மீண்டு வருமா வெனிசுவேலா?

இ. பா. சிந்தன்

வெனிசுவேலா என்கிற தென்னமெரிக்க நாட்டை 1999 வரையிலும் அமெரிக்க ஆதரவு பொம்மை அரசுகள் ஆட்சி புரிந்து வந்தவரை மேற்குலக நாடுகளோ ஊடகங்களோ அந்த நாடு குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவுமில்லை, செய்திகளாக நமக்குத் தெரிவிக்க விருப்பப்பட வுமில்லை. அதன் பிறகு 1999-ல் மக்களின் பேராதரவுடன் `ஹூகோ சாவேசின் ஆட்சி மலர்ந்த பின்னர்தான், வெனிசுவேலாவை அது வரையிலும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந் தவர்கள் எல்லாம் நீலிக் கண்ணீர் வடிக்கத் துவங்கினர்.

சாவேசும் அவரது அரசும், மக்கள் நலத் திட்டங்களையே அதற்கெல்லாம் பதிலாக கொடுத்தனர்.

  • 1999-ல் 90 பில்லியன் டாலராக இருந்த வெனிசுவேலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2013-ல் 330ரூ வளர்ச்சியடைந்து 385 பில்லியன் டாலராகியது.
  • வெனிசுவேலாவின் அயல்நாட்டு கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19ரூ ஆக குறைந்தது. ஆனால் அதேகாலகட்டத்தில், அமெரிக்காவின் கடனோ 106ரூ ஆகவும், ஜெர்மனி 147ரூ ஆகவும், ஜப்பான் 60ரூ ஆகவும் உயர்ந்தது குறிப்பிடத் தக்கது.
  • 1999-ல் 66ரூ மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழிருந்தார்கள்; அது 2013இல் 23ரூ ஆக குறைந்தது.

வறுமையினை ஒழிப்பதற்காக, 1999 முதல் 2013 வரையிலான 14 ஆண்டுகளில் மக்கள் நலப்பணி களுக்காக 550 பில்லியன் டாலர் செலவிடப் பட்டது.

  • குழந்தை இறப்புவிகிதம் 1 லட்சத்திற்கு 27 என்கிற எண்ணிக்கையிலிருந்து, 13 ஆக குறைந்தது.

நாட்டின் எண்ணெய் வளங்களை எல்லாம் நாட்டுடைமையாக்கி, அதில் வரும் வருமானத்தை வறுமை ஒழிப்பிற்கு பயன்படுத்தியது சாவேஸ் அரசு.

  • 1999 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் 22 புதிய பல்கலைக் கழகங்கள் துவங்கப்பட்டுள்ளன. 5 லட்சம் பேர் மட்டுமே கல்வி பயின்று கொண்டிருந்த நிலை மாறி, இலவசக் கல்வியால் அனைவருக்கும் கல்வி சாத்தியமாகியிருக்கிறது. உயர் கல்வியும் கூட முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணம் என்கிற வார்த்தையே இல்லாமல் போயிருக்கிறது.
  • 2000-ஆம் ஆண்டில் 53ரூ  பேர் மட்டுமே எழுத வும் படிக்கவும் தெரிந்தவர்களாக இருந்த வெனிசுவேலாவில், 2013க்குள்ளாகவே 95ரூத்தைத் தொட்டு, தற்போது 97ரூ  த்தையும் தாண்டிச் சென்றிருக்கிறது. இத்தகைய சாதனையைப் புரிவ தற்கு கியூபாவும் பெருமளவில் உதவியிருக்கிறது.
  • காலங்காலமாக பணக்காரர்கள் மட்டுமே பட்டம் பெற்று வந்த சூழல் மாறி, இன்று உலகிலேயே உயர் கல்வியில் அதிகமான மாண வர்கள் சேர்ந்து படிக்கும் நாடுகளில் வெனி சுவேலா 5வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. தென்னமெரிக்க நாடுகளில் கியூபாவுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருக்கிறது வெனிசுவேலா.

இத்தனையையும் மிகக் குறைந்த காலகட்டத் தில் சாதித்திருக்கிற மக்கள் நல வெனிசுவேலா அரசுக்கு இன்று என்னவாயிற்று?

