நீண்ட கால உத்திகளும், உடனடி உத்திகளும்!

பிரகாஷ் காரத்
தமிழில்: இ.எம்.ஜோசப்

மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான நீண்ட கால உத்திகளை கட்சித் திட்டத்தில் உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்திய சமூகத்தில் உள்ள வர்க்கங்கள் குறித்த திட்டவட்டமான ஆய்வின் அடிப்படையில் கட்சித் திட்டம், வடிவமைக்கப்பட்டுள்ளது. புரட்சியின் கட்டம், அரசின் வர்க்கத் தன்மை, மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக உருவாக்கப்பட வேண்டிய வர்க்கக் கூட்டணி ஆகிய அம்சங்கள் அதில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. நமது கட்சித் திட்டத்தைப் பொறுத்த அளவில் நாம் இன்று புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தில் இருந்து வருகிறோம். இந்திய அரசு, பெரும் பூர்ஷ்வாக்கள் தலைமையிலான பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ அரசு.

மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், குட்டி பூர்ஷ்வாக்கள், பெரு முதலாளிகள் அல்லாத முதலாளித்துவப் பிரிவினர் கொண்ட வர்க்கக் கூட்டணியினை உருவாக்க வேண்டும். இவையெல்லாம் நமது கட்சித் திட்டத்தில் தெளிவாக இடம் பெற்றிருக்கின்றன.

2000மாவது ஆண்டில், கட்சித் திட்டத்தினை தற்காலப்படுத்திய போது, வேறு சில அம்சங்களும் அதில் சேர்க்கப்பட்டன. சோவியத் யூனியன் சிதைவிற்குப் பின்னர் சர்வதேசச் சூழ்நிலையில் வர்க்கப் பலாபலன்களில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்தியாவில் தாராளமயப்படுத்தப்பட்ட சூழலில் உருவான முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய கட்டம், பல்வேறு வர்க்கப் பிரிவினர் மீது அது ஏற்படுத்தியிருந்த தாக்கம் போன்ற பல அம்சங்களை ஆய்வு செய்ததோடு, 20ம் நூற்றாண்டில் சோஷலிசத்தைக் கட்டுவதில் கிடைத்த அனுபவங்கள், அன்றைய சூழ்நிலையில் உருவாகியிருந்த புதிய எதார்த்தங்கள் போன்றவற்றையும் மனதில் கொண்டு, திட்டத்தினைத் தகவமைத்துக் கொண்டோம்.

சர்வதேசிய, தேசிய அளவில் காலத்திற்குக் காலம் மாறிவரும் அரசியல் சூழ்நிலை குறித்து, கட்சித் திட்டத்தின் அடிப்படையில் திட்டவட்டமாகப் பரிசீலித்து அரசியல் – நடைமுறை உத்திகளை உருவாக்கி வந்திருக்கிறோம்.  அத்தகைய கொள்கைகள், அன்று இருக்கும் வர்க்கப் பலா பலன்களையும், உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினரின் அரசியல் உணர்வு மட்டத்தினையும் கணக்கில் கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வப்போது இயக்கத்தின் கட்டங்கள் மாறும் போது –  அதனுடைய ஏற்ற இறக்கங்கள், ஆளும் வர்க்கங்களின் சாகசங்கள், நாம் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பனவற்றிற்குத் தகுந்தாற்போல் –  நடைமுறை உத்திகளும் மாறவே செய்யும்.  வர்க்கப் பலாபலன்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு சாதகமாக மாறினால், கட்சித் திட்டத்தில் உள்ள நமது நீண்ட கால இலட்சியங்களை நோக்கி  சற்று விரைவாக முன்னேற முடியும். அத்தகைய சாதகமான மாற்றத்தினை உருவாக்கும் போக்கிற்கும், நடைமுறை உத்திகளுக்கும் ஒரு நேரடி இணைப்பு உண்டு.

இந்தக் குறிப்பின் நோக்கம்

1964ம் ஆண்டு சி.பி.ஐ(எம்) உருவாக்கப்பட்டது முதல், கட்சியின் அரசியல் – நடைமுறை உத்திகள் எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன? 1964க்குப் பின்னர் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாடுகளும், மத்தியக் கமிட்டிக் கூட்டங்களும் அன்று நிலவிய சூழ்நிலையின் அடிப்படையில் எப்படி நடைமுறை அரசியல் உத்திகளை வகுத்தன? அந்த உத்திகள் நாம் முன்னேறிச் செல்வதற்கு எவ்வாறு உதவின? அத்துடன், அந்த உத்திகளை அமலாக்கிய போது நமக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன? அவற்றின் பின்னணியில் நாம் அவற்றை எவ்வாறு திருத்தி, மறு தகவமைப்பினைச் செய்து கொண்டோம்? இவை குறித்தெல்லாம் விளக்குவதே   இக்குறிப்பின்  நோக்கம்.

கட்சித் திட்டம் : நடைமுறைக்கு வழிகாட்டும் உள்ளடக்கம்

வலது திருத்தல்வாதத்தினையும், இடது அதிதீவிரவாதத்தினையும் எதிர்த்துப் போராடிய நமது கட்சி, தனது திட்டத்தில், நடைமுறை உத்திகளுக்கு உதவும் வகையிலும் சில அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. அவ்வகையில் திட்டத்தில், பத்தி எண் 105 முதல் 113 வரை சொல்லப்பட்டிருக்கும் அம்சங்களை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:

  1. புரட்சிகர இயக்கத்தின் சில குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டங்களில், பல்வேறு வர்க்கங்கள், அதே போன்று ஒரே வர்க்கத்துக்குள் இருக்கும் பல்வேறு அடுக்கினைச் சேர்ந்தவர்கள் பல மாறுபட்ட நிலைபாடுகளை மேற்கொள்வது உண்டு. வேகமாக மாறி வரும் சூழ்நிலையின் தேவைக்குத்  தகுந்தாற் போல் கட்சி பல இடைக்காலக் கோஷங்களை உருவாக்க வேண்டி வரும்.
  2. முதலாளிகளில் கூட, அதனுடைய பெரு முதலாளிகளின் பிரிவு சில சமயம் ஏகாதிபத்தியத்துடன் முரண்படும் சாத்தியங்கள் உண்டு. அது குறித்து, ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் கேந்திரமான ஒற்றுமை அல்லது ஐக்கிய முன்னணி அமைப்பது என்ற பிரமைகள் எதுவும் கட்சிக்கு இல்லை. எனினும், நாட்டின் உண்மையான நலன்களின் அடிப்படையில், உலக சமாதானம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகாதிபத்தியத்துடன் முரண்படுகிற பொருளாதாரம் மற்றும் அரசியல் குறித்த பிரச்சனைகளிலும், நாட்டின் இறையாண்மை, சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை போன்றவற்றை பலப்படுத்துவது போன்ற அம்சங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு தங்கு தடையில்லா ஆதரவு அளிப்பதில் எவ்விதத் தயக்கமும் இல்லை என திட்டம் கூறுகிறது.
  3. மக்களுக்கு உடனடியான நிவாரணம் வழங்கும் வகையில், நிதானமான ஒரு திட்டத்தின்  அடிப்படையில் ஒரு அரசாங்கம் அமைப்பதனை திட்டம் ஏற்கிறது. ஆனால், அது நாட்டினுடைய பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சனைகளை எவ்வித அடிப்படை நிலையிலிருந்தும் தீர்த்துவிடாது என்ற தெளிவான எச்சரிக்கையினையும் உள்ளடக்கியிருக்கிறது. மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கக் கூடிய அத்தகைய அரசாங்கங்கள் எவ்வளவு தற்காலிகமானவை எனினும், அத்தகைய அரசாங்கங்களை அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், வெகுஜன இயக்கத்தினை வலுப்படுத்த முடியும்.எனவும் திட்டம் கூறுகிறது.
  4. சமாதான பூர்வமான அல்லது அது அல்லாத வழிகள் குறித்து மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் நிலைப்பாட்டினையே திட்டம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது வலது மற்றும் இடது சந்தர்ப்பவாத நிலைகளுக்கு எதிரானது. மக்கள் ஜனநாயகத்தினையும், சோஷலிசத்தை நோக்கிய மாற்றத்தினையும் சமாதான பூர்வமான வழிகளிலேயே அடைவதற்கு கட்சி முயற்சி செய்யும்.. அதே வேளை, ஆளும் வர்க்கங்கள் அவ்வளவு எளிதாக தாங்களாகவே முன்வந்து தங்களது அதிகாரத்தினை விட்டுக் கொடுப்பதில்லை. சட்ட விரோத வழிமுறைகள் மற்றும் வன்முறை மூலம் மக்களின் விருப்பங்களை புறந்தள்ளுவார்கள். எனவே, புரட்சி சக்திகள், எல்லா விதச் சூழ்நிலையினையும், நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படும் அதிரடித் திருப்பங்களை எல்லாம் சந்திக்கும் அளவிற்கு விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் திட்டம் கூறுகிறது.

பரிணாம வளர்ச்சியின் வரலாறு

1964ம் ஆண்டில் நடைபெற்ற கட்சியின் 7வது அகில இந்திய மாநாடு உருவாக்கிய தற்போதைய சூழ்நிலையும், கடமைகளும் என்ற தீர்மானத்தில் இருந்து வரலாற்றினைத் தொடங்க வேண்டும். அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பியக்கத்திற்கு திட்டமிட்ட தலைமையினை உருவாக்க வேண்டும் என்பது தான், இந்த அரசியல் பாதையில் மிகவும் கடினமான அம்சம்.

இது குறித்து தீர்மானம் கூறுவதாவது:

சிவில் உரிமைகள், ஜனநாயக உரிமைகள் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கு எதிராகவும், ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மக்களின் ஜனநாயகப் பகுதியினரைத் திரட்ட வேண்டும். அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், மாற்றுக் கொள்கைகளைக் கோரியும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் உலக சமாதானத்திற்காகவும், அனைத்து விதமான அணு ஆயுதங்களையும் தடை செய்யக் கோரியும், மொத்தத்தில் ஆயுதம் இல்லாத உலகம் வேண்டியும் இடையறாத பிரச்சாரம் செய்தல் வேண்டும்.

மக்கள் ஜனநாயக முன்னணி குறித்த கோஷத்தினையும், குறிப்பாக, மக்கள் ஜனநாயகப் புரட்சியின் முக்கியத்துவம் மிகுந்த உழுபவனுக்கு நிலம் என்ற கோஷத்தினையும் மக்கள் மத்தியில் இடையறாது பிரபலப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் குறித்து கட்சியின் 7வது அகில இந்திய மாநாடு ஏற்றுக் கொண்ட அறிக்கை பின் வருமாறு கூறுகிறது:

பூர்ஷ்வாக்கள் மற்றும் ஆளும் கட்சியின் வாலைப் பிடித்துக் கொண்டு செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்ட திருத்தல்வாதக் கருத்துக்கள், கோஷங்கள், உத்திகள் ஆகியவற்றிற்கு எதிராக கட்சி உறுதியாகப் போராட வேண்டும். அதே வேளையில், குறுங்குழுவாதத்தின் (செக்டேரியனிசம்) அனைத்து விதமான வெளிப்பாடுகளுக்கும் எதிரான போராட்டத்தினைத் தொடர வேண்டும். ஏனெனில், இது ஜனநாயக முன்னணியின் ஒற்றுமையினைக் கட்டுவதற்கு மிக முக்கியமான நிபந்தனை. குறுங்குழுவாதம் தன்னை இரண்டு முக்கிய வழிகளில் வெளிப்படுத்திக் கொள்கிறது.

(அ) ஆளும் காங்கிரஸ் கட்சியினைப் பின்பற்றும் ஜனத்திரளுக்கு எதிரான குறுங்குழுவாதம்;

(ஆ) வலதுசாரி பிற்போக்கு மற்றும் இடதுசாரி எதிர்க்கட்சிகளின் பின்னால் அணி திரண்டிருக்கும் தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்பு என்ற அடிப்படைக் கண்ணோட்டம் கொண்ட  மக்களுக்கு எதிரான குறுங்குழுவாதம்.

மக்களில் பெரும் பகுதியினர் அநேகமாக இந்த இரண்டு வகைக் கட்சிகளின் பின்னால் தான் சரி பாதியாக அணி திரண்டிருக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத கட்சிகளின் பின்னால் அணி திரண்டிருக்கும் இந்த மக்களைத் தான், ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக  வென்றெடுக்க வேண்டியுள்ளது. இதனைச் சரியாக புரிந்து கொள்ளத் தவறுவதிலிருந்தே, இந்த இரண்டு வகையான குறுங்குழுப் போக்குகளும் எழுகின்றன. மாநிலங்களிலோ, மத்தியிலோ அமைச்சரவையில் அல்லது வேறு சில பிரச்சனைகள் மூலம் நெருக்கடி உருவாகும் பட்சத்தில், அத்தகைய அனைத்து நேரங்களிலும் கட்சி தலையிட வேண்டும். இது குறித்து பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது: ஆளும் வர்க்கங்கள் மத்தியிலும், ஆளும் வர்க்கத்துக்குள் சில பிரிவினருக்கு  இடையிலும் சில சமயங்களில் சில்லறைச் சச்சரவுகள் தோன்றும். அதை வெறுத்து ஒதுக்கி கண்டு கொள்ளாமல் விடுதல் கூடாது. ஏதேனும் ஒரு சிறிய அளவிலாவது, அதை நமக்கு சாதகமாக மாற்றும் வகையில் அதில் தலையிட வேண்டும். வேகமாக மாறி வரும் அரசியல் சூழ்நிலையில் அப்படியெல்லாம் தலையிடாவிட்டால், கட்சி செயலூக்கமற்றதாக மாறிவிடும்.  முடிவாக, அந்த அறிக்கை பின் வருமாறு கூறுகிறது:

சரியான உத்திகள் மூலம் உழைக்கும் மக்கள் மத்தியில் விரிவான போராட்டங்களை உருவாக்க வேண்டும். மேலிருந்து அரசியல் ரீதியாகத் தலையிட்டு, அவர்களது ஒன்றுபட்ட போராட்டங்களையும், ஸ்தாபனங்களையும்  இணைக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், மேலும்  பெரும்பகுதி மக்களை, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில், கட்சி அணிதிரட்ட முடியும். காங்கிரஸ் அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வெகுஜனப் போராட்டங்களை உருவாக்குவது, ஆளும் கட்சியைப் பின்பற்றும் திரளான மக்களை ஒன்றுபட்ட போராட்டங்களில் ஈடுபடுத்துவதற்கான தேவை ஆகியவை குறித்து, 7வது அகில இந்திய மாநாட் டின் நடைமுறை உத்தி தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆளும் வர்க்கக் கட்சிகள் மத்தியில் இருக்கும் பிளவுகள், முரண்பாடுகளைப் பயன்படுத்தி, அதை இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவாக மாற்றும் வேலையைச் செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய சூழ்நிலையும், கட்சியின் கடமைகளும்

1967ம் ஆண்டில் 4வது பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. காங்கிரசுக்கு எதிராக மக்கள் தங்கள் கடுமையான அதிருப்தியினை பெருமளவில் வெளிப்படுத்திய தேர்தல் இது. எட்டு மாநிலங்களில் அதுவரை இருந்து வந்த காங்கிரசின் அரசியல் அதிகார ஏகபோகம் உடைத்தெறியப்பட்டது. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் இங்கு ஆட்சிக்கு வந்தன. மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் நமது கட்சி பங்கேற்ற ஐக்கிய முன்னணி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. புதிய சூழ்நிலையினைச் சந்திக்கும் வகையில் மத்திய கமிட்டி, புதிய சூழ்நிலையில் கட்சியின் கடமைகள் என்ற நடைமுறை உத்தியினை உருவாக்கியது. கட்சித் திட்டத்தின் 112வது பாரா குறித்த புரிதலின் அடிப்படையில், மாநில அரசாங்கங்களில் நாம் பங்கேற்பது குறித்த தீர்மானம் என்ற வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது.

இத்தீர்மானம், காங்கிரஸ் அல்லாத அரசாங்கங்களின் தன்மை குறித்து, அவற்றை நான்காக  வகைப்படுத்தியது.

  1. இடதுசாரி ஜனநாயக சக்திகள் வலுவாக உள்ள கேரள, மேற்கு வங்க அரசாங்கங்கள்.
  2. நோக்கங்களில் ஓரளவு ஜனநாயகத் தன்மை கொண்ட  தமிழகத்தின் தி.மு.க அரசாங்கம்.
  3. சற்றுக் கலவையான பீகார் மற்றும் பஞ்சாப் அரசாங்கங்கள்.
  4. வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தும் உ.பி, ஹரியானா மற்றும் ஒடிசா அரசாங்கங்கள். நாம் கேரளா மற்றும் மே.வங்க அரசங்கங்களில் பங்கேற்றோம். பீகார் மற்றும் பஞ்சாப் அரசாங்கங்களில் பங்கேற்க மறுத்துவிட்டோம். ஆனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் சி.பி.ஐ பங்கேற்றது. 1964 முதல் 1967 வரை கட்சி கடைபிடித்த நடைமுறை உத்திகள், கட்சியின் முன்னேற்றத்திற்கு உதவின. சி.பி.ஐ- யின் திருத்தல்வாத நிலையினை  எதிர்த்துப் போராடுவதற்கும் உதவின.

நக்சலிசத்திற்கு எதிரான போராட்டம்

கட்சி திருத்தல்வாத நிலையினை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது. நக்சலிசம் மேலோங்கிய காலத்தில், இடது அதிதீவிரவாதப் போக்குகளை எதிர்த்த போராட்டத்திலும் கட்சி ஈடுபட்டது. வர்க்க வெகுஜன அமைப்பு உருவாக்கம் மற்றும் வெகுஜனப் போராட்டங்களை நிராகரித்த நக்சலைட் குழுக்கள் தேர்தல்களில் பங்கேற்பதனையும், அதைத் தொடர்ந்து ஐக்கிய முன்னணித் தந்திரங்களையும் எதிர்த்தன. அனைத்துக் காலங்களிலும், ஆயுதம் தாங்கிய போராட்டமே ஒரே பாதை என வலியுறுத்தின. 1968ம் ஆண்டில் மேற்கு வங்கம் பர்துவானில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் (பர்துவான் பிளீனம்), நக்சலிசத்தை முறியடிக்கும் வகையிலான கொள்கையினை  உருவாக்கிக் கொடுத்தது. நக்சலைட் இயக்கம் நமது கட்சிக்கும், இயக்கத்திற்கும் ஊறு விளைவித்தது.  மறுபுறத்தில், தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகள் அவர்களது கணிப்பும், உத்திகளும் எவ்வளவு தவறானவை என்பதை உறுதிப்படுத்தின.

9வது அகில இந்திய மாநாடு : எதேச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டம்

8வது மாநாடு நடைபெற்ற 1968ம் ஆண்டிற்கும், 9வது மாநாடு நடைபெற்ற 1972ம் ஆண்டிற்கும் இடையில் வெகு வேகமாக மாறி வந்த சூழ்நிலையினைக் கணக்கில் கொண்டு, கட்சி அதற்கு உரிய உத்திகளை உருவாக்க வேண்டியிருந்தது. மே.வங்கத்திலும், கேரளாவிலும் இடதுசாரிகளின் தலைமையில் இருந்த அரசாங்கங்களை, மத்தியில் இருந்த ஆளும் கட்சி கலைத்துவிட்டது. சி.பி.ஐ கேரளாவில் காங்கிரசுடன் சேர்ந்து அரசாங்கம் அமைத்து அதில் பங்கேற்றது. மேற்கு வங்கத்தில் நம்மைத் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியது. ஆனால், நாம் மக்களை நமது நிலைக்கு ஆதரவாக அணி திரட்டினோம். அத்தகையப் போராட்டங்கள் மூலம் நமது நிலையினை மீண்டும் வலுப்படுத்திக் கொண்டோம். ஆளும் வர்க்கக் கட்சிகளின் மத்தியில் உள்ள முரண்பாடுகள், ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான  பிளவுகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, நமது இயக்கத்திற்கு உதவும் வகையில் உரிய உத்திகளை உருவாக்க வேண்டும். சரியான நடைமுறை உத்தி  உருவாக்கத்தில் இவையெல்லாம்  கவனத்தில் இருக்க வேண்டியவை.

1969-70களில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்ட போது நமது கட்சி எடுத்த நிலை இந்த வகையில் ஒரு எடுத்துக்காட்டகும். 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து, வி.வி.கிரியை இந்திரா காந்தி ஆதரித்தார். பிளவு உருவாகி வரும் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு, நாமும் வி.வி  கிரியை ஆதரித்தோம். ஆனால், அடுத்து வந்த 1971 பொதுத் தேர்தலில்,  பிளவுபட்ட காங்கிரஸ்  கட்சி, இந்திரா காங்கிரஸ், சிண்டிகேட் காங்கிரஸ் என இரண்டு கோஷ்டிகளாக மோதிக் கொண்டபோது, அவற்றில் எதனுடனும் கைகோர்க்க நாம் மறுத்துவிட்டோம். இந்தத் தேர்தல்களில் சிண்டிகேட் தலைமையிலான மகா கூட்டணி நாடு முழுவதும் தோல்வியடைந்தது. நமது கட்சியும், நமது இடதுசாரிக் கூட்டாளிகளும் மே.வங்கத்தில் கணிசமான அளவில் வெற்றி பெற்றோம்.

1971ம் ஆண்டில், மே.வங்கத்தில் அரைப்பாசிச பயங்கரம் தொடங்கியது. 1972 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் கடுமையான மோசடிக்கு உள்ளாயின. கேரளாவிலும் நமது இயக்கம் கடுமையான ஒடுக்குமுறையினைச் சந்தித்தது. சி.பி.ஐ காங்கிரசுடன் கைகோர்த்த நிலையில் 1967ல் உருவாக்கப்பட்ட  இடதுசாரி  ஒற்றுமை சீர்குலைவிற்கு உள்ளாகியது. இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்கான தேவையினை கட்சி தொடர்ந்து வலியுறுத்தியது. ஒரு கட்சி சர்வாதிகாரத்தின் அபாயம் குறித்து எச்சரித்த கட்சியின் 9வது அகில இந்திய மாநாடு, ஜனநாயகச் சக்திகளுடன் ஒற்றுமையினை உருவாக்குமாறு, இடதுசாரிக் கட்சிகளைக் கேட்டுக் கொண்டது.

