தமிழகத்தில் சோவியத் புரட்சியின் தாக்கம்

– இரா.சிசுபாலன்

மகத்தான நவம்பர் புரட்சி மனிதகுல வரலாற் றில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. சோசலிசப் புரட்சி இயக்கத்தில் புதிய கட்டம் துவங்கியது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மக்கள் ஜனநாயகப் புரட்சிகள், மகத்தான சீனப்புரட்சி, வியட்நாம், கியூபப்புரட்சிகள், ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப்புரட்சிகள் மகத்தான வெற்றி பெற நவம்பர் புரட்சியே ஆதர்ச மாய் விளங்கியது.

இந்திய விடுதலை இயக்கம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த சமயத்தில் நவம்பர் புரட்சி இந்தியப் புரட்சியாளர்கள் மீது புதிய வெளிச் சத்தைப் பாய்ச்சியது. அவர்கள் இந்திய விடுதலையை வெறும் அரசியல் விடுதலையாக மட்டுமல்லா மல், அது சமூகப் பொருளாதார விடுதலையாக மட்டுமல்லாமல், அது சமூகப் பொருளாதார விடுதலையாகவும் அமையவேண்டும் என்ற புதிய கண்ணோட்டத்தைப் பெற்றனர். தமிழகத்தில் நவம்பர் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரஷ்யப்புரட்சியை யுகப்புரட்சி என வரவேற்ற மகாகவி பாரதி, முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடைமை, ஒப்பில்லாத சமுதாயம் உலகிற்கொரு புதுமை எனப் பாடி னார். புரட்சி, பொதுவுடைமை ஆகிய கருத்து களைத் தமிழகத்தில் முதன்முதலில் விதைத்தவர் மகாகவியே ஆவார். மேலும், குடிமக்கள் சொன்ன படி குடிவாழ்வு, மேன்மையுறக் குடிமை நீதி என சோசலிசத்தைப் புரிந்து கொண்டு இந்தியா விலும் அத்தகைய இலட்சியம் ஈடேற வேண்டும் என்றார். சோசலிசம் என மேலை நாட்டினர் குறிப்பிடுவது என்னவென்று இங்குத் தெளி வாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. எனினும் மேலை நாட்டுக்கும் சரி, கீழை நாட்டுக்கும் சரி கவுரவமான வாழ்க்கை நடத்து வதற்கு ஒரே மார்க்கம்தான் உள்ளது. உலகைப் பொது வுடைமையாக்கி, அதில் சகத் தொழிலாளிகளாகவும், கூட்டுப் பங்காளிகளாகவும் வாழ்வதே அந்த மார்க்க மாகும் என 1925ம் ஆண்டு The Coming Age என்ற ஆங்கிலக் கட்டுரையில் மகாகவி குறிப் பிட்டார். நவம்பர் புரட்சியைப் பற்றி இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் பாரதியார் முதலில் பாடினார்.

சமரச சன்மார்க்கமே தேச விடுதலையின் சாராம்சம் எனக் குறிப்பிட்ட தியாகி சுப்பிரமணிய சிவா தனது பாரதீய மதத்தின் இலட்சியமாக எல்லோருக்கும் பொதுவான சமரச சன்மார்க்க விடுதலையையே பிரகடனப்படுத்தினார். ஆன்மீக விடுதலை என்பதே தேச விடுதலைதான் என அவர் விளக்கினார். தன் மீதான வழக்குகளில் நீதிமன்றங்களில் அவர் அளித்த வாக்கு மூலங்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன. எப்பொழுது, எங்கே சுதந்தரம் நசுக்கப்படுகிறதோ, நசுக்கப்பட முயற்சி செய்யப் படுகிறதோ அப்பொழுது அங்கே என்னால் முடிந்த வன்மையுடன், எனது எதிர்ப்புக்குரலைக் கிளப்புவதும், சிரமப்பட்டு சுதந்தரம் ஒளிர்விட பாடுபடுவதும் எனது தர்மமாகும். உலகிலே அடிமைப்பட்டுக்கிடக்கும் சகல மக்களுக்கும் நியாயத்தை எடுத்துரைப்பது எனது தர்மமாகும் எனக் குறிப்பிட்டார்.

1919ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி சென்னையில் சுப்பிரமணிய சிவா ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வ.உ.சி, ஆங்கி லேயரின் கொடுங்கோன்மை, பலாத்காரம், நீதி யின்மை ஆகியவையே அவர்களுக்கு எதிரான சதி வேலைகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்றார். 1920 ஜூன் 21ல் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரசின் இருபத்தி ஆறாவது மாநில மாநாட்டில் வ.உ.சி இரண்டு தீர்மானங்களை முன்மொழிந்தார். அதில் ஒன்று தொழிலா ளர் சங்கங்களைப் பற்றியது. காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் தொழிற் சங்கங்களைத் துவக்க வேண்டுமெனவும், நியாயமான குறைந்தபட்ச ஊதியம், அளவான பணிநேரம், நிறைவான கண்ணியமிக்க குடியிருப்பு வசதி, முழுமையான தடையற்ற சங்கம் அமைக்கும் உரிமை வேண்டும் எனவும் அத்தீர்மானம் குறிப்பிட்டது. மேலும் சென்னை மாநில மேலவைக்குத் தொழிலாளர் களிடமிருந்து போதுமான பிரதிநிதிகள் தேர்ந் தெடுக்கப்பட வழிவகை செய்யப்பட வேண்டு மெனவும் அத்தீர்மானம் வலியுறுத்தியது.

1921ம் ஆண்டு மகாத்மா காந்திக்கு பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலர் பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார். ஊமையராய் உள்ள இந்த நாட்டின் லட்சக்கணக்கானவர்களின் நல்வாழ்வுக்கு தாங் கள் பாடுபடுவதால் நான் தங்களை ஆதரிக்கிறேன். துர்பாக்கிய நிலையிலுள்ள நமது மக்கள் தற்போ தைய அந்நிய அதிகார வர்க்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றால் மட்டும் போதாது; நமது சொந்த மக்களின் எதிர்கால அதிகாரவர்க்கத்தை எதிர்த்தும் போராடி முறியடித்தால்தான் சுதந்தர மும், மகிழ்ச்சியும் கிட்டும். நிலமும், ஆலைகளும் அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டு நாட்டில் தொழிலாளர் அனைவரின் நன்மைக்காகவும் பயன்படும் கம்யூனிசம் மட்டுமே நமது மக்களுக்கு விடுதலை கிட்டியதற்கான உண்மையான அளவு கோலாக இருக்க முடியும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1922ம் ஆண்டு கயாவில் நடை பெற்ற இந்திய தேசியக்காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற சிங்காரவேலர், உலகக் கம்யூனிஸ்டு களின் பிரதிநிதியாகத் தன்னைப் பிரகடனப்படுத் தினார். 1923ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நாட்டிலேயே முதன்முறையாக மே தினக் கொடியை ஏற்றி வைத்து தொழிலாளர் சுயராஜ்ஜியம் அமைய வேண்டும் என முழங் கினார். இக்கூட்டத்துக்கு வேலாயுதம் தலைமை தாங்கினார். தியாகி சுப்பிரமணிய சிவா, கிருஷ்ண சாமி சர்மா ஆகியோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் – விவசாயிகள் கட்சி ஒன்று அமைக்கப்பட்டு, அதன் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது; இந்திய தேசியக் காங்கிரஸ், நாடு என்பதை உடமை வார்க்கத்தின் உரிமையாகவே வரையறுக்கிறது. அவர்களது சுயராஜ்ய திட்டத்தில் தொழிலாளிகளும், ஏழை விவசாயிகளும் செல்வர்களின் நலனுக்குத் தன் னையே தியாகம் செய்து கொள்ள வேண்டும். இன்றைய ஐரோப்பிய எஜமானர்களுக்கு பதிலாக இந்திய அதிகார வர்க்கத்தை உருவாக்குவதே அவர்களது நோக்கமாக உள்ளது. முதலாளி களும், ஜமீன்தார்களும் காங்கிரசின் முதுகெலும் பாக உள்ளதால் தொழிலாளர்களுக்குக் காங் கிரஸ் ஒரு நன்மையும் செய்யாது. எனவே தொழி லாளர், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கக் கூடிய, வர்க்க உணர்வு கொண்ட அரசியல் கட்சி தேவைப்படுகிறது எனக் கட்சியின் கொள்கை அறிக்கை பிரகடனப்படுத்தியது. நாட்டின் அர சாட்சி முறை இந்துஸ்தான் பஞ்சாயத்து என்னும் கூட்டாட்சியாக இருக்கும். கிராம மட்டத்தி லிருந்து மத்திய அரசு மட்டம் வரை பஞ்சாயத் துக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மத்திய அரசின் மைய உறுப்பாக அனைத்துப் பஞ்சாயத்துகளின் காங்கிரஸ் அமைந்திருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை மக்கள் திருப்பி அழைத்துக் கொள்ள உரிமை உண்டு என அப்பிரகடனம் மேலும் குறிப்பிட்டது.

இக்கட்சியின் பத்திரிகைகளாக லேபர் -கிசான் கெசட் என்ற ஆங்கில இதழும், தொழிலாளி என்ற தமிழ் இதழும் வெளிவந்தன. இவற்றின் மூலம் கொள்கைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மாமேதை லெனின் மறைந்தபொழுது லேபர் – கிசான் கெசட் தனது அஞ்சலியில் பின்வரு மாறு குறிப்பிட்டது: அரசியல் சிந்தனையிலும், தத்துவத்திலும் லெனின் அவர்கள் தமது சொந்த நாட்டின் செய்த மகத்தான புரட்சி ஒரு வேளை அழிக்கப்படலாம் அல்லது சில சுயநல மனிதர் களால் துடைத்தெறியப்படலாம். ஆனால் அது மீண்டும் மீண்டும் தன்னைப் புனரமைத்துக் கொண்டு உலகை வெல்லும், உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளர்களுக்கு உன்னத வாழ்வளிக்கும் தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!

தமிழ்த்தென்றல் திரு.வி.க தேசபக்தன் (1917), நவசக்தி (1920) ஆகிய இதழ்களில் பொதுவு டைமைக் கருத்துகளை எழுதிவந்தார். முற்போக் காளராகத் திகழ்ந்த அவர், சன்மார்க்கமும், சமதர்மமும் கலக்க வேண்டும் என வலியுறுத் தினார். நவசக்தி-யின் இலட்சியங்களாகப் பின் வருவனவற்றைப் பட்டியலிட்டுள்ளார் (22.10.1920)

  1. மக்கள் சுதந்தரத்துக்கு அடிப்படையானது ஜனநாயக முறையாதலால் அதை நாடி உழைத்தல்.
  2. ஜனநாயக முறைக்கு அடிகோல வேண்டு வது தொழிலாளர் இயக்கமாதலால் அவ்வியக் கத்தை வளர்க்க முயலல்.
  3. தொழிலாளர் இயக்கத்தை வலுப்படுத்த வும், அவர்களது குறைகளை நிவர்த்திக்கவும், அவர்கள் வழி ஆட்சி முறையைத் திருப்பவும், அவர்கட்கெனத் தனியாக உழைக்கவும் தொழிற் கட்சியை ஓம்பவும், விவசாயிகளின் கஷ்டங்களைப் போக்க முயலவும் தொழிற்சாலைகளைப் பெருக்குதல்
  4. பெண்கள் நலனுக்குப் பாடுபடுதல்.
  5. தமிழ் மொழியையும், தமிழ்நாட்டுப்பழைய பழக்க வழக்கங்களையும் செப்பஞ்செய்தல்.
  6. தமிழ்நாட்டில் தோன்றியுள்ள சாதியப்பகை, வகுப்பு துவேசம் முதலியவற்றை ஒழித்துச் சகோதர நேயத்தை வளர்த்தல்.
  7. தேசத்துக்குத் தீங்கிழைக்கும் கட்சிகளைக் கண்டித்து, அக்கட்சித் தலைவர்களை நேசித்துத் தேச வளர்ச்சியை நாடும் கட்சியில் அவர்களைத் திருப்பமுயலல்.
  8. இந்தியாவில் பிறந்த அனைவரையும் இந்திய ராகக் கருதி, அவரை ஒரினமாக்கி, அவர் நலத்துக் காகத் தியாகம் செய்தல்.

சென்னை நகரில் ஆங்கிலேய முதலாளிக்குச் சொந்தமான பக்கிங்காம் கர்னாடிக் பஞ்சாலை யில் தொழிற்சங்கம் துவக்கப்பட்ட அனுபவத்தைத் தனது வாழ்க்கைக் குறிப்பில் திரு.வி.க பின்வரு மாறு குறிப்பிட்டுள்ளார்:

1918ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி ஜங்கார மாயம்மாள் பங்களாவில் வெங்கடேச குணாமிர் தவர்ஷினி சபை சார்பில் தொழிலாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றுது. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் கடந்து கூட்டத்தைச் சிறப்பித் தனர். தொழிலாளர் மைதானத்தை நிரப்பினர்; மதில்களை நிரப்பினர், மரங்களையும் நிரப்பினர்… யான் மேல் நாட்டில் தொழிலாளரியக்கம் தோன்றிய வரலாற்றையும், பொருளாதார விடுதலையின் மாண்பையும், தொழிலாளர் சங்கத்தின் அவசியத் தையும் விளக்கிப்பேசினேன். தொழிலாளர்களிடையே புத்துணர்ச்சி தோன்றித்ததும்பி வழிந்தது.. அன்று போலீஸ் நடவடிக்கை வெறுக்கத் தக்கதாக இருந்தது. தொழிலாளர் பொறுமை காத்தனர்.
1918ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று சென்னைத் தொழிலாளர் சங்கம் காணப்பட்டது. திரு.வாடியா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திவான் பகதூர் கேசவப் பிள்ளையும், யானும், வேறு சிலரும் உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டோம். தோழர்கள் இராமாஞ்சலு நாயுடுவும், செல்வபதி செட்டியாரும் காரியதரிசிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

1943ம் ஆண்டு நவம்பர் புரட்சி தினத்தன்று சோவியத் யூனியனுக்கு திரு.வி.க வாழ்த்துச் செய்தி அனுப்பினார்:
கவிஞர்களும், தத்துவஞானிகளும் நீண்டகாலமாகச் சுதந்தரச் சூரியன் என்று பாடியும், பேசியும் வந்தனர். அச்சூரியன் தோன்றி ஏறக்குறைய கால் நூற்றாண்டாகிறது. அச்சூரியன் எது? அதுவே சோவியத் யூனியன். அந்த யூனியனிடத்தில் எனது உள்ளம் தவழ்ந்து ஏறக்குறைய இருபது ஆண்டு களாகின்றன. 1921ம் ஆண்டு சென்னைத் தொழி லாளர் சங்கத் தலைவன் என்ற முறையில் எனக்கு முதன்முதல் சோவியத் கதிராகிய லெனின் படம் கிடைத்தது. அன்று முதல் லெனின் கொள்கை களை என்னால் இயன்றவரை பரப்பி வருகிறேன். உலகம் முழுவதும் சோவியத்மயமாக வேண்டு மென்று கனவு காண்பவருள் யானும் ஒருவன். அக்கனவு நினைவாய்ச் செயலாய் முகிழ்க்கும் காலம் அணித்தே நிற்றல் கண்டு மகிழ்வெய்து கிறேன். சோவியத் யூனியனை மூடப்பாசிச மேகங் கள் தவழ்கின்றன. அம்மேகங்கள் ஒழிந்ததும், உல கம் முழுவதும் சதந்தரச் சூரியனால் ஒளி காணும். அப்பொழுது உலகின் பீடைகள் போகும், கவன நீங்கும், எங்கும் பொதுமை தாணடவம் புரியும், அமைதி நிலவும். செஞ்சேனை வெற்றி உண்டாவ தாகுக என அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

1932ம் ஆண்டு தந்தை பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்கும், சோவியத் யூனியனுக்கும் பயணம் மேற்கொண்டார், அதன் விளைவாக சோசலிசக் கருத்துகள் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. வெளிநாட்டுப் பயணம் முடித்து வந்து தமிழகத் தில் சோசலிசத்தின் மேன்மையைப் பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அவ்வாண்டு டிசம்பரில் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் சுயமரியாதை சமதர்மக்கட்சி தொடங்கப்பட்டது. அக்கட்சியின் திட்டம் ஈரோடு திட்டம் என்ற அழைக்கப்பட்டது.அத்திட்டத்தின்முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  1. பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் துவத் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தி யாவைப் பூரண விடுதலை அடையச்செய்வது.
  2. எல்லா தேசக் கடன்களும் ரத்து.
    தொழிற்சாலை, ரயில்வே, வங்கிகள் தேசியமயம்.
    விவசாய நிலம், காடுகள்- மக்களின் உரிமை.
    விவசாயக் கடன் ரத்து.
  3. சுதேச சமஸ்தானங்களை ஒழித்து இந்தியா வைத் தொழிலாளர் விவசாயிகள் ஆட்சியின் கீழ் கொண்டு வருதல்.
  4. ஏழு மணி நேர வேலை நாள் இத்திட்டத்தை விளக்கி தந்தைபெரியார், ஜீவா, சிங்காரவேலர் ஆகியோர் தமிழகம் முழுவ தும் பட்டிதொட்டி எங்கும் பிரச்சாரம் மேற் கொண்டு வந்தனர்.

1935ம் ஆண்டு மாவீரன் பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற நுலை ஜீவா மொழிபெயர்க்க, அதனைக்குடியரசு இதழில் வெளியிட்டதால் ஜீவாவும், தந்தை பெரியாரின் சகோதரரும், விடுதலை இதழ் வெளியீட்டாளரு மான ஈ.வெ.கிருஷ்ணசாமியும், தந்தை பெரியாரும் கைது செய்யப்பட்டனர். குடியரசு (1925), சம தர்மம் (1934), பகுத்தறிவு (1935), புரட்சி (1934) சுநஎடிடவ (1928), விடுதலை (1934), உண்மை (1970) ஆகிய இதழ்களை ஈ.வெ.ரா நடத்தி வந்தார். மக்களிடம் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்து வமும் ஓங்கிவளரவேண்டும் என்ற கருத்தை இவ்விதழ்களில் வெளியிட்டு வந்தார். லெனினும் மதமும், பொதுவுடைமைத் தத்துவங்கள் ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.

இந்திய விடுதலைப் போராளிகள் பலர் ரஷ்யா வில் மேதை லெனினை நேரில் சந்தித்து இந்திய விடுதலைப்போராட்ட நிகழ்வுகள் குறித்து விவாதித்துள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.டி ஆச்சார்யாவும் ஒருவராவார். 1920ம் ஆண்டு அக்டோபர் 17 அன்ற தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கியவர் களில் எம்.பி.டி ஆச்சார்யாவும் ஒருவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

சோவியத் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சி வரலாறு

– ஜி.செல்வா

1903-ல் குறைந்த எண்ணிக்கையில் தலை மறைவு புரட்சிக் குழுக்களாக இருந்த இயக்கம், ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக 1912-ல் உருவெடுக்கிறது. 1917-ல் சோசலிசப் புரட்சியை தலைமைதாங்கி வழி நடத்த 3 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக பல்கிப் பெருகுகிறது. அதுதான் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்).

“புரட்சிகளின் நூற்றாண்டாக” இருபதாம் நூற்றாண்டை மாற்றி ரஷ்யாவில் புரட்சியை நடத்தி, சோசலிசப் பாதைக்கு அடித்தளமிட்டு, உலக மெல்லாம் பாட்டாளி வர்க்க கருத்துக்கள் வெடித்து எழும்ப வித்திட்டது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி. இதன் வரலாற்றை மிகக் கச்சிதமாக மார்க்சிய, லெனினிய சித்தாந்தப் பார்வையில், எழுதப்பட்ட புத்தகம்தான் சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு என்னும் நூல்.

நூல் உருவானப் பின்னணி
உலக மக்களுக்கு ஆதர்ஷ சக்தியாக சோசலி சப் பாதையில் சோவியத் யூனியன் முன்னேறிக் கொண்டிருந்த காலம். அப்போது சோசலிச கட்டு மானத்தைத் துரிதப்படுத்துவதில் ஏற்பட்ட அளவிடற்கரிய பிரச்சனைகள், சோவியத் யூனியன் எதிர்கொண்ட அபாயங்கள் மற்றும் சவால்களால் கட்சி ஊழியர்களுக்கு தத்துவார்த்த, அரசியல் பயிற்சி அளிப்பது முக்கியத்துவம் பெற்றது.

மார்க்சிய – லெனினிய அடிப்படை ஞானத்தில் தேர்ச்சி பெற்று அதனை சோசலிச கட்டுமானத் தில் முறையாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுவாக வலியுறுத்திய ஸ்டாலின் “அனைத்து நடைமுறைப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்குத் தேவையானது கட்சி ஊழியர் களுக்கு சித்தாந்தப் பயிற்சி அளிப்பதும் அவர் களை அரசியல் ரீதியில் பயிற்றுவித்து வலுப் படுத்துவதும்தான்” எனக் கருதினார்.
இதற்கு உதவியாய் கட்சி வரலாற்றை சொல்லித் தரும் வகையில் புத்தகம் எழுதுவதற்கு ஸ்டாலின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 1937ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அக்குழுவினர் எழுதியதை அரசியல் தலைமைக் குழு சரிபார்த்து கொடுத்தது. அதன் ஆலோசனைகளை ஏற்று அடுத்த நான்கு மாதங்களில் மேம்படுத்தப்பட்டு புத்தகமாக உருவெடுத்தது. இப்புத்தகம் 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 50 லட்சம் பிரதி கள் வெளியான பிராவ்தா கட்சி நாளிதழில் தொடராக வெளியிடப்படுகிறது. 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு என்ற நூலாக வெளியிடப்படுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

1939 மே மாதத்தில் இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு 3 மாதத்திற் குள் 70,000 பிரதிகள் விற்பனை ஆயின. அதே காலகட்டத்தில் 28 மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. 1953க்குள் ரஷ்யாவில் மட்டும் 301 முறை பதிப்பிக்கப்பட்டு 42,82,60,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

1947 ஜனவரி மாதம், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக இருந்த வரும், சமரன் பத்திரிகையின் ஆசியரிரும், ஜூலியஸ் பூசிக்கின் தூக்கு மேடைக் குறிப்பு நூலை தமிழில் மொழி பெயர்த்தவருமான எம்.இஸ்மத் பாஷாவால் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாவது பதிப்பு 1979 டிசம்பர் மாதம் ஸ்டா லின் நூற்றாண்டு விழாவின்போது சென்னை புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. நவம்பர் புரட்சி நூற்றாண்டினை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் இந்நூலினை மீண்டும் பதிப்பித்துள்ளது.

1883 முதல் 1937ஆம் ஆண்டு வரையிலான வரலாறு சுமார் 600 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நூலின் மையக் கருவாக விளங்கும் கருத்துக் களை இக்கட்டுரையில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

கரு உருமாறி வெளியேறும் காலக்கட்டம்
புரட்சியாளர் லெனின், அரசியல் தளத்திற்கு வருவதற்கு முன்பாகவே, ரஷ்ய தேசத்தில் உழைக் கும் மக்களுக்கான போராட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. ஜார் ஆட்சியின் கொடுமைக்கும்,சுரண்டலுக்கும் உள்ளாகியிருந்த மக்கள் வெடித்துக் கிளம்பினர்.அதே காலக் கட்டத்தில் ரஷ்யாவின் நகரங்களில் மட்டுமல்லா மல், கிராமங்களிலும் தொழிற்சாலைகள் அமைந் ததால் முதலாளித்துவம் வளர்ச்சியடையத் தொடங்கி இருந்தது.

