திரிபுராவில் மீண்டும் இடது முன்னணி அரசு மாற்றுப் பாதைக்கு கிடைத்த வெற்றி

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி அரசு தொடர்ந்து 5-வது முறையாக 6-3-2013 அன்று அரசுப்பொறப்பேற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. தோழர் மாணிக் சர்க்கார் தலைமையில் இடதுமுன்னணி 5 வது முறையும், ஒட்டுமொத்த இடது முன்னணி 7-வது முறையும் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் மொத்த முள்ள 60 தொகுதிகளில் இடதுமுன்னணி 49ல் வெற்றி பெற்றது. தற்பொழுது 50 தொகுதிகளில் வெற்றி பெற்று (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 49, மற்றும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி 1) சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி இடதுமுன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும், செயல்முறைக்கும் கிடைத்த வெற்றி என திரிபுரா மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

1978-ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி ஒரு முறையைத் தவிர (1988-1993) தொடர்ந்து திரிபுராவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது. பதிவான வாக்குகளில் 52.30 சதவிகித வாக்குகளை இடதுமுன்னணி பெற்றுள்ளது. பழங்குடி மக்களுக்கான 20 தொகுதிகளில் 19 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை திரிபுராவில் தோற்கடிப்பதோடு நாட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக மகுடம் சூட்டப்பட்ட ராகுல் காந்தி திரிபுரா தேர்தல் பிரச்சாரத்தில் கொக்கரித்தார். மார்க்சிஸ்ட்டுகள் விரட்டப்பட வேண்டியவர்கள் அல்ல வளர்க்கப்பட வேண் டியவர்கள் என திரிபுரா மக்கள் தீர்ப்பளித்துள் ளனர். தொடர்ந்து 17-வது முறையாக இடது முன்னணி மக்கள் ஆதரவோடு வெற்றி பெறு வதற்கான பின்னணி என்ன?

தேசிய அளவிலும், திரிபுராவிலும் காங்கிரஸ், பாஜக கடைபிடிக்கும் அரசியல் பொருளாதார கொள்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும்  மாற்றுக்கொள்கையை திரிபுராவின் நிலைமைக் கேற்ப அமலாக்குவதன் மூலமே தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று வருகிறது. திரிபுராவின் மூன்று பக்கங்களும் வங்காள தேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. நமது நாடு 1947ல் சுதந்திரம் அடைந்த போதிலும், மன்னராட்சியின் கீழ் இருந்த திரிபுரா 1949ல் தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. 1972-ல் திரிபுரா விற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. திரிபுரா உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களும் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலைமையில் இருந்தன. 1978- வரையில் காங்கிரஸ் கட்சியே திரிபுராவில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது.

1978-ம் ஆண்டு மறைந்த தோழர் நிருபன் சக்ரவர்த்தி தலைமை யில் இடதுமுன்னணி ஆட்சிக்கு வந்தது.  30 சதவிகிதம் மலைவாழ் மக்களும், 70 சதவிகிதம் வங்காளிகளும் வாழக்கூடிய இம்மாநிலத்தின் தற்போதைய மக்கள் தொகை 37 லட்சம். 1978-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுமுன்னணி ஆட்சி அமைத் ததை பொறுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி வங்காளிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கும் இடையில் மோதலை உருவாக்கி திரிபுராவை கலவர பூமியாக மாற்றியது. மலைவாழ் மக்களின் வறுமைக்கும், ஏழ்மைக்கும் காரணம் வங்காளி கள்தான் என மலைவாழ் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டுமென கோரிக்கை வைத்து மலைவாழ் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை காங்கிரஸ் கட்சி தூண்டி விட்டது. மறுபுறத்தில் வங்காளிகளையும் மலைவாழ் மக்களுக்கு எதி ராக காங்கிரஸ் கட்சி மோத விட்டது.

1980ல் துவங்கி தொடர்ந்து பல ஆண்டு காலம் மலைவாழ் மக்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையில் மோதல் நீடித்தது. திரிபுரா யுவஜாதி சமிதி TUJS) என்ற தீவிரவாத அமைப்புடன் காங்கிரஸ் கட்சி இணைந்து மாநிலத்தின் பல பகுதிகளில் கலவரத்தை உருவாக்கியது. மலை வாழ் மக்களுக்கும் மற்ற பகுதி மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு காங்கிரஸ் டி.யு.ஜே.எஸ். உரு வாக்கிய கலவரத்தில் இதுவரையில் 1300க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தவர்களும், வங்காளி களும் கொல்லப்பட்டனர். 1980ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி மாநிலத் தலைநகரம் அகர்தலா விற்கு 30 கிலோ மீட்டருக்கு அருகில் உள்ள மந்த்வி என்ற கிராமத்தில் டியுஜேஎஸ் அமைப் பைச் சார்ந்தவர்கள் தாக்கி மலைவாழ் மக்கள் அல்லாதவர்கள் சுமார் 350 பேர் கொல்லப்பட்ட னர். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதா னோர் உள்ளிட்டு படுகொலை செய்யப்பட்டனர். வியத்நாம், மைலாய் படுகொலையை விட மோச மானது என பத்திரிகைகள் இச்சம்பவத்தை விளக்கியது. தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மலைவாழ் மக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்க காங்கிரஸ் கட்சியும், தீவிரவாத அமைப்புகளும் மோதலை உருவாக்கின. திரிபுரா மாநிலத்தின் மூன்று பகுதிகள் வங்காளதேசத்தால் சூழப்பட்டுள்ள நிலைமையைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் வங்காளதேசத்திற்குள் சென்று அங்கு பயிற்சி பெற்று திரிபுராவிற்குள் நுழைந்து கலவரத்தை உருவாக்கினர். அனைத்து திரிபுரா புலிகள் இயக்கம் மற்றும் பல பெயர்களில் பல தீவிரவாத அமைப்புகள் திரிபுராவில் காங்கிரஸ் ஆதர வோடு இயங்கி வருகின்றன. 1980ல் துவங்கிய வன்முறை தொடர்ந்து நீடித்தது. 2003ம் ஆண்டு நிகழ்ந்த 311 சம்பவங்களில் 38 பாதுகாப்பு படையைச் சார்ந்தவர்கள் உள்ளிட்டு 241 பேர் கொல்லப்பட்டனர். 2009ம் ஆண்டில் நிகழ்ந்த 24 சம்பவங்களில் 10 பேர் கொல்லப்பட்டனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட திரிபுரா பழங்குடி தேசியவாத கட்சி  என்ற தீவிரவாத அமைப்புடன் உடன்பாடு வைத்து கலவரத்தை உருவாக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து தோல்வியுற்றது.

இந்நிலையில் துவக்கத்திலிருந்தே ஒற்றுமை, முன்னேற்றம் என்ற இரண்டு முழக்கங்களை முன் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக் களைத் திரட்டியது. கலவரத்தை உருவாக்கி 1988ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அடுத்து நடந்த தேர்தலில் மீண்டும் இடது முன்னணி ஆட்சிப் பொறுப்பேற்றது. திரிபுராவில் அமைதியையும், மக்கள் ஒற்று மையையும் உருவாக்குவதோடு பின்தங்கிய நிலைமையில் உள்ள மலைவாழ் மக்கள் முன் னேற்றத்திற்காக திட்டமிட்டதோடு திரிபுரா முழுவதும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட வளர்ச்சிக்கான ஒரு திட்டத்தை உரு வாக்கி இடது முன்னணி அரசு அமலாக்கி வரு கிறது. குறிப்பாக திரிபுரா உள்ளிட்டு நாடு முழு வதும் நாட்டு மக்கள் தொகையில் 8 சதவிகிதமாக உள்ள மிகவும் பின்தங்கிய மலைவாழ் மக்கள் பொருளாதார சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டவர்கள். 1947க்குப் பிறகு மத்திய அரசு கடைபிடித்து வரும் கொள்கையினால் மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நிலத்தி லிருந்தும் அவர்கள் வாழக் கூடிய வாழ்விடத்தி லிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகி றார்கள். அவர்களுக்கு நவீன கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒட்டு மொத்தத்தில் நாட்டு வளர்ச்சியிலிருந்து புறக் கணிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்களின் பொரு ளாதார, கலாச்சார, சமூக பிரச்சனைகளில் முன் னேற்றம் காணவேண்டும். இல்லையேல் அவர் கள் அந்நியப்பட்டு பிரிவினைவாத இயக்கத்திற்கு ஆட்படக்கூடிய ஆபத்து ஏற்படும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு மலை வாழ் மக்கள் பிரச்சனை பற்றி விவாதித்து உரு வாக்கிய அணுகுமுறை சுட்டிக்காட்டியுள்ளது. மலைவாழ் மக்களின் கீழ்க்கண்ட பிரச்சனை களை தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு ஆவணம் வலியுறுத்துகிறது.

  1. நிலத்திலிருந்து மலைவாழ் மக்கள் வெளி யேற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
  2. வனவளத்தை பயன்படுத்திட மலைவாழ் மக்களை அனுமதித்திட வேண்டும்.
  3. வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றப் படுவது தடுக்கப்பட வேண்டும்.
  4. மலைவாழ் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றம்
  5. மலைவாழ் மக்கள் மீதான சமூக ஒடுக்கு முறைக்கு முடிவு கட்ட வேண்டும்.
  6. கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்
  7. மலைவாழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
  8. மலைவாழ் மக்களுக்கு அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சுயாட்சி கவுன்சில் அமைக்கப் பட்டு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட மத்தியக்குழுவின் வழிகாட்டு தலின் படி திரிபுராவில் இடது முன்னணி அரசு திரிபுரா முழுவதற்கும் மற்றும் மலைவாழ் மக்களுக்கு பல வளர்ச்சித் திட்டங்களை உரு வாக்கி அமலாக்கி வருகிறது. 1984ம் ஆண்டு மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளை கொண்ட சுயாட்சி மாவட்டக் கவுன்சிலை (அரசியல் சட்டத்தின் 7வது அட்ட வணையின்படி) இடது முன்னணி அரசு அமைத்தது.  ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் சுயாட்சி கவுன்சில் தேர்வு செய் யப்பட்டு அதன் தலைவரும் தேர்வு செய்யப்படுகிறார். சுயாட்சி கவுன்சிலுக்கு உட்பட்ட மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சிக்காக திட்டமிடும் அதிகாரமும் இந்த கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் சுயாட்சி கவுன் சில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அமலாக்கி வருகிறது.

மலைப்பகுதியான இப்பிர தேசங்களில் கல்வி, சுகாதாரம், சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவற்றில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு விவசாயமும் வளர்ந்து வருகிறது. சுயாட்சி கவுன்சிலுக்கு உட்பட்ட கில்லா ஒன்றியம் கடந்தாண்டு சிறந்த வளர்ச்சிக்கான அகில இந்திய அளவிலான விருது பெற்றுள்ளது. மேலும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அமலாக்குவதிலும் திரிபுரா மாநிலம் முன்னணியில் உள்ளது. மூன்று புறமும் வங்காள தேசத்தால் சூழப்பட் டுள்ளதால் இந்தியாவின் மற்ற மாநிலங்களி லிருந்து இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் சரியான வாய்ப்பு இல்லை, வங்க தேசத்தில் உள்ள சிட்ட காங் துறைமுகத்திலிருந்து திரிபுராவிற்கு இறக்கு மதி, ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பை இந்திய அரசு ஏற்படுத்தி கொடுக்காததாலும் மற்ற மாநிலங்களிலிருந்து பல வகைகளில் சாலை மற்றும் ரயில்போக்குவரத்து இல்லாத நிலையில் திரிபுரா உள்ளது. மேற்குவங்கத்திலிருந்து தரைப் போக்குவரத்து மற்றும் ரயில்வே போக்குவரத்து மூலம் திரிபுரா செல்லவேண்டுமென்றால் சுற்றி வளைத்து அசாம் வழியாக நீண்டதூரம் செல்ல வேண்டும். இது பொருளாதார ரீதியில் லாபகர மானதல்ல. இத்தகையச் சூழலிலும் திரிபுரா மற்ற வடகிழக்கு மாநிலங்களை விட வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. வறுமை ஒழிப்பு:

திரிபுராவிற்கு மலைவாழ் மக்கள் பகுதி அல்லாமல் மற்ற பகுதிகளிலும் இடது முன்னணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எல்லா அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய திட்டக்குழுவின் ஆய்வின் படி 2004-05லிருந்து 2009-10 ஆண்டுகளில் திரிபுராவில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

வறுமைக்கோட்டின் அளவு
மாநிலம் 2004-05 2009-10
திரிபுரா 40 ரூ 17.4 ரூ
மணிப்பூர் 37.9 ரூ 47.1 ரூ
மிசோரம் 15.4 ரூ 21.1 ரூ
நாகலாந்து 8.8 ரூ 20.9 ரூ

மற்ற மூன்று மாநிலங்களில் வறுமையில் வாடுபவர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போது திரிபுராவில் வறுமைக்கோட்டின் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை என்பது 22.6 சதவிகிதம் குறைந்துள்ளது.