அமெரிக்காவின் தொடர் சதித்திட்டங்கள்

உலகிலேயே மிக அதிக அளவில் எண்ணை இருப்பு கொண்ட நாடு வெனிசுவேலாதான் (சவுதி அரேபியா கூட இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறது). சாவேசின் சோசலிச அரசு அமைவதற்கு முன்பு வரை அமெரிக்காவின் கைப் பாவை அரசுகள் பல ஆண்டுகளாக வெனிசு வேலாவை ஆண்டு வந்தமையால், அமெரிக் காவைப் பொறுத்தவரையில் எண்ணை இறக்கு மதிக்கு வெனிசுவேலா எப்போதும் ஒரு நம்பிக் கையான நாடாகவே இருந்து வந்திருக்கிறது. பல ஆண்டுகளாக நாட்டின் ஒட்டுமொத்த எண்ணை வளமும் வெனிசுவேலாவை ஆண்டுவந்த ஆளும் வர்க்கத்தின் தனிச் சொத்தாகவே இருந்து வந்தது.

உலகிலேயே மிக அதிகமான எண்ணை இருப்பு கொண்ட வெனிசுவேலாவில் 80 சதவீதத் திற்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்ந்து வந்தார்கள். வெனிசுவேலா மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஹூகோ சாவேசின் அரசு பதவியேற்ற பின் நிலைமை தலைகீழாக மாறத் துவங்கியது. பிப்ரவரி 2002-ல் வெனிசுவேலாவில் இருக்கும் எண்ணை நிறுவனங்கள் அனைத்தையும் நாட்டு டைமையாக்கியது சாவேஸ் அரசு. அதில் வரும் இலாபம் முழுவதையும் வறுமைக் கோட்டுக்குக் கீழிருக்கும் 80ரூ  மக்களின் வாழ்க்கையை உயர்த் தப் பயன்படுத்தப்படும் என்றும் பல்லாயிரக் கணக்கான மக்களின் கரகோஷங்களுக்கிடையே அறிவித்ததோடு நிற்காமல், அதற்கு செயல் வடிவமும் கொடுத்தார்.

காலங்காலமாக எண்ணை வளங்களை சுரண்டி கொழுத்த வெனிசுவேலாவின் முன்னாள் எண்ணை முதலாளிகளும் அமெரிக்காவும் இணைந்து, வெனிசுவேலாவில் எப்படியாவது ஒரு ஆட்சி மாற்றத்தினை உருவாக்கவேண்டுமென காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எடுத்த/எடுத்துவருகிற முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

  • 2002-ல் சாவேசைக் கடத்தி, ஆட்சிக் கவிழ்ப் பினை நடத்த முயற்சித்தது அமெரிக்கா. பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட வெனிசுவேலா மக்கள் தெருவில் இறங்கிப் போராடி இராணு வத்திற்கு நெருக்கடி கொடுத்து அச்சதியை முறியடித்தனர்
  • உலகிலேயே மிகச் சிறந்த நம்பகமான தேர்தல் முறையினைக் கொண்ட நாடு வெனிசுவேலா தான் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் குழுவே ஆய்வு செய்து பாராட்டியும், அதனை முறைகேடான தேர்தல் முறையென்று சொல்லி, 2005-ல் எதிர்க்கட்சி யினரை பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வைத்தது அமெரிக்கா. அதன் மூலம், உலக அரங் கில் வெனிசுவேலாவின் பெயரையும் தரத்தையும் தாழ்த்திடலாம் என்கிற கணக்கினை போட்டது அமெரிக்கா. ஆனால், இம்முறையும் அமெரிக்கா வின் எண்ணம் ஈடேறாமல் போனது.
  • 2012 வெனிசுவேலா தேர்தலுக்கு முன்பாக எண்ணைக் கிணறுகள் சில தீப்பிடித்து எரிந்தது. இத்தீவிபத்திற்கு, முன்னாள் எண்ணைக் கிணறு முதலாளிகள் காரணமாக இருக்கலாம் என்பதற் கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.
  • சாவேசின் மரணத்திற்குக் காரணமான கேன்சர் உருவான விதத்திலேயே மர்மங்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன.
  •  சாவேசிற்குப் பின் வந்த மதுரோவும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர், ஒட்டுமொத்த தேர் தலையே முறைகேடாக நடந்ததென குற்றஞ் சாட்டினர். அதனைத் தொடர்ந்து நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில், எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