அவசர கால நிலைமையினை நோக்கி

கட்சியின் 9வது அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர், காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சிக்கு எதிராக  முக்கிய நிகழ்ச்சிகள் பல வேகவேகமாக நடந்தேறின.  பெரிய அளவில் போராட்டங்கள், வரலாற்று முக்கியத்துவம் மிக்க ரயில்வே வேலைநிறுத்தம் போன்றவை நடைபெற்ற காலம் இது. காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலலைமையிலான எதேச்சதிகார எதிர்ப்பு இயக்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டன. அவரது இயக்கத்துடன் நேரடியாக இணையாமல், சுதந்திரமாக இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வது என  நமது கட்சி முடிவு செய்தது. 1975ம் ஆண்டு, இந்திரா காந்தி அரசாங்கம் நாட்டின் மீது அவசர நிலையினைத் திணித்தது. மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படன. நமது கட்சித் தலைவர்கள் உட்பட, நாடெங்கிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தனது சர்வாதிகார நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கில், அரசியல் சாசனத்தில் 42வது  திருத்தம் செய்யப்பட்டது. இந்த 42வது திருத்தத்தினை எதிர்த்து, நமது கட்சி மக்களிடம் விரிவான பிரச்சாரத்தினை மேற்கொண்டது. 1976ம் ஆண்டு இறுதிப் பகுதியில், சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பிற ஜனநாயக சக்திகளுடன் இணைந்தோம். அவசர நிலைக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் நாம்  நடத்திய போராட்டங்களும், பிரச்சாரங்களும், 1977 மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில்  உரிய பங்கினை ஆற்றுவதற்கு நமக்குப் பெரிதும் உதவின. இந்தத் தேர்தலில் காங்கிரசும் அதன் எதேச்சதிகார ஆட்சியும் தோற்கடிக்கப்பட்டன.

10வது அகில இந்திய மாநாடு

9வது மாநாட்டின் நடைமுறை உத்திகளைத் திறனாய்வு செய்த 10வது மாநாடு, அதிலுள்ள சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியது. மேலோங்கி வளர்ந்த எதேச்சதிகார எதிர்ப்பினையும், ஆளும் கட்சிக்கும், பூர்ஷ்வா எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களையும் பயன்படுத்தி, முழுமையான அனுகூலம் பெறும் வகையில் நமது நடைமுறை உத்தி  உதவவில்லை என மாநாடு சுட்டிக் காட்டியது. காங்கிரசுக்கும் ஜனதா கட்சிக்கும் இடையில் அடிப்படை வேறுபாடுகள் இல்லை என்பதனை 10வது மாநாடு, சரியாக கணித்தது. எனினும், எதேச்சதிகாரத்தினை எதிர்த்த இயக்கத்தில் ஜனதா கட்சி ஆற்றிய ஆக்கபூர்வமான பங்கினை அது அங்கீகரித்தது. எதேச்சதிகாரத்திற்கு எதிரான பரந்த மேடை என்ற கோஷத்தினை உருவாக்கியது. முதல் முறையாக, இடது மற்றும் ஜனநாயக முன்னணி என்ற  கருத்தாக்கத்தினை 10வது மாநாடு உருவாக்கியது.

மாநாட்டின் அரசியல் தீர்மானம் குறிப்பிடுவதாவது:

வர்க்க பலாபலங்களில் ஒரு மாற்றத்தினைக் கொண்டு வர வேண்டும்; மக்கள் பூர்ஷ்வா – நிலப்பிரபுத்துவக் கட்சிகளில் எதேனும் ஒன்றினை மட்டுமே தேர்ந்தெடுப்பது, இன்றைய சமூக அமைப்பு என்ற சட்டகத்திற்குள்ளேயே சிறைப்பட்டுக் கிடப்பது என்ற நிலையினை மாற்றியமைக்க வேண்டும். இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணி அமைப்பதற்கான போராட்டம் என்பது இத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியேயாகும். இவ்வாறு இடதுசாரி மற்றும் ஜனநாயகச் சக்திகளை ஒன்று திரட்டி முன்னெடுத்துச் செல்வது, பிற்காலத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில், மக்கள் ஜனநாயகக் கூட்டணி அமைவதற்கான பங்களிப்பிற்கு உதவும். அவ்வகையில் கட்சி இதனை ஒரு துவக்கமாகக் கருதுகிறது. இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணியினை வெறும் தேர்தல் அணியாகப் புரிந்து கொள்ளக் கூடாது. மக்களின் பொருளாதார அரசியல் ரீதியான உடனடி முன்னேற்றத்தினை உறுதி செய்வதற்காகவும், பொருளாதாரத்தினை தங்களது இறுக்கமான பிடிக்குள் வைத்திருக்கும் பிற்போக்குச் சக்திகளை தனிமைப்படுத்துவதற்காகவும் போராடும் சக்திகளின் முன்னணியே இது என்ற புரிதல் இதில் அவசியம்.

மக்கள் ஜனநாயக முன்னணி என்ற தொலை நோக்குப் பார்வையுடன், அந்த முன்னணிக்கும், இன்றைய இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணிக்கும் உள்ள இணைப்பினை புரிந்து கொள்வதற்கு இந்தத் தீர்மானம் மிகவும் உதவுவதாகும்.

தொழிலாளி வர்க்க ஒற்றுமை மற்றும் அகில இந்திய வெகுஜன அமைப்புகளை உருவாக்குவது குறித்து:

ஒன்றுபட்ட தொழிற்சங்க மேடைகளின் மூலம், தொழிலாளர்களின் ஒற்றுமையினை உருவாக்கும் அம்சம் 1973-74 காலங்களில் முன்னுக்கு வந்தது. அந்தக் காலத்தில், காங்கிரஸ் அரசாங்கங்களின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் ஒன்றுபட்டப் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின. ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்களும் இவற்றில் அடங்கும். பி.எம்.எஸ் சங்கத்தினை உள்ளடக்கிய கூட்டு மேடைகளில் சி.ஐ.டி.யு பங்கேற்பதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு இருந்தது. 10வது மாநாட்டில் இந்தக் கருத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இறுதியில்,  தொழிலாளர்களை போராட்டங்களில் ஒற்றுமைப்படுத்துவது அவசியம் என்பதால், எந்த அரசியல் கட்சியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், தொழிற்சங்கங்களின் ஒற்றுமையினை உருவாக்க வேண்டும் என மாநாடு உறுதிபட முடிவு செய்தது. விவசாயத் தொழிலாளர்கள், மாதர், வாலிபர் ஆகியோருக்கான வெகுஜன அமைப்புகள் அகில இந்திய அளவில் அமைக்கப்பட வேண்டும் என 1978 சால்கியா பிளீனம் முடிவு செய்தது. 1970ம் ஆண்டிலேயே மாணவர் சங்கம் அமைக்கப்பட்டுவிட்டது. வர்க்க இயக்கங்கள் மற்றும் வெகுஜன இயக்கங்ளை உருவாக்குவது என்ற அரசியல் நடைமுறை உத்திகளை திறம்படச் செயல்படுத்த வேண்டுமெனில், அகில இந்திய அளவில் பரந்து விரிந்த வர்க்க, வெகுஜன அமைப்புகளைக் கட்டுவது மிக அவசியம்.

ஜனதா கட்சியின் பிளவு குறித்து:

1979 வரை ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. ஸ்தாபனக் காங்கிரஸ், ஜனசங்கம், பாரதிய லோக் தளம், சோசலிஸ்டுகள் மற்றும் முன்னாள் காங்கிரஸ்காரர்கள் ஆகியோரை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதே ஜனதா கட்சி. பழைய ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்-சில்  உறுப்பினராகத் தொடர்ந்த நிலையில், இந்த இரட்டை உறுப்பினர் பிரச்சனை பெரிதாகி, இறுதியில் ஜனதா கட்சி பிளவுபட்டது. அத்துடன் அதன் ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து வந்த சரண் சிங் அமைத்த  அரசாங்கத்தினை சி.பி.ஐ (எம்) ஆதரித்தது. காங்கிரசும் அந்த அரசாங்கத்தினை ஆதரித்தது. ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவு, அதன் மீது நமது கட்சி மேற்கொண்ட நிலைப்பாடு குறித்து நமது  கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகின. மே.வங்க மாநிலத்தில் ஒரு கணிசமான பகுதியினர், மத்தியக் கமிட்டியின் நிலைப்பாட்டிற்கு எதிராக நிலை எடுத்தனர். 11வது அகில இந்திய மாநாட்டில் இந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. மத்தியக் கமிட்டி எடுத்த நிலையே சரியானது என அம்மாநாடு முடிவு செய்தது.

அவசரநிலைக் காலத்திற்குப் பின்னர், நாடு முழுவதும் கட்சியின் தலைமையில்,  இயக்கங்கள் பெருமளவில் நடைபெற்றன. 1977ம் ஆண்டில் மே.வங்கத்திலும், 1978ம் ஆண்டில் திரிபுராவிலும், இடது முன்னணி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. 1980ம் ஆண்டில், கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் அமைக்கப்பட்டது. 1978ம் ஆண்டில் நடைபெற்ற 10வது அகில இந்திய  மாநாடு, ஸ்தாபனம் குறித்த சால்கியா பிளீனம் ஆகியவை உருவாக்கிய தாக்கத்தின் பின்னணியில், கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் விரிவடைந்தன.

12வது, 13வது அகில இந்திய மாநாடுகள் 12வது மாநாடு நடைபெறும் பின்னணியில், நாட்டில், குறிப்பாக பஞ்சாபிலும், வட கிழக்கிலும், பிரிவினைவாத, பிளவுவாத சக்திகள் தேச ஒற்றுமைக்கு, மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.  இந்த பிளவுவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில், கட்சித் தோழர்கள் பலர் உயிர்ப்பலி ஆயினர். இந்தப் போராட்டம் குறித்து 12வது மாநாடு மிக முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தது. இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் வெற்றி பெற்று, ராஜீவ் காந்தி தலைமையில் ஆட்சி அமைத்தது. புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்ற பெயரில் அரசு பொருளாதாரத்தினைத்  தாராளமயப்படுத்தத் தொடங்கியது. காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், பிரிவினைவாத, பிளவுவாதச் சக்திகளுக்கு எதிராகவும் போராடுவதற்கான கடமையினை 12வது மாநாட்டின் அரசியல்-நடைமுறை உத்தி வலியுறுத்தியது.

13வது மாநாட்டில் தான், 11வது மாநாட்டில் குறிப்பிடப்பட்ட வகுப்புவாதம்,  மற்றும் அடிப்படைவாதம் உருவாக்கும் அபாயம் உரிய முனைப்புடன் முன் வைக்கப்பட்டது. பாபர் மசூதிக் கட்டிடத்தில் இருந்த ராமர் கோவில் பூட்டினைத் திறந்துவிட்டது, ஷா பானு வழக்கினையொட்டி கொண்டுவரப்பட்ட சட்டம் போன்ற, காங்கிரஸ் அரசின் சந்தர்ப்பவாதம் குறித்த வேறு சில பிரச்சினைகளும் முக்கியத்துவத்துடன் முன்வைக்கப்பட்டன.

இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்ட வேண்டும் என மாநாடு கேட்டுக் கொண்டது. நாட்டினைப் பிளவுபடுத்தும் ஏகாதிபத்தியத்தின் திட்டங்களுக்கு எதிராகவும், பிரிவினைவாத மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், நாட்டின் ஒற்றுமையினையும் ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்க வேண்டும் என மாநாடு கேட்டுக் கொண்டது. அதே வேளையில், அடுத்து வரவிருந்த தேர்தல்களில், ராஜீவ் காந்தி அரசினைத் தோற்கடிக்க வேண்டும் என்ற உடனடிக் கடமையினையும் மாநாடு முன்வைத்தது. கட்சி உருவாக்கிய இந்த நடைமுறை உத்தி, மதச்சார்பற்ற பிற  பூர்ஷ்வா கட்சிகளை ஒன்றுபடுத்துவதற்கு உதவியது. அதே வேளையில் காங்கிரசுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளின் அணி என்றில்லாமல், பி.ஜே.பியினைத் தவிர்க்கும் அம்சத்தினையும் இந்த உத்தி உள்ளடக்கியிருந்தது.

வி.பி சிங் காங்கிரசை எதிர்த்தெழுந்த நிலையில் ஜனதா தளம் உருவானது. காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி அல்லாத பல கட்சிகளை உள்ளடக்கி உருவான தேசிய முன்னணியினை நமது கட்சி ஆதரித்தது. இருப்பினும், காங்கிரசுக்கு எதிரான அனைவரின் ஒற்றுமை என்ற பெயரில், பிற கட்சிகள் பி.ஜே.பியுடன் உடன்பாடு காணும் முயற்சிகளுக்கு எதிராக போராட வேண்டியிருந்தது. 1989 தேர்தலுக்குப் பின்னர் சி.பி.ஐ (எம்) மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் வி.பி. சிங் அரசாங்கம் அமைக்க முடிந்தது. பி.ஜே.பி அரசாங்கத்தில் பங்கு பெற இயலவில்லை. அதை வெளியிலிருந்து ஆதரிக்க வேண்டியிருந்தது.

மேலோங்கி வரும் வகுப்புவாத அபாயம்

காங்கிரஸ் மீதான அதிருப்தியைப் பயன்படுத்தி பி.ஜே.பி தன்னை வலுப்படுத்திக் கொள்ள முடிந்தது. 1989 தேர்தல்களில் அது முதல் முறையாக 85 இடங்களைப் பெற்றது. ஆர்.எஸ்.எஸ்-சின் பின் பலத்துடன், அது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை கையில் எடுத்துக் கொண்டது. அத்வானியின் ரதயாத்திரையின் போது பெருமளவில் வன்முறை நடந்தேறியது.  ரதயாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டு, அத்வானி கைது செய்யப்பட்ட போது, வி.பி.சிங் அரசிற்கான தனது ஆதரவினை பி.ஜே.பி விலக்கிக் கொண்டது. அதையடுத்து வி.பி. சிங் அரசு நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டு பதவி விலகியது.  பி.ஜே.பியும் காங்கிரசும் இதில் சேர்ந்தே வாக்களித்தன.

1991 மே மாதம் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற காலத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். பெரும்பான்மை இடங்களைப் பெற முடியாவிட்டாலும், உருவான அனுதாப அலை காரணமாக காங்கிரஸ் முதற் பெரும் கட்சியாக வந்தது. நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்றார். பி.ஜே.பி  சுமார் 100 இடங்களுடன் முதற் பெரும் எதிர்க் கட்சியாக மாறியது.

14வது அகில இந்திய மாநாடு

உலகில் பல அதிரடியான மாற்றங்கள் நடைபெற்று வந்த காலத்தில், 1992 மே மாதம் கட்சியின் 14வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சோசலிஸ்ட் அரசாங்கங்கள் வீழ்ந்துவிட்டன. சோவியத் யூனியன் சிதைந்த நிலையில், சோசலிச அமைப்பு உருக்குலைந்து போனது. சர்வதேச அளவில் வர்க்கப் பலாபலன் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமாக மாறிப்போய்விட்டது. எனினும், நமது கட்சி மார்க்சிய  லெனினியத்தில் உள்ள தனது நம் பிக்கையினை மீண்டும் உறுதிப்படுத்தியது.

மார்க்சிய லெனினியத்தின் மதிப்பும் மாண்பும் என்றும் பொருத்தமானதாகத் தொடர்கின்ற ஒன்று என்ற அடிப்படையில், சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் என்ற தலைப்பில் மாநாடு  தீர்மானம் ஒன்றினை ஏற்றது. அதன் அடிப்படையில் இந்தத் தத்துவம் குறித்த புரிதலிலும், கணிப்பிலும் நம்மை மறுதகவமைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்வது என கட்சி முடிவு செய்தது. அது வரை, சோசலிசம் ஒரு தீர்மானகரமான சக்தியாக மாறி வருகிறது என்ற புரிதலிலேயே இயங்கி வந்தது.

சர்வதேச வர்க்கப் பலா பலன்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்த கணிப்பின் பின்னணியில், ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் தேவை குறித்து, 14வது மாநாடு திசை வழி காட்டியது. சோசலிசத்தைக் கட்டுவதில் ஏற்பட்ட அனுபவம் குறித்தும்  மாநாடு பரிசீலனை செய்தது. தேசிய நிலைமைகளிலும் கூட, இந்திய ஆளும் வர்க்கங்கள் தங்களது திசை வழிகளை மாற்றிக் கொண்டுவிட்டன. சர்வதேச நிதி மூலதனத்தின் நிர்ப்பந்தங்களின் பின்னணியில், காங்கிரஸ் அரசு தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைகளை கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது.  இந்தக் கொள்கைகளுக்கு எதிராக மக்களை பெருமளவு  திரட்டுவதன் மூலம் எதிர்ப்பு இயக்கங்களை உருவாக்க வேண்டும் என மாநாடு கேட்டுக் கொண்டது. மக்களவையில் 119 இடங்களைப் பெற்று, பி.ஜே.பி  பெருமளவு ஆதாயம் அடைந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் உட்பட நான்கு மாநிலங்களில் அது வெற்றி பெற்றிருக்கிறது. பி.ஜே.பி மற்றும் இந்துத்துவா சக்திகளினால் உருவாகும் அபாயம் வளர்ந்து வருவது குறித்து எச்சரித்த தீர்மானம், எதேச்சதிகாரப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வகுப்புவாதம் என்ற இரட்டை அபாயங்களுக்கு எதிராகப் போராட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. நாட்டில் நிலவும் திட்டவட்டமான சூழ்நிலையினைக் கணக்கில் கொண்ட நிலையில், இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையினை உருவாக்க வேண்டும் எனவும், அதே வேளையில், இடது மற்றும் ஜனநாயக முன்னணியினைக் கட்டும் பணியில், தொழிலாளி வர்க்கத் தினையும், பிற உழைப்பாளி மக்கள் பிரிவினரை ஈடுபடுத்த வேண்டும் எனவும் கட்சி கேட்டுக் கொண்டது.

இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த ஒற்றுமையினைக் கட்டுவது குறித்து:

14வது மாநாட்டினையடுத்து, 15வது மாநாட்டில் உருவான அரசியல் – நடைமுறை உத்தி, காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்த்துப் போராட வேண்டிய தேவையினையும், இடதுசாரி, ஜனநாயக, மதச் சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையினைக் கட்ட வேண்டிய  தேவையினையும் வலியுறுத்தியது. இந்த உத்தியின் அமலாக்கத்தில் உருவானது தான் 1996 ஐக்கிய முன்னணி அரசு. காங்கிரஸ் கட்சி தோல்வியுற்ற நிலையில், பி.ஜே.பி அதிக எண்ணிக்கை உள்ள தனிக் கட்சியாக வந்தது. தேர்தல்களுக்குப் பின்னர், காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் அரசு அமைப்பதற்கு அழைக்கப்பட்ட பி.ஜே.பி தனது பெரும்பான்மையினை நிரூபிக்க முடியாத நிலையில் 13 நாட்கள் ஆட்சி செய்து விட்டு, பதவி விலகியது. அதற்குப் பின்னர் ஐக்கிய முன்னணி அரசு பதவியேற்றது.  காங்கிரஸ் கட்சி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது.

ஐக்கிய முன்னணி அரசாங்கம்

ஐக்கிய முன்னணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஜோதி பாசுவை பிரதமர் ஆக்க வேண்டும் என முன்மொழிந்தன. இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதில்லை எனவும், அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது எனவும் மத்தியக் கமிட்டி முடிவு செய்தது. இது குறித்து கட்சிக்குள்  சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. கட்சியில் ஒரு பகுதியினர் ஜோதி பாசுவை பிரதமராகக் கொண்டு கட்சி அரசாங்கத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கருதினர். 1998ம் ஆண்டில் நடைபெற்ற கட்சியின்  16வது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் கமிட்டியின் இந்த முடிவு பரிசீலனை  செய்யப்பட்டது. விவாதத்திற்குப் பின்னர், அரசாங்கத்தில் பங்கேற்பதில்லை என்ற மத்தியக் கமிட்டியின் நிலை சரியானது என முடிவு செய்தது.

1998ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவினை விலக்கிக் கொண்டதையடுத்து ஐக்கிய முன்னணி அரசு கவிழ்ந்தது. 1998ம் ஆண்டிலும், 1999ம் ஆண்டிலும் நடைபெற்ற தேர்தல்களில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது. சில மதச்சார்பற்ற பூர்ஷ்வாக் கட்சிகளும், பிராந்தியக்  கட்சிகளும் தே.ஜ.கூட்டணியில் சேர்ந்து கொண்டன. அவற்றில் சில கட்சிகள், பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்தனர்.

பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கம்

காங்கிரஸ் கட்சியினையும் அதன் கொள்கைகளையும் எதிர்க்கும் அதே வேளையில், பி.ஜே.பி மற்றும் வகுப்புவாத சக்திகளை முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட 18வது அகில இந்திய மாநாடு அதற்குப் பொருத்தமான அரசியல்-நடைமுறை உத்தியினை உருவாக்கியது. ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கட்சி மத்திய அரசாங்கத்தில் இருக்கும் போது உருவாகும் அபாயத்தினை மாநாடு முன்னிலைப்படுத்தியது. பி.ஜே.பி அரசாங்கம் கடைப்பிடிக்கும் நவீன-தாராளவாதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் வகையிலும் அந்த நடைமுறை உத்தி வடிவமைக்கப்பட்டது. வாஜ்பாய் அரசாங்கத்தின் அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்ட வேண்டும் என கட்சி கேட்டுக் கொண்டது. நரசிம்ம ராவ் காலத்தில் மாற்றம் செய்யப்பட்ட வெளியுறவுக் கொள்கை தே.ஜ.கூ அரசின் காலத்தில் கூடுதல் அழுத்தம் பெற்றது. காங்கிரஸ் மற்றும் பிற பூர்ஷ்வாக் கட்சிகளின் பின்னால் திரண்டிருக்கும் மக்களை வகுப்புவாதச் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் இணைக்க வேண்டும் என கட்சி கேட்டுக் கொண்டது. தனியார்மயத்திற்கு எதிராகவும், பொருளாதாரத் தினை உலக வர்த்தக அமைப்பிற்கு உட்படுத்துவதற்கு எதிராகவும், விரிவடைந்து வரும் விவசாய நெருக்கடிக்கு எதிராகவும், நமது கட்சியும், இடதுசாரி மற்றும் ஜனநாயகச் சக்திகளும் பல போராட்டங்களை இக்காலத்தில் நடத்தின.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமும் நமது அணுகுமுறையும்

அரசியல் நடைமுறை உத்தியின் அடிப்படையில், 2004 நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான உத்தி உருவாக்கப்பட்டது. பி.ஜே.பி அரசாங்கத்தினைத் தோற்கடிப்பது, மத்தியில் மதச்சார்பற்ற அரசினை அமைப்பது, இடதுசாரி மற்றும் ஜனநாயகச் சக்திகளை பலப்படுத்துவது என்பதே கட்சியின் முடிவு. தே.ஜ.கூட்டணி தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டது. காங்கிரஸ் பெரும் எண்ணிக்கையில் இடங்களைப் பெற்று முதல் இடத்தினை வகித்தது. 60 இடங்களில் வெற்றி பெற்றிருந்த இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் அமைந்தது. நமது கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என முடிவு செய்தது. குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் அம்சங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கட்சி வலியுறுத்தியது.

