப்புக்குள் இருந்துகொண்டே, மார்க்சிஸ்டுகள் தலைமையில் இயங்கிவரும் இடது ஜனநாயக மாநில அரசை கொண்டுள்ள இந்திய மாநிலமான கேரளம் ஆகியவை உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் பெரும்தொற்றை எதிர்கொள்வதிலும் மக்களை பாதுகாப்பதிலும் கியூபாவின் வெற்றிகரமான அனுபவத்தை சுருக்கமாக பதிவிடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

கியூபா என்ற சிவப்பு நட்சத்திரம்

கியூபா நாடு அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கு மாநிலமான ஃப்ளோரிடாவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 1492 இல் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கொலம்பஸ் என்ற மாலுமியால் முதலில் ஐரோப்பியர்களுக்கு கியூபா அறிமுகமானது. 1711 இல் ஸ்பெயின் அரசின் படைகள் கியூபாவை தமது காலனி நாடாக ஆக்கிக் கொண்டன. கியூபாவின் மக்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப் பட்டனர். 

அடுத்து வந்த பல பத்தாண்டுகளில் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து  லட்சக்கணக்கான கருப்பின மக்கள் அடிமைகளாக கைப்பற்றப்பட்டு, இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு அவர்களது உழைப்பும் மிகக் கடுமையாக சுரண்டப்பட்டது. கியூபா மக்கள் ஸ்பெயின் அரசின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும் கொடிய காலனீய முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் கிளர்ந்து எழுந்தனர்.

1898 இல் அமெரிக்க வல்லரசு கியூபாவை கைப்பற்றியது. 1902 இல் கியூபாவிற்கு சுதந்திரம் அளிப்பதாக அமெரிக்க வல்லரசு அறிவித்த போதிலும் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் காலனி போல் தான் கியூபா இருந்தது. 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கியூபாவில் இருந்த அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி பாதிஸ்தா தலைமையிலான அரசு ஃபிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூப விடுதலைப் படையால் விரட்டி அடிக்கப்பட்ட பின்புதான் கியூபா உண்மையில் சுதந்திரம் பெற்றது. 

பல ஆண்டுகளாக அன்றைய கியூபாவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து, ஜனநாயக ஆட்சியை அமைக்க ஃபிடெல் தலைமையில் நடந்து வந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் 1959 இல் வெற்றி பெற்றது. மிக விரைவில் கியூபாவின் ஜனநாயக புரட்சி சோசலிச தன்மை கொண்டது என்பது தெளிவானது. கியூப கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஃபிடெல் அவர்களை தலைவராக கொண்ட ஆட்சி அமைக்கப்பட்டது.

அமெரிக்க அரசு கியூபாவின் புதிய, சுயேச்சையான ஆட்சியை கவிழ்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கியூபாவின் சோசலிச ஆட்சியை அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கியூபாவிற்கு எதிராக உணவு மற்றும் மருந்து விற்பனையைக் கூட தடுக்கும் கொடிய, முழுமையான வர்த்தக, தொழில்நுட்ப, பொருளாதார தடையை அறுபது ஆண்டுகளாக அமெரிக்க வல்லரசு அமலாக்கி வருகிறது. தனது நட்பு நாடுகளையும் இதனை கடைப்பிடிக்குமாறு நிர்ப்பந்திக்கிறது. 

கியூபாவை அழிக்க மட்டுமின்றி, கியூபாவின் சோசலிச புரட்சியின் மகத்தான தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவை கொலை செய்யவும் பலமுறை அமெரிக்க அரசு முயன்றது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிகள் அனைத்தையும் முறியடித்து, இன்று உலக நாடுகளில் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை பெற்று, மக்கள் நலன் பேணுகின்ற அரசு என்ற பெருமையையும் கியூபா பெற்றுள்ளது. குறிப்பாக, மத்திய, தென்அமெரிக்க நாடுகளில் உள்ள அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் எழுச்சிதரும் எடுத்துக்காட்டாக கியூபா திகழ்கிறது.

1959 இல் கியூபா மிகவும் பின்தங்கிய, கொடிய சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பரவலான வறுமை ஆகியவற்றை இலக்கணமாக கொண்ட ஒரு சமூகமாக இருந்தது. இன்று சோசலிச கியூபா அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மக்கள் நல்வாழ்வு, அனவைருக்கும் வேலை, நிறவெறி ஒழிப்பு, சமூக பொருளாதார சமத்துவம் ஆகிய இலக்கணங்களைக் கொண்ட நாடாக உலக அரங்கில் மிளிர்கிறது. 

கியூபாவின் மனிதவள குறியீடுகள் முன்னணி முதலாளித்துவ நாடுகளுக்கு சமமாகவும் சில அம்சங்களில் அவற்றை விட சிறப்பாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஆரோக்கியக் குறியீடுகளில் முக்கியமான ஒன்று சேய் இறப்பு விகிதம் என்பதாகும். உயிருடன் பிறக்கும் ஆயிரம் சேய்களில் ஒரு வயது நிறைவு அடையும் முன் இறந்துவிடும் சேய்களின் எண்ணிக்கைதான் சேய் இறப்பு விகிதம் என்று அழைக்கப் படுகிறது. இது கியூபாவில் வெறும் 4 என ஆகியுள்ளது. இந்த விகிதம் 1959 இல் கிட்டத்தட்ட 50 என்றிருந்தது. அமெரிக்காவில் இந்த விகிதம் இன்றும் கியூபாவை விட அதிகமாக உள்ளது. வேறு பல பணக்கார நாடுகளுக்கும் இது பொருந்தும். 

இந்தியாவில் சேய் இறப்பு விகிதத்தின் சராசரி 2018 இல் 32 ஆக இருந்தது. சில மாநிலங்களில் இன்னும் அதிகம். எடுத்துக்காட்டாக, மத்திய பிரதேசத்தில் கிராமப் புறங்களில் இது 52 ஆக இருந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம். சராசரி ஆயுட்காலம், சராசரி கல்வி பயிலும் ஆண்டுகள், எழுத்தறிவு விகிதம், இந்த குறியீடுகளில் பாலின வேறுபாடு மிக்குறைவாக இருத்தல், நகர  கிராம இடைவெளி மிககுறைவாக இருத்தல் – இவை அனைத்திலும் கியூபாவின் சாதனைகளை காணலாம். (இந்தியாவில் இத்தகைய சாதனைகளை கேரள மாநிலத்தில் மட்டுமே பார்க்க முடியும்.) 

பொதுசுகாதாரத்தை பேணிக்காப்பதிலும் அனைத்து மக்களுக்கும் கல்வியையும் மக்கள் நல்வாழ்வையும் உறுதி செய்வதிலும் கியூபா உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. இப் பின்புலத்தில் கியூபா கொரோனா தொற்றை எதிர்கொண்ட விதத்தை பார்க்கலாம்.

கியூபாவும் கொரோனா பெரும் தொற்றும்

உலக சுகாதார அமைப்பு கொரோனா பெரும் தொற்றின் புதிய குவி மையம் மத்திய, தென் அமெரிக்கா  என்று அறிவித்துள்ளது. ஆனால் 2020 ஏப்ரல், மே  ஆகிய இரு மாதங்களில் கியூபாவில் புதிதாக தொற்று உள்ளவர் என அறியப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரிட்டிஷ் பத்திரிக்கையான கார்டியன் ஜூன் 7 தேதியிட்ட ஒரு கட்டுரையில் கூறுகிறது. அதன்பின் நிலமை தொடர்ந்து சீரடைந்து வருகிறது.

தொற்றை எதிர்கொள்ள கியூபா அரசும் மக்களும் தயார் நிலையில் இருந்தனர். மார்ச் 24 கியூபாவில் 48 நபர்கள் தொற்று கொண்டிருந்தனர். இந்த எண்னிக்கை வேகமாக அதிகரித்தது. மார்ச் 29 இல் 119 ஆகியது, ஏப்ரல் 14 இல் ஏழு மடங்காக, 814 ஆக உயர்ந்தது. அச்சமயம் 24 பேர் இறந்திருந்தனர். அடுத்த இரு மாதங்களில் அரசும் மக்களும் இணைந்து மேற்கொண்ட, திட்டமிட்ட, கட்டுப்பாட்டுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஜூன் 7 கணக்குப்படி அன்றுவரை மொத்தம் 2,173 நபர்களுக்கு தொற்று ­உறுதி செய்யப்பட்டிருந்தது. 83 நபர்கள் இறந்திருந்தனர். 19 நாட்கள் கழித்து, ஜூன் 26 கணக்குப்படி கியூபாவில் அன்றுவரை மொத்தம் 2,325 நபர்களுக்கு தொற்று உறுதியாகியிருந்தது. மொத்த இறந்தவர் எண்ணிக்கை இரண்டு கூடி 85 ஆகியிருந்தது. கடைசியாக ஜூலை 3 தகவல்படி அன்றுவரை மொத்தம் தொற்று உறுதியானவர் 2,353, இறந்தவர் 86. தொற்றின் பரவல் வேகமும் இறப்பு விகிதமும் வேகமாக குறைந்துள்ளன. கியூபாவின் மக்கள் தொகை 2018 இல் 1.13 கோடியாக இருந்தது. இந்த விவரங்கள் அடிப்படையில் கொரோனா பெரும் தொற்றை கியூபா திறமையாகவும், இயன்ற அளவிற்கு குறைந்த உயிர் இழப்புடனும் எதிர்கொண்டுவருகிறது என்று கூறலாம். இதற்கு பின்புலமாக உள்ளது சோசலிச கியூபாவின் மக்கள் நல்வாழ்வு கட்டமைப்பும் அரசின் கொள்கை சார்ந்த அணுகுமுறையும் ஆகும்.

கியூப புரட்சி 1959இல் வெற்றி பெற்ற நாளில் இருந்தே மக்களின் நலன் சார்ந்து செயல்படுவதை அடிப்படை கொள்கையாக அங்குள்ள சோசலிச அரசு கடைப்பிடித்துவருகிறது. கல்வி, ஆரோக்கியம் ஆகிய இரண்டு அம்சங்களுக்கும் அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. 1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய கஸக்ஸ்தான் குடியரசின் ஆல்மா ஆடா என்ற நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ என்ற முழக்கத்தை, இலக்கை முன்வைத்தது. 

சோசலிச கியூபா அப்பொழுதே அந்த இலக்கை நோக்கி கணிசமாக முன்னேறியிருந்தது. அதற்குப் பின் கியூபா அந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட முதல்நிலை ஆரோக்கிய வசதி (primary health care)  என்பதையும் நோய் தடுப்பு ஆரோக்கிய அணுகுமுறை (preventive health care) என்பதையும் தாரக மந்திரங்களாக எடுத்துக்கொண்டு மக்கள் வாழும் ஒவ்வொரு பகுதியிலும் போதுமான மருத்துவர், செவிலியர், மருத்துவ கட்டமைப்பு இருத்தல், குடும்ப மருத்துவர் , குடும்ப செவிலியர் என்ற அணுகுமுறை, ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து அவர்களது ஆரோக்கியத் தேவைகளை கண்டறிந்து நோய் தடுப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வு சேவைகளை அமைத்துக்கொள்ளுதல் என்று மக்களின் ஆரோக்கியம் தொடர்பான பல அம்சங்களையும் முழுமுனைப்புடன் முன்னெடுத்துச்சென்றது.  

இந்த வரலாற்றுப் பின்னணியில் இன்று கியூபாவில் வலுவான ஆரோக்கிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2019 கணக்குப்படி கியூபாவில் 1000 மக்களுக்கு 9 மருத்துவர்கள் உள்ளனர். (இந்தியா: 1.34). 2014 ஆம் ஆண்டு விவரப்படி, கியூபாவில் 1000 மக்களுக்கு 5.2 மருத்துவமனை படுக்கைகள் உள்ளன. (இந்தியா, 2019 : 0.55) இந்த நிலை பணக்கார நாடுகளில் கூட இல்லை.  குறிப்பாக, கியூபாவில் ஆரோக்கிய அமைப்பு மக்களுடன் மிக நெருக்கமாக உள்ளது. குடியிருப்புப் பகுதிகள் அனைத்திலும் செயல்படும் “புரட்சி பாதுகாப்பு அருகமை அமைப்புகள்” இத்தகைய ஒருங்கிணைப்புக்கு உதவுகின்றன. 

இதனால் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் மக்கள் வாழும் பகுதிகளில் எழும் பொழுதே கண்டறிந்து எதிர்கொள்ள முடிகிறது. கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்வதில் முக்கியம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் அனைத்து அம்சங்களையும் கியூபாவால் திட்டமிட்ட முறையில் அமலாக்க முடிந்திருக்கிறது. 

தொற்று உள்ளதா என்று விரிவான பரிசோதனைகள் மூலம் விரைவில் அறிதல், தொற்று உள்ளவர் என்று அறியப்படுபவர் யாருடன் எல்லாம் தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும் விரைவில் கண்டறிந்து அவர்களையும் பரிசோதித்து, தனிமை படுத்துதல், தக்க சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொண்டு தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதில் கியூபா சிறப்புற செயல்பட்டுள்ளது.

இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆரோக்கியம் தொடர்பான மனிதவளம் திட்டமிட்ட அடிப்படையில் தொலைநோக்குடன் போதுமான அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபா நாட்டில் மேலோங்கியுள்ள சமூக விழுமியங்கள் ஆரோக்கியத்தை மனித உரிமை எனக் கருதுகின்றன. (கியூபாவின் சோசலிச அரசியல் சாசனம் இதை உறுதிபடக் கூறுகிறது.)­ கியூபாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் லாப நோக்கத்தால் உந்தப்பட்டு செயல்படுவதில்லை. மாறாக, மக்கள் நலம் பேண அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். 

இன்று உலகின் பல நாடுகளிலும் அவர்கள் சேவையை அரசுகள் நாடுகின்றன. மிகுந்த சோசலிச சர்வதேச உணர்வுடன் கியூபா பல ஆப்பிரிக்க, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்த வகையில் உதவுகிறது. கொரோனா தொற்று காலத்திலும் கியூபாவின் உதவி பல நாடுகளுக்கு – மக்கள் நலன் கருதி, கியூபாவிற்கு எதிராக செயல்படும் பிரேசில் நாட்டுக்குக் கூட – தரப்படுகிறது. இக்காலத்தில்  உலகின் மிகவும் பணக்கார ஏழு நாடுகளில் ஒன்றான இத்தாலி நாடு கூட கியூபாவின் உதவியை பெற்றுள்ளது.

கியூபாவில் கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்வதில் பல பத்தாயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் களம் இறக்கப்பட்டு, வீடு வீடாக சென்று பணிபுரிகின்றனர். நமது நாட்டிலும் மனித நேயம் மிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளனர். ஆனால் ஆரோக்கியம் என்பது தனியார்மயம், வணிகமயம் என்ற பாதையில் பயணித்துள்ளதால், மக்களை பாதுகாப்பது பெரும் சவாலாகியுள்ளது.­ 

மிக முக்கியம் என்று உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் வலியுறுத்தும் பொதுசுகாதார நடவடிக்கைகளை கியூபா திட்டமிட்டு அமலாக்குகிறது. அதற்கான கட்டமைப்பை கியூபா தொடர்ந்து உருவாக்கியுள்ளது மட்டுமின்றி, சோசலிச அரசியல் தின்ணமும் கியூபா கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. நாடு முழுவதும் உயிர்ப்புடன் செயல்படும் மக்களின் ஜனநாயக அமைப்புகள் இப்பணியில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன. இறுதியாக, கியூபா உறுதியான அறிவியல் அடிப்படையில் இப்பிரச்சினையை  எதிர்கொண்டுவருவது அதற்கு மேலும் வலு சேர்க்கிறது.

பெருந்தொற்றை வீழ்த்திய சீனாவின் சோசலிசம்!

இரா.சிந்தன்

உலகம் இதற்கு முன்பு பார்த்திருக்காத ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை 2019 டிசம்பர் இறுதியில் சீனா முதன் முதலில் எதிர்கொண்டது. பிறகு அது உலகம் முழுவதும் பெருந்தொற்றாக பரவியது.

கொரோனா வைரசை முதன் முதலாக எதிர்கொண்ட நாடு என்ற வகையிலும்,  குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்திருக்கும் நாடு என்ற வகையிலும் சீன அனுபவங்கள் தனித்துவமானவை. அடுத்தடுத்து புதிய கிருமிகளால் ஏற்படும்  கொள்ளை நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அறிவியலாளர்களின் எச்சரிக்கையை மனதில் கொண்டால் சீனாவின் உடனடி செயல்பாட்டின் படிப்பினைகள் உலக மக்களுக்கு முக்கியமானவை என்பது புரியும்.  மேலும் இது சோசலிசத்தின் மேன்மையையும் உணர்த்துகிறது.

சோசலிசமும் பொது சுகாதாரமும்:

1918 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்று நோய் பரவியது. முதல் உலகப்போரைத் தொடர்ந்து இந்த தொற்று கோடிக்கணக்கான உயிர்களை குடித்தது. அப்போதுதான் உருவாகியிருந்த சோசலிச சோவியத் குடியரசிலும் நோய் பாதிப்பு இருந்தது. வி.இ.லெனின் இதற்கென பொது சுகாதார அமைச்சகத்தை ஏற்படுத்தினார். மேலும் அவர் ”உள்நாட்டு யுத்தத்தை எதிர்கொள்வதில் பெற்ற  அனுபவம் அனைத்தையும் தொற்று நோய்களை எதிர்கொள்வதில் பயன்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டார்.

உலகில் முதன் முறையாக  மையப்படுத்தப்பட்ட, பொது சுகாதார அமைப்பை ஏற்படுத்தியது சோவியத் ஒன்றியத்தில் அமைந்த சோசலிச அரசாங்கமே ஆகும். ஊரக பகுதிகளுக்கும் அது பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. இது அன்றைய காலத்தின் மிகப்பெரும் சாதனை என ஸ்பானிஷ் ஃப்ளூ பரவல் பற்றிய ‘பேல் ரைடர்’ என்ற புத்தகத்தில் லாரா ஸ்பிண்டி என்ற பத்திரிக்கையாளர் எழுதியுள்ளார்.

அனைத்திலும் முதன்மையானது மனிதர்களின் நலவாழ்வுதான் என்ற  அணுகுமுறைதான் முதலாளித்துவ கட்டமைப்பில் இருந்து சோசலிசத்தை வேறுபடுத்துகிறது. கியூபா மருத்துவத்துறையில் ஆற்றியிருக்கும் மகத்தான சாதனைகளை நாம் அறிவோம். சீனாவின் கள சூழல் வேறுபட்ட ஒன்று. கொரோனா நோய் எதிர்ப்பில் அவர்களுடைய போராட்டத்தைக் குறித்து பார்ப்போம்.

சீனாவில் பொது சுகாதாரம்:

1949 இல் மாவோவின் தலைமையில் மக்கள்சீன புரட்சி அரசாங்கம் அமைந்தது. 1950 நடைபெற்ற தேசிய சுகாதார மாநாட்டில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் இப்போதும் கவனிக்கத் தக்கவை. 

1) விவசாயிகள், தொழிலாளர்களாகிய வெகுமக்கள் நலனுக்கு பணியாற்றுவதே சுகாதாரப் பணியாளர்களின் முதன்மையான கடமை. 
2) நோய்களை முன் தடுப்பதுதான் முதன்மை இலக்கு.
3) நவீன மருத்துவத்தையும் பாரம்பரிய மருத்துவத்தையும் சமமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
4) மருத்துவ பணியாளர்களுடைய செயலூக்கம் மிக்க பங்களிப்புடன் மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பது முக்கியமானது.

இப்போது சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது.  உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. ஆனாலும் சீனா ஒரு வளரும் நாடுதான். எனவே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், ஊரகங்கள் மற்றும் நகரங்களுக்கான இடைவெளியும் அதிகமாக உள்ளன. சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பொது சுகாதாரத்திற்காக செலவிடுகிறது. ஆயிரம் பேருக்கு 2 மருத்துவர்கள் உள்ளார்கள். 2.7 செவிலியர்கள் உள்ளனர். 4.34 படுக்கைகள் உள்ளன. இதிலிருந்தே சீனாவின் கட்டமைப்பு இன்னும் மேம்பட வேண்டியிருப்பதை அறிய முடியும்.

சமீபத்தில் புதிய சகாப்தத்தில் சீன சமூகத்தில் வெளிப்படும் முரண்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வு செய்தது. முக்கிய முரண்பாட்டை அடையாளமும் கண்டது. சீன மக்களிடையே பொருளாயத தேவைகள் அதிகரித்துள்ளன, உணவு, உறைவிடம் என்பதோடு கூடுதலான புதிய தேவைகள் உருவாகியுள்ளன, நலவாழ்வுக்கான விருப்பம் அதிகரித்துள்ளது. பண்பாட்டு வாழ்க்கையில் புதிய தேவைகள் உருவாகியுள்ளன. இவையெல்லாம் சமனற்ற, போதாக்குறையான வளர்ச்சியோடு முரண்படுகின்றன என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் கணிப்பாகும். இதனை மனதில் கொண்டுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

கொரோனா எதிர்ப்பு மக்கள் யுத்தம்:

சீனாவின் ஊகான் நகரத்தில் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நோய் பரவியிருந்தது. அந்த நகரத்தில் மருத்துவமனை, மருத்துவர் மற்றும் மருந்து பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதே வேகத்தில் நோய் பரவினால் பொது சுகாதார கட்டமைப்பே பெரும் சுமைக்கு ஆளாகி, சமூக நெருக்கடியாகிவிடும்.

ஜனவரி 7 ஆம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை நிலைக்குழு கூடியது. நோய்த்தொற்று நிலைமைகளை அது ஆய்வு செய்தது. உடனடியாகவும், அதிவிரைவாகவும் செயல்படுவதுதான் அவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு.  அப்போதிருந்தே சீன கம்யூனிஸ்ட் கட்சி இதனை ஒரு மக்கள் யுத்தமாக வழிநடத்தியது. 

“புரட்சிகர யுத்தம் என்பது மக்கள் நடத்துகின்ற ஒன்றாகும். மக்கள் சக்தியை திரட்டுவதன் மூலம் மட்டுமே நாம் அந்த போரினை நடத்த முடியும், மக்களை சார்ந்திருப்பதன் மூலமே அந்த போரை முன்னெடுக்க முடியும்” என்கிறார் தோழர் மாவோ. இந்த போராட்டம் நீண்ட ஒன்று, உத்திகளை மாற்றியமைத்து, உள்ளூர் நிலைமைகளை சரியாக கணக்கிட்டு மெல்ல மெல்ல முன்னேற வேண்டும். சீனாவில் வெற்றிபெற்ற சோசலிச புரட்சி அந்த கருத்தாக்கத்தின் நல்ல உதாரணமாகும். 

