மார்க்சியமும், தேசிய இனப்பிரச்சனையும் என்ற சிறு புத்தகத்தை தோழர் ஸ்டாலின் 1913-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எழுதினார். சிறுபான்மை தேசிய இனங்களோடும், பண் பாட்டுக் குழுக்களோடும் போல்ஷ்விக்குகள் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்; பரந்துபட்ட தொழிலாளிவர்க்க ஒற்றுமையைக் கட்டமைப்பதற்கான சரியான உத்தி எது என்ற கேள்வி அப்போது விவாதப் பொருளாக இருந்தது. குறிப்பாக, யூத தொழி லாளர்கள் மத்தியில் இயங்கிய பண்ட் என்ற அமைப்பு ஒரு தேசியத்திட்டத்தை முன்வைத் திருந்தது, காகஸஸ் பகுதிக்கான தன்னாட்சி மற்றும் கலாச்சார தேசிய தன்னாட்சி என்ற கோரிக்கைகள் காகேஷியர்கள் தரப்பிலிருந்து எழுந்தன. இத்தகைய கோரிக்கைகளை மார்க்சிய கண்ணோட்டத்தில் எப்படி அணுக வேண்டும் என்ற குழப்பம் நிலவியது. ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் ‘கலைப்பாளர்கள்’, சந்தர்ப்பவாத நிலைப் பாடுகளை மேற்கொண்டார்கள். அந்த வாதங் களுக்கு பதிலளிக்கும் வகையிலும், பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையி லும் இந்த சிறு பிரசுரம் எழுதப்பட்டது.
ஆஸ்த்ரியாவின் (ஜெர்மன்) நன்கு அறியப் பட்ட சிந்தனையாளரான ஓட்டோ பேர், மற்றும் ஸ்ப்ரிங்கர் ஆகியோரின் எழுத்துகளும், பண்ட் அமைப்பின் தீர்மானங்களும், காகேசியர்களின் நிலைப்பாட்டினையும், கலைப்பாளர்களின் சந்தர்ப் பவாதத்தையும் முன்வைத்து, அவற்றின் பலவீனங் களைச் சுட்டிக்காட்டி – இயக்கவியல் நோக்கில் சரியான நிலைப்பாட்டிற்கு வந்தடைவதே இப்பிர சுரத்தின் நோக்கமாகும். ஓட்டோ பேர் மற்றும் காவுட்ஸ்கி ஆகியோர் ஜெர்மானிய மொழியில் எழுதியிருந்த கருத்துக்களை, நிக்கோலாய் புகாரி னுடைய உதவியுடன் ஸ்டாலின் அறிந்து கொண்டு இப்புத்தகத்தை எழுதினார். 1913-ம் ஆண்டு எழுத்தாளர் மாக்சிம் கார்க்கிக்கு எழுதிய கடிதத்தில் தோழர் லெனின் இக்கட்டுரை யைப் பாராட்டியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சோவியத் அனுபவத்தின் முக்கியத்துவம்
உலகின் முதல் சோசலிச அரசான சோவியத் ஒன்றியம் தேசிய இனப்பிரச்சனையில் முன்னுதாரண மாக செயல்பட்டது. லெனின் தலைமையிலான புரட்சி அரசாங்கம் கடைப்பிடித்த தேசிய இனக் கொள்கை, உலகம் முழுவதும் தேசிய இயக்கங் களின் மீது தாக்கம் செலுத்தியது.