2005 ஏப்ரல் மாதத்தில் கட்சி யின் 18வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட அரசியல் –  நடைமுறை உத்தி:

  1. வகுப்புவாதத்திற்கு எதிராக அனைத்து வகைகளிலும் போராடுவது,
  2. மத்திய அரசின் நாசகரப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், மாற்றுக் கொள்கைகளுக்காகவும் வலுவான இயக்கத்தினை உருவாக்குவது,
  3. உலக அளவிலான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புகள், நம் நாட்டில் ஏகாதிபத்தியத்தின் ஊடுருவல் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடுவது,
  4. நாடு முழுவதும் உள்ள இடது சாரி ஜனநாயக சக்திகளை பலப்படுத்து வது, – என்ற   நான்கு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

ஐ.மு.கூ அரசாங்கம் குறித்த கட்சியின் அணுகு முறையினை மாநாடு தெளிவுபடுத்தியது. கட்சியின் சுதந்திரமான பாதை, அரசாங்கத்தின் நவீன தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிராக உருவாக்க வேண்டிய இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள், மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நட வடிக்கைகளை விரைவு படுத்துவதற்கான முயற்சி கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் மாநாடு வலியுறுத்தியது.

கட்சியின் அரசியல் தீர்மானம்  பின்வருமாறு கூறியது:

கட்சி வகிக்கும் சுதந்திரமான பாத்திரம் என்பது குறைந்த பட்சப் பொதுத் திட்டம், மற்றும் அதன் அமலாக்கப் பிரச்சனைகளுடன் மட்டுமே சுருங்கி நின்று விடுவதல்ல. கட்சி முடிவு செய்துள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயகத் திட்டத்தின் கோரிக்கைகளைக் கையில் எடுக்க வேண்டும். நிலம், ஊதியங்கள், தொழிலாளி வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் ஆகிய  பிரச்சனைகளில் போராட்டங்களை நடத்த வேண்டும். அடிப்படை வர்க்கங்களின் பிரச்சனை களுக்காக வாதாடவும், போராடவும் வேண்டும்.  இந்தப் பிரச்சனகளை எல்லாம் நாம் எடுக்க வில்லை என்றால், அது கட்சியின் சுதந்திரமான பாத்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். இடது சாரி மற்றும் ஜனநாயக சக்திகளை பலவீனப்படுத்துவதுமாகும். (பாரா – 2.71)

18வது அகில இந்திய மாநாட்டின் அரசியல்  நடைமுறை உத்திகளில்,  சமூகப் பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டிய தேவை முக்கிய இடம் வகிக்கிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும்  தலித் மக்களின் பாதிப்புகள் குறித்த சமூகப் பிரச்சனைகளை கட்சி நேரடியாகக் கையில் எடுக்க வேண்டும். அதே போன்று, பெண் சமத் துவம், பாலின நீதி போன்ற பிரச்சனைகளிலும்,  தங்களது உரிமைகளுக்காகவும், பிற்போக்கான சமூகப் பழக்க வழக்கங்கள் மற்றும்  நிலவுடைமைச் சமுதாய நியமங்களுக்கு  எதிராகவும்  பழங்குடி மக்கள் நடத்தும் போராட்டங்களிலும் கட்சியின் நேரடித்  தலையீடு தேவை என கட்சி வலியுறுத்தியது.  சாதிய அரசியல், அடையாள அரசியல் போன்றவற்றிற்கு எதிரான போராட் டங்களும், இவற்றுடன் இணைந்தவையே. ஏகாதிபத்தியம் மற்றும் நவீன தாரளவாதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் ஐ.மு.கூ அரசு அமெரிக்காவுடன் கேந்திர உறவு கொள்ளும் நடவடிக்கைகளில் வேகமாக இறங் கியது. பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், கேந்திர பொருளாதாரக் கூட்டு, இந்திய  அமெரிக்க அணு ஒப்பந்தம் அனைத்தும் இதன் பகுதியேயாகும். அமெரிக்காவுடன் மென்மேலும் அதிகமாக இராணுவ உறவு கொள்வதை கட்சி கடுமையாக எதிர்த்தது. இறுதியாக, இந்திய  அமெரிக்க அணு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னணியில்,  2008 ஜூலை மாதத்தில், நமது கட்சி ஐ.மு.கூ அரசிற்கான ஆதரவினைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அமெரிக்காவினையும், சர்வதேச நிதி மூல தனத்தினையும் திருப்திப் படுத்துவதற்காக பல நவீன தாராளவாதக் கொள்கைகளை ஐ.மு.கூ அரசு வேகவேகமாக நிறைவேற்றியது.

இவை அனைத்தும் அதனுடைய பின்னணியில் நிகழ்ந் தவையே. 19வது மாநாடு வகுத்த அரசியல்  நடை முறை உத்திகள்  குறித்து 20வது மாநாடு விவாதித் தது. ஐ.மு.கூ அரசிற்கு அளித்த ஆதரவினைத் திரும்பப் பெற்றது சரியே என மாநாடு முடிவு செய்தது. ஆனால், இந்தியா அணு உலை பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக  சர்வ தேச அணு சக்தி கமிஷனுக்குப் போவது என்று முடிவு செய்தவுடனேயே ஆதரவினை விலக்கி யிருந்தால் ஒருவேளை அணு ஒப்பந்தத்தினைத் தடுத்திருக்க முடியும் என மாநாடு கருதியது. ஐக்கிய முன்னணி உத்திகள் கட்சியின் வளர்ச்சிக்கு ஐக்கிய முன்னணி உத்திகள் தேவைப்படுகின்றன. சரியான உத்திகளைப் பயன்படுத்தும் பட்சத்தில், பூர்ஷ்வாக் கட்சிகளின் செல்வாக்குப் பிடியில் இருக்கும் மக்களை நாம் அணுக முடியும்; சிலரை நம் பக்கம் வென்றெடுக்க வும் முடியும். கட்சியின் சுதந்திரமான நடவடிக்கைகள்,  ஐக்கிய முன்னணி உத்திகள் ஆகிய இரண் டுமே கட்சியின் விரிவாக்கத்திற்கு உதவுகின்றவை என்பதைக் கணக்கில் கொண்டு  கட்சி செயல்பட வேண்டியுள்ளது.   கட்சியின் 17வது அகில இந்திய மாநாடு,  ஐக்கிய முன்னணி உத்திகள் தொடர்பான ஒரு திறனாய்வில் ஈடுபட்டது. மே.வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களைத் தாண்டி, கட்சியின் பொதுவான செல்வாக்கு ஏன் உயரவில்லை என்பது குறித்த விவாதத்தின் ஒரு பகுதியாக இது நடத்தப்பட்டது.

1977ம் ஆண்டிற்குப் பின்னரும், 10வது அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னரும், பல மாநிலங் களில் உள்ள பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவக் கட்சி களுடன் ஐக்கிய முன்னணி  நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறோம். அத்தகைய நேரங்களில், குறிப்பாக தேர்தல்களில் காங்கிரசையோ அல்லது பி.ஜே.பியினையோ தோற்கடிப்பது என்ற உடனடித் தேவைக்கு அவை பயன்பட்டிருக்கின்றன. அதே வேளையில், நீண்ட கால உறவு களில் பல குறைபாடுகள், விலகல்களையும் சந் திக்க வேண்டியிருந்தது. அவைகள் பரிசீலனையில் குறிப்பிடப்பட்டன. எடுத்துக்காட்டாக, இக்கட்சிகளுடன் உறவு குறித்து 14வது மாநாட்டின் அரசியல்-ஸ்தாபன அறிக்கையில் கண்டுள்ள சில அம்சங்கள், இந்தப் பரிசீலனையில் பொருத்தமாகச் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அவை பின் வருமாறு: ஆனால், கடந்த காலங்களில் நமக்கு ஏற்பட்டி ருக்கும் அனுபவங்களின் அடிப்படையில், இந்த பலவீனங்களை முறியடிக்க வேண்டியுள்ளது. எப்போது அவர்களிடமிருந்து விலகி நிற்க வேண்டுமோ, அப்போதே அதைச் செய்வ தில்லை. ஒற்றுமை என்ற பெயரில், நமது கருத்து வேறுபாடுகளை சற்று உரத்துச் சொல்லத் தவறி விடுகிறோம். ஏதோ ஒரு வகையில்  நாடாளு மன்றச் சந்தர்ப்பவாதத்திற்கு பலியாகிவிடுகிறோம்.

தேர்தல்கள், நமது கருத்துக்களையும், கொள்கைகளையும் மக்களிடம் தெளிவாக எடுத்துச்  சொல்லும் வாய்ப்பினைத் தருகின்றன.  ஆனால், இதையும் கூட சில சமயங்களில் தவற விட்டு விடுகிறோம். நாம் பலமாக இல்லாத சில பகுதிகளில், எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற பதற்ற நிலையிலிருந்து, நமது அணியினரை கூட்டாளிக் கட்சிகளின் கைகளில் ஒப்படைத்து விடுகிறோம். 1977க்கு முன்பு நாம் தனியாக தேர்தல்களைச் சந்தித்த போது  நமது நடவடிக்கைகளை ஆய்வு செய்தோம் என்றால், நாம் பல்வேறு பகுதிகளில் நமது செல்வாக்கினை விரிவு படுத்த முடிந்ததை உணர முடியும்.

அவசர நிலைக்குப் பின்னர், எதேச்சதிகாரத்திற்கு எதி ராக பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவக் கட்சிகளுடன் உறவு கொள்ள வேண்டியது அவசியமானது. ஆனால், ஒரு சரியான புரிந்துணர்விற்கு வருவதற் குப் பதிலாக, அவர்கள் பல இடங்களில் நமக்கு உத்தரவு போடத் தொடங்கிவிட்டனர். இந்த அணுகுமுறை நமது செல்வாக்கில் உள்ள மக் களை நமது கட்சிக்கும், இடதுசாரிக் கட்சிகளுக் கும் பின்னால் அணி திரட்டுவதற்குப் பதிலாக, இந்தக் கட்சிகளுக்கு  இரையாக்க வேண்டிய நிலை நேர்கிறது. சில பிரச்சனைகளில் ஒன்று பட்ட இயக்கங்கள் நடத்துகின்ற போது, நாம் வேறுபடும் அம்சங்களில் நம்மை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவில்லை எனில், நமது மக்கள் தளத்தினை நாம் இழந்து விடுவோம். இந்த பல வீனம் களையப்பட வேண்டும்.

பிற கட்சிகளுடன் சேர்ந்து செயல்படும் போது, கூடுதல் கவனம் தேவை.  சமரசம் செய்ய நேரும் போது கூட, நமது வர்க்கக் கண்ணோட்டம் மற்றும் சித்தாந்த நிலைகளில் எவ்வித சமரசமும் கூடாது.  சர்வ தேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்டிருக்கும் போக்குகள், சரிவுகள், பின்னடைவுகளின் பின்ன ணியில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக் கப்பட வேண்டும். இடதுசாரி சக்திகளில் முதன்மை இடம் வகிக்கும் நமது கட்சிக்கு இதில் கூடுதல் முனைப்பு தேவை. பூர்ஷ்வா-நிலப் பிரபுத்துவக் கட்சிகளின் தத்துவார்த்தப் பிடியி லிருந்து மக்களை விடுவிக்கும் வகையில்,  வெகுஜன இயக்கங்களைக் கட்டுவதும், உயர் தள அரசியல் தத்துவார்த்தப் போராட்டங்களை நடத்துவதும் நமது கடமையாகிறது.

கட்சியின் சுயேச்சையான பாத்திரம் மற்றும் நடவடிக்கைகள், ஐக்கிய முன்னணி தந்திரங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த சரியான கண்ணோட்டம் இந்தப் பரிசீலனையில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது:  இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை, இடதுசாரி மற்றும் ஜனநாயக முன் னணியைக் கட்டுதல் ஆகியவை பற்றிய செயல் திட்டம் வகுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், 10வது அகில இந்திய மாநாட்டிலிருந்து தொடர்ந்து வந்திருக்கும் அரசியல்-நடைமுறை உத்திகள், இவை குறித்து சரியாகவே வலியுறுத்து கின்றன. எதேச்சதிகார அபாயத்தினை எதிர்த்த போராட்டம், காங்கிரசைத் தோற்கடித்து அதனுடைய ஏகபோகத்தை முறியடிப்பது, பி.ஜே.பி யினை தனிமைப்படுத்துவது, தற்போது ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பியினை தோற்கடிப்பது  – இவையெல்லாம் ஒவ்வொரு காலத்திலும் மாறி மாறி வந்திருக்கின்ற உடனடிக் கடமைகள். இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும், மூன் றாவது மாற்று உருவாக்குவதற்கும், இடதுசாரி, ஜனநாயக,மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த ஒற்றுமை தேவைப்பட்டது. இது பூர்ஷ்வாக் கட்சிகளுடன் அணி சேர்க்கைக்கான  தேவை யினை உருவாக்கியது. நடப்புச் சூழ்நிலையின் தேவைகளினால் உரு வாகும் உடனடி அரசியல் மற்றும் தேர்தல் கட மைகள் ஒரு புறம். அதற்குச் சமமான முக்கியத்துவத்துடன் கட்சியின் சுயேச்சையான செயல் பாடுகளை மேம்படுத்துவது, இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் போராட்டங்களை பலப் படுத்துவது  என்ற  அரசியல் நடைமுறை உத்தி கள் உருவாக்கிக் கொடுத்திருக்கும் அடிப்படைக் கடமை மறு புறம். நமது வேலை முறைகளின் காரணமாக, இவற்றிற்கு இடையிலான இணைப்பு நடைமுறையில் துண்டிக்கப்பட்டிருக் கிறது. தொடர்ந்து வந்திருக்கும் அரசியல்  நடை முறை உத்திகள் கட்சியின் சுயேச்சையான பலத்தை அதிகரிப்பதையும், இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணியினைக் கட்டுவதையும் முக்கிய கடமைகளாக முன் வைத்திருக்கின்றன. எதேச்சதிகாரத்தினையும் வகுப்புவாதத்தினையும் எதிர்த்துப் போராடுவது என்பது இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணியின் முன்னேற்றத் திற்கு வழி வகுப்பது என்ற அடிப்படைக் கடமை யினை நிறைவேற்றுவதற்காகவே.  அரசியல், தத்துவார்த்தத் தளங்களிலும், கட்சி ஸ்தாபனத்தைக் கட்டி வளர்ப்பதிலும் நமது சுயேச்சையான நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவடையாமல், இடதுசாரி சக்திகளை பலப் படுத்துவதும், அதன் மூலமாக இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணியினைக் கட்டும் திசை நோக்கிச் செல்வதும் சாத்தியமல்ல.  எனவே, கட்சியின் சுயேச்சையான நடவடிக் கைகளும்,  இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணிக் கருத்தாக்கத்தினை முன்னிறுத்துவதும், முன்னணியைக் கட்டுவதும் ஒன்றோடு ஒன்று இணைந்து நடைபெற வேண்டும்.

ஐக்கிய முன்னணி உத்திகள் குறித்த சரியான அணுகுமுறையினை அந்தப் பரிசீலனை அறிக்கை பின்வருமாறு தொகுத்து அளிக்கிறது:

  1. கட்சியின் சுயேச்சையான நடவடிக் கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண் டும். இது நிறைவேற்றப்பட வேண்டு மெனில், அரசியல், தத்துவார்த்த, ஸ்தா பனத் தளங்களில் நமது பணி அதிகரிக்க வேண்டும்.
  2. இத்துடன், போராட்டங்களை யும், இயக்கங்களையும்  கட்டும் நோக்கில்   17வது மாநாட்டில் நாம் நிறைவேற்றிய இடதுசாரி மற்றும் ஜனநாயகத் திட்டத் தின் கோரிக்கைகளையும் முன்னிறுத்த வேண்டும். போராட்டங்களைக் கட்டும் போது, அடிமட்டத்திலிருந்தும், ஸ்தல  மட்டத்திலிருந்தும் அது தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் அது இறுதி வரை நீடித்து நிற்கும். இதைச் செய்வதற்கு ஸ்தல மட் டத்தில் உள்ள நிலைமைகளை சரியாகக் கண்டறிதல் அவசியம்.
  3. அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் வெகுஜனப் போராட்டங்கள் மூலம், இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை பலப்படுத்துவதில் அதிக அழுத்தம் தேவை.  இடதுசாரி மற்றும் ஜனநாயக அணி என்பது ஒரு தேர்தல் அணியே என்ற பொதுவான மனநிலையிலிருந்து முதலில் விடுபட வேண்டும்.
  4. குறிப்பிட்ட காலங்களில், குறிப் பிட்ட உத்திகளின் தேவைகளுக்குத் தகுந் தாற் போல், பூர்ஷ்வா மற்றும் குட்டி பூர்ஷ் வாக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி உத்தி களை பயன்படுத்த வேண்டும். இதிலும் கூட மக்கள் பிரச்சனைகளில் கூட்டுப் போராட்டங்களுக்காகவும், பரஸ்பரம் உடன்படு கின்ற அரசியல் பிரச்சனைகளில் அரசியல் பிரச்சாரங்களுக்காகவுமே நமது அழுத்தம் இருக்க வேண்டும். இதன் மூலம் தான் அவர்களது செல்வாக்கில் உள்ள மக்களை அணுகுவதற்கான வாய்ப்பினைப் பெற முடியும். கூட்டு மேடைகளில் கூட, நமது நிலைக்குப் பொருந்தாத தவறான கருத்துக் களை  அந்தக் கட்சிகள் முன் வைக்கும் போது, அவற்றிலிருந்து நாம் விலகி நிற்கி றோம் என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும். கூட்டு மேடைகள் மற்றும் சுயேச்சையான நடவடிக்கைகள் குறித்த உத்திகளை  சரியாக அமலாக்க வேண்டும்.
  5. தேர்தல் உத்திகளைப் பொறுத்த மட்டில் தொகுதி உடன்பாடுகள், அணிகள் என மாறி மாறி பல ஏற்பாடுகள் நடந்து கொண்டே இருக்கும். அவற்றையெல்லாம் நிரந்தரமான ஐக்கிய முன்னணியாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அது நமது சுயேச்சையான நடவடிக்கைகளுக்கும், கொள்கைகள் மற்றும் அரசியல் பிரச்சனை களில் நமது சுதந்திரமான நிலைக்கும் எதிரானதாகும். தேர்தலில் நாம் கூட்டாக நின்று ஆதரித்த கட்சி மாநிலத்தில் அர சாங்கம் அமைக்கக் கூடும். ஆனாலும், அந்த  அரசாங்கத்தின் தவறான கொள்கை களை எதிர்ப்பதில் நமக்கு எவ்விதத் தயக்க மும் இருக்கக் கூடாது. அவற்றுக்கு எதி ரான போராட்டத்தில்  நாம் மக்களுடன் கைகோர்த்து நிற்க வேண்டும்.
  6. (6) அனைத்து அடிப்படை அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்தும், அரசியல் தலைமைக் குழுவும் மத்திய கமிட்டியும் கட்சி அணியினரைத் தெளிவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.  வகுப்புவாதக் கட்சிகள், பிற பூர்ஷ்வாக் கட்சிகளுக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையிலான வித்தியாசத் தினை மக்களிடம் கொண்டு செல்வதற்கு  இது மிகவும் அவசியம்.

சுயவிமர்சனமான இந்த பரிசீலனையின் பின்னணியில், அரசியல் தலைமைக்குழு, மத்திய கமிட்டி, மாநிலக் குழுக்கள் தங்களது சொந்த அணுகுமுறை, நடைமுறைகள் குறித்து பரிசீ லனை செய்து கட்சி முழுவதையும் சரியாக திசை வழிப்படுத்த வேண்டும். ஒரு வலுவான இடதுசாரி இயக்கத்தினையும், இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளையும் பலப்படுத்தி ஒரு உண்மையான மாற்று அரசியல் சக்தியாக முன்னிறுத்தும் தேவை மேலோங்கியுள்ளது. நமது கட்சிதான் அத்தகைய சக்தியின் மையப்புள்ளியாக இருக்க முடியும். அப்படி இருக்க வேண்டும் எனில் போராடுவது மட்டுமல்லாது, அனைத்து வகையிலும் தன்னைத் தயார் நிலையில் வைத் திருக்கும் பலமான கட்சியாக நமது கட்சி உருப் பெற வேண்டும்.

கட்சிகளின் குணாம்சங்கள்

பல்வேறு ஆளும் வர்க்கக் கட்சிகள், பூர்ஷ்வா மற்றும் குட்டி பூர்ஷ்வாக் கட்சிகளின்  பங்கு குறித்து நிர்ணயம் செய்வது அரசியல்  நடை முறை உத்திகளின் ஒரு முக்கிய அம்சமாகும். கட்சித் திட்டத்தின் அடிப்படையில், பூர்ஷ்வா  நிலப்பிரபுத்துவ வர்க்கங்களை, அதாவது, ஆளும் வர்க்கங்களை, பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் உள்ளன. தற்போது, காங்கிரசும், பி.ஜே.பி.யுமே அவ்வகையில் இரண்டு பெரிய கட்சிகள். பிற கட்சிகள், குறிப்பாக ஆளும் வர்க்கக் கட்சி கள் குறித்தும் கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொன்றும் இன்றைய திட்டவட்டமான சூழ்நிலையில், என்ன பாத்திரத் தினை வகிக்கின்றன என்பது நமக்குத் தெரிந் திருக்க வேண்டும். தனிமைப் படுத்துவது,  முறியடிப்பது என்ற நோக்கில், எது அதிகமான தீய சக்தி என்பதனை அடையாளம் காண வேண்டும். அத்தகைய தீய சக்திகளுக்கு எதிராக, எந்தக் கட்சிகளுடன் ஒன்று பட்டு அணி சேர்ந்து நிற்க லாம் என்பதனைத் தீர்மானிப்பதற்கும் இது மிகவும் அவசியம். ஆளும் வர்க்கங்களை  பிரநிதித்துவப் படுத் தும் அகில இந்திய கட்சிகளைத் தவிர தத்தம் மாநிலங்களில் பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவ நலன் களைப் பிரநிதித்துவப்படுத்தும் பிரதேசக் கட்சிகளும் இருக்கின்றன.

