விவசாயிகள் முன்பு போல் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்ல, சமூகத்தின் மிகவும் ‘முன்னேறிய’ பிரிவான ஏகபோக முதலாளிகளையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

விவசாயிகள் முன்பு போல் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்ல, சமூகத்தின் மிகவும் ‘முன்னேறிய’ பிரிவான ஏகபோக முதலாளிகளையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.
ஏகாதிபத்தியமானது, உலகின் அனைத்து உணவு வளங்களையும்,ஆதார வளங்களையும் வளைத்துப்போட விரும்புவதைப் போலவே, கச்சா எண்ணை வளங்களை கட்டுப்படுத்த விரும்புவதைப் போலவே, உலகம் முழுவதும், நிலப் பயன்பாட்டின் முறைகளைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது. குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் இதைச் செய்ய விரும்புகிறது.
கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு செலவிடப்பட்ட பணத்தை மொத்தமாக விரயம் செய்யும் வகையில், ஒரு கணக்கெடுப்பு விபரங்கள் முற்றிலுமாக நசுக்கப்படுவது இதுவே முதல் முறை. தான் உருவாக்கி வைத்திருக்கும் ‘அச்சே தின்’ என்ற மாயை அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, தேசத்தின் இத்தனை வளங்களை விரயம் செய்ய இந்த அரசு துணிகிறது என்றால், இது இந்த அரசாங்கம் கொண்டிருக்கும் பிம்பப் போதையின் உச்சத்தைக் காட்டுகிறது.
உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் பிழிந்தெடுக்கப்படுகின்றனர். ஆனாலும், நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ், நடுத்தர வர்க்கத்தினர் என்ற ஒரு பிரிவினர் உருவாவதும், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் ஓரளவு நல்லநிலையில் இருப்பது என்பதும் ஒரு சில மூன்றாம் உலக நாடுகளில் நடக்கின்றது. இதை முன்னிலைப்படுத்தி, மூன்றாம் உலக நாடுகளில் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் காரணமாக செழிப்பான நிலையே இருக்கிறது என்பது போன்ற ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது.
இந்த வரிலக்கு சிறு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால், அதனால் முதலீடுகள் உயர்ந்திருக்ககூடும். ஏனென்றால், இந்நிறுவனங்கள் பெரும்பாலும் நிதியை பொறுத்து செயல்படுபவை கட்டுப்படுபவை. மாறாக பெருநிறுவனங்கள் சந்தையில் நிலவும் தேவையைப் பொறுத்து செயல்படுபவை
சிறுஉற்பத்தியில் பங்கெடுக்கும் ஒரு பிரிவினரின், குறிப்பாக, பாரம்பரியமாக தொழிலாளர்கள் அனுபவித்துவரும் சில வழக்கமான உரிமைகளும் சேர்த்தே பறிக்கப்படுகின்றன. முதலாளித்துவத்தால் அவர்களது கோரிக்கைகளும் எப்போதுமே கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன.
சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் தொடருகிற காலம் வரை, மேலும் உலக மூலதன பரவலின் வலையில் நாடுகள் சிக்கியுள்ள வரையில், நெருக்கடி தொடரும் என்பது மட்டுமின்றி அதை சமாளிக்க அமைப்பின் வரையறைக்குள் நின்று எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் நெருக்கடியை தீவீரப்படுத்தவே செய்யும்.
மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஏகாதிபத்திய முயற்சிகளை எவ்விதத்திலும் விட்டு விடாமல், அங்கு நேரடியாக செயல்படுவதி லிருந்து படிப்படியாக அமெரிக்கா விலகி வரு கிறது என்பதாகும். இதன் காரணமாக, லத்தீன் அமெரிக்கா மீது தற்போது அமெரிக்காவால் கவனம் செலுத்த முடிகிறது.
மரணதண்டனையின் மீது சோசலிசம் முன்வைக்கும் ஆட்சேபனை என்பது 'சமூகப் பொறுப்பு' (அதாவது ஒரு தனி நபரின் செயலானது, ஒவ்வொரு தனி நபருக்கும் அமைந்த சமூக நிலைமைகளினால் ஏற்படுகிறது - குற்றத்திற்கான தனிப் பொறுப்பை ஏற்கிறார் எனவே அவரின் உயிரை மட்டும் எடுப்பது சரியல்ல) என்ற வரையறைக்குள் நிற்பதல்ல அல்லது அது 'மனித நேயத்தை' (ஆயுதமற்ற எந்த உதவியுமற்ற ஒரு தனிமனிதனை ரத்தம் சொட்டச் சொட்ட படுகொலை செய்வது, அதுவும் ஒரு அரசே அதனை மேற்கொள்வது 'குற்றவாளியின்' நடவடிக்கையிலிருந்து …
“புரட்சி எதார்த்தம்” என்ற லெனின் கண்ணோட்டம் சரியான புரட்சிக்கான நடைமுறையையும், கோட்பாட்டையும் உருவாக்க அடித்தளமிட்டது.