கல்வி

இந்தியாவில் உள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வியில் 2001ல் 13வது இடத்திலிருந்த திரிபுரா, 2011ல் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மலைவாழ் மக்களின் வாழ்க் கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதோடு அவர் களுடைய கலாச்சாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தேவைக்கும் மேலாக திரிபுராவில் மின்சார உற்பத்தியானாலும் (எரிவாயுவை பயன்படுத்தி) உபரி மின்சாரத்தை வேறு மாநிலத் திற்கு விற்பதற்கான பவர் கிரிட் ஏற்பாட்டை மத்திய அரசு செய்து தர மறுக்கிறது. மேலும் மாநில அரசு தொடர்ந்து வற்புறுத்திய போதி லும் சிட்டகாங் துறைமுகத்தை திரிபுரா பயன்படுத்துவதற்கு வங்கதேச அரசிடமிருந்து அனுமதி பெற்றுத்தரவும் மத்திய அரசு உதவி செய்ய மறுத்து வருகிறது.

இத்துனை தடைகள் இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடது முன்னணி அரசு மாற்றுப் பொருளாதாரக் கொள் கையை அமலாக்கிடுவதன் மூலம் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திரிபுரா மாநிலத்தில் மக்கள் ஒற்றுமையை உருவாக்குவதற்கு பிரிவினைவாத இயக்கத்தை எதிர்கொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எல்லை பாதுகாப்பு படை, துணை ராணுவத்தை மட்டும் நம்பியில்லை.

பிரிவினைவாத இயக்கத்தை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக இடது முன்னணி அரசு பார்க்கவில்லை. தீவிரவாதத்திற்கு எதிராக போலீசை பயன்படுத்தினாலும் பிரச் சனைகளுக்கு அரசியல் தீர்வுகாணவே இடது முன்னணி அரசு முயற்சித்தது. இத்தகைய அணுகுமுறையினால் இதுவரையில் காவல் துறையினராலோ, எல்லை பாதுகாப்பு படையின ராலோ மனித உரிமை மீறல் என்ற பிரச்சனை எழவில்லை என 2011ம் ஆண்டு ஆளுநர் டி.என். சகாய் கூறினார்.

அரசியல் தத்துவார்த்த போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. பிரிவினைவாத இயக்கங்களை எதிர்த்து மலைவாழ்மக்களுக்கும், மற்ற பகுதி மக்களுக்கும் இடையில் ஒற்றுமையை உருவாக்குவதற்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சார்ந்த ஊழியர்கள் சுமார் 1800 பேர் கொல் லப்பட்டனர். மேலும் பல நூறு தோழர்கள் காயமுற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறிவைத்தே பிரிவினைவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். அளப்பறிய தியாகத்திற்குப் பிறகு தான் மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பதோடு மாநில வளர்ச்சியையும் உருவாக்க முடிந்துள் ளது. 1940களில் திரிபுராவில் மன்னராட்சிக்கு எதிராக மலைவாழ்மக்கள் உரிமைகளுக்காக கம்யூனிஸ்டுகள் மகத்தான இயக்கத்தை நடத்தினார்கள். அக்காலத்திலும் மலைவாழ் மக்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையில் மோதல் உருவாவதை கம்யூனிஸ்டுகள் அனுமதிக்கவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி வெற்றிபெற்றுள்ளது என்ற செய்தி வந்த போது இந்த வெற்றி மக்கள் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் நேர்மையான, சிறந்த அரசு நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி என்று மாநில முதலமைச்சர் தோழர் மாணிக்சர்க்கார் கூறியுள்ளார்.

திரிபுராவில் மீண்டும் இடது முன்னணி அரசு மாற்றுப் பாதைக்கு கிடைத்த வெற்றி

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி அரசு தொடர்ந்து 5-வது முறையாக 6-3-2013 அன்று அரசுப்பொறப்பேற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. தோழர் மாணிக் சர்க்கார் தலைமையில் இடதுமுன்னணி 5 வது முறையும், ஒட்டுமொத்த இடது முன்னணி 7-வது முறையும் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் மொத்த முள்ள 60 தொகுதிகளில் இடதுமுன்னணி 49ல் வெற்றி பெற்றது. தற்பொழுது 50 தொகுதிகளில் வெற்றி பெற்று (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 49, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1) சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி இடதுமுன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும், செயல் முறைக்கும் கிடைத்த வெற்றி என திரிபுரா மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

1978-ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி ஒரு முறையைத் தவிர (1988-1993) தொடர்ந்து திரிபுராவில் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வருகிறது. பதிவான வாக்குகளில் 52.30 சதவிகித வாக்குகளை இடதுமுன்னணி பெற்றுள்ளது. பழங்குடி மக்களுக்கான 20 தொகுதிகளில் 19 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை திரிபுராவில் தோற்கடிப்பதோடு நாட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக மகுடம் சூட்டப்பட்ட ராகுல் காந்தி திரிபுரா தேர்தல் பிரச்சாரத்தில் கொக்கரித்தார். மார்க்சிஸ்ட்டுகள் விரட்டப்பட வேண்டியவர்கள் அல்ல வளர்க்கப்பட வேண் டியவர்கள் என திரிபுரா மக்கள் தீர்ப்பளித்துள் ளனர். தொடர்ந்து 17-வது முறையாக இடது முன்னணி மக்கள் ஆதரவோடு வெற்றி பெறு வதற்கான பின்னணி என்ன?

தேசிய அளவிலும், திரிபுராவிலும் காங்கிரஸ், பாஜக கடைபிடிக்கும் அரசியல் பொருளாதார கொள்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும்  மாற்றுக்கொள்கையை திரிபுராவின் நிலைமைக் கேற்ப அமலாக்குவதன் மூலமே தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று வருகிறது. திரிபுராவின் மூன்று பக்கங்களும் வங்காள தேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. நமது நாடு 1947ல் சுதந்திரம் அடைந்தபோதிலும், மன்னராட்சியின் கீழ் இருந்த திரிபுரா 1949ல் தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. 1972-ல் திரிபுரா விற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. திரிபுரா உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களும் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலைமையில் இருந்தன. 1978- வரையில் காங்கிரஸ் கட்சியே திரிபுராவில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது.

1978-ம் ஆண்டு மறைந்த தோழர் நிருபன் சக்ரவர்த்தி தலைமை யில் இடதுமுன்னணி ஆட்சிக்கு வந்தது.  30 சதவிகிதம் மலைவாழ் மக்களும், 70 சதவிகிதம் வங்காளிகளும் வாழக்கூடிய இம்மாநிலத்தின் தற்போதைய மக்கள் தொகை 37 லட்சம். 1978-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுமுன்னணி ஆட்சி அமைத் ததை பொறுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி வங்காளிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கும் இடையில் மோதலை உருவாக்கி திரிபுராவை கலவர பூமியாக மாற்றியது. மலைவாழ் மக்களின் வறுமைக்கும், ஏழ்மைக்கும் காரணம் வங்காளி கள்தான் என மலைவாழ் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டுமென கோரிக்கை வைத்து மலைவாழ் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை காங்கிரஸ் கட்சி தூண்டி விட்டது. மறுபுறத்தில் வங்காளிகளையும் மலைவாழ் மக்களுக்கு எதி ராக காங்கிரஸ் கட்சி மோத விட்டது.

1980ல் துவங்கி தொடர்ந்து பல ஆண்டு காலம் மலைவாழ் மக்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையில் மோதல் நீடித்தது. திரிபுரா யுவஜாதி சமிதி TUJS) என்ற தீவிரவாத அமைப்புடன் காங்கிரஸ் கட்சி இணைந்து மாநிலத்தின் பல பகுதிகளில் கலவரத்தை உருவாக்கியது. மலை வாழ் மக்களுக்கும் மற்ற பகுதி மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு காங்கிரஸ் டி.யு.ஜே.எஸ். உரு வாக்கிய கலவரத்தில் இதுவரையில் 1300க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தவர்களும், வங்காளி களும் கொல்லப்பட்டனர். 1980ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி மாநிலத் தலைநகரம் அகர்தலா விற்கு 30 கிலோ மீட்டருக்கு அருகில் உள்ள மந்த்வி என்ற கிராமத்தில் டியுஜேஎஸ் அமைப் பைச் சார்ந்தவர்கள் தாக்கி மலைவாழ் மக்கள் அல்லாதவர்கள் சுமார் 350 பேர் கொல்லப்பட்ட னர். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதா னோர் உள்ளிட்டு படுகொலை செய்யப்பட்டனர். வியத்நாம், மைலாய் படுகொலையை விட மோச மானது என பத்திரிகைகள் இச்சம்பவத்தை விளக்கியது. தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மலைவாழ் மக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்க காங்கிரஸ் கட்சியும், தீவிரவாத அமைப்புகளும் மோதலை உருவாக்கின. திரிபுரா மாநிலத்தின் மூன்று பகுதிகள் வங்காளதேசத்தால் சூழப்பட்டுள்ள நிலைமையைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் வங்காளதேசத்திற்குள் சென்று அங்கு பயிற்சி பெற்று திரிபுராவிற்குள் நுழைந்து கலவரத்தை உருவாக்கினர். அனைத்து திரிபுரா புலிகள் இயக்கம் மற்றும் பல பெயர்களில் பல தீவிரவாத அமைப்புகள் திரிபுராவில் காங்கிரஸ் ஆதர வோடு இயங்கி வருகின்றன. 1980ல் துவங்கிய வன்முறை தொடர்ந்து நீடித்தது. 2003ம் ஆண்டு நிகழ்ந்த 311 சம்பவங்களில் 38 பாதுகாப்பு படையைச் சார்ந்தவர்கள் உள்ளிட்டு 241 பேர் கொல்லப்பட்டனர். 2009ம் ஆண்டில் நிகழ்ந்த 24 சம்பவங்களில் 10 பேர் கொல்லப்பட்டனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட திரிபுரா பழங்குடி தேசியவாத கட்சி  என்ற தீவிரவாத அமைப்புடன் உடன்பாடு வைத்து கலவரத்தை உருவாக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து தோல்வியுற்றது.