சோவியத் ஒன்றியத்தில் 1918-ம் ஆண்டில் தேசிய இனங்களின் விஷயங்களைக் கவனிக்க ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. ஸ்டாலின் அதன் முதல் மக்கள் அமைச்சராக நியமிக்கப் பட்டார். லெனின் வழிகாட்டுதலுடன், தேசிய இனக் கொள்கை பற்றி முக்கிய பேச்சாளராக அவர் இருந்தார். தேசிய இனங்களின் மக்கள் அமைச்சகத்தின் கீழ் பல பிரிவுகள் ஏற்படுத் தப்பட்டன. மிகச் சிறிய குழுக்களான பாஷ் கிர்கள், டாட்டர்கள் உள்ளிட்டோருக்கான பிரிவுகள் தொடங்கப்பட்டு சுவாஷ் மொழியில் அவர்களுடைய பிரச்னைகள் பற்றி புகார் அளிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவை தவிர, மாவட்ட, கிராம சோவியத்துகள் மக்கள் கூட்டங் களை நடத்தி, மிகவும் சிறிய குழுக்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில், செய்தித்தாள்கள் வாசிப்பது, முக்கிய தகவல்கள்,பிரகடனங்களை அவர்களுடைய மொழியில் வாசித்து காண்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர். போல்ஷ் விக்குகள் இப்பணிகளை உணர்வுப்பூர்வமாக வும், சோசலிச அமைப்பை பாதுகாத்து பரந்து பட்ட ஒற்றுமையை முன்னெடுக்கும் விருப்பத் தோடும், அர்ப்பணிப்போடும் மேற்கொண் டார்கள். 1922-ம் ஆண்டில், பல தேசங்கள் முன்வந்து சோசலிச அமைப்பில் இணைந்தன. சோவியத் ஒன்றியம் உருவாகியது.சரியான மார்க் சிய – லெனினிய அணுகுமுறையே அதற்குக் காரணமாகும். எனவே சோவியத் அனுபவத்தைக் கற்பது நமக்கு அவசியமான ஒன்று.
தேசம் என்பது என்ன?
பொதுப்பயன்பாட்டில் தேசம் என்ற சொல்லும், நாடு, அரசு ஆகிய சொற்களும் தெளிவற்று ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை அப்படியல்ல. தேசம் என்ற கருத்தாக்கம் உருவாகி உறுதிபெற்றுவந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட இந்தப்புத்தகம் தேசம் பற்றிய மார்க்சியக் கோட் பாட்டினை விவரிக்கிறது.
முதல் அத்தியாயத்தில் தேசம் குறித்த தெளி வான வரையறைவிளக்கப்பட்டுள்ளது. “ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, எல்லை, பொருளாதார வாழ்வு மற்றும் (பொதுவான) உளவியல்கட்டமைப்பு (psychological make-up) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலைபெற்ற மக்கள் சமூகமாகும்” என்பதே அந்தவரையறையா கும். எனவே, மேற்சொன்ன அனைத்து அடிப் படைகளும் ஒருங்கே அமையும் போதுதான் அதுவொரு தேசமாகிறது. மேலும், ‘வரலாற்று ரீதியாக’ சமூகம் உருவாவது என்ற நிகழ்வு, வரலாற்று விதிகளுக்கு உட்பட்டுமாறக் கூடிய ஒன்றேயாகும்.‘நிலைபெற்ற’ அந்த மக்கள் சமூகம், என்றென்றைக்கும் மாறாத ஒன்றுமல்ல என தெளிவுபடுத்துகிறது.
அதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு உதாரணங்களும், அன்றைய உலகில் நிலவிய பல்வேறு களச் சூழல்களையும், காரணிகளையும் ஒப்பிட்டுக் காட்டுகின்றன. பேரரசர் ஒருவரின் ஆளுகைக்குஉட்பட்ட பேரரசைஒரு ‘தேசம்’ என்று அழைக்க முடியாது. ஏனென்றால் எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் சேர்க்கப்பட்ட பல்வேறு குழுக்களின் சேர்ப்பாக அது அமைந்தது. ரஷ்யா விற்குள் அப்போதிருந்த போலந்து தேசமும், ஆஸ்திரியாவிற்குள் அமைந்துள்ள செக் தேசமும் பொது மொழியோடு இயங்கின. பல்வேறு மொழி கள் பேசப்பட்டாலும் அவற்றின் ஒருமைப்பாடு பாதிக்கப்படவில்லை. ஒரே மொழியைக் கொண் டிருந்தாலும், இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஒரே தேசமாக இல்லை. ஏனென்றால் அவற்றின் எல்லைப்பகுதிகளில் நிலவும் மாற்றங்கள் காரண மாக இருவேறு தேசங்களாகவே அவை அமையப் பெற்றன. அயர்லாந்து உருவாக்கப்பட்ட விதத்தை கவனித்தால், அதில் ‘உளவியல்கட்டமைப்பு’ ஒரு முக்கியக் காரணியாக வெளிப்பட்டது. இவ்வாறு உலகச் சூழலை விவரிக்கும் முதல் அத்தியாயம், “அனைத்து காரணிகளும் ஒருங்கே அமையும் போது மட்டுமே அது ஒரு தேசம் என்றாகிறது” என விளக்குகிறது. பிற்பகுதியில் தேசம் குறித்து நிலவிய கோட்பாடுகளையும், அந்தக் கோட் பாடுகளில் காணப்பட்ட முரண்களையும் விளக்குகிறது.