மக்கள் யுத்த கருத்தாக்கத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் ஜி ஜின்பிங் வலியுறுத்திவந்த கருத்து. கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் அந்த கருத்தாக்கம் பயன்பட்டது. மக்கள் நலவாழ்வே முதன்மையானது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து வளங்களும் இந்த போராட்டத்திற்காக திருப்பிவிடப்பட்டன. சீன குடியரசுத்தலைவர் ஜி ஜின்பிங், ஒவ்வொரு கட்டத்திலும் இப்போராட்டத்தை வழிநடத்தினார். சீன பிரதமர் லி கெகியாங் கொரோனா எதிர்ப்பு குழுவிற்கு தலைமையேற்று ஒருங்கிணைத்தார்.

இந்த ’யுத்தம்’ இரண்டு முனைகளில் முன்னெடுக்கப்பட்டது. முதலாவது மருத்துவமனைகள். அங்கு வரும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவது முக்கியம். இரண்டாவது நோய் பரவல் தடுப்பு  நோயால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து தனிமைப்படுத்துதல். அதற்கு தேவையான வழிமுறைகளை வகுத்து விரைவாக செயல்படுவது.

ஜனவரி 23 ஆம் தேதி ஊகான் நகரமும் ஹுபே மாகாணமும் உலகம் கண்டிராத மிகப்பெரும் ஊரடங்கினை தொடங்கியிருந்தன. நாட்டின் அனைத்து மாகாணங்களில் இருந்தும் மருத்துவர்கள், நவீன உபகரணங்கள் மற்றும் இதர வளங்களை திரட்டி அங்கே அனுப்பினார்கள். 330 மருத்துவக் குழுக்களும் 41600 மருத்துவ பணியாளர்களும் ஊகானில் குவிக்கப்பட்டார்கள். 

தொற்றுநோய் தடுப்பு சிறப்புக் குழுவினர் 1800 பேர்  ஊகானிற்கு அனுப்பப்பட்டார்கள்.  ஐந்தைந்து பேர் ஒரு குழுவாக இணைந்து ஒவ்வொரு வீட்டிலும் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.  

முதலில் ஊகானிலும் அதை தொடர்ந்து சீனா முழுவதும் பின்பற்றப்பட்ட சில நடவடிக்கைகள் இங்கே குறிப்பிடத்தக்கன. தொற்றாளர்களின் தொடர்புகளை தடமறிய பழைய முறைகளுடன் சேர்த்து டிஜிட்டல் முறைகளும் பின்பற்றப்பட்டன. தொற்றாளர்கள் பயணித்த இடங்களுக்கு மற்றவர்கள் செல்லாமல் தவிர்க்கும் வகையில் எச்சரிக்கை பகிரப்பட்டது. 3 வார காலத்தில் 14 கோடி முறை இதற்காக இணையதள வசதி பயன்படுத்தப்பட்டதாகவும், அக்காலகட்டத்தில் 80 ஆயிரம் பேர் மட்டுமே பயணங்களை மேற்கொண்டதாகவும் அந்த நாட்டின் விபரங்கள் தெரிவிக்கின்றன. ஜெஜியாங் போல சில பகுதிகளில் சாலையில் சிக்னல் வைப்பது போல உடல்நிலையை பரிசீலித்து அடையாளம் காட்டும் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. சீனாதான் உலகிலேயே மிக அதிகமான இணைய பயன்பாட்டாளர்களை கொண்ட நாடு. அதன் காரணமாக அரசின் சுகாதார கண்காணிப்பு வசதிகளை இணையம் வழியாக சுமார் 90 கோடிப்பேர் பயன்படுத்த முடிந்துள்ளது. 

மருத்துவக் கழிவுகளை கையாள்வதற்காக 13 மாகாணங்களில் இருந்து 140 சிறப்பு நிபுணர்கள் வந்தனர்.  ஒரு நாளைக்கு 1220 டன்கள் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் வகையில் தகுதி படிப்படியாக உயர்த்தப்பட்டது.

ஷாங்காய் நகரத்திலிருந்து ஊகானுக்கு சென்று செவிலியர் பயிற்சிக்காக தன்னை இணைத்துக் கொண்ட செவிலியர் ஹு நானா தனது கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார். “எல்லோரும் நலமாக இருந்தால் மட்டுமே எங்களின் சிறு குடும்பமும் பாதுகாப்பாக இருக்க முடியும். பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தோடு வாழவேண்டும் என்பதற்காக நான் எனது வீட்டை விட்டு வெளியே செல்லும் முடிவை எடுத்தேன். என்னுடைய தேசம் நடத்துகிற போராட்டத்தில் என்னுடைய பங்களிப்பு அவசியம். முன்னேறிய மருத்துவ தொழில்நுட்பங்கள் எங்களிடம் இருக்கின்றன. எனவே எனக்கு ஏதும் அச்சமில்லை. நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் என் திறமைகளையும் கொண்டு இந்த போராட்டத்திற்கு உதவி செய்வதென முடிவு செய்தேன்.

முதல் கட்ட போராட்டம் அடுத்தடுத்த நிலைகளை எட்டியது. ஜி ஜின்பிங் இவ்வாறு விவரிக்கிறார் “தொற்றுநோய் நாடுமுழுவதும் பரவுதலை  கட்டுப்படுத்த ஒருமாதம் எடுத்தது, தினசரி கண்டறியப்படும் உள்நாட்டு தொற்று எண்ணிக்கை இரண்டாவது மாதத்தில்தான் ஒற்றை இலக்கத்தை எட்டியது. ஊகான் நகரம் அமைந்துள்ள ஹுபெ மாகாணத்தில் போராட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதிக்க மூன்றாவது மாதம் ஆகியது”.

ஏப்ரல் 26 ஆம் தேதி ஊகானில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகியது. ஹுபே மாகாணத்தில் சிகிச்சை பெற்று நலமடைந்தவர்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார்கள் என்பதையும், இதில் 3 ஆயிரத்து 600 பேர் 80 வயதுக்கும் அதிகமான முதியவர்கள் ஆவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் வேதனை தரும் வகையில் மருத்துவப் பணியாளர்கள் 46 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார்கள். முதல் முனையில் போராட்டத்தின் தீவிரம் குறைந்துள்ளது. இரண்டாவது முனை எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது.

இந்தப் போராட்டம் முடிந்துவிடவில்லை என்பதை சீனா அறிந்தே வைத்திருக்கிறது. மேலும் தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகளில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. 

நோயுடன் ஒரு சதுரங்கம்:

தொற்றுநோய் தடுப்பு போராட்டத்தை விவரிக்கும்போது அதனை ஒரு சதுரங்க விளையாட்டாக ஒப்பிட்டார் ஜி ஜின்பிங். சீன தேசமே அந்த சதுரங்கத்தை ஆடியது.  மருத்துவப் பணியாளர்களும், அறிவியல் அறிஞர்களும் ஒரு அணியாக நின்றார்கள் எனில், அந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும், சோசலிச அரசாங்கமும், அரசு நிறுவனங்களும் பின்பலமாக நின்றார்கள். 90களுக்கு பிறகு பிறந்த இளைஞர்களின் பங்களிப்பு இதில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 

அனைவருக்கும் இலவச சிகிச்சை:

ஊகான் நகரத்தில் ஊரடங்கு அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பாகவே, பணம் இல்லாத காரணத்தால் குடிமக்களின் ஒருவருக்கும் கூட கொரோனா பரிசோதனையோ அல்லது சிகிச்சையோ மறுக்கப்படக் கூடாது என்பதை அரசு தெளிவுபடுத்தியது.

சீன மருத்துவ காப்பீட்டு ஆணையத்தின் கணக்கீட்டின் படி கொரோனா தொற்று கண்டறியப்பட்ட உள்நோயாளிகளுக்கான செலவு தலா 2லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். தீவிர சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கான செலவு 15 லட்சத்தை தாண்டியது.  70 வயதாகிய கொரோனா நோயாளி ஒருவருக்கு 3 மாதங்கள் சிகிச்சை தொடர்ந்து தரப்பட்டது, அவருக்கு எக்மோ கருவி இரு முறை பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அவரை குணப்படுத்துவதற்கான செலவு சுமார் 1 கோடியே 40 லட்சமாக ஆகியது. 

இந்த செலவுகளில் ஒரு பகுதி இன்சூரன்ஸ் மூலமாகவும், பெரும்பகுதி அரசு நிதியாகவும் ஈடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்காலத்தில் செயல்பட்ட அத்தியாவசிய நிறுவனங்களில் பணியாளர்களுடைய பாதுகாப்பை அரசே உறுதி செய்தது. தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கான நிதி உதவியை அரசு மேற்கொண்டது. 

அதிவிரைவான அறிவியல் ஆய்வுகள்:

தொற்று நோய் தடுப்புக்காக அமைக்கப்பட்ட்ட குழுக்களின் அதி முக்கியத்துவம் வாய்ந்தது பல துறை அறிவியல் அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட குழுவாகும். உலகம் பல தொற்றுநோய்களை எதிர்கொண்டிருக்கிறது காலரா, பிளேக், சின்னம்மை மற்றும் தொழுநோய் ஆகியவை பரவுவதை அறிந்து கொள்ளவும், தடுப்பதற்கும் நீண்டகால ஆராய்ச்சிகள் தேவைப்பட்டன. சமீபத்தில் நாம் எதிர்கொண்ட பெருந்தொற்றாகிய ஹெச் 1 என் 1  வைரசை அறிவதற்கு ஒருமாத கால ஆய்வு தேவைப்பட்டது. கொரோனா வைரசின் ஜீன் சீக்குவன்ஸ் ஒரு வார காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டதும், அது உலக நாடுகளோடு பகிரப்பட்டதும் மருத்துவத் துறைக்கு பெரும் உதவியாக அமைந்தது. 

வைரசின் பாதிப்புகள் அது பரவும் விதம் குறித்து அறிந்து தொற்றுநோய் தடுப்பு உத்திகள் வகுக்கப்பட்டன. சிகிச்சை முறை உருவாக்கப்பட்டது. பலன் கொடுக்கும் மருந்துகள் உலகின் பல நாடுகளில் இருந்தும் பெறப்பட்டன. 16 நாட்களில் டெஸ்டிங் கிட்டுகள் உருவாக்கப்பட்டது, அவைகளை போதுமான எண்ணிக்கையில் தயாரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

அறிவியல் நிபுணர்களுக்கு வேறு ஒரு வேலையும் இருந்தது. அவர்கள் சீன மக்களிடையே தொலைக்காட்சிகளில் உரையாற்றினார்கள். தொலைபேசி வழி கேள்விகளுக்கு பதில் சொன்னார்கள். இவ்வாறு வதந்திகளுக்கு எதிரான அறிவியல் பிரச்சாரமும் முக்கிய பங்கு வகித்தது.

அரசு நிறுவனங்களின் பங்களிப்பு:

சீனாவின் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் செய்த பங்களிப்பு அப்போதே பல செய்திகளில் வெளிவந்தது. அலிபாபா, டென்செண்ட், பைடூ, சென்ஸ் டைம் ஆகிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வழங்கின. இணையதள நேரலை சேவைகளின் மூலம் பள்ளி வகுப்புகள் தொடரப்பட்டன. மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தொற்றாளர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உணவு விநியோகத்திற்காக  ரோபோட்டுகளை பயன்படுத்தினார்கள். ஆனால் அரசு நிறுவனங்களுடைய மாபெரும் பங்களிப்பு இல்லாமல் கொரோனா போராட்டத்தை அவர்கள் நடத்தியிருக்க முடியாது.

சீன அரசு நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து கூடுதலாக குறிப்பிட வேண்டும்.   சாளரம் அமைப்பதற்கு 10 நொடிகள்,  சுவர் எழுப்ப 2நிமிடங்கள் என அதிவேகமாக,   இரவும் பகலும் உழைத்து மருத்துவமனைகளை கட்டியது சீன அரசுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களே ஆகும்.  4000 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் இரவு பகலாக உழைத்தார்கள்.  இந்த கட்டுமான பணிகளுக்கு தேவையான மின்சாரம், எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பினை அரசு நிறுவனங்களே வழங்கின.

மருத்துவ உபகரண உற்பத்தியை அரசு நிறுவனங்களின் விரைவான உதவியின் காரணமாகவே உடனடியாக அதிகரிக்க முடிந்தது.தொற்றுநோய் தடுப்பு உபகரணங்களான கவச உடைகள் முதல் அனைத்து உபகரணங்களின் உற்பத்தியும் விரைவாக அதிகரிக்கப்பட்டது. எரிசக்தி, தானிய உற்பத்தி, எண்ணெய், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தியில் அரசு நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை செய்தன. சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது. விலையை உயர்த்தி விற்ற வணிகர்கள் மீது குற்றவழக்கு பதியப்பட்டது, செயற்கை விலையேற்றம் கட்டுப்படுத்தப்பட்டது.

சீன அரசின் எண்ணெய் மற்றும் உணவுப்பொருள் கழகம், சீன தானிய சேமிப்புக் குழுமம், சீன உப்பு தொழிற்சாலை அனைத்தும் தங்கள் வழங்கலை அதிகப்படுத்தின. சீனாவின் வழங்கல் மற்றும் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு நிறுவனங்கள் முயற்சியெடுத்து விவசாய கூட்டுறவு சங்கங்களை நேரடியாக தொடர்பு கொண்டு காய் கனிகள் மற்றும் தேவையான பொருட்கள் சரியான விலையில் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்தன.

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, அதிலும் குறிப்பாக மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவச கருவிகள் தயாரிக்கும் பணி புயல் வேகத்தில் முடுக்கிவிடப்பட்டது. ஜனவரி 28 ஆம் தேதி அன்று சீனாவின் ஒரு நாளில் 10 ஆயிரம் சோடி கருவிகளை தயாரிக்க முடிந்தது. பிப்ரவரி 24 ஆம் தேதி அவர்களின் தயாரிப்பு வேகம் ஒரு நாளைக்கு 2 லட்சத்தை தாண்டியது. பிப்ரவரி 1 ஆம் தேதி என்ற அளவில்  7 லட்சத்து 73 ஆயிரம் பரிசோதனைக் கருவிகளை சீன அரசு தயாரித்தது பிப்ரவரி 25 ஆம் தேதியன்று ஒரு நாளில் 17 லட்சம் என்ற அளவில் அதன் எண்ணிக்கை உயர்ந்தது. மார்ச் 31 ஆம் தேதி இந்த எண்ணிக்கை 42 லட்சமாகியது. தொழிற்சாலை நிர்வாகங்களை மருத்துவ உபகரண தயாரிப்பை நோக்கி உந்தித் தள்ளியது அரசு நிர்வாகம். ஆம்புலன்சு வாகனங்கள், வெண்டிலேட்டர்கள், இ.சி.ஜி இயந்திரங்கள், கிருமி நாசினி இயந்திரங்கள் உள்ளிட்டு தேவையான அனைத்து கருவிகளும் உள்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

முன்னணிப் படையாக கம்யூனிஸ்டுகள்:

மார்க்சியவாதிகள் என்போர் ஆரூடம் சொல்பவர்கள் அல்ல. எதிர்கால வளர்ச்சிப் போக்குகளையும் மாற்றங்களையும் மனதில் கொண்ட பொதுவான வழிகாட்டுதல்கலையே அவர்களால் உருவாக்க முடியும், இயந்திர கதியாக ஒரு காலத்தை நிர்ணயிக்க முடியாது என்றார் மாவோ. சீனாவின் 46 லட்சம் கட்சி கிளைகளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் இயக்கவியல் பார்வையோடு வழிநடத்தினார்கள்.

மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற மாஸ்லைனை நீண்ட காலமாக கடைப்பிடிக்கும் அனுபவம் கொண்டது சீன கம்யூனிஸ்ட் கட்சி.  கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள கமிட்டிகள் உடனடியாக ஒரு அவசர நிலையை எதிர்கொள்ள தயாரானார்கள். தங்களிடமுள்ள அனைத்து வளங்களையும் திரட்டினார்கள்.  மக்களுக்கு தலைமையேற்க வேண்டும், மக்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று செயல்பாடுகளை பட்டை தீட்ட வேண்டும். 

யாரும் செய்வதற்கு தயங்கும் ஒரு பணியாக இருந்தால் அதில் கம்யூனிஸ்டுகளே முதல் ஆளாக ஈடுபட வேண்டும். தயக்கம் என்பது ஒருபோதும் கூடாது என்றது  கட்சி.

1) முன் கை எடு,
2) அறிவியல் அடிப்படையில் நோயின் தன்மையை அறிந்து கொண்டு செயல்படு
3)  திட்டமிடுதலை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்க, ஒட்டுமொத்த திட்டத்தின் பகுதியாகவும், உள்ளூர் நிலைமைகளை மனதில் கொண்டும் திட்டம் இருக்க வேண்டும்,
4) திட்டமிட்ட பணிகளை அமைப்பின் வலிமையைக் கொண்டு செயலாக்குக. நடைமுறை அனுபவங்களை உள்வாங்கி செயல்பாட்டினை கூர்மைப்படுத்துக என வழிகாட்டியது.

ஜி ஜின்பிங், “பொத்தாம் பொதுவான உத்தரவுகளைக் கொண்டோ, அதிகாரத்துவத்தைக் கொண்டோ அல்லது பெயருக்கு வேலை செய்வதாலோஇந்த சவாலை எதிர்கொள்ள முடியாது.” என தெளிவாகவே குறிப்பிட்டார். உத்தரவுகளை கேட்டு வேலை செய்யும் பணியாளராக அல்ல, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப உத்திகளை வகுத்து செயல்படும் தளபதியாக செயல்பட்டார்கள் முரண்பாடுகளை ஆய்வு செய்து முறையாக கையாண்டார்கள்.

மருத்துவர், செவிலியர் என மருத்துவ சிகிச்சை முனையில் பணியாற்றிய குழுக்களில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முன் நின்றார்கள். உதாரணமாக ஹுபே மாகாணத்திற்கு வந்த சீன ராணுவ மருத்துவக் குழுவினர் 450 பேரிலும் 60 சதவீதம் கட்சி உறுப்பினர்கள் ஆவார்கள்.

பீக்கிங் பல்கலைகழகத்திலிருந்து மட்டும் ஊகானுக்கு 405 மருத்துவ பணியாளர்கள் வந்திருந்தனர்.  அதில் 171 பேர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். “ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் 5 நோயாளிகளை பரிசோதிக்க வேண்டியிருந்தது. ” வாங் பென் என்ற மருத்துவர் இவ்வாறு குறிப்பிட்டார் “ஊகானில் ஒவ்வொரு நாளும் மக்கள் எங்களை அன்பில் நனைத்தார்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததற்கான பொருளை இந்த போராட்டம் எங்களுக்கு உணர்த்தியது”.

ஹெய்லாங்ஜியாங் உள்ளிட்ட சில இடங்களில் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் தளர்வோடு நடந்து கொண்டார்கள். உடனடியாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்பாட்டை கூடுதலாக்கினார்கள். மேலும் களத்தில் ஒவ்வொரு வீடாக சென்று உதவி செய்த கட்சி தோழர்களின் பணியை ஒழுக்க ஆய்வு மற்றும் மேற்பார்வை குழு கண்காணித்தது. இந்தக் குழுவுக்கென தனியாக ஒரு பத்திரிக்கை இயங்குகிறது நோய் தடுப்புக் குழுக்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் ஏராளமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமுதாய குழுக்களின் பங்களிப்பு:

மாகாண அரசுகளும், உள்ளாட்சிகளும் அவரவர் சூழல் குறித்து ஆய்வு செய்து படைப்பாக்கத்துடன் செயல்பட்டார்கள். மக்களுடன் நேரடி தொடர்பை உறுதி செய்யும்  6 லட்சத்து 50 ஆயிரம் சமுதாய குழுக்கள் சீனா முழுவதும் உள்ளன. இவையே சீன அதிகாரப்பரவல் கட்டமைப்பின் கடைசி கண்ணிகள். நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள இந்தக் குழுக்களின் 40 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு சமுதாய குழு உறுப்பினரும் 350 பேரை நேரில் சந்திக்க வேண்டியிருந்தது. ஊரடங்கு தீவிரமாக அமலாக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் உணவுப்பொருள் மற்றும் மருந்து விநியோகத்தில் பணியாற்றினார்கள்.  அதாவது ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கான பணியில் இவர்களின் உழைப்பு மிகப்பெரும் பங்கு வகித்தது.

கரடுமுரடான சாலைகளில், பாதுகாப்பில்லாத பகுதிகளில் பயணித்து ஒவ்வொரு குடிமகனையும் அவர்கள் சந்தித்தார்கள். குடிமக்கள் நல அமைச்சகத்தின் தகவலின்படி இந்த பணியாளர்களில் 53 பேர் பணியின்போது மரணமடைந்துள்ளனர். இவ்வாறு மரணமடைந்தவர்களில் 92.5 சதவீதம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆவார்கள்.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் போய் என்ற மாவட்டத்தில் நடந்தவைகளை சென் சென் என்பவர் பீப்பிள்ஸ் டெய்லி இதழில் எழுதியுள்ளார்.

மாகாணத்தின் திறன் வாய்ந்த தோழர்களை தேர்வு செய்து முன்னணிக்கு அனுப்பினார்கள்.  மொத்தம் 523 பேர். அவர்களின் பணி ஆளுக்கு ஒரு குழுவை வழி நடத்துவதாகும்.

இந்த குழுக்களின் கட்சி உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்கள் சிவப்பு பட்டியலில் இடம் பெற்றார்கள். தொய்வாக இருந்தால் நீல பட்டியலில் இடம்பெற்றார்கள். போய் மாவட்டத்தில் 76 பேர் சிவப்பு பட்டியலிலும், 2 பேர் நீல பட்டியலிலும் இடம் பிடித்தார்கள்.  முன்னணியில் பணியாற்றும் குழுக்களுக்கு சரியான நேரத்தில் உணவு, குடிநீர் கொடுப்பது. ஆட்களை மாற்றிவிடுவது. முக கவசம், கை உறைகள் கிடைக்கச் செய்வது தனியாக ஒரு குழுவால் கவனிக்கப்பட்டது. இந்த பணியாளர்களுக்கு ஆன்லைன் வழி உளவியல் ஆலோசனைகளும் உறுதி செய்யப்பட்டன. இந்த போராட்டத்தின் வழியே ஏராளமான புதிய உறுப்பினர்கள் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டனர்.