1875-ல் தென் ரஷ்ய தொழிலாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது ஒன்பது மாதங் களுக்குள் ஆட்சியாளர்களால் நிர்மூலமாக்கப் படுகிறது. 1878-ல் வட ரஷ்ய தொழிலாளர் சங்கத்தை ஒரு தச்சுத் தொழிலாளியும், பிட்டரும் இணைந்து உருவாக்குகின்றனர். இப்படிப்பட்ட அமைப்புகள் உருவானது குறித்தும், உருவாக் கியவர்கள் குறித்தும் மிகச் சுவையான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 1881-1886 கால கட்டங்களில் மட்டும் 48 வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. இதில் 80 ஆயிரம் தொழிலாளர் கள் பங்கேற்றுள்ளனர்.
ரஷ்யாவில் முதல் மார்க்சிஸ்ட் குழு 1883-ல் ஜி.வி.பிளக்கனோவ் தலைமையில் ‘தொழிலாளர் விடுதலைக்குழு’ என்ற பெயரில் அமைக்கப் படுகிறது. இவ்வமைப்பு மார்க்ஸ், ஏங்கல்ஸ் நூல்களை ரஷ்ய மொழியில் வெளியிடுகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கை, கூலி உழைப்பும் மூலதன மும், கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் ஆகிய நூல்களை வெளிநாடுகளில் அச்சடித்து, ரஷ்ய நாட்டு தொழிலாளிகளிடம் விநியோகிக்கின்றனர்.
இக்காலக் கட்டத்தில் ‘நரோத்னிக்’ என்ற அமைப்பினரும், பிளக்கனோவும் நிகழ்த்திய சித்தாந்தப் போராட்டம் மிக முக்கியமானது. நரோத்னிக் என்ற ரஷ்ய வார்த்தையின் பொருள் மக்களிடம் செல்வது. புரட்சிகர எண்ணம் கொண்ட படித்த இளைஞர்கள் இந்த அமைப் பில் சேர ஆரம்பித்தனர். இவர்கள் ரஷ்யாவில் தற்செயலான நிகழ்வுப் போக்குதான் முதலாளித் துவம். எனவே, இது வளராது என்றும், கிராமப் புற விவசாயிகள் தான் புரட்சிகரமானவர்கள், தனிச்சிறப்பு வாய்ந்த தனி நபர்களால்தான் சரித்திரம் உருவாக்கப்படுகிறது என்றும் கருதினர்.

இவர்களுக்கு எதிராக பிளக்கனோவும், அவரைத் தொடர்ந்து லெனினும் நடத்திய உரையாடல், எழுத்துக்கள் மிக விரிவாக இந்நூலில் கொடுக் கப்பட்டுள்ளது. இதே பிளக்கனோவ், எதிர் காலத்தில் லெனினின் கருத்துக்கு எதிர்திசைக்கு சென்றார். இருந்தாலும் அவரது பங்களிப்பு இந்நூலில் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. பிளக்கனோவ் 1895-ல் வெளியிட்ட சரித்திரத்தின் ஒருமைவாத வளர்ச்சியைப் பற்றி என்ற புத்தகம் “ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் ஒரு தலைமுறை முழுவதையும் அறிவியல் பக்குவப் படுத்த பணிபுரிந்தது” என லெனின் கூறியுள்ளார்.

தத்துவ அடிப்படையில் தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கட்ட முதல் வேலையைச் செய்தது தொழிலாளர் விடுதலைக் குழு என லெனின் புகழாரம் சூட்டியுள்ளார். எனவேதான் அக்கால கட்டத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச் சியை கரு உருமாறி வெளியேறும் வளர்ச்சியில் இருந்ததாக லெனின் கூறினார்.

புரட்சிகர தத்துவம் ; புரட்சிகர இயக்கம்
புரட்சிகரமான தத்துவம் என்றால் என்ன? புரட்சிகரமான இயக்கம் என்றால் என்ன? தத்துவத்திற்கும்,நடைமுறைகளுக்குமான தொடர்பு எப்படி இருக்க வேண்டும்? இப்படி யான கேள்விகளுக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறும், அதில் லெனினும் அவர்தம் தோழர் களின் எழுத்துகளும், செயல்பாடுகளுமே நமக்கு விடையாக அமையும்.
லெனின் என்னும் மனிதரின் ஆளுமையும், அவர் புரட்சிகர இயக்கத்தில் இணைந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களும், மிக விரிவாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.
மார்க்சைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்த அசாதாரணமான விஷய ஞானம், அன்றைய ரஷ்யாவில் நிலவிய அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தைப் பொருத்திக் காண்பிப்பதில் அவருக்கிருந்த திறமை, தொழிலாளர்களின் லட்சியம், நிச்சயம் வெற்றிய டையும் என்பதில் அவருக்கிருந்த அசைக்க முடி யாத நம்பிக்கை, அமைப்புகளை உருவாக்குவதில் அவர் காட்டிய தனிச்சிறப்பு வாய்ந்த ஆற்றல் ஆகியவையெல்லாம் லெனினை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மார்க்சிஸ்டுகள் அனைவராலும் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட தலைவ ராக ஏற்கச் செய்தன.

1898-ல் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சி முதல் மாநாட்டில் 9 பேர் தான் பங்கு கொண் டனர். அப்போது லெனின் நாடு கடத்தப்பட்டு சைபீரியாவில் இருந்ததால் பங்கெடுக்க முடிய வில்லை.இம்மாநாட்டிலிருந்துதான் ரஷ்ய கம்யூ னிஸ்ட் கட்சியின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
நரோத்னிக்குள் மற்றும் பொருளாதாரவாதிகள் அதாவது பொருளாதார கோரிக்கைகளுக் காக நடத்தப்படும் போராட்டங்களில் மட்டும் தான் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டும் என விடாப்பிடியாக கருதும் குழுவினர். இவர்களின் கருத்தோட்டத்திற்கு எதிராக லெனின் நடத்திய சித்தாந்தப் போராட்டம் மிகத் தெளிவாக நூலில் சொல்லப்பட்டுள்ளது. லெனினது மிக முக்கியப் படைப்பான ரஷ்யாவில் முதலாளித் துவ வளர்ச்சி நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் கம்யூனிஸ்ட்களுக்கு மிக தேவையான ஒன்றே. வேதனை என்னவெனில் இதுவரை தமிழில் வெளிவரவில்லை.

லெனின் எழுதுகிறார் “உடனடியாக நிறை வேற்ற வேண்டிய வேலையை நம்முன் இன்று சரித்திரம் வைத்திருக்கிறது. இந்த உடனடியான வேலை மிகமிகப் புரட்சிகரமானது. மற்ற நாட்டு பாட்டாளிகளின் முன் நிற்கின்ற உடனடியான வேலைகள் யாவற்றையும் விட மிகவும் புரட்சி கரமான வேலையாகும். இந்த வேலையைச் செய்து முடித்தால், ஐரோப்பிய பிற்போக்கிற்கு மட்டுமல்லாமல் ஆசியாவின் பிற்போக்கிற்கும் மிகவும் வலுவான கோட்டையாக திகழும் ஜார் ஆட்சியை அழித்து ஒழிப்பதால், புரட்சிகரமான சர்வதேசப்பாட்டாளி வர்க்கத்துக்கு ரஷ்ய பாட்டாளி வர்க்கம் முன்னணிப்படையாக ஆகும்.” எவ்வளவு தீர்க்கமான, தெளிவான பார்வை. அதை நோக்கி லெனின் நடத்திய பயணம்தான் கற்க வேண்டிய பாடம்.

கட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என உலக கம்யூனிச இயக்கத்துக்கு வலுவான கருத் தியலை கொடுத்தது மட்டுமல்லாமல் நடைமுறைப் படுத்தியும் காண்பித்தவர் லெனின். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன செயல்பாடுகளை கொச்சை யாக, கேலியாக, விஷமத்தனமாக இன்றும் அதி கார வர்க்கத்தினர் எழுதியும், பேசியும் வருகின் றனர். சில நேரங்களில் இக்கருத்துக்கள் கம்யூனிஸ்ட் ஊழியர்களிடத்தும் செல்வாக்கு செலுத்தும்.

புரட்சி நடத்த வேண்டுமானால் புரட்சிகர இயக்கம், அதாவது கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும், எப்படி கட்ட வேண்டும் என்பதற்கு இந்நூலில் உள்ள விசயங்கள் இன்றும் நமக்கு வழிகாட்டும்.
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற கருத்தி யல் ரீதியான போராட்டம் இரண்டு குழுக்களா கப் பிளவுபட நேர்ந்தது. லெனினைப் பின்பற்றிய வர்கள் போல்ஷ்விக்குகள் (அதாவது பெரும் பான்மை உறுப்பினர்கள் என்ற அர்த்தத்தில்) என்றும், எண்ணிக்கையில் குறைவாக இருந்தவர் கள் மென்ஷ்விக்குகள் எனவும் அழைக்கப்பட்டனர்.

போல்ஷ்விக்குகளுக்கும், மென்ஷ்விக்குகளுக் கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணங்கள், அக்காலகட்டத்தில் லெனின் எழுதிய நூல்களிலிருந்து பல்வேறு கருத்துக்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டிற்குள் மட்டும் இக்கருத்துப் போராட்டத்தை லெனின் நடத்தவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்த சமூக ஜனநாயக கட்சிகளுடனும் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி வந்தார். ஏங்கெல்ஸ் காலமான பிறகு மேற்கு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள் சீரழிந்து போனதை போல்ஷ்விக்குகள் பார்த் தனர். ஏங்கெல்ஸ் காலத்தில் சமூகப் புரட்சிகர கட்சிகளாக இருந்த இயக்கங்கள் சமூக சீர்திருத் தக் கட்சிகளாக மாறி சீரழிந்து போயின. அவை ஒவ்வொன்றும் அமைப்பு ரீதியில், அந்தக் கட்சி யின் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதக் குழுக்களு டைய தொங்கு சதையாக ஏற்கனவே மாற்றப் பட்டு விட்டன. அத்தகைய கட்சிகளால் பாட்டாளி களுக்குப் பயன் எதுவும் இல்லை. தொழிலாளி வர்க்கத்தை அக்கட்சிகளால் வழிகாட்டி புரட் சியை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது என்பதை போல்ஷ்விக்குகள் தெளிவாக உணர்ந்தனர்.

உண்மையான மார்க்சியக் கட்சியை பெற்றி ருக்க விரும்புகிற எல்லோருக்கும் ஒரு உதாரண மாகத் திகழும் புதிய கட்சியை, போல்ஷ்விக் கட்சியைப் படைப்பதற்கு போல்ஷ்விக்குகள் விரும்பினார்கள். என்ன நேர்ந்தபோதிலும், எத்தகைய கஷ்டங்கள் வந்தபோதிலும் மனம் தளராமல் உறுதியுடன் விடாப்பிடியாக உழைத்து வந்தனர்.

இந்த வேலையில் லெனினுடைய நூல்கள் கட்சிக்கு மிகவும் அடிப்படையான – செல்நெறியை நிர்ணயிக்கும்படியான பங்கு வகித்தன. லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும்? என்ற நூல் தான் அதற்கு அவசியமான கருத்தையும், கண்ணோட்டத் தையும் கொடுத்து தயாரிப்பு செய்தது. லெனின் எழுதிய ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூல்தான் அத்தகைய கட்சிக்கு அமைப்பு ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய, ஜன நாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு நடைமுறை உத்திகள் என்ற புத்தகம்தான் அரசியல் ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய பொருள் முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும் என்ற புத்தகம் கட்சிக்குத் தத்துவ ரீதியான அடித்தளமாக இருந்தது.

இப்படியாக கட்டப்பட்ட கட்சி புரட்சிக்கு மட்டுமல்ல, புரட்சிக்குப் பின்னரும் சோசலிசப் பாதை நோக்கி, இயந்திர தொழில்மயமாக்கு வதற்கு சோவியத் ஆட்சி மேற்கொண்ட அனைத் திற்கும் உதவிகரமாக இருந்ததுதான் இந்நூலின் வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

புரட்சி… புரட்சி… புரட்சி…
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறே மூன்று புரட்சிகளின் வரலாறுதான். 1. 1905ஆம் ஆண்டு நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி 2. 1917 மார்ச்சில் நடைபெற்ற முதலாளித் துவ ஜனநாயகப் புரட்சி 3. 1917-ல் நடைபெற்ற நவம்பர் சோசலிஸ்ட் புரட்சி. எப்படி இத்தகைய புரட்சிகள் சாத்தியமாயின?
எங்கள் தேவை
துண்டுத் துணி அல்ல;
முழு ஆடை
பருக்கைகளல்ல
முழுச் சாப்பாடு
ஒரு வேலை மட்டுமல்ல;முழுத் தொழிற்சாலையும் எங்களுக்குத் தேவை.

நிலக்கரி, தாதுப்பொருள், உலோகக் கரி
அத்தனையும் எங்களுக்குத் தேவை
எல்லாவற்றுக்கும் மேலாக
நாட்டின் ஆளும் அதிகாரமும்
எங்களுக்குத் தேவை
நல்லது
இவ்வளவும் எங்களுக்குத் தேவை
ஆனால்
நீங்கள் கொடுப்பது என்ன?

இது பிரக்டின் கவிதை வரிகள். இக்கவிதை வரிகளின் சாராம்சம்தான் மூன்று புரட்சிகளின் போதும் ரஷ்ய தொழிலாளிகளுக்கும், விவசாயி களுக்கும் ஜார் ஆட்சியை நோக்கிய, அதிகார வர்க்கத்தை நோக்கிய உணர்வுமிக்க முழக்கங் களாக மாறின.

ரஷ்ய தேசத்தின் வளர்ச்சியில் ஒரு சரித்திரப் பூர்வமான கட்டம் முழுவதையும் முதல் ரஷ்யப் புரட்சி (1905) குறித்தது.
இப்புரட்சி மக்களின் பரம விரோதி ஜார் ஆட்சி என்றும், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குத் தலைமை தாங்குவதாக தொழிலாளி வர்க்கம் மட்டும்தான் இருக்க முடியும். ஊசலா டியபோதும் பாடுபடும் விவசாய வர்க்கம் தான் தொழிலாளி வர்க்கத்துடன் கூட்டுறவை ஏற்படுத் திக் கொள்ளத்தக்க முக்கியமான சக்தி என்பதும் நிரூபணமாயிற்று.

புரட்சியை குலைத்துக் கலைத்துவிடுவதை மென்ஷ்விக்குகள் தங்கள் பாதையாக கருதினர். எழுச்சியின் மூலம் ஜார் ஆட்சியை வீழ்த்துவதற் குப் பதில் அதை சீர்படுத்துவது எனக் கூறினர். இவ்விதம் சமரச சகதியில் மென்ஷ்விக்குகள் சிக் கினர். கட்சியிலும் தேசத்திலும் ஒரே ஒரு புரட்சி கரமான மார்க்சிஸ்ட் சக்தி, போல்ஷ்விக்கு கள்தான் என நிரூபிக்கப்பட்டது.

இப்புரட்சி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து 1908 முதல் 1912ஆம் ஆண்டு வரை மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் புரட்சிக் கான வேலை செய்வது கடினமானதாக மாறியது. இந்தச் சூழல்களுக்கு ஏற்றாற்போல் போல்ஷ் விக்குகள் நடைமுறை உத்திகளை மாற்றினர்.
சட்ட விரோதமான நடவடிக்கைகளையும், சட்டப்பூர்வமான செயல்பாடுகளையும் திறமை யாக இணைத்தனர். கட்சி விரோதமான பேர் வழிகளுக்கு எதிராக பிளக்கனோவ் உடன் சேர்ந்து தற்காலிக அணியை லெனின் அமைத் தார். இது கட்சிக்கு சாதகமாகவும், கட்சி விரோ திகளுக்கு பாதகமாகவும் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை.
இந்த நடைமுறை உத்தி எப்படி போல்ஷ் விக்குகளின் புரட்சிப் பணிக்கு சாத்தியமாயிற்று என்பதை நூலை வாசிக்கும்போது தெளிவாக உணரலாம். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பு இயக் கம், தொழிலாளர் தொகுதியில் வெற்றி பெறு தல், சங்கத் தேர்வுகளில் பெற்ற வாக்குகள் என தொடர்ந்தது போல்ஷ்விக்குகளின் வெற்றிப் பயணம்.

முதலாவது உலக யுத்தம் தொடங்குவதற்கு முன்பே, லெனின் தலைமையிலான போல்ஷ்விக் குகள் அதை உணர்ந்தனர். “யுத்தம் என்பது முதலாளித்துவத்துடன் இரண்டறக் கலந்து நிற்கிற தவிர்க்க முடியாத விளைவு” என்று லெனின் சுட்டிக் காட்டினார். யுத்தத்திற்கு எதிராக எத்தகைய நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டுமென லெனின் எழுதியும், பேசியும் வந்தார். சமாதானம் நிலவ வேண்டும் என்ற லட்சியத்துடன், பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடைய வேண்டும் என்ற லட்சியத்தைப் போல்ஷ்விக்குகள் இணைத்தனர். இந்த காலக்கட்டத்தில்தான் 1916-ல் லெனின் எழுதிய நூல் ஏகாதிபத்தியம் : முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம். இந்நூல் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு லெனின் வழங்கிய அறிவுக் கருகூலம். இதன் வாயிலாக மார்க்சியத்தை லெனின் வளர்த்தெடுத்த நிகழ்வும் நடந்தேறியது. அதேபோல் இந்த யுத்த காலத்தின்போது லெனின் எழுதிய எழுத்துக்கள், இப்புத்தகத்தில் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன.

ஏகாதிபத்தியம் குறித்து லெனின் ஆய்வு செய்த பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். தனியாக ஒரு தேசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், தனிதேசத்தில் சோசலி சம் வெற்றியடைய முடியாது என்றும், நாகரிகத் தில் முதிர்ந்த சகல தேசங்களிலும் ஒரே சமயத் தில்தான் அது வெற்றியடையும் என்றும் அக்காலத் திய மார்க்சிஸ்டுகள் சிலர் கருதினர். ஆனால், “லெனினோ ஏகாதிபத்திய முதலாளித்துவத் தைப் பற்றிய உண்மையான புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு பழைய கருத்துக்கு மாறாக புதிய கருத்தை வளர்த்தெடுத்தார். இதன் படி ஒரே சமயத்தில் எல்லா தேசங்களிலும் சோசலி சம் வெற்றியடைவது என்பது அசாத்தியம். தனியான ஒரு முதலாளித்துவ நாட்டில் சோசலிசம் வெற்றியடைவதும் சாத்தியமே!” என்றார்.

இதுதான் யுத்தம், சமாதானம், புரட்சி ஆகிய வற்றைப் பற்றிய பிரச்சனைகளில் போல்ஷ்விக் குகள் கைக்கொண்ட தத்துவமும், நடைமுறை உத்தியுமாகும். இந்தக் கொள்கைகளை கொண்டு தான் ரஷ்யாவில் நடைமுறை வேலைகளை போல்ஷ்விக்குகள் நிறைவேற்றினர்.
விளைவு போல்ஷ்விக்குகள் மார்ச் மாத இரண்டா வது புரட்சியில் ஜனநாயகப் புரட்சியில் வெற்றி பெற்றனர். இதை நூலின் வாயிலாக வாசிக்க வாசிக்க புரட்சிகர உணர்வுகளும், சிந்தனைகளும் பெருக்கெடுத்து வருவதை வாசகரால் உணர முடியும்.

இதைத் தொடர்ந்து தற்காலிக அரசாங்கம் அமைந்தவுடன், அதில் பங்கு பெறவும் மந்திரி பதவிகள் பெறவும் மென்ஷ்விக்குகள் உள்ளிட்ட குழுவினர் வாய் பிளந்து காத்துக் கிடக்க, லெனினோ சோசலிசப் புரட்சியை நோக்கி களத்தை விரிவு படுத்தினார்.

முதலாளித்துவ புரட்சிகர கட்டத்திலிருந்து சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு முன்னேறி செல்வதற்கு கட்சிக்கும், பாட்டாளி வர்க்கத்திற் கும் வழிகாட்டினார். அது ஏப்ரல் கொள்கை என்ற நூலின் வழியாக நடந்தேறியது. மாறும் சூழல்களை மிக லாவகமாக உணர்ந்து, மார்க்சிய பகுப்பாய்வில் வர்க்கங்களின் நிலை அறிந்து வழி காட்டிய லெனின் நமக்குப் பேராசானாகத் திகழ்கிறார்.

போல்ஷ்விக் கட்சியினால் வழிகாட்டப்பட்டு ஏழை விவசாயிகளுடன் கூட்டுறவு ஏற்படுத்திக் கொண்டு, ராணுவ வீரர்கள், கடற்படையினரின் ஆதரவையும் பெற்று, முதலாளிகளுடைய அதி காரத்தை தொழிலாளி வர்க்கம் அடியோடு வீழ்த்தியது. “நவம்பர் 7 சோசலிசப் புரட்சி” முதலாளித்துவத்தை தகர்த்து தவிடுபொடியாக் கியது.

சோசலிசத்தை நோக்கி…

நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து லெனின் தலைமையிலான புரட்சிகர அரசு மேற்கொண்ட பயணம், உலகக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு பாடம். பன்னாட்டு முதலாளித்துவ சக்திகளிடமிருந்தும், உள்நாட்டில் வெண் படைகளை சமாளித்தும், புரட்சி மீதான மக்களின் ஆசைகளை, வேண்டு கோளை நிறைவேற்ற லெனின் எடுத்த நிலைபாடு கள், செயல்பாடுகள் இந்நூலில் கொடுக்கப் பட்டுள்ளன.
இந்த சோசலிசப் பாதை எவ்வளவு கடுமை யாக இருந்திருக்கும் என்பதை சார்லஸ் பெட்டில் ஹெய்ம் என்ற பிரெஞ்சு பொருளாதார நிபுணரின் கணிப்பின் மூலம் அறிய முடிகிறது. “சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டுவதற்காகப் பணிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பேர் ஜார் மன்னனின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள். ஒரு புரட்சிகரமான சமு தாயத்தைக் கட்டியமைக்க எந்த வகையிலும் பொருத்தமற்றவர்கள். அதேவேளையில் சோவியத் பொருளாதாரம் போருக்கு முன்பிருந்த நிலையி லிருந்து 10 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இத்தகைய கடினமான சூழ்நிலையில் தங்களின் வாழ்க்கையை வேறு எங்காவது அமைத்துக்கொள்ள வாய்ப் புடைய படித்தவர்கள் உள்ளிட்ட 20 லட்சம் மக்கள் ரஷ்யாவிட்டு வெளியேறினர்.”

இப்படியான சூழல்களுக்கு மத்தியில் தான் சோசலிசத்திற்கான அடித்தளத்தை லெனின் நிறுவினார். லெனின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி வீறுநடை போட்டது. சோசலிசப் புரட்சியை கொச்சைப்படுத்தி ட்ராட்ஸ்கி எழுதிய எழுத்துக் களுக்கு எதிராக ஸ்டாலின் தத்துவார்த்த போரை உறுதியுடன் நடத்திச் சென்றார். அவர் எழுதிய லெனினியத்தின் அடிப்படைகள் என்ற புத்தகம் போல்ஷ்விக்குகள் கையில் சக்தி மிக்க ஆயுதமாக மாறியது.