அடுத்தடுத்த அதிபர் தேர்தல்களில் மதுரோ வின் அரசை விட்டுவைத்தால், நிரந்தரமாக வெனிசுவேலாவைக் கைப்பற்றவே முடியாமல் போய்விடும் என்று கருதி, ஒவ்வொரு முறையும் தேர்தல் நடப்பதற்கு முன்பும், பின்பும் குழப்பங் களை விளைவிக்கத் துவங்கிவிட்டனர்.

பல முறை மதுரோவைக் கொல்ல முயற்சி நடந்தது; அவரது சீனப் பயணத்தின்போது போர்டோ ரிகோ வழியாக பயணிக்கவிடாமல் தடுத்தது; வீதிகளில் இறங்கி அரசைக் கவிழ்க்க கலவரங்களைத் தூண்டியது; தேர்தலுக்கு மறுநாளே குழந்தைகள் உட்பட பலரை அந்தக் கலவரத்தில் கொன்றது என பலவழிகளையும் கையாண்டு பார்த்தது அமெரிக்கா.

சாவேஸ் காலத்திலிருந்தே அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிவந்த அமெரிக்க சதியாளன் ரோஜர் நொரிகா மற்றும் ஒட்டோ ரெய்க் ஆகியோர், அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபைக் கூட்டத்தில் பேசுவதாக இருந்த மதுரோவை கலவரமேற்படுத்திக் கொல்ல மிகப்பெரிய சத்தித் திட்டம் தீட்டியதை வெனிசுவேலா அரசு அம்பலப் படுத்தியது.

2013-ல் சாவேசின் மரணம்

நூற்றாண்டுகளாக ஆதிக்க சக்திகளின் கை களில் நேரடியாகவோ அல்லது கைப்பாவை அரசுகளின் வழியாகவோ அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு தேசம், ஒட்டுமொத்தமாக சுரண்ட லைப் புரிந்துகொன்டு எழுச்சிபெற்று ஒரு புரட் சிகர அரசை அமைத்துவிடவில்லை. அந்நாட்டில் ஏற்கனவே இருந்த தேர்தல் முறைகளைப் பயன் படுத்தி மாற்றத்தை உருவாக்கிக்காட்டுகிறேன் என்று `ஹூகோ சாவேஸ் என்கிற ஒரு தனி மனிதனின் நம்பிக்கைக் குரலும் அவருடன் இணைந்த சில சமூக இயக்கங்களும் இணைந்து அங்கே 1998-ல் ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதனால் கீழிருந்து வலிமையாக கட்டமைக்கப் பட்ட ஒரு புரட்சிகர அரசாக அவ்வரசு உருவாக வில்லை.

சோசலிசமே தீர்வு என்கிற கருத்தும் மக்களிடத் தில் அவ்வாட்சி உருவாகிற வரையிலும் அழுத் தமாக சொல்லப்படவுமில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததுமே சாவேசும் அவரது அரசும், முதலாளித் துவத்தின் காலடியில் மண்டியிட்டெல்லாம் எவ்வித சமூக மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்றும், சோசலிசப் பாதையை நோக்கி நடைபோடுவது மட்டுமே சரியான தீர்வை நோக்கை அழைத்துச் செல்லும் என்றும் பேசத் துவங்கினர். அதனை மக்களும் நம்பத் துவங்கினர். அதன் காரணமாகவே மக்கள்நல அரசை நடத்துவதற்கு உதவுகிற வகையிலான சட்டங்களை இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையுடன் உருவாக்கப்பட்ட புதிய அரசிய லமைப்புச் சட்டத்திற்கும் மக்கள் பேராதரவு கொடுத்தனர். அதன் தொடர்ச்சியாக எண்ணை நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக அரசுடைமை யாக்கியது; கல்வியையும் மருத்துவத்தையும் முற்றிலு மாக இலவசமாக்கியது; நாடு முழுவதிலுமுள்ள மக்களை அரசில் நேரடியாகவோ மறைமுகமாக வோ பங்கெடுக்க வைத்து மக்கள் பங்கெடுப்பு ஜனநாயகமாக மாற்றத் துவங்கியது என சாவேஸ் அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பெரும்பான் மையான மக்கள் ஒத்திசைவு வழங்கினர்.