இளைஞர்களின் பெரும் பங்கேற்பு:

கொரோனா நோய் தடுப்பு பணிகளின் இளைஞர்களை அதிக அளவில் ஈடுபடத் தூண்டியது சீன அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும்.  1990 களுக்கு பின் பிறந்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றார்கள். ஆண் செவிலியரான ஜியான் யாங், “நாங்கள் இளைஞர்கள், நாங்களே முன் வரிசையில் நிற்போம்” என உற்சாகமாக குறிப்பிடுகிறார்.  இளைஞர்களின் பங்கு தனித்து குறிப்பிட வேண்டிய அளவில் தனிச்சிறப்பானதாக இருந்தது.

இப்போது சீன ஊடகங்களில் 90களுக்கு பின் பிறந்தோர் என்பதே அவர்களை குறிப்பிட பொதுவான பெயராகிப்போனது. ஊகானில் குவிக்கப்பட்ட மருத்துவப் படையணியில் 12 ஆயிரம் பேர் 90களுக்கு பின் பிறந்தவர்கள் ஆவர். 

ஒரு வேளை இந்த போராட்டத்தில் நான் மரணிக்க நேர்ந்தால் வைரஸ் குறித்த ஆராய்ச்சிக்காக என்னுடைய உடல் பயன்படும் என லி ஹு என்ற பெண் செவிலியர் தெரிவித்தார்.  அவர் 1995க்கு பின் பிறந்தவர்.

95 க்கு பின் பிறந்த காவல் அதிகாரியான யாங் குயுச்செங். தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.  பல நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரச் செல்லும்போது நாய்களை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. சில காவலர்கள் நாய் கடிக்கு ஆளானார்கள். நோயாளிகளுக்கு ஏற்படும் அச்சத்தை போக்குவதுடன் அவர்களுடன் நிதானமாக உரையாடியே மருத்துவமனைகளுக்கு அழைத்துவர வேண்டும் என்கிறார் அவர். இந்தப் போராட்டத்தின் போக்கில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். 

வாகனங்களை பரிசோதிக்கும் பணியில் ஈட்டுபட்ட்டவர் சோவ் போஜியான். “தியாஞ்சின் பகுதியை கடந்த ஒவ்வொரு ஓட்டுனரையும் பரிசோதித்தேன். அவருடைய உடல்நலனை விசாரித்து பதிவு செய்தேன். கைகள் குளிரில் உறைந்தன. எனினும் ஒருவரைக் கூட விசாரிக்காமல் விடவில்லை.” என்கிறார் அவர். 

கூட்டுறவு மற்றும் பகிர்மான அலுவலகத்தின் பணியாளரான லியூ போ, 40 நாட்கள் முன்னணி பணிகளை மேற்கொண்டார். தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி வழங்குவது அவருடைய பணி. 10 விதமான பொருட்களை தினமும் 550 செட்டுகள் வாங்கி அவற்றை தனிமைப்படுத்தல் அறைகளில் வைக்க வேண்டும். 40 நாட்கள் இடைவெளியில்லாமல் செய்து முடித்துள்ளார் அந்த இளைஞர். 

இவ்வாறு கொரோனா நோய் தடுப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியை சீனா சாதித்திருக்கிறது. ஒருங்கிணைந்த விரைவான செயல்பாடுகளே அவர்களை காத்துள்ளன.  

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து சொந்த மக்களை பாதுகாப்பதில் அரசாங்கங்கள், பெரு நிறுவனங்கள், உள்ளூர் சமூகம் மற்றும் ஊடகங்களுடைய செயல்பாடுகளை பற்றிய ஆய்வினை சிங்கப்பூரின் இரண்டு முன்னணி ஆய்வு நிறுவனங்கள் நடத்தினார்கள். (Singapore’s leading social research agency Blackbox Research and technology company Toluna) 23 நாடுகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் முதல் இடத்தினை சீனமும், இரண்டாம் இடத்தை வியட்நாமும் பிடித்திருந்தன. ஏகாதிபத்திய நாடுகள் இந்த பட்டியலில் 50 புள்ளிகளைக் கூட பெற முடியாமல் பின் தங்கியிருக்கிறார்கள்.

சில படிப்பினைகள்:

அவசரகாலத்தில் முடிவுகளை உள்ளூர் அளவிலேயே மேற்கொள்வதற்கு உதவி செய்யும் வகையில் சட்ட திருத்தம் விவாதிக்கப்பட்டுவருகிறது.  உயர்மட்ட நிர்வாகங்களின் முடிவுகளுக்காக காத்திருந்து அதனால் கால விரையமாதல் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு மற்றும் நிர்வாக முடிவுகளை மேற்கொள்வதன் சிரமங்களை பரிசீலித்து இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள்.

மேலும்பொது சுகாதாரம் மற்றும் காப்பீட்டுக்கான சட்டங்களின் செய்ய வேண்டிய திருத்தங்களை அவர்கள் விவாதிக்கிறார்கள், உயிரி பாதுகாப்பு என்பதை தேச பாதுகாப்பின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துள்ளார்கள். வன உயிரிகளை பாதுகாப்பது மற்றும் கழிவுகளை மேலாண்மை செய்யும் வழிமுறைகளை சீர்திருத்துவது மற்றும் நவீனப்படுத்துவது என்பதாக அவர்களின் அடுத்தகட்ட திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை முறையை வளர்த்தெடுப்பதற்கான ஆய்வுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மீண்டும் தொற்று பரவல் எங்கிருந்து வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மட்டுமே இந்த போராட்டத்தில் முடிவான ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். 

பொருளாதார தாக்கம் குறித்து:

பொது சுகாதாரத்திற்கும், உற்பத்திக்கும் இடையிலான இயக்கவியல் உறவினை புரிந்து கொண்டவர்கள் மார்க்சியவாதிகள். உற்பத்தியில் தற்காலிக முடக்கம் இருக்கும் என்பதை அறிந்தே அவர்கள் செயல்பட்டார்கள். உலக முதலாளித்துவ நாடுகள் பலவற்றிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதிக்கும் முன்பே பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அது நோய் பரவலில் கேடான விளைவுகளை ஏற்படுத்தியது. சீனாவை பொருத்தமட்டில் தற்காலிக முடக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டிருப்பது சோசலிச கட்டமைப்பால் கிடைத்த பெரும் நன்மை ஆகும்.

இருவகையான பொருளாதார திட்டங்கள் தேவைப்படுகின்றன. முதலாவது ஊரடங்கு காலத்தில் மக்களின் உயிர் காக்கவும், வருமான இழப்பை ஈடுகட்டவும் செய்யவேண்டிய உதவிகள். இரண்டாவது ஊரடங்கு முடிந்த பிறகாக தேவைப்படுகிற பொருளாதார நடவடிக்கைகள்.

ஊரடங்கு காலத்தில் வேலையில்லாக்கால நிவாரணம் கோரி விண்ணப்பிப்போருக்கு 6 மாதங்களுக்கு ஊதிய காப்பீடு மற்றும் கூடுதலாக விலைவாசி மானியம் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. 13 லட்சம் நிறுவனங்கள் இக்காலத்தில் வேலையில்லாக்கால இன்சூரன்ஸ் தொகை பெற்றுள்ளன. அவற்றில் பணியாற்றும் 4கோடியே 20 லட்சம் தொழிலாளர்கள் உதவிபெற்றுள்ளார்கள். 

தற்காலிக உதவிக்காக விண்ணப்பிப்போருக்கு தற்காலிக உதவி அறிவிக்கப்பட்டது அவர்களுக்காக 24 மணி நேர தொலைபேசி அழைப்பு அறிவித்து அதன் மூலம் உதவியை கொண்டு சேர்த்தார்கள். குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தாருக்கு பண உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு நிதியமைச்சகத்தின் சமூக பாதுகாப்புத் துறையின் சார்பில் 15 ஆயிரத்து 600 கோடி யுவான்கள் (ரூபாயில் 1 லட்சத்து 66 ஆயிரம் கோடிகள்) ஒதுக்கப்பட்டதாக அந்த துறையின் துணை இயக்குனர் வாங் ஜிக்ஜியாங் தெரிவிக்கிறார்.  இது சீனாவின் மத்திய அரசு ஒதுக்கிய தொகையாகும். மாகாணங்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப அவர்கள் பங்கும் சேர்த்து உதவிகள் தரப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சி நிர்வாகங்களும் மக்களுக்கு நேரடி நிதி உதவி செய்கிறார்கள். உதாரணமாக மே மாதத்தில் குவாங்க்டாங் மாகாணத்தில் பைஷலோங் என்ற கிராம கமிட்டி தனது கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் தலா ஆயிரம் யுவான்கள் (குழந்தைகள், சிறுவர்கள் உட்பட)  வழங்குவதாக அறிவித்தது. விவசாய வேலைகள் முடங்கியுள்ளதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஊரடங்கு முடிந்த பிறகு மக்கள் கடைவீதிகளுக்கு செல்வதற்காக சிறப்பு கூப்பன்களை உள்ளூர் நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றனர். 

நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான செலவு தவிர உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடியும், மானியக் கடனும் தரப்பட்டது. சிறு, குறுந்தொழில்கள் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. 

பொருளாதார மீட்சிக்கான நீண்ட கால திட்டங்கள்:

2008 ஆம் ஆண்டு எதிர்கொண்ட உலக பொருளாதார நெருக்கடியை விடவும் பெரிய பாதிப்பை இப்போது எதிர்கொள்ள நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இக்காலத்தில் (2020 ஜனவரி மற்றும் பிப்ரவரி) சீனாவின் தொழில்துறை உற்பத்தியானது  13.5 சதவீதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் சில்லறை வணிகம் 20.5 சதவீதம் குறைந்திருந்தது. இவையெல்லாம் கடுமையாக விளைவுகளே ஆகும்.

ஏப்ரல் மாத கடைசியில் சீனாவின் வேலையின்மை விகிதம் 20.5% ஆக இருக்கலாம் என ஜோங்டான் செக்யூரிட்டீஸ் என்ற தரகு நிறுவனம் தெரிவிக்கிறது. அவர்கள் எதிர்பார்ப்பின்படி 7 கோடிப்பேர் வேலையில்லாமல் இருக்கலாம் என்கிறார்கள். 

வேலையின்மையை எதிர்கொள்வதை தனது அவசர அவசியமுள்ள நடவடிக்கையாக சீனா எடுத்துக் கொண்டுள்ளது. முக்கிய தொழில்துறைகளில் 10 ஆயிரம் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் முக்கிய நிறுவனங்களில் 4 லட்சம் தொழிலாளர் பணியிடங்களுக்கான தேவை கண்டறியப்பட்டு தொழிலாளர்களை அமர்த்த முன்கை எடுத்திருக்கிறார்கள். 

முதலாளித்துவ நாடுகளின் திறனுள்ள தொழிலாளர்கள் பசியிலும் வேதனையிலும் அச்சத்திலும் செய்வதறியாது திகைக்கிறார்கள். இது உற்பத்தியை மீட்டமைப்பதில் சிக்கலான விளைவுகளை ஏற்படுத்து.

சீன அரசானது இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு பாதுகாப்பாக திரும்புவது முக்கியம். அதற்காக 1 லட்சத்து 92 ஆயிரம் சிறப்பு வாகனங்கள், 367 சிறப்பு ரயில்கள், 1462 கார்கள் மற்றும் 551 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதன் மூலம் 5.03 மில்லியன் தொழிலாளர்களை அவர்கள் பணியிடங்களுக்கு நேரடியாக சேர்க்கவிருக்கிறது.

ஏற்றுமதி வர்த்தகத்தை பொருத்தமட்டில் சீனாவின் எதிர்காலம் உலக சூழலை பொருத்தே அமையும். 

மே மாத இறுதியில் சீனாவின் ’இரண்டு பேரவைகள்’ கூடி விவாதிக்கவுள்ளன. கொரோனா நோய் பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அந்த நிகழ்வு எதிர்வரவுள்ள பொருளாதார சவால்களைக் குறித்து விவாதிக்கவிருக்கிறது. பொருளாதார முனையில் சீனாவின் போராட்டம் அதன் பிறகு தெளிவாகலாம். 

சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் என சீனாவின் ஏடுகள் தெரிவிக்கின்றன.

  • மக்களுக்கு பணம் சென்று சேரும் வகையிலான ஊக்கத்திட்டம் அறிவிக்கப்படும். (வேலையில்லாக்கால நிவாரணத்தை உயர்த்துதல் உள்ளிட்டு) 
  • கட்டமைப்பு திட்டங்களுக்கான ஊக்கத்தை கவனத்தில் கொண்ட நிதிச் செலவினங்கள் மேற்கொள்ளப்படும்.
  • சிறு குறுந்தொழில்களுக்கு சிறப்பு கடன்கள் வழங்கப்படும், அவர்களின் வரிகள் தள்ளுபடி செய்யப்படும்.
  • ஒவ்வொரு உள்ளூர் அரசு நிர்வாகமும் தங்கள் சூழலுக்கு ஏற்ற முடிவுகளை மேற்கொள்வதற்கான சுதந்திரம் உள்ளது. (இது பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் முதலாளித்துவ அணுகுமுறைக்கு நேர்மாறானதாகும்)
  • உற்பத்தி பழைய நிலைமைக்கு திரும்பியவுடன் வழங்கல் தொடர்பும் சீராக்கப்படும்.
  • தனது சந்தையை உலகிற்கு திறப்பது மற்றும் உள்நாட்டு சந்தை சார்ந்த சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொள்ளும்.
  • பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தின் முதன்மை நோக்கம் வேலைவாய்ப்பை மீட்டமைப்பதாகவும், ஏழை மக்களை பாதுகாப்பதாகவும் இருக்கும்.

முதலாளித்துவ ஊடகங்கள் இந்தியாவைப் போலவே சீனாவிலும் தொழிலாளர்கள் நலத்திட்டங்களை வெட்டுமாறு ஆலோசனைகள் வைக்காமல் இல்லை. முதலாளிகள் தொழிலாளர்களுக்கு தரும் சம்பளம் அல்லாது 30 சதவீத தொகையை நலத்திட்டங்களுக்கு செலுத்த வேண்டும். ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வேலையில்லாக் கால காப்பீடு, பணிக்கால விபத்துக் காப்பீடு மற்றும் பேறுகால காப்பீட்டு தொகைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது முதலாளித்துவ அறிஞர்களின் எதிர்பார்ப்பாகும். பொருளாதார தளத்தில் எழக்கூடிய சவால்களை அந்த நாடு எப்படி எதிர்கொள்ளவுள்ளது என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.

இந்த நெருக்கடிகளை சமாளித்துக் கொண்டே வறுமை ஒழிப்பு இலக்கை நோக்கியும் சீனா நடைபோடத் தொடங்கியுள்ளது. உலகம் நிர்ணயித்திருக்கும் வறுமைக்கோட்டு அளவுகோலுக்கு கீழே ஒருவரும் வாழாத நாடாக சீனத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது அந்த கட்சி வகுத்துக்கொண்ட மிக முக்கியமான இலக்கு. வைரசை எதிர்கொள்வதில் கிடைத்த வெற்றியைப் போலவே இதிலும் வெல்வோம் என்கிறார்கள்.

வறுமையும், நோயும் மனித குலத்தின் பொது எதிரி. இவைகளுக்கு எதிரான போராட்டத்தில் சோசலிசமே உற்ற துணையாகும் என்பதை சீனா எடுத்துக் காட்டட்டும்.

கொரோனா தொற்றும் மைய அரசின் பொருளாதார அணுகுமுறையும்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கொரோனா தொற்று கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றின் பாதிப்பு மட்டுமின்றி, திட்டமற்ற, முன்பின் முரணான, மைய அரசின் அணுகுமுறை மிகவும் அதிகமான அளவில் மக்களை குழப்பியுள்ளது; அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பகுதி உழைப்பாளி மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, 4 மணி நேர அவகாசம்கூட தராமல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அமலாக்கியது கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகளை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், சிறு-குறு தொழில் முனைவோர், தினக்கூலி அடிப்படையில் சகல துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளிகள், முறைசார் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் சாதாரண உழைப்பாளி மக்கள் என்று மொத்த உழைப்புப் படையில் 80%க்கும் அதிகமானவர்கள் பணியிழந்து, ஊதியம் இழந்து, கடினமான சூழலை சந்தித்து வருகின்றனர். ஒரே காலத்தில், தொற்றுசார்ந்த சுகாதார சவாலையும், வாழ்வாதாரம் சார்ந்த பொருளாதார சவாலையும் பெரும்பகுதி மக்கள் இன்று எதிர்கொண்டு போராட வேண்டியுள்ளது. இதோடு மைய அரசின் தவறான கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் எதிர்த்தும் போராட வேண்டியுள்ளது.

மையஅரசின்பொருளாதாரஅணுகுமுறை

கொரோனா தொற்று காலத்தில் மிகப் பெரிய பாதிப்பை முதலில் எதிர் கொண்டவர்கள் புலம்பெயர் தொழிலாளிகள். உணவிற்கும் உறைவிடத்திற்கும் எந்த ஏற்பாடுமின்றி கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எப்படியாவது சென்றாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, இதற்கான பொது போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் நடந்தே செல்வது என முடிவெடுத்து தங்கள் உயிர்களையே பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டது. 

ஆலைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டதால் பெரும்பகுதி உழைப்பாளி மக்கள் வாழ்வு நிலைகுலைந்தது. அண்மையில் சிஎம் ஐ இ (CMIE) ஆய்வு நிறுவனம் ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள தகவல்படி நாட்டு அடங்கு நடவடிக்கைகளின் விளைவாக சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்த இடங்களில் நாட்டு அடங்கின் காரணமாக அவற்றை விற்க இயலாமல் தவிக்கின்றனர். சாகுபடி வேலைகளை செய்வதும் கடினமாகியுள்ளது. அழியும் பயிர்களை அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், முற்றிலும் கோளாறான ஜிஎஸ்டி கொள்கை அமலாக்கமும் சிறுகுறு தொழில் முனைவோரையும் வணிகர்களையும், பொதுவாக ஒட்டுமொத்தமாக முறைசாரா துறைகளையும் பலவீனப்படுத்தியிருந்த நிலையில் நாட்டு அடங்கு இப்பகுதியினரை மேலும் படுகுழியில் தள்ளியுள்ளது.

இத்தகைய சூழலில் இதுவரை மைய அரசு முன்வைத்துள்ள பொருளாதார நிவாரணம் என்பது தேச உற்பத்தி மதிப்பில் 0.5% என்ற அளவில்தான் உள்ளது. நிதி அமைச்சர் அறிவித்த 1.7 லட்சம் கோடி ரூபாய் நிவாரண தொகுப்பில் பல ஒதுக்கீடுகள் ஏற்கெனவே மத்திய பட்ஜட்டில் இடம்பெற்றவையே. நிகரமாக பார்த்தால், நிவாரணத் தொகுப்பின் மொத்த மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் கூட இருக்காது.  மருத்துவமனைகளை மேம்படுத்தவும் ஆரோக்கியம் சார்ந்த இதர செலவுகளுக்கும் என்று நாடு முழுவதற்குமாக பிரதமர் அறிவித்த ரூ. 15,000 கோடி என்பது மிகவும் குறைவானது; பொருத்தமற்றது என்பதுடன் அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கான செலவுக்கு என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒரு விமர்சகர் கூறியதுபோல், மைய அரசு ஒருபுறம் மக்களை அடிக்கடி கைகழுவச் சொல்லிவிட்டு, மறுபுறம் மக்களை கைகழுவி விட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. மார்ச் 14 மற்றும் மே 5 ஆகிய இரு தினங்களில் பெட்ரோல், டீசல் மீதான புதிய சிறப்பு கூடுதல் கலால் வரிகள் மற்றும் ரோடு செஸ் விதித்து சுமார் ரூ. 2 லட்சம் கோடி மக்களிடம் இருந்து மைய அரசு அபகரித்துள்ளது. அரசு அறிவித்த நிகர நிவாரணத்தைபோல் இரு மடங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மந்தநிலையில்பொருளாதாரம்

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் சரிந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். தேச உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் மைய அரசின் 2020-21 நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்பொழுதே அரசின் மிகையான கணக்குப்படியே கூட ஆண்டுக்கு 4.5% என்ற நிலையில்தான் இருந்தது. உண்மை அளவில் இதை 2.5% என்று கொள்ளலாம். ஆனால் பிரச்சினை வளர்ச்சி விகிதக் கணக்கு பற்றி மட்டுமல்ல. மூன்று முக்கிய பிரச்சினைகளை அன்றும் இன்றும் நாடு எதிர்கொள்கிறது.

ஒன்று, பல ஆண்டுகளாக தொடரும் கடுமையான வேளாண் நெருக்கடி. மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டது மட்டுமின்றி அரசின் ஆதரவு மறுக்கப்பட்டு அதன் தாராளமய கொள்கைகளால் ஏழை, நடுத்தர விவசாயிகளும், இதர உடல் உழைப்பு தொழிலாளிகளும் நிலமும் வருமானமும் இழந்து வருவது தீவிரமாகியுள்ளது. பன்னாட்டு, இந்நாட்டு பெரும் வணிக நிறுவனங்களின் செல்வாக்கு வேளாண்துறையில் பெருகியுள்ளது. பயிர் சாகுபடி பெரும்பகுதி விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத தொழிலாகியுள்ளது.