இயந்திர தொழில்மயமாக்கலும், கூட்டுப் பண்ணை அமைப்பு முறைகளும் எவ்வாறு நிகழ்ந் தேறின. அதன் பலன்கள் எப்படி சோசலிசத்தை உயர்த்திப் படிக்க உதவிற்று போன்றவை மிக விரிவாக நூலில் படித்து அறிய முடியும்.

நிறைவாக
சோவியத் யூனியனின் உழைக்கும் மக்கள், சோசலிசத்திற்காக வெற்றிகரமாகப் போராடிய அனுபவமும், படிப்பினைகளும் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.
சோசலிசத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய போதனைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. மேலும், அப்போராட்டத்தின் ஊடே லெனினும், ஸ்டாலினும் அவற்றை எவ்வாறு மேலும் வளர்த்தெடுத்தனர் என்பதை விளக்குகிறது.
மார்க்சிய – லெனினியத்தின் அடிப்டைக் கருத்து களை அறிமுகப்படுத்தி, அவற்றை எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்தி வளர்த்தெடுப்பது, எவ்வாறு அவற்றுக்காகப் போராடுவது என்பதை எடுத்துக் காட்டுகிறது. சமுதாய வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவைத் தந்து நம்மை ஆயத்தமாக்குகிறது. உலகம் முழுவதும் கம்யூனி சத்தின் வெற்றி நிச்சயம் என்ற நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது” என மார்க்சிய அறிஞர் மாரிஸ் கார்ன்ஃபோர்த் மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி எனும் நூலில் இப்புத்தகத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டில் மக்கள் ஜனநாயக புரட்சியை மூல உத்தியாகக் கொண்டு சிபிஐ(எம்) செயல்பட்டு வருகிறது. இப்புரட்சியை நிறைவேற்றுவதற்கு புரட்சிகர கட்சியை கட்டுவது மிக அவசியம். நவம்பர் புரட்சி நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் புரட்சிகர கட்சியை கட்டுவதற்கு, புரட்சியை நடைமுறையில் சாத்தியப்படுத்திய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு மிகப்பெரும் உந்து சக்தியாக இருக்கும் என்பது நிச்சயம்.

மகத்தான சோவியத் புரட்சியின் பொருளாதார சாதனைகள்

அறிமுகம்
1917 அக்டோபர் மாதத்தில் (அன்றைய ரஷ்ய காலண்டர்படி அக்டோபர் 24-25, நவீன கணக்குப்படி நவம்பர் 6-7 ) மகத்தான ரஷ்ய புரட்சி வெற்றிபெற்று போல்ஷ்விக்கட்சியின் தலைமையில் ஒரு தொழிலாளி வர்க்க ஆட்சி அமைந்தது. இது மானுட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். பத்தொன்பதாம் நூற்றாண் டின் நடுப்பகுதியில் மார்க்சும் எங்கல்சும் உருவாக் கிய சோசலிச இயக்கம், தொடர்ந்து தத்துவமாக வும் மக்கள் இயக்கமாகவும் பெரும் தாக்கத்தை ஐரோப்பாவில் மட்டுமின்றி உலகு முழுவதும் ஏற்படுத்தியது. எனினும், மிகக் குறைந்த காலம் 1871 இல் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் பாரிஸ் கம்யூன் ஆட்சி நடத்தியது என்றாலும், ஒருநாட் டில், அதுவும் பெரிய நாட்டில் சோசலிச ஆட்சி அமைந்தது முதல் முறையாக நிகழ்ந்தது.

1917 ரஷ்யப் புரட்சியில் தான். தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கட்டிலில் அமர்வது என்பது சாதாரண விசயமல்ல. அதுவும், பின்தங்கிய ஜார் மன்னன் சாம்ராஜ்யத்தில் கடும் அடக்குமுறை களை நீண்ட நெடிய மக்கள் போராட்டங்கள் மூலம் தகர்த்து, இடையில் ஆட்சியை கைப்பற்றி தொழிலாளி வர்க்கத்தை வெளியேற்ற முனைந்த முதலாளித்துவ கட்சிகளின் சதிகளை முறியடித்து போல்ஷ்விக் புரட்சி வெற்றி பெற்றது என்பது ஆகப்பெரிய வரலாற்று நிகழ்வாகும். இதை ஏகாதிபத்தியநாடுகளின் முதலாளித்துவ அரசு களும் ஆளும் முதலாளி வர்க்கமும் நன்கு உணர்ந் திருந்தன. அவர்களுக்கு கதிகலங்கியது.

முதலாளிகளே இல்லாமல் ஒருநாட்டை ஆள முடியுமா? உற்பத்தி எப்படி நடக்கும்? வளர்ச்சி என்னாவது? யார் முதலீடு செய்வார்கள்? என் றெல்லாம் கூறி காலம்காலமாக தங்கள் சுரண்டலை நியாயப்படுத்தி ஆண்டுவந்தனர் முதலாளி வர்க் கத்தினர். எனவே, இனி அந்த வர்க்கம் தேவை யில்லை, எல்லா உற்பத்தியையும் செய்துவரும் தொழிலாளி வர்க்கம் ஆட்சியையும் பொறுப் பெடுத்துச் செய்யும், முதலாளிகள் தேவையில்லை என்ற பிரகடனமாக அமைந்த அக்டோபர் புரட்சி அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்ததில் வியப்பில்லை.

தொழிலாளி வர்க்க ஆட்சி அமைந்தவுடன் அதை முளையிலேயே கிள்ளியெறிய ஏகாதிபத் திய நாடுகள் கூட்டாக செயல்பட்டன. 1918 ஜூன் மாதத்திலேயே பதினான்கு நாடுகள் தங்கள் துருப்புகளை ரஷ்யாவிற்குள் அனுப்பி, உள் நாட்டு எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆதரவாக சோசலிச ஆட்சிக்கு எதிரான போரைத் துவக் கின. ஆனால், பெரும் இழப்புகளை சந்திக்க நேர்ந்த போதிலும், மக்களின் பேராதரவுடன் தொழி லாளி வர்க்க செம்படை அவர்களை விரட்டி அடித்தது. புரட்சிகர ஆட்சி உறுதிப்படுத்தப் பட்டது. எனினும், ஏகாதிபத்தியம் தனது ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை பலவடிவங்களில் தொடர்ந் தது. ரஷ்யா மீதும் 1923 இல் சோசலிச சோவியத் ஒன்றியம் உருவான பின்பு அதன் மீதும் மேலை நாடுகள் பொருளாதார பகிஷ்கரிப்பை நடை முறையாக்கினர். (இதையும் மீறி சில மேலை நாட்டுக் கம்பனிகள் சோவியத் ஒன்றியத்துடன் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்றனர் என்பதும் நடந்தது).

முதலாளிகள் இல்லாமல் ஒரு நாடு, பின்னர் பல குடியரசுகள் இணைந்த சோசலிச சோவியத் ஒன்றியம், வாழ முடியும், வளர முடியும் என்று பல ஆண்டுகளின் அனு பவம் காட்டிய பின்பும் பல முதலாளித்துவ அறிவு ஜீவிகள், குறிப்பாக பொருளியல் அறிஞர்கள், முதலாளிகளும் சந்தை யும், லாபநோக்கும் இல்லா மல் பொருளாதாரமே சாத்தியமில்லை என்றும் ஒட்டுமொத்த பொருளா தார திட்டமிடுதல் என்பது இயலாத காரியம் என்றும் சொல்லி வந்தனர். ஆனால், 70 ஆண்டு களுக்கும் மேலாக இருந்த சோவியத் சோசலிசம் பொருளாதார நிர்மாணத்தில் படைத்த பெரும் சாதனைகளை மேலைநாட்டு அறிஞர்களே மறுப்பதற்கில்லை. இவை பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

புரட்சியின் நுழைவாயிலில் பின்தங்கியிருந்த ரஷ்யா
கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யா, இதர வல்லரசுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கி இருந்தது. எழுத்தறிவு விகிதம் 30 கூட இல்லை. அச்சமயம் அமெரிக்காவின் எழுத்தறிவு விகிதம் 95 , ஜப்பானது 9 . அமெரிக்காவில் சரா சரி ஆயுட்காலம் 1900 இல் 47.3 ஆண்டுகளாக இருந்தது. ரஷ்யாவில் 1896 இல் 32 ஆண்டு கள் தான். இது போலவே, தொழில்துறை, வேளாண் உற்பத்தி, மின்சாரம், போக்குவரத்து என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், புரட்சி நிகழ்ந்த பொழுது ரஷ்யா மிகவும் பின் தங்கிய நாடாகவே இருந்தது. முதல் உலகப் போருக்கு முன்பு நிலைமை இவ்வளவு மோசம் என்றால், அதனை தொடர்ந்து வந்தது முதல் உலக யுத்தம். பின்னர் வந்தது, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் (1918-1921) எதிர்ப் புரட்சியாளர்களையும் ஏகாதி பத்திய துருப்புகளையும் எதிர்த்து புரட்சிகர அரசை காப்பாற்ற நடந்த உள்நாட்டுப்போர். இதன் பின்னர் யுத்தங்களின் விளைவுகளில் இருந்து நாட்டைமீட்க புதிய பொருளாதார கொள்கை கள் பின்பற்றப்பட்டன,
1924 ஜனவரியில் லெனின் மறைந்த பிறகு உட்கட்சி போராட்டங்கள் நிகழ்ந் தன. இவற்றின் இறுதியில் 1927 ஆம் ஆண்டு முடிவில் தான் ஸ்டா லின் தலைமையில் உறுதி யான கொள்கை நிலைப் பாடு அமைந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், சோவியத் ஒன்றியத்தின் ரஷ்யப் பகுதி 1928ஆம் ஆண்டில் தான் அது ஏற்கெனவே 1913 ஆம் ஆண்டில் கொண்டிருந்த உற்பத்தி நிலையை எட்டியது. வேறு வகையில் சொல்வ தென்றால் போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் சோவியத் ஒன்றிய அரசு ஐந்தாண்டு திட்டம் என்ற மாபெரும் – அது வரை வரலாற்றில் மேற் கொள்ளப் படாத புது முயற்சியை, பிரம்மாண்ட மான முயற்சியை துவக்கிய 1928 ஆம் ஆண்டில் மேலைநாடுகளுடன் ஒப்பிடுகையில் சோவியத் ஒன்றியம் மிகவும் பின் தங்கி இருந்தது.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளில் 1940 இல் தனது மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் நிறை வடையும் முன்பே, அமெரிக்காவிற்கு அடுத்தபடி தொழில் வளர்ச்சி பெற்ற நாடு என உலகில் இரண்டாம் இடத்தை சோவியத் ஒன்றியம் எட்டியது. திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி சாத்தியமே இல்லை, முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் இல்லையென்றால் சர்வநாசம் என்று கூறிவந்த பொருளியல் அறிஞர்களின், மேலைநாட்டு ஆளும் வர்க்கங்களின் கூற்றுகளை, சோவியத் ஒன்றியத்தின் மகத்தான சோஷலிச பொருளாதார வளர்ச்சி வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தது.

திட்டமிட்ட சோஷலிச வளர்ச்சி
1917 முதல் 1927 வரை ஏராளமான சவால்களை அக்டோபர் புரட்சி எதிர்கொண்டதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதனால் ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை முறியடித்து தனது ஆட்சியை உறுதிப்படுத்தி நவீன நிர்மாணத்தை 1928 இல் துவக்கிய பொழுது எத்தகைய உலகை அது எதிர்கொண்டது? அதன் புரட்சிகர அணிகள் உள்நாட்டுப்போரில் ஏராளமான தோழர்களை இழந்திருந்தன. ரஷ்ய புரட்சியை தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் முன்னேறியிருந்த ஐரோப் பிய நாடுகளில் சோஷலிச புரட்சிகள் வெடிக்கும் என்ற போல்ஷ்விக் நம்பிக்கை பொய்த்துப் போனது. ஜெர்மனியிலும் ஹங்கேரியிலும் புரட்சி கள் வெடித்தன. ஆனால் அவற்றை ஆளும் வர்க் கங்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து முறியடித் தன. இனி நீண்ட காலம் தனித்து நின்று சோஷலிச நிர்மாணத்தை மேற்கொண்டாக வேண்டும் எனற நிலைமையை அது சந்தித்தது. ஏகாதிபத்தியம் சோவியத் புரட்சியை தகர்க்க தொடர்ந்து பல ராணுவ முஸ்தீபுகளையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது. அண்டை ஜெர்மனியில், அதே போல் இத்தாலியில், எதிர்ப் புரட்சி சக்திகளின் வெற்றி பாசிச சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. ஜனநாயக சக்திகளுக்கு சிக்கலான கால கட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. இத்தகைய சூழலில், ட்ராட்ஸ்கி போன்றவர்கள் தனி ஒரு நாட்டில் சோசலிசம் அமைப்பது சாத்தியமல்ல என்ற கருத்தை முன்வைத்த பொழுது தனித்து நின்றும் சோஷலிச நிர்மாணத்தை வெற்றிகர மாக சாதிப்போம் என்று ஸ்டாலின் தலைமை யிலான போல்ஷ்விக்கட்சி முடிவெடுத்தது. இதற் கான முக்கிய ஆயுதமாக, அன்று வரை மானுட வரலாற்றில் கண்டிராத, ஒட்டு மொத்த பொருளா தார திட்டமிடுதல் என்ற அற்புதமான யுக்தியை கடைப்பிடித்தது. திட்டமிடுதல் பற்றியும் ஒவ்வொரு சோவியத் ஐந்தாண்டு திட்டம் பற்றியும் இக்கட்டு ரையில் விளக்குவதும் விவாதிப்பதும் சாத்திய மல்ல. எனினும் அதுபற்றிய சிறிய அறிமுகத்திற்கு செல்வோம்.

சோவியத் ஒன்றியத்தில் திட்டமிடுதல்
ரஷ்ய புரட்சிக்கு முன்பு ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடு வது என்பது நிகழவில்லை. முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த முடிவுகளை முதலாளிகள் எடுக்கின்றனர். நவீன முதலாளித்துவ வளர்ச்சியில் பெரும் கம்பனிகள் தங்கள் முதலீடுகள் எந்தெந்த துறை களில் செய்யப்படவேண்டும் என்பது போன்ற முடிவுகளை திட்டமிட்டு மேற்கொள்கிறார்கள். ஆனால் இவை குறிப்பிட்ட கம்பனி சார்ந்த திட்டமிடுதல் தான். ஒட்டு மொத்த நாட்டுப் பொருளாதாரத்திற்கு மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் என்பது முதலாளித்துவ அமைப் பில் சாத்தியமல்ல. ஒட்டுமொத்த திட்டமிடு தலுக்கும் அதனை அமலாக்கவும் ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பு வேண்டும். முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் அரசுகூட அத்தகைய அதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல. இதற்கு மிக அடிப்படையான காரணம், உற்பத்திக்கருவிகள் முதலாளிகளிடம் உள்ளன என்பதும் அவற்றை அவர்கள் விருப்பப்படி பயன்படுத்த அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு என்பதுமாகும். இந்தியா உள்ளிட்ட பல முதலாளித்துவ நாடுகளில் பொருளா தார திட்டங்கள் தீட்டப்பட்டன. இவை எல்லாமே அரசு முன்வைக்கும் பரிந்துரைகள் தான். ஏனெனில், முதலாளித்வ நாடுகளில் வளங்களை திரட்டி அரசுத்துறை முதலீடுகளை மேற்கொள்ள அரசு முயற்சிக்கலாம். ஆனால் தனியார் துறை முதலாளி களின் முதலீட்டு முடிவுகளை அரசு நிர்ணயிக் கவோ ஆணையிடவோ முடியாது. அக்டோபர் புரட்சி தொழில் துறைகள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கியது. எல்லா தொழில் நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததனால் அவர் களது முதலீடுகளின் அளவு, தன்மை உள்ளிட்ட அனைத்தையும் தனித்தனியாக முடிவு செய்யா மல் ஒட்டுமொத்த நாட்டு நலன் அடிப்படையில் துறைவாரியாக உற்பத்தி இலக்குகள் நிர்ணயித்து அவற்றை அடைய வழிமுறைகளையும் திட்ட மிட்டு அமலாக்குவது என்பது சாத்தியமாயிற்று. துவக்கத்தில், புரட்சி வெற்றி பெற்றவுடன் உள் நாட்டு எதிர்ப்புரட்சி சக்திகளும் ஏகாதிபத்திய நாடுகளும் புரட்சிக்கெதிராக போர் தொடுத்த நிலையில், நீண்ட தொலைநோக்குடன் திட்டமிட சாத்தியப்பாடு இல்லாமல் போனது. அரசின் அனைத்து பொருளாதார திட்டங்களும் கொள்கை களும் நடவடிக்கைகளும் எதிர்ப்புரட்சியாளர்கள் தொடுத்த போரில் அவர்களை தோற்கடிப்பதையே மையமாக கொண்டிருந்தன. இவ்வாறு 1918 முதல் 1921 வரையில் திட்டமிடுதல் என்பது போர் சார்ந்த விஷயமாகத்தான் இருந்தது. போர் கால பொது உடைமை கட்டம் என்று இந்த மூன்று ஆண்டுகள் அழைக்கப்படுகின்றன. துருப்புக ளுக்கு தேவையான உணவை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து உறுதிப்படுத்துவது என்பது முக்கிய திட்ட இலக்குகளில் ஒன்றாக இருந்தது. அதேபோல் போருக்கான தளவாடங் களை உற்பத்திசெய்வது போன்றவை முக்கியமாக இருந்தன. பின்னர் 1921 இல் போரின் பெரும் சேதங்களின் பின்புலத்தில் நாட்டின் மிகவும் பின்தங்கிய வளர்ச்சி நிலையை கணக்கில் கொண்டும், வேளாண் மற்றும் தொழில் மீட்சியை சாதிக்க வேண்டி இருந்தது. இதற்காக, தொழிலாளி வர்க் கத்தின் தலைமையிலான சோசலிச அரசு, தொழி லாளி – விவசாயி வர்க்கக் கூட்டணி யை வலுப் படுத்தும் தன்மையில் சில ஆண்டுகள் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் ஒரு வரம்பிற்கு உட்பட்டு தனியார் துறையையும் சந்தைசார் உறவுகளையும் அனுமதித்தது.

லெனின் 1924 ஜனவரியில் மறைந்தார். அதன் பின்பும் இக் கொள்கை சிறிதுகாலம் தொடர்ந்தது. ஆனால், இக்கொள்கைகள் செயல்படுத்தப்பட்டதனால் கிராமப்புறங்களில் முதலாளித்துவ சக்திகள் வலுப்பெற்று வந்தது சோஷலிச அமைப்பின் வளர்ச்சிக்கு தடையாக உருவெடுக்கும் அபாயம் உணரப்பட்டது. இவை 1927 வாக்கில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. ஓரளவு புரட்சி தன்னை நிலை நாட்டிக் கொண்டுவிட்டதால், நீண்ட கால நோக்குடன் மையப்பட்ட திட்டமிடுதலை நோக்கி செல்ல போல்ஷ்விக் கட்சியும் அரசும் முடி வெடுத்தன. சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டிய அடிப்படையிலும் நிலவிய பன்னாட்டு சூழலில் தொழில் வளர்ச்சியை பெரிதும் விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தை கணக்கில் கொண்டும் சோவியத் அரசின் முதல் ஐந்தாண்டு திட்டம் 1928 -1932 காலத்திற்கான துறைவாரி யான வளர்ச்சி இலக்குகளை உருவாக்கியது. அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் சோவியத் அரசு தீர்மானித்தது. 1928 முதல் 1985 தொடர்ந்து ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டு அமலாக்கப்பட்டன. இவை பல வெற்றிகளை சாதித்தன. காலப்போக்கில் பல காரணங்களால் திட்டங்களின் தன்மையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதில் நிறைகளும் குறைகளும் இருந்தன. இவை பற்றி தனியாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிடவேண்டும். சோஷலிச உடைமை உறவுகளின் கீழ் தான் முழு மையான ஒட்டுமொத்த திட்டமிடுதல் சாத்தியம். அத்தகைய திட்டமிடுதல் லாப நோக்கில் அல்ல. மக்களின் வாழ்க்கைத் தரம் பொருளாதாரம், பண்பாடு என அனைத்து அம்சங்களிலும் உயர வேண்டும் என்பதே அதன் நீண்டகால இலக்காக இருக்க முடியும். சோசலி சம் என்பது வெறும் பொருளாதார வளர்ச்சி பற்றிய விஷயம் அல்ல. அதற்கென. முழுமையான ஜனநாயகம், விரிவான மக்கள் பங்கேற்பு போன் றவை உள்ளிட்ட பல மாண்புகளும் விழுமியங்களும் உண்டு.

1928-1940: வியத்தகு வளர்ச்சி
முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் நிறை வடையும் முன்பே உலகில் இரண்டாம் தொழில் நாடானது சோவியத் ஒன்றியம் என்பதை குறிப் பிட்டோம். அதுவும், எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டது மட்டுமின்றி, பிற நாடுகளை சுரண்டாமல், தனது தொழிலாளி வர்க்கத்தின் நலன்களையும் காத்து இந்த வளர்ச்சி சாதிக்கப் பட்டது. 1928 முதல் 1937 வரையிலான காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் தொழில் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்தது. இதில், குறிப்பாக, 1932 முதல் 1937 வரையிலான ஐந்தாண்டு காலத் தில் இரட்டிப்பானது. (1937 முதல் 1955 வரை யிலான காலத்தில் தொழில் உற்பத்தி மீண்டும் இரண்டரை மடங்கு அதிகரித்தது என்ற செய் தியை இங்கு பதிவு செய்யவேண்டும். ஏனென் றால், 1928 முதல் 1937 வரையிலான காலத்தில் ஏற்பட்ட மாபெரும் தொழில் வளர்ச்சி பின்னர் இரண்டாம் உலகப்போரில் நாஜி படைகளின் தாக்குதலில் பெருமளவு அழிந்துபோனது. அதி லிருந்து மீண்டு, இரண்டாம் உலகப் போர் முடிந்து பத்து ஆண்டுகளில், தீவிரமடைந்த ஏகா திபத்திய எதிர்ப்பையும் சந்தித்து இவ்வளர்ச்சி நிகழ்ந்தது என்பது திட்டமிட்ட சோஷலிச பொருளாதார அமைப்பின் மறுக்க முடியாத விளைவும் சாதனையும் ஆகும். )
நிகழ்ந்தது தொழில் வளர்ச்சி மட்டுமல்ல. புரட்சிக்கு முன் விவசாயிகளும் விவசாயக் கூலி தொழிலாளிகளும் நிலப்பிரபுக்களின் கடும் சுரண்டலுக்கு இரையாக இருந்தனர். புரட்சி நிலப்பிரபுக்களின்ஆதிக்கத்தை அழித்தொழித் தது. எனினும் 1921 முதல் 1927 வரையிலான புதிய பொருளாதாரக் கொள்கைகள் காலத்தில் கிராமப் புற செல்வந்தர்களும் பணக்கார விவசாயிகளும் தங்களை ஓரளவு வலுப்படுத்திக் கொள்ள முடிந் தது. பின்னர் முதல் ஐந்தாண்டு திட்ட காலத்தில் சோஷலிச அமைப்பின் இலக்குகளுக்கு தடை யாக இப்பகுதியினர் மாறும் அபாயம் பற்றியும், தொழில் வளர்ச்சிக்கு வேளாண் துறையில் ஏற்பட வேண்டிய உற்பத்தி உறவு மாற்றங்கள் பற்றியும் போல்ஷ்விக் கட்சியில் நடந்த நீண்ட உட்கட்சி விவாதத்திற்குப்பின் கூட்டுப் பண்ணை கள் அமைக்கப்படவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இது அமலாக்கப்பட்ட முறை யில் சில தவறுகள் நிகழ்ந்த போதிலும், கூட்டுப் பண்ணைகளை அமைத்தது வேளாண் வளர்ச் சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருந்தது என்றும் வேளாண் துறையில் உற்பத்தி திறனை உயர்த்த உதவின என்றும் தான் ஆராய்ச் சிகள் நமக்கு தெரிவிக்கின்றன. கடுமையான இயற்கை பாதிப்புகளை தொடர்ந்து சோவியத் ஒன்றியம் 1930 களில் சந்தித்த போதிலும் அவற்றை சமாளிக்க முடிந்தது. வேளாண் உற்பத்தியில் நவீன முறை களும் இயந்திரங்களும் திட்டமிட்டு அரசு உதவி யுடனும் மான்யங்களுடனும் 1930 களில் (அதன் பின்பும்) விரிவாக கொண்டு செல்லப்பட்டன. வேளாண் உற்பத்தி திறன் சோவியத் ஒன்றியத் தில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இடை யிடையில் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் சோஷலிச அரசு தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடப் படவேண்டும்.