சோசலிசம் குறித்து வெனிசுவேலாவின் பெரு வாரியான மக்களுக்கு புரிதல் ஏற்படுகிற வரையி லும் தேர்தல்களின் அவசியத்தை சாவேஸ் நன்கு உணர்ந்திருந்தார். அதனாலேயே பாராளுமன்றத் தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரையிலு மான அனைத்துத் தேர்தல்களையும் வர்க்கப் போராக மாற்றி பிரச்சாரம் செய்தார். உழைக்கும் வர்க்கத்திடம் அதிகாரம் இருப்பதற்கு தேர்தல் வெற்றிகளும், அதனைத் தொடர்ந்த திட்ட நிறைவேற்றங்களும் முக்கியம் என்பதை உணர்ந்து அனைத்தையும் பிரச்சாரமாக்கினார்.

தன்னுடைய அதிகார எல்லைக்குட்பட்டிருந்த எண்ணை நிறுவனங்களை நாட்டுடைமையாக்க முடிந்த சாவேஸ் அரசால், அதற்கு அடுத்த படியாக இருந்த மற்ற முக்கியமான உற்பத்தித் துறைகளான விவசாயம் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளை அரசுடைமையாக்கவோ மக்களின் வசம் ஒப்படைக்கவோ அவ்வளவு எளிதாக இயலவில்லை. உற்பத்தி மட்டுமின்றி, உற்பத்தி செய்தவற்றை கொன்டு சேர்க்கும் விநி யோக மற்றும் விற்பனை வலைப்பின்னல்களை யும் ஆக்கிரமித்திருக்கிற பெருமுதலாளிகளிட மிருந்து பறிக்கவும் முடியவில்லை. அதனால் அதற்கு மாற்றாக மக்களிடமே அதிகாரம் அதிக மாக இருக்கும்படியான கூட்டுறவு அமைப்புகளை (சமூக உற்பத்தி நிறுவனங்கள்) சாவேஸ் அரசு அதிவேகமாக நாடெங்கிலும் உருவாக்கத் துவங் கியது. 2006-ல் சாவேஸ் தேர்தல் வாக்குறுதியாக சொல்லியபடி, தன்னாட்சி பெற்ற மக்கள் கம்யூன்கள் உருவாக்கப்பட்டன. அரசு வழங்கும் நிதியினை எவ்வாறு செலவு செய்யலாம், தங் களது கம்யூனுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை எப்படி உருவாக்கலாம் என்பதை அந்தந்த கம்யூன்களே கூடி விவாதித்து முடிவெடுக்கலாம். ஆனால் இவையெல்லாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு முன்னரே யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் சாவேஸ் 2013-ல் மரணமடைந்தார். சோசலிசக் கட்டமைப்பு அரசு அமைவதற்கு முந்தைய ஒரு மக்கள் நல அரசில் தலைமையின் பாத்திரம் மிகமுக்கியம் என்பதை சாவேஸ் பதவி வகித்த அந்த 14 ஆண்டுகளிலும் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.

சாவேஸ் உயிரோடு இருந்த காலத்திலேயே அவரைக் கொல்லவும் ஆட்சியைக் கவிழ்க்கவும் அமெரிக்கா பலமுறை முயன்று தோற்றிருந்தது. அதனை சாவேஸ் மக்களின் உதவியோடே மிக லாவகமாகக் கையாண்டு அனைத்து சதிகளையும் முறியடித்தார் (அவருடைய மர்மமான மரணத் தைத் தவிர). அவருக்குப் பின்வந்த மதுரோவுக்கு, தன்னைச் சுற்றியுள்ள சதி வலைகளும், அவர் வந்து சேர்ந்திருக்கிற பதவியின் நிலையும் புரிவதற்கு கொஞ்ச காலம் தேவைப்பட்டது.