முதலாளித்துவமும் – தேசமும்
பொதுவான பொருளாதார வாழ்வும் பொரு ளாதார ஒன்றிணைப்பும் ஒரு தேசத்தின் பிரதான அம்சங்களில் ஒன்று என்பதை மேலே பார்த் தோம். தேசம் என்ற வகையினம் முதலாளித் துவத்தோடு இணைந்த ஒன்றாகவே உதயமாகிறது. முதலாளிகளுக்கு ஒரு நிரந்தர சந்தைதேவை. எனவே‘தேசங்கள்’ அவசியமாகின்றன. இதன் காரணமாக முதலாளிகள் தேசியவாத முழக்கங் களை எழுப்புகின்றனர். வரலாற்றின் போக்கில் முதலாளித்துவ அரசாங்கங்களின் உருவாக்கத்தை கவனித்தால் அவற்றில் பல்வேறு போக்குகளும் தென்படுகின்றன. ஐரோப்பாவின் மேற்கில் அமைந்த பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி போன்ற அரசுகள், சுதந்திர ‘தேசிய அரசுகளாக’ உருவாகின. கிழக்கு ஐரோப் பாவிலோ ‘பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட அரசுகள்’ உருவாகின. இந்த இரண்டு போக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் முதலா ளித்துவ வளர்ச்சிக்கும், தேசியவாத முழக்கங் களுக்குமான நேரடித் தொடர்பு புரியவருகிறது.
முதலாளித்துவதேசியவாதிகள் “பிளவுபடுத்தி ஆளுதலுக்காக” தேசிய இனத்தைத் தூண்டி விடுவதும் காலங்காலமாக நடந்துவருகிறது. அவை மாபெரும் இனப் படுகொலைகளில் முடிந் திருக்கின்றன. “எங்கெல்லாம் அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லையோ, அங்கெல்லாம் இது (தேசியவாதம்) கொடூரமான வடிவத்தை எடுக்கிறது” மேலும், “எங்கெல்லாம் (தேசியவாதம்) இவ்வாறு தூண்டப்பட்டு (முதலாளித்துவ வர்க்கத் திற்கு) வெற்றி கிடைத்ததோ அங்கெல்லாம் பாட்டாளி வர்க்கத்திற்கு மிகப்பெரும் கேடு ஏற்படுத்துவதாக (தேசியவாதம்) அமைந்தது. பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர் களை ஒன்றுபடுத்துவதற்கும் இது மாபெரும் தடையாக அமைந்தது.
முதலாளிவர்க்கத்திற்கு உள்ள ‘சொந்த’ , ‘உள்நாட்டு’ சந்தைக்கான விருப்பத்தைத் தாண்டி, குறிப்பிட்ட தேசிய இனத்தின் ஆதிக்கமும், தேசியவாத முழக்கங்களுக்கு அடிப்படையாக அமைகிறது. அதாவது, ஒரு சமூகத்தில் குறிப் பிட்ட தேசிய இனத்தைச்சார்ந்த ஆளும் வர்க்கங் கள், மற்றவற்றை ஒடுக்கும் நிலையை இப்புத்தகம் குறிப்பிடுகிறது. அவ்வாறுஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பல்வேறு வாய்ப்புகளை, ஒடுக்கும் தேசிய இனத்தின் ஆளும் வர்க்கங்கள் முடக்கு கிறார்கள். எனவே ஒடுக்கப்படும் தேசிய இனத் தின் மத்தியிலிருந்துமுதலாளிகளும் இயக்கமாக கிளர்ந்தெழும் முனைப்பு உருவாகிறது.