கல்வியில், ஆரோக்கியத்தில், மக்களின் வாழ்க் கைத் தரத்தில், நுகர்வு அளவில், பொதுவான கணிசமான முன்னேற்றம் இக்காலத்தில் நிகழ்ந் தது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் கல்வி பற்றிய ஓரிரு புள்ளி விவரங்களை மட்டும் இங்கு பார்ப்போம். 1917 இல் ரஷ்யாவில் பள்ளியில் படித்துக் கொண் டிருந்த மாணவர் எண்ணிக்கை 80 லட்சம். இது 1934 இல் 2 கோடியே 5 லட்சமாக அதிகரித் திருந்தது. 1926 இல் சோவியத் ஒன்றியத்தில் 9 முதல் 49 வயது என்ற வயது வரம்பில் இருந் தோரின் எழுத்தறிவு விகிதம் 56.6 . 1939 இல் இது 87.4 ஆக உயர்ந்திருந்தது. சோவியத் ஒன்றியத் தின் மத்திய ஆசிய குடியரசுகளான உஸ்பெகிஸ் தான் மற்றும் கஸக்ஸ்தான் நாடுகளில் எழுத்த றிவு விகிதங்கள் 1926 இல் முறையே 11.6 மற்றும் 25.2 என்று இருந்தன. 1939 இல் இவை 78.7 மற்றும் 83.6 என்று அதிகரித்திருந்தன. (1959 இல் சோவியத் ஒன்றியத்தில் எழுத்தறிவு விகிதம்: 98.5) முதலா ளித்துவம் செய்ய முடியாத காரியம் அனைவருக் கும் வேலை உத்தரவாதம் அரசியல் சாசனத்தில் (1936) பிரகடனமாயிற்று. வேலை யின்மை என்ற பெருங்கொடுமை – முதலாளித் துவ அமைப்பில் முதலாளிகளின் பேராயுதம் முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டது. 1936 சோவியத் அரசியல் சாசனம் மறுபுறம், உழைப்பு சாரா வருமானங்களை வர்க்க சுரண்டலை – தடைசெய்தது. பெண்களுக்கு பிரசவகால விடுப்பு வழங்கப்பட்டது. நாடு முழுவ தும் தாய் சேய் நல இல்லங்கள், நர்சரிகள், சிறார் பள்ளிகள் அமைக் கப்பட்டன.

இக்காலத்தில் (1928-1940) பாசிச தாக்குதல்களுக்கு எதிராக தயாராகும் பணி களை அரசு கவனிக்க வேண்டியிருந்த சூழலில் மக்களின் சராசரி நுகர்வு நான்கில் ஒரு பங்கு அதிகரித்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
இதே காலத்தில் உலக முதலாளித்துவ பொருளா தாரம் பெரும் மந்தத்தில் சிக்கியிருந்தது. சோவியத் சோசலிசத்தில் அனைவருக்கும் வேலை, தொடர்ந்து அதிகரித்து வந்த வாழ்க்கை தரம் என்ற நிலைமை சோசலிசத்தின் மேன்மையை பிரகடனப் படுத்தியது. கஷ்டங்களும் சவால்களும் இருந்தன. தவறுகள் நிகழ்ந்தன. அன்றைய சூழலில் எதிரிகளின் தாக்கு தலால் ஒரு முற்றுகை மனப்பான்மையுடன் செயல்படும் பலவீனம் இருந்தது. இதனால் பாட்டாளி வர்க்க ஜனநாயக நெறிமுறைகள் மீறப்பட்டன. எனினும், ஓரளவிற்கு, திட்டமிட்ட முறையில் , ஒட்டு மொத்த சமூக பங்கேற்புடன் சவால்கள் வெற்றிகரமாக எதிர் கொள்ளப்பட்டன. இலக்கு மறவாமல் செயல்பட்டு பொருளாதார வளர்ச்சியை சாதித்ததனால் தான் நாஜி படை களின் தாக்குதலையும் சோவியத் ஒன்றியத்தால் முறியடிக்க முடிந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் பனிப் போர் காலம் 1940களின் பத்து ஆண்டுகள் இரண் டாம் உலகப்போர் மற்றும் அதை தொடர்ந்து வந்த பிரச்னைகளில் கழிந்தது. இப்போரில் நாஜி படைகளை முறியடித்து உலகில் ஜனநாயகத்தை காப்பதில் பெரும் பங்காற்றிய சோவியத் சோசலி சம் கடும் இழப்புகளையும் சந்தித்தது. 250 லட்சம் மக்களின் இன்னுயிர்களை ஈந்தது மட்டுமின்றி, நாஜி தாக்குதலில் தனது தொழில் கூடங்களில் மூன்றில் இரண்டு பங்கு அழிக்கப்பட்டதையும், நகரங்களில் பெரும்பாலானவை தரை மட்டமாக் கப் பட்டதையும் சோஷலிச சோவியத் ஒன்றியம் எதிர் கொண்டது.

பாசிசத்தை வீழ்த்தி களைப்பாறும் முன்பே மிகப் பெரிய புதிய தலைவலி பனிப்போர் வடிவில் வந்தது. இரண்டாம் உலகப் போர்காலத்தில் வேறு வழியின்றி மேலை ஏகாதிபத்தியம் சோவியத் ஒன்றியத்துடன் ஒத்துழைக்க நேர்ந்தது. பல ஆண்டு கள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நாஜி அரசை வளர்த்து விட்ட மேலைநாடுகள் இரண்டாம் உலகப்போரில் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் போர் முடிந்தபின் சோவியத் ஒன்றியம் தான் முதல் பெரும் எதிரி என்ற நிலைபாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியம் தெளிவு படுத்தியது. அணுகுண்டை உருவாக்கி அதை ஜப்பான் மீது இருமுறை அமெரிக்கா ஏவியது என்பது சோவியத் செம்படைகள் பசிபிக் பகுதியில் நுழைவதை தடுக்கவும் முதலாளித்துவ உலகின் காவல்காரனாக தன்னை அறிவித்துக் கொள்ளவும் அமெரிக் காவிற்குப் பயன்பட்டது. ஆகவே மீண்டும் ஒரு கடும் சவாலை சோவியத் சோசலிசம் எதிர்கொண்டது. 1928 -1940 காலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத தொழில் வளர்ச்சியில் பெரும்பகுதி இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்ட பின்னணியில் மீண்டும் ஒரு நெடிய வளர்ச்சிப் பயணத்தை அது மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்பயணத்தை ஏகாதிபத்தியத்தின் கூர்மையான, இடைவிடாத தாக்குதல்கள் மத்தியில் செய்ய வேண்டியிருந்தது. அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த சவாலை யும் சோஷலிச சோவியத் ஒன்றியம் வெற்றி கரமாக சந்தித்தது. இதனை அடுத்தும் 1970களின் இறுதிவரையும் அதன்பின் சில ஆண்டுகளும் சோவியத் வளர்ச்சி தொடர்ந்தது.

இரண்டாம் உலகப்போர் துவங்கும் முன்பு 1937 இல் இருந்த நிலையை 100 என்று வைத்துக் கொண்டால், தலா தனி நபர் நுகர்வின் அளவு 1944 இல் 66 என சரிந்திருந்தது. ஆனால் 1950 இலேயே இது 135 ஆக உயர்ந்தது. 1955 இல் 159 என அதிகரித்தது. இது மிக வேகமான மீட்சி யாகும். 1950 இல் துவங்கி ஒரு மாபெரும் வீடு கட்டும் திட்டம் அமலுக்கு வந்தது. 1946-50 காலத் தில் மக்களின் வாழ்விடப் பரப்பளவு 12.71 கோடி சதுர கிலோமீட்டர் ஆக இருந்தது. இது 1961-66 இல் 39.44 கோடியாக உயர்ந்தது. சோவியத் மக் களின் உணவு பாரம்பர்ய ரொட்டி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை மையப்பட்டிருந்த நிலைமாறி , இறைச்சி, மீன், முட்டை, பால் சார்ந்த பொருட்கள் என்றாகியது. 1965 இல் ஆண்டுக்கு 38 கிலோ என்றிருந்த தலா இறைச்சி நுகர்வு 1985 இல் 61.7 ஆக அதிகரித்தது. இதே கால இடை வெளியில் நூறு குடும்பங்களில் ரெப்ரிஜி ரேட்டர் வைத்திருந்தவை பதினொன்று மட்டுமே என்ற நிலையில் இருந்து தொன்னூற்று ஒன்று என்ற நிலைக்கு உயர்ந்தது. 1965 இல் 100 குடும் பங்களில் 24 மட்டுமே தொலைக்காட்சி பெட்டிகள் வைத்திருந்தன.1985 இல் இது 97 ஆகியது. தொலை பேசிகளின் எண்ணிக்கை இதே காலத் தில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்தது. ஒட்டுமொத்த தேச வருமான வளர்ச்சி வேகம் எழுபதுகளின் பிற்பகுதியில் குறையத் துவங்கியது என்றாலும் பல துறைகளில் முன்னேற்றம் தொடர்ந் தது. மின்உற்பத்தி ஐம்பது சதம் அதிகரித்தது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் உற்பத்தி ஆறு மடங்கு அதிகரித்தது.

பொதுவாக கூறுவதானால், ஆயிரத்து தொள்ளா யிரத்து இருபதுகளின் பிற்பகுதியில் தான் சோஷ லிச நிர்மாணப்பணிகளை வேகப் படுத்த முடிந் தது. அதன் பின்பு ஏகாதிபத்தியமும் பாசிசமும் தொடுத்த தொடர் தாக்குதல்களை ஒருபுறம் எதிர்கொண்டே மறுபுறம் மகத்தான பொருளா தார வளர்ச்சியையும் சோவியத் சோசலிசம் சாதித்தது என்றால், இதன் மையப்புள்ளி சோஷ லிச உற்பத்தி உறவுகளும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மைய திட்ட அணுகுமுறை யும் என்பதை பதிவு செய்ய வேண்டும். பனிப் போர் காலத்திலும் சோஷலிச அமைப்பின் சாதனைகள் தொடர்ந்தன. சோஷலிச அரசியல் நிலைபாடு இதில் முக்கியத்வம் வாய்ந்தது. சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் முக்கியமாக ஒரு செய்தியைச் சொல்கிறது. அது என்ன? ஒரு திட்டமிட்ட, உற்பத்திக்கருவிகளின் பொது உடைமை அடிப்படையிலான பொருளாதார அமைப்பு இன்று அனைத்து உழைக்கும் மக்களும் விரும்பும் விஷயங்களை தர இயலும் என்பதை காட்டுகிறது. எல்லோருக்கும் வேலை, உத்தரவாதப்படுத்தப் பட்ட ஒய்வு ஊதியம், வரம்புக்கு உட்பட்ட பணி நேரம், போதுமான காலத்திற்கு ஊதியத்துட னான மகப்பேறு விடுப்பு , குறைந்த செலவில் மகிழ்வான சுற்றுலா விடுமுறைகள், உயர்கல்வி உட்பட இலவசமானதும் தரமானதுமான கல்வி, இலவச உடல், மன நல வசதிகள் மற்றும் சிகிச்சைகள், மிகக்குறைந்த செலவில் வீட்டு வசதி, மிகக் குறைந்த கட்டணத்தில் பொது போக்குவரத்து வசதிகள் , தரமான தாய்-சேய்நல ஏற்பாடுகள் என்றுஅவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். சோவியத் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு களும் குறைவு என்பதும் குறிப்பிடப்பட வேண் டும். சுருங்கச்சொன்னால், இன்றைய கேடுகெட்ட முதலாளித்துவ சீரழிவில் உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை ஒப்பிட்டுப்பார்த் தால், சோவியத் சோசலிசத்தின் சாதனைகளின் பிரம்மாண்டம் ஓரளவு புலப்படும்.

சோஷலிச பொருளாதார வளர்ச்சி அறிவியலை முன்னெடுத்துச் செல்ல உதவியது. அறிவியல் தொழில் நுட்ப சாதனைகளை சாத்தியமாக்கியது. விண்வெளி, ஆற்றல், மருத்துவம், பொறியியல் என்று பல துறைகளில் சோசலிச சோவியத் ஒன்றியம் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டி யுள்ளது. இது பற்றி தனியாக விவரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பிரச்னைகள்
எனினும் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் சோவியத் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து குன்றியது. இது நிகழ்ந்ததற்கு சோவியத் அமைப்பில் திட்டமிடலில் ஏற்பட்ட பலவீனங் கள் ஒருபங்கு வகித்தன. இதன் பின்புலத்தில் திருத்தல்வாதம் உள்ளிட்ட அரசியல் திரிபு களுக்கு பொறுப்பு உண்டு. மறுபுறம், ஏகாதிபத் தியம் எழுபதுகளின் நடுப்பகுதியில் இருந்து ஏற் பட்ட தனது பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள சோஷலிச நாடுகளின் மீதான குறிப் பாக சோவியத் ஒன்றியத்தின் மீதான – தாக்கு தலை தீவிரப் படுத்தியது. 1980 இல் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரீகன் தலைமை யிலான அமெரிக்க ஏகாதிபத்தியம் மீண்டும் ஒரு கடுமையான ஆயுதப் போட்டியை சோவியத் ஒன்றியத்தின் மீது திணித்தது. ஆயிரத்து தொள்ளா யிரத்து எழுபதுகளில் சில பதட்டக்குறைப்பு நடவடிக்கைகள் துவக்கப்பட்டிருந்தன. இதில் கேந்திர ஆயுதங்கள் கட்டுப்பாடு ஒப்பந்தம் 1 மற்றும் 2 என இரண்டு ஒப்பந்தங்கள் அமெரிக் காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1980 இல் நுழையும் தருணத்தில் ரீகன் தலைமை யிலான அமெரிக்க ஏகாதிபத்தியம் பதட்டக் குறைப்பு பாதையை நிராகரித்தது. மிக சக்தி வாய்ந்த பெர்ஷிங், க்ரூயிஸ் ஏவுகணைகளை அமெரிக்கா உற்பத்தி செய்து களத்தில் இறக் கியது. அடுத்து, கேந்திர பாதுகாப்பு முன்முயற்சி என்ற பொய் யான பெயரில், விண்வெளிக்கும் யுத்த முஸ்தீபு களை விரிவாக்கியது. இந்த நடவடிக்கைக்கு சரியான நட்சத்திர யுத்தம் என்ற பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகியது. இந்த அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண் டிய கட்டாயத்தில் சோவியத் ஒன்றியம் இருந்தது. சோவியத் மக்களின் உழைப்பால் உருவான வளங்களில் ஒரு கணிசமான பகுதி ஏகாதிபத்தி யம் திணித்த தற்காப்பு நடவடிக்கைகளுக்கு சென்றது.இதனால், மக்கள் தேவைகளை குறிப் பாக நுகர்வு தேவைகளை நிறைவு செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டன. சோவியத் ஒன்றியம் தகர்க்கப்படும் வரை கூட சோஷலிச திட்டமிட லால் மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும், ஏகாதிபத்தியத்தின் ராணுவ நிர்ப்பந்தங்கள் சோவியத் பொருளா தாரத்தை கடுமையாக பாதித்தன. இது மட்டு மல்ல. மேலை நாடுகள் வசம் இருந்த நவீன தொழில் நுட்பங்களை சோவியத் ஒன்றியம் பெறு வதை தடுக்கவும் பல நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தது. இரட்டைப்பயன்பாடு தொழில்நுட் பங்கள் அதாவது, ராணுவம் சாரா பயன்பாடு ராணுவ பயன்பாடு இரண்டையும் ஒருங்கே கொண்டவை முற்றிலுமாக மறுக்கப்பட்டன. இதற்கான வணிகத்தடை ஏற்பாடுகள் கறாராக அமலாக்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் சோவியத் ஒன்றியத்தின் தொழில் நுட்ப வளர்ச் சிக்கு பெரும் முட்டுக்கட்டைகளாய் அமைந்தன. மேலும், இத்தகைய பதட்டமான பன்னாட்டுச் சூழலில் தனது கேந்திரமான மூலப்பொருட்கள் உள்ளிட்ட அவசிய பொருட்களுக்கு இறக்கும தியை சார்ந்திருப்பது ஏகாதிபத்தியத்திற்கு சாதக மாகிவிடும், தனக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விடும் என்ற அபாயத்தை கணக்கில் கொண்டு இவற்றை அதிக செலவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நிலைக்கு சோவியத் ஒன்றியம் தள்ளப்பட்டது.

மேலும், 1970 களில் பல ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலை போராட்டங்களுக்குஆதரவு அளிப்பது, பல வளரும் நாடுகளுக்கு பொருளாதார மற்றும் இதர உதவிகள் அளிப்பது, எழுபதுகளின் இறுதி யிலும் எண்பதுகளின் பல ஆண்டுகளிலும் ஆப் கன் புரட்சிக்கு ஆதரவாக ராணுவ நடவடிக்கை களை எடுக்கவேண்டிய கட்டாயம் என்று பல சர்வதேச கடமைகளை சோவியத் ஒன்றியம் நிறைவேற்ற முனைந்தது. ஆப்கானிஸ்தானிலும், ஆப்பிரிக்காவிலும் இதர வளரும் நாடுகளிலும் சோவியத் சோசலிஸ ஒன்றியம் ஆற்றிய மகத் தான ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணி அதன் சர்வ தேசக் கடமையின் பகுதி என்றாலும், அதுவும் பொருளாதார ரீதியாக கூடுதல் சுமைகளை சோவியத் ஒன்றியத்திற்கு ஏற்படுத்தியது.

இப்படி ஏகாதிபத்திய தாக்குதல்கள், நெருக் கடிகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்கும் நேரத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் பெரும் பலவீனம் உருவாகி வளர்ந்து கொண்டிருந்தது. ஸ்டாலின் மறைவிற்குப்பின்பே, 1956 இல் நடந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாட்டில் வெளிப்பட்ட திருத் தல்வாத அணுகுமுறை சோவியத் கட்சிக்குள் படிப்படியாக வலுப்பெற்று வந்தது. ஏகாதிபத் தியம் பற்றியும் முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசம் நோக்கி பயணிக்கும் சகாப்தத்தின் தன்மை பற்றியும், இக்காலத்தில் பாட்டாளி வர்க்க தலைமையின், ஆட்சியின் அவசியம் பற்றியும் ஒரு சரியான நிலைபாட்டை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கத் தவறியது. சமாதான சக வாழ்வு, சமாதான பொருளாதாரப் போட்டி, சமாதானப் பாதையில் சோசலிசத்தை நோக்கிப் பயணம் என்ற திருத்தல்வாத மும்மூர்த்திகளை சோவியத்கட்சி அங்கீகரித்தது. சமாதான சக வாழ்வின் அவசியத்தை நாம் மறுதலிக்க முடியாது என்றாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாட்டில் இருந்து தான், ஏகாதிபத்தியம் பற்றிய எந்த பிரமைகளும் இல்லாமல் தான் அப் பிரச்சினை யைப் பார்க்க வேண்டியுள்ளது. சமாதான பொருளாதார போட்டியின் அடிப்படையில் சோசலிசம் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும் என்ற புரிதலும் பொருத்தமல்ல. ராணுவ தாக்கு தல்கள், நெருக்கடிகள், போர், வர்த்தக மற்றும் தொழில் நுட்ப தடைகள் உள்ளிட்டு எல்லா ஆயுதங்களையும் அது பயன்படுத்தும் என்பதே அக்டோபர் புரட்சியின் துவக்கத்தில் இருந்து நமது அனுபவம். அக்டோபர் புரட்சிக்குப் பின் உள்நாட்டில் எதிரி வர்க்கங்கள் பெருமளவு பலவீனப் படுத்தப்பட்டன என்பது உண்மை என்றாலும், ஆயிரத்து தொள்ளாயிரத்து எண் பதுகளின் துவக்கத்தில் முதலாளித்துவ உலகில் உருவான பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கப் பின்புலத்தில் சோவியத் ஒன்றியத்திற்குள் நிதி மூலதனம் ஊடுருவ பல வாய்ப்புகள் உருவாகின. வரலாற்று ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து பெரும் முன்னேற்றத்தை சாதிப்பதற்கு திட்டமிட்ட சோஷலிச உறவுகள் அடிப்படை யிலான வளர்ச்சிப் பாதை உதவியது. ஆனாலும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பன்னாட்டு சந்தைகள், பன்னாட்டு நிதித்துறை, பன்னாட்டு ஊடகதுறை ஆகிய அனைத்திலும் ஏகாதிபத் தியத்தின் ஆதிக்கம் நிலவி வந்த சூழலில், மேலை நாடுகளுடன் வர்த்தக, தொழில்நுட்ப, மற்றும் நிதிசார் உறவுகளை தவிர்க்கும் நிலையில் எண்ப துகளில் கூட சோவியத் ஒன்றியம் இல்லை. இத்தகைய வர்த்தக மற்றும் நிதி மூலதன போக்குவரத்து சோவியத் ஒன்றியத்திற்குள் ஊடுருவும் வாய்ப்பு களை ஏகாதிபத்தியத்திற்கு ஏற்படுத்திக் கொடுத் தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவிய திருத்தல்வாதப் பார்வை இந்த அபாயத்தை முழு மையாக உணர்ந்து எதிர்கொள்ள உதவவில்லை. கடந்த நூற்றாண்டின் எண்பதுகளின் பிற்பகுதி யில் சோஷலிச கொள்கைகள கோர்பச்சாவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி படிப்படியாக கைவிட்டது என்பது சோசலிசப் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நிறைவாக…
மானுட வரலாற்றில் ஒரு சமூகம் உணர்வு பூர்வமாக அறிவியல் அணுகுமுறையை ஏற்று பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டு சாதிக்க முனைந்தது சோவியத் புரட்சியில் தான் முதல் முதலாக நிகழ்ந்துள்ளது. வரலாற்றியல் பொருள் முதல் பார்வையில் இருந்து நோக்கினால், இந்த மகத்தான முயற்சி சாதகமான, பொருத்தமான சூழலில் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக முதலாளித்துவ வளர்ச்சியில் பெரிதும் பின்தங் கியிருந்த ஒரு நாட்டில் மேற்கொள்ளப்பட்டது. எனினும்கூட அப்புரட்சி என்றும் அழியாத சாதனைகளை செய்துள்ளது. சோவியத்புரட்சி யும் அதன் சோஷலிச நிர்மாணத்தில் கிடைத்த வெற்றிகளும் அனுபவங்களும் உன்னதமான பொது உடைமை சமூகம் என்ற மானுடத்தின் இலக்கு நோக்கிய பயணத்தின் ஆரம்ப அடிகள். மார்க்சும் எங்கல்சும் எதிர்பார்த்தபடி ஒரு வளர்ந்த முதலாளித்துவ நாட்டில் அனுபவமிக்க, முன்னேறிய தொழிலாளிவர்க்க தலைமையில் புரட்சி நடந்திருந்தால் அது எதிர்கொண்டிருக்கக் கூடிய சவால்களை விட பல நூறு மடங்கு கூடுதல் சவால்களை எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மகத்தான அக்டோபர் புரட்சி எதிர் கொண்டது. ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பன மாக, தேச விடுதலை இயக்கங்களின் உற்ற நண் பனாக, உலக அமைதியின் பாதுகாவலனாக, உழைப்பாளிகளின் வாளாகவும் கேடயமாகவும் பங்காற்றிய சோவியத் சோஷலிச அனுபவத்தின் ஆகப்பெரிய பங்கு, ஒரு நவீன பொருளாதார அமைப்பை உருவாக்கவும் வளர்க்கவும் ஒரு முதலாளி வர்க்கம் தேவையில்லை என்பதும், உழைப்பாளி மக்களே கூட்டுத் தலைமையின் மூலம் அதை சாதிக்க முடியும் என்பதுமாகும். வேலையின்மை, வறுமை, கல்லாமை, ஆரோக் கியமின்மை உள்ளிட்ட பல முதலாளித்துவக் கேடுகளை அழித்தொழித்த, சுரண்டல் அற்ற உலகத்தை நோக்கி பயணிக்க முனைந்த சோஷலிச அமைப்பின் முதல் அனுபவமான அகோட்பர் புரட்சியை என்றென்றும் நினைவில் நிறுத்து வோம். அதன் மிக முக்கிய படிப்பினை மானுடத் தின் எதிர்காலம் சோசலிசத்தை நோக்கிப் பயணிப் பதில் தான் மேம்படும் என்பதே. சோவியத் அனு பவமும் உலகளவில் தொடரும் முதலாளித்துவ நெருக்கடியும் மானுடம் எதிர்கொள்ளும் எந்த பிரச்னையையும் லாப வேட்டை அடிப்படையி லான முதலாளித்துவ அமைப்பால் தீர்வு காண முடியாது என்று மக்கள் அன்றாடம் கண்டு வருவதும் எதிர்காலத்தில் சோவியத் சோசலிசம் தரும் வெளிச்சத்தில் மானுடம் முன்னேறும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றன.