அகில இந்தியக் கட்சி களுடன் இவை முரண்படுவதும் உண்டு. ஒத்துழைப்பதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்தக் கட்சிகள் வகிக்கும் பாத்திரத்தினைப் பொறுத்தே, அவை கள் குறித்த நமது அணுகுமுறை அமைகிறது. இந்திய அரசில் ஆதிக்கம் செலுத்திய, 1977வரை மத்தியில் ஏகபோகமாய் ஆட்சியில் இருந்த காங் கிரஸ் கட்சி தான்  ஆளும் வர்க்கக் கட்சிகளில் முதற் பெரும் கட்சி. எனவே அதுவே பிரதான  குறி இலக்காக அமைகிறது. பி.ஜே.பி வளரத் தொடங் கிய நிலையில், குறிப்பாக 1991 தேர்தல்கள், பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர், இரண்டு கட்சி களும் நமது அரசியல்-நடைமுறை உத்திகளின் மையப்புள்ளியாக மாறின. சில குறிப்பிட்ட சம யங்களில் அக்கட்சிகள் வகிக்கும் பாத்திரத் தினைப் பொறுத்து, அவற்றுக்குள் எவை அதிக ஆபத்தானவை என்று முடிவு செய்கிறோம். எடுத்துக்காட்டாக, பி.ஜே.பி மத்தியில் ஆட்சியில் இருந்த 1998 -2004 காலங்களில் அதுவே நமது கணிப்பு. அதே போன்று, காங்கிரஸ் அல்லாத மதச்சார் பற்ற பூர்ஷ்வாக் கட்சிகள் குறித்தும் அவ்வப் போது கணித்து அவற்றுடன் கூட்டு மேடைகள், கூட்டுப் போராட்டங்கள் குறித்து முடிவு செய்கி றோம். இவர்களின் குணாம்சங்கள் குறித்து நிரந்தரமான முடிவுகள் வைத்துக் கொள்வ தில்லை. குறிப்பிட்ட கால கட்டங்களில் அவை வகிக்கும் பாத்திரங்களே அதைத் தீர்மானிக்கும். நடைமுறை உத்திகளின் தேவை, கூட்டுப் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் தேவை, ஆகியவற்றைப் பொறுத்து இவர்களுடன் ஐக்கிய முன்னணி உத்திகள் கையாளப்படும்.

இடதுசாரி அரசாங்கங்களின் பாத்திரம்

கட்சித் திட்டத்தின் 112வது பாராவின் அடிப் படையில் அமைந்த புதிய சூழ்நிலையும், நமது கடமைகளும் என்ற 1967ம் ஆண்டு  தீர்மானம் மே.வங்கத்திலும், கேரளாவிலும் அமைந்த ஐக்கிய முன்னணி அரசாங்கங்களில் நாம் பங் கேற்குமாறு வழி காட்டியது. பிற்காலத்தில் இது திரிபுரா மாநிலத்திற்கும் விரிவு படுத்தப் பட்டது. மே.வங்கத்தில் 1977 முதல் 2011 வரை இடைவெளி இல்லாமல், 34 ஆண்டுகள் நமது அரசாங்கம் ஆட்சி செய்தது. கேரளாவில், 1980 -82, 1987-91, 2005-2011 காலங்களில் இடது முன்னணி அர சாங்கங்கள் ஆட்சியில் இருந்தன. திரிபுராவில், 1978 முதல் இன்றுவரை  1988 முதல் 1993 ஆண்டுகள் தவிர  இடது முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருந்து வருகிறது. இடதுசாரிகள் தலைமையிலான  அரசாங்கங் களுக்கு வழிகாட்டும் வகையில், 18வது அகில இந்திய மாநாடு சில கொள்கைப் பிரச்சனைகள் குறித்து என்ற தலைப்பில் தீர்மானம் ஒன்றினை உருவாக்கியது.

19வது மாநாட்டின்  அரசியல்  ஸ்தாபன அறிக்கையின் இரண்டாம் பாகத்தில், இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள்:

இன்றைய சூழ்நிலையில் அவர்களது அனு பவமும், பங்களிப்பும் என்ற பகுதி இணைக்கப் பட்டது. அந்த அரசாங்கங்களின் செயல் திட் டத்தை அமலாக்கும் போது கிடைத்த அனுபவங்களைக் குறிப்பிட்ட அந்தப் பகுதி, இந்த அர சாங்கங்கள் கொள்கைகளை எவ்வாறு  அம லாக்குவது என்பது குறித்துத் தேவைப்படும் சில விளக்கங்களையும் உள்ளடக்கியிருந்தது. இந்த நாட்டில், இடதுசாரி மற்றும் ஜனநாயக மாற்றினை உருவாக்கும் போராட்டத்தில் இடது சாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள் ஒரு முக்கிய பகுதியாக அமைகின்றன. மூன்றாவது மாற்று காங்கிரசுக்கும், பி.ஜே.பிக்கும் எதிராக, காங் கிரஸ் அல்லாத, பி.ஜே.பி அல்லாத சக்திகளை அணி திரட்டி ஒரு மூன்றாவது மாற்றினை உருவாக்குவதில் கட்சி எடுத்த முயற்சிகள் குறித்து  20வது அகில இந்திய மாநாடு பரிசீலனை செய்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் தோற் கடிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற 16வது மாநாட் டில் தொடங்கி,  ஒரு மூன்றாவது மாற்று உரு வாக்க வேண்டிய தேவையினை கட்சி வலியுறுத்தி வருகிறது. அத்தகைய மாற்று என்பது மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, வெறும் தேர்தல் அணியாக இருக்க முடியாது என்பதையும் கட்சி தொடர்ந்து தெளிவு படுத்தி வந்திருக்கிறது. மாநிலக் கட்சிகளின் பாத்திரம் மற்றும் குணாம்சங்களைக் கருத்தில் கொண்டு, பரந்துபட்ட கூட்டுப் போராட்டங்கள், கூட்டு இயக்கங்கள் மூலமே அவர்களின் நிலைபாடுகளிலிருந்து அவர்களை மாற்றி   ஒரு பொதுவான புரிந்துணர்விற்குக் கொண்டு வர முடியும். மூன்றாவது மாற்று என்ற கோஷம், இடது மற்றும் ஜனநாயக முன்னணி உருவாவதற்கு முன்னர் உருவாகும் இடைக்கால முன்னணி என்று பார்க்கப்பட்டது.

ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், மூன்றாவது மாற்று உருவாக்கம் குறித்து ஏற்பட்ட அனுபவத்தினை  கட்சியின் அகில இந்திய மாநாடு  பரிசீலனை செய்தது. காங்கிரஸ் அல்லாத மதச்சார் பற்ற கட்சிகளில் பெரும்பாலானவை மாநிலக் கட்சிகளேயாகும். அவர்களின் பங்கும், குணாம் சங்களும் காலப் போக்கில் மாறிவிட்டன. பிர தானமாக மாநில பூர்ஷ்வாக்களையும், கிராமப் புற செல்வந்தர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இக்கட்சிகள் நவீன தாராளவாதக் கொள்கைகளை எதிர்ப்பதில் நிலைத்தன்மை கொண்டவை அல்ல. அவர்கள் மாநில ஆட்சிக்கு வரும் போது மத்திய அரசு கடைப்பிடிக்கும் அதே நவீன தாராளவாத அணுகுமுறையினையே கடைப்பிடிக்கின்றனர். மத்தியில் கூட்டணி அரசாங்கங்கள் உருவாகத் தொடங்கிய பின்னர், மாநிலக் கட்சிகள் மத்திய ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

எனவே, அவர்கள் நேரத்திற்கு நேரம் மாற்றி மாற்றி பல சந்தர்ப்பவாத நிலையினை மேற்கொள்கின்றனர். மத்திய ஆட்சியில் பங்கு பெறுவதற்காக, மாநிலக் கட்சிகள் சில  காங்கிரசுடனோ, பி.ஜே.பியுடனோ கை கோர்த்துக் கொள்கின்றன. ஒன்றுபட்ட போராட்டங்களிலும், இயக்கங்களிலும் நம் முடன் வருவதற்கு அவர்கள் தயங்குகிறார்கள் அல்லது மறுக்கிறார்கள். இடதுசாரி இயக்கம் தனது பலத்தை அதிகரித்துக் கொள்ளாத நிலை யில், அக்கட்சிகளை நம் பக்கம் ஈர்த்து, ஒரு உறுதி யான அணி அமைப்பதில் சிரமங்கள் உள்ளன. இத்தகைய இன்றைய சூழ்நிலையில், இந்தக் கட்சி களுடன், ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஒரு மூன்றாவது மாற்று என்பது  சாத்தியமல்ல. அகில இந்திய பெரும் பூர்ஷ்வாக் கட்சிகளுக் கும், மாநிலக் கட்சிகளுக்கும், மத்திய  மாநில உறவுகள் போன்ற பிரச்சனைகளில் முரண்பாடு கள் உண்டு. இந்த முரண்பாடுகளையும்,  மோதல் களையும் நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு, மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி முறை பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றின் மீது நாடாளுமன்றத்திலும் வெளியிலும் போராட்டங்களில்  இந்தக் கட்சிகளை இணைக்க வேண்டும் என்பது நமது அரசியல் நிலை.

சி.பி.ஐ(எம்) மற்றும் இடதுசாரிக் கட்சிகளைத் தனிமைப் படுத்துவதற்குத் திட்டமிட்ட முயற்சிகள் நடை பெற்று வரும் இவ்வேளையில் காங்கிரஸ் அல் லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் உறவுகளை தொடர்ந்து நிலை நிறுத்திக் கொள்வது அவ சியம். தேர்தல் காலங்களில் தேவைப்படும் போது இக்கட்சிகளுடன் உடன்பாடு கொள்ளலாம். காங்கிரஸ்  அல்லாத, பி.ஜே.பி அல்லாத கட்சி களை அணி சேர்ப்பதற்கு, சில தேர்தல் உத்திகள் தேவைப்படலாம். ஆனால், அதனை  ஒரு மூன்றாவது மாற்றாக முன்னிலைப்படுத்திவிடக் கூடாது. இன்றைய அரசியல்  நடைமுறை உத்திகள் குறித்த சில அம்சங்கள்:

கட்சியின் சுயேச்சையான பாத்திரத்தின் முக்கியத்துவம்

நடப்பு அரசியல் சூழ்நிலையினைச் சமாளிப் பது, உடனடிக் கடமைகளை நிறைவேற்றுவது, சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் மக்கள் பிரிவினரிடையே கட்சியின் செல்வாக் கினை அதிகரிப்பது இவையெல்லாம் இன்றைய தேவைகள். நமது அரசியல்-நடைமுறை உத்தி களின் வெற்றிகரமான   அமலாக்கம், இத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் கட்சிக்கு உதவ வேண்டும். 17வது மாநாட்டிலிருந்து கட்சி யின் மக்கள் தளமும், செல்வாக்கும் உயர்வதில் உள்ள தேக்கம் குறித்து கட்சி விவாதித்து வரு கிறது. கட்சி விரிவாக்கத்திற்குத் தடையாக நிற்கும் பலவீனங்கள்,  தவறுகள் போன்றவற்றிற்கான காரணங்களை, 20வது அகில இந்திய மாநாட் டின் அரசியல் பரிசீலனை அறிக்கை குறிப்பாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது. கட்சியின் சுயேச்சை யான பாத்திரம் மற்றும் நடவடிக்கைகளை முன் னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்து 18வது மாநாடும், 19வது மாநாடும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றன. பெருமளவிலான இயக்கங்கள், போராட்டங்கள் மூலம், பல்வேறு மக்கள் பிரி வினர் மீது நவீன தாராளவாதக் கொள்ககைள் ஏற்படுத்தியிருக்கும்  மோசமான பாதிப்புகளை எதிர்த்துப் போராட வேண்டும். இது மிக முக்கிய கடமைகளில் ஒன்று. இத்தகைய போராட்டங் கள் மூலமாகத் தான் நமது மக்கள் தளத்தினை விரிவுபடுத்த முடியும். இந்தக் கடமையினை சரிவரச் செய்யவில்லை என்பதும், அதன் விளை வாக, விரிவான இயக்கங்கள் மற்றும் போராட் டங்களை நடத்தத் தவறி விட்டோம் என நமது பரிசீலனையில் தெரிய வருகிறது. இந்தப் பல வீனம், ஸ்தலப் பிரச்சனைகளில் தொடர்ந்து  போராட்டங்களை நடத்துவதற்கான நமது திறமைக் குறைவுடன் இணைந்தது. அத்தகைய போராட்டங்களை நடத்துவதில் நாம் மிகவும் பின் தங்கியுள்ளோம்.

அகில இந்திய அளவிலும், (நமது வலுவான மாநிலங்கள் தவிர பிற) மாநிலங்களிலும் புதிய மக்கள் பிரிவினரை ஈர்க்கும் வகையில், நம்மால் பெருமளவில் மக்களைத் திரட்டிப்  போராட முடியவில்லை. மக்களைத் திரட்டி நாம் நடத்தும் பெரிய போராட்டங்களில் கூட, அவை முடிந்த பின்னர்  அதில் கலந்து கொண்ட பலரை அணுகி கட்சியின் அமைப்புகளுக்குள் கொண்டு வரும் பணியினை நாம் செய்வதில்லை. மக்களின் பொரு ளாதாரப் பிரச்சனைகள் மீது நாம் நடத்தும் போராட்டங்கள் கட்சியின் செல்வாக்கினை உயர்த்துவதற்கான அஸ்திவாரம் என்பது உண்மை. ஆனால், அது மட்டுமே போதுமானது அல்ல. அடுத்து அந்த மக்களிடம் அரசியல் தத்துவார்த்தப் பணிகளைத் தொடர வேண்டும். கட்சியின் சுயேச்சையான பாத்திரத்தினை விரிவுபடுத்துவதும், பலப்படுத்துவதும் அரசியல்  நடைமுறை உத்திகளில் ஒரு முக்கிய இணைப்புக் கண்ணி என 20வது அகில இந்திய மாநாடு வலியுறுத்தியிருக்கிறது.  அரசியல், பொருளா தார, சமூகப் பிரச்சனைகள் என கட்சியின் சுயேச்சையான நடவடிக்கைகள் விரிவடைந்து கொண்டே செல்ல வேண்டும். திரட்டப்பட்ட மக்களிடம் நமது அரசியல் மேடைகளிலிருந்து பேச வேண்டும். இதன் மூலம் தான் பூர்ஷ்வாக் கட்சிகளை அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் எதிர் கொள்ள முடியும். அடிப்படை வர்க்கங்கள் மத்தியில் செய்யும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். விவசாயிகள் மற்றும் கிராமப்புற ஏழை மக்களைத் திரட்டி நடத்தும் வர்க்க வெகுஜனப் போராட்டங்களில் உள்ள பலவீனங்கள் களையப்பட வேண்டும்.

தலித் மக்கள் , பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரின் பிரத்தியேகமான பிரச் சனைகள் மீது தொடர்ந்த போராட்டங்கள் அவ சியம். பிற கட்சிகளின் செல்வாக்கில் இருக்கும் மக்களைத் திரட்டும் வகையிலும்,  ஒன்றுபட்ட போராட்டங்களை உருவாக்கும் வகையிலும், நமது வெகுஜன அமைப்புகள் பரந்து விரிந்து வளர வேண்டியது அவசியம். சமூகப் பிரச்சனைகளைக் கையிலெடுப்பது குறித்து: கட்சி நேரடியாக சமூகப் பிரச்சனைகளைக் கையிலெடுப்பது குறித்து அரசியல்-நடைமுறை உத்தி வலியுறுத்துகிறது. மக்களை பிளவுபடுத்து கின்ற அடையாள அரசியலின் வளர்ச்சி, நமது கட்சிக்கும் இடதுசாரி இயக்கத்திற்கும் கடுமை யான சவாலை ஏற்படுத்தி வருகிறது. சாதி, மதம், இனம், இனக்குழு என்ற அடை யாளங்களின்  அடிப்படையிலான அரசியல்  மக்களை பிளவு படுத்தி சிதறடித்து விடுகிறது. ஆளும் வர்க்கங்களுக்கும் சுரண்டல் அமைப் பிற்கும் எதிராக ஒன்றுபட்டுப்  போராட வேண் டும் என்ற நிலையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பி விடுகிறது. சமூக ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சங்களுக்கு ஆட்படும் குழுக்கள், சமூகங்களின் பிரச்சனைகளில் கட்சி தலையிடு வது தலையான கடமையாகும். அவர்கள் அனை வரையும் ஒரு பொதுவான இயக்கத்திற்கு அழைத்து வருவதற்கு பெருமளவில் முயற்சி தேவை.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான

போராட்டம்  பி.ஜே.பி தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் தோற்றுப் போய்விட்டது என்பதன் காரணமாக, வகுப்புவாத சக்திகள் மற்றும் அவற்றின் செல் வாக்கினைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என நமது நடைமுறை உத்தி எச்சரிக்கிறது. வரும் காலத்தில், அரசியல், தத்துவார்த்த, கலாச்சார தளங்களில் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா படையினரை எதிர்ப்பது அத னுடைய அரசியல் வடிவமாக இருக்கும்.

இடதுசாரி அரண் மீதான தாக்குதல்

2009 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் தொடங்கி மே.வங்கத்தில் நமது கட்சியினர் மீது திரிணாமூல் கட்சியினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந் நிலையில் கட்சி மற்றும் இடது முன்னணியைப் பாதுகாக்கும் கடமை முக்கியத்துவம் பெறுகிறது. சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் தாக்கு தல்களின் கடுமை அதிகரித்திருக்கிறது. வர்க்கப் பிரச்சனைகள் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளில் மக்களைத் திரட்டிப் போராடு வது, ஜனநாயகத்தினை மேம்படுத்துவது போன்ற வற்றின் மூலம் இழந்த தளங்களை மீட்க வேண் டும். அதன் மூலம்,  நமது கட்சியினையும் இடது சாரி சக்திகளையும் மீண்டும் பலப்படுத்த வேண்டியது உடனடிக் கடமை.

இடதுசாரி ஒற்றுமை

இடதுசாரி மற்றும் ஜனநாயக அணியினை உருவாக்குவதற்கு, இடதுசாரி  ஒற்றுமையினைப் பலப்படுத்துவதும், விரிவுபடுத்துவதும் மிகவும் அவசியம்.  இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு வட்டத்திற்கு வெளியில் இருக்கும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தனி நபர்களை கூட்டு மேடை களுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் இன்று மிகவும் தேவைப்படுகின்றன.   2009 தேர்தல்களில் கட்சி பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. சட்ட மன்றத் தேர்தல்களில் மே.வங்கத்திலும், கேரளாவிலும் இடதுசாரிகள் தலைமையிலான  அரசாங்கங்கள் தோல்வி யினைச் சந்தித்தன. இத்தகைய சூழ்நிலையில் நமது சுயேச்சையான நடவடிக்கைகள் மூலம் கட்சி இழந்த பலத்தை மீட்டெடுக்க முடியும். இடதுசாரி ஒற்றுமையினைப் பலப்படுத்தி, ஒன்றுபட்ட போராட்டங்களை உருவாக்குவதன் மூலம் கட்சியின்  செவ்வாக்கினை மேம்படுத்த வேண்டும்.

இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் அணியினை உருவாக்குக!

இறுதியாக, இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணி உருவாக்கத்தின் மேன்மை குறித்து அரசியல்-நடைமுறை உத்தி ஆழமாக வலி யுறுத்தியிருக்கிறது. இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணியினை தொலை தூர இலக்காகப் பார்க்கக் கூடாது. நவீன தாராளவாதக் கொள் கைகள், வகுப்புவாத சக்திகள், ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகள் ஆகிய அனைத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களின் உரிமை களை பாதுகாப்பதற்கும் இடதுசாரி மற்றும் ஜன நாயக முன்னணியின் உடனடித் தேவை உணரப் படுகிறது.    இடதுசாரி மற்றும் ஜனநாயக அணி யைக் கட்டும் கடமையினை நிறைவேற்றுவதற்கு, வெகுஜன இயக்கங்களையும், ஒன்றுபட்ட போராட்டங்களையும் விரிவு படுத்த வேண்டிய தேவை உள்ளது. காங்கிரஸ் அல்லாத மதச் சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து பிரச்சனை கள் மீது ஒன்றுபட்ட போராட்டங்களை உரு வாக்க வேண்டும். வளர்ச்சிப் போக்கில் அவை யெல்லாம் சேர்ந்து இடதுசாரி மற்றும் ஜன நாயக அணியினை உருவாக்குவதற்கு துணை நின்று உதவும்.

இடதுசாரி இயக்கமும், சுற்றுச் சூழல் பிரச்சனைகளும்!

வனங்களைப் பாதுகாக்க வேண்டியது தான். ஆனால் அது யாருக்காக? மனிதனுக்காகத் தானே? அவனை அழித்தொழித்த பிறகு வனத்தைப் பாதுகாப்பதன் பொருள் என்ன?… அரசாங்க அதிகாரத்தையும், ஏராளமான நிலங்களையும் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் வாழ்க்கையா?

– ஏ.கே.கோபாலன்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றதும், குறைந்த பட்ச திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி என்ற பகுதியில் பழங்குடி மக்களையும், வனம் சார்ந்து வாழும் சமூகங்களையும், வனங்களிலிருந்து வெளியேற்றுவது நிறுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. 2006 ஜூலை மாதம் 22 ம் தேதி ஐ.மு., இடதுசாரி ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் சி.பி.எம். பழங்குடி மக்கள் மசோதா தொடர்பான தனது கருத்துக்களை வலியுறுத்தியுள்ளது. பழங்குடி அல்லாத வனம்சார் மக்களையும் மசோதாவின் வரம்புக்குள் கொண்டு வருவது, கட் ஆஃப் ஆண்டை 1980 லிருந்து 2005 என விஸ்தரிப்பது, 2.5 ஹெக்டேர் என்ற உச்ச வரம்பை நீக்குவது மற்றும் பயனாளிகளை கிராம சபைகளையே தேர்ந்தெடுக்கச் சொல்வது என 4 முக்கியமான விஷயங்களை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் கூட எழுதப்பட்டுள்ளது. (Peoples Democracy, September 3, 2006. பக்கம் 7) வனங்களையும், இயற்கை வளங்களையும் தனியார் வசமாக்குவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் அங்கே வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்களும் பறிக்கப்படும் என்பதும், இடதுசாரிக் கட்சிகள் சார்பில் வனங்கள், சுற்றுச்சூழல் அமைச்சரகத்திற்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது (Peoples Democracy, Sep. 24, 2006, பக்கம் 5)

நாடு முழுவதும் பழங்குடி மக்களும், வனம் சார்ந்த சமூகங்களும் எதிர் கொண்டுள்ள பிரச்சனைகள் ஏராளம். சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இடதுசாரிகளின் நிலைபாடு என்ன? பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க சி.பி.எம். போன்ற இடதுசாரிக் கட்சிகள் / அரசுகளின் நிலைபாடு என்ன? என்னென்ன திட்டங்களை இடதுசாரி அரசுகள் குறிப்பாக திரிபுரா, மேற்குவங்க அரசுகள் மேற்கொண்டுள்ளன? இப்படி பல கேள்விகளுக்கு விடைகாண படிக்க வேண்டியதொரு நூல் சுற்றுச் சூழலும் வாழ்வுரிமையும் பழங்குடி மக்கள் : சமகால விவாதமும் எதிர் காலத் திட்டமும் ஆகும். அர்ச்சனா பிரசாத் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “Environmentalism and the Left Contemporary Debates and Future Agendas in Tribal Areas”  என்ற நூலை லெஃப்ட் வேர்டு புக்ஸ் வெளியிட்டது. தமிழில் சஹஸ், முரளி, சாமி ஆகிய மூவரால் மொழி பெயர்க்கப்பட்டு, பாரதி புத்தகாலயம் வெளியிட் டுள்ளது. இன்று பழங்குடி மக்கள் இனச் சான்றிதழ் பெறுவதி லிருந்து, பட்டா இன்றி, வாழ வழியின்றி வெளியேற்றப்படுவது என்று அன்றாடம் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பொதுச் சொத்துக்கள் மறைந்து விட்டன. வருவாய் காடுகள் ரிசர்வ் காடுகளாக இஷ்டம் போல் மாற்றப்படுகின்றன. இந்த நூலில் வட இந்திய பகுதிகளில், குறிப்பாக இயற்கை வளங்கள் கொழிக்கும் ஜார்கண்ட், உத்தராஞ்சல், சத்தீஸ்கர் மற்றும் பழங்குடி மக்கள் அதிகம் உள்ள ஒரிசா, மத்தியப்பிரதேச நிலைமைகள் விளக்கப்பட் டுள்ளன. தவிர, சுற்றுச்சூழல் தொடர்பாக இடதுசாரிகள் பார்வை எப்படி உள்ளது என்பதும் நூலில் விவாதத்திற்குட்படுத்தப் பட்டுள்ளது.