முதலாளிகள் தலைமையேற்கும்போது, அந்தப் போராட்டங்களுக்கு வெளிப்புறத்தே ‘தேசிய அளவிலான தன்மையே’ உள்ளது. ஆனால் “சாராம்சத்தில் … முதலாளித்துவ நலனுக்காகவும், முதலாளித்துவ லாபத்திற்காகவும் நடைபெறும் முதலாளித்துவப் போராட்டமாகவே இருக்கும்.” இங்கே, ஒரு எழுச்சி முதலாளிகளின் தலைமை யில் உருவாகும்போது, அதில் பாட்டாளி களும், விவசாயிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டால் தான் வலிமையான தேசிய இயக்கமாக அது மாற்றமடைகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
தொழிலாளி வர்க்கமும் – தேசமும்
ஒரு தேசிய இனம் அடக்குமுறைக்கு ஆளாக் கப்படும்போது அவை அந்த தேசிய இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களையே அதிகம் பாதித்தன. எனவே, பாட்டாளிவர்க்கம் தேசிய அடக்குமுறைக்கு எதிராக நுட்பமான வழிகளி லும், கரடு முரடான வழிகளிலும் போராட வேண்டும் என்பதுடன், தேசங்களை ஒன்றுக்கு ஒன்று எதிராக தூண்டிவிடும் கொள் கையை எதிர்த்து அனைத்து வடிவங்களிலும் போராட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். தேசிய இனங் களின் ஒற்றுமையைப் பாதுகாத்துக் கொண்டே ஜனநாயக உரிமைகளுக்காக போராடு வது ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.
இந்த நேரத்தில், தோழர் ஸ்டாலின் சுட்டிக் காட்டும் எச்சரிக்கையை எப்போதும் மனதில் நிறுத்தவேண்டும். ‘தேசியப் பிரச்சனைக ளானவை, பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பகுதியினரை சமூகப் பிரச்சனைகள், வர்க்கப் போராட்டப் பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புகின்றன. அவை முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக் கும் ‘பொதுவான’ பிரச்சனைகளில் கவனம் செலுத்தச் செய்கின்றன’. தேசிய இனப் பிரச்சனை களை பயன்படுத்திக்கொள்ளும் முதலாளித்துவ வர்க்கம், தொழிலாளி வர்க்க ஒற்றுமையை இரத் தத்திலும் கண்ணீரிலும் மூழ்கடிக்கச் செய்யும். எனவே இவ்விசயத்தில் சரியான புரிதலுடன் கூடிய சரியான எதிர்வினை மிக மிக அவசியமாகும்.
இவ்விடத்தில் அப்போது ரசிய சமூக ஜன நாயகவாதிகள் (போல்ஷ்விக்குகள்) முன்வைத்து வந்த சுயநிர்ணய உரிமை பற்றி ஸ்டாலின் குறிப் பிடுகிறார், “ ஒரு தேசிய இனத்தின் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக குறுக்கிடுவதற்கோ, அதன் பள்ளிகளையும் மற்ற நிறுவனங்களையும் அழிப் பதற்கோ அதன் பழக்கவழக்கம் மற்றும் மரபு களை மீறுவதற்கோ, அதன் மொழியை நசுக்கு வதற்கோ, அவர்களின் உரிமைகளை ஒடுக்கு வதற்கோ ஒருவருக்கும் உரிமையில்லை” என அறுதியிட்டுக் கூறுகிறார்.
இதன் பொருள் தேசிய இனத்திற்கு கேடு பயக்கக்கூடிய மரபு மற்றும் நிறுவனங்களை, பாட்டாளிவர்க்கம் அப்படியே ஏற்கவேண்டும் என்பதல்ல. மாறாக ஒரு தேசிய இனத்தைச் சார்ந்த உழைக்கும் மக்களைக் காப்பாற்றும் நோக்கில், அத்தகைய மரபுகளையும் நிறுவனங் களையும் எதிர்த்துப் போராடவேண்டும்.