ரஷ்ய புரட்சியும் பெண்களும் …

சுரண்டல் சமூகத்தின் தளைகளிலிருந்து மக்களை விடுவிப்பது தான் புரட்சியின் நோக்கம் என்னும் போது, ரஷ்ய புரட்சியானது, சமூக ஒடுக்கு முறைக்கும் வர்க்க சுரண்டலுக்கும் ஆளான பெண்களின் வாழ்க்கையிலும், சமூக அந்தஸ்தி லும் எவ்விதத் தாக்கங்களை ஏற்படுத்தியது, குறிப்பாகப் பெண் விடுதலைக்கான பவுதீக சூழலை ஏற்படுத்தியதா, ஆணாதிக்கமும், வர்க்க சுரண்டலும் அமைப்பு ரீதியாக நிறுவனமய மாக்கப்பட்ட சூழலை மாற்ற என்ன நடவடிக்கை கள் எடுக்கப்பட்டன என்ற சில முக்கிய கேள்வி களுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது. தனியுடைமை, வர்க்க சுரண்டல், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக் கிடையான தொடர்பை எங்கல்ஸ் அவர்களின் ஆய்வு தெளிவாக எடுத்துரைக்கிறது. வரலாற்றில் முதல் வர்க்க முரண்பாடு, பாலினங்களுக்கிடை யான முரண்பாடு நிகழ்ந்ததுடன் ஒத்திசைந்து தோன்றியது என்கிறார் எங்கல்ஸ். இந்த மார்க் சிய கண்ணோட்டத்துடன் முதல் சோஷலிச சமூக அமைப்பில் நிகழ்ந்த மாற்றங்களைப் பார்க்க வேண்டும்.

முதலில் புரட்சிக்கான இயக்கத்தில், வெகுமக் கள் போராட்டங்களில் பெண்கள் பார்வை யாளர்களாக இருந்திருக்கவில்லை. தொழிலாளி வர்க்கப் பெண்களில் கணிசமானவர்கள் தலைமை தாங்குபவர்களாகவும், பங்கேற்பவர்களாகவும் இருந்தனர் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் கள் பங்கேற்பு இன்றி, புரட்சி நடந்தது என்றும், அவர்களின் கஷ்டங்கள் கண்டு மனம் இறங்கி மட்டுமே சோஷலிச சமூக அமைப்பு அவர்களுக் காக செயல்பட்டது என்றும் பார்த்துவிடக் கூடாது..

சம வாய்ப்புகளும் அவற்றுக்கான சூழல் உருவாக்கமும்:
உலகிலேயே முதன் முறையாக சட்டபூர்வமான அரசியல் ரீதியான சமத்துவம் பெண்களுக்கு சோஷலிச சமூக அமைப்பில் தான் அளிக்கப் பட்டது. 1917 துவங்கி 1927 வரை அடுக்கடுக்காக சட்டங்கள் இயற்றப் பட்டன. பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் அச்சாணி தனி உடைமை ஆதிக்கம் – முறிக்கப்பட்டது. சோஷலிச அரசு பொறுப்பேற்ற பின் அனைத்து குடிமக்களுக்கும் முன்னேற்றத்துக்கான சம வாய்ப்புகள் கொடுக்கப் பட்டன. சிவில் சர்வீஸ், தொழிற்சாலைகள், ராணுவம், கட்சி அமைப்பு என அனைத்திலும் பாலின பாகுபாடுகள் இன்றி வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்பட்டன. ஆனாலும், தோழர் லெனினும் இதர போல்ஷ்விக் கட்சி தலைவர் களும் சிந்தித்தனர் இந்த வாய்ப்புகளைப் பெண் கள் பயன்படுத்திக் கொள்ளும் சூழல் இருக்கிறதா என்று. சமையலும், குழந்தை பராமரிப்பும், துணி துவைத்தலும் பெண்ணைக் கட்டிப் போட்டு விடும் என்ற புரிதலின் பின்னணியில் தான் மலிவு விலை சமூக உணவகம், மலிவு விலை சமூக சலவையகம், அனைத்து வேலை தலங்களிலும் சிறந்த குழந்தை காப்பகம் என்ற ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன. சலிப்பூட்டும் வீட்டு வேலை களிலிருந்து விடுதலை கிடைக்காமல், பெண்கள் அரசியல் பொருளாதார சமத்துவத் தைப் பெற்று விடமுடியாது என்பதே சோஷலிச அரசின் கண்ணோட்டமாக இருந்தது. இக்கண் ணோட்டத்தின் அடிப்படையிலேயே, வீட்டு வேலைகள் தனிப்பட்ட பெண்ணின் அல்லது குடும்பத்தின் பொறுப்பு என்ற நிலையிலிருந்து மாறி சமூகமயமாகியது. குழந்தை பராமரிப்பும், அவர்களின் கல்வியும் பொது விவகாரமாக, அரசின் பொறுப்பாக மாறியது. இது மிகப்பெரிய மாற்றம். தோழர் லெனின் கீழ்க்கண்டவாறு கூறினார் பெண் முன்னேற்றத்துக்கான பல சட்டங்கள் வந்தாலும், அவள் வீட்டுக்கு அடிமை யாகவே கட்டுண்டு கிடக்கிறாள். வீட்டுப் பணி கள் அவளை நசுக்கி, நெரித்து மூச்சு திணற வைக் கின்றன. சமையலறையுடனும், குழந்தை பராமரிப் புடனும் அவள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக் கிறாள். எவ்வித பலனும் இல்லாத, காட்டுமிராண்டித் தனமான, சலிப்பூட்டும் வேலைகளில் அவளது உழைப்பு வீணாகிறது. இதிலிருந்து விடுதலையா வதன் மூலமே பெண் உண்மையான விடுதலையை அடைய முடியும். இதற்கான முழுமுதல் போராட்டத்தை அரசு அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பாட்டாளி வர்க்கம் செய்ய வேண்டும். தனிப் பட்ட குடும்ப உழைப்பு, பரந்து பட்ட சோஷலிச பொருளாதாரத்தின் பகுதியாக ஒட்டுமொத்த மாக மாற வேண்டும் இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குடும்ப வேலைகளில் கட்டுண்டு கிடந்து, சுய முன்னேற்றம் குறித்து சிந்திக்க வழியில்லாமல் தவித்த பெண்களின் தளைகளை தகர்க்க உதவின. தனிப்பட்ட பணிகள் சமூகமயமாக்கப்பட்டதன் மூலம், பெண்கள் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற வழி கிடைத்தது. 1927லேயே உயர்கல்வியில் 1/3 பங்கு பேர் மாணவிகளாக இருந்தனர். கிராமப்புற சோவியத்துகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 11 சதவீதமும், நகர சோவியத்துக்களில் 21.5 சதவீதமும் பெண் கள் என்ற நிலை ஏற்பட்டது. தொழிற்சங்க உறுப் பினர்களில் 25சதவிகிதம் பெண்கள்.

அனைத்துப் பெண்களுக்கும் வாக்குரிமை அளித்ததில் முன்னோடி:
வாக்குரிமையைப் பொறுத்த வரை, பெண் களின் வாக்குரிமைக்காக உலக அளவில் நீண்ட நெடிய இயக்கங்கள் முன்னமே நடந்து கொண் டிருந்தன. அதை முதன் முதலில் சாத்தியப்படுத் தியது ரஷ்ய புரட்சிக்குப் பின் ஏற்பட்ட சோஷலிச அரசாங்கமே. முதலாளித்துவ பெண்ணிய அமைப் புகள், சொத்துடைமை ஆண்களுக்கு வாக்குரிமை இருக்கும் போது, சொத்துடைமை பெண்களுக்கு ஏன் இருக்கக் கூடாது என்ற பிரச்சாரத்தை முன் னெடுத்தனர். பெண்கள் மத்தியில் சோஷலிச கருத்துகளை விதைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த பெண் கம்யூனிஸ்டுகள், அனைத்துப் பெண்களுக் குமான வாக்குரிமை என்பதற்கு அழுத்தம் கொடுத் தனர். அலெக்சாண்ட்ரா கொலந்தாய், கிளாரா ஜெட்கின் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர்.

1907ல் ஸ்டட்கார்ட்டில் நடந்த சோஷலிச அகிலத்தில் கிளாரா ஜெட்கின் கீழ்க்கண்டவாறு முழக்கமிட்டார்:
வாக்குரிமை என்பது முதலாளித்துவ வர்க்க பெண்களுக்குத் தடைகளை உடைக்க உதவும் என்பது உண்மையே. ஆனால் தொழிலாளி வர்க்க பெண்களைப் பொறுத்த வரை வாக்குரிமை யானது, சுரண்டல் மற்றும் வர்க்க ஒடுக்குமுறை யிலிருந்து மனித குலத்தை விடுவிப்பதற்கான போரில் ஒரு கருவியாகப் பயன்படும். பெண்களின் பிரச்னைகளுக்கு அடிப்படை தீர்வைத் தர வல்ல சோஷலிச சமூக அமைப்பை நிறுவுவதற்கு அரசி யல் அதிகாரம் தேவைப்படுகிறது. அதைக் கைப் பற்ற பாட்டாளி வர்க்கம் நடத்தும் யுத்தத்தில், ஒரு முன் தயாரிப்பாக சாதக சூழலை ஏற்படுத்த தொழிலாளி வர்க்க பெண்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி பெரும் பங்காற்ற முடியும். அனை வருக்கும் சிவில் உரிமைகளைப் பெற்றுத்தர முதலாளித்துவ வர்க்கப் பெண்கள் தம் வாக்குரிமை யைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதனால், வாக்குரிமைக்காக அவர்கள் நடத்தும் இயக்கத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. பொது எதிரியை எதிர்த்த போராட்டத்தில் தொழிலாளி வர்க்க பெண்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும். ஆனால் வர்க்க வேறுபாடின்றி ஆண்களை எதிர்த்து பெண்கள் நடத்தும் போராட்டத்தின் மூலம் வாக்குரிமை மற்றும் சிவில் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. மாறாக, சுரண்டப்படு பவர்கள் பாலின வேறுபாடு பார்க்காமல் ஒன்று படுவதும், சுரண்டும் வர்க்கத்தைப் பாலின வேறு பாடு பார்க்காமல் எதிர்த்து வர்க்கப் போரில் ஈடுபடுவதும் தான் பிரச்னைக்குத் தீர்வு காணும் வழியாகும்.

எதிர்கொண்ட சவால்கள்:
பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தை வர்க்க பிரச்னையுடன் இணைந்த பாலின பிரச் னையாக கம்யூனிஸ்டுகள் பார்த்தனர். இதற்கு மாறுபட்ட நிலை எடுத்த முதலாளித்துவ பெண்ணிய வாதிகளை ஒரு புறமும், தொழிலாளி வர்க்கத்தில் இருந்த ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை மறு புறமும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1911ல் ஜெர்மனியில் கிளாரா ஜெட்கினும், 1913ல் ரஷ் யாவில் கொலந்தாயும் நடத்திய உலக பெண்கள் தின நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றது மாற்றங்களுக்கான சூழலையும், மன நிலையையும் ஏற்படுத்தியது. தோழர் லெனின் அவர்களின் முன்முயற்சியில் 1914ல் பெண் தொழிலாளிகளுக்கான ஒரு பத்திரிகை பெண் தொழிலாளி (ரபோத்னித்சா) துவங்கப்பட்டது. போல்ஷ்விக் கட்சியின் மத்திய குழு, பெண்கள் பிரச்னைகளைப் பொது தளத்தில் விவாதிக்க என்று ஒரு தனியான குழுவை ஏற்படுத்தியது. இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, புரட்சிக்குப்பின், 1917-லேயே அனைவருக்கும் வாக்குரிமை என்பது சட்டபூர்வமாகியது. ஆஸ்தி ரேலியாவில் பெண்களுக்கு வாக்குரிமை 1902ல் கொடுக்கப்பட்டாலும், அது அனைவருக்குமான வாக்குரிமை அல்ல. அந்நாட்டின் பூர்வகுடி ஆண் களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை 1962ல் தான் கிடைத்தது. எனவே, சோஷலிச அரசு தான், அனைத்துப் பெண்களுக்குமான வாக்குரிமையை முதலில் கொண்டு வந்தது என்று அழுத்தமாகக் கூற முடியும்.

சிரமங்களைக் கடந்தே சிகரங்களை நோக்கி:
ஆனால் இவை எதுவும் சுலபமாக நடந்து விட வில்லை. பழைய ஆணாதிக்க கலாச்சாரத்தின் இழுவையும், நில உடைமை சித்தாந்தக் கூறு களும், பிற்போக்கு சமூக உறவுகளின் தாக்கமும் முற்போக்கு அம்சங்களைத் தடுத்தன. குழந்தை களைக் காப்பகத்தில் விடுவதற்குத் தயக்கம் இருந்தது. அரசாங்கத்தால் இதையெல்லாம் செய்து விட முடியுமா என்ற அவநம்பிக்கை நிலவியது. இவற்றை எதிர்த்த பிரச்சாரத்தையும் கட்சி செய்ய வேண்டியிருந்தது. குறிப்பாக மத்திய ஆசிய பகுதியில் இருந்த குடியரசுகளில் பெண் சமத்துவ அம்சங்களை நடைமுறையாக்குவது பெரும் சவாலாக இருந்தது. அரசியலுக்குப் பெண் களைக் கூடுதலாகக் கொண்டு வருவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்த தோழர் லெனின் மிகச் சரியாக சொன்னார் எவ்வளவு முன்னேறிய நாடுகளானாலும், பழைய முதலாளித்துவ சமூக அமைப்பில், பெண்கள் முக்கியத்துவமற்ற பங்குபாத்திரத்தையே அரசியலில் வகிக்க முடிந்தது. அரசியல் பங்கேற்பை ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டி யது நமது கடமை. அரசியலில் பெண் தொழிலா ளிகளின் பங்கேற்பு அவசியம். கட்சி உறுப்பினர் கள் மட்டுமல்ல, கட்சிக்கு வெளியில் இருக்கும் பெண்களுக்கும், மிகக் குறைவான அரசியல் உணர்வு பெற்றவர்களுக்கும் கூட அரசியல் பங்கேற்பு சாத்தியமாக வேண்டும். லட்சோப லட்சம் பெண்கள் அரசியலில் பங்கேற்கும் போது தான், சோஷலிச அரசு துவங்கியிருக்கும் பணிகளை நிறைவேற்ற முடியும்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பிய விஷயங் களை செய்யும் அளவுக்கு தேசத்தின் நிதி நிலைமை இல்லை. புரட்சிக்குப் பின் உடனடியாக ஏகாதி பத்திய நாடுகளின் ராணுவ தலையீடுகள், உள் நாட்டு போர் போன்றவற்றை இளம் சோவியத் அரசு சந்திக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே நசிந்து கிடந்த பொருளாதாரத்தை இது மேலும் மோசமாக்கியது. 1920களின் பிற்பகுதியில் முன் னேற்ற நடவடிக்கைகள் வேகம் பிடித்தன. பிறகு ஹிட்லரின் பாசிச படையெடுப்பை சந்திக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் மீண்டும் சீர்குலைந்தது. இத்தகைய பெரும் சிரமங்களுக்கு இடையே தான், சோவியத் ஒன்றியத்தில் பெண்கள் பெரும் முன்னேற்றம் அடைந்தனர்.

மாறிய காட்சிகள்:
1924ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தீர்மானம், தொழிற்சாலைகளில் பெண்களின் உழைப்பு படையைப் பாதுகாப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது, முதலாளித்துவ சமூக அமைப்பிலிருந்து சொத்தாகப் பெற்ற பெண்ணடி மைத்தன பிற்போக்கு அம்சங்களுடன் போரிட வேண்டும் என்று அறைகூவி அழைத்தது. ஆலை களில் எப்போதும் துடைப்பத்துடன் காட்சி யளித்த பெண்கள் மெல்ல மெல்ல நம்பிக்கை அடைந்து, பயிற்சி பெற்று இயந்திரங்களை செயல்படுத்தும் தொழிலாளியாக, மேலாளரா கப் பரிணமித்தனர். பெண் மேலாளரை முதலில் கேலியாகப் பார்த்த ஆண் தொழிலாளிகள் பின்னர் பெண்களின் திறமைகளை மதிக்க ஆரம்பித்தனர் என பெண் தொழிலாளர்களின் பத்திரிகையான ரபோத்னித்சா செய்தி வெளி யிட்டது. சோவியத் ஒன்றியத்தில் மிக அதிகமான விற்பனையாகும் பத்திரிகையாக அது செயல் பட்டது.
ஜார் மன்னனின் ஆட்சியில் வேலைக்குப் போகும் ரஷ்ய பெண்களில் 55சதவிகிதத்தினர் நகர்ப்புற கிராமப்புற வீட்டுப் பணியாளர்களா கவும், 25சதம் விவசாய வேலை பார்ப்பவர்களா கவும், 13 சதம் தொழிற்சாலைகளில் பணிபுரி பவர்களாகவும், 4சதம் கல்வி, சுகாதாரம் சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருந்தனர். ஏராளமான பெண்கள் – சுமார் 5 லட்சம் பேர் – பாலியல் வணிகத்தில் ஈடுபடுபட வேண்டிய நிலையில் வாழ்ந்தனர். இவற்றில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டது. 1913ல் மருத்துவர்களில் 10 சதவிகிதம் மட்டுமே பெண்கள் என்ற நிலை மாறி, 1950களில் 50-70 சதவிகிதம்பேர் பெண்கள் என்ற நிலைக்கு உயர்ந்தனர். 1960களில் பொறியாளர் களில் 41 சதவிகிதம் பேர் பெண்கள். வழக்கறி ஞரில் மூன்றில் ஒருபங்கு பெண்கள். 1969 புள்ளி விவரப் படி, அமெரிக்காவில் மொத்த பொறி யாளர்களே 870000 பேர், அதில் 1 சதம் தான் பெண்கள். ஆனால் சோவியத் ஒன்றியத்தில் பெண் பொறியாளர்கள் மட்டும் 775000 பேர். 1959ல் வாகன ஓட்டுநர்களில் 57 சதவிகிதம் பெண்கள். கிரேன் ஆபரேட்டர்களில் பெண்கள் 1926ல் 1 சசதவிகிதம் மட்டுமே, ஆனால் 1959ல் 32 அதாவது 557400 பேர். இது 411 மடங்கு உயர்வு. குமாஸ்தா பணிகளில் 78 சதம், துறைகளின் தலைமை பொறுப்புகளில் 39சதவிகிதம் பெண் கள். 1968ல் முனைவர்களில் 31 சதவிகிதம் பெண் கள். பெரும் மருத்துவமனைகளின் தலைவர் களாகப் பெண்கள் பொறுப்பு வகித்தனர். 20000 டன் கப்பலை இயக்கும் கேப்டனாக ஒரு பெண் செயல்பட்டார். 100க்கும் மேற்பட்ட விண்வெளி கண்காணிப்பு நிலையங்களுக்குப் பொறுப்பாக, புகழ் பெற்ற மாஸ்கோ சிம்பனி இசைக்குழுவின் நடத்துநராக, உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ கல்வி அமைப்பின் தலைவராக பெண் சிறப்பாக செயல்பட்டதெல்லாம் சாதாரணமான விஷயமா? முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், முதல் பெண் விண்வெளி வீரர் என்று பலப்பல சாதனைகள். இந்த முன்னேற்றங்களும், தனிப்பட்ட பெண் களின் சாதனைகளும் ரபோத்னித்சாவில் இடம் பெற்றன. இது ஆணுக்கான வேலை, இது பெண்ணுக் கான வேலை என்று பிரிக்கப்படவில்லை. பாலின வேறுபாடு இன்றி, தகுதியின் அடிப்படையில் வேலைகளுக்கான வாய்ப்பு கிடைத்தது, அதைப் பயன்படுத்தும் சமூக, பண்பாட்டு சூழலும் உரு வாக்கப்பட்டது. திருமணமும் வேலை வாய்ப்பும் எதிரும் புதிருமான முரணாக இல்லை.