இந்நிலையில் துவக்கத்திலிருந்தே ஒற்றுமை, முன்னேற்றம் என்ற இரண்டு முழக்கங்களை முன் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக் களைத் திரட்டியது. கலவரத்தை உருவாக்கி 1988ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அடுத்து நடந்த தேர்தலில் மீண்டும் இடது முன்னணி ஆட்சிப் பொறுப்பேற்றது. திரிபுராவில் அமைதியையும், மக்கள் ஒற்று மையையும் உருவாக்குவதோடு பின்தங்கிய நிலைமையில் உள்ள மலைவாழ் மக்கள் முன் னேற்றத்திற்காக திட்டமிட்டதோடு திரிபுரா முழுவதும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட வளர்ச்சிக்கான ஒரு திட்டத்தை உரு வாக்கி இடது முன்னணி அரசு அமலாக்கி வரு கிறது. குறிப்பாக திரிபுரா உள்ளிட்டு நாடு முழு வதும் நாட்டு மக்கள் தொகையில் 8 சதவிகிதமாக உள்ள மிகவும் பின்தங்கிய மலைவாழ் மக்கள் பொருளாதார சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டவர்கள். 1947க்குப் பிறகு மத்திய அரசு கடைபிடித்து வரும் கொள்கையினால் மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நிலத்தி லிருந்தும் அவர்கள் வாழக் கூடிய வாழ்விடத்தி லிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகி றார்கள். அவர்களுக்கு நவீன கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒட்டு மொத்தத்தில் நாட்டு வளர்ச்சியிலிருந்து புறக் கணிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்களின் பொரு ளாதார, கலாச்சார, சமூக பிரச்சனைகளில் முன் னேற்றம் காணவேண்டும். இல்லையேல் அவர் கள் அந்நியப்பட்டு பிரிவினைவாத இயக்கத்திற்கு ஆட்படக்கூடிய ஆபத்து ஏற்படும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு மலை வாழ் மக்கள் பிரச்சனை பற்றி விவாதித்து உரு வாக்கிய அணுகுமுறை சுட்டிக்காட்டியுள்ளது. மலைவாழ் மக்களின் கீழ்க்கண்ட பிரச்சனை களை தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு ஆவணம் வலியுறுத்துகிறது.

  1. நிலத்திலிருந்து மலைவாழ் மக்கள் வெளி யேற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
  2. வனவளத்தை பயன்படுத்திட மலைவாழ் மக்களை அனுமதித்திட வேண்டும்.
  3. வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றப் படுவது தடுக்கப்பட வேண்டும்.
  4. மலைவாழ் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றம்
  5. மலைவாழ் மக்கள் மீதான சமூக ஒடுக்கு முறைக்கு முடிவு கட்ட வேண்டும்.
  6. கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்
  7. மலைவாழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
  8. மலைவாழ் மக்களுக்கு அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சுயாட்சி கவுன்சில் அமைக்கப் பட்டு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட மத்தியக்குழுவின் வழிகாட்டு தலின் படி திரிபுராவில் இடது முன்னணி அரசு திரிபுரா முழுவதற்கும் மற்றும் மலைவாழ் மக்களுக்கு பல வளர்ச்சித் திட்டங்களை உரு வாக்கி அமலாக்கி வருகிறது. 1984ம் ஆண்டு மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளை கொண்ட சுயாட்சி மாவட்டக் கவுன்சிலை (அரசியல் சட்டத்தின் 7வது அட்ட வணையின்படி) இடது முன்னணி அரசு அமைத்தது.  ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் சுயாட்சி கவுன்சில் தேர்வு செய் யப்பட்டு அதன் தலைவரும் தேர்வு செய்யப்படுகிறார். சுயாட்சி கவுன்சிலுக்கு உட்பட்ட மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சிக்காக திட்டமிடும் அதிகாரமும் இந்த கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் சுயாட்சி கவுன் சில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அமலாக்கி வருகிறது.

மலைப்பகுதியான இப்பிர தேசங்களில் கல்வி, சுகாதாரம், சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவற்றில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு விவசாயமும் வளர்ந்து வருகிறது. சுயாட்சி கவுன்சிலுக்கு உட்பட்ட கில்லா ஒன்றியம் கடந்தாண்டு சிறந்த வளர்ச்சிக்கான அகில இந்திய அளவிலான விருது பெற்றுள்ளது. மேலும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அமலாக்குவதிலும் திரிபுரா மாநிலம் முன்னணியில் உள்ளது. மூன்று புறமும் வங்காள தேசத்தால் சூழப்பட் டுள்ளதால் இந்தியாவின் மற்ற மாநிலங்களி லிருந்து இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் சரியான வாய்ப்பு இல்லை, வங்க தேசத்தில் உள்ள சிட்ட காங் துறைமுகத்திலிருந்து திரிபுராவிற்கு இறக்கு மதி, ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பை இந்திய அரசு ஏற்படுத்தி கொடுக்காததாலும் மற்ற மாநிலங்களிலிருந்து பல வகைகளில் சாலை மற்றும் ரயில்போக்குவரத்து இல்லாத நிலையில் திரிபுரா உள்ளது. மேற்குவங்கத்திலிருந்து தரைப் போக்குவரத்து மற்றும் ரயில்வே போக்குவரத்து மூலம் திரிபுரா செல்லவேண்டுமென்றால் சுற்றி வளைத்து அசாம் வழியாக நீண்டதூரம் செல்ல வேண்டும். இது பொருளாதார ரீதியில் லாபகர மானதல்ல. இத்தகையச் சூழலிலும் திரிபுரா மற்ற வடகிழக்கு மாநிலங்களை விட வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. வறுமை ஒழிப்பு:

திரிபுராவிற்கு மலைவாழ் மக்கள் பகுதி அல்லாமல் மற்ற பகுதிகளிலும் இடது முன்னணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எல்லா அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய திட்டக்குழுவின் ஆய்வின் படி 2004-05லிருந்து 2009-10 ஆண்டுகளில் திரிபுராவில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

வறுமைக்கோட்டின் அளவு
மாநிலம் 2004-05 2009-10
திரிபுரா 40 ரூ 17.4 ரூ
மணிப்பூர் 37.9 ரூ 47.1 ரூ
மிசோரம் 15.4 ரூ 21.1 ரூ
நாகலாந்து 8.8 ரூ 20.9 ரூ

மற்ற மூன்று மாநிலங்களில் வறுமையில் வாடுபவர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போது திரிபுராவில் வறுமைக்கோட்டின் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை என்பது 22.6 சதவிகிதம் குறைந்துள்ளது.

கல்வி

இந்தியாவில் உள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வியில் 2001ல் 13வது இடத்திலிருந்த திரிபுரா, 2011ல் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மலைவாழ் மக்களின் வாழ்க் கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதோடு அவர் களுடைய கலாச்சாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தேவைக்கும் மேலாக திரிபுராவில் மின்சார உற்பத்தியானாலும் (எரிவாயுவை பயன்படுத்தி) உபரி மின்சாரத்தை வேறு மாநிலத் திற்கு விற்பதற்கான பவர் கிரிட் ஏற்பாட்டை மத்திய அரசு செய்து தர மறுக்கிறது. மேலும் மாநில அரசு தொடர்ந்து வற்புறுத்திய போதி லும் சிட்டகாங் துறைமுகத்தை திரிபுரா பயன்படுத்துவதற்கு வங்கதேச அரசிடமிருந்து அனுமதி பெற்றுத்தரவும் மத்திய அரசு உதவி செய்ய மறுத்து வருகிறது.

இத்துனை தடைகள் இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடது முன்னணி அரசு மாற்றுப் பொருளாதாரக் கொள் கையை அமலாக்கிடுவதன் மூலம் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திரிபுரா மாநிலத்தில் மக்கள் ஒற்றுமையை உருவாக்குவதற்கு பிரிவினைவாத இயக்கத்தை எதிர்கொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எல்லை பாதுகாப்பு படை, துணை ராணுவத்தை மட்டும் நம்பியில்லை.

பிரிவினைவாத இயக்கத்தை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக இடது முன்னணி அரசு பார்க்கவில்லை. தீவிரவாதத்திற்கு எதிராக போலீசை பயன்படுத்தினாலும் பிரச் சனைகளுக்கு அரசியல் தீர்வுகாணவே இடது முன்னணி அரசு முயற்சித்தது. இத்தகைய அணுகுமுறையினால் இதுவரையில் காவல் துறையினராலோ, எல்லை பாதுகாப்பு படையின ராலோ மனித உரிமை மீறல் என்ற பிரச்சனை எழவில்லை என 2011ம் ஆண்டு ஆளுநர் டி.என். சகாய் கூறினார்.

அரசியல் தத்துவார்த்த போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வரு கிறது. பிரிவினைவாத இயக்கங்களை எதிர்த்து மலைவாழ்மக்களுக்கும், மற்ற பகுதி மக்களுக்கும் இடையில் ஒற்றுமையை உருவாக்குவதற்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சார்ந்த ஊழியர்கள் சுமார் 1800 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல நூறு தோழர்கள் காயமுற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறிவைத்தே பிரிவினைவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். அளப்பறிய தியாகத்திற்குப் பிறகு தான் மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பதோடு மாநில வளர்ச்சியையும் உருவாக்க முடிந்துள் ளது. 1940களில் திரிபுராவில் மன்னராட்சிக்கு எதிராக மலைவாழ்மக்கள் உரிமைகளுக்காக கம்யூனிஸ்டுகள் மகத்தான இயக்கத்தை நடத்தினார்கள். அக்காலத்திலும் மலைவாழ் மக்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையில் மோதல் உருவாவதை கம்யூனிஸ்டுகள் அனுமதிக்கவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி வெற்றிபெற்றுள்ளது என்ற செய்தி வந்த போது இந்த வெற்றி மக்கள் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் நேர்மையான, சிறந்த அரசு நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி என்று மாநில முதலமைச்சர் தோழர் மாணிக்சர்க்கார் கூறியுள்ளார்.

இடதுசாரி இயக்கமும், சுற்றுச் சூழல் பிரச்சனைகளும்!

வனங்களைப் பாதுகாக்க வேண்டியது தான். ஆனால் அது யாருக்காக? மனிதனுக்காகத் தானே? அவனை அழித்தொழித்த பிறகு வனத்தைப் பாதுகாப்பதன் பொருள் என்ன?… அரசாங்க அதிகாரத்தையும், ஏராளமான நிலங்களையும் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் வாழ்க்கையா?