இரண்டாவது, பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துள்ள வேலையின்மை விகிதம். 2011-12 இல் இருந்து 2017-18 வரையிலான காலத்தில் வேலையின்மை விகிதம் மூன்று மடங்கு ஆனது. இளம் வயதினர் (வயது 15 – 29 ஆண்டுகள்) மற்றும் படித்தவர்கள் (12 வகுப்புகளும் அதற்கு மேலும்) மத்தியில் இது 20%ஐ நெருங்கியது. இந்த விவரங்களை கொண்ட தேசீய புள்ளியியல் ஆணையத்தின் அறிக்கையை 2019 தேர்தலுக்கு முன்பாக வெளிவராமல் பார்த்துக் கொண்டது மோடி அரசு. இன்று நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

மூன்றாவது, 2011-12 மற்றும் 2017-18 ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது, கிராமப்புறங்களில் குடும்பங்களின் மாதாந்திர சராசரி தலா நுகர்வுசெலவு 8.8% குறைந்துள்ளது. நகரப் பகுதிகளில் 2.2% என்ற அளவிற்கு சிறு அதிகரிப்பு இருந்தாலும், அங்கும் குறைந்தபட்சம் சரிபாதி குடும்பங்களுக்கு சரிவே ஏற்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள ஆறு ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 6%, 7%, 8% அதிகரித்ததாக எல்லாம் அரசு கணக்கு கூறினாலும், நிகழ்ந்த வளர்ச்சி பெரும்பகுதி மக்களை சென்றடையவில்லை என்பது தெளிவாகிறது. 

மேலே கூறப்பட்டுள்ள மூன்று அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கொரோனா தொற்று கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றின் பாதிப்பு மட்டுமின்றி, திட்டமற்ற, முன்பின் முரணான, மைய அரசின் அணுகுமுறை மிகவும் அதிகமான அளவில் மக்களை குழப்பியுள்ளது; அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பகுதி உழைப்பாளி மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, 4 மணி நேர அவகாசம்கூட தராமல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அமலாக்கியது கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகளை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், சிறு-குறு தொழில் முனைவோர், தினக்கூலி அடிப்படையில் சகல துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளிகள், முறைசார் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் சாதாரண உழைப்பாளி மக்கள் என்று மொத்த உழைப்புப் படையில் 80%க்கும் அதிகமானவர்கள் பணியிழந்து, ஊதியம் இழந்து, கடினமான சூழலை சந்தித்து வருகின்றனர். ஒரே காலத்தில், தொற்றுசார்ந்த சுகாதார சவாலையும், வாழ்வாதாரம் சார்ந்த பொருளாதார சவாலையும் பெரும்பகுதி மக்கள் இன்று எதிர்கொண்டு போராட வேண்டியுள்ளது. இதோடு மைய அரசின் தவறான கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் எதிர்த்தும் போராட வேண்டியுள்ளது.

மையஅரசின்பொருளாதாரஅணுகுமுறை

கொரோனா தொற்று காலத்தில் மிகப் பெரிய பாதிப்பை முதலில் எதிர் கொண்டவர்கள் புலம்பெயர் தொழிலாளிகள். உணவிற்கும் உறைவிடத்திற்கும் எந்த ஏற்பாடுமின்றி கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எப்படியாவது சென்றாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, இதற்கான பொது போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் நடந்தே செல்வது என முடிவெடுத்து தங்கள் உயிர்களையே பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டது. 

ஆலைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டதால் பெரும்பகுதி உழைப்பாளி மக்கள் வாழ்வு நிலைகுலைந்தது. அண்மையில் சிஎம் ஐ இ (CMIE) ஆய்வு நிறுவனம் ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள தகவல்படி நாட்டு அடங்கு நடவடிக்கைகளின் விளைவாக சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்த இடங்களில் நாட்டு அடங்கின் காரணமாக அவற்றை விற்க இயலாமல் தவிக்கின்றனர். சாகுபடி வேலைகளை செய்வதும் கடினமாகியுள்ளது. அழியும் பயிர்களை அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், முற்றிலும் கோளாறான ஜிஎஸ்டி கொள்கை அமலாக்கமும் சிறுகுறு தொழில் முனைவோரையும் வணிகர்களையும், பொதுவாக ஒட்டுமொத்தமாக முறைசாரா துறைகளையும் பலவீனப்படுத்தியிருந்த நிலையில் நாட்டு அடங்கு இப்பகுதியினரை மேலும் படுகுழியில் தள்ளியுள்ளது.

இத்தகைய சூழலில் இதுவரை மைய அரசு முன்வைத்துள்ள பொருளாதார நிவாரணம் என்பது தேச உற்பத்தி மதிப்பில் 0.5% என்ற அளவில்தான் உள்ளது. நிதி அமைச்சர் அறிவித்த 1.7 லட்சம் கோடி ரூபாய் நிவாரண தொகுப்பில் பல ஒதுக்கீடுகள் ஏற்கெனவே மத்திய பட்ஜட்டில் இடம்பெற்றவையே. நிகரமாக பார்த்தால், நிவாரணத் தொகுப்பின் மொத்த மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் கூட இருக்காது.  மருத்துவமனைகளை மேம்படுத்தவும் ஆரோக்கியம் சார்ந்த இதர செலவுகளுக்கும் என்று நாடு முழுவதற்குமாக பிரதமர் அறிவித்த ரூ. 15,000 கோடி என்பது மிகவும் குறைவானது; பொருத்தமற்றது என்பதுடன் அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கான செலவுக்கு என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒரு விமர்சகர் கூறியதுபோல், மைய அரசு ஒருபுறம் மக்களை அடிக்கடி கைகழுவச் சொல்லிவிட்டு, மறுபுறம் மக்களை கைகழுவி விட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. மார்ச் 14 மற்றும் மே 5 ஆகிய இரு தினங்களில் பெட்ரோல், டீசல் மீதான புதிய சிறப்பு கூடுதல் கலால் வரிகள் மற்றும் ரோடு செஸ் விதித்து சுமார் ரூ. 2 லட்சம் கோடி மக்களிடம் இருந்து மைய அரசு அபகரித்துள்ளது. அரசு அறிவித்த நிகர நிவாரணத்தைபோல் இரு மடங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மந்தநிலையில்பொருளாதாரம்

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் சரிந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். தேச உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் மைய அரசின் 2020-21 நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்பொழுதே அரசின் மிகையான கணக்குப்படியே கூட ஆண்டுக்கு 4.5% என்ற நிலையில்தான் இருந்தது. உண்மை அளவில் இதை 2.5% என்று கொள்ளலாம். ஆனால் பிரச்சினை வளர்ச்சி விகிதக் கணக்கு பற்றி மட்டுமல்ல. மூன்று முக்கிய பிரச்சினைகளை அன்றும் இன்றும் நாடு எதிர்கொள்கிறது.

ஒன்று, பல ஆண்டுகளாக தொடரும் கடுமையான வேளாண் நெருக்கடி. மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டது மட்டுமின்றி அரசின் ஆதரவு மறுக்கப்பட்டு அதன் தாராளமய கொள்கைகளால் ஏழை, நடுத்தர விவசாயிகளும், இதர உடல் உழைப்பு தொழிலாளிகளும் நிலமும் வருமானமும் இழந்து வருவது தீவிரமாகியுள்ளது. பன்னாட்டு, இந்நாட்டு பெரும் வணிக நிறுவனங்களின் செல்வாக்கு வேளாண்துறையில் பெருகியுள்ளது. பயிர் சாகுபடி பெரும்பகுதி விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத தொழிலாகியுள்ளது.

இரண்டாவது, பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துள்ள வேலையின்மை விகிதம். 2011-12 இல் இருந்து 2017-18 வரையிலான காலத்தில் வேலையின்மை விகிதம் மூன்று மடங்கு ஆனது. இளம் வயதினர் (வயது 15 – 29 ஆண்டுகள்) மற்றும் படித்தவர்கள் (12 வகுப்புகளும் அதற்கு மேலும்) மத்தியில் இது 20%ஐ நெருங்கியது. இந்த விவரங்களை கொண்ட தேசீய புள்ளியியல் ஆணையத்தின் அறிக்கையை 2019 தேர்தலுக்கு முன்பாக வெளிவராமல் பார்த்துக் கொண்டது மோடி அரசு. இன்று நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

மூன்றாவது, 2011-12 மற்றும் 2017-18 ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது, கிராமப்புறங்களில் குடும்பங்களின் மாதாந்திர சராசரி தலா நுகர்வுசெலவு 8.8% குறைந்துள்ளது. நகரப் பகுதிகளில் 2.2% என்ற அளவிற்கு சிறு அதிகரிப்பு இருந்தாலும், அங்கும் குறைந்தபட்சம் சரிபாதி குடும்பங்களுக்கு சரிவே ஏற்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள ஆறு ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 6%, 7%, 8% அதிகரித்ததாக எல்லாம் அரசு கணக்கு கூறினாலும், நிகழ்ந்த வளர்ச்சி பெரும்பகுதி மக்களை சென்றடையவில்லை என்பது தெளிவாகிறது. 

மேலே கூறப்பட்டுள்ள மூன்று அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால் இந்தியாவின் கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரு ஆழமான கிராக்கி நெருக்கடி நிலவுகிறது என்பது தெளிவாகத் தெரியும். மைய அரசு இந்த நெருக்கடி இருப்பதாகவே இன்றுவரை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. மந்த நிலை பற்றி பெருமுதலாளிகள் பகிரங்கமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் -செப்டம்பர் மாதங்களில் பேசினர். அதன்பின் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக பல நடவடிக்கைகளை மைய அரசு மேற்கொண்டது. இவற்றின் மூலம் முதலாளிகளுக்கும் பங்குச்சந்தையில் ஊகவணிகம் செய்து லாபம் ஈட்டும் அன்னிய நிதிமூலதனங்களுக்கும் ஏற்றுமதி ஊக்குவிப்பு என்ற பெயரிலும் வேறுவகைகளிலும் பிப்ரவரி மாத பட்ஜட்டுக்கு முன்பாகவே ரூ. 2.25 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளை மைய அரசு வாரி வழங்கியது.

மேலும் 2020-2021 பட்ஜட்டில் சுமார் ரூ. 65,000 கோடி அளவிற்கு செல்வந்தர்களுக்கு வருமான வரிச்சலுகைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடியை செல்வந்தர்களுக்கு தூக்கிக் கொடுத்துவிட்டதால் அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுகட்டவும் அரசின் பற்றாக்குறையை குறைக்கவும் ரூ. 2.10 லட்சம் கோடி அளவிற்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக அரசு பட்ஜட்டில் அறிவித்தது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை வெட்டிச் சாய்த்தது.

இதற்கு இரண்டு உதாரணங்கள் போதும்: ரேகா திட்ட ஒதுக்கீடு சென்ற ஆண்டு (2019-20) ரூ.71,000 கோடி, நடப்பு ஆண்டில் ஒதுக்கீடு ரூ 61,500 கோடி தான். உணவு மானியம் ரூ. 75,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், வரிச்சலுகைகள் பெற்ற பெரும் கம்பனிகள் முதலீடுகளை முன்னெடுக்கவில்லை. கிராக்கி சரிந்துள்ள நிலையில் முதலீடுகள் நிகழவில்லை. மந்த நிலையும் தீவிரமடைந்தது. அரசின் வருமானமும் சரிந்தது. உலக நாடுகளில் பலவும் – குறிப்பாக முன்னணி முதலாளித்துவ நாடுகளும் – கொரோனாவின் கடும்தாக்குதலுக்கு உள்ளாகி, ஏற்கெனவே மந்தத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பன்னாட்டு பொருளாதாரமும் வரும் ஆண்டில் பெரும் சரிவை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.

இத்தகைய  சூழலில்தான் கொரொனா தொற்றை நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பிற பல நாடுகளின் அரசுகள் கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்ள நாட்டடங்கு அமல்படுத்துவதால் ஏற்படும் வாழ்வாதார பிரச்சினைகளை சமாளிக்க நிவாரணமாகவும் பொருளாதார மீட்சிக்காகவும் அவரவர் தேச உற்பத்தி மதிப்பில் 10% க்கு குறையாமல் பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் இந்திய அரசு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுகிறது. முன்பு நாம் குறிப்பிட்ட தேசஉற்பத்தி மதிப்பில் வெறும் 0.5% என்ற அளவிலான நிவாரணம் தவிர எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. மாறாக, கலால் வரிகளை உயர்த்தி கூடுதல் வரிச்சுமையை மக்கள்மீது திணித்துள்ளது. இவற்றிற்கு மத்தியில், நாட்டு அடங்கை முடிவுக்கு கொண்டுவந்து ஆலைகளையும் அலுவலகங்களையும் திறக்க முதலாளிகள் தரப்பிலிருந்து தொடர் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. பல வாரங்கள் உற்பத்தி தடைப்பட்டதால் ஆலைகளையும் அலுவலகங்களையும் திறப்பது மட்டுமின்றி, திறந்த பின் தொழிலாளர்கள் இழந்த வேலைநாட்களை ஈடுசெய்யும் வகையில் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும், சில ஆண்டுகளுக்கு தொழிலாளர் உரிமை சட்டங்களை அமல்படுத்த வேண்டாம் என்ற தொனியிலும், முதலாளி வர்க்கம் தனது ஊடக ஊதுகுழல்கள் மூலம் உரக்கப் பேசுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப்பிரதேசம், உத்திரப் பிரதேசம், கர்னாடகா மற்றும் குஜராத் ஆகியவற்றில் இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் அமலாக உள்ளன. கொரோனா பெரும் தொற்று காலத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஆளும் வர்க்கம் களம் இறங்கியுள்ளது. படிப்படியாக நாட்டுஅடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில் நாம் இதனை கணக்கில் கொள்ள வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

உடனடியாகவும் தொடர்ந்தும் பொருத்தமான சில கோரிக்கைகளின் அடிப்படையில் நாம் மக்களை திரட்ட வேண்டியுள்ளது. கருத்து ரீதியாகவும் களப்பணியாகவும் நாம் இதனை செய்ய வேண்டும். கீழ்காணும் ஆலோசனைகள்/ கோரிக்கைகள் பரிசீலிக்கத்தக்கவை:

உடனடிக் கோரிக்கைகள்

  • அனைத்து புலம்பெயர் தொழிலாளிகளுக்கும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் அவரவர் சொந்த ஊருக்கு மைய அரசு செலவில் பாதுகாப்பாக பயணிக்க உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
  • கிட்டத்தட்ட எண்பது சதவீத குடும்பங்களுக்கு உடனடியாக மைய அரசு ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 7500 என்ற அடிப்படையில் மூன்று மாதம்  நிவாரணத்தொகை வழங்கவேண்டும்.
  • இக்குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ தானியம் ஆறு மாத காலத்திற்கு விலையின்றி வழங்க வேண்டும். அரசு கணக்குப்படி கிட்டத்தட்ட 7.5 கோடி டன் தானியம் இந்திய உணவு கார்ப்பரேஷனின் கிடங்குகளில் உள்ளது. குளிர்கால பயிர் அறுவடை முடிந்துவரும் நிலையில், மேலும் 4 கோடி டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. எனவே விலையில்லா தானியம் கொடுப்பது சாத்தியமே. தானியம் மட்டுமின்றி பொருத்தமான அளவு பருப்பு, சமையலுக்கான எண்ணெய் போன்ற இதர அத்தியாவசிய மளிகை பொருட்களும் தரப்பட வேண்டும்.
  • சமைத்து உண்ண இயலாதவர்களுக்கு மதிய உணவு திட்ட வசதிகளை பயன்படுத்தி சமைத்த உணவு அளிக்கப்படலாம்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தேச உற்பத்தி மதிப்பில் 3% என்ற அளவில்தான் செலவு ஆகும். இதற்கான வளங்களை பின்னர் பெரும் செல்வந்தர்கள் மீது வரிகள் விதிப்பதன் மூலம் திரட்ட இயலும். எனினும் உடனடி சூழலில் ரிசர்வ் வங்கி மைய அரசுக்கு இத்தொகையை கடனாக வழங்க வேண்டும். இன்றைய நாட்டு அடங்கு சூழலிலும் மந்த கிராக்கி நிலையிலும் இதனால் பணவீக்கம் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. மேலும் ரிசர்வ் வங்கியிடம் ஏறத்தாழ 50,000 கோடி அமெரிக்க டாலர்கள் கையிருப்பு உள்ளதால் தேவை ஏற்பட்டால் அவசியமான இறக்குமதி மூலம் விலைஉயர்வை கட்டுப்படுத்த இயலும். ரொக்கத் தொகையும் தானியம் மற்றும் மளிகை பொருட்களும் மைய அரசால் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். மாநிலங்கள் பணம் மற்றும் பொருள் விநியோகத்தை உள்ளாட்சி ஜனநாயக அமைப்புகள் மூலம் இதை அமலாக்க வேண்டும்.

மாநில அரசுகளுக்கு தரவேண்டிய பாக்கிகளை – ஜிஎஸ்டி நட்டஈடு, ஜிஎஸ்டி பங்கு, நிதிஆணைய பரிந்துரைபடி மாநிலங்களுக்கு தரப்பட வேண்டியவை, இன்ன பிற – உடனடியாக மைய அரசு கொடுக்க வேண்டும். மிக முக்கியமாக, இக்காலத்தில், மைய அரசின் உதவி அதிகரித்தாலும், மாநில அரசுகள் அதிகமான செலவுகளை செய்ய வேண்டி இருப்பதால், அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடன் வரம்பை இரட்டிப்பாக்க வேண்டும். மேலும் ரிசர்வ் வங்கி நேரடியாக மாநில அரசுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்க வேண்டும். இதற்கான விதிமுறை மாற்றங்களை மைய அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும்.

கொரோனா பெரும்தொற்றை எதிர்கொள்ள பொதுத்துறையில் உள்ள மருத்துவ வசதிகள் மட்டும் போதாது என்ற நிலையில் உடனடியாக பல்வேறு அரசு மானியங்களை அனுபவித்துவரும் தனியார் மருத்துவமனைகள அரசு குறிப்பிட்ட காலத்திற்காவது கையகப்படுத்தி பயன்படுத்த வேண்டும். இம்மருத்துவமனைகளில் பணிபுரிவோரின் ஊதியங்களை அவற்றைப் பயன்படுத்தும் காலப்பகுதி வரையில் அரசு கொடுக்கலாம். விரிவான அளவில் தொற்று அறியும் சோதனைகளை செய்வதற்கும் இது அவசியம்.

இவ்வாறு மைய அரசு கூடுதல் செலவுகளை ஏற்கும்பொழுது அதன் பற்றாக்குறை கணிசமாக அதிகரிக்கும். இதனால் நிதிமூலதனம் நாட்டைவிட்டு பிற நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். இத்தகைய சூழலில், மூலதனம் நாட்டைவிட்டு வெளியேறுவது என்ற நடவடிக்கைமீது வலுவான கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். மேலும் ஐ எம் எஃப் அமைப்பில் அனைத்து நாடுகளுக்கும் கூடுதல் சிறப்புபணம் பெரும் உரிமைகளை (Special Drawing Rights or SDRs) அளித்திட பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை இந்திய அரசு வலுவாக ஆதரிக்க வேண்டும்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்

மேற்கூறிய நடவடிக்கைகள் நிவாரணம் அளிக்கும் தன்மையில்தான் உள்ளன. அடுத்தகட்டமாக உற்பத்தி மீட்பையும் மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, விவசாயிகள், சிறு-குறு தொழில் முனைவோர், நகர, கிராம கூலி தொழிலாளர்கள் ஆகிய பகுதியினரின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். இதில் முக்கிய அம்சங்கள் ஐந்து: மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதி திட்டம் (ரேகா); சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு; புலம்பெயர் தொழிலாளிகள் மீண்டும் பணிகளில் இணைவது; அத்தியாவசிய பண்டங்களின் அளிப்பை உறுதி செய்தல்; ஊரக பொருளாதார மீட்சி.

ரேகாவில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொழிலாளிகளின் சம்பள பாக்கியை கொடுப்பது, ஊர் திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளிகள் அனவருக்கும் வேலை அட்டை கேட்காமல் பணி கொடுப்பது, ஒவ்வொரு ஊரக குடும்பத்திற்கும் 100 நாள் வேலை என்பதற்கு பதில் உழைக்க முன்வரும் அனைத்து வயது வந்த குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 100 நாள் வேலை அளிப்பது, வேலை கொடுக்க இயலாத பட்சத்தில் வேலையின்மை உதவிதொகை ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். மேலும் நகரப் பகுதிகளுக்கும் ரேகா போன்ற திட்டம் கொண்டுவந்து இதன் மூலம் சிறு-குறு தொழில் முனைவோருக்கு உதவி செய்வது என்பதும் ஒரு முக்கிய கோரிக்கை.

சிறு-குறு தொழில்களுக்கு ஒரு ஆண்டு காலம் கடன் திருப்புதல் ஒத்திவைக்கப்பட வேண்டும். குறைந்த வட்டியில் அரசின் உத்தரவாத அடிப்படையில் தாராளமாக கடன் வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான ஒரு முறை கடன் ரத்து என்பதை அமலாக்க வேண்டும். பால் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையில் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளிகளில் மீண்டும் நகரங்களுக்கு சென்று பணிபுரிய முன்வருவோருக்கு உரிய ஊக்கம் அளிக்கப்பட வேண்டும்.

நீண்டகால நடவடிக்கைகள்

இந்திய நாட்டின் முதன்மையான சவால் வேளாண் பொருளாதாரத்தின் புரட்சிகர மாற்றம் ஆகும். இதற்கு அடிப்படை முழுமையான நிலச்சீர்திருத்தம். நிலஉச்சவரம்பு சட்டங்கள் கறாராக அமல் செய்யப்படுவதன் மூலம் கிடைக்கும் உபரி நிலங்களும் அரசு தரிசு நிலங்களும் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவது அவசியம். மேலும் பல ஆண்டுகளாக விவசாயத் துறையிலும் ஊரக கட்டமைப்பு துறைகளிலும் அரசு முதலீடு குறைக்கப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் ஊரக கட்டமைப்பிற்கான அரசு முதலீடுகள் பன்மடங்கு உயர்த்தப்பட வேண்டும். பாசன விரிவாக்கம், வேளாண் ஆராய்ச்சி விரிவாக்கப் பணி அமைப்புகள் வலுப்படுத்துதல் உள்ளிட்டு பன்முக நடவடிக்கைகள் தேவை.

உள்நாட்டு சந்தையை மையப்படுத்தியதாக நமது வளர்ச்சி இருக்க வேண்டும். கட்டற்ற உலகமயம் ஏற்புடையதல்ல. வலுவான பொதுத்துறை, சுயச்சார்பு அடிப்படையிலான அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி, அரசின் வரிக் கொள்கைகளில் நேர்முக வரிகளின் பங்கை அதிகப்படுத்தும் முயற்சிகள், மத்திய மாநில நிதி உறவுகளில் ஜனநாயக தன்மையிலான மாற்றங்கள் ஆகியவையும் அவசியமான நீண்டகால நடவடிக்கைகள். சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு ஆகிய துறைகளில் கணிசமான பொதுமுதலீடுகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இவற்றின் மூலம் முதலாளிகளுக்கும் பங்குச்சந்தையில் ஊகவணிகம் செய்து லாபம் ஈட்டும் அன்னிய நிதிமூலதனங்களுக்கும் ஏற்றுமதி ஊக்குவிப்பு என்ற பெயரிலும் வேறுவகைகளிலும் பிப்ரவரி மாத பட்ஜட்டுக்கு முன்பாகவே ரூ. 2.25 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளை மைய அரசு வாரி வழங்கியது.