பெண்களின் முன்னேற்றத்துக்கான சிறப்பு ஏற்பாடுகள்:
ஆணும் பெண்ணும் சமம் என்கிற பேரில், பெண்ணுக்கான சில சிறப்பு ஏற்பாடுகள் நிரா கரிக்கப்படும் நிலை வந்து விடக் கூடாது என்ப தையும் சோஷலிச அரசு கணக்கில் எடுத்தது. சமத்துவத்தை இயந்திரகதியாக அணுகிவிடக் கூடாது. புரட்சிக்குப் பின் அமைந்த சோஷலிச அரசில், சமூக சேவைகளுக்கான கமிசாராக (அமைச்சர்) அலெக்சாண்ட்ரா கொலந்தாய் நிய மிக்கப்பட்டார். 1917 டிசம்பரில் தாய் சேய் நலத்துக்கான தனி முன்முயற்சி எடுக்கப்பட்டு பிரசவ கால விடுப்பு, கர்ப்ப காலத்தில் வேலை தலத்தில் கடின வேலை கொடுக்காமை போன்ற நடவடிக்கைகள், சட்ட அடிப்படையில் நிலை நிறுத்தப் பட்டன. பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒரு முறை 30 நிமிடங்கள், பாலூட்டுவதற்கு அளிக்கப்பட்டது. குடியிருப்பு, வேலை தலத்திலிருந்து தள்ளி இருந் தால், இந்த நேரம் அதிகமாகக் கொடுக்கப் பட்டது. ஒரு வருடம் வரை, குழந்தை பிறந்த பிறகு வேலை பாதுகாத்து வைக்கப்பட்டது.

1918 துவக்கத்திலேயே திருமணத்திலும், குடும் பத்திலும் அன்பு, பரஸ்பர மரியாதையுடன் பாலின சமத்துவத்தை அங்கீகரிக்கும் கோட்பாடு சட்ட ரீதியாக்கப்பட்டது. திருமணமும், குடும்பமும் இரு பாலாரும் விரும்பி ஏற்கும் ஏற்பாடாக முன்னிறுத்தப் பட்டது. பின்னர் குழந்தை பாது காவலில் பெண்ணுக்கு சம உரிமை கிடைத்தது. இதுவெல்லாம் உலகில் எந்த நாட்டுப் பெண் களும் அது வரை அனுபவித்திராத உரிமைகள்.

சொத்துரிமையில், வாரிசுரிமையில் சம பங்கு உறுதி செய்யப்பட்டது. விவாகரத்து மற்றும் கருக்கலைப்புக்கான சட்டங்கள் உருவாக்கப் பட்டன. தன்பாலின சேர்க்கை மீதான தடை விலக்கப்பட்டது. 1922ல் விபச்சாரத்துக்குக் குற்ற விலக்கு கிடைத்தது. அதே சமயம், விபச்சாரத்துக்கு எதிரான பிரச்சாரம் பெண்கள் கமிட்டிகளால் மேற்கொள்ளப்பட்டது. பெற்றோரிடையே மண முறிவு ஏற்பட்டால், குழந்தைகளுக்கான நிதி ஆதாரம் அரசால் உறுதி செய்யப்பட்டது. குழந்தைகளுடன் பிரியும் பெண்களுக்கு நீதி மன்றங்கள் தாராளமான ஜீவனாம்ச தீர்ப்புகளை வழங்கின. திருமண உறவுக்கு அப்பாற்பட்டு பிறக் கும் குழந்தைகளுக்கும் சம உரிமைகள் வழங்கப் பட்டன. வேலை தலத்தில் சம வேலைக்கு சம ஊதியம் சட்டமாகியது. 55 வயதிலேயே முழு ஓய்வூதியத்துடன் பெண் ஓய்வு பெறலாம், ஆண் களுக்கு அது 60 வயது. ஆண் தொழிலாளிகளை விட கூடுதல் நாட்கள் ஓய்வுக்கான விடுப்பு பெண் களுக்குக் கொடுக்கப்பட்டது. நடன கலைஞர் களாக இருந்த பெண்களுக்கு 35 வயதிலேயே முழு ஓய்வூதியத்துக்கான உரிமை வழங்கப் பட்டது.

கிராமப்புறங்களில்:
வானம் வரை நீ செல்லலாம், ஆனால் உன் சிறகுகள் வெட்டப்பட்டவையாகவே இருக்கும் என்ற ரீதியில், வாய்ப்புகளை முன்வைத்து விட்டு, பெண்கள் சவாலான வேலைகளில் ஈடுபடுவதற்கு உகந்த சூழலை உருவாக்காமல் சோவியத் அரசாங் கம் இல்லை என்பது மிக முக்கியமானது. உதாரண மாக, கிராமப்புறங்களில் விவசாய இயந்திரங் களை செயல்படுத்த ஆரம்பித்த பெண்கள், ஒரு கட்டத்தில் மாநாடு நடத்தி, இயந்திரங்களில் அவர்களுக்கு வசதியாக சில மாற்றங்கள் வேண்டு மென கோரிக்கை விடுத்தனர். 1970ல் அரசாங்க உத்தரவு ஒன்று, அம்மாற்றங்களுடன் இயந்திரங் கள், தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட ஏற்பாடு செய்தது. மாற்றங்களுடன் வந்த இயந்திரங்களை, பெண்கள் மேலும் திறம்பட இயக்க முடிந்தது. பல சவாலான பணிகளைப் பெண்கள் செய்தனர். அவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டன.

விவாதங்களும், முன்னேற்றங்களும் இணைந்து நடந்தன. உஸ்பெகிஸ்தானில், ஒரு கூட்டுப் பண் ணையின் தலைவர் உட்பட அனைத்து முக்கிய பணிகளிலும் பெரும்பான்மை பெண்களாக இருந்தனர். கட்சி கமிட்டியிலும் பெண்கள் கூடு தலாக இருந்தனர். பெண் ஆதிக்கம் என்று சிலர் கேலி பேசிய போது, பெண்கள் பதிலடி கொடுத் தனர். இது சோவியத் அதிகாரத்தின் மிகப்பெரும் சாதனை, இத்தகைய சூழல் ஏற்படத்தானே நமது பெற்றோர்கள் போராடினர் என்று வாதிட்டு மடக்கினர்.

அமெரிக்கா போன்ற முன்னேறிய முதலாளித் துவ நாடுகளிலேயே, பெண்கள் இயக்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள், சோவியத் பெண்கள் அடைந்த முன்னேற்றத்தை ஒட்டியவையாகவும், அவற்றை இலக்காக வைத்தும் அமைந்தன.

சோவியத் ஒன்றியம் சிதறுண்ட போது ரஷ்ய புரட்சியின் பலனாக, பெண்கள் தலை நிமிர்ந்தனர். சலிப்பூட்டும் வீட்டு வேலைகளிலிருந்து விடு தலை பெற்றனர். கல்வி, வேலை வாய்ப்புகள் மூலம் பொருளாதார சுதந்திரம் பெற்றனர். பண்பாட்டு ரீதியாகவும் மாற்றங்கள் நிகழ்ந்தன. சமூகத்தின் பார்வையிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தியது. பெண் சமத்துவத்துக்கான பவுதீக சூழலை சோஷலிச சமூக அமைப்பு ஏற்படுத்தியது. அதாவது, பெண் முன்னேற்றம் சமூக அமைப்பு முறையுடனும், அரசியல் கொள்கையுடனும் தொடர்புடையது. சோஷலிச அமைப்பு வலுப் பெற்றால், முன்னேற்றமும் வலுப்பெறும். சீர் குலைந்தால், இத்தகைய பவுதீக சூழலிலும் எதிர் மறை விளைவுகள் உருவாகும்.
1990களில் சோஷலிசம் பின்னடைவை சந்தித்து, சோவியத் ஒன்றியம் சிதறுண்ட சூழலில், முதல் தாக்குதல் பெண்கள் மீது தான் என்பதை அனுப வத்தின் வாயிலாகவே அவர்கள் உணர்ந்துள்ள னர். வேலையின்மை காரணமாக, மீண்டும் விபச்சாரம் தலை தூக்கியது. வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளதால், பெண்கள் வீடு என்கிற தளத்துக்கே திரும்பிப் போக வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. சமூக நலத் திட்டங்கள் வெட்டப்பட்டன. வேலைக்கு இளம் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதும், பாலியல் சேவை செய்ய வேண்டும் என்பதும் வெளிப்படை விளம்பரமாக வரத் துவங்கியது. பெண்கள் மீதான வன்முறை ஆரம்பித்தது. அரசியலில் பொறுப்புகளுக்குப் பெண்கள் வருவது குறைந்தது. ஆர்மீனியாவில் ஆண்கள் வேலை தேடி ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வர வேண்டிய நிலையில், அங்குள்ள பெண்கள் மீதியுள்ள குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்கும் மொத்த சுமையும் சுமக்க வேண்டி யிருந்தது. குடும்பத்துக்குள்ளேயே பாலியல் வன் முறையை சந்திக்க நேர்ந்தது. பெருமளவில் குறைக்கப்பட்டிருந்த குடிப்பழக்கம் ஆண்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்தது. அதன் பாதக மான விளைவுகள் தொடர்ந்தன. சோவியத் சமூக அமைப்பில் ஏற்பட்ட சிதைவு, சோஷலிச தத்து வத்தினாலோ கோட்பாடுகளாலோ இல்லை, இது வரை யாரும் கடந்து சென்றிராத பாதை அது. முதல் முயற்சி என்ற ரீதியில், சோஷலிச நிர்மாணத்தில் சில தவறுகளும், பலவீனங்களும் ஏற்பட்டன, குறிப்பாக சோஷலிச ஜனநாயகத்தை நிறுவுதல், சோஷலிச பொருளாதாரத்தைக் கட்டுதல், தத்துவார்த்த உணர்வுகளை பலப்படுத்து தல் போன்ற பகுதிகளில் குறைபாடுகள் ஏற்பட்டன என்று 1992ல் சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது கட்சி காங்கிரசில் நிறைவேற்றப் பட்ட, தத்துவார்த்த பிரச்னைகள் குறித்த தீர்மானம் கூறுகிறது. மேலும் சோவியத் ஒன்றியத்தில் கார்பசேவ் தலைமையிலான ஆட்சி யில் கிளாஸ்நாஸ்ட், பெரஸ்த்ரோய்கா போன்ற கருத்தாக்கங்கள் மூலம் சோஷலிசத்துக்கு எதிரான போக்குகள் உருவானது குறித்து அத்தீர்மானம் கவலை தெரிவித்தது. சோஷலிசம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு முதலாளித்துவ மருந்துகள் அளிக்கப்படுவது தவறு என சுட்டிக்காட்டியது. சோஷலிச எதிர்ப்பு சக்திகளின் தாக்குதலை சந்திக்க முடியாமல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் அணிகளும், மக்களும் நிராயுதபாணியாக் கப்பட்டார்கள் என்றும் தீர்மானம் விளக்கியது. 1980களின் பிற்பகுதியிலிருந்தே இவ்விதத் திரிபு கள் முன்னுக்கு வந்தன. கார்பசேவ் முன்வைத்த கிளாஸ்நாஸ்ட் கருத்தாக்கம், பெண்கள், அவர் களது வேலைக்குத் திரும்பிப் போக வேண்டும், குடும்பத்தைப் பாதுகாப்பதே அவர்களது மைய பணி என்பதில் அழுத்தம் கொடுத்தது. அழகிப் போட்டிகள் பிரபலம் அடைந்தன. 1989 தேர் தலில், குறிப்பிட்ட மட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளில் பெண்களின் பங்கு 15 சதவிகி தமா குறைந்தது. வேலையை விட்டு விட்டால் குடும்பத்தை, குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும், ஓய்வெடுக்க முடியும், அது தான் சுதந்திரம் என்ற பிரச்சாரம் செய்யப் பட்டது. சோஷலிசத்தை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்த ஏகாதிபத்திய சக்தி களுக்கு, இத்தகைய சூழல் பயன்பட்டது.

ஏகாதிபத்தியம் விரித்த வலையில் விழுந்தவர் கள், காலப்போக்கில் அதன் வெளிச்சம் மங்கிய பிறகு, பாதிப்புகளைப் புரிந்து கொள்ள துவங்கி யுள்ளனர். பல்வேறு பெண்கள் அமைப்புகள் உருவாகியுள்ளன. ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் பங்களிப்பை செய்து வருகிறது. இழந்த உரிமைகளையும், சமத்துவத்தையும் பெண்கள் மீண்டும் பெற, 20ம் நூற்றாண்டு சோஷலிசம் தன் பலவீனங்களிலிருந்து கற்றுக் கொண்டு, 21ம் நூற்றாண்டில் மாற்றம் காண முன்னைக் காட்டி லும் வீரியத்துடன் புறப்பட வேண்டியிருக்கிறது. இந்தியாவிலும், இந்த அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, பெரு மளவு பெண்களை இடதுசாரி அரசியலின் பங்கேற் பாளர்களாக மாற்றி, புரட்சிகரப் பாதையில் முன்செல்ல வேண்டும்.

அக்டோபர் புரட்சியின் முக்கியத்துவம் … – ஹர்கிசன் சிங் சுர்ஜித்

தமிழில்: ஆர்.சந்திரா

ஆங்கிலத்தில் வாசிக்க

1917ல் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் புரட்சியின் வெற்றியை மார்க்சிய-லெனினிய கோட்பாடு எந்த அளவுக்கு சரியானது என்பதை நிரூபித்த முதல் அறிவியல் பூர்வமான அத்தாட்சி எனலாம். அதுவரையிலும் அது ஒரு கோட்பாடகவே இருந்தது. போல்ஷ்விக் கட்சி யின் தலைமையில் நடைபெற்ற புரட்சியின் வலிமை அதற்கு தேவைப்பட்டது. அதன் மூலம் விஞ்ஞான சோசலிசம் என்ற கோட்பாட்டின் சரியான நிலைப்பாட்டை உலகின் முன்வைத்து அதை விமர்சித்தவர்களின் தவறை சுட்டிக் காட்டியது. விஞ்ஞான சோசலிசத்தை உருவாக்கி, சிறப்பாக வளர்த்த கார்ல் மார்க்சும், பிரெடெரிக் எங்கெல்சும், மனிதகுல வளர்ச்சியின் வரலாறு முதலாளித்துவத்திலிருந்து சோசலிசம், அதன் பின்னர் கம்யுனிசம் என்ற பாதையில் செல்லும் என்பதை வகுத்து கொடுத்திருந்தனர். இத்தகைய மாற்றத்தை கொண்டு வரும் சக்திகள் மற்றும் அதன் பொதுவான வழி தெரிந்திருந்த போதிலும், அதை அடைவதற்கான திட்டவட்டமான வழி முறைகள் என்பவை, சர்வதேச நிலைமை மற்றும் அந்த குறிப்பிட்ட நாட்டின் புறச்சூழலை பொறுத்தே அமையும் என்பதால் அது நாட்டிற்கு, நாடு வேறுபாடும் தன்மை கொண்டதாகும்.

ஒரு புதிய பாதை துவங்கியது:

1917ல் லெனின் கீழ்கண்டவாறு கூறினார்:
“சோசலிச பாதையின் கடைசி விவரம் வரை மார்க்சுக்கு அல்லது மார்க்சிஸ்டுகளுக்கு தெரி யும் என நாங்கள் சொல்லவில்லை. அப்படி உரிமை கோருவதும் பொருளற்றதாகும். ஆனால், அந்த பாதை வழி எது, அதில் பின் தொடர வேண்டிய சக்திகள் எவை என்பது பற்றி எங்க ளுக்கு தெரியும். லட்சக்கணக்கான மக்கள் அதை தங்கள் கையிலெடுத்து, அவர்களின் அனுபவங் கள் மூலமாக தான் குறிப்பான, யதார்த்தமான விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும். “.

லெனின் மேலும் சுட்டிகாட்டுவது:
” மார்க்சிய கோட்பாடு உலக நாகரீக வளர்ச் சிப் பாதையிலிருந்து விலகி தோன்றியது மாறாக மார்க்சின் பேரறிவால், , மனிதகுலத்தின் மிக சிறந்த அறிஞர்கள் முன்பே எழுப்பிய வினாக் களுக்கு பதில் அளிக்க முடிந்தது . தத்துவம், அரசி யல் பொருளாதாரம், சோசலிச ஆகிய கோட் பாடுகளை விளக்கிய மிகச் சிறந்த தலைவர்கள் நேரடியாகவும், தொடர்ந்தும் எடுத்துரைக்கும் பாடங்களில் இருந்து அவரது கோட்பாடு தோன்றியது..”

முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் ஏகாதிபத்தியம் என விளக்கிய லெனின் மார்க்சிய கோட்பாட்டை செழுமைபடுத்தும் அரிய பங்களிப்பை செய்தார். ஏகாதிபத்திய கட்டத்தில் புரட்சி பற்றி மதிப்பீடு செய்த லெனின், சோசலிச புரட்சி முதலாளித்துவ நாடுகளில் மட்டுமின்றி , ஓரளவு பின் தங்கிய, ஏகாதிபத்திய சங்கிலியின் பலஹீன மான கண்ணி உள்ள நாடுகளிலும் வெற்றி பெரும் என்ற முடிவுக்கு வந்தார்.புதிய காலம் மற்றும் ரஷியாவில் அன்று நிலவிய திட்டவட்டமான நிலைக்கு ஏற்ப, அந்த கோட்பாட்டை திட்ட வட்டமாக பின்பற்றியதால் லெனினின் கீழ் செயல்பட்ட போல்ஷெவிக் கட்சி வெற்றிகரமாக புரட்சியை நடத்த முடிந்தது. ரஷியாவின் பழைய காலண்டர் படி புரட்சி அக்டோபர் 25,1917அன்று வெற்றி அடைந்தது. எனவே அது பிரபலமாக அக்டோபர் புரட்சி என அழைக்கப்பட்டது

புரட்சியின் பங்களிப்புகள்:
சோசலிச அரசு அமைந்தவுடன் பிறப்பிக்கப்பட்ட முதல் பிரகடனம் அமைதி மற்றும் நிலம் பற்றியதாகும். அதன் மூலம், லெனினின் தலைமை யிலான் கட்சி புரட்சியைக் காப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தின் பின்னால் விவசாயிகளைத் திரட்டும் பணியைச் செய்ய முடிந்தது. இவ்வாறு பெறப் பட்ட வலிமையின் மூலம் குழந்தைப் பருவத்தி லிருந்த சோசலிச அரசு ஏகாதிபத்திய தலை யீட்டை முறியடிக்கவும், உள்நாட்டு கலகத்தை ஒடுக்கவும் முடிந்தது. சுரண்டலின் பல வடிவங் களைக் கொண்ட வர்க்க ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும் என்பதை புரட்சியின் வெற்றி உணர்த் தியது. அத்துடன், உற்பத்திக்கு அனைவரும் தமது பங் கை செலுத்துவது, அவரவர் திறமைக்கேற்ப உழைப்பது, உழைப்புக்கு ஏற்ற கூலியை பெறுவது என்கிற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ப தையும் உணர்த்தியது. இது, ஒவ்வொருவரும் உற்பத்திக்கு தன பங்களிப்பை தன திறமைக்கேற்ப செலுத்தி, தனது தேவைக்கேற்ப ஊதியம் பெறலாம் என்கின்ற சமுதாயத்தை நோக்கி ஒரு அடி முன் வைப்பதாகும்.

இந்த கோட்பாடு, இன்று வர்க்க சமுதாயத் திலும் கூட பல அமைப்புகள், அதிலும் குறிப் பாக, சேமநல அரசு என்ற கருத்து வருவதற்கு ஏதுவாக இருந்துள்ளது. இன்று நமது காலத்தில் க, ல்லாமையை ஒழிக்க,இலவச கட்டாய கல்வி அளிக்கத் தேவையான இலவச பள்ளிகள், கல்லூரி கள், பல்கலை கழகங்கள் தோற்றுவித்தல் என்பது சோவியத் ரஷ்யாவிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆகும்.
எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில், சோவியத் யூனியன் இது வரை கேள்விபடாத உரிமைகளையும், உத்தரவாதங்களையும் தனது மக்களுக்கு வழங்கியது. முதல் சோசலிச அரசில் மக்கள் அனுபவித்த வேலைக்கான உரிமை, கல்வி, ஆரோக்கியம், இருப்பிடம் ஆகியவற்றிற்கான உரிமைகள் மற்றும் கணக்கிலடங்காஉரிமைகளும் சலுகைகளும் மற்ற நாடுகளில் வசித்த மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை. இது மற்ற நாடுகளில் வாழ்க்கை நிலை முன்னேறுவதற்காக நடத்திய போராட்டங் களுக்கு உந்து சக்தியாக விளங்கியது. அத்துடன், அந்நாடுகளில் உள்ள முதலாளிகள் அங்கிருந்த வசதியற்றவர்களுக்கு, சில சலுகைகளை வழங்க வேண்டி வந்தது. இதன் மூலம், ” சேம நல அரசு” என்பது உருவாகியது.
தாறுமாறாக செயல்படும் சந்தை மற்றும் நுகர்வோருக்கு எந்த மாற்றும் இல்லாத வண்ணம் கொள்ளை லாபம் ஈட்டும் நோக்கத்துடன் சந்தையை கைப்பற்றும் ஏகபோக வணிகர்களுக்கு பதிலடியாக பொருளாதார திட்டம் என்பது உருவாக்கப்பட்டது. இதுவும் புரட்சியின் மூலம் நமக்கு கிடைத்தது தான். அதே போன்று, சோஷ லிச பொருளாதார திட்டம் மூலமாக, வேலை யின்மையை ஒழிப்பது, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது, அவர்களிடமிருந்து அதிகபட்ச லாபத்தை ஈட்டுவதை தவிர்ப்பது போன்றவை ரஷிய புரட்சியின் மூலம் கிட்டியவை ஆகும். உலகின் அனைத்து உழைக்கும் மக்களையும் விவசாயிகளையும் இணைக்கும் அமைப்புகளான இலவச பொது மருத்துவ வசதி, அரசுடமையாக் கப்பட்ட தொழில்கள், கூட்டுறவு அமைப்புகள், முதியோர் பென்ஷன் முதியோர் இல்லங்கள் பஞ்சாயத்து ராஜ் போன்ற உள்ளாட்சி அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் ரஷிய புரட்சி யின் வெற்றியில் பிறந்தவை ஆகும். இந்த வெற்றி யின் காரணமாக, பல நாடுகளில் இவை பெரிய அளவில் அமுல்படுத்தப்பட்டன. இல்லையெனில், சிறிய குழுக்கள் நடத்திய பரிசோதனைகள் போல் அவை இருந்திருக்கும்.

நம்மை பொறுத்தவரை, இந்த புரட்சி உலக அளவில் ஏகபோகங்களுக்கு இடையேயும், சாம்ராஜ்யங்களுக்கு இடையேயுமான போட்டிக்கு மாறாக, உலக அளவில் பரஸ்பர ஒத்துழைப் பிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி தந்தது. காலனிகள் இல்லாத, போர்கள் இல்லாத ஒரு உலகிற்கான கதவுகளை இது திறந்து விட்டது. ரஷிய புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட ப்ரெஸ்ட் லிடோவ்ச்க் ஒப்பந்தம் முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர உதவியது. சோவியத் யூனியனின் முனைப்பான தலையீடு இல்லாமல், ஹிட்லரின் 75 துருப்புக்களை அவனது மண் ணிலேயே தோற்கடித்து, இரண்டாம் உலகப் போரை வென்றிருக்க முடியாது பாசிசத்தையும் தோறகடித்திருக்க முடியாது. அந்தப் போரின் பிந்தைய காலங்களில் சோவியத்யூனியன் இருந்த ததால் தான் மூன்றாவது உலகப் போர் வெடிக் காமல் இருந்ததுடன் சால்ட் (கேந்திர ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம்) மற்றும் சால்ட் ஒப்பந் தங்கள்கை யெழுத்தாகி, அணுஆயுத தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது.