வெனிசுவேலா மீதான பொருளாதாரப் போர்

இப்படியான சூழலில், தனக்கு ஆதரவான கட்சிகளை தேர்தல்களில் வெற்றி பெற வைத் தோ, ஆட்சிக்கவிழ்ப்பினை நடத்தியோ மதுரோ வைக் கொன்றோ, வெனிசுவேலாவினுள் நுழைய முடியாமல் போன அமெரிக்கா, எத்தனை பில்லி யன் டாலர் செலவானாலும் வெனிசுவேலாவை தனது கைப்பாவை நாடாக மாற்றவேண்டு மென்பதற்காக ஒரு புதுவகையான போரினை ஆயுதமாகக் கையிலெடுத்திருக்கிறது. அதுதான் “பொருளாதாரப் போர்”. வெனிசுவேலாவில் செயற்கையான பொருளாதார நெருக்கடியினை உருவாக்கி, அரசின் மீது மக்களுக்கு வெறுப் பினை உண்டாக்கி, மிகப்பெரிய குழப்பத்தினை விளைவிப்பதே இப்பொருளாதாரப் போரின் குறிக்கோள்.

இதன் முதலாவது சதியாக, 1999 முதல் மக்கள் நலனிற்காக உருவாக்கப்பட்டு வந்திருக்கிற உள்கட்டமைப்பு வசதியினை தகர்த்துவிட்டால், வெனிசுவேலாவின் பொருளாதார வளர்ச்சி யினை தடுத்துவிடலாம் என்பது அவர்களின் கணக்கு. அதன்படி, சாவேஸ் இறந்ததிலிருந்தே,, வெனிசுவேலாவின் மின்சார பகிர்வு நிலையங்கள் ஒவ்வொன்றாக குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றன. மின்சாரத்தை தடைசெய்து, அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு உண்டாக்க முயல்கிற முயற்சி இது. அதனைத் தொடர்ந்து, “இருளில் வெனிசுவேலா”, “மின்சாரம் கூட வழங்காத அரசு” என்று ஊடகங்கள் மூலமாக பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டன. ஆனாலும் வெனிசுவேலா அரசு, மின்பிரச்சனையை உடனுக்குடன் தீர்த்து வருகிறது.

இரண்டாவது சதியாக, உணவுப் பொருட் களை மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்யத் திட்டமிட்டது அமெரிக்க ஆதரவுக் கூட்டணி. முந்தைய ஆண்டைவிட, 30ரூ  கூடுதலாக உற்பத் தியாகியிருக்கிறது சோளம்; 5.5 லட்சம் டன் அரிசியும், 2.2 லட்சம் உருளைக்கிழங்கும் 2013-ல் உற்பத்தியாகியிருக்கிறது. இறக்குமதியே செய்யத் தேவையில்லாத அளவிற்கான உற்பத்தியிது. ஆனாலும், திடீரென சூப்பர் மார்க்கெட்டுகளில் காய்கறியோ, பாலொ, அரிசியோ கிடைக்காமல் போனது. அதிரடியாக அரசு அதிகாரிகள் சூப்பர் மார்க்கெட்டினுள் நுழைந்து பார்த்தால், அவர் களது குடோனில் டன் கணக்கில் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள். உற்பத்தியான உணவுப் பொருட்களை மொத்த மாக விலைக்கு வாங்கி, ஊருக்கு வெளியே இன்னும் ஏராளமான குடோன்களில் பதுக்கும் வேலையினை செய்துவருகிறார்கள்.

வெனிசுவேலாவின் மிகப் பெரிய பணக்கார வியாபாரிகள், முன்னாள் எண்ணை நிறுவன முதலாளிகள், எதிர்க்கட்சியினர் துணையோடு அமெரிக்க அரசு கோடிக்கணக்கான டாலர் களை செலவழித்து இப்பணியினை செய்து வரு கிறது. வெனிசுவேலா அரசோ தன்னால் இயன்ற வரை அதனை மீட்டெடுத்து மக்களுக்கு நியாய மான விலையில் வழங்கிவருகிறது.

