பெரியார்
-
வைக்கம் 100 : போராட்டக் களம் தரும் பாடங்கள் !
போராட்டம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த காந்தியாரும் கூட வைக்கம் மகாதேவர் ஆலையத்தை நிர்வகித்த இண்டம்துருத்தி மனைக்கு உள்ளே அனுமதிக்கப்படாத செயலும் நடந்தேறியது. ஆலையத்தைச் சுற்றிலும் இருந்த பொது வழியை அனைவரும் பயன்படுத்த உரிமை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. காந்தியாரை அனுமதிக்க மறுத்து அவமதித்த அந்த மனை தற்போது ‘கள் இறக்கும் தொழிலாளர்களுடைய சங்கத்தின்’ அலுவலகமாக செயல்படுகிறது. வரலாறானது முன்னோக்கியே நகரும் என்பதற்கான முன்னுதாரணம் இது. Continue reading
-
சோவியத் புரட்சியும் தமிழகமும்
நவம்பர் புரட்சியும், சோவியத் இலக்கியங்களும், சோவியத் மக்களும் அரசும் சாதித்த சாதனைகள் தமிழக இலக்கியப் பரப்பில் பெரும் செல்வாக்கு செலுத்தின. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதுகிறார்: ‘இரஷ்ய ஆட்சி பொதுமக்கள் ஆட்சி. பொதுவுடமை ஆட்சி. அதனைச் சர்வாதிகாரம் என்பது தவறு. இரஷ்யர்கள் கூட்டாக உழைக்கிறார்கள். உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள். தம்மைத் தாமே ஆண்டு கொள்கிறார்கள். அதற்கேற்ற சமூக அமைப்பை அமைத்து அதன் வழியிலே செல்கின்றார்கள். அங்கே இரப்பாரும் இல்லை. புரப்பாரும் இல்லை. ஆண்டியும் இல்லை. Continue reading
-
பெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்
அவர் பார்வையில் பிராமணரல்லாதார் என்பவர் கலாச்சார அடிப்படையில் பிராமணர்களால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள்; பொருளாதார, அறிவுசார் வளங்கள் பெற தடுக்கப்பட்டவர்கள் என்பதேயாகும். சுயமரியாதையுடன், கண்ணியத்துடன் கூடிய ஒரு மனிதனாக மீண்டெழ இவையே உதவும். பிராமணீயம் பிராமணரல்லாதார் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றின் உதவியுடன் தத்துவார்த்த அடிப்படையில் சாதி அமைப்பை ஆதரிக்கவும், நிலை நிறுத்தவும் உதவுகிறது. Continue reading
-
தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – மதுக்கூர் ராமலிங்கம்
சமூக சீர்த்திருத்தம் என்பது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சாதியம், பெண்ணடிமைத் தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை அகற்றி முற்போக்கு குணாம்சம் கொண்டதாக மாற்றுவதாகும். சமூக சீர்திருத்தம் என்பதன் அடித்தளம் பொருளியல் துறையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே அமைகிறது. Continue reading
-
இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்று கால கட்டங்கள்…
மறுமலர்ச்சி என்பது சமூக சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் மதிப்புகளில் மாற்றத்தை விளைவிக்க கூடியது. மனிதம் குறித்து புது விளக்கம் உருவாக்குவது. புதிய மனிதன் தோன்றினான். இந்த புதிய மனிதன் கலாச்சார படைப்பாக்கத்திற்கு புத்துயிர் அளித்தான். இசை, இயல், நாடகம், சிற்பம், ஓவியம் என அனைத்திலும் புதிய கருத்துகள் உருவாயின. Continue reading
-
தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் !
திராவிட இயக்கம் மற்றும் அதன் கருத்தியல் மரபை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து விவாதம் நடத்துவது தமிழக சமூக அரசியல் சூழலில் அவசியமான ஒன்றாகும். துவக்ககால சமூக நீதி இயக்கத்தின் ஜனநாயக மரபினை மீட்டெடுக்க வேண்டும், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளின் முதலாளித்துவ முகத்தையும், பிற்போக்கான சமூகப் பார்வையையும், சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். Continue reading
-
ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம்!
தமிழ்ச் சூழலில் பெண்ணியம் வலுப்பெற்றிருக்கின்ற காலம் இது. படைப்பு ரீதியாகவும், அமைப்புகள் வாயிலாகவும் பெண்ணிய வாதிகள் தொடர்ந்து இயங்கி வந்தது பெண்ணியக் கோட்பாடுகளை வலுவாக நிறுவிக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. பெண் விடுதலை குறித்து உரத்த குரல் எழுப்பத் தேவையுள்ள மாநிலமாகவே தமிழகம் இருந்து வந்திருக்கிறது. எல்லோரும் பெண்ணியம் குறித்து கதைக்க வந்தது துரதிர்ஷ்டவசமானதும் அன்று. கற்பனைப் புராண காலத்தும் அதன் தேவை இருந்திருக்கிறது. சங்க காலத்திலும், பெண்ணியக் குரல்கள் ஒலித்துள்ளன. உலகம் இத்தனை நவீன மயமாக்கப்பட்ட… Continue reading
-
பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்
தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வரும் எவரிடமும் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இல்லை என்று அடித்துக் கூறியிருப்பார்கள். இது பெரியார் வாழ்ந்த மண். Continue reading