இவ்வகையில் பாட்டாளி வர்க்கத்தின் நிலைப் பாடு சாராம்சத்தில் வேறுபட்ட ஒன்றாகும். பாட்டாளிவர்க்க நலனை அடிப்படையாக வைத்துக்கொண்டு, தேசிய இனச் சிக்கல்களுக்கு தீர்வுகாண்பது என்ற அடிப்படையிலேயே ஒவ்வொரு உத்தியும் அமைகிறது.
தேசிய இன வாதம் நச்சாகும்போது
முதலாளித்துவ வர்க்கத்தால் முன் மொழியப் படும் வெளிப்படையான தேசியவாதத்தை சமாளிக் கலாம். அதே சமயம் “சோசலிசக் கவசத்தால் பாதுகாக்கப்பட்ட தேசிய இனவாதம் … தொழி லாளர்கள் மத்தியிலே வேரூன்றும்போது … நச்சுக் கருத்துக்களைப் பரப்புகிறது. பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே நம்பிக்கையின்மையையும், பிளவுறும் தன்மையை யும் உருவாக்கும் ஆபத்தான கருத்துக்களையும் படரவிடுகிறது” என்கிறார்ஸ்டாலின்.
இத்தகைய சூழலை எதிர்கொள்ள வலுவான தத்துவார்த்தப் போராட்டம் அவசியமாகும். தேசிய இனச்சிக்கல்கள் எழும் போது பாட்டாளி வர்க்க சித்தாந்தப்பார்வையில் சரியான தீர்வு களை முன்னெடுக்கவேண்டும். அவ்வகையில் தவறான போக்குகளை வீழ்த்த வேண்டும். தேசிய இனங்களின் உரிமை என்று சொல்லும் போது அதில் பாட்டாளி வர்க்க நலனும் வெளிப் படுகிறது, அந்த தேசத்திற்குட்பட்ட முதலாளி கள், பிரபுக்கள், மதகுருக்களின் நலன்களும் வெளிப்படுகின்றன. எனவே பாட்டாளி வர்க்கம் தனது வர்க்கத்தின் நலனை மனதிற்கொண்டே இப்பிரச்சனையில் தலையிடவேண்டும்.
சோசலிசம் வந்த பிறகே தீர்வா?
தேசிய இனப்பிரச்சனைகளுக்கு, சோசலிச சமூக அமைப்புதான் முடிவான தீர்வைக் கொடுக்க முடியும். அதன் பொருள் சோசலிசம் வரும் வரையில் இப்பிரச்சனைகளில் அமைதிகாக்க வேண்டும் என்பதல்ல. முதலாளித்துவ அமைப் பிற்குள்ளே, தேசிய இனங்களின் சுய வளர்ச்சிக் கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த உழைப்பது பாட்டாளிவர்க்கத்தின் கடமையாகும். ஒரு தேசிய இன ஆதிக்கத்தின் கீழ் மற்ற தேசிய இனங்கள் இருப்பதான சூழலில், உழைக்கும் வர்க்க விடு தலை சாத்தியமாகாது. எனவே, ஜனநாயக சூழலை ஏற்படுத்துவது முதன்மையான கடமை.
மேலும், பாட்டாளிவர்க்கம் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பதும் கூட ஏட்டில் உள்ள உரிமை அல்ல. பிரத்யேக நிலைமைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைப் படுத்த வேண்டும். எனவே, அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏற்ப சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பாட்டாளி கள் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பது வர்க்க நலன் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படு கிறது. எனவே, முதலாளித்துவ முழக்கங்களை அப்படியே ஏற்காது.
தன்னாட்சி உரிமை குறித்த விவாதம்
தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற முறை யில் ‘தேசிய தன்னாட்சி’, ‘கலாச்சார தேசிய தன்னாட்சி’ மற்றும் ‘வட்டாரத் தன்னாட்சி’ ஆகிய கோரிக்கைகள் பேசப்படுகின்றன. பண்ட் அமைப்பும், காகேஷியர்களும், ஆஸ்திரிய அறிஞர் களும், சமூக ஜனநாயகக் கட்சியினுள் நடைபெற்ற விவாதங்களிலும் இவை அனைத்தும் இடம் பெறுகின்றன. இவை அனைத்தையும் முன்வைத்து விவாதிக்கும் ஸ்டாலின் – தேசியத் தன்னாட்சி, கலாச்சார தேசிய தன்னாட்சி ஆகிய வாதங் களின் பலவீனங்களை சுட்டிக்காட்டுகிறார். பாட்டாளிவர்க்க ஒற்றுமை, சோசலிசப் புரட்சி யின் வெற்றி என்ற இலக்கில் பற்றி நிற்கும் அதே சமயம் – தேசிய இனங்களின் ஜனநாயக உரிமை களிலும் சமரசம் செய்துகொள்ளாத ஒரு தீர்வை எட்டுவது குறித்து விவாதிக்கிறார்.