மூன்றாவது சதியாக, பதுக்கிய உணவுப் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்து விற்பனைக்கு விடுவதன் மூலம், விலை யேற்றத்தை விண்ணுயரச் செய்துவிட்டால், அரசின் மீதான அவநம்பிக்கை மக்களுக்கு அதிகமாகும் என்று சதியாளர்கள் திட்டமிட்டனர். இதனால், உணவு உற்பத்தியில் வெனிசுவேலா தன்னிறைவு பெற்றிருந்தாலும், பற்றாக்குறையினை தீர்க்க முடியாமல் போகிற கட்டாயத்துக்குள் தள்ளப் பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு, உற்பத்தியான உணவுப் பொருட்கள் ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கப்பட்டு, அண்டை நாடான கொலம்பியாவிற்கு சட்டவிரோதமாக கடத்திக் கொண்டுபோய் விற்கப்பட்டன. இவற்றின் மூலம் எதிராளிகளின் சதிப்படி உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது. இதனால் வெனிசுவேலாவின் பணவீக்கம் 2013-ல் இருந்தே அதிகரிக்கத் துவங்கியது.

இப்படியொரு சூழலுக்காகவே காத்திருந்த மேற்குலக ஊடகங்கள், “சோமாலியாவாக மாறிக் கொண்டிருக்கிறது வெனிசுவேலா” என்று தனது பிரச்சாரப் பணியினை முடுக்கிவிட்டன. சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால், வெனிசுவேலாவின் தற்போதைய உணவு உற்பத்திமுறை பல மடங்கு முன்னேறி யிருக்கிறது. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆய்வுப்படி, வறுமை ஒழிப்பில் வெனிசுவேலாவின் உற்பத்திமுறை மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது என பாராட்டியிருக்கிறது. மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் வெனிசு வேலாவைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியு மிருந்தது.

நான்காவது சதியாக, உணவுப் பொருளல்லாத இன்னபிற தொழிற்சாலைகளின் உற்பத்தியைக் குறைப்பதற்கு தொழில் நிறுவனங்களுக்கு பெரு மளவில் பணம் வழங்கப்பட்டும், உற்பத்தியான பொருட்கள் சந்தைக்கு வராமல் இரகசியக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படவும் விநியோ கிப்பாளர்களுக்கு பெருமளவில் பணப்பட்டு வாடா நடந்துவருகிறது. வெனிசுவேலாவில் ஆட்சிக்கவிழ்ப்பினை நடத்த, அமெரிக்க மக் களின் வரிப்பணம் வாரியிறைக்கப்படுகிறது. இதற்காகவே செயல்பட்ட மூன்று அமெரிக்க நிறுவனங்களை வீடியோ ஆதாரத்துடன் அம் பலப்படுத்தி, வெனிசுவேலாவிலிருந்து வெளி யேற்றியது மதுரோவின் அரசு.

ஐந்தாவது சதியாக, மேலே குறிப்பிட்டிருக்கிற அனைத்து சதித்திட்டங்களின் மூலம் அரசுக்கு எதிராக மிகப்பெரிய வெறுப்பினை மக்களிடம் வரவைத்து, தேர்தல்களில் மதுரோ அரசைத் தோல்வியுறச் செய்து ஆட்சிக் கவிழ்ப்பினை நடத் தத் திட்டமிட்டிருக்கிறது அமெரிக்கா தலைமை யிலான சதிக் கூட்டணி.

ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா தலைமையில் சதிக் கூட்டணி

2013-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி, வெனி சுவேலா ஆட்சியினை கவிழ்ப்பது எப்படி? என்பதை விவாதிக்க ஒரு இரகசியக் கூட்டம் நடந்திருக்கிறது. அக்கூட்டத்தில் பங்குபெற்றவர் களின் விவரங்களையும், கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளையும் ஆர்.டி. செய்தித் தொலைக் காட்சி ஆதாரத்துடன் வெளியிட்டது.

1. டெமாக்ரடிக் இண்டெர்னஷனலிசம் பவுண் டேசன் – இந்நிறுவனத்தின் தலைவரும் அமெரிக்க ஆதரவு கொலம்பிய தீவிர வலதுசாரியுமான அல்வரோ உரிபே மிக முக்கியமான நபராக இக்கூட்டத்தில் பங்கெடுத்தார்.