மேலும் 2020-2021 பட்ஜட்டில் சுமார் ரூ. 65,000 கோடி அளவிற்கு செல்வந்தர்களுக்கு வருமான வரிச்சலுகைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடியை செல்வந்தர்களுக்கு தூக்கிக் கொடுத்துவிட்டதால் அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுகட்டவும் அரசின் பற்றாக்குறையை குறைக்கவும் ரூ. 2.10 லட்சம் கோடி அளவிற்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக அரசு பட்ஜட்டில் அறிவித்தது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை வெட்டிச் சாய்த்தது.

இதற்கு இரண்டு உதாரணங்கள் போதும்: ரேகா திட்ட ஒதுக்கீடு சென்ற ஆண்டு (2019-20) ரூ.71,000 கோடி, நடப்பு ஆண்டில் ஒதுக்கீடு ரூ 61,500 கோடி தான். உணவு மானியம் ரூ. 75,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், வரிச்சலுகைகள் பெற்ற பெரும் கம்பனிகள் முதலீடுகளை முன்னெடுக்கவில்லை. கிராக்கி சரிந்துள்ள நிலையில் முதலீடுகள் நிகழவில்லை. மந்த நிலையும் தீவிரமடைந்தது. அரசின் வருமானமும் சரிந்தது. உலக நாடுகளில் பலவும் – குறிப்பாக முன்னணி முதலாளித்துவ நாடுகளும் – கொரோனாவின் கடும்தாக்குதலுக்கு உள்ளாகி, ஏற்கெனவே மந்தத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பன்னாட்டு பொருளாதாரமும் வரும் ஆண்டில் பெரும் சரிவை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.

இத்தகைய  சூழலில்தான் கொரொனா தொற்றை நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பிற பல நாடுகளின் அரசுகள் கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்ள நாட்டடங்கு அமல்படுத்துவதால் ஏற்படும் வாழ்வாதார பிரச்சினைகளை சமாளிக்க நிவாரணமாகவும் பொருளாதார மீட்சிக்காகவும் அவரவர் தேச உற்பத்தி மதிப்பில் 10% க்கு குறையாமல் பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் இந்திய அரசு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுகிறது. முன்பு நாம் குறிப்பிட்ட தேசஉற்பத்தி மதிப்பில் வெறும் 0.5% என்ற அளவிலான நிவாரணம் தவிர எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. மாறாக, கலால் வரிகளை உயர்த்தி கூடுதல் வரிச்சுமையை மக்கள்மீது திணித்துள்ளது. இவற்றிற்கு மத்தியில், நாட்டு அடங்கை முடிவுக்கு கொண்டுவந்து ஆலைகளையும் அலுவலகங்களையும் திறக்க முதலாளிகள் தரப்பிலிருந்து தொடர் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. பல வாரங்கள் உற்பத்தி தடைப்பட்டதால் ஆலைகளையும் அலுவலகங்களையும் திறப்பது மட்டுமின்றி, திறந்த பின் தொழிலாளர்கள் இழந்த வேலைநாட்களை ஈடுசெய்யும் வகையில் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும், சில ஆண்டுகளுக்கு தொழிலாளர் உரிமை சட்டங்களை அமல்படுத்த வேண்டாம் என்ற தொனியிலும், முதலாளி வர்க்கம் தனது ஊடக ஊதுகுழல்கள் மூலம் உரக்கப் பேசுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப்பிரதேசம், உத்திரப் பிரதேசம், கர்னாடகா மற்றும் குஜராத் ஆகியவற்றில் இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் அமலாக உள்ளன. கொரோனா பெரும் தொற்று காலத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஆளும் வர்க்கம் களம் இறங்கியுள்ளது. படிப்படியாக நாட்டுஅடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில் நாம் இதனை கணக்கில் கொள்ள வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

உடனடியாகவும் தொடர்ந்தும் பொருத்தமான சில கோரிக்கைகளின் அடிப்படையில் நாம் மக்களை திரட்ட வேண்டியுள்ளது. கருத்து ரீதியாகவும் களப்பணியாகவும் நாம் இதனை செய்ய வேண்டும். கீழ்காணும் ஆலோசனைகள்/ கோரிக்கைகள் பரிசீலிக்கத்தக்கவை:

உடனடிக் கோரிக்கைகள்

  • அனைத்து புலம்பெயர் தொழிலாளிகளுக்கும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் அவரவர் சொந்த ஊருக்கு மைய அரசு செலவில் பாதுகாப்பாக பயணிக்க உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
  • கிட்டத்தட்ட எண்பது சதவீத குடும்பங்களுக்கு உடனடியாக மைய அரசு ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 7500 என்ற அடிப்படையில் மூன்று மாதம்  நிவாரணத்தொகை வழங்கவேண்டும்.
  • இக்குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ தானியம் ஆறு மாத காலத்திற்கு விலையின்றி வழங்க வேண்டும். அரசு கணக்குப்படி கிட்டத்தட்ட 7.5 கோடி டன் தானியம் இந்திய உணவு கார்ப்பரேஷனின் கிடங்குகளில் உள்ளது. குளிர்கால பயிர் அறுவடை முடிந்துவரும் நிலையில், மேலும் 4 கோடி டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. எனவே விலையில்லா தானியம் கொடுப்பது சாத்தியமே. தானியம் மட்டுமின்றி பொருத்தமான அளவு பருப்பு, சமையலுக்கான எண்ணெய் போன்ற இதர அத்தியாவசிய மளிகை பொருட்களும் தரப்பட வேண்டும்.
  • சமைத்து உண்ண இயலாதவர்களுக்கு மதிய உணவு திட்ட வசதிகளை பயன்படுத்தி சமைத்த உணவு அளிக்கப்படலாம்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தேச உற்பத்தி மதிப்பில் 3% என்ற அளவில்தான் செலவு ஆகும். இதற்கான வளங்களை பின்னர் பெரும் செல்வந்தர்கள் மீது வரிகள் விதிப்பதன் மூலம் திரட்ட இயலும். எனினும் உடனடி சூழலில் ரிசர்வ் வங்கி மைய அரசுக்கு இத்தொகையை கடனாக வழங்க வேண்டும். இன்றைய நாட்டு அடங்கு சூழலிலும் மந்த கிராக்கி நிலையிலும் இதனால் பணவீக்கம் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. மேலும் ரிசர்வ் வங்கியிடம் ஏறத்தாழ 50,000 கோடி அமெரிக்க டாலர்கள் கையிருப்பு உள்ளதால் தேவை ஏற்பட்டால் அவசியமான இறக்குமதி மூலம் விலைஉயர்வை கட்டுப்படுத்த இயலும். ரொக்கத் தொகையும் தானியம் மற்றும் மளிகை பொருட்களும் மைய அரசால் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். மாநிலங்கள் பணம் மற்றும் பொருள் விநியோகத்தை உள்ளாட்சி ஜனநாயக அமைப்புகள் மூலம் இதை அமலாக்க வேண்டும்.

மாநில அரசுகளுக்கு தரவேண்டிய பாக்கிகளை – ஜிஎஸ்டி நட்டஈடு, ஜிஎஸ்டி பங்கு, நிதிஆணைய பரிந்துரைபடி மாநிலங்களுக்கு தரப்பட வேண்டியவை, இன்ன பிற – உடனடியாக மைய அரசு கொடுக்க வேண்டும். மிக முக்கியமாக, இக்காலத்தில், மைய அரசின் உதவி அதிகரித்தாலும், மாநில அரசுகள் அதிகமான செலவுகளை செய்ய வேண்டி இருப்பதால், அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடன் வரம்பை இரட்டிப்பாக்க வேண்டும். மேலும் ரிசர்வ் வங்கி நேரடியாக மாநில அரசுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்க வேண்டும். இதற்கான விதிமுறை மாற்றங்களை மைய அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும்.

கொரோனா பெரும்தொற்றை எதிர்கொள்ள பொதுத்துறையில் உள்ள மருத்துவ வசதிகள் மட்டும் போதாது என்ற நிலையில் உடனடியாக பல்வேறு அரசு மானியங்களை அனுபவித்துவரும் தனியார் மருத்துவமனைகள அரசு குறிப்பிட்ட காலத்திற்காவது கையகப்படுத்தி பயன்படுத்த வேண்டும். இம்மருத்துவமனைகளில் பணிபுரிவோரின் ஊதியங்களை அவற்றைப் பயன்படுத்தும் காலப்பகுதி வரையில் அரசு கொடுக்கலாம். விரிவான அளவில் தொற்று அறியும் சோதனைகளை செய்வதற்கும் இது அவசியம்.

இவ்வாறு மைய அரசு கூடுதல் செலவுகளை ஏற்கும்பொழுது அதன் பற்றாக்குறை கணிசமாக அதிகரிக்கும். இதனால் நிதிமூலதனம் நாட்டைவிட்டு பிற நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். இத்தகைய சூழலில், மூலதனம் நாட்டைவிட்டு வெளியேறுவது என்ற நடவடிக்கைமீது வலுவான கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். மேலும் ஐ எம் எஃப் அமைப்பில் அனைத்து நாடுகளுக்கும் கூடுதல் சிறப்புபணம் பெரும் உரிமைகளை (Special Drawing Rights or SDRs) அளித்திட பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை இந்திய அரசு வலுவாக ஆதரிக்க வேண்டும்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்

மேற்கூறிய நடவடிக்கைகள் நிவாரணம் அளிக்கும் தன்மையில்தான் உள்ளன. அடுத்தகட்டமாக உற்பத்தி மீட்பையும் மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, விவசாயிகள், சிறு-குறு தொழில் முனைவோர், நகர, கிராம கூலி தொழிலாளர்கள் ஆகிய பகுதியினரின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். இதில் முக்கிய அம்சங்கள் ஐந்து: மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதி திட்டம் (ரேகா); சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு; புலம்பெயர் தொழிலாளிகள் மீண்டும் பணிகளில் இணைவது; அத்தியாவசிய பண்டங்களின் அளிப்பை உறுதி செய்தல்; ஊரக பொருளாதார மீட்சி.

ஊரக வேலை உறுதி திட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொழிலாளிகளின் சம்பள பாக்கியை கொடுப்பது, ஊர் திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளிகள் அனவருக்கும் வேலை அட்டை கேட்காமல் பணி கொடுப்பது, ஒவ்வொரு ஊரக குடும்பத்திற்கும் 100 நாள் வேலை என்பதற்கு பதில் உழைக்க முன்வரும் அனைத்து வயது வந்த குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 100 நாள் வேலை அளிப்பது, வேலை கொடுக்க இயலாத பட்சத்தில் வேலையின்மை உதவிதொகை ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். மேலும் நகரப் பகுதிகளுக்கும் ரேகா போன்ற திட்டம் கொண்டுவந்து இதன் மூலம் சிறு-குறு தொழில் முனைவோருக்கு உதவி செய்வது என்பதும் ஒரு முக்கிய கோரிக்கை.

சிறு-குறு தொழில்களுக்கு ஒரு ஆண்டு காலம் கடன் திருப்புதல் ஒத்திவைக்கப்பட வேண்டும். குறைந்த வட்டியில் அரசின் உத்தரவாத அடிப்படையில் தாராளமாக கடன் வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான ஒரு முறை கடன் ரத்து என்பதை அமலாக்க வேண்டும். பால் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையில் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளிகளில் மீண்டும் நகரங்களுக்கு சென்று பணிபுரிய முன்வருவோருக்கு உரிய ஊக்கம் அளிக்கப்பட வேண்டும்.

நீண்டகால நடவடிக்கைகள்

இந்திய நாட்டின் முதன்மையான சவால் வேளாண் பொருளாதாரத்தின் புரட்சிகர மாற்றம் ஆகும். இதற்கு அடிப்படை முழுமையான நிலச்சீர்திருத்தம். நிலஉச்சவரம்பு சட்டங்கள் கறாராக அமல் செய்யப்படுவதன் மூலம் கிடைக்கும் உபரி நிலங்களும் அரசு தரிசு நிலங்களும் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவது அவசியம். மேலும் பல ஆண்டுகளாக விவசாயத் துறையிலும் ஊரக கட்டமைப்பு துறைகளிலும் அரசு முதலீடு குறைக்கப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் ஊரக கட்டமைப்பிற்கான அரசு முதலீடுகள் பன்மடங்கு உயர்த்தப்பட வேண்டும். பாசன விரிவாக்கம், வேளாண் ஆராய்ச்சி விரிவாக்கப் பணி அமைப்புகள் வலுப்படுத்துதல் உள்ளிட்டு பன்முக நடவடிக்கைகள் தேவை.

உள்நாட்டு சந்தையை மையப்படுத்தியதாக நமது வளர்ச்சி இருக்க வேண்டும். கட்டற்ற உலகமயம் ஏற்புடையதல்ல. வலுவான பொதுத்துறை, சுயச்சார்பு அடிப்படையிலான அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி, அரசின் வரிக் கொள்கைகளில் நேர்முக வரிகளின் பங்கை அதிகப்படுத்தும் முயற்சிகள், மத்திய மாநில நிதி உறவுகளில் ஜனநாயக தன்மையிலான மாற்றங்கள் ஆகியவையும் அவசியமான நீண்டகால நடவடிக்கைகள். சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு ஆகிய துறைகளில் கணிசமான பொதுமுதலீடுகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று: சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்திய பொய்கள்

அபிநவ் சூர்யா

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகள் பெரும் தோல்வியை அடைந்திருக்கின்றன. உடனே ஏகாதிபத்திய நாடுகளும், முதலாளித்துவ சிந்தனையாளர்களும் தங்கள் தோல்வியிலிருந்து திசை திருப்ப சீனாவின் மேல் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். இயல்பாகவே வலதுசாரி சக்திகள் அறிவியல் ஆக்கத்திற்கு எதிரானவர்கள். எனவே, சீனாவிடமிருந்து பாடம் கற்க கோரும் அறிவியல் சமூகத்தின் கருத்துக்களை அவர்கள் நிராகரிக்கின்றனர்.

உலக நாடுகளின் “தலைவர்கள்” என்று கூறிக்கொள்ளும் நாடுகள், சொந்த மக்கள் எத்தனை பேர் பலியானாலும் தங்களின் அரசியல் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முனைகிறார்கள். இது போன்ற உத்திகளுக்கு தலைமை வகிக்கும் அமெரிக்காவும் பிரிட்டனும், தாங்கள் முன்னெடுத்த ஏகாதிபத்திய போர்கள், காலனியாதிக்கங்கள், பொருளாதார கொள்கைகள் மூலம் உலகையே சூறையாடிய வரலாற்றை வசதியாக மறந்துவிடுகின்றனர். சரியாக செயல்பட்டுவரும் சீனாவிடமிருந்து நட்ட ஈடு கோரும் சிறுமையை செய்யவும் தயங்கவில்லை.

இது போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் அவதூறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதற்காக இல்லாமல், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்கள் அரசு நடத்தி வரும் சீனா, இந்த நெருக்கடியில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வது முற்போக்காளர்களுக்கு மிகவும் அவசியம்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தாராளமயக் கொள்கைகளை உலக நாடுகள் மீது புகுத்தி, மக்களின் நல்வாழ்வு மீதான அரசுகளின் பொறுப்பை முற்றிலுமாக ஒழித்து விட்ட ஏகாதிபத்திய தாக்குதலின் மத்தியிலே, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, மக்கள் நலனில் அரசு முக்கிய பங்காற்றுவதன் மூலம் அசாதாரண பொருளாதார வளர்ச்சியை ஈட்ட முடியும் என்று நிறுவியது சீனாவாகும்.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் தொடக்கத்திலிருந்து சீனா என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்று அறிவது நமக்கு அறிவியல் ஞானம் மட்டுமன்றி, மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முக்கிய பாடங்களையும் வழங்குகிறது.

டிசம்பர் மாத பிற்பகுதியில் தான் ஊகான் நகர சுகாதார அமைப்பு நூதனமான, நிமோனியா போன்ற தொற்றுநோய் பரவி வருவதை கண்டறிந்தது. இந்த நேரத்திலிருந்து, சீனா இந்நோயை கட்டுக்குள் கொண்டு வர எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே துரிதமாகவும், வெளிப்படையாகவும் இருந்தன.

டிசம்பர் 27 அன்று, டாக்டர் ஜாங் ஜிக்சியாங் என்பவர் தான் இந்த நிமோனியா போன்ற நோய் தொற்று ஒரு ஆபத்தான வைரஸ் மூலம் பரவி வருவதாக முதலில் சீன மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களிடம் தெரிவித்தார். அன்றிலிருந்து சீனாவின் மொத்த சுகாதார கட்டமைப்பும் துரிதமாக செயல்பட துவங்கிவிட்டன.

டிசம்பர் 30ம் தேதி அன்று, ஊகான் நகர சுகாதார ஆணையம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த நூதன நிமோனியா நோய்க்கு சிறப்பு கவனம் அளிக்குமாறு கூறிய பின், டிசம்பர் 31 அன்று இந்த நோய் பற்றிய தகவலை பொது மக்களுக்கு அறிவித்ததோடு, பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், முகக் கவசங்கள் அணியுமாறும் அறிவுறுத்தியது.

டிசம்பர் பிற்பகுதியில் நோயை பற்றி கண்டறிந்த சீனா, (இந்த நோயை பற்றி ஏதுமே அறியாத நிலையில்), டிசம்பர் 31ற்குள் இந்த அறிவிப்பை செய்தது. இதை ஒப்பிடுகையில், சீனா இந்நோயை பற்றி பல தகவல்கள் அளித்த பின்பும், ஜனவரி இறுதியில் முதல் நோயாளியை கண்டறிந்த பல நாடுகள் மார்ச் வரை இப்படிப்பட்ட அறிவிப்பை மேற்கொள்ளவில்லை என்பதை இணைத்து பார்க்க வேண்டும்.

இந்த நேரம் குறித்து பின்னாளில் துவங்கிய பொய் பிரச்சாரங்களில் ஒன்று, லீ வென்லியாங் என்ற டாக்டர் இந்நோயை பற்றி வெளியே கூற விடாமல் அவரை கைது செய்து சீனா முடக்கியது என்பதாகும். இந்த மருத்துவர் தன் சமூக வலைதளத்தில் சார்ஸ் போன்ற நோய் பரவி வருவதாக டிசம்பர் 30 அன்று பதிவிட்டது உண்மை தான். ஆனால் ஏற்கனவே கூறியது போல், டிசம்பர் 27 அன்றே இந்த வைரஸ் பரவி வருவது பற்றி அனைத்து சீன டாக்டர்களும் அறிந்திருந்தனர். மேலும் ஊகான் மருத்துவமனைகளும் இதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்து வந்தன. ஆகையால், சீனா அதன் அறிவியலாளர்களிடமிருந்து மறைக்க ஏதுமில்லை.

மேலும், இந்த நோயை பற்றி சீனாவின் தலைசிறந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வந்த நேரத்தில், முழு உண்மையை அறியாமல், இந்த டாக்டர் உரிய சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கூறாமல், நேராக சமூக வலைதளத்தில் பதிவிட்டது தவறென்று காவல்துறை அவருக்கு எச்சரிக்கை செய்தது. அதே சமயம் அவர் கைது செய்யப்பட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வது பொய்யாகும்.

மேலும் பின்நாளில் இவ்வாறு காவல்துறை எச்சரித்தது தவறு என சீன உச்ச நீதி மன்றம் தீர்ப்பளிக்க, ஊகான் மாநகராட்சி அந்த டாக்டரின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, மறைப்பதற்கு எவரும் அறியாத ஒன்றை இந்த டாக்டர் கூறவும் இல்லை; அவர் துன்புறுத்தப்படவும் இல்லை.

மேலும், இந்த நோயை பற்றிய ஆய்வை துரிதப்படுத்திய சீனா, ஜனவரி 3 அன்றே உலக சுகாதார அமைப்பையும், அனைத்து முக்கிய நாடுகளையும் தொடர்பு கொண்டு, இந்நோயை குறித்து எச்சரித்தது. இதில் அமெரிக்காவும் அடக்கம். இந்நோயை பற்றிய எச்சரிக்கையை அமெரிக்காவின் நோய் தடுப்பு ஆணையம் ஜனவரி 3 அன்று பெற்றது என்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதன் பின்பும், ட்ரம்ப் இன்றும் சீனா இந்நோயை பற்றி உரிய நேரத்தில் எச்சரிக்கவில்லை என பொய் கூறி வருகிறார்.

இதற்கு பின், ஒவ்வொரு நாளும் ஊகான் சுகாதார ஆணைய அதிகாரிகள் ஊடங்கங்களை சந்தித்து பதிலளித்ததோடு, ஒவ்வொரு நாளும் இந்த நூதன நிமோனியா நோயால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்ள்ளனர் என்பதை தன் வலைத்தளத்தில் பதிப்பித்துக்கொண்டே வந்தது.

இக்காலத்தில் முக்கிய சாதனை, ஜனவரி 12 அன்று சீன ஆய்வாளர்கள் இந்த வைரஸின் முழு மரபணு அமைப்பை கண்டறிந்தனர். இது இருந்தால் மட்டுமே இந்நோயை கண்டறியும் சோதனை  கிட்டுகளையும், இந்நோய்க்கான தடுப்பூசியையும் உருவாக்க முடியும். நோயை பற்றி அறிந்த சில நாட்களிக், இந்த மரபணு அமைப்பை கண்டறிந்தனர். இது மிகப்பெரும் சாதனை. ஒப்பீடாக, 2002ல் சார்ஸ் நோய்த்தொற்றின் பொழுதும், பின்னர் எபோலா வைரஸ் தொற்றின் பொழுதும், மரபணு அமைப்பை கண்டறிய ஆய்வாளர்களுக்கு 2-3 மாதங்கள் தேவைப்பட்டது.