– ஏ.கே.கோபாலன்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றதும், குறைந்த பட்ச திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி என்ற பகுதியில் பழங்குடி மக்களையும், வனம் சார்ந்து வாழும் சமூகங்களையும், வனங்களிலிருந்து வெளியேற்றுவது நிறுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. 2006 ஜூலை மாதம் 22 ம் தேதி ஐ.மு., இடதுசாரி ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் சி.பி.எம். பழங்குடி மக்கள் மசோதா தொடர்பான தனது கருத்துக்களை வலியுறுத்தியுள்ளது. பழங்குடி அல்லாத வனம்சார் மக்களையும் மசோதாவின் வரம்புக்குள் கொண்டு வருவது, கட் ஆஃப் ஆண்டை 1980 லிருந்து 2005 என விஸ்தரிப்பது, 2.5 ஹெக்டேர் என்ற உச்ச வரம்பை நீக்குவது மற்றும் பயனாளிகளை கிராம சபைகளையே தேர்ந்தெடுக்கச் சொல்வது என 4 முக்கியமான விஷயங்களை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் கூட எழுதப்பட்டுள்ளது. (Peoples Democracy, September 3, 2006. பக்கம் 7) வனங்களையும், இயற்கை வளங்களையும் தனியார் வசமாக்குவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் அங்கே வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்களும் பறிக்கப்படும் என்பதும், இடதுசாரிக் கட்சிகள் சார்பில் வனங்கள், சுற்றுச்சூழல் அமைச்சரகத்திற்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது (Peoples Democracy, Sep. 24, 2006, பக்கம் 5)

நாடு முழுவதும் பழங்குடி மக்களும், வனம் சார்ந்த சமூகங்களும் எதிர் கொண்டுள்ள பிரச்சனைகள் ஏராளம். சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இடதுசாரிகளின் நிலைபாடு என்ன? பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க சி.பி.எம். போன்ற இடதுசாரிக் கட்சிகள் / அரசுகளின் நிலைபாடு என்ன? என்னென்ன திட்டங்களை இடதுசாரி அரசுகள் குறிப்பாக திரிபுரா, மேற்குவங்க அரசுகள் மேற்கொண்டுள்ளன? இப்படி பல கேள்விகளுக்கு விடைகாண படிக்க வேண்டியதொரு நூல் சுற்றுச் சூழலும் வாழ்வுரிமையும் பழங்குடி மக்கள் : சமகால விவாதமும் எதிர் காலத் திட்டமும் ஆகும். அர்ச்சனா பிரசாத் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “Environmentalism and the Left Contemporary Debates and Future Agendas in Tribal Areas”  என்ற நூலை லெஃப்ட் வேர்டு புக்ஸ் வெளியிட்டது. தமிழில் சஹஸ், முரளி, சாமி ஆகிய மூவரால் மொழி பெயர்க்கப்பட்டு, பாரதி புத்தகாலயம் வெளியிட் டுள்ளது. இன்று பழங்குடி மக்கள் இனச் சான்றிதழ் பெறுவதி லிருந்து, பட்டா இன்றி, வாழ வழியின்றி வெளியேற்றப்படுவது என்று அன்றாடம் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பொதுச் சொத்துக்கள் மறைந்து விட்டன. வருவாய் காடுகள் ரிசர்வ் காடுகளாக இஷ்டம் போல் மாற்றப்படுகின்றன. இந்த நூலில் வட இந்திய பகுதிகளில், குறிப்பாக இயற்கை வளங்கள் கொழிக்கும் ஜார்கண்ட், உத்தராஞ்சல், சத்தீஸ்கர் மற்றும் பழங்குடி மக்கள் அதிகம் உள்ள ஒரிசா, மத்தியப்பிரதேச நிலைமைகள் விளக்கப்பட் டுள்ளன. தவிர, சுற்றுச்சூழல் தொடர்பாக இடதுசாரிகள் பார்வை எப்படி உள்ளது என்பதும் நூலில் விவாதத்திற்குட்படுத்தப் பட்டுள்ளது.

பொதுவாக, சுற்றுச் சூழல் என்று பேசுகையில் காற்று, நீர், ஒலி மாசு, அதிகரிக்கும் வெப்பம் பற்றித்தான் பேசப்படுகிறது. ஆனால், காலங்காலமாக இயற்கையை குறிப்பாக, வனம் சார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றும் பழங்குடி மக்களின் வாழ்வு அரசு கொள்கை களால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றது என்பதைப் பற்றி இடதுசாரிகளைத் தவிர, வெறும் சிலரே அக்கறை கொண்டுள்ளனர். 1973 ல் நடந்த சிப்கோ இயக்கம் வரலாற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுற்றுச்சூழல் இயக்கமென்பது வளர்ச்சி பற்றிய விவாதத்தில் வாழ்வு ரிமை மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடைபெறும் தொடர் போராட்டங்கள் மற்றும் மோதல்களைக் குறிக்கும் ஒரு பொதுவான பதமாகும் என ஆசிரியர் முன்னுரையிலே குறிப்பிட்டுள்ளார்.

பழங்குடியினரும், நிலப்பிரச்சனையும் என்ற அத்தியாயத்தில், நிலச்சீர்திருத்தம், நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் இடதுசாரி களின் நிலை விளக்கப்படுகிறது. காந்திய சுற்றுச்சூழல் வாதிகளும், இடதுசாரிகளும், நவீன வளர்ச்சித் திட்டங்களும், வணிகமயமாகும் விவசாயமும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கின் றன என்பதை ஏற்கின்றனர். தங்கள் நிலங்களிலிருந்து அந்நியப்படு கின்றனர் அம்மக்கள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்று கூறும் நூலாசிரியர், பிரிட்டிஷார் ஆட்சியில் நிலவருவாய் சட்டங் களின் விளைவுகளை விளக்குகிறார். இடதுசாரிகளைப் பொருத்த வரை, மேற்குவங்கம், திரிபுரா, கேரளா ஆகிய மாநிலங்களில், நிலச்சீர்திருத்தம் நன்கு அமலாக்கப்பட்டுள்ளது. 1940 களிலேயே திரிபுராவிலும், ஆந்திராவிலும் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட் டத்தை நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். உழுபவனுக்கே நிலம் என்ற கோஷத்தை வைத்து இடதுசாரிகள் போராடினர். திரிபுராவில் ஜீமியா மக்கள் நில உரிமைகளுக்காகப் போராடியது குறிப்பிடத் தக்கது. 1990 களில் அகில இந்திய விவசாய சங்கம் பழங்குடி மக்களின் நில உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்துகையில், பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வைத்தது. இந்தக் கோரிக்கைகள் பழங்குடி மக்களின் பிரத்யேகப் பிரச்சனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டன. நூலாசிரியர் மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2001 ம் ஆண்டு வரை கையகப்படுத்திய 1.4 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் 56 சதம் தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் வழங்கப்பட் டுள்ளது. பயனாளிகளில் 18 சதம் பழங்குடியினர் என்றும், 37 சதம் தலித்துகள் என்ற புள்ளி விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரம், பயனாளிகள் மாநிலத்தில் உள்ள பழங்குடியினரில் 10 சதம் மட்டுமே என்றும், பழங்குடியின மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய விவசாயம் அல்லாத மற்ற வாய்ப்புகளைப் பரிசீலிப்பது அவசியம் என்றும் குறிப்பிடுகிறார். கூடவே, நிலச் சீர்திருத்தம் மூலமாக பழங்குடிகள் நீடித்த, வளமான விவசாயச் சமூகமாக நிலைபெற இடதுசாரி இயக்கத்தின் பார்வையில் மேலே கூறப்பட்டது தொடர்பாக மாற்றம் தேவையென சுட்டிக் காட்டுகிறார்.

பழங்குடியினர் ஆக்கிரமிப்பாளர்களாக எவ்வாறு சித்த ரிக்கப்படுகின்றனர் என்பதை விவரித்துள்ள ஆசிரியர், மாநில வாரியாக, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் எவ்வளவு என்ற பட்டியலையும் தந்துள்ளார். 1980 ல் இயற்றப்பட்ட வன (பாதுகாப்பு) சட்டத்தின் முக்கியத்துவமும் தரப்பட்டுள்ளது. பழங்குடி மக்களின் வாழ்க்கை வனம் சார்ந்ததாக இருப்பதால், அவர்களை ஆக்கிரமிப்பாளர் எனச் சித்தரிப்பது தவறு என்று இடதுசாரிகள் கூறுகின்றனர். 2002 ல் சி.பி.ஐ(எம்) ராஞ்சியில் நடத்திய மாநாடு, வன வளங்கள் மீதும், நிலங்கள் மீதும் பழங்குடிகளுக்கு உள்ள உரிமைகளை யாரும் பறிக்க முடியாது என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது.  இடதுசாரிகள் முன் வைத்த மற்ற சில முக்கிய கோரிக்கைகளும் பழங்குடி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. நூலாசிரியர் காந்தியவாத சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலைபாட்டையும் விளக்கியுள்ளார். இதனால் இருவேறு புரிதல்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இடதுசாரிகள் நீடித்த விவசாய உற்பத்தி, விவசாயம் சாரா வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்தி, தீர்வு காண முயல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பழங்குடியினரின் வாழ்க்கை முறையும், வேளாண்மை நெருக்கடியும் என்ற அத்தியாயத்தில் தற்போதைய சூழல் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலை, இடு பொருள் விலை உயர்வு, தாராளமயம் ஏற்படுத்தியுள்ள மோசமான விளைவுகளை நன்றாக விளக்கியுள்ளார். நிலப்பயன்பாடு பற்றி விளக்கும் போது, சுழற்சி முறை பயன்பாட்டை இடதுசாரிகள் ஏற்கவில்லை என்கிறார். பழங்குடியினர் விவசாயத்தில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க புதிய வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்றும, திரிபுரா அனுபவம் எடுத்துக்காட்டாக உள்ள தென்று எழுதியுள்ளார். வந்தனா சிவா போன்றவர்களின் வாதங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. இடதுசாரிகள் பசுமைப் புரட்சியைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. உணவு உற்பத்தி அதிகரிக்கக் காரணமாக இருந்த பசுமைப் புரட்சி, ஏற்றத்தாழ்வு களை அதிகரிக்கச் செய்தது என்பது தான் உண்மை. வந்தனா சிவா போன்றோர், பசுமைப் புரட்சியை கடுமையாகச் சாடுகின்றனர். இடதுசாரிகளின் நிலைபாட்டிற்கும் மற்ற சுற்றுச் சூழல் இயக்கத்தி னரின் நிலைபாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை நூலாசிரியர் நன்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த அத்தியாயத்தில் புனல் காடு விவசாயம் மற்றும் ரப்பர் விவசாயம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. திரிபுரா, கேரளா மாநில அனுபவங்கள் தரப்பட்டுள்ளன. புனல்காடு விவசாயம் தாக்குப்பிடிக்கக் கூடிய முறை என்பதை இடதுசாரிகள் ஏற்க வேண்டும் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். (புனல் காடு விவசாயம் என்பது சுழற்சி முறையில் மாறி மாறிப் பயிரிடும் முறை) சுழற்சி முறை விவசாயம் பழங்குடியினருக்கு பொருளாதார ரீதியில் உதவும் என்பது அவர் கருத்து.

பல வட மாநிலங்களில் விவசாயிகளின் பட்டினிச்சாவுகள், காரணங்கள், தீர்வுகளை விளக்கி, பெரிய கம்பெனிகள் விவசாயத் துறையில் நுழைவது எந்த அளவு பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதையும் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக, பணப் பயிர்களுக்கு மாறியதால், வெளியிலுள்ள பெரு விவசாயிகள் பழங்குடியினரின் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கிய சம்பவம் நிறைய இடங்களில் நடந்துள்ளது. குடிபெயர்தல் பிரச்சனையை ஆழமாக விவாதித்துள்ளார். (பக்கம் 57) இதில் வடமாநிலங்களின் அனுபவம் விளக்கப்பட்ட போதிலும், அதை தமிழகச் சூழலுக்கு அப்படியே பொருத்திப்பார்க்க இயலும். பருவகால குடிபெயர்தல் என்பது காலம் காலமாக உள்ளது தான். ஆனால், நெருக்கடி காரணமாகக் குடிபெயர்வது என்பது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளதென்பது நாம் இந்தியா முழுமையிலும் காண முடியும். நூலாசிரியரும் இதையே தெளிவுபடுத்தியுள்ளார்.

பழங்குடியினர், காடுகள், உலகமயம் என்ற அத்தியாயம் பழங்குடியினரின் உரிமைகள், அத்து மீறல்கள், போராட்டங்களை விளக்குகிறது. காடுகளைப்பற்றி அரசின் பார்வை எப்படியுள்ளது? பழங்குடி மக்களின் நன்மைகளைப் பாதுகாக்கும் விதத்தில் காடுகள் மீதான அரசின் கட்டுப்பாடு என்பது இருக்க வேண்டுமென இடதுசாரிகள் கருதுகின்றனர். இதையொட்டி இரண்டு கருத்தோட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளை ஆசிரியர் விளக்குகிறார். 1). மேற்கத்திய நவீன கருத்தோட்டம் 2). பழங்குடிகளின் பழமையான கருத்தோட்டம் என விளக்கும் போது, வனவிளைபொருட்கள் எப்படி சிறியவை, பெரியவை எனப் பிரிக்கப்பட்டு, அரசாங்கம் சிறியவை மீதான தனது கட்டுப்பாட்டை அதிகரித்தது என்று தெளிவுபடுத்தியுள்ளது பயனுள்ளதாகும். மத்தியப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டங்கள் வனப் பொருட்களைச் சுரண்டவே உதவியது என்பது குறிப்பிடத் தக்கது. ஏராளமான எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன. காடுகளை யார் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது? என்ற கேள்விக்குப் பதிலாக, மேற்கு வங்க அரபாரி பரிசோதனை விளக்கப்பட்டுள்ளது. கூட்டு வன மேலாண்மைத் திட்டம் மூலம் மேற்கு வங்கத்தில் முதல் 15 ஆண்டுகள் வனத்துறைக்கும், மக்களுக்குமிடையே நம்பிக்கையை வளர்த்து, முறைப்படி பலன்களை இருதரப்பினரும் பங்கிட்டுக்கொள்ள உதவியது. இந்தப் பரிசோதனை தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், அதன் பிரச்சனைகளையும் கோடிட்டு காண்பித்துள்ளார்.