விடுதலை அடைவதற்கு ஊக்குவிப்பு:
தேசீய விடுதலை இயக்கங்களுக்கு சோவியத் யூனியன் அளித்த ஊக்குவிப்பு இந்தியாவில் நம் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.சோவியத் யூனியன் ஒரு புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுப்பதற்கு முன்னர், காலணிகள் ஒரு ஆதிக்க சக்தியை தூக்கி எறிந்தால் கூட வேறொரு காலனிஆதிக்க சக்திகளிடம் சென்றன. முதல் உலகப் போரின் போது ஓட்டோ மான் பேரரசை எதிர்த்து வெற்றிகரமாக போரிட்ட அரபுகள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பிடிக்குள் வந்து , மீண்டும் தங்கள் விடுதலைக்காக போரிட்டனர். தற்போது நடைபெற்று வரும் சுதந்திரமான பாலஸ்தீனத்திற்கான போராட்டம் என்பது அத்தகைய முடிவுக்கு வராத ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதன் ஒரு அங்கமே ஆகும். அமெரிக்கா இராக்கை ஆக்கிரமிப்பு செய்ததும் யூத மத வெறி அரசான இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதும் மேலும் சிக்கலாக்கியுள்ளளது. இரண்டாம் உலகப் போருக் குப் பின்னர் 60 நாடுகள் காலனியாதிக்கத்தி லிருந்து விடுதலை பெற்றதும் மேலும் பல தேசீய விடு தலை இயக்கங்களுக்கு தூண்டுகோலாக அமைந்த தும் ரஷிய புரட்சியின் வெற்றியின் மிகவும் முக் கியமான அம்சம் ஆகும். சிறிய நாடுகளான, வியத் னாம், கம்போடியா, லாவோஸ், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு மற்றும் கியூபா ஆகியவை ஜெர்மனி, இத்தாலி,மற்றும் ஜப்பான் ஆகிய தோல்வியடைந்த அச்சு சக்திகளின் பிடி மானத்தை எதிர்த்ததுடன், வெற்றிபெற்ற நேச சக்திகளான பிரிட்டன் அமெரிக்க, பிரான்ஸ் ஆகிய நாடுகளையும் எதிர்கொள்ள முடிந்தது. முக்கியத்து வம் வாய்ந்த இந்த புரட்சி, உலக அளவில் உழைக் கும் வர்க்க இயக்கங்களுக்கும் காலனி எதிர்ப்பு போராட்டங்களுக்கும் பெரும் உந்துசக்தியாக அமைந்தது. சோசலிச அரசின் தோற்றமும் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டதும் ஜார் மன்னனின் சிறையில் அடைக்கப்பட்டு, ஒடுக்கப் பட்ட ,பல தேசிய இன மக்களுக்கு விடுதலை அளித்தது. தற்கால வரலாற்றை உருவகப்படுத் தியதில் சோவியத் யூனியனின் பங்களிப்பை உலகம் முழுவதும் அங்கீகரிக்க வேண்டி வந்தது.

கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள்:
ஒரு அரசின் ஸ்தூலமான நிலைக்கேற்ப மார்க்ஸ்- எங்கெல்ஸ் கோட்பாட்டை முதல் முறையாக, வெற்றிகரமாக ரஷிய புரட்சி அமுல் படுத்தியது. புரட்சியின் வெற்றியானது, உலகெங் கிலும் உள்ள புரட்சிகர இயக்கங்களின் மனசாட் சியை குறிப்பாக சீனா, வியதனாம், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், போலாந்து, கிழக்கு ஜெர்மனி, யுகொஸ்லாவியா ஹங்கேரி,செக்கொஸ்லாவியா, ரொமேனியா, பல்கேரியா, போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒனறு சேர்ந்து சோசலிச முகாமை உருவாக்கி உலக சக்திகளை சோசலிசத்திற்கு சாதகமாக நிலையை ஏற்படுத்தின. சோசலிச முகாமிற்குள் ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு எதிரான போராட்டத் தில் இறுதிவரை நிற்கவில்லை என்பது உண்மை தான். தவறுகள் செய்யப்பட்டன. ஆனால், இந்த தவறுகள், இன்று நாம் அறிந்துள்ள அறிவியல் கோட்பாடான இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதத்தின் சரியான தன்மையை புறக்கணிக்க முடியாது.

இதன் அடிப்படையான அம்சம் என்ன வெனில், அனைத்து வகையான பொருட்களின் அனைத்து வடிவங்களும், உறவுகளும் மாற்றத்திற்கு உட் பட்டவை என்பதாகும். ஒவ்வொன்றிலும் உள்ள எதிர்மறை சக்திகள் முரண்பாடுகளாக வெளிவரு கின்றன. பழையதை தூக்கி எறிந்து, புதியதை உருவாக்கி முரண்பாடுகளை தீர்க்க முடியும். தீர்க்கப்பட வேண்டிய புதிய முரண்பாடு உருவா கும். பொருள்முதல் உலகில் தோன்றும் புதிய வளர்ச்சிகள் , மற்றும் மனித உழைப்பு,டன் தொழில்நுட்ப வளர்ச்சியும், திறமைகளும் கருவி களாகி, புதிய நிலைமைகளை உருவாக்குகின்றன அவற்றை சார்ந்தே ஒரு சமுதாயத்தில் உற்பத்தி சக்திகள் அமைகின்றன. ஆனால், அதே சமயம அவை சமு தாயத்தை பல வர்க்கங்களாக பிளவு படுத்தி , உற்பத்தியை அபகரித்துக் கொள்ள போராடும் நிலையை தோற்றுவிக்கிறது. அபகரிப்பு என்ற நிலை வர்க்க போராட்டத்திற்கு இட்டு செல்வதுடன் புரட்சிகரமான மாற்றங்களை ஏற் படுத்துகிறது. வரலாற்றில் உற்பத்தி சக்திகள் தொடர்ச் சியாக வளர்ச்சி அடை கின்றன. புதிய சுரண்டல் உறவுகள், ஏற்படுகின்றன. அவற்றுடன் வர்க்கங் கள் இணைகின்றன.இவை முன்னுக்கு வரும் பொழுது, வளர்ச்சியின் தேவைகளை ஒட்டி, சிலவற்றை தூக்கி எறிய வேண்டி வரும். இந்த செயல்முறையில் புதிய திறம் வாய்ந்த தொழில் நுட்ப வடிவங்கள், திறமைகள் புதிய போராட்டங் கள் வருவதை நாம் காண முடியும். அடிமை சமூகம் நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், கம்யூனி சம் என்கின்ற, சமுதாயத்தின் முக்கியமான நான்கு கட்ட வளர்ச்சியில் இது தொடர்கிறது. சோசலி சத்திற்கான மாற்றம் ஏற்படும் பொழுது, மூலதன சர்வாதிகாரம் தூக்கி எறியப்பட்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அமைகிறது. இதில், பாட்டாளி வர்க்கம, முதலாளித்து வர்க்கத்தை தூக்கி எறிந்து உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுகிறது. அந்த வர்க்கம் பல நூற்றாண்டுகளாக, மற்றவர்களுக்கு செல்வத்தை உற்பத்தி செய்து கொடுத்துள்ளது. உற்பத்தியை தங்கள் வசம் கொண்டு வந்த உடன், சுரண்டலுக்கும், அதோடு தொடர்புடைய வர்க்க போராட்டத்திற்கும் முடிவு கட்டுகிறது.

இத்துடன், மனித குலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, திட்டமிட்ட உற்பத்தி துவங்குகிறது. அதன் வெற்றி என்பது, சோவியத் ரஷியாவின் வெற்றி மட்டுமல்ல.இதர சோசலிச நாடுகளான சீனா, கியூபா போன்ற நாடுகளில் பொருள் உற்பத்தி அதிகரித்து, மனித வளர்ச்சி உள்ளிட்ட ஒட்டு மொத்த வளர்ச்சியை அடைய முடிந்துள்ளது. இத்தகைய சாதனைகளை பணக்கார முதலாளித் துவ நாடுகள் அடையவில்லை அவர்களின் மக் களுக்கு அவற்றை அளிக்க விரும்பவும் இல்லை. உலகிலேயே ஒரே வல்லரசு என இன்று கருதப் படும் அமெரிக்க தந்து மக்களுக்கு சிறந்த கல்வி, ஆரோக்கியம் மற்றும் இதர கட்டுமான வசதி களை அளிப்பதற்கு பதிலாக, தந்து எல்லைக்கு வெளியேயிருந்து வளங்களை பெற்று வேறு இடங்களில் முதலீடு செய்ய விழைகிறது. மனித குல ம் அமைதியுடனும் முன்னேற்றத்துடனும் மேம்பட வாழ தேவையானதை வலுப்படுத்துவ தற்கு பதிலாக, ராணுவ தளவாடங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதையே விரும்புகிறது. அதன் வீழ்ச்சியின் விதைகள் இதில் அடங்கி யுள்ளன.. பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் உள்ள அரசு உலகில் குண ரீதியான மாற்றத்தை கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்க முடியும் என்று யதார்த்தத்தில் நிரூபித்து காட்டியதை அக்டோபர் புரட்சியின் மிக முக்கிய பங்களிப்பு எனலாம். சோவியத் யூனியன் இருந்ததனால் தான் இரண் டாம் உலகப் போருக்கு ப பின்னர், காலனியாதிக்க தகர்வு சாத்தியமாயிற்று.ஏகா திபத்திய நாடுகள் முன்னேறிய தொழில்நுட்பத்தை கொடுக்க விரும்பாத சூழலில், புதிதாக விடுதலை பெற்ற நாடுகள் சோவியத் யூனியனிடமிருந்து அவற்றை பெற முடிந்தது. அதே போல, அது ஷேம நல அரசு மற்றும் உலக அமைதிக்கான நிறுவனங்கள் ஏற் படவும் காரணமாக இருந்தது. என்றும் அழியா புரட்சி:
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு போர் தேவை என்ற கருத்து தவறு என்பதை சோவியத் யூனியன் தனது வெற்றிகரமான வளர்ச்சி மூலமாகவும், உலகில் தான் ஆற்றிய பங்கின் மூலமும் வெளிப்படுத் தியது. மாறாக, போர் படைப்பாற்றளுக்கு எதி ரான நிலையினையும், அழிவையும் ஏற்படுத்தக் கூடியது. சோவியத் யூனியனின் சர்வதேச உறவு கள் தொடர்பான் முதல் பிரகடனம் அமைதி பற்றியதாகும். அதன் மூலம் சர்வதேச உறவுகளில் ஒரு புது சகாப்தம் துவங்கியது என அறிவித்தது.

வரலாற்றைப் பற்றிய நமது புரிதலில் உலகில் “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்” என்று ஒன்று கிடையாது என்பதை ரஷிய புரட்சி உணர்த் தியது, அதனுடைய மிக முக்கியமான பங்களிப்பு ஆகும். எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து மக்களும் உள்நாட்டிலும், வெளியேயும் சக்தி களை ஒன்று திரட்டி, வர்க்கமற்ற சமுதாயத்தை நோக்கி முன்னேறும் பணியை மேற்கொள்ள வேண்டும். இதில் வெற்றி பெற உலகில் , மாறி வரும் வளர்ச்சிப் போக்குகளை நமது ஸ்தூலமான நிலைமைகளுடன் பொருத்தி படிப்பதும், அதை உணர்ந்து செயல்படுவதன் மூலம் உலக அளவில் பாட்டாளி வர்க்கம் உற்பத்தி கருவிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷிய புரட்சி வழி காட்டி உள்ளது. இன்று, சோவியத் யூனியன் என்பது இல்ல. ஆனால், அதன் பங்களிப்புகளை ஒதுக்க இயலாது. உலக அளவில், குறிப்பிடத்தக்க தாக்கத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள். எனவே, அவை நமது நினைவில் என்றும் நிலைத்து நிற்கும். சோவியத் யூனியன் சிதறுண்ட பின், முன்னாள், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளில் முதலாளித்துவம் தலை தூக்கியது துரதிர்ஷ்ட மானது சோசலிசத்தை நிர்மாணிப்பதில் , மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை அப்போது நிலவிய சூழலுக்கு ஏற்ப பொருத்தி பார்பதில் ஏற்பட்ட திரிபுகள், விலகல்களினால், நிறைய தவறுகள் நேர்ந்தன. தவறான புரிதல் தோன்றி யதார்த்த நிலைமை புறந்தள்ளப்பட்டது. ஏகாதி பத்திய சவால்களை எதிர்கொள்ள, அவற்றிக்கு சமமாக ராணுவ தளவாடங்களை வைத்திருப் பதில் கவனம் செலுத்தியது சரியானது என்ற போதிலும், அதே அளவு அழுத்தம் தொழில் வளர்ச்சக்கு கொடுப்பதில் பின் தங்கிய நிலை இருந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தில் மேற்கொள்ளப்பட்ட வியக்கத்தகு முன்னேற்றங் கள் மீது போதிய கவனம் செலுத்தப்படவில்லை. பொருளாதார அரங்கில் இந்த பிரச்னைகள் கண்கொடுள்ளப்படவில்லை. என்பது மட்டு மின்றி , முடிவெடுக்கும் இடங்களில், மக்களின் பங்கேற்பை உறுதிபடுத்தி, உண்மையிலேயே, மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது கைவிடப் பட்டது. கட்சிக்கும் அரசுக்கும் இடையிலான வேறுபாடு என்பது இல்லாமல் போயிற்று. ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடு அதிகமாக மீறப்பட்டு, அதற்கு பதில் மத்தியத்து வம் என்பதற்கு அழுத்தம் தரப்பட்டது. கட்சிக்கு பதிலாக தலைமை, அந்த தலைமைக்கு பதிலாக ஒரு சிறு தனிகுழு செயல்பட்டது. இந்த தவறு கள் குறைபாடுகள் பின்னடைவுக்கு காரணமாக அமைந்தன. முதலாளித்துவம் முந்நூறு ஆண்டுகளுக் கும் மேலாக செயல்பட்டு வருகிறது. சோசலிசம் என்பது ஒரு புதிய கருத்தாகும். சோசலிசத்தின் சாதனைகள் ஏராளமாக இருந்த போதிலும், அதை அமுல்படுத்துவதில் இருந்த எதிர்மறை விஷயங்களினால், சோவியத் யூனியன் சிதறுண் டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் பின்னடைவு ஏற்பட்டது.

வியூக மாற்றம் தொடர்தல்:
ஆனால், சுரண்டல் அமைப்பின் முக்கிய அமசங்களான, பசி, வறுமை, கைவிடப்படுதல் ஆகிய வற்றையும், முதலாளித்துவம் என்கிற யதார்த்தத்தை சந்தித்த கிழக்கு ஐரோப்பிய நாட்டு மக்களும், முன்னாள்சோவியத யூனியனில் இருந்த குடியரசுகளின் மக்களும் தற்போது போராட துவங்கிவிட்டனர். அந்நாடுகளில் கடும் எதிர்ப்புகளை அந்த அரசுகள் சந்திககின்றன. தொடர்ச்சியான ஏகாதிபத்திய தாக்குதல்களிடம் சரணாகதி அடைந்த கட்சிகள், தற்போது, புதிய சவால்களை எதிர்கொள்ள மீண்டும் வியுகங்கள் அமைத்துக் கொண்டு வருகின்றன.மக்கள் மீண் டும் கம்யுனிஸ்ட் கட்சிகளின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ரஷிய பெடரேஷனின் கம்யூனிஸ்ட் கட்சி தான் இன்று ரஷியாவில் அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட மிகப் பெரிய சக்தியாகும். சோசலி சத்தை பின்பற்றும், சீனா, கியூபா, வியத்னாம், லாவோஸ் கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகளில், ஆளும் கட்சிகள் கடந்த கால தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு, அங்கே நிலவும் புறசூழலுக்கு ஏற்ப சரி எனக் கருதப்படும் போதிய ,பொருத்தமான மாற்றங் களை செய்து வருகின்றன. சோசலிசத்தை நிர் மாணிக்க ஒரேயொரு முன்மாதிரி என்பது இல்லை என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. ஒவ்வொரு நாடும் அதன் புறசூழலுக்கு தகுந்தவாறு, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ற படி, வர்க்க சக்திகளின் கூட்டு எப்படி உள்ளது என்பதை அறிந்து தனது பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். வளர்ச்சி குன்றிய நாட்டில் சோசலிச கட்டுமானம் எவ்வாறு இருக்க வேண் டும் என்பதில் சீன முன்மாதிரி மேலும் பங் களிப்பை செலுத்தி உள்ளது. அடிப்படை கோட் பாடுகளை பின்பற்றிக் கொண்டே உற்பத்தி சக்தி களின் வளர்ச்சிக்கு சீனா அ ழுத்தம் தருகிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, தொழிலாளி-விவசாயி கூட்டு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஆகிய மூன்றும் சோசலிசம் வெற்றி பெற தேவைப் படும் மூன்று பொதுவான கோட்பாடுகள் ஆகும். இந்த நாடுகளின் அனுபவங்களை கணக்கில் கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் இடங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப, மார்க்சிய-லெனினிய விஞ்ஞான அடிப்படையில் செயல் படுவது வெற்றியை தரும். சீனர்கள் மாவோவின் சிந்தனை கள், டெங் சியா பிங்கின் கோட்பாடுகள் என்றனர். கொரியர்கள் சுசே கருத்து என்றனர். வியத்நாமி யர்கள் ஹோ சி மின்னுடன் அடையாளப்படுத் திக் கொண்டனர். வேறு சிலர் தங்களுடைய முன்மாதிரிகள் அல்லது ஸ்தூலமான நிலைமை யுடன் அடையாளப்படுத்தி கொண்டனர். 1991ல் நடைபெற்ற பேரதிர்வுகளை ஏற்படுத்திய சம்ப வங்களை தொடர்ந்து, சோசலிசம் வீழ்ந்து விட்டது என்றும், கம்யுனிசம் செத்து விட்டது என்றும் கட்டவிழ்த்து விடப்பட்ட பிரச்சாரம் இனிமேல் எடுபடாது. முன்னாள் சோவியத் குடியரசுகளின் மக்களும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்ம க்களும் முதலாளித்துவம் தீர்வு அல்ல என்பதை உணர்ந்து கொண்டு விட்டனர். இந்த நாடுகளில்,ஏற்றத் தாழ்வுகள் அதிகரித் துள்ளது. வேலையின்மமை அதிகரித்து பாது காப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், சோசலிசம் அமைப்பை தகர்க்கும் ஏகாதிபத்தியத்தின் கனவு நனவாகாது. சீன, வியத்னாம், கொரியா, கியூபா மற்றும் லாவோஸ் ஆகிய சோசலிச நாடுகளில் உலக மக்களில் கால் வாசி பேர் வசிக்கின்றனர். இவை மிகவும் பின் தங்கிய நாடுகள் தான், அமெரிக்க கடல்பகுதியி லிருந்து வெறும் 90 மைல்கள் தொலைவில் உள்ள கியூபா அதை நிலைகுலையச் செய்யும் அனைத்து முயற்சிகளையும் வீரத்துடன் எதிர் கொண்டு தோற்கடித்துக் கொண்டு வருகிறது. குழந்தை பருவத் தில் சோசலிசம் நிலவும் கியூபாவின் மீதும், அதன் மக்கள் மீதும் ஏகாதிபத்தியம் பொருளா தார தடைகளை விதித்து பெரும் கஷ்டங்களை ஏற்படுத்தியது. அவர்களுக்கு நிறைய பிரச்னை கள் இருந்த போதிலும், கியூபா இதர விடுதலை இயக்கங்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. அந்நாட்டின் புரட்சி ஒட்டு மொத்த லத்தீன் அமெரிக்காவுக்கும், கரீபிய பகுதிக்கும் பரவியுள்ளது.

மார்க்சியம் -லெனினியம் என்பது இன்றைக்கும் பொருந்தும் கோட்பாடு ஆகும். அதன் பொருத்தப்பாட்டை, தேவையை வரலாறு நிரூபித்துள்ளது. கம்யுனிச எதிர்ப்பாளர்களும், பிற்போக்கு சக்திகளும் கடும் தாக்குதல்களை தொடுத்த போதிலும், தடம் பதித்த மாபெரும் அக்டோபர் புரட்சியும் அதனால் உருவாகிய முதல் சோசலிசம் அரசின் முக்கியத்துவத்தை யும் அவர்களால் நிராகரிக்க முடியாது.
1992ல் , “சமகால நிலைமையும் மார்க்சியத்தின் பொருத்தப்பாடும்” என்ற தலைப்பில் நடை பெற்ற சர்வதேச கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் கட்சி யின் கருத்துத்தாள் மிகச் சரியாக கூறியுள்ளது: தற்போது நிலவும் உலக வளர்ச்சிபோக்குகளின் தன்மை ஒரு அறிவியலாக ஒரு வழிமுறையாக, செயல்படுவதற்கு ஒரு வழிகாட்டியாக மார்க் சியத்தின் பொருத்தபாடும் , தேவையும் நியாய மானது என்பதை காட்டுகிறது. மனிதகுல விடு தலையை முழுமை பெறச் செய்ய தேவையானவை என்ன என்பதை நிறுவ மார்க்ஸ் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். பின்னர் வந்த மார்க்சிஸ்டுகளும் அதே பணியில் ஈடுபட்டனர். மனிதனை மனிதன் சுரண்டுவதும், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டுவதும் முதலாளித்துவத் தின் அடிப்படையாக இருக்கும் வரை மனித குலத்தின் விடுதலைக்கான தேடலை நிறுத்திவிட முடியாது. இன்றைய உலகில் மனிதம் ஏற்றுக் கொண்டுள்ள உரிமைகள் அனைத்தும் மக்களின் போராட்டங்களின் பங்களிப்பாகும். இந்த வர்க்க போராட்டம் தான் தற்கால வளர்ச்சிப்போகு களை உருவகபடுத்துவதுடன், மனித மனசாட்சி யுடன் இணைந்ததாக உள்ளது.