பொதுவாக, சுற்றுச் சூழல் என்று பேசுகையில் காற்று, நீர், ஒலி மாசு, அதிகரிக்கும் வெப்பம் பற்றித்தான் பேசப்படுகிறது. ஆனால், காலங்காலமாக இயற்கையை குறிப்பாக, வனம் சார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றும் பழங்குடி மக்களின் வாழ்வு அரசு கொள்கை களால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றது என்பதைப் பற்றி இடதுசாரிகளைத் தவிர, வெறும் சிலரே அக்கறை கொண்டுள்ளனர். 1973 ல் நடந்த சிப்கோ இயக்கம் வரலாற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுற்றுச்சூழல் இயக்கமென்பது வளர்ச்சி பற்றிய விவாதத்தில் வாழ்வு ரிமை மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடைபெறும் தொடர் போராட்டங்கள் மற்றும் மோதல்களைக் குறிக்கும் ஒரு பொதுவான பதமாகும் என ஆசிரியர் முன்னுரையிலே குறிப்பிட்டுள்ளார்.

பழங்குடியினரும், நிலப்பிரச்சனையும் என்ற அத்தியாயத்தில், நிலச்சீர்திருத்தம், நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் இடதுசாரி களின் நிலை விளக்கப்படுகிறது. காந்திய சுற்றுச்சூழல் வாதிகளும், இடதுசாரிகளும், நவீன வளர்ச்சித் திட்டங்களும், வணிகமயமாகும் விவசாயமும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கின் றன என்பதை ஏற்கின்றனர். தங்கள் நிலங்களிலிருந்து அந்நியப்படு கின்றனர் அம்மக்கள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்று கூறும் நூலாசிரியர், பிரிட்டிஷார் ஆட்சியில் நிலவருவாய் சட்டங் களின் விளைவுகளை விளக்குகிறார். இடதுசாரிகளைப் பொருத்த வரை, மேற்குவங்கம், திரிபுரா, கேரளா ஆகிய மாநிலங்களில், நிலச்சீர்திருத்தம் நன்கு அமலாக்கப்பட்டுள்ளது. 1940 களிலேயே திரிபுராவிலும், ஆந்திராவிலும் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட் டத்தை நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். உழுபவனுக்கே நிலம் என்ற கோஷத்தை வைத்து இடதுசாரிகள் போராடினர். திரிபுராவில் ஜீமியா மக்கள் நில உரிமைகளுக்காகப் போராடியது குறிப்பிடத் தக்கது. 1990 களில் அகில இந்திய விவசாய சங்கம் பழங்குடி மக்களின் நில உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்துகையில், பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வைத்தது. இந்தக் கோரிக்கைகள் பழங்குடி மக்களின் பிரத்யேகப் பிரச்சனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டன. நூலாசிரியர் மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2001 ம் ஆண்டு வரை கையகப்படுத்திய 1.4 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் 56 சதம் தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் வழங்கப்பட் டுள்ளது. பயனாளிகளில் 18 சதம் பழங்குடியினர் என்றும், 37 சதம் தலித்துகள் என்ற புள்ளி விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரம், பயனாளிகள் மாநிலத்தில் உள்ள பழங்குடியினரில் 10 சதம் மட்டுமே என்றும், பழங்குடியின மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய விவசாயம் அல்லாத மற்ற வாய்ப்புகளைப் பரிசீலிப்பது அவசியம் என்றும் குறிப்பிடுகிறார். கூடவே, நிலச் சீர்திருத்தம் மூலமாக பழங்குடிகள் நீடித்த, வளமான விவசாயச் சமூகமாக நிலைபெற இடதுசாரி இயக்கத்தின் பார்வையில் மேலே கூறப்பட்டது தொடர்பாக மாற்றம் தேவையென சுட்டிக் காட்டுகிறார்.

பழங்குடியினர் ஆக்கிரமிப்பாளர்களாக எவ்வாறு சித்த ரிக்கப்படுகின்றனர் என்பதை விவரித்துள்ள ஆசிரியர், மாநில வாரியாக, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் எவ்வளவு என்ற பட்டியலையும் தந்துள்ளார். 1980 ல் இயற்றப்பட்ட வன (பாதுகாப்பு) சட்டத்தின் முக்கியத்துவமும் தரப்பட்டுள்ளது. பழங்குடி மக்களின் வாழ்க்கை வனம் சார்ந்ததாக இருப்பதால், அவர்களை ஆக்கிரமிப்பாளர் எனச் சித்தரிப்பது தவறு என்று இடதுசாரிகள் கூறுகின்றனர். 2002 ல் சி.பி.ஐ(எம்) ராஞ்சியில் நடத்திய மாநாடு, வன வளங்கள் மீதும், நிலங்கள் மீதும் பழங்குடிகளுக்கு உள்ள உரிமைகளை யாரும் பறிக்க முடியாது என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது.  இடதுசாரிகள் முன் வைத்த மற்ற சில முக்கிய கோரிக்கைகளும் பழங்குடி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. நூலாசிரியர் காந்தியவாத சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலைபாட்டையும் விளக்கியுள்ளார். இதனால் இருவேறு புரிதல்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இடதுசாரிகள் நீடித்த விவசாய உற்பத்தி, விவசாயம் சாரா வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்தி, தீர்வு காண முயல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பழங்குடியினரின் வாழ்க்கை முறையும், வேளாண்மை நெருக்கடியும் என்ற அத்தியாயத்தில் தற்போதைய சூழல் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலை, இடு பொருள் விலை உயர்வு, தாராளமயம் ஏற்படுத்தியுள்ள மோசமான விளைவுகளை நன்றாக விளக்கியுள்ளார். நிலப்பயன்பாடு பற்றி விளக்கும் போது, சுழற்சி முறை பயன்பாட்டை இடதுசாரிகள் ஏற்கவில்லை என்கிறார். பழங்குடியினர் விவசாயத்தில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க புதிய வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்றும, திரிபுரா அனுபவம் எடுத்துக்காட்டாக உள்ள தென்று எழுதியுள்ளார். வந்தனா சிவா போன்றவர்களின் வாதங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. இடதுசாரிகள் பசுமைப் புரட்சியைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. உணவு உற்பத்தி அதிகரிக்கக் காரணமாக இருந்த பசுமைப் புரட்சி, ஏற்றத்தாழ்வு களை அதிகரிக்கச் செய்தது என்பது தான் உண்மை. வந்தனா சிவா போன்றோர், பசுமைப் புரட்சியை கடுமையாகச் சாடுகின்றனர். இடதுசாரிகளின் நிலைபாட்டிற்கும் மற்ற சுற்றுச் சூழல் இயக்கத்தி னரின் நிலைபாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை நூலாசிரியர் நன்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த அத்தியாயத்தில் புனல் காடு விவசாயம் மற்றும் ரப்பர் விவசாயம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. திரிபுரா, கேரளா மாநில அனுபவங்கள் தரப்பட்டுள்ளன. புனல்காடு விவசாயம் தாக்குப்பிடிக்கக் கூடிய முறை என்பதை இடதுசாரிகள் ஏற்க வேண்டும் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். (புனல் காடு விவசாயம் என்பது சுழற்சி முறையில் மாறி மாறிப் பயிரிடும் முறை) சுழற்சி முறை விவசாயம் பழங்குடியினருக்கு பொருளாதார ரீதியில் உதவும் என்பது அவர் கருத்து.

பல வட மாநிலங்களில் விவசாயிகளின் பட்டினிச்சாவுகள், காரணங்கள், தீர்வுகளை விளக்கி, பெரிய கம்பெனிகள் விவசாயத் துறையில் நுழைவது எந்த அளவு பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதையும் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக, பணப் பயிர்களுக்கு மாறியதால், வெளியிலுள்ள பெரு விவசாயிகள் பழங்குடியினரின் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கிய சம்பவம் நிறைய இடங்களில் நடந்துள்ளது. குடிபெயர்தல் பிரச்சனையை ஆழமாக விவாதித்துள்ளார். (பக்கம் 57) இதில் வடமாநிலங்களின் அனுபவம் விளக்கப்பட்ட போதிலும், அதை தமிழகச் சூழலுக்கு அப்படியே பொருத்திப்பார்க்க இயலும். பருவகால குடிபெயர்தல் என்பது காலம் காலமாக உள்ளது தான். ஆனால், நெருக்கடி காரணமாகக் குடிபெயர்வது என்பது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளதென்பது நாம் இந்தியா முழுமையிலும் காண முடியும். நூலாசிரியரும் இதையே தெளிவுபடுத்தியுள்ளார்.

பழங்குடியினர், காடுகள், உலகமயம் என்ற அத்தியாயம் பழங்குடியினரின் உரிமைகள், அத்து மீறல்கள், போராட்டங்களை விளக்குகிறது. காடுகளைப்பற்றி அரசின் பார்வை எப்படியுள்ளது? பழங்குடி மக்களின் நன்மைகளைப் பாதுகாக்கும் விதத்தில் காடுகள் மீதான அரசின் கட்டுப்பாடு என்பது இருக்க வேண்டுமென இடதுசாரிகள் கருதுகின்றனர். இதையொட்டி இரண்டு கருத்தோட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளை ஆசிரியர் விளக்குகிறார். 1). மேற்கத்திய நவீன கருத்தோட்டம் 2). பழங்குடிகளின் பழமையான கருத்தோட்டம் என விளக்கும் போது, வனவிளைபொருட்கள் எப்படி சிறியவை, பெரியவை எனப் பிரிக்கப்பட்டு, அரசாங்கம் சிறியவை மீதான தனது கட்டுப்பாட்டை அதிகரித்தது என்று தெளிவுபடுத்தியுள்ளது பயனுள்ளதாகும். மத்தியப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டங்கள் வனப் பொருட்களைச் சுரண்டவே உதவியது என்பது குறிப்பிடத் தக்கது. ஏராளமான எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன. காடுகளை யார் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது? என்ற கேள்விக்குப் பதிலாக, மேற்கு வங்க அரபாரி பரிசோதனை விளக்கப்பட்டுள்ளது. கூட்டு வன மேலாண்மைத் திட்டம் மூலம் மேற்கு வங்கத்தில் முதல் 15 ஆண்டுகள் வனத்துறைக்கும், மக்களுக்குமிடையே நம்பிக்கையை வளர்த்து, முறைப்படி பலன்களை இருதரப்பினரும் பங்கிட்டுக்கொள்ள உதவியது. இந்தப் பரிசோதனை தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், அதன் பிரச்சனைகளையும் கோடிட்டு காண்பித்துள்ளார்.

வளர்ச்சியும், புலம் பெயர்க்கும் அரசியலும் என்ற அத்தியாயத்தில் நவீன வளர்ச்சியின் பலன்கள், பிரச்சனைகள், அதன் பின்விளைவுகள், அதில் அடங்கியுள்ள அரசியல் போக்குகளை விளக்குகிறது. நர்மதை அணைப்பிரச்சனையிலிருந்து துவங்கி, தொழிற்சாலைகள் போன்றவை  பழங்குடி மக்களை எப்படிப் பாதிக்கிறது என்றும், இதை இடதுசாரிகள் எப்படிப் பார்க்கின் றனர் என்பதையும் விளக்குகிறது. குறிப்பாக, புலப் பெயர்ச்சி – மறுவாழ்வுப் பிரச்சனையில் இடதுசாரிகளும், சுற்றுச் சூழல் வாதிகளும் ஒரே நிலையை எடுக்கின்றனர். கேரளத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு  விஷயத்தில், கே.எஸ்.எஸ்.பி. யின் போராட்ட நடவடிக்கை இடதுசாரிகள் மத்தியில் நவீன வளர்ச்சித் தன்மை பற்றிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார். ஆனால், நர்மதா திட்டத்திற்கெதிரான போராட்டங்களுக்கு இடதுசாரிகள் அளிக்கும் ஆதரவு, பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை காட்டுகின்றனர் என்பதைத் தெளிவாக்குகிறது. நர்மதை அணைப் பிரச்சனையை விளக்கி, இதில் இடதுசாரிகளின் நிலைபாட்டையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார். சி.பி.ஐ.(எம்) கட்சி 1992 ல் எடுத்த நிலை என்ன என்பதுடன், 2002 ல் கட்சி உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த பின் முன்வைத்த கோரிக்கைகள் (பக்கம் 87) விரிவாகத் தரப்பட்டுள்ளன. இந்த விளக்கங்கள் கட்சியின் நிலைபாட்டைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

இந்திய ஜனநாயகத்தில் பழங்குடியினர் என்ற அத்தியாயம் சுதந்திரத்திற்கு முன்பும், அதற்குப் பின்பும் இந்திய அரசின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது. குறிப்பாக, நேருவின் பார்வை பற்றி எழுதப்பட்டுள்ளது. தவிர, ஆதிவாசிகளுக்கு திட்டங்களில் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டில் பெரும் பகுதி கல்விக்கும், சமூகப் பணிகளுக்குமான மானியங்களாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

பழங்குடி மக்களுக்கான முதல் அமைப்பை 1948 ல் பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் துவக்கியது. அவர்களுக்கான கூட்டுறவு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட சுயாட்சி கவுன்சில்களினால், பழங்குடி மக்களின் விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றும், அவர்கள் முன்னேற வழி வகுக்கும் என்றும் இடதுசாரிகள் கருதினர். அதை வலியுறுத்திப், போராடி 1982ல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணையின் கீழ் மாவட்ட சுயாட்சிக் கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலர் கள் சிறப்பாகச் செயல்பட முடியுமென்பதற்கு திரிபுரா சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பின்னுரையில் நூலாசிரியர் மூன்று முக்கிய சவால்களைச் சுட்டிக்காட்டுகிறார்.

  1. புதிய பொருளாதாரக் கொள்கை – உலகமயம், தனியார்மயம், தாராளமயம் ஆகியவற்றின் விளைவாக, அசமத்துவ வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை இடதுசாரிகள் வலியுறுத்துகின்றனர்.
  2. பிளவுவாதம், வகுப்புவாதம் – இதற்கெதிரான போராட்டங் களை இடதுசாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதில் சுற்றுச்சூழல் இயக்கத்தினர் சிலர் இணைந்த போதிலும், பகுகுணா போன்றோர் தங்கள் நிலைபாட்டிற்கு ஆதரவைத் தேட மத அடிப்படைவாத சக்திகளுடனான உறவைப் பயன்படுத்துகின்றனர். சந்தர்ப்பவாதப் போக்கைக் கடைபிடிக்கின்றனர்.
  3. நீர், நிலம், வனங்கள் சீர்கெட்டு வருவது மிகப்பெரிய சவால். உண்மையான சவாலாக ஆசிரியர் எதைக் கருதுகிறார்? நிலம், நீர், வனம் என்ற இந்த வளங்களின் மீது பிற பகுதியினருக்கும் இருக்கக் கூடிய உரிமைகளுக்கு முரணின்றி இப்பழங்குடி மக்களுக்குள்ள அத்தகைய உரிமைகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதில் தான் உண்மையான சவால் அடங்கியுள்ளது.

இந்த நூல்  இரண்டு அம்சங்களில் மிகவும் முக்கியமானது. ஒன்று, கட்சி உறுப்பினர்கள் மத்தியிலேயே, சுற்றுச் சூழல் பிரச்சனைகளில் நம்  கட்சியின் நிலைபாடு பற்றிய தெளிவான புரிதல் குறைவாகவே உள்ளது. மற்ற பிரச்சனைகள் மீது கொடுக்கும் அளவு அழுத்தம் – நமது கூட்டங்கள் எழுத்துகளில் – சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இல்லை எனலாம். பெரிய அணைகள், வன வளங்கள் மீதான கட்டுப்பாடு, பழங்குடி மக்கள் உரிமைகளுடன் மற்றவர்களுக்கு ஏற்படும் மோதல் போன்றவற்றில் கட்சியின் நிலைபாட்டை புரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. இரண்டாவதாக, தமிழகச் சூழலுக்குப் பொருத்திப் பார்த்து, ஆய்வுகளை மேற்கொள்ளவும் தூண்டும் வண்ணம் உள்ளது. இந்நூல் பெரும்பாலும் வட இந்திய மாநிலப் பிரச்சனைகளை மையமான எடுத்துக்காட்டுகளாக ஓரிரு இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மலைவாழ் மக்கள் சங்கம் பழங்குடி மக்கள் பிரச்சனைகள் மீது இயக்கங்கள் நடத்தியுள்ளது. பளியர் என்ற பழங்குடி மக்கள் திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் வசிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் அணில் களைப் பாதுகாக்கிறோம் என பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதுபோல், குறும்பர், இருளர் என பழங்குடியினர் வாழ்வாதாரங்களை இழந்து அல்லலுறுகின்றனர். பழங்குடியினர் பற்றி தெரிந்து கொள்வதற்கு மட்டுமின்றி, அவர்களைத் திரட்டும் பணியை மேற்கொள்ளும் தோழர்களுக்கும் இந்நூல் மிகவும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

பழங்குடியினர் வன உரிமை அங்கீகார மசோதா!

குமார் ஷிராங்கர்

கே. வரதராஜன்

வரவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், காலனியாதிக்கக் காலத்திலிருந்தே கோடிக்கணக்கான பழங்குடியின மக்களுக்கு இழைக்கப் பட்டிருக்கிற,  அநீதியைக் களைந்திட வகை செய்யும் விதத்தில் பழங்குடியினர் (வன உரிமைகள் அங்கீகார)ச் சட்ட முன்வடிவினை உரிய திருத்தங்களுடன்  கொண்டுவந்து, நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, வரும் நவம்பர் 18 அன்று நாடு முழுதும் அகில இந்திய பழங்குடியினர் தினம் அனுசரிக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிக் கட்சிகளும் பழங்குடியினர் (வன உரிமைகள் அங்கீகார) சட்ட முன்வடிவினை மேலும் காலதாமதம் எதுவும் செய்திடாமல் நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது தனது குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில், பழங்குடியினரின் வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கக்கூடிய வகையில், பழங்குடியினர் பகுதிகளின் வளர்ச்சித் திட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, அவற்றில் உள்ள ஓட்டைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. பிரதமர் தனது சுதந்திர தின உரையில் கூட இந்த உறுதிமொழி அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். ஆயினும்கூட, வனப்பகுதிகளில் உள்ள நிலப்பிரபுக்களின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து, நாடாளுமன்றத்தின் சென்ற மாரிக்காலக் கூட்டத் தொடரில் இச்சட்ட முன்வடிவு கொண்டுவரப்படவில்லை. சமீபத்தில், பிரதமர் இச்சட்டமுன்வடிவு குறித்து ஆலோசனை செய்வதற்காக ஒரு கூட்டத்தைக் கூட்டியபோது, சுற்றச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் ஒரு புதிய வரைவைத் தாக்கல் செய்தது. அதில் பழங்குடியினருக்கான உரிமைகள் அனைத்தையும் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவிற்குப் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் அவற்றை ஏற்க மறுத்துவிட்டன.  சட்டமுன்வடிவில் செய்யப்பட வேண்டிய  திருத்தங்களைத் தெளிவாக்கியுள்ளன.

பழங்குடியினர் நிலை

நாட்டில் உள்ள 26 மாநிலங்களிலும் மொத்தம் 187 பழங்குடியினர் மாவட்டங்கள் உள்ளன. இதில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பழங்குடியினக் குடும்பங்களைச் சேர்ந்த  8 கோடியே 50 லட்சம் பழங்குடியினர் வசிக்கிறார்கள். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.20 சதவீதமாகும்.  இவர்களில் ஆண்கள் 4 கோடியே 31 லட்சம் பேர். பெண்கள் 4 கோடியே 19 லட்சம் பேர்களாவர். தற்சமயம், ஆந்திரா, ஜார்கண்ட், குஜராத், இமாசலப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கார், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய ஒன்பது மாநிலங்களில் மட்டுமே பழங்குடியினர் பகுதிகள் என்று குறிப்பிட்ட சில பகுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் உள்ள 8 கோடியே 50 லட்சம் பழங்குடியினரில் 5 கோடி பேர் இந்தப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

அரசாங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி சர்வேயின் மதிப்பீட்டின்படி இவர்களில் 47 சதவீதத்தினர் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் ஆவார்கள். சுய வேலை வாய்ப்பில் ஈடுபட்டிருப்போர் 46 சதவீதத்தினர் என்றும் இவர்களில் 44 சதவீதத்தினர் விவசாய வேலைகளைச் செய்வதன் மூலமாகவும், மீதமுள்ள 2 சதவீதத்தினர் மட்டுமே விவசாயமற்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் இந்த மாதிரி சர்வே மேலும் தெரிவிக்கிறது.

இவ்வாறு இவர்களின் வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரப் பொருளாக இருப்பது நிலமேயாகும். பழங்குடியினருக்கு நிலம் கிடைக்க வேண்டும் என்றால், நிலச்சீர்திருத்தம் வலுவாக அமல்படுத்தப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் இடதுமுன்னணி  அரசாங்கமானது சுமார் 5 லட்சம் பழங்குடியினக் குடும்பத்தினருக்கு நிலச்சீர்திருத்தத்தின் மூலம் கையகப்படுத்திய உபரி நிலத்தை விநியோகம் செய்திருக்கிறது. அதேபோன்று, திரிபுரா மாநிலத்திலும், இடதுமுன்னணி அரசாங்கம் பழங்குடியினருக்கு கையகப்படுத்திய நிலமனைத்தையும் விநியோகித்திருக்கிறது.

பழங்குடியினரிடமிருந்து நிலம் பறிக்கப்படுதல்

அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்து மற்றும் ஆறாவது அட்டவணைகள், பழங்குடியினர் நிலங்களை, பழங்குடியினரல்லாதார் வாங்குவதற்குத் தடை விதித்திருக்கிறது. உச்சநீதிமன்றமும் இதுபோன்ற மாற்றல்களுக்குத் தடை விதித்திருக்கிறது. ஆயினும் கூட ஏராளமான இடங்களில் பழங்குடியினர் நிலங்களை பழங்குடியினரல்லாதோர் வாங்குவதென்பது நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. மேலும் மத்திய அரசும் மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் தாராளமயக் கொள்கைகளின் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றிற்கு சேவகம் செய்ய விரும்புவதால், வன நிலங்களை அவற்றிற்குத் தாரை வார்க்க முன்வந்திருக்கின்றன. இதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணைக்குத் திருத்தத்தைக் கொண்டுவரவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. ஆந்திராவில் இந்தியன் புகையிலை கம்பெனிக்கு (Indian Tobacco Company) இவ்வாறு வழங்கப்பட்டிருக்கிறது.

