நிலவுடைமை
-
தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம்; சீர்திருத்தமும் எதார்த்தமும்
உழுபவருக்கே நிலம் என்பதுதான் நியாயம். கூடுதல் விளைச்சலும் இதனால் ஏற்படும் என்றேன். தாகுவா என்னுடைய ஆலோசனையை உடனே புரிந்துகொண்டார். ஏற்றுக்கொண்டார். உடனே அதை சரி செய்தார். (இந்தியாவின் மற்ற பகுதிகளும் மேற்கு வங்கமும் வேறுபாடானவை. மேற்கு வங்கக் குத்தகை விவசாயிகளில் 46 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர், 6 சதவீதம் பேர் பழங்குடிகள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமூக வர்க்கங்களிலேயே அடித்தளத்தில் இருக்கிற சாதிகள்தான் குத்தகையாளர்களாக இருக்கிறார்கள்)” Continue reading
-
பி.எஸ்.ஆரின் நூற்றாண்டு: வாழ்வும் பணியும்
அடித்தால், திருப்பியடி! சாணிப்பால் புகட்டினால் சாட்டையால் அடித்தால், அது சட்ட விரோதம்! அப்படித் தண்டிக்க வருவோரை முட்டியை உயர்த்தி ஓட ஓட விரட்டியடி! ஒருவர், இருவருக்கு தொல்லை கொடுத்தால் ஊரே திரண்டு தற்காத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையும், உறுதியும்தான் சங்கம். Continue reading
-
தமிழக விவசாய மறுமலர்ச்சி, தரிசு நிலத் திட்டம்!
இன்று ஏழை நிலமில்லா மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த புதிய தமிழக அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளது. இந்த முடிவினை அதன் தோழமைக் கட்சிகளும், தமிழக மக்களும் வரவேற்றுள்ளன. இத்திட்டம் சிறந்த, நெறிய முறையில் நிறைவேற்றப்படுமானால், தமிழகம் விவசாயத் துறையில் புத்தொளி பெறுவது திண்ணம். Continue reading
-
நில உடமையின் இன்றைய பிரச்சினைகள்
ஏழை விவசாயிகளை சங்கங்களிலே திரட்டிட வேண்டும். வலுவான இயக்கங்கள் மூலம் அரசு அச்சங்கங்களை அங்கீகரிக்க வைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பு மூலம் சட்டங்கள் நிறைவேற உத்தரவாதம் செய்ய அரசை வற்புறுத்த வேண்டும். Continue reading