வளர்ச்சியும், புலம் பெயர்க்கும் அரசியலும் என்ற அத்தியாயத்தில் நவீன வளர்ச்சியின் பலன்கள், பிரச்சனைகள், அதன் பின்விளைவுகள், அதில் அடங்கியுள்ள அரசியல் போக்குகளை விளக்குகிறது. நர்மதை அணைப்பிரச்சனையிலிருந்து துவங்கி, தொழிற்சாலைகள் போன்றவை  பழங்குடி மக்களை எப்படிப் பாதிக்கிறது என்றும், இதை இடதுசாரிகள் எப்படிப் பார்க்கின் றனர் என்பதையும் விளக்குகிறது. குறிப்பாக, புலப் பெயர்ச்சி – மறுவாழ்வுப் பிரச்சனையில் இடதுசாரிகளும், சுற்றுச் சூழல் வாதிகளும் ஒரே நிலையை எடுக்கின்றனர். கேரளத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு  விஷயத்தில், கே.எஸ்.எஸ்.பி. யின் போராட்ட நடவடிக்கை இடதுசாரிகள் மத்தியில் நவீன வளர்ச்சித் தன்மை பற்றிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார். ஆனால், நர்மதா திட்டத்திற்கெதிரான போராட்டங்களுக்கு இடதுசாரிகள் அளிக்கும் ஆதரவு, பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை காட்டுகின்றனர் என்பதைத் தெளிவாக்குகிறது. நர்மதை அணைப் பிரச்சனையை விளக்கி, இதில் இடதுசாரிகளின் நிலைபாட்டையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார். சி.பி.ஐ.(எம்) கட்சி 1992 ல் எடுத்த நிலை என்ன என்பதுடன், 2002 ல் கட்சி உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த பின் முன்வைத்த கோரிக்கைகள் (பக்கம் 87) விரிவாகத் தரப்பட்டுள்ளன. இந்த விளக்கங்கள் கட்சியின் நிலைபாட்டைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

இந்திய ஜனநாயகத்தில் பழங்குடியினர் என்ற அத்தியாயம் சுதந்திரத்திற்கு முன்பும், அதற்குப் பின்பும் இந்திய அரசின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது. குறிப்பாக, நேருவின் பார்வை பற்றி எழுதப்பட்டுள்ளது. தவிர, ஆதிவாசிகளுக்கு திட்டங்களில் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டில் பெரும் பகுதி கல்விக்கும், சமூகப் பணிகளுக்குமான மானியங்களாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

பழங்குடி மக்களுக்கான முதல் அமைப்பை 1948 ல் பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் துவக்கியது. அவர்களுக்கான கூட்டுறவு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட சுயாட்சி கவுன்சில்களினால், பழங்குடி மக்களின் விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றும், அவர்கள் முன்னேற வழி வகுக்கும் என்றும் இடதுசாரிகள் கருதினர். அதை வலியுறுத்திப், போராடி 1982ல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணையின் கீழ் மாவட்ட சுயாட்சிக் கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலர் கள் சிறப்பாகச் செயல்பட முடியுமென்பதற்கு திரிபுரா சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பின்னுரையில் நூலாசிரியர் மூன்று முக்கிய சவால்களைச் சுட்டிக்காட்டுகிறார்.

  1. புதிய பொருளாதாரக் கொள்கை – உலகமயம், தனியார்மயம், தாராளமயம் ஆகியவற்றின் விளைவாக, அசமத்துவ வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை இடதுசாரிகள் வலியுறுத்துகின்றனர்.
  2. பிளவுவாதம், வகுப்புவாதம் – இதற்கெதிரான போராட்டங் களை இடதுசாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதில் சுற்றுச்சூழல் இயக்கத்தினர் சிலர் இணைந்த போதிலும், பகுகுணா போன்றோர் தங்கள் நிலைபாட்டிற்கு ஆதரவைத் தேட மத அடிப்படைவாத சக்திகளுடனான உறவைப் பயன்படுத்துகின்றனர். சந்தர்ப்பவாதப் போக்கைக் கடைபிடிக்கின்றனர்.
  3. நீர், நிலம், வனங்கள் சீர்கெட்டு வருவது மிகப்பெரிய சவால். உண்மையான சவாலாக ஆசிரியர் எதைக் கருதுகிறார்? நிலம், நீர், வனம் என்ற இந்த வளங்களின் மீது பிற பகுதியினருக்கும் இருக்கக் கூடிய உரிமைகளுக்கு முரணின்றி இப்பழங்குடி மக்களுக்குள்ள அத்தகைய உரிமைகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதில் தான் உண்மையான சவால் அடங்கியுள்ளது.

இந்த நூல்  இரண்டு அம்சங்களில் மிகவும் முக்கியமானது. ஒன்று, கட்சி உறுப்பினர்கள் மத்தியிலேயே, சுற்றுச் சூழல் பிரச்சனைகளில் நம்  கட்சியின் நிலைபாடு பற்றிய தெளிவான புரிதல் குறைவாகவே உள்ளது. மற்ற பிரச்சனைகள் மீது கொடுக்கும் அளவு அழுத்தம் – நமது கூட்டங்கள் எழுத்துகளில் – சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இல்லை எனலாம். பெரிய அணைகள், வன வளங்கள் மீதான கட்டுப்பாடு, பழங்குடி மக்கள் உரிமைகளுடன் மற்றவர்களுக்கு ஏற்படும் மோதல் போன்றவற்றில் கட்சியின் நிலைபாட்டை புரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. இரண்டாவதாக, தமிழகச் சூழலுக்குப் பொருத்திப் பார்த்து, ஆய்வுகளை மேற்கொள்ளவும் தூண்டும் வண்ணம் உள்ளது. இந்நூல் பெரும்பாலும் வட இந்திய மாநிலப் பிரச்சனைகளை மையமான எடுத்துக்காட்டுகளாக ஓரிரு இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மலைவாழ் மக்கள் சங்கம் பழங்குடி மக்கள் பிரச்சனைகள் மீது இயக்கங்கள் நடத்தியுள்ளது. பளியர் என்ற பழங்குடி மக்கள் திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் வசிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் அணில் களைப் பாதுகாக்கிறோம் என பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதுபோல், குறும்பர், இருளர் என பழங்குடியினர் வாழ்வாதாரங்களை இழந்து அல்லலுறுகின்றனர். பழங்குடியினர் பற்றி தெரிந்து கொள்வதற்கு மட்டுமின்றி, அவர்களைத் திரட்டும் பணியை மேற்கொள்ளும் தோழர்களுக்கும் இந்நூல் மிகவும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்!

உலகமயம் இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலக மக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சும் – ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.

ஏகாதிபத்திய – முதலாளித்துவ சக்திகள் தொழில்நுட்ப ரீதியிலும், அறிவியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஈபிள் கோபுரம் அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், உலக மக்களின் வறுமையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. மாறாக உலக மக்களை வறுமையின் புதைக்குழிகளுக்கே தள்ளி வருகின்றன. குறிப்பாக கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாவதோடு, பட்டினிச் சாவுகளுக்கும், தற்கொலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடிய அளவிற்கு அவர்களது வாழ்நிலை மிகவும் சீரழிந்து வருகிறது.

இந்த பின்னணியில்தான் இந்தியா உட்பட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் இடதுசாரிகளின் எழுச்சி விவசாயிகள் – தொழிலாளர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதோடு வெனிசுலா, பிரேசில், பொலிவியாவில் நடைபெற்று வரும் இடதுசாரி அரசுகளின் நிலச்சீர்திருத்த இயக்கம் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகிறது.

இந்தியாவில் இடதுசாரி அரசுகளான கேரளம், மேற்குவங்கம், திரிபுராவில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்திலும் நிலச்சீர்திருத்தம் ஒரு அரசியல் கோஷமாக முன்னுக்கு வந்துள்ளது.

உலகிலேயே முதன் முதலில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நாடு சோசலிச சோவியத் யூனியன் தான்; தற்போது நடைபெற்று வரும் இந்த இயக்கங்களுக்கு முன்னோடி என்பதை நாம் இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும். சீனா, வடகொரியா, வியட்நாம் உட்பட சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் இன்றைக்கு விரிவடைந்து தென்னாப்பிரிக்கா, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக நிலச் சீர்திருத்தம் என்பது உலகளவில் அரசியல் கோஷமாக உலக மக்கள் விரும்புகிற உலகமயமாகி வருகிறது.

உலக உழைப்பாளி மக்களின் வறுமைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது உற்பத்தி கருவிகள் சுரண்டும் வர்க்கங்களின் கைகளில் குவிந்திருப்பதுதான். அதிலும் குறிப்பாக கிராமப்புற நிலவுடைமை இன்றைக்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும், நிலப்பிரபுக்களின் கைகளிலும்தான் குவிந்திருக்கிறது. இந்த உற்பத்தி கருவிகளிலும், உற்பத்தி உறவுகளிலும் அடிப் படையான மாற்றத்தை ஏற்படுத்திடாமல் கிராமப்புற வறுமைக்கு தீர்வு காண முடியாது.

உலக விவசாயிகளின் நிலை

உலக மக்கள் தொகையில் சரி பாதி பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். 45 சதவீத மக்களது வாழ்க்கை விவசாயத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்நிலை, வருமானம், பாதுகாப்பு என அனைத்தும் விவசாயத்தைச் சார்ந்தேயுள்ளது.

இவர்களது வாழ்க்கை பாதுகாப்பிற்கு மையக் கேள்வியாக இருப்பது நிலம். குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள 50 கோடி மக்களுக்கு நிலமோ அல்லது நிலத்தின் மீதான உறவோயின்றி, விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் மிகக் குறைந்த பகுதியினர்தான் குத்தகை விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் நிலவுடைமையாளர்களால் கடுமையாக சுரண்டப் படுவதோடு, கந்துவட்டி, குறைந்தகூலி, ஆண்டுமுழுவதும் சீரான வேலையின்மை, அதிகமான நிலவாடகை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் அதிகமாக உள்ள நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் கடுமையான வறுமைக்கு ஆளாகியுள்ளனர்; சுகாதாரம், கல்வி, வீடு மற்றும் அடிப்படைத் தேவைகள்கூட கிடைக்காத பகுதியினராக திகழ்கின்றனர்.