சட்டீஸ்கரில் ஜிண்டால்ஸ் நிறுவனமானது, தன்னுடைய உருக்காலைக்காக பல்வேறு பினாமி பரிவர்த்தனைகள் மூலமாக பழங்குடியினர் நிலங்களை அபகரித்திருக்கிறது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ரூனேயில் சுற்றுலாத் திட்ட வளர்ச்சிக்கென்று கூறி 3760 ஏக்கர் பழங்குடியினருக்குச் சொந்தமான வன நிலங்கள்,  சஹாரா ஹவுசிங் லிமிடெட்டிற்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.

பழங்குடியினரிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் அவர்களிடமே அளிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருந்தாலும், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் சுணக்கம், சட்டரீதியான ஓட்டைகள், கிராமப்புற பணமுதலைகளுக்கும் அதிகாரவர்க்கத்திற்கும் இடையில் வஞ்சகமான லஞ்சக் கூட்டணி ஆகியவை காரணமாக இவ்வாறு  வனநிலங்கள் பழங்குடியினரிடமிருந்து பழங்குடியினரல் லாதார் கைகளுக்கு சட்டவிரோதமாக மாறுவதென்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியாவில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் ஆதிவாசிகளின் நிலங்கள் – சுமார் 8 லட்சத்து 55 ஆயிரத்து 282 ஏக்கர் அபகரிக்கப்பட்டது தொடர்பாக 3 லட்சத்து 75 ஆயிரத்து 164 வழக்குகள் நடைபெற்றன. அவற்றில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 643 வழக்குகள் முடிவுற்றுவிட்டன. இதில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 297 வழக்குகளில் மட்டுமே பழங்குடியினருக்குப் பயன் அளிக்கும் விதத்தில் தீர்ப்பளிக்கப்பட்டிருக் கிறது. பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் கிராமப்புற பணக்கார, பழங்குடியினரல்லாதாருக்கு ஆதரவாகவே வெளிவந்திருக்கிறது. இத்தகைய பழங்குடியினரல்லாத பண முதலைகள் இன்றும் 5 லட்சத்து 7 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்களைத் தங்கள் வசம் வைத்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராஞ்சியில் நடைபெற்ற அகில இந்திய பழங்குடியினர் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அதில் வெளியிடப்பட்ட பிரகடனம் வருமாறு:

‘‘ஆதிவாசிகள் நம் நாட்டின் காடுகளுடனும் அவற்றில் விளையும் உற்பத்திப் பொருட்களுடனும் காலம் காலமாக ஜீவனுள்ள தொடர்பை வைத்துக் கொண்டிருப்பவர்கள். அவற்றின் ஓர் அங்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஆனால் வனச் சட்டமும் தற்போது வந்திருக்கிற 1988ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புத் (திருத்தச்) சட்டமும் (Forest Conservation (Amendment) Act, 1988) ஆதிவாசிகளை வனங்களில் அத்துமீறி நுழைந்தவர்கள் போலவும், உரிமையற்ற முறையில் தலையிடுபவர்கள் போலவும் சித்தரிக்கின்றன. காட்டுப் பகுதிகள் திடீரென்று காணாமல் போவதற்கும், அவற்றின் பசுமை குறைந்துகொண்டே செல்வதற்கும் பழங்குடியினர் எவ்விதத்திலும் காரணமல்ல. மாறாக, ஒப்பந்தக்காரர்கள் -மஃபியா கும்பல்கள் – வனத்துறை அதிகாரிகள் – ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் ஆகியோரின் கூட்டுக் கொள்ளையும், முதலாளித்துவ வளர்ச்சியின் சமூகச் சூழல் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத போக்குமே காரணங்களாகும்.’’

பழங்குடியினர், வனங்களில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள்.  காடுகளுடன், காடுகளில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களுடனும் தங்கள் வாழ்வைப் பிணைத்துக்கொண்டவர்கள். ஆனால், இவர்கள் காடுகளை ஆக்கிரமித்தவர்கள் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்தப்படுகிறார்கள். நமது நாட்டின் வனச்சட்டங்கள் மற்றும் காட்டுவிலங்குகள் பாதுகாப்புச் சட்டங்கள் அனைத்துமே இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், விலங்குகளை வேட்டையாடுபவர்கள் என்றும் முத்திரை குத்துகின்றன. அவர்களை காடுகளிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆயினும், சில மாநில அரசுகள் பழங்குடியினரைப் பாதுகாப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. 1980 அக்டோபரில் வனப் (பாதுகாப்புச்) சட்டம் கொண்டுவரப்பட்ட போது, அது பழங்குடியினரை வனங்களிலிருந்து அப்புறப்படுத்துவதென்பது சற்றே குறைந்தது. பல தலைமுறைகளாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினருக்கு வன நிலங்களை ஒதுக்குவதற்கு இச்சட்டம் வகை செய்தது. ஆயினும் பலருடைய குடும்பத்தினர் காடுகளில் வசித்து வருவதைச் சரியாகத் தெரிவிக்க இயலாததால் அவர்கள் காடுகளில் தொடர்ந்து இருந்து வருவது  தொடர்பாக இன்றும் பிரச்சனை நீடிக்கிறது. 1995இல் உச்சநீதிமன்றம், அனைத்து மாநில அரசுகளுக்கும் பழங்குடியினரின் உரிமைகள் குறித்து விரைந்து முடிவு காணுமாறு கட்டளையிட்டிருந்தது. ஆயினும் பல மாநில அரசுகளால் அதனை செய்திட முடியவில்லை. இதற்குள் பல பணமுதலைகள்  காடுகளை  வளைத்துப்போட்டுக் கொண்டு விட்டனர். இப்போது மீண்டும் உச்சநீதிமன்றம், காடுகளில் உள்ள அனைத்து  ‘‘ஆக்கிரமிப்பாளர்களையும்’’ அப்புறப்படுத்துமாறு ஆணை பிறப்பித் திருக்கிறது. இதிலும் அப்பாவி பழங்குடியின மக்கள்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காலங்காலமாய் அவர்கள் காடுகளிலேயே வாழ்ந்து வந்தபோதிலும்கூட, ஆவணங்கள் எதையும் அவர்களால் தாக்கல் செய்ய முடியாத காரணத்தால், அதிகார வர்க்கத்தால் மிக எளிதாக அவர்கள் இம்ஷிக்கப்படுகிறார்கள். அப்பாவிகளான அவர்களால் எதுவுமே செய்ய முடியாமல் மிகவும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது, புதிய 1980ஆம் ஆண்டு வனப் (பாதுகாப்புச்) சட்டத்தின்கீழ், வனப் பகுதிகளில் உள்ள பழங்குடியின ‘‘ஆக்கிரமிப்பாளர்கள்’’ வீடுகள் அனைத்தையும் அவர்களது உடைமைகளையும், அவர்கள் விளைவித்திருக்கும் பயிர்கள் உட்பட அனைத்தையும் அழித்திடுமாறு ஆணை பிறப்பித்தது.  மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் உள்ள இடது முன்னணி அரசாங்கங்கள் மத்திய அரசின் இந்தச் சுற்றறிக்கையை ஏற்க முடியாது என்று  உடனேயே மறுத்துவிட்டன. ஆனால் மற்ற மாநில அரசுகள் அதனை அப்படியே சிரமேற்கொண்டு, பழங்குடியின மக்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தன. அவர்களது வீடுகளையும், பயிர்களையும் அழித்தொழித்தன. பல மாநிலங்களில் பாதிப்புக்குள்ளான பழங்குடியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கீழ் அணிதிரண்டு, போராடி,  தங்கள் வீடுகளையும், பயிர்களையும் காப்பாற்றி வெற்றி பெற்றனர். 2004 பிப்ரவரி 5 அன்று, அரசாங்கம் ஓர் ஆணை பிறப்பித்தது. அதன்படி ‘‘1993 டிசம்பர் 31 வரை இருந்து வரும் பழங்குடியினர்களின் உரிமைகள்’’ அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆயினும் 2004 பிப்ரவரி 23 அன்று உச்சநீதிமன்றம் இந்த அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது.  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்தத் தடையாணையை நீக்கறவு செய்திட நீதிமன்றத்தில் விண்ணப்பித் திருந்தாலும், வழக்கு நீதிமன்றத்தில் இன்றளவும் நிலுவையில் உள்ளது.

மனிதாபிமானமற்ற செயல்கள்

நாடு சுதந்திரம் பெற்றபின், காடுகளைச் சார்ந்த பகுதிகளில் தொழில்மயம் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று கூறி சுமார் 15 சதவீத பழங்குடியினர் அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இதுநாள்வரை எவ்விதமான மாற்று ஏற்பாடுகளோ, இழப்பீடுகளோ அல்லது வேலையோ வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப் படாமலிருப்பதற்கு என்ன என்ன இழிநடவடிக்கைகள் உண்டோ அவை அத்தனையும் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு மற்றும் இந்திய முதலாளிகள் கனிம வளங்கள் நிறைந்த காட்டு நிலங்களை மிகப் பெருமளவில் அபகரித்திருக்கிறார்கள். அந்த இடங்களில் காவல்துறையினரின் உதவியுடன் பழங்குடியினர் விரட்டியடிக்கப் பட்டிருக்கிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை தொடர்பாக சம்தா தீர்ப்புப் பின்பற்றப்படவில்லை. தாராளமயக் கொள்கைகளின் காரணமாக பழங்குடியினர் சுரண்டப் படுதலின் சில அம்சங்கள் இவைகளாகும்.

தாராயமயக் கொள்கைகளின் காரணமாக அரசுக்குச் சொந்தமான  விவசாய நிலங்கள் குறைந்தது மட்டுமல்ல, பழங்குடியினரும் தங்கள் நிலங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்டில் உள்ள 187 பழங்குடியினர் வசிக்கும் மாவட்டங்களின் மொத்த பூகோளப் பரப்பு  33.6 சதவீதமாகும்.  நாட்டின் மொத்த வனப் பகுதியில் 60 சதவீதம் இப்பகுதியில் இருக்கின்றன. வனத்தின் வளத்திற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் பழங்குடியினராவார்கள். இவர்களை வனங்களிலிருந்து வெளியேற்றுவ தென்பது, மனிதாபிமானமற்ற செயல்மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத் திற்கும் கேடு பயக்கும் நடவடிக்கையாகும்.

நாட்டில் மொத்தம் உள்ள வனப் பகுதி என்பது 6 கோடியே 80 லட்சம் ஹெக்டேர்களாகும்.  இதில் பழங்குடியினர் வசிப்பதென்பது வெறும் 2 சதவீத இடத்திலேயே. இவர்கள் அங்கு இருப்பதால் வனங்களின் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பங்கமும் வந்து விடாது. மாறாக, இவர்களை அங்கிருந்து அகற்ற மேற்கொள்ளும் எந்தவித நடவடிக்கையும் பழங்குடியினர் வாழ்க்கையிலும் மற்றும் அப்பகுதிகளிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை

மத்திய அரசு, ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதன் காரணமாக, வன நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்திட மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. பழங்குடியினரை வெளியேற்ற கருணையற்றமுறையில் காட்டுமிராண்டித்தனமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஒரிசா மாநிலத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சுமார் 1224 ஹெக்டேர் நிலங்களை 17 சுரங்க நிறுவனங்கள் எடுத்துக்கொண்டிருப்பதை முறைப்படுத்தி இருக்கிறது. மாறாக, அதே ஒரிசா மாநிலத்தில் பழங்குடியினர் ‘‘ஆக்கிரமித்ததாகக்’’ கூறப்படும் மொத்த நிலப்பகுதியில் அவர்களுக்காக முறைப்படுத்தியிருப்பது வெறும் 29 ஹெக்டேர்கள் மட்டுமே.

இவ்வாறாக, பழங்குடியினருக்கு எதிரான அநீதி தொடர்கிறது. இதனைச் சரி செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி, 2005ஆம் ஆண்டு பழங்குடியினர்  சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து, அதனை உரிய திருத்தங்களுடன் நிறைவேற்றுவதுதான்.

2005ஆம் ஆண்டு பழங்குடியினர் சட்டமுன்வடிவை நாடாளு மன்றத்தில் கொண்டு வரவிருப்பதாக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கும் அதே சமயத்தில், கீழ்க்கண்ட திருத்தங்களையும் செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

செய்யப்பட வேண்டிய  திருத்தங்கள்

  1. பழங்குடியினரின் உரிமைகளை அங்கீகரிப்பதற்காக 1980 அக்டோபர் 25  வரை ‘வனத்தில் இருந்தவர்களுக்கு மட்டும்’ என்கிற முறையில் கெடு தேதி (cut-off date) சட்ட முன்வடிவில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது அச்சட்ட முன்வடிவின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிக்கோளுக்கே நேர் விரோதமானது. இவ்வாறு கெடு தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது. இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படும் தேதி வரை காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் அனைவருக்கும் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலேயே கெடு தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும். 1980ஆம் ஆண்டு கெடு தேதி நீக்கப்படாவிட்டால், பழங்குடியினர் பெருவாரியான முறையில் வெளியேற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும். இது பழங்குடியினர் வாழ்க்கையில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, 1980ஆம் ஆண்டு வனப் (பாதுகாப்புச் சட்டம்) அதற்கேற்ற முறையில் திருத்தப்பட வேண்டும். அதே சமயத்தில், வனப்பகுதிகளில் பழங்குடியினரல்லாதார் பல்வேறு பினாமி பெயர்களில் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கெடு தேதி நிர்ணயிப்பதை அரசு ஜனநாயகமுறையில் முடிவு செய்ய வேண்டும். 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பைக் (சென்சஸ்) கூட கெடு தேதியாக எடுத்துக் கொள்ளலாம்.

அநீதியான உச்சவரம்பு

  • மேலும் இச்சட்ட முன்வடிவில், ஒவ்வொரு பழங்குடியின குடும்பத்திற்கும் ஒதுக்கப்பட்டிருக்கிற நிலத்தின் அளவு 2.5 ஹெக்டேராக வரையறுக்கப் பட்டிருக்கிறது. இது அறிவியல்பூர்வமற்றது, அநீதியானது, பாகுபாடுமிக்கது. இது நிலத்தின் தன்மையையோ (quality of the land), அந்தப் பகுதியில் பெய்திடும் மழையின் அளவையோ, பயிர் முறையையோ (crop pattern), சுற்றுச்சூழல் நிலைமைகளையோ அல்லது மண்ணியல் நிலைமைகளையோ (geological conditions) கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.  பழங்குடியினரல்லாதோருக்கு நில உச்சவரம்பின் அளவு அதிகமான அளவில் இருக்கும் அதே சமயத்தில், பழங்குடியினருக்கு மட்டும் இப்படி 2.5 ஹெக்டேர் என்று நிர்ணயிப்பதற்கான அவசியம் என்ன? பழங்குடியினர் குடும்பங்களில் பல குடும்பங்கள் இன்றும் கூட்டுக் குடும்பமாகவே,  தங்கள் நிலங்களில் கூட்டாகவே உழுதுண்டு வாழ்ந்து வருகிறார்கள். சில கூட்டுக்குடும்பத்தில் 15க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்.  எனவே, 2.5 ஹெக்டேர் நிலஉச்சவரம்பை நீக்கிட வேண்டும், தற்சமயம் வனங்களில் உள்ள பழங்குடியினக் குடும்பத்தினர் அனைவருக்கும் நிலம் வழங்கப்பட்டு, முறைப்படுத்தப்பட வேண்டும்.
  • இந்தச் சட்டமுன்வடிவானது, பழங்குடியினருக்கு உரிமைகளை நிலைநாட்டுவதற்கு, கிராம சபைகளுக்கு அதிகாரம் வழங்கி அங்கீகரித்திருக்கிறது.  அத்தியாயம் 4ல் உள்ள வரைவு விதிகள் (Draft Rules in Chapter IV), ‘‘கிராம சபை, கிராமப் பேரவையாக, கிராம மட்டத்தில் (Grama Sabha shall be the village assembly … at the village level) என்று கூறுகிறது. ஆனால், மலைகளில் மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் வாழும் பழங்குடியினர் அங்குமிங்குமாக சிதறிக் கிடக்கின்றனர்.  அவர்களுடைய கிராம சபைகளும் கூட பல கிராமங்களை உள்ளடக்கிய கூட்டு கிராம சபைகளாக இருந்து வருகின்றன. பலரால் எளிதில் செல்லமுடியாத குக்கிராமங்களைக் (padas – hamlets) கூட அவைதான் அதிகாரவரம்பெல்லையைப் பெற்றிருக் கின்றன.  எனவே, கிராமம் என்பதற்குப் பதிலாக குக்கிராமம் என்று மாற்ற வேண்டும்.
  • தற்போது வனத்துறையின் கீழ் இருந்து வரும் நிலம் குறித்த எழுத்துபூர்வமான பதிவேடுகள் தவறுகள் நிறைந்தவை, சரியானவை என்று சொல்வதற்கில்லை, போதுமானவையுமல்ல. பழங்குடியினர் குடும்பங்கள் பல எவ்விதமான ஆவணச் சான்றுகளையும் தங்களுடன் வைத்திருக்கவில்லை. அட்டவணைப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணையமானது, மகாராஷ்ட்ரா  மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போல அனைத்து  அரசுகளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரைத்திருக்கிறது. மகாராஷ்ட்ர அரசு, வன நிலங்களை முறைப்படுத்துவதற்காக, உரிமைகோரும் பழங்குடியினக் குடும்பத்தினரிடமிருந்து ஓர் உறுதிவாக்குமூலம் (அபிடேவிட்) பெற்றுக் கொண்டு, நிலங்களை முறைப்படுத்தி வழங்கியிருக்கிறது. இதைப்போல்  இச்சட்ட முன்வடிவிலும் செய்திட வேண்டும்.
  • பழங்குடியினர் வைத்திருக்கும் நிலங்கள் அல்லது வனத்துறையால் இதற்குமுன் ஒதுக்கீடு செய்யப்பட்டு  பின்னர் வலுக்கட்டாயமாக வனத்துறையால் அல்லது வன வளர்ச்சி கார்ப்பரேஷனால்  பிடுங்கிக் கொள்ளப்பட்ட நிலங்கள், அனைத்தும் இச்சட்டமுன்வடிவின் வரம்பிற்குள் வரவேண்டும்.

பழங்குடியின சமூகத்திற்கான சொத்துரிமைகள்

  • இச்சட்டமுன்வடிவில் 2(1)ஆவது பிரிவானது, வனப்பகுதிகளில் உள்ள  ‘‘பழங்குடியின சமூகத்திற்கான சொத்துரிமைகள்’’ குறித்து வரையறை செய்கிறது.
  • இச்சட்டமுன்வடிவின் 15 ஆவது பிரிவானது, இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு சட்டமாகிவிட்டால், மற்ற சட்டங்களுடன் மோதல் இல்லாதபடி, திருத்தப்பட வேண்டியிருக்கிறது.
  • ‘‘ஒரு நபருக்கு அளிக்கப்படும் வன உரிமையானது, அவர் ஏதேனும் குற்றம் புரிந்தார் என்றால் ரத்து செய்யப்படும்’’ என்று ஒரு தண்டனைப் பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் கடுமையான ஒன்றாகும்.  நம் நாட்டில் இந்தியத் தண்டனைச் சட்டம் உட்பட எந்தச் சட்டமும், அதிகாரிகள் எவருக்கும், குற்றம் புரிந்தவர்களின் உரிமைகளைப் பறித்திட, அதிகாரம் அளித்திடவில்லை. அப்படியிருக்கும்போது, பழங்குடியினர் மட்டும் இப்படி ஏன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்? எனவே, இந்த ஷரத்து முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்களைத் தண்டிக்க நம் நாட்டில் ஏராளமான சட்டங்கள் ஏற்கனவே உண்டு.
  • காடுகளில் வசிப்பவர்கள் தொடர்பாக, மாநில அரசுகளின் பொறுப்புகளையும் வரையறுத்து புதிய சட்டப் பிரிவுகள் கீழ்க்கண்ட ஷரத்துக்களுடன் இயற்றப்பட வேண்டும். வனங்களில் வசிக்கும் பழங்குடியினரை, பன்னாட்டு நிறுவனங்களின் பினாமி பரிவர்த்தனைகளிலிருந்தும், பெரும் நிலப்பிரபுக்களிடமிருந்தும், நிலங்களை அபகரிக்கும் அதிகாரம் படைத்தவர்களிடமிருந்தும்  காப்பாற்றும் பொறுப்பு மத்திய அரசையே சாரும். காடுகளில் மேற்கொள்ளப்படும் பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு, அவை அமையப்படவுள்ள கிராமத்தின், கிராம சபைகளிடமிருந்து  முன் அனுமதி பெற்று, மத்திய அரசின் ஆலோசனைக் குழுவிற்கு அனுப்பிட வேண்டும். அதனால் பழங்குடியினர் எவரேனும் அப்புறப்படுத்தப்பட்டால் உரிய இழப்பீடு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
  • இச்சட்டமுன்வடிவில், கிராம சபைகளின் அதிகாரங்கள் தெளிவாக்கப்பட வேண்டும். 1927ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டத்தின்படி காடுகள் அரசு சொத்துக்களாகும். எனவே சட்டத்தில் அதற்கான திருத்தத்தைக் கொண்டு வராமல், ஒரு கிராம சபை எப்படி வனப் பகுதிகளில் அதிகாரம் செலுத்த முடியும்? அதேபோல் எதிர்வரும் காலங்களில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையை அரசு எப்படிக் கருத இருக்கிறது என்பதையும் தெளிவாக்கிட வேண்டும். ஆறாவது அட்டவணையின் ஷரத்துக்களை மறு ஆய்வு செய்து, மாவட்டக் கவுன்சில்களின் அதிகாரங்களைத் தெளிவாக வரையறுத்து புதிய பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • இச்சட்ட முன்வடிவில், பழங்குடியின மக்கள், காடுகளில் விளையும் சிறிய உற்பத்திப் பொருள்களை (னீவீஸீஷீக்ஷீ யீஷீக்ஷீமீst ஜீக்ஷீஷீபீuநீமீ) சேகரித்துப் பயன்படுத்திக் கொள்ள அல்லது மாற்றிக்கொள்ள உரிமை அளிக்கிறது. பழங்குடியின மக்களை வர்த்தகர்கள், ஒப்பந்தக்காரர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் நில மஃபியா கும்பல்களிடமிருந்து பாதுகாத்திடக் கூடிய வகையில் உரிய ஷரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும்.
  • கொண்டுவரப்படவுள்ள சட்டமுன்வடிவானது காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் குறித்து மட்டுமே கூறியுள்ளது. வன உற்பத்திப் பொருள்களைச் சார்ந்து, வனத்திற்கு வெளியேயுள்ள பழங்குடியினர் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. பழங்குடியின மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வாழ்விற்கு காடுகளையே சார்ந்துள்ளனர். காடுகளும் அவர்களுக்கு முக்கியமான வேலைகளை அளித்துக்கொண்டிருக்கின்றன. இப்போது கொண்டுவரப்படவுள்ள சட்டமுன்வடிவானது இப்போதுள்ள ஷரத்துக்களில் மாற்றம் எதுவும் கொண்டுவரப்படாமல் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேறினால், அது வன உரிமைகளுக்குத் தகுதி படைத்தவர்களுக்கும், தகுதி இல்லாதவர்களுக்கும் இடையே பினாமி பரிவர்த்தனைகளை மேற்கொண்டிட வழிவகுக்கக்கூடிய ஆபத்திருக்கிறது. இதனைத் தவிர்த்திடக்கூடிய வகையில் புதிதாக சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும்.  காலம் காலமாக காடுகளில் இருந்துவரும் பழங்குடியினரையும் காப்பாற்றிட வேண்டும். அதே சமயத்தில் வணிக நோக்கங்களுக்காக காடுகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள நபர்களிடமிருந்து, பழங்குடியினரல்லாத ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தக் கூடிய வகையிலும் ஷரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சாரம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின், குறைந்தபட்ச பொது செயல் திட்டமானது, ‘‘அனைவருக்கும் முழுமையான சம வாய்ப்புகள் – அதிலும் குறிப்பாக பழங்குடியின மக்களுக்கும், தலித்துகளுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைத்திட – நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று உறுதிபூண்டிருக்கிறது.  பழங்குடியினமக்கள் அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளை அளித்திட அரசு உறுதிபூண்டிருப்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற வேண்டியிருக்கிறது. அரசாங்கம் தன் பொறுப்பினைத் தட்டிக்கழித்திட முடியாது.  பழங்குடியினருக்கு, கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் வசதிகளைச் செய்துதரப் போதுமான நிதி ஒதுக்கீட்டைச் செய்திட வேண்டும்.