மரபணு கட்டமைப்பை கண்டறிந்த சீன ஆய்வாளர்கள், உடனடியாக, வெளிப்படையாக, இந்த மரபணு அமைப்பைப் பற்றி உலக சுகாதார அமைப்பிடம் பகிர்ந்து கொண்டனர்.இதனால், லாபம் பாராமல், உலக ஆய்வாளர்கள் யார் வேண்டுமானாலும் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்க வழி வகுத்தது சீனா.

மேலும் இந்த காலகட்டத்தில், இந்த தொற்றை பற்றி மேலும் அறியவும், கட்டுப்படுத்தவும் சிறப்பு குழுக்கள் ஊகான் மற்றும் அனைத்து நகரங்களுக்கும் அனுப்பப்பட்டன. மேலும் ஜனவரி 16ம் தேதிக்குள் “பி.சி.ஆர்” எனப்படும் சோதனைக் கருவிகளை உருவாக்கி, அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தார்கள் (இன்று நாம் இந்த கருவியையே சோதனைக்கு பயன் படுத்தி வருகிறோம்).

இந்தக் கால கட்டத்தில், இந்த வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதரிடம் பரவி வருவதைப் பற்றிய சந்தேகங்கங்கள் ஆய்வாளர்களுக்கு இருந்தாலும், உறுதி செய்ய ஆதாரங்கள் இல்லை. இதை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்தது.

ஜனவரி 19 அன்று தான், சீன அரசால் ஊகான் நகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சீனாவின் தலை சிறந்த வைரஸ் ஆய்வாளர் ஷாங் நன்ஷங் இந்த வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதரிடம் பரவி வருவதைக் கண்டறிந்து கூறினார். இதன் ஆபத்தை உடனே உணர்ந்தது சீன அரசு. ஜனவரி 20 அன்றே அதிபர் தோழர் ஜி ஜின்பிங் இந்த தொற்றின் ஆபத்தை குறித்து தேசத்திற்கு அறிவித்தார். இதன் பின் ஜனவரி 28 அன்று சீனா சென்ற உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ், சீனாவின் வெளிப்படைத்தன்மையைக் குறித்து பாராட்டினார்.

ஜனவரி 4ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரையிலான காலம் பற்றியே சீனா பற்றிய ஏகாதிபத்திய நாடுகளின் பொய் ஜோடிப்பு இன்று பரவலாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் முக்கிய ஊடகம் ஒன்று ஏப்ரலில் வெளியிட்ட அறிக்கையில், சீனா ஜனவரி 4ம் தேதியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு நோயுற்றோர் பற்றிய தகவலை சேகரிக்கவில்லை எனவும், ஜனவரி 14 முதல் 20 வரை நோய் தொற்றை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறியது. இந்த கட்டுக்கதையை வைத்து தான் ட்ரம்ப் உட்பட பல உலக ஏகாதிபதியவாதிகளும் இன்று சீனா மீது பழி சுமத்தி வருகின்றனர். ஆனால் இந்த பொய்க்கு எதிரான ஆதாரங்கள் நிரம்ப உள்ளன.

மேலும் ஜனவரி 20ம் தேதிக்கு பிறகு நிகழ்ந்தவை மிகவும் அசாதாரணமான நிகழ்வுகள். உடனடியாக, ஜனவரி 23 அன்றே சீன அரசு ஊகான் நகரை “லாக் டவுன்” எனும் ஊரடங்கிற்குள் கொண்டு வந்தது. இந்த தொற்றின் ஆபத்து பற்றி உலக சுகாதார அமைப்பு உணர்ந்த போதும், இது அதுவரை சந்தித்திராத புதுமையான நிலைமை என்பதால், தீர்மானமான அறிவுரையை சீனாவிற்கு வழங்க முடியவில்லை. ஆனால் சீன அரசு தைரியமாக ஊரடங்கை அமலாக்கியது.

சீன அரசு அவ்வாறு செய்வதற்கு முன், மனித வரலாற்றிலேயே எந்தநேரத்திலும், ஒரு கோடி மக்களுக்கு மேல் வசிக்கும் எந்த பகுதியிலும் “லாக் டவுன்” கொண்டுவரப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீன அரசின் இந்த புதுமையான மற்றும் தைரியமான நடவடிக்கை, இன்று உலகமே இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டியாய் உள்ளது.

இந்த “லாக் டவுன்” அமலாக்கிய பொழுது, சீனாவை சர்வாதிகாரத்தனமாக நடந்து கொள்வதாக சாடிய ஏகாதிபத்திய நாடுகள், இன்று சீனா ஏன் ஊரடங்கை இன்னும் விரைவாக அமலாக்கவில்லை என கேள்வி எழுப்புவது நகை முரண். இந்த தொற்றின் ஆபத்தை பற்றி சீனா அனைத்து தகவல்களையும் அளித்திருந்தபோதும், எந்த ஏகாதிபத்திய நாடுகளும் ஒரு மதத்திற்கு மேல் “லாக் டவுன்” அறிவிக்காமல் இருந்தன. ஆனால் தொற்றை பற்றி ஏதுமே தெரியாமல் இருந்த சீனா, ஒரே வாரத்திற்குள் “லாக் டவுன்” அறிவித்திருக்க வேண்டும் என இப்பொழுது எதிர்பார்ப்பது எவ்வளவு வேடிக்கை!

சீனா கடைபிடித்த “லாக் டவுன்”, இன்று இந்தியா கடை பிடிப்பது போல் உழைக்கும் மக்களை உணவின்றி தவிக்க விடும் கொடிய “லாக் டவுன்” அல்ல. ஹூபே மாகாணத்தின் ஒவ்வொரு தெருவிற்கும், ஒவ்வொரு பகுதிக்கும், ஒரு அதிகாரியை நியமித்து, அங்குள்ள ஒவ்வொருவருக்கும் உணவும் மருந்தும் வீட்டிற்கே கிடைப்பதை உறுதி செய்தார்கள். எவரும் வீட்டை விட்டு வெளியே வர சிறிதும் அவசியமற்ற ஏற்பாடுகள் செய்தது அரசு. பச்சை வழிப் பாதைகள் அமைத்து, சீனாவின் இதர பகுதிகளிலிருந்து ஹூபே மாகாணத்திற்க்கு உணவு, மருந்து மற்றும் இதர தேவைகள் அனைத்தும் தங்கு தடையின்றி வர வழி செய்தது. வீட்டிற்குள்ளேயே இருப்போர் மனநலத்தை உறுதி செய்ய இணைய வழி ஆலோசனை மையங்களை உருவாக்கியது. இவ்வாறு மக்கள் நலனை மனதில் கொண்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தது.

ஒவ்வொரு படியிலும், தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், தாங்கள் செய்யும் தவறுகள் குறித்தும் உலக நாடுகளுக்கு அறிவித்துக்கொண்டே வந்தது சீனா. ஆனால் இந்த அனைத்து தகவல்களும் எச்சரிக்கைகளும் அறிந்திருந்த போதும், எந்த ஏகாதிபத்திய நாடும், ஏறத்தாழ இரண்டு மாதங்கள் வரை எந்த விதமான ஏற்பாடுகளும் செய்யாமல் இருந்தன.

தன் மக்களின் நலனில் சிறிதும் கவலை இல்லாத ஏகாதிபத்திய நாடுகள், அதன் முதலாளித்துவ கொள்கைகளால் இன்று தொற்று கட்டுக்கடங்காத நிலைக்கு செல்ல விட்டுள்ளன. பின் சீனா பொய்யான தகவல்களை அளித்ததாகவும், சீனாவில் அரசு அறிவித்ததை விட அங்கு பன்மடங்கு மக்கள் இறந்ததாகவும் பொய் பரப்பி வருகின்றனர். ஆனால் இதையும் பொய்யென நிறுவியது சீனா.

பிப்ரவரி இரண்டாம் வாரம், டாக்டர் பிரூஸ் அயல்வார்ட் ஒரு மருத்துவர்கள் குழுவை உலக சுகாதார அமைப்பு ஊகான் மற்றும் இதர பகுதிகளுக்கு அனுப்பியது. அவர்கள் சீனாவின் நடவடிக்கைகளை கண்டு பெருமளவில் வியந்தனர். பல்வேறு தரப்பிலிருந்தும் தரவுகளை சேகரித்த அவர்கள், சீன அரசு வெளியிட்டுள்ள தரவுகள் உண்மை தான் என்பதை உறுதி செய்தனர். இவ்வளவு சிறப்பாக, குறைந்த இறப்பு விகிதத்தோடு நோயை கட்டுக்குள் கொண்டு வந்ததைக் கண்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த உண்மையை ஏற்க முடியாத ஏகாதிபத்திய நாடுகள், உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக இருப்பதாக குறை கூறுகிறார்கள். ஆனால், அங்கு சென்ற மருத்துவர்களில் பாதிப்பேர் உலக சுகாதார அமைப்புடன் சார்பு இல்லாத தன்னிச்சையான மருத்துவர்கள் ஆவார்கள். அவர்களும் இதே உண்ம்மையைத் தான் கூறுகின்றனர். ஆக, சீனா இந்நோயை திறம்பட கட்டுக்குள் கொண்டு வந்தது ஜோடிப்புகளுக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப் பட்டது.

சீனாவின் இந்த சிறப்பான நடவடிக்கைகள் குறித்து உலக விஞ்ஞானிகளுக்கு பாராட்ட சொற்கள் இல்லை. மருத்துவர் பிரூஸ் அயல்வார்ட் சீனா சென்று கண்ட பின் கூறுகையில், “எவருமே அறியாத நோயொன்றை எதிர்கொண்ட சீனா, அதை கட்டுப்படுத்த பாரம்பரிய முறைகளோடு நவீன அறிவியலையும் கலந்து, கற்பனைக்கெட்டாத முறையில் சாதனை செய்துள்ளது” என்றும், “இந்த போராட்டத்தில் சீன மக்கள் செய்துள்ள தியாகத்திற்கு உலகமே அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது” என்றும், “சீனாவின் சிறந்த நடவடிக்கைகளால், இந்த நோயை கட்டுப்படுத்தியதோடு, இந்த தொற்றை சமாளிக்க அவசியமான விலைமதிப்பில்லாத நேரத்தை சீனா உலகிற்கு பெற்றுத் தந்துள்ளது” என்றும் போற்றினார்.

உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் கவுடன் கலியா, “ஒரு தொற்று நோயின் பொழுது, அது பெருமளவிலான மக்களை தாக்கி, பின் அடங்குவது தான் அதன் இயற்கையான போக்கு. ஆனால் சீனா இந்த போக்கையே மாற்றி, தொற்று நோயை முளையிலேயே வெட்டிவிட முடியும் என்று உலகிற்கே நிறுவியுள்ளது” என்று பெருமையாக கூறினார். மேலும் மக்களுக்கு பொது சுகாதாரம் வழங்குவதன் அவசியத்தை சீனா காட்டியுள்ளதாக அவர் புகழ்ந்தார்.

இது எதையுமே ஏற்க மறுக்கும் ஏகாதிபத்தியவாதிகள், முதலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் மருத்துவர் டெட்ரோஸ் சீனாவின் கைக்கூலி என்று கூறினார்கள். பின் அனைத்து மருத்துவர்களும் சீனாவை பாராட்டியதால், மொத்த அமைப்பே சீனவின் கைக்கூலி எனக் கூறியதோடு, அந்த அமைப்பிற்கான நிதியை முடக்கியது அமெரிக்கா.

உலக சுகாதார அமைப்பின் தலைமையில் இருப்பவர்களிக் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே சீன மருத்துவர் ஆவார். இதர அனைவருமே பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள். உலக சுகாதார அமைப்பின் நிதியில் பெரும்பான்மை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிடமிருந்தே வருகின்றது. வெறும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான நிதி மட்டுமே சீனாவிடம் இருந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பிற்கு சீனாவிற்கு எதிராக பேசி, அமெரிக்கா-பிரிட்டனை ஆதரிக்க அனைத்து உந்துதலும் உள்ளது. ஆனால் சீனாவை ஆதரிக்க அறிவியல் நேர்மையைத் தவிர வேற எந்த உந்துதலும் இல்லை.

இதனால் சீனா தவறுகளே செய்யவில்லை என்று கிடையாது. ஆனால் தாங்கள் செய்யும் தவறை ஒப்புக்கொண்டதோடு, அதை உலக நாடுகள் செய்யாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டனர். உதாரணமாக, சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் தொற்று பரவுவதை சற்றே தாமதமாகவே கண்டறிந்த சீனா, உடனடியாக பாதுகாப்பு உபகரணங்களை அவர்களுக்கு அளித்ததோடு, இந்த தவறை மற்ற நாடுகள் செய்யாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், இன்றும் ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் நாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க சரியான ஏற்பாடுகள் செய்யாமல், அவர்களின் இறப்புக்கு காரணமாகி வருகின்றன.

மேலும், இந்த நோயை சிறப்பாக கட்டுப்படுத்திய சீனாவே, தங்களின் பாதையில் பல தவறுகள் இழைத்ததாகவும், அதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்ட முதல் உலக அதிபர் தோழர் ஜி ஜின்பிங் தான். ஆனால் தொற்றை கட்டுப்படுத்த தவறிய ஏகாதிபத்திய அரசுகள், இன்றும் தங்களின் கொடிய தவறுகளுக்கு பிறரை குற்றம் கூறி வருகின்றன.

சீனாவின் சிறப்பான திட்டமிடுதலும், அறிவியல் ரீதியான நடவடிக்கைகளும் உலக நாடுகள் அனைத்துமே கற்க வேண்டிய முக்கிய பாடம். அனால் இதை ஒப்புக்கொண்டால், தங்கள் நாட்டில் கம்யூனிச உணர்வு வளர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில், வலதுசாரி ஏகாதிபத்தியவாதிகள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இன்றும், பல்வேறு ஆய்வுகளும் இந்த வைரஸ் எந்த ஆய்வுக்கூடத்திலும் உருவாக்கவில்ல, இயற்கையில் உருவானதே என்று உறுதியாக கூறிய பின்னும், இந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவானதாக பொய்யுரைத்து வருகிறார் ட்ரம்ப். மேலும் தன்னை தேர்தலில் தோல்வியுறச் செய்ய சீனா எந்த எல்லைக்கும் செல்லும் என குற்றம் சாட்டி வருகிறார். நாள் ஒன்றிற்கு 2500க்கும் மேற்பட்டோர் மரணிக்கும் பொழுதும், ட்ரம்ப் அரசின் கவனம் மக்களை காப்பாற்றுவதில் இல்லை; தேர்தல் பிரச்சாரம் செய்வதிலேயே உள்ளது.

மக்களின் சுகாதார மற்றும் பொது நலனை சந்தைகள் உறுதி செய்ய முடியாது, அரசின் பங்கு மிக முக்கியம் என்பதை இந்த கொரொனா வைரஸ் நோய் தொற்றின் சமயத்தில் சீனாவும் இதர சோசலிச நாடுகளும் நிறுவியுள்ளன.

எல்லை மீறிய உழைப்புச் சுரண்டலுக்கு மூலதனத்தை அழைக்கும் பாஜக!

எஸ்.கண்ணன்

அரசும், முதலாளித்துவமும் பொது முடக்கத்தில் தொழிலாளர்களையும், ஜனநாயக அமைப்புகளையும் முடக்கி, தீவிரமாக செயல்படுகிறது. மார்க்ஸ் சொன்னது போல் மூலதனம் தன்னை மேலும் மேலும் அதிகரித்து கொள்வதற்கு, இந்த கொரானா கொள்ளை நோய் காலத்தையும் விட்டு வைக்கவில்லை. பொது மருத்துவம் பறிக்கப்பட்ட மக்களுக்கு, கொரானா நோய் இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதித்து கொள்வதும் கூட, மிக அதிக செலவு பிடிக்கிறது. தனியார் பரிசோதனை மையங்கள் ரூ. 4500 வசூலிக்க அரசே வழிகாட்டுகிறது. தங்களின் அடிப்படை தேவை என்ன என்பது குறித்து முடிவெடுக்க முடியாத பொதுபுத்தியை, அரசும் அதைக் கட்டுப்படுத்தும் சமூக அமைப்பும் வடிவமைத்து இருக்கிறது. இறக்குமதி செய்த கருவிகள் அப்பட்டமாக விலை அதிகம் கொடுக்கப்பட்ட செய்தி, பரபரப்பாக மாறினால், மதுக்கடைகளை திறந்து, அதுகுறித்த விவாதப் பொருளில் மக்களை திசைதிருப்புகிறது. அரசு கஜானாவை சூறையாடும் பணியை, ஆளும் கட்சி தலைவர்களும், முதலாளிகளும் போட்டி போட்டு செய்கின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பொருளாதார கொள்கையான ஏகாதிபத்திய உலகமயமாக்கல் இந்த நிலை உருவாக பெருமளவு பங்களித்துள்ளது. எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி இதழில், நோய்த்தொற்றும் முதலாளித்துவமும் என்ற கட்டுரையை சந்தீபன் பக்சி என்பவர் எழுதியுள்ளார். இதில் மூன்று முக்கிய அம்சங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, பொது சுகாதாரப் பராமரிப்பு குறித்த பணிகள், அரசிடம் இருந்து படிப்படியாக தனியார் முதலாளிகளுக்கு கைமாற்றப்பட்டது. இரண்டு, இதுவரை இல்லாத வகையில், போக்குவரத்து ஏற்பாடுகள் மூலம் வேலை வாய்ப்புக்காகவும், சந்தைக்காகவும் உலகம் முழுவதிலும் ஒட்டி உறவாடும் புதிய சூழலை உலகமய பொருளாதாரக் கொள்கை அதிகரித்தது. மூன்று, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலை அழித்து ஒழித்தது. முதலாளித்துவம் காடுகளை அழித்ததும், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட மொத்த விவசாயமும் தொழிற்சாலை போல் மாற்றப்பட்டது ஆகும் என அவர் கூறுகிறார்.

1918 இல் இன்ஃபுளுவன்ஸா உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்றுகளுடன் போராடியபோதும் உலகம் அதிலிருந்து பாடம் கற்கவில்லை. காரணம் முதலாளித்துவத்தின் அதீத லாபவெறி, அனைத்தையும், தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கு, எல்லாவித எதிர்ப்புகளையும் புறக்கணித்தது. அறிவியலும் தொழில் நுட்பமும், மருத்துவத் துறையில் கோலோச்சினாலும், நிதிமூலதனத்தின் தாக்கம், இன்சூரன்ஸ் நிறுவனங்களை வளர்த்தது. தனியாரிடம் மருத்துவம் ஒப்படைக்கப்பட்டாலும், காப்பீடு மூலம் சிகிச்சை கிடைக்கிறதே என்ற திருப்தியுணர்வை, ஒவ்வொருவரிடமும் மேலோங்கச் செய்திருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் பொதுபுத்தி கட்டமைத்தலின் ஒரு பகுதியாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது.

கொள்ளை நோய் காலத்திலும் கார்ப்பரேட் பாசம்:

தாராளமய பொருளாதாரக் கொள்கை துவங்கிய காலத்தில் இருந்தே, தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் கார்ப்பரேட் ஆதரவு செயல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. தற்போதைய கொரானா பாதிப்புக்கு எதிராக கார்ப்பரேட் மட்டுமல்ல, அனைத்து பகுதி மக்களும் முடங்கி இருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புகளை பெரிதாகவும், சாதாரண மக்களின் இழப்பை ஒரு பொருட்டாக மதிக்காத வகையிலும் சித்தரிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இழப்பை நிவர்த்தி செய்ய ஊதிய வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிகாட்டப்படுகிறது. உற்பத்தி இல்லை; வருவாய் இல்லை; எப்படி நிறுவனங்கள் ஊதியம் அளிக்க முடியும்? என்ற கேள்விகள் மூலம் ஊதிய வெட்டை அமலாக்கிடும் பாதுகாப்பு கவசம் முதலாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

உலக அளவிலும் இது போன்ற செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் H-1B விசா பெறப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கொள்ளை குறித்து ட்ரூத் அவுட் இணைய இதழ் பலவகைகளில் அம்பலப்படுத்தி உள்ளது. H-1B விசா அமெரிக்காவில் பணிக்காக சென்றவர்களுக்கு கிடைக்கும் ஒரு அங்கீகாரமாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் 30 முன்னணி நிறுவனங்கள் H-1B விசா வழங்கப்பட்ட ஊழியர்களை மிக அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ஃபேஸ்புக், அமேசான், வால்மார்ட், கூகுள் போன்றவை இதில் முக்கியமானவை. இந்த நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் கோட்பாடு ரீதியில் அறிவு படைத்தவர்களுக்கான ஊதியத்தை, அமெரிக்க சட்டத்தின்படி தீர்மானிக்கப்பட்டவாறு, இவர்களுக்கு வழங்கவில்லை; குறைவாக வழங்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது. லெவல் 2க்குரியவருக்கு லெவல் 1 அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது. இது தொழிலாளர் துறையின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் பல நிறுவனங்களில் ஊதியக் குறைப்பு அமல்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடி, ஏப்ரல் 14 அன்று இரண்டாவது முறையாக பொது முடக்கம் குறித்து உரை நிகழ்த்தும்போது, நிறுவனங்கள் ஊதியத்தை வெட்டக்கூடாது; ஆட்குறைப்பு செய்யக்கூடாது போன்றவற்றை தெளிவாக கூறினார். ஆனால் இங்குள்ள தனியார் நிறுவனங்கள் இதை மீறும் வகையில்தான் நடந்து கொள்கின்றன. பெரும்பான்மையான ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் 10 முதல் 30 சதவீத ஊதிய வெட்டு அமலாகியுள்ளது. வர இருக்கும் மே, ஜூன் மாதங்களிலும் ஊதியம் வெட்டப்படும் என்று குறிப்பிடுகின்றனர். பல தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கு, ஊதிய வெட்டு பகிரங்கமாக அறிவிப்பு செய்யப்படுகிறது. இதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அல்ல. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகும். லாபவிகிதக் குறைவு, பெரு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்க முடியாத மனநிலையை உருவாக்குகிறது. கடந்த ஆண்டு லாப விகிதத்தை விடவும் நடப்பு ஆண்டு லாப விகிதத்தை அதிகரிக்க, எந்த ஒரு மனிதத் தன்மையற்ற செயலையும் செய்யலாம் என பெரு நிறுவன நிர்வாகத்தினர் முடிவு செய்கின்றனர்.