அதேசமயம், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான முன்னாள் சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தால் 58 கோடி மக்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா உட்பட சோசலிச நாடுகளில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் மேற்குவங்கம், கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகயால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம், வாங்கும் சக்தி, உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்பு என பன்முனைகளில் ஜனநாயக ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கிராமப்புற வளர்ச்சி நிறுவனத்தின், 21 ஆம் நூற்றாண்டில் நிலச்சீர்திருத்தம் என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பிரேசில் விவசாயிகள் எழுச்சியும் நில மீட்பும்

உலகில் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்று பிரேசில், ஆனால், அதே அளவிற்கு வறுமையையும் கொண்டுள்ளது; இந்த நாட்டின் வளங்களை சுரண்டிச் செல்வதிலும், அதற்கேற்ப பொம்மை ஆட்சியாளர்களை அமர்த்துவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைங்கரியம் உண்டு. குறிப்பாக பிரேசிலில் உள்ள மூன்றில் இரண்டு பகுதி விவசாய நிலங்கள், வெறும் மூன்று சதவீதம் பேருக்கு சொந்தமானது. அதிலும் குறிப்பாக 1.6 சதவீதம் பேரிடம் பிரேசிலின் 46.8 சதவீத விவசாய நிலங்கள் குவிந்திருக்கிறது. இவர்களின் கையில்தான் மொத்த விவசாயமும் – விவசாய கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றனர். இந்த நவீன விவசாய பண்ணைகளில் 2.5 கோடி மக்கள் தங்களது வாழ்க்கைக்காக விவசாயம் சார்ந்த வேலைகளையே நம்பியிருக்கின்றனர். நிலமற்ற விவசாயிகளாக – அத்துகூலிக்கு வேலை செய்யும் ஆட்களாக, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களாக, சத்தற்ற நடைபிணங்களாக ஆக்கியது கடந்தகால ஆட்சியாளர்களின் கொள்கைகள்.

வெளிச்சத்தை கொண்டு வந்த விவசாய இயக்கம்

1984இல் துவங்கப்பட்ட கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில் (ஆளுகூ-ஆடிஎஅநவேடி னடிளகூசயயெடாயனடிசநள சுரசயளை ளுநஅ கூநசசய  ஞடிசவரபரநளந – டுயனேடநளள றுடிசமநசள ஆடிஎநஅநவே)  1.5 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எம்.எஸ்.டி. என்று அழைக்கப்படும் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில், 10 முதல் 15 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஒரு கிளையாக செயல்பட்டு வருகின்றனர். இந்த கிளைகளில் இருந்து மேல் கமிட்டிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். இந்த இயக்கத்தில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இயக்கம் பிரேசில் முழுவதும் உள்ள 27 மாநிலங்களில் 23 மாநிலங்களில் தங்களது கிளைகளை விழுதுகளாக ஆழப்பதித்திருக்கிறது.

2003 ஆம் ஆண்டு லூலா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கம் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்திற்கு பெரும் ஆதர்ச சக்தியாக திகழ்கிறது. கடந்த 20 ஆண்டு காலமாக  அவர்கள் நடத்தி வரும் நிலமீட்பு போராட்டம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்கிறது. இந்த இயக்கம் கிராமப்புற மக்களின் ஆத்மாவாக, நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவதோடு, மிக அதிக அளவிலான விவசாயிகளைக் கொண்ட பேரியக்கமாக செயல்பட்டு வருகிறது.

நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கத்தின் அடிப்படை நோக்கமே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது, ஜீரோ வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுதான். அத்துடன் செல்வத்தை பகிர்வது, சமூக நீதி, சம உரிமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது.

பிரேசிலில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 60 சதவீத விவசாய நிலம் தரிசு நிலம். இத்தகைய தரிசு நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கக் கோரி நடத்திய விவசாயிகளின் வீரஞ்செறிந் போராட்டத்தின் மூலமாக, இதுவரை இரண்டரை லட்சம் குடும்பங்களுக்கு 15 மில்லியன் ஏக்கர் (1.5 கோடி ஏக்கர்) நிலம் கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் நில முதலாளிகளின் தாக்குதல்களுக்கு 2000-த்துக்கும் மேற்பட்ட எம்.எஸ்.டி. ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.

விவசாயிகள் இயக்கம் நிலமீட்பு போராட்டத்தை மட்டும் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மீட்கப்பட்ட நிலத்தில் வர்த்தக பயிர்*களை தவிர்த்து, மாற்று கொள்கைகளை உருவாக்கி, புதிய விவசாய கலாச்சாரத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. விவசாயம் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதோடு, வேலையின்மைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கோடும், பொருளாதார தேவைகளை உயர்த்துவதாகவும், அவர்களது வறுமைக்கு தீர்வு காண்பதாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்போடு எம்.எஸ்.டி. செயல்பட்டு வருகிறது. இதற்காக 60 உணவு கூட்டுறவு அமைப்புகளையும், சிறிய விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கி, உணவுக்கும் – வேலைக்கும் உத்திரவாதத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

இது தவிர, கிராமப்புற விவசாய மக்களிடையே உள்ள எழுத்தறிவின்மையை போக்குவதற்கு எழுத்தறிவு இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட எம்.எஸ்.டி. ஊழியர்கள் எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2002 – 2005 கால கட்டத்தில் மட்டும் 56,000 கிராமப்புற மக்களுக்கு கல்வியறிவை புகட்டியுள்ளனர். அதேபோல் 1000க்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளையும் இந்த இயக்கம் நடத்தி வருகிறது.  இதில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 50,000 குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.

இவ்வாறான விழிப்புணர்வின் மூலம் போராட்டத்தின் வாயிலாக பெற்ற நிலத்தை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், உணவு பாதுகாப்பையும், உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளவும், குடும்ப பாதுகாப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் உத்திரவாதப்படுத்திக் கொள்ள இத்தகைய செயல்பாடு பயன்படுகிறது.

சமீபத்தில் பிரேசில் தலைநகரில் நடத்தப்பட்ட பிரம் மாண்டமான இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான எம்.எஸ்.டி. ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். லூலா தேர்தல் காலத்தில் நான்கு லட்சம் குடும்பங்களுக்கு நில விநியோகம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தற்போதைய வேகம் போதாது என்று எம்.எஸ்.டி. இயக்கம் விமர்சிக்கிறது. அதே சமயம் லூலா மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், லூலா எங்கள் இயக்கத்தில் ஒருவர்; அவர் தங்களது நண்பர் என்றும் எம்.எஸ்.டி. இயக்கம் நம்பிக்கை கொள்கிறது.

பிரேசில் பிரம்மாண்டமான நிலவளத்தை கொண்டிருந் தாலும், அதனுடைய உணவுத் தேவைக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. ஒரு நாட்டில் அதிகமான நிலம் இருப்பதால் மட்டும் அங்குள்ள விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உணவு கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அந்நாட்டு அரசுகள் பின்பற்றும் கொள்கை, குறிப்பாக நிலவுடைமையாளர்கள் – பண்ணைகள் தங்களது நிலங்களில் உணவுப் பயிர்களுக்கு பதிலாக வர்த்தகப் பயிர்களையே விளைவிக்கின்றனர். மறுபுறத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி கிடைக்காமல் வறுமையின் சுழலுக்குள் சிக்கி, சின்னாபின்னமாவதுதான் நடக்கிறது.

நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் என்பது, அந்த விவசாயிகளின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, அவர்களது உணவுக்கான உத்திரவாதத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது பிரேசிலில் நடந்துவரும் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

நிலச்சீர்திருத்தம் வெனிசுலா காட்டும் பாதை

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது கியூபாவும் – பிடலும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க சுரண்டலுக்கு எதிராக சிங்கத்தின் கர்ஜனையோடு பிடலுடன் கைகோர்த்திருப்பவர் வெனிசுலா அதிபர் யூகோ சாவேஸ். உலக எண்ணெய் வளத்தில் 5-வது இடத்தை வகிப்பது வெனிசுலா.

வெனிசுலா பெட்ரோலிய ஏற்றுமதியில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தை வெனிசுலாவில் இருந்து பெற்றுக் கொள்கிறது. வெனிசுலாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை வகிப்பது அதன் எண்ணெய் உற்பத்தியே; 80 சதவீத வருமானம் இதனை நம்பியே உள்ளது. அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளைக் கொண்டதோடு, தனது நவீன காலனியாக பயன்படுத்தி வந்தது. சாவேஸ் ஆட்சிப் பொறுப் பேற்றதும், வெனிசுலாவின் எண்ணெய் வயல்களை அரசுடைமை யாக்கி, அமெரிக்க நிறுவனங்களின் சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

1999 இல் ஆட்சிக்கு வந்த சாவேஸ் நிலச் சீர்திருத்தம்தான் எனது அரசின் முக்கிய இலக்கு என்று அறிவித்தார். விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பிற்கு அவர்களுக்கான நிலவுரிமையை உத்திரவாதப்படுத்துவதே எனது நோக்கம் என்று பிரகடனப் படுத்தினார். அத்தோடு நிற்காமல், வெனிசுலாவின் அரசியல் சாசனத்தையும் திருத்தியமைத்தார் சாவேஸ்.

அதிபர் சாவேசின் புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம், சாவேசை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்கு பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு மூக்கை உடைத்துக் கொண்டது. ஓராண்டுக்கு முன் கிறித்துவ மதப் பிரசங்கம் செய்யும் பாதிரியார், சாவேசை கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக மதப் பிரசங்கத்திலேயே அறிவித்தார் ஏகாதிபத்திய சுரண்டும் வர்க்கம் சாவேஸ் அரசை கவிழ்ப்பதற்கு எத்தகைய சீரழிந்த நடவடிக்கைகளை கைக்கொள்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

வெனிசுலாவில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 75 சதவீத நிலம் 5 சதவீதத்தினர் கையில் உள்ளது. இத்தகைய நில முதலைகள் ஒவ்வொருவரிடமும் 1000 ஹெக்டேர்களுக்கு மேல் நிலம் குவிந்துள்ளது. இங்கும் பிரசிலில் நடைபெற்றது போல் பருத்தி, சோயா, கோக்கோ போன்ற வர்த்தகப் பயிர் விளைச்சல்தான். மறுபுறம் ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக உள்ளனர். மேலும் லத்தீன் அமெரிக்க நாடு களிலேயே கிராமப்புற மக்கள் தொகை குறைவாக கொண்ட நாடு வெனிசுலாதான். கடந்த 35 ஆண்டு காலமாக கிராமப்புறத்தில் இருந்த மக்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு, நகரங்களில் குவிந்துள்ளனர்.

1960-களில் 35 சதவீதமாக இருந்த கிராமப்புற மக்கள் தொகை படிப்படியாக குறைந்து 1990-களில் 12 சதவீதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது 2000 ஆம் ஆண்டில் 8 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. வர்த்தகப்பயிர் உற்பத்தி மற்றும் நவீன விவசாய கருவிகளை கையாள்வதன் மூலமும், கிராமப்புற விவசாய மக்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் விளைவாக எப்படி நிலத்தில் இருந்து அகற்றப்படுகிறார்கள் என்பதற்கு வெனிசுலா சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வெனிசுலாவின் விவசாய உற்பத்தி அதன் மொத்த ஜி.டி.பி.யில் வெறும் 6 சதவீதம் மட்டுமே. மொத்தத்தில் வெனிசுலா தன்னுடைய உணவுத் தேவைக்கு 88 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.

ஒரு பக்கத்தில் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை சுரண்டுவதும், மற்றொரு புறத்தில் தங்களது விளை பொருட்களை வெனிசுலா தலையில் கட்டுவதுமாக இருபுற சுரண்டலை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்டு வந்தனர்.

கிராமத்திற்கு திரும்புவோம்!

சாவேஸ் ஆட்சிக்கு வந்ததும் கிராமத்திற்கு திரும்புவோம் என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதன் மூலம் பெரும் நிலப் பண்ணைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் வெனிசுலாவில் தீவிரமடைந்தது. 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் உழலும் வெனிசுலாவில் 75 சதவீத விவசாய நிலங்கள் 5 சதவீத நிலவுடைமையாளர்கள் வசம் இருந்தது. இதில் எஸ்டேட் என்று அழைக்கக்கூடிய 44 நவீன விவசாய பண்ணை களை நடத்தும் முதலாளிகளிடம் மட்டும் 6,20,000 ஏக்கர் நிலங்கள் குவிந்திருக்கிறது. இந்த நிலக்குவியல்தான் வெனிசுலாவின் அரசியல் அதிகார மையமாக இருக்கிறது. இந்த நிலக்குவியலை தகர்க்கும் உளியாக செயல்படுகிறார் சாவேஸ்.