தற்கால சமுதாயத் தின் மீதும் மனித குலத்தின் அறிவு வளர்ச்சி மீதும் மார்க்ஸ் பதித்துள்ள தடயம் அழிக்க முடியாதது “முதலாளித்துவத்தின் நியாயமற்ற, மனித நேயம் அற்ற தன்மையை தற்கால உலக நிலைமை தெளிவாக வெளிப்படுத்துகிறது. முதலாளித்துவ அமைப்பு அடிக்கும்கொள்ளை யால் வளர்ந்து வரும் நாடுகளில், கோடிக்கணக் கான மக்கள் பசி, பட்டினி, நோய் கல்லாமை போன்றவை நிலவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அணுஆயுத அழிவு அபாயங் களுக்கும், மோசமாகிவரும் சமமற்ற சுற்று சூழலுக்கும் அதுவே நேரடி பொறுப்பாகும் முதலாளித்துவ சமூகங்களில்அதிகரித்து வரும ஒழுக்கக் கேடுகள், போதை பழக்கம்,வன்முறை, பாலின, இன பாகுபாடுகள் .மனிதர்களின் நல்ல குணங்களை கீழே தள்ளுவது தொடர்கிறது. சோசலிச பின்னைடைவுக்குப் பின்னர், முன்பு போலவே, தற்போதும், “முதலாளித்துவமே நிரந்தரமானது” என்ற இடைவிடா பிரச்சாரம் இருந்தபோதிலும் தலாளித்துவ அமைப்பினால் மனித குலம் சந்திக்கும் பெரிய பிரச்னைகளை தீர்க்க இயலாது என்பதை அதுவே நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

இவற்றிக்கு மாறாக:
“மார்க்சியம்-லெனினியம் என்பது இயல் பாகவே பொருள்முதல்வாதத்தை உள்ளடக் கியது, புத்தாக்க தன்மை கொண்டது. இயக் கவியலை உள்ளடக்கியது. எனவே அது வரட்டு தனமற்றது. விடுதலை என்ற பார்வையும், அதற் கான உயர்ந்த நோக்கங்களையும் வெளிப் படுத்தும் உலகப் பார்வையை கொண்டது. அது மாறிவரும் வரலாற்று நிலைமைகளை கொண்ட பல விஷயங்களை புரிந்து கொள்ளவும் கூர் ஆய்வு செய்யவும் உதவுகின்ற ஒரு கருவியாகும். விடுதலைக்கான மக்கள் போராட்ட திட்டங் களின் நோக்கங்களை வரையறுத்துக் கொடுக்கும் ஓ ர்வழிகாட்டியாகவும், அதே சமயம் மாறி வரும் வரலாற்று சூழலுக்கேற்ப தேவைப்படும் மாற்றங் களை செய்து கொள்ளும் தன்மை கொண்டது.”

1992

ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் தோற்றம் நமது அனுபவம்

VI Lenin
VI Lenin

கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஸ்தாபன கோட்பாடுகளில் முக்கியமானதாக ஜனநாயக மத்தியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் துவக்கம் ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாகும். இந்தக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் (மாநாடு) 1903 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தான் அக்கட்சியின் திட்டமும் அமைப்பு விதிகளும் மத்திய தலைமையும் உருவாக்கப்பட்டது. இந்த மாநாட்டில்தான் ஸ்தாபன கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றாக ஜனநாயக மத்தியத்துவம் லெனினால் முன்மொழியப்பட்டு நீண்ட விவாதங்களுக்குப் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு 1921-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது மாநாட்டில் ஜனநாயக மத்தியத்துவம் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஸ்தாபனக் கோட்பாடாக ஏற்கப்பட்டது.

எதிர்ப்புகள்:-

இந்தக் கோட்பாடு லெனினால் முன்மொழியப்பட்டபோதே கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தது. ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி போல்ஷ்விக் (பெரும்பான்மை) மென்ஷ்விக் (சிறுபான்மை) என பிளவுபடுவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாகவும் இருந்தது.

தோற்றத்தில் தொடங்கி இன்று வரை அது கடுமையான தாக்குதல்களையும் எதிர்ப்பையும் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. இந்த எதிர்ப் பிற்கான அடிப்படைகளை மூன்று விரிவான தலைப்பில் அடக்கலாம்.

  1. கம்யூனிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவாளர்கள் ஆகியோரின் எதிர்ப்பு.
  2. கம்யூனிஸ்ட் விரோதிகளின் எதிர்ப்பு.
  3. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்து வெளியேறியவர்கள்,  வெளியேற்றப்பட்டவர்களின் எதிர்ப்பு.

கம்யூனிஸ்ட், ஆதரவாளர்களின் எதிர்ப்பு:-

மேலே குறிப்பிட்டுள்ளபடி ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி பிளவுபடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது. அந்தக் கட்சியிலிருந்த மென்ஷ்விக்குகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர்.

கட்சியின் முடிவுகள் யாவற்றிற்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்று கூறுவது அதிகார வர்க்கத் தோரணையாகும் என்று கூறினர். பெரும்பான்மையான முடிவிற்கு சிறுபான்மையினர் உட்பட வேண்டும் என்று கூறுவது கட்சி உறுப்பினர்கள் விருப்பத்தை இயந்திரம் போல் நசுக்குவதாகும் என்று கூறினர். அனைத்து கட்சி உறுப்பினர்களும், தலைவர்களும் பொதுவான கட்சிக் கட்டுப்பாட்டை வேறுபாடின்றி கடைபிடிக்க வேண்டும் என்று கூறுவது, கட்சிக்குள் பண்ணையடிமைத்தனத்தை உருவாக்குவதாகும் என்று கூறினர்.

(சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி போல்ஷ்விக்: 76)

லெனின் இந்த வாதங்களையெல்லாம் காங்கிரசிலேயே தவிடு பொடியாக்கினார். மேலும் ஸ்தாபன கோட்பாடுகளைப் பற்றி குறிப்பாக மத்தியத்துவம் குறித்த விமர்சனங்களையும், அவை எப்படி தவறானவை என்பதையும் ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற தன் புத்தகத்தில் முன்வைத்துள்ளார்.

அமைப்பையும், கட்டுப்பாட்டையும் கண்டு பாட்டாளி வர்க்கம் பயப்படவில்லை…. கட்சியிலுள்ள சில குறிப்பிட்ட படிப்பாளிகளுக்குத் தான் கட்டுப்பாட்டு உணர்விலும் ஸ்தாபன உணர்விலும் சுய பயிற்சி இல்லாமல் இருக்கிறது. தொழிலாளி வர்க்கத்திற்கு இவை இருக்கிறது.

(ஓரடி முன்னால், ஈரடி பின்னால்)

லெனினது ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்கிற படைப்பு முழுவதுமே ஸ்தாபன கோட்பாடுகளுக்கெதிரான வாதங்களை முன்வைத்து அவற்றை அம்பலப்படுத்துவதும் அதான் முன்மொழிந்த ஸ்தாபன கோட்பாடுகள் எப்படி சரியானவை என்பதை நிலை நிறுத்துவதுமேயாகும்.

பாட்டாளி வர்க்கக் கட்டுபாட்டையும் அமைப்பையும் கண்டு பாட்டாளி வர்க்கம் பயப்படவில்லை. முதலாளித்துவ படிப்பாளிகள்தான் அதை உதறித் தள்ளினார்கள். மார்டவ் வகுத்திருக்கும் கருத்து பரந்த அளவுள்ள பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை வெளித்தோற்றத்தில் ஆதரிக்கிறது. ஆனால், உண்மையில் அது முதலாளித்துவ படிப்பாளிகளுடைய நலன்களுக்குச் சேவை செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வார்த்தைகளுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் அடங்கியிருக்கிறது என்ற மார்க்சின் நிர்ணயிப்பையும் உட்கட்சிப் போராட்டம் என்பது சமூகத்தில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தின் பிரதிபலிப்பே என்கிற லியோ சோஷியின் கருத்தையும் இணைத்து லெனினது மேற்கண்ட வரிகளைப் படித்தால் ஸ்தாபன கோட்பாடுகளுக்காக ஏன் லெனின் இவ்வளவு கடுமையாகப் போராடியிருக்கிறார் என்பது புரியும். அதாவது கட்சிக்குள் நடக்கும் கருத்துப் போராட்டங்கள் சமூக வர்க்கங்களின் கருத்துக்களுக்கிடையிலான போராட்டங்களே என்கிற புரிதலோடு இதை அணுக வேண்டும். ஆனால், இதன் பொருள் அத்தகைய கருத்துக்களை கூறுவோரின் நோக்கம் எதிரி வர்க்கத்தின் கருத்துக்களை வலியுறுத்த வேண்டும் என்பதல்ல. மாறாக எதிரி வர்க்க கருத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதே பொருள். நோக்கம் சரியாக இருப்பினும் விளைவு வர்க்க சமரசத்திற்கோ பகை வர்க்கத்தின் நலனுக்கு அடிபணிவதற்காகவோ இருந்து விடக் கூடாது என்பது தான்.

Rosa Luxemburg
Rosa Luxemburg

புகழ் படைத்த கம்யூனிஸ்ட் போராளியான ரோசாலக்ஸம்பர்க்கும் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து லெனினது கருத்துக்களை விமர்சித்தார். தற்போதைய நிலையில் இத்தகைய பரிசோதனை ரஷ்ய சமூக ஜனநாய இயக்கத்திற்கு இரட்டை அபாயகர மானதாகும். ஜாரை எதிர்த்த தீர்மானகரமான போராட்டத்தின் விளிம்பில் அவர்கள் நிற்கிறார்கள். ரஷ்ய சமூக ஜனநாயக இயக் கம் ஏற்கனவே அல்லது தற்போது அனைத்து வகையிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைக்கு வந்திருக்கிறது. கட்சியைச் சுற்றிலும் முள்வேலிகளைக் கட்டுவது தற்போதைய நிலையில் செய்ய வேண்டிய பணியை கட்சி செய்ய முடியாமல் தடுப்பதாகும். இங்கு நாம் வைத்துள்ள சோசலிச மத்தியத்துவம் குறித்த பொதுவான கருத்துக்கள் ரஷ்யக் கட்சியின் அமைப்பு விதிகளை உருவாக்குவதற்கு போதுமானவை அல்ல. இறுதியாக இத்தகைய (மத்தியத்துவம்) கோட்பாடு குறிப்பிட்ட காலச்சூழலில் நடைபெறும் ஸ்தாபன நடவடிக்கைகளாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். எந்த ஒரு அமைப்பு விதியும் தவறுகளே இல்லாதது என்று கூறிக் கொள்ள முடியாது. நெருப்பில் நீந்தித்தான் அது தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக மத்தியத்துவம் கட்சியைச் சுற்றிலும் முள்வேலிகளை கட்டியிருந்தால் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியே நடந்திருக்க முடியாது. லெனின் புரட்சியை மக்களின் திருவிழா என்று கொண்டாடினார். மக்களை கட்சியின்பால் நெருங்கவிடாத ஒரு கோட்பாட்டை புரட்சி கனியும் தருவாயில் அனுமதித்திருக்க மாட்டார். அனுபவமும் அதையே உறுதிப்படுத்தியது. உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை நிறுவி 70 ஆண்டு காலம் தாக்குப்பிடித்த தன் மூலம் நெருப்பில் நீந்தி ஜனநாயக மத்தியத் துவம் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளது என்பது வரலாற்று அனுபவம்.

நல்ல நோக்கத்திலான மற்றொரு விமர்சனம், ஜாரின் அடக்குமுறை ஆட்சியின் கீழ் செயல்பட வேண்டியிருந்த கட்சியின் ஸ்தாபன கோட்பாடே ஜனநாயக மத்தியத்துவம். முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் சட்டப்படியும் பகிரங்கமாகவும் செயல்படும் கட்சிக்கு இந்தக் கோட்பாடுகள் பொருந்தாது என்பதாகும்.

ஒழுங்காக வேலைகளைக் கவனிப்பதற்கும் மக்களை முறையாக வழிகாட்டி நடத்துவதற்கும் மத்தியத்துவம் என்ற சித்தாந்தத்தின் பேரில் அமைப்பு ரீதியாக கட்சி உருவாக்கப்பட வேண்டும். கீழிலிருந்து தேர்தல் மூலம் அமைப்புகளைக் கட்டுவது என்ற சிந்தாந்தத்தின் பேரில் அந்தக் காலத்தில் கட்சி அமைப்புகளைக் கட்ட முடியவில்லை. இதன் பயனாய், பரம ரகசியமாக கண்டிப்புடன் வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், கட்சியின் வாழ்நாட்களில் இது தற்காலிக அம்சம்தான். இந்த தற்காலிக அம்சம் ஜார் ஆட்சியை அகற்றியவுடன் அகன்றுவிடும் அப்போது கட்சி பகிரங்கமாகவும் சட்ட ரீதியாகவும் வேலை செய்யும். அப்போது ஜனநாயத் தேர்தல் என்ற சிந்தாந்தத்தின் பேரிலும் ஜனநாயக மத்தியத்துவம் என்ற சித்தாந்தத்தின் பேரிலும் கட்சி அமைப்புகள் கட்டப்படும் என்று லெனின் கருதினார்.

(பக்கம்:82-83 சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஸ் விக்) கட்சியின் வரலாறு:- சென்னை புக்ஸ் 1979 (அழுத்தம் சேர்க்கப்பட்டது))

அடக்குமுறை அமைப்பின் கீழ் மத்தியத்துவம் என்பதும் பகிரங்மாக பணியாற்றும் போது ஜனநாயக மத்தியத்துவம் என்கிற கோட்பாடும் தான் லெனினால் வரையறுக்கப்பட்டது.

முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிலும் கூட முதலாளித்துவ வர்க்கம் தான் ஆட்சி பொறுப்பிலிருக்கும். அது இடையறாது அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் கம்யூனிஸ்ட்களின் மீது தாக்குதல் தொடுக்கும்: தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே இந்தக் கோட்பாடு வடிவமைக்கப்பட்டது. கடுமையான தாக்குதல்கள் வந்த போதும் ஆட்சியில் இல்லாத பல கம்யூனிஸ்ட் கட்சிகள் தாக்குபிடித்து நின்றதற்கு அவர்கள் ஜனநாயக மத்தியத்துவத்தை கடைபிடித்ததுதான் காரணம். அதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களி லிருந்து கட்சியைக் காப்பாற்ற முடிந்தது. மாறாக ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிட்டிருந்த இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம் துயரம் மிகுந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் ஆட்சியிலில்லாத சக்தி வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியாகிய இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி முதலில் ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிட்டது. பின்னர் மார்க்சியத்தையும் கைவிட்டது என்பதையும் நாம் பார்க்கிறோம். ஜனநாயக அமைப்பிலும் கூட ஆளும் வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் மீது எத்தகைய தாக்குதல் தொடுக்கும் என்பதற்கு சிலி ஒரு வருந்தத்தக்க உதாரணமாக இருக்கிறது.

இத்தகைய நல்லெண்ணம் கொண்டோரின் மற்றொரு விமர்சனம் ஜனநாய மத்தியத்துவம் ஒரு சிறு பகுதியினரை கட்டளை இடுவோராகவோ கட்சியின் இதர பகுதியினரை இடப்பட்ட கட்டளைகளை நிறைவோற்றுவோராகவும் மாற்றிவிடுகிறது என்பதாகும். கீழ்மட்டத்தில் உள்ளோர் பணத்திற்காகவோ அல்லது சுயநலத்தை எதிர்நோக்கியோ இருந்தால் மட்டுமே மேலிருந்து கொடுக்கப்படும் கட்டளைகளை தங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் கடமையின் பொருட்டும் வாழ்வாதாரத்தின் பொருட்டும் ஏற்றுக் கொள்கிறவர்களாக இருப்பார்கள். அனைத்துத் தியாகங்களுக்கும் தயாராக ஒட்டு மொத்த சமூகத்தின் உயர்வுக்காகத் தானே முன்வந்து புரட்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற வர்க்க உணர்வு படைத்த முன்னணிப் படை மேலிருந்து வரும் கட்டளைகளை அவை தனக்கு உடன்பாடு இல்லை என்கிற நிலையில் அமல்படுத்துமா?. எனவே, மத்தியத்துவம் செயல்பட வேண்டுமானால் சிறப்பாக செயல்பட வேண்டுமானால் மத்தியத்துவத்தின் அடிப்படையிலான கட்டளை ஜனநாயக அடிப்படையில் கருத்துக்களை பிரதிபலிப்பதாக இருந்தால் மட்டுமே சாத்தியம். எந்த அளவுக்கு ஜனநாயகம் விரிவாகக் கடைபிடிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு மத்தியத்துவம் வலிமையுடையதாக இருக்கும். கருத்துருவாக்கத்தில் விரிந்து பரந்த ஜனநாயகம் என்பதும் செயல்பாட்டில் உருக்கு போன்ற கட்டுப்பாட்டுடன் கூடிய ஒற்றுமையும் என்பதே ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படை.

நட்புப் பகுதியினரிடமிருந்து வரும் இத்தகைய விமர்சனங்கள் கட்சியோ அல்லது சோசலிசமோ பின்னடைவைச் சந்திக்க நேரும் போதெல்லாம் வெளியிடப்படுகின்றன. சோவியத் யூனியன், சோசலிச முகாம் தகர்விற்குப் பின்னர் இத்தகைய விமர்சனங்கள் கூடுதலாக எழுந்தன. சில கட்சிகள் ஜனநாயக மத்தியத்துவத்தை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவதாக அறிவித்தன. பின்னர் இத்தகைய கட்சிகள் மார்க்சியத்தையே கைவிட்டதையும் உலகம் கண்டது.

கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களின் விமர்சனம்

கம்யூனிஸத்தின்பால் அக்கறை கொண்டோரின் விமர்சனத்தைப் போலன்றி கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் தவறான நோக்கத்திலிருந்து சரியோ என தோன்றும்படியான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். முதலாளித்துவ ஆதரவாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகளைப் பொறுத்த மட்டில் மார்க்ஸிய தத்துவத்தை எதிர்ப்பவர்கள். தத்துவத்தின் மீதான தாக்குதலின் ஒரு பகுதியே ஸ்தாபன கோட்பாடுகளின் மீதான தாக்குதல். ஜனநாயக மத்தியத்துவமும் மார்க்சிய தத்துவத்துவமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது. ஏனெனில், கம்யூனிசத்துக்கு முந்திய எல்லா சமூக அமைப்பும் பல்வேறு வர்க்கங்களை, பகை வர்க்கங்களை கொண்டவையே. எனவே, சோசலிசத்தின் உயர்ந்த கட்டம் வரை கம்யூனிஸ்ட்  கட்சிக்குள்ளும் பல்வேறு வர்க்கங்களின் தாக்கம் தவிர்க்க முடியாது. எனவே, ஜனநாயக மத்தியத்துவமும் தவிர்க்க முடியாதது.

முதலாளித்துவ ஜனநாயம் என்பது ஜனநாயகத்தின் உயர்ந்தபட்ச வடிவம் போன்று தோன்றுமாறு அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். உலகத்தில் எந்தவொரு முதலாளித்துவக் கட்சியும் தனது ஸ்தாபன கோட்பாடுகளை தனது உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு ஜனநாயகப் பூர்வமாக முடிவு செய்வதில்லை. இந்தியாவில் காங்கிரஸில் 6 தலைமுறையாக நேருவின் குடும்பத்தினரே கட்சிப் பொறுப்பில் அல்லது ஆட்சிப் பொறுப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மத்தியில் மட்டுமின்றி மாநிலங்களிலும் இதே நிலை. பாஜக, திமுக, அதிமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, தெலுங்கு தேசம் என்று எந்தவொரு கட்சியிலும் இதைக் காண முடியும்.

மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் கூட தன்னை தேர்வு செய்த மக்களின் கருத்துக்களை பிரதிபலிப்பவர்களாக இருப்ப தில்லை என்பது உலகம் முழுவதுமுள்ள அனுபவம். எனவே, ஜனநாயக மத்தியத்துவத்தை கேள்விக்கு உள்ளாக்குகிற தார்மீக உரிமை முதலாளித்துவ நெறிகளை தூக்கிப்பிடிப்போர்க்கு கிடையாது. முதலாளித்துவ ஜனநாயகத்தை விட ஜனநாய மத்தியத்துவம் என்பது ஜனநாயகத்தின் உயர்ந்த வடிவம் என்பதையே முதலாளித்துவ கட்சிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடு வரலாறு ரீதியாக நிரூபிக்கிறது.

அனுபவம் செழுமைப்படுத்தும்

ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலம் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றிய ஒருவர் அவருடைய பலவீனத்தின் காரணமாகவோ அல்லது கட்சியின் ஏதேனும் நிலைபாட்டினை ஏற்காததாலோ அல்லது தான் நியாயமற்ற முறையில் வெளியேற்றப்பட்டதாக கருதும் போதோ ஜனநாயக மத்தியத்துவத்தின் மீது தாக்குதல் தொடுப்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இவையெல்லாம் இருப்பினும் ஜனநாயக மத்தியத்துவத்தில் எது மேலோங்கியிருக்கும் என்பது அவ்வபோது எழுந்து வரும் புதிய நிலைமைகளோடு சம்பந்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சூழலில் மத்தியத்துவம் மேலோங்கியிருக்க வேண்டிய தேவையும் மற்றொரு குறிப்பிட்ட சூழலில் ஜனநாயகம் மேலோங்கியிருக்க வேண்டிய தேவையும் எழலாம். இவை இன்ன விகிதத்தில் இருக்க வேண்டுமென்று முன்கூட்டியே நிர்ணயிப்பது சாத்தியமல்ல. ஸ்தாபனத்தின் முதிர்ச்சி நிலைக்கேற்ப இதில் மாற்றமென்பது இயங்கியல் ரீதியாக நடந்து கொண்டேயிருக்கும். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1964-ல் தனது கட்சி திட்டம் மற்றும் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. இயங்கியல் ரீதியாக தேவையின் அடிப்படையில் இவற்றில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் காலங்களிலும் கூட போராட்டங்களினூடாக இத்தகைய மாற்றங்கள் நடைபெறும்.

இதுவரை செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சில.

  1. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு மக்கள் ஜனநாயக அரசு ஜனநாயக மத்தியத் துவத்தின் அடிப்படையில் இயங்கும் என்பது கைவிடப்பட்டுள்ளது. ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு கட்சிக்கானதே தவிர அரசுக்கான தல்ல.
  2. மாநாடுகளின் போது மேல் கமிட்டிகள் கீழ் கமிட்டிகளுக்கான செயலாளர் பெயரை முன்மொழியக் கூடாது என வழிகாட்டப்பட் டுள்ளது. ஆனால், புதிய கமிட்டிக்கான ஆலோ சனைகளை பழைய கமிட்டி முன்வைக்கும்.
  3. போட்டி இருக்கும் பட்சத்தில் ரகசிய வாக்கெடுப்புடன் தேர்தல் நடைபெறும். கண்ட் ரோல் கமிஷன் முன்பு மத்திய கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது கட்சி காங்கிரஸ் நேரடியாக தேர்ந்தெடுக்கிறது.
  4. வெகுஜன ஸ்தாபனங்களின் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகளை கட்சிக் கமிட்டிகள் தீர்மானிப்பது கூடாது.

இந்த மாற்றங்கள் முந்தைய வடிவங்களை நிராகரிப்பது என்று அர்த்தம் ஆகாது. இது வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அனுபவத்தின் அடிப்படையிலான வளர்ச்சியாகும். ஜனநாயக மத்தியத்துவம் இத்தகைய வளர்ச்சி அடிப்படையிலான மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளும் தன்மையுடையது என்பதால் அது வளர்ந்து கொண்டும் இருக்கும். அது தன்னை நிலை நிறுத்திக் கொண்டும் இருக்கும்.


மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோர் அரசு என்பதை வெளிப்புறத்தைச் சேர்ந்த ஒரு கருத்தினமாக மனித வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் அரசு என்பதே இருக்கவில்லை என்பதை நிரூபிக்க கடினமாக உழைத்திருக்கிறார்கள்.  அதேபோல் வர லாற்றில் அரசு என்பதே இல்லாத ஒரு கட்டம் மீண்டும் வரும்.

கேரளா  லா டைம்ஸ் என்ற இதழுக்கு இ.எம்.எஸ். எழுதிய கடிதத்தில் இருந்து….