சமீபத்தில் ராஞ்சி உயர்நீதிமன்றமானது, தலித்துகள் மற்றும் தலித் அல்லாதார் பகுதிகளுக்கு வேறுபடுத்திக் காட்டுவதை நிராகரித்து தீர்ப்பளித்திருப்பது மிகவும் ஆபத்தானது, பழங்குடியின மக்களுக்கு எதிரானது, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேல்முறையீடு தாக்கல் செய்திருக்கிறது.

இன்றைய முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ சமூகமானது பெண்களை மிகவும் தரம் தாழ்த்தியே வைத்திருக்கிறது. நிலப்பிரபுக்கள், மஃபியா கும்பல்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வன அலுவலர்கள் பழங்குடியினப் பெண்களைப் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் செய்வதென்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி இதற்கெதிராகப் போராடி வருகிறது. வலுவான இயக்கம் நடத்திட எல்லா மட்டங்களிலும் திட்டமிட்டு செயல்பட கட்சித்தலைமை பணித்துள்ளது,

பழங்குடியின மக்கள் தங்கள் அடையாளங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  தொடர்ந்து வந்த அரசுகள் பழங்குடியினரின் மொழிகளை உதாசீனம் செய்து வந்தன. பழங்குடியினர் கலாச்சாரத்தை (tribal culture) வெறும் பண்படாத கொச்சை கலாச்சாரம்  என்ற முறையிலேயே அதிகார வர்க்கம் சித்தரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.  பழங்குடியினர் கலாச்சாரத்தில் உள்ள நல்ல அம்சங்களை – குறிப்பாக அவர்களது கூட்டுச் செயல்பாடு மற்றும் சமத்துவ மாண்பினை உயர்த்திப் பிடித்தல் ஆகியவற்றைப் – பாதுகாத்து, வளர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆயினும், அதே சமயத்தில், பில்லி சூனியம் வைத்தல், பேயோட்டுதல், பெண்களுக்கு நிலவுரிமை மறுத்தல், பலதார மணத்தை ஆதரித்தல் போன்ற படு பிற்போக்கான நடைமுறைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி கொள்ள வேண்டும்.

இன்றைய சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வான நிலையை ஏகாதிபத்தியவாதிகள் நன்கு பயன்படுத்திக்கொண்டு, பழங்குடியின மக்களிடையே பிரிவினை வெறியை உருவாக்கி, மோதல்களை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை இன மக்களுக்கு உரிய சுயாட்சியை அளித்து, ஒரு கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துவதன் மூலமாகவே பழங்குடியின மக்களைப் பாதுகாத்திட முடியும், அவர்களது அடையாளம், மொழி மற்றும் கலாச்சாரத்தையும் வளர்த்திட முடியும்.

ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் பல்வேறு அக்டோபஸ் அமைப்புகளும் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கக் கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றன. பழங்குடியினரிடையே அவர்களை கிறித்துவர்கள் என்றும், கிறித்துவர்கள் அல்லாதவர்கள் என்றும் பிரித்து, பிராமண சாதீய அமைப்பைத் திணிப்பதற்கும் முயற்சித்து வருகின்றன. அவை, பழங்குடியின மக்களை ஆதிவாசிகள் என்று அங்கீகரிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை பழங்குடியினர் வெறும் ’வனவாசிகள்’தான். இதன்மூலம் அவர்களது வரலாற்றையே மறுதலிக்கக்கூடிய வேலையில் அவை இறங்கியுள்ளன. இவ்வாறாக ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் அக்டோபஸ் அமைப்புகளும் நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக மாண்புகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.

அனைத்துப் பழங்குடியினரின் ஒற்றுமையையும் பாதுகாத்து, பழங்குடியினர் – பழங்குடியினரல்லாதோருக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, முன்னேற வேண்டியிருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டங்களை பழங்குடியினர் மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் போராட்டங்களுடனும் இணைத்திட வேண்டும். அதன் மூலமாகத்தான் அனைத்து மக்களுக்கிடையிலேயும் ஓர் உண்மையான ஒற்றுமையைக் கட்டிட முடியும். அதன் மூலமாகவே நாட்டை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி முன்னேற்றிக் கொண்டு செல்ல முடியும்.

பெண்கள் மீதான ஒடுக்குமுறை வர்க்க ஒடுக்கு முறையா?

பெண்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிப் பல ஆய்வுகள், குறிப்புகள், கட்டுரைகள் உள்ளன. இருப்பினும், ஒட்டியோ, வெட்டியோ அதிகம் பேசப்படுவது, எங்கல்ஸ் இதுபற்றி எழுதிய குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்கிற நூல் தான். பெண் நிலைவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் எழுத்துக்களில், இதுபற்றிய விமர்சனம் நிறைய இருக்கும். ஆணாதிக்கம் மட்டுமே, பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்குக் காரணம் என்று கூறி, ஆண் – பெண் முரண்பாடுகளை மட்டும் பிரதானப்படுத்தியும், தனித்தும் பார்க்கிற பார்வை இவர்கள் எழுத்துக்களில் தெரியும். இதைத் தனித்து பார்க்க கூடாது என்று தான் கூறுகிறோமே தவிர, ஆணாதிக்கத்தை மையப்படுத்தும் பாலின ஒடுக்குமுறையே இல்லை என்று நாம் கூறவில்லை. எங்கல்ஸ் நூலில் தான், பெண் இனம் அடிமைப்படுத்தப்பட்டதற்குப் பின்னணியாக வர்க்க காரணி இருந்தது நிலை நாட்டப்படுகிறது.

எங்கெல்ஸ் எழுதிய இந்த நூலுக்கு மூலமாகக் கருதப்படுவது லூயி மார்கன் என்கிற 19ஆம் நூற்றாண்டு மனித இன ஆய்வாளர் எழுதிய நூல். எங்கெல்ஸ், இந்த நூலின் நிலைபாடுகளை கிரேக்க, ரோமானிய சமூக வாழ்க்கையுடனும், அவர்களது புராணங்கள், இதிகாசங்களில் வெளிப்பட்ட சற்று முந்தைய புராதன சமூக வாழ்க்கையுடனும் பொருத்திப் பார்த்தார். மேலும், ஜெர்மானிய மற்றும் அயர்லாந்து பழங்குடியினர் மத்தியில் இச்சமூகங்கள் எப்படி உருவாயின என்பது பற்றியும் ஆய்வு செய்தார். இவையெல்லாமே, மார்கனின் ஆய்வின் முடிவுகள் சரியானவை என்று நிரூபித்தன.

மார்கன் என்ன சென்னார்?

மனிதன் வாழ்வதற்குத் தேவையான உற்பத்தி முறை விரிவடைந்ததைப் பொறுத்தே பெரும்பாலும் அச்சமூகம் அடையாளம் காணப்பட்டது. மனிதகுலம்தான், உணவு உற்பத்தி மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது என்று அவர் கூறினார். நாகரிகமடையாத காட்டுமிராண்டு காலத்தை வகைப்படுத்தும் போது கூட பழைய கற்காலம், புதிய கற்காலம், வெண்கல காலம், இரும்பு காலம் என்று சமூகம் வகை பிரிக்கப்பட்டது. அதாவது புதிய புதிய உற்பத்திக் கருவிகள் கண்டுபிடிக்கப்படும் போது, அவைதான் சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுத்தன. அதே சமயம் குடும்பம் என்கிற வளர்ச்சிப் போக்கும் இணையாக நிகழ்ந்து கொண்டிருந்தது.

இந்தக் காட்டுமிராண்டி காலத்திலிருந்து நாகரிக காலத்துக்கு மனிதகுலம் மாறிய போது, குடும்பம் எப்படி மாறியது, அதில் உள்ள உறுப்பினர்களின் பங்கு பாத்திரம் என்ன ஆனது என்பது தான் முக்கியமான கேள்வி. ஏனெனில் இந்த கால கட்டத்துக்கு முன் வரை, குடும்ப அமைப்பு இயற்கையாய் தெரிவு செய்யப்பட்டு அமைந்தது. பிறகு தான் பொருளியல், பிரதானமாகக் குடும்ப முறையை நிர்ணயித்தது. மார்கன், குடும்பத்தைப் பற்றிக் கூறும் போது – குடும்பம் எப்போதுமே ஒரே மாதிரி நிலையில் இருந்ததில்லை. சமூகம், கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு வளர்ச்சியடையும் போது, குடும்பமும் கீழ் நிலையிலிருந்து, மேல் நிலைக்கு முன்னேறுகிறது என்றார்.

அதன்படிப் பார்த்தால் இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பும் சரி, குடும்ப அமைப்பும் சரி, முதலும் அல்ல, முடிவும் அல்ல, மாற்றத்தின் ஒரு பகுதி தான்; மேலும் மாறப்போவது தான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

குடும்பத்தின் வரலாறு

மனித குலத்தின் துவக்க காலத்தில் குழுக்கள் அல்லது கணங்களாக மனிதர்கள் வாழ்ந்தனர். இந்தக்குழுக்களும் ஒரே மாதிரியில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தன்மையுடன் இருந்தன. சில குழுக்களில் எந்த ஆணும், எந்த பெண்ணும் உறவு கொள்ளும் நிலையிருந்தது, சில குழுக்களில், தாயும் மகன்களும் உறவு கொள்வது தவிர்க்கப்பட்டது. சில குழுக்களில், ஒரே தாய்க்குப் பிறந்தவர்கள் உறவு கொள்வது தவிர்க்கப்பட்டது. இயற்கையை எதிர்த்துப் போராட, குழு உறுப்பினர்கள் குறையாமல் இருக்க பெண்ணின் மறு உற்பத்தித் திறன் இன்றியமையாததாக இருந்தது. தாயை மையமாக வைத்தே அனைத்தும் தீர்மானிக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் உற்பத்தி என்பது உபரியை எட்டவில்லை. இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களை சேகரித்ததே முக்கிய உற்பத்தி நடவடிக்கையாக அமைந்தது. இதில் இருபாலரும் பங்கு பெற்றனர். ஆயினும் பெண்களின் பங்கு மையமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அக்கால உற்பத்தி முறையில் பெண் முக்கியப் பங்கு வகித்ததாலும், அவள் உயர் நிலையில் வைக்கப்பட்டாள் என்று ஸ்டாலின் கூறுகிறார். குழுவிலுள்ள எண்ணிக்கை கட்டுங்கடங்காமல் போய், போதுமான உணவு அனைவருக்கும் கிடைப்பது கடினமான போது, குழு இரண்டாக, மூன்றாப் பிரிய நேர்ந்தது. அப்படிப் பிரியும் போது தான், ஏற்கனவே கூறியது போல், சில விதிவிலக்குகளை ஏற்படுத்திக் கொண்டு (தாய்-மகன்கள், சகோதர – சகோதரிகள்) பிரிந்தனர். பின்னர் காலப்போக்கில், மேலும சில கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன. இப்படிப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் குழு விவாக முறையில் ஈடுபடுவது கடினமானது. எனவே, தற்காலிகமாக ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்கிற ஜோடி திருமண முறை உருவானது. ஆனால் இந்தத் திருமண பந்தம் என்பது பிரிக்க முடியாதது அல்ல. எப்போது வேண்டுமானாலும் தம்பதிகள் பிரிந்து மற்றொருவருடன் சேரலாம். ஆனால் குழந்தைகள் மட்டும் தாய்க்கு சொந்தம் என்று எங்கல்ஸ், இந்தத் திருமண முறை பற்றி விளக்குகிறார்.

ஒரே குழுவுக்குள் இந்த ஜோடி திருமண முறைக்கு உட்பட்டு பல ஜோடிகள் இருந்தன. அனைவரும் இருக்கும் பொதுவான வசிப்பிடத்தில் உள்ள வீடு சார்ந்த, வீட்டைச் சுற்றிய புராதன விவசாயம் சார்ந்த வேலைகளைப் பெண்கள் செய்வதும், வெளியே போய் மீன்பிடிப்பது, உணவு சேகரிப்பது போன்ற வேலைகளை ஆண்களும் செய்ய ஆரம்பித்தனர்.

உலகமயமும், தனியார்மயமும் பெண்களின் மீதான உழைப்பு சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. முதலாளித்துவ உலகில் எங்குமே, ஒரு மனிதனுக்கு கொடுக்கப்படும் சம்பளம், அவன் வாழ்ந்து, ஓய்வெடுத்து மறுநாள் வேலைக்கு வரத் தேவையான வீட்டுப் பணிகளையும், அவனது பராமரிப்பையும் இலவசமாக செய்கிறாளே பெண், அதை ஈடு செய்வதாக அமைவதே கிடையாது. அதுவும் லாபத்தின் ஒரு பகுதியாக சேர்ந்து விடுகிறது.

அப்போதும் கூட, இரண்டு வகை பணிகளும், குழு வாழத் தேவையாக இருந்தால், ஒன்று முக்கியமானதாகவும், மற்றொன்று முக்கியமற்றதாகவும் கருதப்படவில்லை. தாய் வழி சமூகம் நீடித்ததும் பெண்களின் முக்கியத்துவம் நீடிக்க வாய்ப்பாக இருந்தது.

தனியுடைமையின் துவக்கம்

கிட்டத்தட்ட ஜோடிக் குடும்பக் கால கட்டத்தில் தான், காட்டு மிருகங்களை பழக்கி, கட்டுப்பாட்டுக்குள் வைத்ததன் மூலமும், விவசாயத்தைக் கண்டுபிடித்ததன் மூலமும், உற்பத்தி முறையில் உயர்ந்த மாற்றத்தைக் கண்டது மனித குலம். முதன் முறையாக, மனித உழைப்பால், உபரி உற்பத்தி ஏற்பட்டது. அதாவது, குடும்பத்துக்குப் போக, குழுவுக்குப் போக மீதி இருந்தது. இது மெதுவாக அடிமை முறைக்கு வித்திட்டது. எப்படி?

கால்நடைகள் பல்கிப் பெருகின. உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டன. நெசவு கண்டுபிடிக்கப்பட்டது. விவசாயமும் விஸ்தரிக்கப்பட்டது. இதற்கெல்லாம் முன்பு, அடிமைகளை வைத்துக் கொண்டிருந்த போது, அவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டியிருந்தது. அதை மீறி, அவர்களது உழைப்பால் கூடுதல் பலன் பெரிதாக இல்லை. எனவே பல சமயம் அடிமைகள் கொல்லப்பட்டார்கள். ஆனால், மேலே கூறிய புதிய மாற்றங்கள், உபரியை உருவாக்கி, பண்ட மாற்றுக்கும் உதவின. வேலை பிரிவினை தேவைப்பட்டது. ஆனால் கால்நடை பெருக்கத்துக்கு ஈடாகக் குழு உறுப்பினர்கள் பெருகவில்லை. எனவே வேலை செய்ய அதிக ஆட்கள் தேவைப்பட்டனர். குழுக்களிடையிலான சண்டையின் போது தோற்றவர்கள் அடிமைகளாக்கப்பட்டு இதற்குப் பயன்படுத்தப்பட்டனர்.

இந்தப் புதிய செல்வங்கள், துவக்கத்தில், குழுவுக்கே பொதுவாக இருந்தாலும், தனியுடமை மெல்ல மெல்ல தலை தூக்க ஆரம்பித்தது. உபரியும், அதன் மூலம் கிடைத்த புதிய செல்வாதாரங்களும் அந்தஸ்து உடையதாகவும், மதிப்பு உடையதாகவும் பார்க்கப்பட்டு அவற்றில் ஈடுபடுகிற ஆண்களே குழு தலைவராக்கப்பட்டனர். தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, செல்வங்களைத் தனக்கென்று அவன் ஒதுக்கிக் கொள்ள முடிந்தது.

இது இரண்டுவித விளைவுகளை ஏற்படுத்தியது. ஒன்று உபரியையும், கால்நடைகளையும், செல்வங்களையும், அவற்றிற்கான கருவிகளையும் சொந்தமாக்கிக் கொள்பவர்களும் – அத்தகைய செல்வம் இல்லாதவர்களும், அடிமைகளும் என்று வர்க்க வித்தியாசம் ஏற்பட்டது. வர்க்க சமூகம் உருவானது.

அடுத்து, மதிப்பு மிகுந்த பொருளாதார நடவடிக்கைகள் வீட்டுக்கு வெளியே நடந்ததும், அவற்றுக்கும், அதற்கான ஆதாரங்களுக்கும் எஜமான்களாக ஆண்கள் மாறியதும், அவர்களுக்கு பெண்களை விடக் கூடுதல் அந்தஸ்தை அளித்தன. இதனால் அனைவரும் சமம் என்ற நிலையை நிபந்தனையாக்கிய குழு முறை தேவையற்றதாகி, புதிய முறையை உருவாக்குவது அவசியமானது. அது தான் அரசு! அடிமைகளையும், செல்வங்களையும் சொந்தமாக்கிக் கொண்டு, பிறருடைய உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த சிறுபான்மை ஆண்களின் கையில், அரசு ஒரு ஒடுக்குமுறை எந்திரமாகப் பயன்பட்டது.

ஒருதார மணம்

மேற்கூறிய சமூக அமைப்புக்கு வித்திட்ட அதே தனியுடைமை தான், (சமூக உற்பத்தி – ஆனால் அதற்கான கருவிகள் தனி மனிதன் கையில்) ஒரு தார மண முறைக்கும் வித்திட்டது. ஏற்கனவே இருந்த சமூக அமைப்புகளில், வேட்டை கருவிகளோ, வீட்டுக் கருவிகளோ, அவற்றை வைத்திருப்பவர் இறந்து போனால், பெண்ணின் சொத்துக்கள் அவர் குழந்தைகளுக்கோ, சகோதர சகோதரிகளுக்கோ போகும். ஆணின் சொத்துக்கள் அவனது குழந்தைகள் என்று பிரித்துப் பார்க்க முடியாததால், அவனது சகோதர, சகோதரிகளுக்குப் போகும். தனியுடமை உருவாக்கப்பட்ட பின்பு, அது ஆண்களின் கைப்பிடியில் இருந்த பின்னணியில் இத்தகைய நிலை நீடிக்க முடியவில்லை. ஆண் வழி வாரிசுகள் இனம் காணப்பட வேண்டியிருந்தது. தாய் வழி உரிமை தூக்கி எறியப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தாய் வழி உரிமை தூக்கி எறியப்பட்டது, பெண் குலத்துக்கே ஏற்பட்ட வரலாற்றுத் தோல்வியாகும். (இதுவரை வீட்டுக்கு வெளியே மதிப்பு மிக்கவனாக இருந்த) ஆண் வீட்டுக்குள்ளும் கடிவாளத்தைப் பிடிக்க ஆரம்பித்தான். பெண் தரம் தாழ்த்தப்பட்டாள், ஆணின் காம இச்சைக்கு அடிமைப்படுத்தப்பட்டாள், குழந்தை பெறும் கருவியாக்கப்பட்டாள், கிரேக்க சமுதாயத்தில் இது மிகவும் வெளிப்படையாகவே தெரிந்தது. தற்போது அடிமைத்தன வடிவம் மென்மையாக மாறியிருக்கலாம், ஆனால் கண்டிப்பாக ஒழிந்து விடவில்லை என்று வர்ணிக்கிறார் எங்கல்ஸ்.

வாரிசுகள் அந்த ஆணுக்கு மட்டுமே பிறந்தவையாக இருக்க வேண்டுமென்பதால், பெண்ணின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாக இந்த ஒரு தார மணம் அடிப்படையிலான புதிய குடும்ப முறை – ஆணாதிக்க குடும்ப முறை – மாறியது. இதை சிறந்த பண்பாட்டின் பிரதிபலிப்பாக பார்ப்பதில்லை. ஏனெனில் ஒன்று, இது உடமை நோக்கம் கொண்டது;

இரண்டாவது, இது பெண்ணுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. ஆணுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை. அவனுக்கு கிடைத்த பொருளாதார, சமூக அந்தஸ்து, அதன் பக்க விளைவாக வன்முறையையும் உண்டாக்கியது. அதுவும் ஆணுக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால் சமூகவியலாளர்கள் கூறுவது போல, வன்முறையும், சட்ட திட்டங்களும் மட்டுமே பெண்ணடிமை நிலையை உத்திரவாதப்படுத்தியிருக்க முடியாது. புராணங்கள், புனை கதைகள், பத்தினி தன்மை, கற்பு, தெய்வ கட்டளை, சடங்கு, சம்பிரதாயம் என்று பண்பாட்டு ரீதியாகவும், பெண்ணடிமைத் தனம் நிலை நிறுத்தப்பட்டது.