சாவேஸ் ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல் சட்டத்தை திருத்தியதோடு, நிலவுடைமை குறித்த சட்டத்தையும் திருத்தி அமைத்தார். இதன் மூலம் தரிசு நிலங்களை கைப்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெகுவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

18 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் குடும்பத் தலைவரோ அல்லது தனி நபரோ நிலம் வேண்டி அரசுக்கு விண்ணப்பித்தால், அவர்களுக்கு உரிய நிலம் அளிக்கப்படும். அவருக்கு கிடைக்கும் நிலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தால், அந்த நிலம் அவருக்கு முழு உரிமையாக்கப்படும். அதே சமயம் அத்தகைய நிலத்தை யாருக்கும் விற்கவோ, அதேபோல் வேறு நிலங்களை வாங்கவோ சட்டத்தில் இடமில்லை. 2003ஆம் ஆண்டு 60,000 நிலமற்ற விவசாய குடும்பங்களுக்கு 5.5. மில்லியன் ஏக்கர் (55 லட்சம் ஏக்கர்) நிலத்தை விநியோகம் செய்து, அந்த மக்களுக்கு சட்ட உத்திரவாதம் வழங்கியுள்ளது வெனிசுலா அரசு. இந்த ஆண்டில் அரசின் இலக்கு 3.5 மில்லியன் ஏக்கர் நிலத்தை விநியோகிப்பது என்பதுதான்; அரசின் உறுதியான நடவடிக்கையால் இலக்கையும் மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு மட்டும் 1.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1,30,000 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,50,000 பேர் பயனடைந்துள்ளனர் என்று வெனிசுலா நிலவிநியோக புள்ளி விவரம் கூறுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத் திற்கும் 11.5 ஹெக்டேர் நிலம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு விநியோகிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இத்தகைய நிலவிநியோக நடவடிக்கையால், கிராமப் புறங்களில் நிலவுடைமை வர்க்கங்கள் நடத்திய தாக்குதல்களில், வன்முறைச் சம்பவங்களில் 150க்கும் மேற்பட்ட விவசாய இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் முதலாளித் துவ ஆட்சியாளர்கள் கிராமப்புற விவசாயிகளை நிலத்தைவிட்டு விரட்டியுள்ளதால், அங்கே விவசாயிகள் இயக்கம் என்பது கூடுதல் வலுப்பெறாத நிலையுள்ளது. பலமான விவசாயிகள் இயக்கம் வெனிசுலாவில் இருந்திருக்குமேயானால், சாவேசின் புரட்சிகர நடவடிக்கை மேலும் வெகுவேகமாக செயல்படுத்துவதற்கு உத்வேகமாக அமையும்.

வெனிசுலாவில் நடைபெறும் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்ட  பிரேசில் நிலமற்றோர் இயக்கத் தலைவர் ஜோஹோ பெட்ரன் கூறுகையில், நான் காதுகளில் கேட்பதை விட கண்களில் பார்ப்பது அதிகம் என்று புகழ்ந்துரைத்துள்ளார்.

நிலச் சீர்திருத்தம் பொலிவேரியன் பாதை

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வேகமாக சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. புரட்சி வீரன் சேகுவேரா சுடப்பட்ட மண்ணில் இன்றைக்கு இடதுசாரி சிந்தனை கொண்ட ஈவோ மொரேல்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈவோ மொரோல்ஸ் மற்றொரு சாவேசாக உருவெடுத்து வருகிறார். பிடல், சாவேஸ், மொரோல்ஸ் கூட்டு ஏகாதிபத்திய அமெரிக்காவின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இவர் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் நடவடிக்கையே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை அரசுடைமையாக்கியதுதான். பொலிவியாவில் நிலவுடைமை மிக வித்தியாசமானது. அங்கே இரண்டு விதமான நிவுடைமை நிலவுகிறது. ஒன்று மினிபன்டாஸ் என்று அழைக்கக்கூடிய விவசாய நிலம் மேற்கு பகுதியிலும், லாட்டிபண்டாஸ் என்று அழைக்கக்கூடிய தொழிற்சாலை நிலங்கள் கிழக்குப் பகுதியிலுமாக பிரிக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

இங்கும், விவசாய நிலங்களில் ஏகாதிபத்திய வர்த்தகப் பயிர்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயம் என்றாலே அது உள்நாட்டு மக்களின் தேவைக்கு என்பது மாறி, அது ஏற்றுமதி செய்வதற்கு என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது ஏகாதிபத்திய கட்டமைப்பு.

சின்னஞ்சிறு பொலிவியாவில் 35 லட்சம் கிராமப்புற மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் 40 சதவிகித விவசாயிகள் கடுமையான வறுமையில் உழல்வதாக கூறப்படுகிறது. இவர்களது ஆண்டு வருமானம் வெறும் 600 டாலர் மட்டுமே. அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்கும் குறைவு.

பொலிவியாவில் எழுந்த நிலத்துக்கான இயக்கம்

பிரேசிலிய அனுபவத்தைத் பின்பற்றி பொலிவியன் நிலமற்றோர் இயக்கம் இன்றைக்கு வெகு வேகமாக பரவி வருகிறது. பொலிவியாவில் உள்ள தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த இயக்கம் செயல் பட்டு வருகிறது.  இந்த இயக்கத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத முதலாளித்துவ நில பண்ணை முதலாளிகள் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கொலை செய்து வருகின்றனர்.

இந்த நிலப் பண்ணைகள் குறித்து கூறும் போது பரான்கோ மார்னிக்கோவ் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 14,000 ஹெக்டேர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளது. இதிலிருந்து அங்குள்ள பண்ணைகளின் ஆதிக்கத்தை அறியலாம். இதேபோல் 100 குடும்பங்கள் மட்டும் 25 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது.

அதே சமயம் 2 மில்லியன் மக்கள் (20 லட்சம் பேர்) தங்கள் வசம் வெறும் 5 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மட்டுமே வைத்துள்ளனர்.

மொரேல்ஸ் அரசு நிலச்சீர்திருத்த நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு முதல் கட்டமாக அரசியல் சட்டத்தில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக பொலிவியாவில் உள்ள 4.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொலிவிய அரசின் நில விநியோகத் திட்டத்தை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கோடு நிலமுதலைகள் நில பாதுகாப்பு கமிட்டி அமைத்துள்ளனர். இவர்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களைத் தொடுப் பதற்கும் தயாராகி வருகின்றனர்.

மொரேல்ஸ் அடிப்படையில் கோக்கோ பயிரிடும் விவசாயிகள் இயக்கத்தின் தலைவர். மேலும், அவரது இயக்கமான சோசலிசத்தை நோக்கி (ஆடிஎநஅநவே வடிறயசன ளுடிஉயைடளைஅ  – ஆடிஎஅநைவேடி யட ளுடிஉயைடளைஅடி, ஆஹளு) என்ற கட்சியும் நிலச் சீர்திருத் தத்தை உறுதியாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. முதற் கட்டமாக தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயி களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை துவங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வீசுவதோடு, கிராமப்புற மக்களின் விடிவெள்ளியாக திகழ்கிறது. இந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிலச்சீர்திருத்த நடவடிக்கை, லத்தீன் அமெரிக்கா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. இது எதிர்காலத்தில் அந்த கண்டம் முழுவதையுமே மாற்றியமைக்கும் நடவடிக்கைக்கு கொண்டுச் செல்லும். உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளி மக்களுக்கும், இடதுசாரி எண்ணம் கொண்டவர்களுக்கும் லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் மாற்றங்கள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவ தோடு, அந்தந்த நாடுகளில் ஒரு இடதுசாரி, சோசலிச எண்ணத்தை கட்டமைப்பதில் மேலும் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் தற்கொலையும், வங்க பஞ்சமும்

இந்தியாவின் ஆத்மா கிராமப்புறத்தில் உள்ளது. இந்தியா பெரும் விவசாய நாடுகளில் ஒன்று. 70 சதவீத மக்கள் கிராமப்புறத்தை நம்பியே உள்ளனர். உலகமயமாக்கல், உலக வர்த்தக அமைப்பு டனான ஒப்பந்தம் போன்ற புதிய பொருளாதார கொள்கைகளால், இந்தியாவின் விவசாய கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் யாரை வாழ்விப்பதற்காக என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. பசுமைப்புரட்சி கண்ட இந்தியா என்று பீற்றிக் கொண்ட நாட்டில்தான் தற்போது உலகிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிரத்தில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று 3750 கோடி அளவிலான நிவாரணங்களை வழங்கியுள்ளார். பரிதாபம் என்னவென்றால், பிரதமர் ஒருபுறம் நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் போதே, தற்கொலைகளும் சமகாலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது தான். மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகம், கேரளம், பஞ்சாப் என பல மாநிலங்களில் ஆண்டுக்கு 4000 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏன் இந்த நிலைமை?

இந்திய ஆட்சியாளர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாக மாறியதும், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலகவங்கியின் கட்டளைக்கு அடிபணிந்து பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் கொள்கையை கடைப்பிடித்ததன் விளைவுதான் இன்றைக்கு இந்திய விவசாயிகளை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏற்றுமதியை நோக்கமாக கொண்ட வர்த்தக பயிர் (பருத்தி, சோயா…) உற்பத்தியில் ஈடுபடுமாறு விவசாயிகளை ஆசை காட்டி மோசம் செய்ததோடு, உள்நாட்டில் உற்பத்தியாகும் 800க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது போன்ற தவறான விவசாய கொள்கைகளால் இந்திய விவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மான்சாண்டோ என்கிற பன்னாட்டு நிறுவனங்களின் போல்கார்ட் பருத்தி விதைகளை பயன்படுத்தி பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டதும், உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததும், உரவிலை உயர்வு, மின்சார கட்டணம், தண்ணீரின்மை, கடன் சுமை, கந்து வட்டி என்று தொடர் சங்கிலியாக பருத்தி விவசாயிகள் கட்டுண்டு கிடக்கின்றனர். இதிலிருந்து மீள்வது எப்படி என்று வழி தெரியாத விவசாயிகள் தங்களுக்கான விடுதலை ஆயுதமாக தற்கொலையை தேர்ந் தெடுக்கின்றனர்.

1987 இல் ஆந்திராவில் மட்டும் 0.4 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. 2005இல் இது 1.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு விரிவடைந்துள்ளது. அதாவது, வர்த்தகப் பயிர் உற்பத்தி எந்த அளவிற்கு விவசாயிகளை பொறியில் சிக்க வைத்துள்ளது என்பதை இந்த விவரம் காட்டுகிறது. மேலும் வர்த்தகப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்ட நிலங்கள் தற்போது வேறு எந்தவிதமான பாரம்பரிய நெல், கோதுமை போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது. பணப் பயிர் (வர்த்தகப் பயிர்) என்ற சொல்லே ஒரு ஏமாற்றுதான். முதலாளித்துவ அரசியல்வாதிகள்தான் இந்த சொல்லை வைத்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். உணவுப் பாதுகாப்பு குறித்த உணர்வற்ற சுரண்டும் கூட்டத்திற்கு, விவசாயிகளை சுரண்ட இந்த ஏமாற்றுச் சொல் பயன்படுகிறது.

மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மிஞ்சும் வகையில் மன்மோகன் சிங் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அந்நிய நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய நாட்டிற்குள் விவசாயம் செய்துக் கொள்வதற்கு 100 சதவீதம் அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு நவீன பண்ணையார்களை சமாளிப்பதற்கே கடினமாக உள்ள சூழ்நிலையில், விவசாயத்தில் அந்நியரை அனுமதிப்பது என்பது இந்திய நாடே தற்கொலைப் பாதைக்கு செல்வதற்கு ஒப்பாகும். நிலவிநியோகம் குறித்து அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நேரத்தில் கார்ப்பரேட் விவசாய முதலாளிகள் இந்திய கிராமப்புறத்தில் உள்ள ஒட்டுமொத்த நிலத்தையும் சுரண்டிச் செல்வதற்குத்தான் இந்த அறிவிப்பு பயன்படும்.

இறக்குமதியாகும் உணவு தானியம்

தற்போது மத்தியில் உள்ள மன்மோகன் சிங் அரசு 5 லட்சம் டன் கோதுமையை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.  இந்த உணவு தானிய இறக்குமதி குறித்து ஆட்சியாளர்கள் பல்வேறு நொண்டிச்சாக்குகளை கூறி வருகின்றனர். அதாவது, நம்முடைய உணவு தானிய கையிருப்பை சமப்படுத்துவதாக கூறுகின்றனர். அதுவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமையில் பூச்சுக் கொல்லி மருந்துகள் சாதாரண அளவைவிட கூடுதலாக இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறத்தை கொண்ட ஒரு நாட்டில் தானிய இறக்குமதி என்ற கொள்கை எதை நோக்கிச் செல்லும் என்பதே நமது கேள்வி! நமது விவசாயம் திவாலாகி வருவதையும், உட்டோ (WTO) உடன்பாட்டின் அடிப்படையில் விவசாய பொருட்களை இறக்குமதி செய்யவும், நமது மார்க்கெட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடும் மோசமான போக்கைத்தான் இது வெளிப்படுத்துகிறது. மேலும் நமது நாட்டு விளை பொருளான பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்து வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

விவசாயத்துறையில் அந்நியர்களை ஈடுபட அனுமதித்தால் நம்நாட்டில் உற்பத்தி செய்து, அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இத்தகைய ஆபத்துக்களை நமது பொருளாதார புலி சிதம்பரம் வகையறாக்களுக்கு தெரியாததல்ல; எல்லாம் ஏகாதிபத்திய – உலகவங்கியின் அடிமைத்தன விசுவாசம்தான் இத்தகைய செயல்பாடுகளில் அவர்களை தீவிரமாக ஈடுபடத் தூண்டுகிறது.

கடந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 6 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளதாக கூறிக் கொண்டு, இது நம்முடைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி, பொது விநியோகத்திற்கு வழங்கப்படும் தொகையை விட மிகக் குறைவான அளவுக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நம் நாட்டில், ஒரு புறத்தில் பட்டினிச் சாவுகளும், விவசாயிகள் தற்கொலைகளும் நடைபெற்று வருவது மத்திய அரசு கடைப் பிடிக்கும் புதிய விவசாய கொள்கை நம் மக்களை வாழ்விக்காது என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

வங்கப் பஞ்சம் படிப்பினை!

பிரிட்டிஷ் இந்தியாவில் 1943 இல் வங்கத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சமும், அதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் யார் காரணம்? இதன் மூலம் இந்திய அரசு பெற்ற அனுபவம் என்ன? இது குறித்து ஜவஹர்லால் நேரு, தன்னுடைய கண்டுணர்ந்த இந்தியாவில் எழுதியவற்றை பார்ப்போம்:

அதிகாரிகளின் தொலைநோக்கின்மையும், அலட்சிய மனோபாவமும் போரின் பின் விளைவும்தான் இப்பஞ்சத் திற்கு காரணம். சாதாரணமான அறிவுடையவர்களாலேயே பஞ்சத்தின் அறிகுறியைக் கணிக்க முடிந்தது. உணவு நிலையைச் சரிவரக் கையாண்டிருந்தால், இத்தகைய பஞ்சத்தைத் தவிர்த்திருக்க முடியும். போரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், போரால் விளையும் இத்தகைய பொருளாதார சிக்கலை, போர் தொடங்கும் முன்னரே கணித்துத் தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் கழித்தே உணவுத்துறை  துவக்கப்பட்டது.

மேலும், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை 40 லட்சம் டன் என்று கணிக்கப்பட்ட சூழ்நிலையில், பிரிட்டிஷ் – இந்திய அரசு 10 லட்சம் டன் உணவுதானியத்தை ஏற்றுமதி செய்தது. விலை யேற்றம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக ஏறிக் கொண்டே சென்றது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் பறிக்கப்பட்டு, உணவுக்காக கடுமையாக சுரண்டப்பட்டனர். பசியும், பட்டினியுமாக கிடந்த மக்கள் வாழ வழித்தெரியாமல் கடுமையான நோய்களுக்கு ஆளாகி, எலும்பு கூடுகளாய் – நடைபிணங்களாய் மாறி தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டது வங்கப் பஞ்சம். ஒரு புறம் எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காததால் பஞ்சம் வந்ததோ, அந்த பொருட்களை விற்பனை செய்ததால் கிடைத்த கொள்ளை லாபத்தில் ஆளும் வர்க்கம் சுகம் கண்டு கொண்டிருந்தனர்.!

வங்கப் பஞ்சம் குறித்தும், அதனுடைய கொடுமைகள் குறித்தும், மக்களது துன்ப – துயரங்களை விளக்கியும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலைப் படித்தால் அதன் முழுமையான பரிணாமத்தை உணர முடியும்.

மொத்தத்தில் அரசுகளின் தவறான உணவுக் கொள்கையும், விவசாய கொள்கையும் மக்களை பசி – பட்டினிச் சாவுகளுக்கு கொண்டுச் செல்லும் என்பதைத்தான் வங்கப் பஞ்சம் உணர்த்து கிறது. இதன் பின்னணியில் தற்போது இந்திய அரசின் செயல் பாடுகளை ஒப்பு நோக்கும் போது, இந்திய அரசின் விவசாய கொள்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணரலாம்.

தற்போது மேற்குவங்கத்தில் இந்த பஞ்சத்தின் அனுபவங்களை உணர்ந்த இடதுசாரி அரசு செய்த நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விநியோகிக்கப்பட்டு 26 லட்சம் நிலமற்ற விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 56 சதவீதம் பேர் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட நில விநியோகத்தில் மேற்குவங்கத்தில் மட்டும் வழங்கப்பட்டது  20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக மேற்கு வங்கத்தில் உணவு உற்பத்தி மிக கணிசமான அளவுக்கு பெருகி யிருக்கிறது. இதேபோல் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.

தமிழகத்தில் நில விநியோகம்

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தனது தேர்தல் அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை இரண்டு ஏக்கர் விதம் 26 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. திமுக அரசின் நில விநியோக அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றி பெறச் செய்வதில் மார்க்சிஸ்ட்டுகளுக்கு மிக முக்கியமான பங்குள்ளது. கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டி, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை அடையாளம் காணுவதோடு, அதற்காக எழுச்சிமிக்க வலுவான விவசாய இயக்கத்தை நடத்துவதன் மூலம்தான் இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியும்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஜெயலலிதா இந்த 55 லட்சம் ஏக்கர் நிலத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்போது கூறுகிறார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தமிழகத்தில் இல்லவே இல்லையென்று. ஜெயலலிதாக்களின் விசுவாசம் நிலமற்ற கூலி விவசாயிகள் மீதல்ல; கார்ப்பரேட் பண்ணைகளிடத்தில்தான்.

மேலும், தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டத்தை அமலாக்குவதில் திமுக அரசு உரிய – தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் இடதுசாரிகளும், மக்களும் விரும்புகின்றனர். நிலச்சீர்திருத்த சட்ட அமலாக்கம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 26வது மாநில மாநாடு முன்வைத்த அறிக்கையில் உள்ள பகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டம் என்பது முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகளுக்கு பின்னரும் கையகப்படுத்தியுள்ள நிலம் 1.9 லட்சம் ஏக்கர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

அதே போல்,

தலித் மக்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட சுமார் 3 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அம்மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு பலருடைய அனுபவத்தில் உள்ளது. இந்நிலங்களை மீட்டு தலித்துக்கள் வசம் ஒப்படைக்க சட்டரீதியான தடைகள் ஏதுமில்லை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கண்ட கூற்று, தமிழக நிலச்சீர்திருத்தத்தில் செய்ய வேண்டிய இலக்கினை மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை விநியோகிப்பதோடு நிற்காமல், நில உச்சவரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து, நிலச்சீர்திருத்த நோக்கிலான நிலஉச்சரம்பை கொண்டு வரவேண்டும்.

காமராஜர் ஆட்சிகாலத்தில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று இருந்ததை கலைஞர் ஆட்சிக்காலத்தில் 15 ஸ்டாண்டர்டு ஏக்கராக மாற்றப்பட்டது. இருப்பினும் இந்த உச்சவரம்பு சட்டத்தில் நிலவுடை மையாளர்களது நிலங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களிலும், பினாமிகள் பெயர்களிலும் மாற்றம் செய்யப்பட்டு அனுபவித்து வரப்படுகிறது. அதோடு விவசாய நிலங்கள் கரும்பு விளைச்சல் நிலம், பழத்தோட்டங்கள், பால்பண்ணைகள், டிரஸ்டுகள், தர்ம ஸ்தாபனங்கள் என்று பல்வேறு வடிவங்களில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அனுபவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தச் சட்டம் உச்சரம்பா, மிச்ச வரம்பா என்ற கேலிக்கும் இட்டுச் சென்றது. எனவே கடந்தகால அனுபவத்தை கணக்கில்கொண்டு  நிலஉச்சவரம்பு சட்டத்தை முழுமையாக அமலாக்கி நிலமற்ற விவசாய தொழிலாளர்களது வாழ்வில் அடிப்படையான மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திட முடியும். இத்தகைய அடிப்படையான விஷயங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி – ஜனநாயக சக்திகளும் களத்தில் உறுதியாக துணை நிற்கும்.

நிலம் – உணவு – வேலைக்கான இயக்கம்

ஜூன் 8 – 10, 2006 நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி ஆகஸ்ட் மாதத்தில் உணவு – நிலம் – வேலை என்ற மூன்று முழக்கத்தை முன்வைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலச்சீர்திருத்த நடவடிக்கை என்பது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு, உணவு தேவை போன்றவற்றை பூர்த்தி செய்யும் இணைப்பு சங்கிலியாக செயல்படும் மிக முக்கியமான நடவடிக்கை! லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் நிலச்சீர்திருத்த நடவடிக்கையும், இந்தியாவில் மேற்குவங்கம் – கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் நாடு முழுவதும் உள்ள விவசாய தொழிலாளர் களுக்கும், கிராமப்புற விவசாயிகளுக்கும் நம்பிக்கையூட்டும் நிகழ்வாகும்.

நிலச்சீர்திருத்தம் உலக அரசியல் அரங்கின் முக்கிய அஜண்டாவாக மாறி வருவதைத்தான் மேற்கண்ட லத்தீன் அமெரிக்க அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்திய அரசியலிலும் நிலச்சீர்திருத்த முழக்கத்தை ஒரு பௌதீக சக்தியாக மாற்றுவது மார்க்சிஸ்ட்டுகளின் வரலாற்று கடமையாகிறது.

தகவல் ஆதாரம்

http://www.landaction.org
http://en.wikipedia.org/wiki/Landless_Workers%27_Movement
http://www.pbs.org/frontlineworld/rough/2005/12/brazil_cutting.html#
http://news.bbc.co.uk/1/hi/world/americas/4550855.stm
http://www.zmag.org/weluser.htm
http://www.venezuelanalysis.com

Rural Development Institute, Land Reform in the 21st Century
http://www.rdiland.org

நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க நாம் காட்டும் பாதை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியீடு – 1974.