உலகம் முழுவதும் நிலவும் தேசிய இனச் சிக்கல்களுக்கான தீர்வு, ஒரு நாட்டைப் போல மற்றொன்றில் அமையாது. அது வரலாற்று நிலைமைகளைப் பொறுத்து எட்ட வேண்டிய ஒன்றேயாகும். “சூழ்நிலைமைகள் மற்ற எதையும் போல மாற்றமடைவது ஆகும். எனவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு இன்னொரு தருணத்தில் முற்றிலும் பொருந்தாமல் போகலாம்” “குறிப் பிட்ட தேசிய இனத்தின் பருமையான வரலாற்று நிலைமைகளைப் பொருத்தே (பிரச்சனைகளுக் கான) தீர்வு என்பது அமையும்” என்கிறார். ஆஸ்திரியாவில் எழும் பிரச்சனைகளுக்கு நாடாளு மன்ற அமைப்பை அடிப்படையாகக் கொண்டு முடிவுகாணும் அதே சமயம், ரஷ்யாவின் தேசிய இனப்பிரச்சனை நாட்டின் விடுதலை என்ற முக்கியப் பிரச்சனையின் ஒரு பகுதியாக அமைந்திருப்பதை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
தேசிய இனங்களின் சமத்துவம்
வளர்ச்சியடையாத எல்லாதேசங்களையும் ஒரு பொதுவான உயர்தர கலாச்சார நீரோட்டத் திற்கு கவர்ந்திழுப்பதே சமூக ஜனநாயகம் முன் வைக்கும் முற்போக்கான தீர்வாகும். வட்டாரத் தன்னாட்சி அதற்கு உதவுமென்றால் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. வட்டாரத் தன்னாட்சியும், பிராந்தியத் தன்னாட்சியும் பிரதான அம்சங்கள். அதே சமயம் சிறுபான்மையினருக்கான செயற் கையான கட்டமைப்பைக் கொடுப்பதை விட உண்மையான உரிமைகளை உறுதி செய்ய வேண் டும். சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்கான வசதி, சொந்தமான கல்வி நிலையங்கள், மொழி, கல்வி போன்ற அனைத்திலும் தேசிய இனங் களுக்கு சம உரிமை கண்டடைவது மிக முக்கியம்.
“சோசலிசப் புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும்” என்றதலைப்பில் 1916-ம் ஆண்டில் லெனின் எழுதிய ஆய்வுக்கட்டுரையில், “சிறு சிறுஅரசுகளாகப் பிளவுண்டுள்ளதையும், தேசங்கள் தனிமைப்பட்டுக் கிடப்பதையும் ஒழிப் பது மட்டுமின்றி தேசங்களை நெருங்கவைத்து ஒன்று கலப்பதும் சோசலிசத்தின் நோக்கமாகும்” என்று குறிப்பிடுகிறார். அந்த நோக்கத்தை சில உத்தரவுகளின் மூலம் எட்ட முடியாது என்பதை யும், அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகளின் மூலமே படிப்படியான மாற்றங்களை அடைய முடியும் என்பதையும் லெனின் தலைமையில் சோவியத் போல்ஷ்விக்குகள் முன்னெடுத்த முயற்சிகளும் அனுபவங்களும் காட்டுகின்றன. இந்தச் சிறுபிரசுரம், நமக்கு சிறந்த வழிகாட்டி யாகவும். வரலாற்றுச் சூழல்களை ஆய்வு செய்து முடிவுகளை வந்துசேர்வதற்கான கையேடாகவும் விளங்குகிறது.