2. கொலம்பியா ஃபர்ஸ்ட் – இவ்வியக்கம்தான் அல்வரோ உரிபேவை கொலம்பியாவின் அதிபராக்க ஆதரவளிக்கிறது.

3. எப்.டி.ஐ. கல்சல்டிங் – ஆட்சிக் கவிழ்ப் பிற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக அழைக்கப்பட்ட அமெரிக்க நிறுவனம்

4. யு.எஸ்.ஏ.ஐ.டி. (யுஎஸ் எய்ட்) லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு உதவும் அமெரிக்க நிறுவனம். இது ஒரு அமெரிக்க அரசு நிறுவனம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருக்கும் அரசுகளை கண்காணிப்பதற்காகவும், அமெரிக்க எதிர்ப்பு அரசுகளை கவிழ்க்கிற திட்டங்களை மறைமுக மாகத் தீட்டுவதற்காகவும் உருவாக்கப்பட்ட அமைப்பிது. அதன் தலைவரான மார்க் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

5. ஜே.ஜே. ரெண்டன் – லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடக்கிற தேர்தல்களில், அமெரிக்க ஆதரவு நபர்களை வெல்லவைக்க, அரசியல் தந்திரங்களையும் வியூகங்களையும் அமைக்கிற பணியினைச் செய்கிறவர்.

6. மரியா கொரினா – வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி எம்.பி.

7. ஜோலியோ போர்சஸ் – வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி எம்.பி. அக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்டவைகளையும் எடுக்கப்பட்ட முடிவுகளை யும் தொகுத்து அவர்கள் தயாரித்த இரகசிய ஆவணத்தின் சில பகுதிகள் கீழே:

வெனிசுவேலாவில் நடந்து கொண்டிருக்கிற ஆட்சியை மாற்ற, அந்நாட்டின் எதிர்கட்சியின ரோடு விவாதித்து தயாரிக்கப்பட்ட வியூகத் திட்டம் இது.

செயல்திட்டம்

வெனிசுவேலா மக்களின் இன்றைய பிரச் சனைகளான உணவுப் பற்றாக்குறை, பொருள் கிடைக்காமை போன்றவற்றை பெரியளவில் மக்களிடையே கொண்டு சென்று, ஹென்றிக் கேப்ரைல்சின் எதிர்க்கட்சியினை வெற்றிபெறச் செய்வது.

மக்களின் அன்றாடத் தேவைகளை தடை செய்வதை தொடர்ந்து செய்வதோடு மட்டு மல்லாமல், அதிகப்படுத்தவும் வேண்டும். குறிப் பாக, மின்சாரம் கிடைக்காமல் செய்து, அரசின் இயலாமையாகவும், பொறுப்பற்ற தன்மையாக வும் மக்களை உணரவைப்பது.

அமெரிக்க-வெனிசுவேலா உறவை ஆதரித்து பிரச்சாரம் செய்தால், தேவைப்படும்போது அமெரிக்க ஆதரவு அமைப்புகளை தலையிட வைக்க ஏதுவான சூழலை உருவாக்குவது.

நெருக்கடி நிலையினை வெனிசுவேலா தெருக் களில் கொண்டுவந்து, அதன்மூலம் கொலம்பிய அரசின் உதவியுடன் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளை தலையிட வைக்க முயற்சிப்பது.

வன்முறையை வெடிக்க வைத்து, அதன்மூலம் முடிந்தால் உயிரிழப்புகளையும் படுகாயங்களை யும் நிகழவைப்பது.

தொடர் உண்ணாவிரதங்களை ஊக்குவிப் பது, மக்களை கூட்டங்கூட்டமாக தெருவில் போராடவைப்பது, பல்கலைக்கழகங்கள் மற்றும் இன்ன பிற அரசுத்துறைகளில் குழப்பங்கள் விளை விப்பது.

இருக்கிற எல்லா வாய்ப்புகளையும், அமைப்பு களையும் பயன்படுத்தி அரசுக்கு இழிவினை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிக்கு நம்பகத்தன்மையினை அதிகரிப்பது.

அமெரிக்காவின் உதவியோடு, வெனிசுவேலா அரசையும் அரசின் உயரதிகாரிகளையும் போதை மருந்து கடத்தலிலும், பணமோசடியிலும் ஈடு பட்டதாக செய்தி பரப்புவது.