பெண்கள் அனுபவிக்கிற இடையூறுகளும், பாதிப்புகளும், இன்றியமையாத அளவு வர்க்க உள்ளடக்கத்தை உடையவை என்று, வியட்நாம் தொழிலாளர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் லீ துவான் 1959ல் ஒரு பெண்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவான முரண்பாடுகளை அகற்றுகிற, சமரசம் செய்கிற ஏற்பாடாக ஒரு தார மணம் உருவாகவில்லை. மாறாக, புராதன காலத்தில் கண்டறியாத அளவு பாலின மோதலைப் பிரகடனப்படுத்துகிற, ஒரு இனத்தை மற்றொரு இனம் அடிமைப்படுத்துகிற ஏற்பாடாகவே தோன்றியது. வரலாற்றில் தோன்றிய முதல் வர்க்க முரண்பாடு, ஒரு தார மணத்தின் பின்னணியில் உருவான ஆண் – பெண் முரண்பாட்டோடும், முதல் வர்க்க ஒடுக்குமுறை, ஆண் இனம் பெண் இனத்தின் மீது செலுத்திய ஒடுக்குமுறையோடும் ஒத்துப் போகிறது என்றார் எங்கெல்ஸ்.

எனவே, பெண்ணின் மீதான ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்க முறையோடு தொடர்புடையது என்ற வரலாற்று வளர்ச்சிப் போக்கை சரியாகப் புரிந்து கொள்ளாமல், ஆண் தான் பெண்ணுக்கு எதிரி என்கிற நிலை எடுப்போமேயானால், பெண்களெல்லாம் அணி சேர்வது, சமூக மாற்றத்தை ஏற்படுத்த அல்ல, மாறாக, ஆண்களை ஒழிக்கத் தான் என்றாகி விடும். இது, வர்க்க போராட்டத்தை திசை திருப்புவதற்கே பயன்படும்.

ஒரு தார மணமுறை, உடைமை நோக்கத்தோடு எழுந்தது என்றால், தனியுடைமை ஒழிக்கப்பட்ட சமூகத்தில், ஒரு தார மணத்தையும் ஒழித்து விடுவோமா; மீண்டும் வரம்பற்ற பாலுறவு நோக்கிப் போக முடியுமா என்ற கேள்வி எழலாம். மனித குலம் நாகரீகம் அடைந்த காலத்தில் தோன்றியது தான் ஒருதார குடும்ப அமைப்பு. அதை வரலாற்று ரீதியான பெரும் முன்னேற்றம் என்றும் எங்கல்ஸ் நிர்ணயிப்பு செய்கிறார். எனவே ஒருதார மணமுறையை முற்றாக நிராகரிக்கவேண்டியதில்லை. இதன் எதிர்மறை அம்சங்களான தனியுடைமையும், பெண்ணடிமைத்தனமும் அகற்றப்பட்டு, காதல் அடிப்படையில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற செழுமையான முறையாக இது உருவாகும்.

குடும்பப் பணிகள் தனிப்பட்ட சேவையாய்

வர்க்க பேதமற்ற ஆதி சமூகத்தில் வீட்டுப் பணிகளும், குழந்தை பராமரிப்பும் சமூகம் சார்ந்த பொது பணிகளாக இருந்த நிலை – எனவே மதிக்கப்பட்ட நிலை – வர்க்க சமூகத்தில், கணவனுக்கும் மனைவி செய்யும் தனிப்பட்ட சேவையாக மாறி மதிப்பிழந்து விட்டது. இது உடமை சார்ந்து ஏற்பட்ட மாற்றம் எனில், உடமை உள்ள குடும்பங்களில் மட்டும் தானே நிலவ வேண்டும், உடமையே இல்லாத உழைப்பாளி குடும்பங்களில் இது நிலவ வேண்டிய அவசியம் இல்லையே என்ற கேள்வி எழலாம். இதற்கு மார்க்சும், எங்கல்சும் உருவாக்கிய கம்யூனிஸ்ட் அறிக்கை – ஒவ்வொரு கால கட்டத்திலும், ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள் தான், சமூகத்தின் அனைத்துப் பிரிவின் மத்தியிலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்களாக மாறுகின்றன என்று பதில் கூறுகிறது.

பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும், அடிமைத்தனத்துக்கும் எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டத்தின் ஓர் அத்தியாவசியமான பகுதி என்பதை உணர வேண்டும்.

எங்கல்ஸ் சமூக உற்பத்தி நடவடிக்கைகளில் மீண்டும் பெண் இனம் முழுமையும் ஈடுபடுவது தான், பெண் விடுதலைக்கு முன் நிபந்தனை என்று சொன்னார்.  பெண்ணடிமைத் தனம் தோன்றிய காலம் முதல் முதலாளித்துவ காலம் துவங்கும் வரை, பெண்கள் பொதுவாக சமூக உற்பத்தியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். நில உடமை காலத்திலும் கூட ஏற்கனவே அடிமை இனமாக இருந்த ஒடுக்கப்பட்ட பெண்களே விவசாய வேலையில் ஈடுபட்டனர். இது, பெண்களின் சமூக அந்தஸ்தை பெருமளவு பாதித்தது. தற்போது முதலாளித்துவ சமூகத்தில், அவர்கள் மீண்டும் சமூக உற்பத்தியில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது ஒரு வளர்ச்சி தான். பெரும்பாலும் தொழிலாளி வர்க்கப் பெண்களுக்கே இந்த வாய்ப்பு உள்ளது. ஆனாலும், குடும்பப் பணிகள் என்பது, இன்னும் தனிப்பட்ட சேவையாகவே உள்ளதால், இரண்டையும் திருப்திகரமாகப் பூர்த்தி செய்வது பெண்களுக்கு இயலாததாக உள்ளது.

பெண்ணடிமைத்தனமும் வர்க்கச் சுரண்டலும்

சமூக உற்பத்தியில் பெண்கள் முழுமையாக ஈடுபட என்ன செய்வது? குடும்பத்தையே வேண்டாமென்று சொல்லிவிடலாமா? குழந்தை பெறுவதை நிறுத்தி விடலாமா? அல்லது, ஆண்கள் வேலையை விட்டு விட்டு, வீட்டில் இருந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொள்ளட்டுமா? இல்லை! குடும்பம் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். வீட்டுப் பணிகள், தனிப்பட்ட குடும்பங்களின் தலைவலியாக இல்லாமல், சமூக உற்பத்தியின் வரையரைக்குள் கொண்டு வரப்பட்டு, பொது சேவைகளாக மாற வேண்டும் – அதாவது தனிப்பட்ட குடும்ப பொருளாதாரம், சமூகப் பொருளாதாரமாக மாற வேண்டுமென்றும் எங்கல்ஸ் கூறினார். இதையே தான் லெனினும், தனிப்பட்ட குடும்ப பராமரிப்பு என்பது சமூக மயமாக்கப்பட்ட தொழிலாக மாறினால் தான், சலிப்பூட்டும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்களுக்கு விடுதலை கிடைக்கும். அப்போது தான் பெரும் இயந்திரத் தொழில்களில், சமூக உற்பத்தியில் பெண் முழுமையாக ஈடுபட முடியும் என்று கூறினார். இவற்றையெல்லாம் சோசலிச அரசுகள் செய்தன. முதலாளித்துவ சமூகத்தில், ஆளும் வர்க்க நலன்களைப் பிரதிபலிக்கிற அரசு, இதை முழுமையாக செய்ய முற்படுமா? சாதாரணமாக, தனிப்பட்ட முதலாளிகள், இதை செய்வார்களா? அவர்களது லாபத்தில் கை வைக்க விடுவார்களா? மாட்டார்கள்! சரி, அப்படியானால், சோசலிசம் வரட்டும் என்று சொல்லி, விட்டுவிட முடியாது. பல்வேறு நல நடவடிக்கைகளை, போராடி அரசிடமிருந்து பெற வேண்டும். குடும்பத்துக்குள் வீட்டுப் பணிகளில் பகிர்வு என்பதும் உருவாக வேண்டும். குடும்பம், ஜனநாயக ரீதியான அமைப்பாக மாற்றப்பட முயற்சிக்க வேண்டும். மற்றொரு பக்கம், வீட்டுப் பணிகள் பொது சேவையாக்கப்பட்டு விட்டால், பெண்கள் இன்னும் கூடுதலாக முழுநேர வேலை வாய்ப்பு கேட்பார்களே, அதைக் கொடுக்க இந்த அரசால் முடியுமா? பெருவாரியான பெண்கள் இப்படி வீட்டுத் தளைகளில் சிக்கிக் கொண்டிருந்தால் தானே, தொழிலாளி வர்க்கத்தின் பின்னடைந்த பகுதியாகவே நீடித்து, புரட்சிகர உழைக்கும் வர்க்க இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவாமல் இருப்பார்கள்? அப்படியானால் வர்க்க சுரண்டல் அமைப்பு வலுப்பட, பெண்ணடிமைத்தனம் உதவுகிறது என்று தானே பொருள்?

இதற்கு வேறு மாதிரியான சில உதாரணங்களைக் கூடப் பார்க்கலாம்

விவசாயக் கூலி தொழிலாளர்களில் கிட்டத்தட்ட சரிபாதி பெண்கள். இவர்கள் செய்யும் வேலை மிக அதிகம். ஆனால், இவர்களுக்கு சம கூலி கிடைப்பதில்லை. சில மாநிலங்களில் ஆண் கூலி, பெண் கூலி என்று ஏற்றத்தாழ்வாகவே நிர்ணயிக்கப்படுகிறது. சில சமயம், நடவுக்கு இவ்வளவு, களையெடுக்க இவ்வளவு என்று வேலைகள் அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. அதையும் ஆழமாகப் பார்த்தால், பெண்கள் செய்கிற வேலைகளுக்கு, ஆண்கள் ஈடுபடுகிற வேலைகளுக்குக் கொடுப்பதை விடக் குறைவாகக் கூலி பேசப்படும். ஏனெனில் பெண் மதிப்புக் குறைந்தவளாகக் கருதப்படுவதால், அவள் செய்யும் வேலைகளும் மதிப்பு குறைந்ததாக, மலிவாகக் கருதப்பட்டு, கூலியும் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பக்கம் இது பாலின பாரபட்சம் என்றாலும், உழைப்பு சக்தியில் பாதியை மலிவான விலைக்கு வாங்கிச் சுரண்டுவதின் மூலம் லாபம் ஈட்டுகிற வர்க்க ஒடுக்குமுறையும் புலனாகிறதல்லவா? மறுபுறம், பெண்ணின் உழைப்பை மலினப்படுத்துவதன் மூலம் அவளது சமூக அந்தஸ்து, தாழ்வான நிலையிலேயே நீடிக்க வைக்கப்படுகிறது. அதாவது பாலின ஒடுக்குமுறையும், வர்க்க ஒடுக்குமுறையும் ஒன்றையொன்று வலுப்படுத்தி தொடர வைக்கிறது.

பல கிராமப்புறங்களில், பெண்களின் கூலியில்லா உழைப்பும் உறிஞ்சப்படுகிறது. ஒரு கட்டு சுள்ளி உடைக்க, ஆட்டுக்கு ஒரு கொத்து தழை ஒடிக்க, மாடு கொஞ்சம் மேய என்ற சின்னச் சின்ன வேண்டுகோள்களுக்கு, ஊதியமில்லாமல் நிலவுடைமையாளர் வீட்டு கடினமான வேலைகளை செய்ய வேண்டும்.

தந்தைவழிக் குடும்பம் விவசாயப் பணிகளை சார்ந்திருந்தால், அதன் உட்கருவாக அடிமை முறையும், பண்ணை அடிமைத் தனமும் இருந்தது என்று மார்க்ஸ் கூறுவது  நிலப்பிரபுத்துவ சமூக நிலைக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. அப்படியானால், முதலாளித்துவ சமூகத்தில், இது மாறியிருக்க வேண்டுமல்லவா? ஏன் பெரிதும் மாறவில்லை? நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்கள் இன்றும் நீடிக்கின்றன என்பது மட்டுமல்ல, பெண்ணடிமைத்தனம், முதலாளித்துவத்தின் சுரண்டலுக்குத் தேவைப்பட்டது; தேவைப்படுகிறது. எனவே, பெண்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்வது தான், அவர்கள் உழைப்பை மலிவாகப் பெறுவதற்கும், அதன் மூலம் அதிக உபரியை உருவாக்கி முதலாளித்துவத்தின் அடிப்படை தேவையான லாப வேட்டைக்கும் உதவும். அத்துடன், வேலையில்லா பட்டாளத்தின் கணிசமான பகுதியாக மாறி, பொதுவான ஊதிய மட்டம் தாழ்வாகவே நீடிக்கவும் பெண்கள் பயன்படுகிறார்கள்.

இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறையும் வர்க்க சுரண்டலின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. தலித் மக்கள் ஒடுக்கப்பட்டு சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளதால், அவர்கள் உழைப்பும் விவசாயத்தில் மலிவாகவே மதிக்கப்படுகிறது; குறைவான கூலி கொடுக்கப்பட்டு உழைப்பு சுரண்டல் நடக்கிறது. இதையே காரணம் காட்டி, இதனால் அவர்களது தாழ்வுநிலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. தலித் பெண்களுக்கோ கூடுதல் பிரச்சனைகள்! எனவே தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறையில், பாலின ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை என 3 பரிமாணங்கள் அடங்கியுள்ளன.

இந்த அடிப்படையில் தான், பெண்களின் பிரச்சனைகளை 3 விதமாகப் பார்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் வரையறுத்துள்ளது. பெண்ணாக, உழைப்பாளியாக, குடிமகளாக அவள் சந்திக்கும் பிரச்சனைகளை வகைப்படுத்துகிறது.

எந்த நாடு, மற்றொரு நாட்டை ஒடுக்குகிறதோ, அந்த நாடு, தனக்கான விலங்கைத் தானே உருவாக்குகிறது என்று மார்க்ஸ் கூறுகிறார். அதே போல், தொழிலாளி வர்க்கமும், பெண்கள் மீதான ஒடுக்குமுறையை ஏற்றுக் கொண்டு சும்மா இருக்கும் வரை, தம் மீதான சுரண்டலை ஒழிக்க முடியாது. பல்வேறு தளங்களில் எழும் பெண்களின் கோரிக்கைகளைத் தொழிலாளி வர்க்கம் ஆதரிக்காவிட்டால், பெண்களின் பங்கேற்பு தொழிலாளி வர்க்க அரசியலில் அதிகரிக்காது. சமூகத்தில் சரிபாதியான பெண்கள் இணையாமல், வர்க்க புரட்சியும் வெற்றி பெற முடியாது.

எனவே, பெண்ணடிமைத்தனம் என்கிற தனியுடைமை வர்க்க சிந்தனையை, வர்க்க பேதமற்ற சமூகத்தை உருவாக்கப் போராடும் தொழிலாளி வர்க்கம் விட்டொழிக்க வேண்டும். தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரை, அது ஒரு அந்நிய வர்க்க சிந்தனை. பெண்ணினத்தின் மீதான ஒடுக்குமுறையும், வர்க்க ஒடுக்குமுறையும் ஒரே காலகட்டத்தில், ஒரே காரணியால் உருவானது என்பதையும், அவற்றுக்கிடையிலான தொடர்பையும் குறித்த சரியான புரிதலோடு, பெண்கள் பிரச்சனையை வர்க்கப் பிரச்சனையாகவும் பார்த்திட வேண்டும்.

வரலாற்று ரீதியாக மதம், வர்க்க மற்றும் பாலின சுரண்டலை நியாயப்படுத்தப் பயன்பட்டது. இந்தியாவில் கூடுதலாக, சாதியம் இதை செய்கிறது.

அதேபோல், பெண் விடுதலை சாத்தியமாகவும், தனியுடமை கோட்பாட்டை அகற்றுகின்ற சமூக மாற்றம் அவசியம். எனவே, பெண் விடுதலையாளர்களும், இயக்கங்களும் அத்தகைய சமூக மாற்றத்தை உருவாக்கப் போராடும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் அரசியலையும் பலப்படுத்துவது அவசியமாகிறது.

எங்கல்ஸ் நூலில் முன் வைக்கப்பட்டுள்ள பிரதான அம்சங்கள்

  • பெண்கள் மீதான ஒடுக்குமுறை, அவர்கள் பெண் என்பதாலோ அவர்களது உடல் கூறு செயல்படும் விதத்தாலோ ஏற்படவில்லை. வர்க்க சமூகம் தோன்றியதை ஒட்டியே, இந்த ஒடுக்குமுறையும் உருவானது.
  • மனித குல துவக்கத்திலிருந்தே பெண் இனம் ஒடுக்கப்படவில்லை. ஆண்களுக்கு இணையாகவும், ஏன் உயர்வாகவும் கூட மதிக்கப்பட்டனர்.
  • ஆதி சமுகம் வர்க்கங்களாகப் பிரிந்ததற்கும், பெண் இனத்தின் மீது ஒடுக்குமுறை செலுத்தப்பட்டதற்கும், சமூக உற்பத்திக்கான ஆதாரங்கள் தனியுடமையானதே பிரதான காரணியாக அமைந்தது.
  • கால்நடை வளர்ப்பு விவசாயம், கைவினை பொருட்கள் என்று சமூகத்தின் அனைத்து துறைகளிலும் உற்பத்தி பெருகி உபரி ஏற்பட்டதன் விளைவாகவே, உற்பத்திக் கருவிகள் தனியுடைமை ஆனதும், சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்ததும், பெண் இனத்தின் மீது ஆண் இனம் ஆதிக்கம் செலுத்தியதும் நடந்தேறியது.
  • உபரி உற்பத்தி என்பது ஏற்பட்ட துறைகள் அனைத்துமே வீட்டுக்கு வெளியே அமைந்தன என்பதும், அவை ஆணின் கட்டுப்பாட்டில் இருந்தன என்பதும், பெண் செய்த வீட்டு வேலையை மலிவாக்கின.
  • புதிததாக சேர்ந்த செல்வங்கள் தன் வாரிசுக்கு மட்டுமே சேர வேண்டுமென்ற ஆணின் தேவை, பெண் மீது அவன் ஆதிக்கம் செலுத்துவதை அவசியமாக்கியது.
  • இந்த ஆதிக்கம், அன்றைய ஒரு தார மணத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டது.
  • ஒரு தார மணம் தோன்றியதானது, பெண்ணை வீட்டுக்குள்ளே தனிமைப்படுத்தி, அவளது வேலையை, சமூக உற்பத்தி என்கிற வரையறையிலிருந்து விலக்கி, கணவனுக்கான தனிப்பட்ட சேவையாக்கியது.
  • பெண்கள் மீதான ஒடுக்கு முறையும் சரி, வர்க்க ஒடுக்குமுறையும் சரி, அவை தோன்றக் காரணமாயிருந்த தனியுடைமை (அதாவது, சமூக உற்பத்திக்கான கருவிகள், ஆதாரங்கள் தனிநபருக்கு சொந்தமாக இருப்பது) அகற்றப்படும் போது தான் முடிவுக்கு வரும்.

ஆனாலும்,

ஒரு தத்துவம் மக்களின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றும் போது, அது ஒரு பௌதீக சக்தியாக மாறிவிடுகிறது.

என்று மார்க்ஸ் கூறியபடி, பெண்கள் மீதான ஒடுக்குமுறை தோன்றுவதற்கு தனியுடைமை பிரதான காரணமாக இருந்தாலும், நீண்ட காலம் ஆணாதிக்கம் கட்டுக்கோப்பு நிலையில் இருந்தால், மக்களின் மனதில், இயல்பானதாக ஆழமாக நிலை கொண்டு விட்டது. எனவே, தனியுடைமை அகற்றப்பட்ட உடன், தானியங்கியாக பெண் விடுதலை கிடைத்து விடாது. நவம்பர் புரட்சிக்குப் பிறகு சில அடிப்படையான பாலின சமத்துவத்துக்கான நடவடிக்கைகளை எடுத்த பிறகும் லெனின் சொல்வதைப் பாருங்கள் –

“பெண்களின் நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அரசமைத்து ஓர் ஆண்டுக்குள் நாம் செய்துள்ள பணிகளில் 100ல் ஒரு பங்கு கூட, வளர்ந்த பூர்ஷ்வா நாடுகள் செய்யவில்லை. பழைய சமூகத்தின் மிச்ச சொச்சங்களை, சட்டங்களை, நிறுவனங்களை அகற்றி நிலத்தை  சுத்தமாக்கியுள்ளோம்! சுத்தமாக்கும் போது தான் நமக்குப் புரிகிறது. நிலத்தை சுத்தம் மட்டும் செய்துள்ளோம். அதன் மீது இன்னும் கட்டப்பட வேண்டியது பாக்கியிருக்கிறது என்பது”.

எனவே, தனியுடைமையை தகர்க்கிற சோஷலிசம் வந்தால் மட்டும் போதாது. அதன் விளை பொருளான ஆணாதிக்கம் மண்மூடிப் போக கருத்தியல் மாற்றத்தை உருவாக்குகிற விசேச நடவடிக்கைகளும் தேவைப்படும்.

மொத்தத்தில் மார்க்சிய தத்துவத்தின் ஆசான்களும் சரி, அவற்றை நடைமுறைப்படுத்திக் காட்டிய தலைவர்களும் சரி, பெண் விடுதலையும், தொழிலாளி வர்க்க விடுதலையும் ஒன்றொடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள்.  இந்திய பெண்களில் பெரும் பகுதியினர் உழைப்பாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள். இவர்கள் தொழிலாளி வர்க்க அரசியலை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களது பங்கேற்பு இல்லாமல் புரட்சி வெற்றியடையாது. புரட்சிக்கும் பின்னும் கூட, சோசலிச சமூகத்தை நிர்மாணிப்பதில் அவர்களது உழைப்பு தேவை. அது மட்டுமல்ல, இந்திய நிலையே எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசை அகற்றி, மக்கள் ஜனநாயக அரசை அமைப்பதே புரட்சியின் கட்டமாக, மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புரட்சி, அடிப்படையில் ஏகபோக முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்பு அம்சங்கள் கொண்ட ஜனநாயகப்புரட்சி. நிலப்பிரபுத்துவ, ஏகபோக, ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் பாதிக்கப்படும் அனைத்து மக்களையும் இதற்கு திரட்டுவதே நமது நோக்கம் எனில், பெண்ணாக, உழைப்பாளியாக, குடிமகளாக சுரண்டப்படும் பெண்களை இணைக்காமல், அந்த நோக்கம் எப்படி நிறைவேறும்? எனவே புரட்சிக்கு தலைமையேற்கும் தொழிலாளி வர்க்கம், பெண்கள் மீதான ஒடுக்குமுறை பிரச்சனைகளில் தலையீட்டை வலுப்படுத்த வேண்டும். அவர்களை தொழிலாளி வர்க்க அரசியலின் பால் ஈர்க்க வேண்டும். பெண்கள் இயக்கங்களும், பெண்கள் மத்தியில் தொழிலாளி வர்க்க அரசியல் கருத்துக்களைக் கொண்டு போக வேண்டும். இதற்கு பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் வர்க்க பரிமாணத்தைப் பற்றிய சரியான புரிதல் அத்தியாவசியமானது.

ஆதாரம்

  1. Marxism and the Emancipation of Women –  Ella Rule
  2. குடும்பம் – தனிச்சொத்து – அரசு ஆகியவற்றின் தோற்றம் – எங்கல்ஸ்