கடந்த காலங்களில் அடைந்த லாபத்தை கேள்விக்கு உட்படுத்தி ஊதியம் வழங்கும் நிர்ப்பந்தத்தை அரசுகளால் செய்ய முடியவில்லை. முன்மாதிரியாக இருக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு அகவிலைப்படி உயர்வு இருக்காது என அறிவித்துள்ளன. எதிர்வரும் மாதங்களின் நிலை குறித்து அரசுகளும், முதலாளித்துவமும் திட்டமிட்டு ஒரு பதட்ட நிலையை உருவாக்குவதாக இதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த பதட்ட நிலையில் கிடைத்தவரை போதும்; அல்லது இந்த முடக்கம் தொழிலாளர்களை விடவும், முதலாளிகளுக்கே பாதிப்பை உருவாக்கியுள்ளது என்ற கருத்தை சாதாரண மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கும் செயலாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊதிய விகிதம் குறைந்து வருவது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் இந்நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன. 20 மற்றும் 21 வது அகில இந்திய மாநாட்டு அறிக்கைகளில், “நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது, ஆலைகளுக்குள் கூட்டுபேர உரிமையற்ற, ஒப்பந்தமுறை மற்றும் பயிற்சித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது ஆகியவற்றின் மூலம், தொழிலாளர்களுக்கான ஊதிய பங்கு, கடந்த 30 ஆண்டுகளில் 30 சதத்தில் இருந்து 10 சதமாக குறைந்துள்ளது” எனக் கூறியிருந்தது. இதையே சர்வதேச தொழிலாளர் அமைப்பு பல பத்தாண்டுகளாக ஊதிய விகிதம் தேக்க நிலையில் உள்ளது எனக் கூறியுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் 22 வது அகில இந்திய மாநாட்டு அறிக்கை, “1972 முதல் 2013 வரையான காலப்பகுதியில், அடிமட்டத்தில் உள்ள 10 சதம் மக்களின் உண்மை வருமானம் வீழ்ச்சியை சந்தித்தது. உச்சத்தில் உள்ள 10 சதவீதத்தினர் அனைத்து விதமான பலன்களையும் அனுபவித்தனர். இடையில் உள்ள தொழிலாளர்களின் வருமானம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட விகிதாச்சார அளவில் குறைவை சந்தித்துள்ளது. மொத்தத்தில் 90 சதவீத மக்களின் உண்மை வருமானம் கடந்த முப்பது ஆண்டுக் காலமாக தேக்க நிலையில் உள்ளது” எனக் குறிப்பிடுகின்றது. இந்த விவரங்கள் சுரண்டலின் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

30 ஆண்டுகளாக தேக்க நிலையில் இருக்கும் ஊதிய விகிதம், தற்போது கொரானா பாதிப்பு காலத்தில் குறைக்கப்படுவதன் மூலம், நிறுவனங்களின் லாபவிகிதம் தக்க வைக்கப்படுகிறது. சமையல் எரிவாயு மான்யம் வேண்டாம் என மக்கள் முடிவெடுக்கும் வகையில், அவர்களின் உணர்ச்சியைத் தூண்டி விட்டது போல், இப்போது, திரை உலக பிரபலங்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் தங்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை குறைத்து கொள்ள முன்வருவதாக அறிவிக்கின்றனர். இதை தொலைக்காட்சிகள் செய்தியாக்குவதும், அந்த செய்தியை வாசிக்கும் வாசிப்பாளர், இந்த ஊதிய வெட்டுக்கு ஆளாவதும் சாதாரண நிகழ்வுகளாகின்றன. லாப விகிதத்தின் தொடர் உயர்விற்காக, கட்டமைக்கப்படும் கருத்தாக்கம் இவை என்பதை தீவிர பிரச்சாரமாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

மீண்டும் உருவாகுமா பொருளாதார நெருக்கடி?

நாம் சிக்கன நடவடிக்கையை கையாளாவிடில், நாடு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் என சிலர் வாதிடுகின்றனர். கொரானா கால உற்பத்தி முடக்கம் மீண்டு வர ஒரு வருடம் கூட ஆகலாம். எனவே. நிறுவனங்களின் நிதி சமாளிப்பு திறன், தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் சாத்தியம் என்ற வகையிலும், தொழிற்சங்கம் இல்லாத இடங்களில் நிர்வாகம் இந்த அளவு நடந்து கொள்வதே மிகத் தாராளமானது என்பதையும் திணிக்கின்றனர். பொருளாதார நெருக்கடியை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வதே நியாயமற்றது. ஆனால், வறியவர் தலையில் அதிகம் திணிப்பது மிகக் கொடிய ஒன்றாகும்.

2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, உலகின் பல நாடுகளை பாதித்தது. இந்தியாவிலும் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலைஇழப்பை கூடுதலாக உருவாக்கியது. அதையொட்டி ஊதிய உயர்வு நிறுத்திவைப்பு போன்ற நடவடிக்கைகள் கையாளப்பட்டன. அதாவது நெருக்கடி காலத்திற்கான அரசு நிவாரணத்தைப் பெற்றுக் கொண்ட தனியார் நிறுவனங்கள், மறுபுறத்தில் தங்கள் தொழிலாளர்களிடம் இருந்தும் கணிசமாக பறித்துக் கொண்டது. அதேபோல் பொருளாதார பெருமந்தம் குறித்து, பேரா. மணிக்குமார் ஆய்வு செய்து எழுதிய, “1930களில் தமிழகப் பொருளாதாரம்”, என்ற நூல் மேலும் சில விவரங்களைத் தருகிறது. அதில் தொழில் பற்றி விவாதிக்கிற போது, “துணி உற்பத்தியைப் பொறுத்த அளவில் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் 25 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அதேநேரம் இந்தியா 41 சதவீத உயர்வை எட்டியது. இரும்பு உற்பத்தியில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் முறையே 20 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இந்தியா 75 சதவீத உயர்வை அடைந்தது. பருத்தி உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவும் வளர்ச்சி பெற்றன”, எனக் கூறுகிறார்.

இதற்கு எதிர் திசையில் சிறு மற்றும் குடிசைத் தொழில்கள் அழிவை சந்தித்த விவரங்களையும் பேரா. மணிக்குமார் பட்டியலிடுகிறார். அதற்கு காரணமாக, பெருமந்தத்தில் இருந்து மீட்சி பெற அமெரிக்காவும், இங்கிலாந்தும் இதர சில நாடுகளும் இந்தியாவில் இறக்குமதி செய்து குவித்த நுகர் பொருள்கள் ஆகும். ஒட்டு மொத்தமாக தொழில்துறையில் பெருமந்தம் ஏற்பட்டு இருந்ததால், வேலை இழப்பும், கூலி குறைப்பும் அதிகரித்தது என்கிறார். ஆனால் இதற்கு எதிரான தொழில் தாவா வழக்குகள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்பதையும் பதிவு செய்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட விவரங்கள் உற்பத்தி திறன் இன்றிலிருந்து, பின் தங்கியிருந்த காலமாகும். இன்று உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. எனவே அந்த சூழ்நிலைகளை முழுமையாக இன்றைய காலத்திற்கு பொருத்திப் பார்க்க முடியாது. ஆனால் படிப்பினைகள் உள்ளது. அதாவது ஒருபகுதி வேலையிழப்பு உருவாக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள வேலை வாய்ப்பில் நெருக்கடியை உருவாக்கும் மூலதனத்தின் செயல்பாடு ஆகும். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் வளர்ச்சி உருவாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட உலகின் பல நகரங்களில் கொரானா பாதுகாப்பு நடவடிக்கைகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே ஒருபகுதி வேலைஇழப்பும், மற்றொரு புறம், புதிய தொழில்நுட்பம் கற்றவர்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகலாம்.

கொரானா வைரஸ் குறித்து, வெளிப்படையாக சீனா நடந்து கொள்ளவில்லை, எனவே அங்குள்ள தொழில் மூலதனத்தை பிறநாடுகளுக்கு இடமாறுதல் செய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் சொல்கின்றன. இதை ஈர்க்க தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பு குழுக்களை நியமித்துள்ளன. பாஜக ஆளும் பல மாநில அரசுகள் இதையொட்டியே தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

சட்டத் திருத்தங்கள்:

இதுவரையிலும் இந்திய நாடாளுமன்றம் நியமித்த நிலைக்குழுக்கள், பல ஆண்டுகளுக்கு பின்னரே தங்கள் அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. ஆனால் தொழிலாளர்களின் வேலை நேரத்தை தீர்மானிக்கின்ற, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த சட்டத் தொகுப்பை, நாடாளுமன்றம் நிலைக்குழுவிற்கு கடந்த அக்டோபரில் ஒப்படைத்தது. இக்குழு இந்த பொது முடக்க காலத்தில் அவசர அவசரமாக இணையம் மூலம், உறுப்பினர்களின் கருத்தறிந்து, அறிக்கை சமர்பித்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களின் எதிர்ப்பை உதாசீனம் செய்து மேற்படி நிலைக்குழு அறிக்கையை அளித்துள்ளது. அதில் வேலைநேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளது. இதை அடியொற்றி குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்கள் வேலைநேரம் 12 என தீர்மானித்து சட்டம் அல்லது அவசர சட்டங்களை இயற்றி வருகின்றன. உ.பி. மாநில அரசு குறைந்தபட்ச கூலிச்சட்டம், மற்றும் குழந்தை உழைப்பாளர் தடுப்பு சட்டம் தவிர மற்ற தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் மூன்று வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அவசர சட்டம் இயற்றி உள்ளது.

சுமார் 55 நாள்கள் உற்பத்தி துறை முடங்கியதை சரிகட்ட ஒவ்வொரு நாளும் 4 மணிநேரம் கூடுதலாக உற்பத்தியில் ஈடுபடுவது அவசியமா? என்ற கேள்வி தாராளமய பொருளாதார கொள்கைவாதிகளுக்கு கேட்கப்போவதில்லை. வேலைநேர அதிகரிப்பு, வேலைப்பறிப்பை அதிகரிக்கும்; உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்; சந்தையில் நுகர்வு குறையும். ஆனால் பாஜகவின் மத்திய ஆட்சியாளர்கள், இத்தகைய விளைவுகள் குறித்து வாதிட தயாரில்லை. சீனாவில் குவிந்திருக்கும் இதர நாடுகளின் மூலதனத்தை ஈர்ப்பது மட்டுமே முக்கியம் என்கிறது பாஜக. இந்திய தொழிலாளர்களின் உழைப்பை பன்னாட்டு மூலதனத்திற்காக அப்பட்டமாக கொள்ளையடிக்கும் உரிமத்தை வழங்கும் முகவராக பாஜக ஆட்சி மாறியுள்ளது.

காரல் மார்க்ஸ் குறிப்பிட்டதுபோல், உழைப்பு சக்தியின் விலையைக் குறைக்கும் நடவடிக்கையில் அரசுகள் ஈடுபடுகின்றன. இது ஏற்கனவே தேக்கத்தில் இருந்த ஊதிய விகிதத்தை மேலும் பின்னோக்கி நகர்த்த எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். வேலைநேரம் உயரும்போது, கூலியின் அளவு உயராமல் கட்டுக்குள் வைக்கும் ஏற்பாடும் இதற்குள் உள்ளது. ஏற்கனவே இடம்பெயர் தொழிலாளர்கள் 12 மணிநேரம் வேலை செய்து குறைவான கூலி பெறுவதை, இப்போது அனைத்து தொழிலாளருக்கும் பொதுவாக்கும் பணியை செய்கின்றனர்.

கடந்த காலங்களை விட ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்திக்கான நேரம் தொழில் துறையில் குறைந்துள்ளது. அதன் விளைவே உற்பத்தி அதிகரிப்பு ஏற்படுகிறது எனவும், மற்றொரு புறம் தொழிலாளி மீது உழைப்பு சுரண்டல் அதிகரிக்கிறது எனவும் தாமஸ் பிக்கட்டி, 21ஆம் நூற்றாண்டில் மூலதனம் எனும் நூலில் குறிப்பிடுகிறார். பணக்கார நாடுகளில் வேலை நேரம் குறையவும், ஓய்விற்கான நேரம் அதிகரிக்கவும் இதுவே காரணம் எனவும் பிக்கட்டி கூறுகிறார். இந்தியாவிலும் ஆலைகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான நேரம் குறைகிறது. ஒவ்வொரு தொழில்நுட்ப வளர்ச்சியையும் பயன் படுத்தி “சைக்கிள் டைம்” அதாவது பொருள் உற்பத்திக்கான நேரம் குறைக்கப்படுகிறது. அதன் மூலம் தொழிலாளர்களின் உபரி உழைப்பு நேரம் அதிகரிக்கிறது. எனவே வேலைநேரம் 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கு இந்தியாவில் அனுமதிப்பதை தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

இந்தியாவில் தற்போது வேலையின்மை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு வேலை வழங்க உற்பத்தி நேரத்தைக் குறைப்பதை முன்வைத்து திட்டமிட்ட முயற்சி வேண்டும். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் என்பதற்கு பதிலாக, மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தில் கூறியவாறு, வேலைநேரத்தை 6 மணிநேரமாக குறைக்க வேண்டும். அல்லது சி.ஐ.டி.யு அகில இந்திய மாநாட்டு தீர்மானம் கூறியதுபோல், ஒரு நாளைக்கு 7 மணிநேரம், வாரம் ஐந்து நாட்கள் பணி என்பதாக திருத்த வேண்டும். அதன் மூலம் மூலதனக் குவிப்பை கட்டுபடுத்துவதுடன், வேலை வாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்ட முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒட்டு மொத்தமாக இன்றைய கொரானா பொது முடக்க காலத்தில், முதலாளித்துவமும், பாஜக ஆட்சியாளர்களும் தொழிலாளர்களை கொள்ளையடிக்க எடுக்கும் முயற்சியை தடுக்கும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. மாற்று கோரிக்கைகளான, வேலைநேர குறைப்பு போன்றவற்றை முன் வைத்து, அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இந்தக் கோரிக்கைகளுக்காக ஒருங்கிணைப்பதே இன்றைய தேவையாகும்.

கொரோனாவும் கூட்டாட்சி தத்துவமும்

கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பதே ஜனநாயக அரசுகளின் அடிப்படைக் கூறாகும். இதை கவனத்தில் கொண்டே, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கும்போது இந்தியாவை “மாநிலங்களின் ஒன்றியம்” என வரையறை செய்யப்பட்டது. இந்தியாவின் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுக்கான அதிகாரங்களை கொண்ட மத்திய அரசு பட்டியல் எனவும், மாநிலங்களின் அதிகாரங்களைக் கொண்ட மாநில பட்டியல் எனவும் இரண்டு அரசுகளின் இணைந்து கவனிக்கிற ஒத்திசைவு பட்டியல் என்ற பொதுப்பட்டியல் கொண்டதாக அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டது.

விடுதலைப் போராட்ட காலத்தில் விவாதிக்கப்பட்ட கிராம ராஜ்ஜியம் என்ற கோட்பாட்டுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 73 மற்றும் 74வது திருத்தங்களின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்க வழி செய்யப்பட்டது. இது மூன்றாவது ஆட்சி முறை என வரையறை செய்யப்பட்டது.

மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என அழைக்கப்பட்டாலும், மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே அரசியல் அமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.  அரசியல் அமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்ட குறைந்தபட்ச மாநிலங்களுக்கான அதிகாரங்களைக்கூட இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் வழங்கியதாக வரலாறு இல்லை. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரும் பல மாநில கட்சிகள்கூட தங்களது ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க மறுத்துவிட்டன.  நடைமுறையில் மூன்றாவது ஆட்சிமுறை என்பது சொல்லாட்சியாகவே உள்ளது.   அதிலும், மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள பாஜக மாநில உரிமைகளை பறித்து ஒரு ஒற்றை ஆட்சி முறையை உருவாக்கும் நோக்கோடு அனுதினமும் செயல்பட்டு வருகிறது.

தற்போது உலகம் சந்தித்து வரும் கொரோனா கொடுமையை எதிர்த்த போராட்டத்திலும் மத்திய பாஜக அரசு அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கே விரோதமாக, கூட்டாட்சி தத்துவத்தை தவிடுபொடியாக்கும் வகையில், மாநிலங்களின் உரிமைகளை பறித்து வருவதை கண்கூடாக காண முடியும்.

கண்ணுக்கு தெரியாத கொரோனா கிருமி தாக்குதலால் உலகமே முடங்கிக் கிடக்கிறது.  இதன் ஒரு பகுதியாக ஒட்டுமொத்த இந்திய நாடும் கடந்த 50 நாட்களாக பொது முடக்கத்தால் செயலற்று இருக்கிறது.  நாட்டில் அடிப்படையான தொழில், தொழில் உற்பத்தி, விவசாய உற்பத்தி, வணிகம், அனைத்து வகையான போக்குவரத்து, கட்டுமானம், விளையாட்டு, சினிமா, கலை இலக்கியம், நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இயங்கவில்லை. 140கோடி மக்களும் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  முன்னெப்போதும் இல்லாத இத்தகைய கொடூர நிலைமையில் பொருளாதார பாதிப்புகளில் மூழ்கியுள்ள மக்களைப் பாதுகாப்பது, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது, பசி பட்டினியில் இருந்து மக்களைப் பாதுகாப்பது, ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுசெய்வது போன்ற கேந்திரமான பணிகளின் மூலம் மக்களைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளிடம் உள்ளது.  நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், தொற்று குறித்த சோதனைகளை மேற்கொள்வதற்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட கூடுதலான பணிகளை அரசுகள் நிறைவேற்ற வேண்டிய பெரும் சுமை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய கடமைகளை நிறைவேற்றி மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுடையது என்றபோதும், நேரடியாக மக்களோடு நெருக்கமான தொடர்பில் உள்ள மாநில அரசுகளின் மேல் விழுந்துள்ளது. மாநில அரசுகள் மேற்கண்ட இமாலய பணிகளை நிறைவேற்ற வேண்டுமெனில் வழக்கமான நிதி ஆதாரம் மட்டுமின்றி கூடுதலான நிதி அளித்தால் மட்டுமே இப்பணிகளை நிறைவேற்ற முடியும்.  நாடு சந்திக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு, நிதி, உணவுப்பொருள் உள்ளிட்ட அனைத்தையும் தாராளமாக வழங்குவதின் மூலமே கொரோனாவை எதிர்த்தப் போராட்டத்தில் இந்திய நாடு வெற்றிபெற முடியும்.

ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு இக்கடமைகளை நிறைவேற்றுவதில் நியாயமாக நடந்துகொண்டுள்ளதா? அரசியல் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டுள்ளதா? என்பதே இப்போதைய கேள்வி  ஆகும்.  மேலோட்டமாக ஆய்வு செய்து பார்த்தாலே மோடி அரசின் அணுகுமுறை கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது; மாநில உரிமைகளை பறிப்பது என்பது மட்டுமின்றி, மாநிலங்களையே இல்லாததாக்குவது என்பதாக, முழுமையான அரசியல் சட்டத்துக்கு விரோதமானதாக உள்ளது என்பதைக் காண முடியும்.

ஊரடங்கு உத்தரவுகள்

கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தனித்திருப்பது, தனி நபர் இடைவெளி கடைப்பிடிப்பது அவசியமான ஒன்றாகும்.  எனவே, இதுவரை அறிவிக்கப்பட்ட 4 ஊரடங்கு உத்தரவுகளையும் இந்திய நாட்டு மக்கள் முழுமனதோடு ஏற்று அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்துள்ளார்கள்.  அனைத்து அரசியல் கட்சிகளும் ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து கருத்து தெரிவிக்காமல் மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.   ஆனால், இந்த பரவல் தொற்று நோய் தொடர்பாக ஊரடங்கு உத்தரவினை பிறப்பிப்பதற்கு மத்திய அரசுக்கு இந்திய அரசியல் சட்டத்தின்படி அதிகாரங்களே இல்லை என்பது வெள்ளிடைமலை.

ஒவ்வொரு முறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும்போதும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன்படி பல விதிமுறைகளை உருவாக்கி அதை செயல்படுத்த வேண்டுமென மாநில அரசுகளின் மீது மத்திய அரசு அழுத்தம் தருகிறது.  இந்த விதிமுறைகளை மாற்றவோ, திருத்தவோ கூடாது எனவும் கட்டாயப்படுத்தி வருகிறது. இந்த விதிகளை உருவாக்கி நாடு முழுவதும் அமலாக்க வேண்டுமென கட்டாயப்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு என்ற பெயரில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட அணுகுமுறையினை உருவாக்கி மாநில அரசுகளை, அவைகளை நிறைவேற்றுகிற ஒரு நிர்வாக அமைப்பாக மாற்றிவிட்டது மோடி அரசு.  மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என பிரித்து பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.  இவ்வாறு செய்யும்போது மாநில அரசுகளை குறைந்தபட்சம்கூட கலந்து பேசவில்லை.

சில மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் சிவப்பு மாவட்டங்களாக பட்டியலிடப்பட்டதை எதிர்த்து குரல் எழுப்பின.  சில மாநிலங்களில் பெரிய பரப்பளவை கொண்ட சில மாவட்டங்களை சிவப்பு மாவட்டங்களாக அறிவித்ததை ஏற்க முடியாது என மறுத்தன.  இத்தகைய பெரிய மாவட்டங்களில் கொரோனா பாதித்த குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் சிவப்பு பகுதியாக அறிவிக்காமல் ஒட்டுமொத்த மாவட்டத்தையே முடக்கி வைப்பது அவசியமற்றது என்பது மட்டுமின்றி அவ்வாறு செய்வது பொருளாதார நெருக்கடிக்கு வித்திடும் என கருத்து தெரிவித்தன.  ஆனால், மத்திய அரசு, மாநில அரசுகளின் இந்த நியாயமான கோரிக்கைகளைக்கூட பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் தாங்கள் மேற்கொண்ட விதிகளில் சிறிய மாற்றத்தைக்கூட செய்வதற்கு மத்திய அரசு இசைவு தெரிவிக்கவில்லை. இதுமட்டுமின்றி கேரள அரசு வெற்றிகரமாக கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியுள்ள நிலையில் சில ஊரடங்குக் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என அறிவித்தபோது உள்துறை அமைச்சகம் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அதை அனுமதிக்கவில்லை.

அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடி நான்கு முறை ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.  இவ்வாறு பிரதமர் ஊரடங்கினை அறிவிப்பது, அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என்பது மட்டுமல்ல, மக்களுக்கும் பெருந்தொல்லைகள் அளித்துள்ளது.  மாநிலங்களுடன் கலந்து பேசாமல், எந்த முன்தயாரிப்பும் இல்லாமல், அதிரடியாக ஊரடங்கை அறிவிப்பதால், இந்திய நாட்டு மக்கள் எண்ணில் அடங்காத கொடுமைகளை சந்தித்து வருகின்றனர்.  உதாரணமாக பிரதமர் மார்ச்-24 ஆம் தேதி, காணொலி காட்சியில் தோன்றி, அதிரடியாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு என அறிவித்தார்.  அதன் பின்னரும் தொடர்ந்து ஊரடங்கு நீடிப்பு செய்து அறிவிக்கப்பட்டது.  அதிரடியாக ஊரடங்கு அறிவித்த காரணத்தால் பலகோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கல்வி, தொழில், வியாபாரம், சுற்றுலா போன்றவைகளுக்காக பல மாநிலங்களுக்கு சென்றவர்கள் ஊர்திரும்ப முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். மாநிலத்துக்கு உள்ளேயே பல காரணங்களுக்காக வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டார்கள்.  அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு எந்த ஏற்பாடும் செய்துகொள்ள முடியாமல் மக்கள் விழி பிதுங்கி நின்றனர்.

பிரதமர் அறிவிப்பதற்கு முன்னரே ஊரடங்கினை மாநிலங்களின் சில பகுதிகளில் சம்பந்தப்பட்ட முதலமைச்சர்கள் அறிவித்த இடங்களில் இந்த நெருக்கடிகள் ஏற்படவில்லை. இதைப்போல முழு ஊரடங்கினை மாநில முதலமைச்சர்கள் மூலம் அறிவிக்கிற ஏற்பாட்டினை பிரதமர் செய்திருந்தால் ஊரடங்க காலத்தில் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், நெருக்கடிகள் பெரும்பகுதி தவிற்திருக்க முடியும்.

ஒருவேளை, கொரோனாவை எதிர்த்த போராட்டத்தை வீரியத்துடன் நடத்த வேண்டுமென்ற அக்கறையில் பாரதப்பிரதமர் இத்தகைய ஊரடங்கினை அறிவித்தார் என வாதிடக்கூடும். ஆனால், இது உண்மைக்கு மாறானது. பிப்ரவரி மாதமே உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அந்நாட்டு அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, மோடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகைக்கான ஏற்பாடுகளில் மூழ்கி இருந்தார். பிப்ரவரி மாத கடைசியில் கொரோனா வேகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மோடி குஜராத்தில் உருளைக்கிழக்கு விவசாயிகள் மாநாட்டில் பேசிக்கொண்டிருந்தார். கொரோனாவுக்கான மருத்துவ உபகரணங்களுக்கு பல நாடுகள் அல்லாடிக்கொண்டிருந்தபோது, சீனாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்தேன் என பெருமை பேசிக்கொண்டிருந்தார். மார்ச் மாதம் கேரளாவில் சில மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்கான ரசவாத பணிகளில் ஈடுபட்டிருந்தார். உண்மையில், பிரதமர் மோடிக்கு கொரோனா குறித்த அக்கறை இருந்திருக்குமேயானால், பிப்ரவரி மாதத்திலேயே மாநிலங்களை உஷார்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்க முடியும். இதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்றை தொடக்கத்திலேயே தடுத்திருக்க முடியும் என்பதோடு, நீடித்த ஊரடங்குகள்கூட அவசியம் இல்லை என்ற நிலையை உருவாக்கியிருக்க முடியும்.

இதில் இன்னொரு முக்கியமான அம்சமும் உள்ளது. “பேரிடர் மேலாண்மை சட்டம்-2005” என்பது பலவிதமான பேரிடர்கள் குறித்த வரையறுப்புகளைக் கொண்ட சட்டமாகும். இச்சட்டத்தில் பெருந்தொற்று (epidemic) நோய்கள் இடம்பெறவில்லை. ஆனால், மத்திய அரசு, இந்த சட்டத்தின்கீழ் கோவிட்-19க்கான விதிகளை உருவாக்கி, அதை மாநில அரசுகளின் தலைகளில் திணித்து அமலாக்கக் கோருவது அரசியல் சட்டத்துக்கே விரோதமானதாகும். இது மட்டுமின்றி, பொது சுகாதாரம், நோய், மருத்துவம் ஆகிய இத்துறைகள் அனைத்தும் மாநில அரசுகளின் அதிகார எல்லைக்குள் உள்ளதாக அரசியல் சட்டம் வகுத்து அளித்துள்ளது. மாநில அரசுகளின் அதிகாரங்களுக்கு உட்பட்ட துறைகளில், மாநில அரசுகள் மட்டுமே விதிகள், உத்தரவுகள், நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இத்துறைகளில் எந்த சூழ்நிலையிலும் மத்திய அரசு மூக்கை நுழைக்கக் கூடாது.

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள பல்வேறு தீர்ப்புகளில் இந்திய அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி கோட்பாட்டில் மத்திய அரசு கூடுதலான அதிகாரங்களைக் கொண்டிருந்த போதிலும், மாநிலங்கள் சுயாதிபத்திய உரிமை கொண்டதென அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது. இதன் அர்த்தமென்னவெனில், மாநிலங்களுக்கு வகுத்தளிக்கப்பட்டுள்ள உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது அரசியல் சட்ட அடிப்படைக்கு விரோதமானது என்பதே. ஆனால், கோவிட்-19 என்ற பெருந்தொற்று பரவல் நோய் குறித்த அனைத்து நடவடிக்கைகளும்.. அதாவது நோய் தடுப்பு, மருத்துவ சிகிச்சை, சுகாதாரப்பணிகள் உள்ளிட்டவைகளில் உத்தரவுகளை பிறப்பிக்கவும், அரசாணைகளை பிறப்பித்து செயல்படுத்தவும், மாநில அரசுகளே அதிகாரம் கொண்டவைகளாகும். இந்த சட்ட வரம்புகளை மீறிய மத்திய மோடி அரசு, கோவிட்-19 தொடர்பான விதிகளை உத்தரவுகளாக பிறப்பித்து செயல்படுத்தி வருகிறது.

பெருந்தொற்று நோய்கள் சட்டம்

பெருந்தொற்று பரவல் நோய் மீதான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கான ஒரு சட்டம் பிரட்டிஷ் அரசால் நிறைவேற்றப்பட்டு, இன்றும் அது அமலில் உள்ளது. இச்சட்டத்திற்கு “பெருந்தொற்று நோய்கள் சட்டம்-1897 (Epidemic diseases Act-1897) “என அழைக்கப்படுகிறது. சுமார் 120 ஆண்டுகளை கடந்துவிட்டதால் இச்சட்டம் அமலில் இருக்க வாய்ப்பில்லை என சிலர் கருதக்கூடும். ஆனால், உண்மை என்னவெனில் இப்போதும் இச்சட்டம் அமலில் இருப்பதும், இச்சட்டத்தை பயன்படுத்தி சில மாநில அரசுகள் கோவிட்-19 காலத்தில் ஊரடங்கினை பிறப்பித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. மோடி அரசு ஊரடங்கினை பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ஐ பயன்படுத்தி கோவிட்-19 காலத்தில் முதன்முறையாக மார்ச்-22ல் ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்னாலேயே கேரள அரசு பெருந்தொற்று நோய்கள் சட்டம்-1897ஐ பயன்படுத்தி கேரளாவின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. இதேபோல, இதர சில மாநிலங்களும் இச்சட்டத்தை பயன்படுத்தி தங்கள் மாநிலத்தில் ஊரடங்கினை பிறப்பித்துள்ளன.

இச்சட்டம் பெருந்தொற்று நோய், பரவல் நோய் உள்ளிட்ட நோய்கள் மீதான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்வதற்கென்றே உருவாக்கப்பட்ட சட்டமாகும். கடந்த பல்லாண்டுகளில் இச்சட்டத்தின்படியே நோய் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்வதும், அந்நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஊக்கமளிப்பதும் நடைமுறையில் இருந்து வருகிறது- இச்சட்டத்தில், மத்திய அரசுக்கு ஒரு வாய்ப்பு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பெருந்தொற்று பரவல் நோய் ஏற்பட்ட காலங்களில் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோரையும், வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டுக்கு வருவதையும், மாநிலங்களுக்கு இடையில் பயணிப்பவர்களையும் கண்காணித்து முறைப்படுத்துவதற்கான பணிகளை மட்டுமே மத்திய அரசு செய்ய முடியும்.

ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கண்ட சட்டங்களுக்கு விரோதமாக மாநில அரசுகளின் இறையாண்மையை தவிடுபொடியாக்கி, மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லாத கோவிட்-19 பெருந்தொற்று பரவல் தொடர்பாக அனைத்து விதிமுறைகளையும் உருவாக்கி மாநில அரசுகளின் மீது திணித்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள், பகிரங்கமாக அரசியல் சட்டத்தை மீறுவது என்பதோடு, கூட்டாட்சி தத்துவத்துக்கு சமாதி கட்டுவதுமாகும்.

பிஎம்-கேர்

கோவிட்-19ஐ பயன்படுத்தி, பிரதமர் மோடி தலைமையில் பிஎம்-கேர் என்ற புது நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு விடுதலை அடைந்தது முதல் இத்தகைய இடர்ப்பாடு காலங்களில் உதவி செய்வதற்கென பிரதம மந்திரி நிவாரண நிதி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக, இந்த புதிய திட்டத்தினை மோடி அரசு உருவாக்கி உள்ளது. இந்நிதியினை பராமரிப்பதற்கும், முறைப்படுத்துவதற்கும், தணிக்கை செய்வதற்குமான ஏற்பாடுகள் எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

70 ஆண்டுகளுக்கு மேலாக பிரதம மந்திரி நிவாரண நிதி அமலில் இருக்கும்போது, இத்தகைய புதிய திட்டம் ஏன் என்ற கேள்விக்கு நியாயமான பதிலும் அளிக்கப்படவில்லை. இந்த நிதி திரட்டல் ஏற்பாட்டிலும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன. தொழில் நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 2%ஐ சமூக சேவை திட்டங்களுக்கு(சிஎஸ்ஆர்) செலவழிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த சிஎஸ்ஆர் நிதியை கம்பெனி நிர்வாகங்கள் புதிதாக துவக்கப்பட்டுள்ள பிஎம்-கேர் நிதிக்கு தாராளமாக அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே சமயம், மாநில முதலமைச்சர்கள் தலைமையில் உள்ள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கம்பெனி நிர்வாகங்கள் இந்த சிஎஸ்ஆர் நிதியை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தொழில் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நிதியை பிஎம்-கேர் நிதிக்கு மட்டுமே அளிக்க முடியும். நிதி பற்றாக்கறையில் தடுமாறும் மாநில அரசுகளுக்கு நிதி கிடைக்கும் வாய்ப்புகள் இதன் மூலம் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்கான சோதனைகள், மருத்துவ கட்டமைப்புகளை பலப்படுத்துவது, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது, நோய் தொற்று பாதித்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது, மாநிலம் முழுவதும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது போன்ற போன்ற அடுக்கடுக்கான பணிகளை கவனிக்க வேண்டிய கட்டாயம் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டது.

இன்னொரு பக்கம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த அனைத்துப் பகுதி மக்களுக்கும் உணவு, அடிப்படைத் தேவைகள் மற்றும் நிவாரணங்களை வழங்க வேண்டிய பெரும் பணிகளை சமாளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இத்தகைய பணிகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகப்படியான நிதி மற்றும் மருத்துவ உபகரணங்கள், அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் அனைத்தும் தேவை ஏற்பட்டன. நாட்டில் உள்ள மாநில அரசுகளும் இந்தத் தேவைகளை ஈடுகொடுக்க முடியாமல், மூச்சுத்திணறும் நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தன. மருத்துவத் தேவைகளை ஈடுகொடுப்பதற்கும், மக்களின் வாழ்வாதார தேவைகளை ஈடுகொடுப்பதற்கும் தங்களது சொந்த நிதி ஆதாரத்திலிருந்து மாநில அரசுகள் ஓரளவுக்கே ஈடுகொடுக்க முடிந்துள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கிற மருத்துவ மற்றும் நிவாரண ஏற்பாடுகள், யானை பசிக்கு சோளப்பொறி இட்டது போலவே உள்ளன.

கொரோனா நோய் தொடர்பான மருத்துவப் பணிகளுக்கும் பொருளாதார இழப்பீடுகளை ஈடுசெய்வதற்கும் மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து அதிக நிதி அளிப்பதன் மூலமே கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் மத்திய மோடி அரசு மாநில அரசுகள் வற்புறுத்தி பல முறை கோரிக்கை எழுப்பிய போதிலும் போதிய நிதி அளிக்க மறுத்துவிட்டது.

உதாரணமாக, தமிழக முதல்வர் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள நிதித்தேவை குறித்து ஏப்ரல் முதல் தேதி விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அக்கடிதத்தில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் உடனடியாக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் எனவும், அதில் தமிழ்நாட்டிற்கு ரூ. 9,000 கோடி அளிக்க வேண்டும் எனவும், அதே போல 20-21ஆம் ஆண்டிற்கு மாநில அரசுக்கு 33% கூடுதல் கடன் வாங்கிக் கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டுமெனவும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 3000 கோடியும், நெல் கொள்முதல் செய்வதற்கு ரூ. 1321 கோடியும் தேசிய பேரிடர் நிதியிலிருந்து முன்பணமாக ரூ. 1000 கோடியும் கோரியிருந்தார். இது மட்டுமின்றி, ஏற்கனவே தமிழகத்திற்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை மானியமாக 15வது நிதிக்குழுவின் சிபாரிசுப்படி ரூ. 4023 கோடியும் ஜிஎஸ்டி வரிப் பகிர்வில் மத்திய அரசு அளிக்க வேண்டிய பங்குத் தொகை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கொடுக்க வேண்டிய தொகை போன்ற பல தலைப்புகளில் ரூ.16,400 கோடி அளித்திட வேண்டுமெனவும் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் மத்திய அரசு இதுவரையில் மாநில அரசுக்கு வழங்கியுள்ள மொத்தத் தொகை ரூ. 6,420 கோடி மட்டுமே. அதாவது வரிவருவாயில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ. 1,928 கோடியும் வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 402 கோடியும் 2019-2020 டிசம்பர் ஜிஎஸ்டி பங்களிப்பாக ரூ. 1,369 கோடியும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ. 510 கோடியும் கிராமப்புற சுகாதார திட்டங்களுக்காக ரூ. 312 கோடியும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு ஏற்கனவே அளிக்க வேண்டிய பாக்கித் தொகையில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை மட்டுமே அளித்துள்ளது. இதில் வேதனை என்னவெனில், கொடூரமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட சிறப்பு நிதியாக வழங்கவில்லை என்பதுதான். மேலும் மாநில அரசு கடன் பெறுவதற்கான அனுமதியைக் கூட மத்திய அரசு வழங்க மறுத்துவிட்டது.

மாநில அரசுகள் ஏற்கனவே நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. நிதி வரவு-செலவில் பற்றாக்குறை ஏற்பட்டு கடனில் மூழ்கி வருகின்றன. தமிழக அரசின் கடன் சுமை நடப்பு ஆண்டோடு சேர்த்து ரூ. 4,56,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வட்டிக்காக மட்டும் ரூ. 30,000 கோடி வரை செலுத்த வேண்டியுள்ளது. நடப்பாண்டில் கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் சொந்த வருவாய் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் சொந்த வரிவருவாய் உற்பத்தி இழப்புகளாலும் வியாபார மந்தத்தினாலும் பெரும் சரிவு ஏற்படும். பத்திரப் பதிவு, டாஸ்மாக் விற்பனை, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி வருவாய் எதிர்பார்த்ததை விட சரிபாதியாகக் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதேசமயம் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளால் மாநில அரசின் செலவினங்கள் உயர்ந்து கொண்டே வருகின்றன. உதாரணமாக, கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு ரூ 3218 கோடி ஒதுக்கியதுடன் மருத்துவம், சுகாதாரப் பணிகளுக்கு கூடுதலான செலவுகளை மேற்கொண்டுள்ளது. ஒருபக்கம் நிதி நெருக்கடி இன்னொரு பக்கம் கூடுதல் நிதி செலவினங்கள் என்ற இருமுனைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி்யுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவியினால் மட்டுமே மக்களைக் காப்பாற்ற இயலும். ஆனால் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் மாற்றாந்தாய்ப் போக்கு மாநில அரசுகளை முடக்கிப் போட்டுவிடும் ஆபத்தானதாகும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்றரை மாதங்கள் முடிந்துவிட்டன. ஐம்பது நாட்களுக்கு மேலாக ஊரடங்குகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. இருந்தபோதிலும், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதிலும், மருத்துவ சோதனைகள் நடத்துவதிலும், நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், இன்னொரு பக்கம் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு, தொழில் உற்பத்தி பாதிப்பு, ஏழை-நடுத்தர மக்களின் வாழ்வாதார இழப்புகளை மீட்டெடுப்பதிலும் மத்திய மாநில அரசுகள் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன.

இத்தகைய தோல்விக்கான அடிப்படை காரணங்களைக் கண்டறிய வேண்டும். உலகம் இதற்கு முன் கண்டிராத நோய்த் தொற்றால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனை எதிர்கொள்ள உலகின் பல நாடுகள் கூடுதலான நிதியினை ஒதுக்கி மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. உதாரணமாக, ஜப்பான் 71.1%, அமெரிக்கா 13%, ஸ்வீடன் 10%, பிரான்ஸ் 9.3%, ஸ்பெயின் 7.3% என தங்களது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் இந்த விகிதங்களை ஒதுக்கியுள்ளன. ஆனால் 132 கோடி மக்களை கொண்ட இந்திய நாட்டில் பாஜக அரசு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிய நிதி ரூ 1.7 லட்சம் கோடி மட்டுமே. அதாவது இந்திய நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 1% கூட இல்லை. மேலும் ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு அமுலாக்கப்பட்டு வரும் சில திட்டங்களுக்கான நிதியும் இந்தத் தொகையில் அடங்கும். அவைகளை நீக்கிவிட்டு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை 0.6% என நிபுணர்கள் தெரிவித்துள்ளதில் இருந்து கொரோனா எதிர்ப்புப் போராட்டத்தில் மோடி அரசின் அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும். இதற்கான அறிவிப்புகளில் மத்திய அரசே நேரடியான நிவாரண உதவிகளை பெயரளவிற்கு அறிவித்ததே தவிர, இத்தொகையில் மாநில அரசுகளுக்கான பங்கீட்டுத் தொகையாக ஏதும் வழங்கவில்லை.

கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி நோய்த்தடுப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழும்பியுள்ள நிலையில் தற்போது ரூ. 20 லட்சம் கோடியை ஒதுக்கி உள்ளதாக மோடி அறிவித்துள்ளார். இதற்கான நிவாரணத் திட்டங்கள் தவணை முறையில் நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்புகளை எல்லாம் உற்று நோக்கினால் நேரடியாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மாறாக வங்கிகளில் கடன் வழங்குவது; கடன் தவணை காலக்கெடுவை நீட்டிப்பது போன்ற வெற்று அறிவிப்புகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. நேரடியான நிவாரண நிதி எதையும் ஒதுக்காமல், ரூ. 20 லட்சம் கோடியை ஒதுக்கி விட்டதாக இமாலய கட்டுக்கதைகளை பிரதமர் மோடியால் மட்டுமே எழுத முடியும்.

இந்த நிலைமைக்கு மாறாக உண்மையிலேயே கையில் கிடைத்த அதிகாரங்களைக் கொண்டு கொரோனா பாதிப்பை வெற்றிகரமாக ஒரு மாநிலம் எதிர்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது கேரளா மட்டும்தான். அங்கு மட்டும் இது எப்படிச் சாத்தியமானது? கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ரூ. 20,000 கோடியினை ஒதுக்கியது மட்டுமின்றி அதில் சரிபாதி நிதியையும் அதிகாரங்களையும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அளித்தது என்பதுதான் கொரோனாவை வெற்றிகரமாக அந்த மாநிலம் எதிர்கொண்டதில் இருக்கும் சூட்சுமம் ஆகும். மாநில அரசின் அழைப்பை ஏற்று உள்ளாட்சி மன்றங்கள் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் நேரடியாக மக்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் கேரளத்தில் 1400க்கும் மேற்பட்ட சமுதாய சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் உணவு உறுதி செய்யப்பட்டது. இவற்றை நடத்துவது ஆங்காங்கே உள்ள உள்ளாட்சி மன்றங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரப் பணிகள் முழுவதையும் உள்ளாட்சி அமைப்புகளே செய்கின்றன. பல நூற்றுக்கணக்கான கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள், மற்ற நோயாளிகளுக்கு பாதுகாப்பு மையங்களை உள்ளாட்சி மன்றங்களே ஏற்படுத்தின. இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் மாநில அரசு உள்ளாட்சி மன்றங்களுக்கு நிதி உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து தந்தது. கேரளத்தில் உள்ளாட்சி அமைப்பின் ஒரு பகுதியாகவே பெண்களின் மேம்பாட்டுக்கான குடும்பஸ்ரீ திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக இன்னும் களத்தில் முழுமையாக உள்ளாட்சி அமைப்புகளால் செயல்பட முடிந்திருக்கிறது. இந்தியா முழுவதும் கொரோனா பரவலும் பாதிப்பும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகாரப்பரவல் மூலமாகத்தான் கேரளா அரசு அதைக் கட்டுப்படுத்தியிருக்கிறது.

எனவே கொரோனா பாதிப்பு, அதைக்கட்டுப்படுத்துவது என்பது முற்றிலும் மருத்துவம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல; அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மத்திய அரசே அனைத்து அதிகாரங்களையும் நிதியையும் தன்வசம் குவித்துக்கொள்ளாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக உள்ள கூட்டாட்சி தத்துவம் என்ற கோட்பாட்டை உறுதியாகப் பின்பற்றி மாநிலங்களுக்கு முழுமையான அதிகாரம், கூடுதல் நிதி; உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம், சரிபாதி நிதி ஒதுக்கீடு என முழுமையான அதிகாரப்பரவல் மட்டுமே கொரோனா உள்ளிட்ட எத்தகைய நெருக்கடியையும் திறம்பட எதிர்கொள்வதற்கான வழியாகும். மத்திய அரசுக்கு அதை உணர்த்த வேண்டியதும், செயல்படுத்த வைக்க வேண்டியதும் நமது கடமையாகும்.