அமெரிக்க ஆதரவு லத்தீன் அமெரிக்க நாடு களின் அரசுகளை வெனிசுவேலாவிற்கு எதிரான நிலையில் வைத்திருப்பது.

வெனிசுவேலாவிற்கு ஆதரவாக இருக்கிற அர்ஜென்டினா, பிரேசில், பொலிவியா, ஈக்வடார், நிகாரகுவா போன்ற நாடுகளின் நன்மதிப்பை குறைத்து லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் பிரச் சாரம் மேற்கொள்வது.

அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் பெரும் பாலான பதவிகளை எதிர்க்கட்சியினர் பிடிப் பதற்கு, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அனை வருக்கும் மேலும் கூடுதலாக நிதி வழங்குவது.

எதிர்கட்சியினர்தான் மிகச்சிறந்த மாற்று என்கிற கருத்தைப் பரப்ப, ஒன்பது சர்வதேச ஊடகங்களின் பத்திரிகையாளர்களை ஏற்பாடு செய்வது, (பி.பி.சி., சி.என்.என்., நியூயார்க் டைம்ஸ், நியூயார்க் போஸ்ட், ரிவ்டர்ஸ், இஎப்இ, ஏ.பி., மியாமி ஹெரால்ட், டைம், எநnளைரஎநடடயய கிளாரின், ஏபிசி, …). வெனிசுவேலா தலைநகரில் இருக்கும் அயல்நாட்டு ஊடக சங்கத்துடனும் தொடர்பு வைத்துக்கொள்வது.

வெனிசுவேலாவின் பொருளாதார நெருக்கடி குறித்து, சர்வதேச பொதுக்கருத்தை உருவாக்குவது.

அமெரிக்காவிலிருக்கிற வெனிசுவேலா மற்றும் க்யூபாவிற்கு எதிரானவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வெனிசுவேலா அரசை வீழ்த்து கிற இவ்வியூகத்திட்டத்திற்கு உதவிகோருவது.

முன்னாள் இராணுவத்தினர், அதிருப்தி இராணுவத்தினர் என இதற்கு ஆதவளிப்பதற்கு ஒரு பெரிய பட்டியலையே தயாரித்து, ஒரு ஆயுதந்தாங்கிய இராணுவப்படையினை தயார்செய்து வைப்பது, தேவைப்படுகிறபோது அந்த இராணுவத்தை பயன்படுத்துவது அல்லது அந்நிய படைகளை அனுமதிக்க உதவப் பயன் படுத்துவது.

 அமெரிக்கா ஒரு சதிக் கூட்டணி அமைத்து இப்படியானதொரு திட்டத்தினை முன்வைத்தே வெனிசுவேலாவில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறது. என்ன விலை கொடுத்தேனும் வெனிசுவேலாவை தனதாக்கிவிட வேண்டு மென்று வெனிசுவேலாவின் பெருமுதலாளிகள், எண்ணைக்காகக் காத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு, வெனிசுவேலாவின் முன்னாள் எண்ணை முதலாளிகள், பக்கத்து நாடான கொலம்பியாவின் அதிதீவிர வலதுசாரிகள், மற்றும் வெனிசுவேலாவின் அமெரிக்கத் தலை யாட்டி எதிர்க்கட்சிகள் – என்று ஒரு மிகப்பெரிய சுரண்டல் கூட்டணி காத்துக் கொண்டிருக்கிறது.

குழப்பம் விளைவித்து, ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி, மக்களாட்சியினை மீண்டும் வராமல் பார்த்துக் கொள்கிற நடவடிக்கைகளில் இறங்கு வது  அமெரிக்காவிற்கு ஒன்றும்  புதிதல்ல. சிலி நாட்டு மக்களின் ஏகோபித்த  ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று நல்லாட்சி புரிந்து கொண்டிருந்த அதிபர் சால்வடாரை 1973-ல் இதே போன்றதொரு குழப்பம் விளைவித்தே கொலை செய்து ஆட்சிக் கவிழ்ப்பையும் நிகழ்த் தியது அமெரிக்கா. இதன் விளைவாக 40 ஆண்டு களாகியும், இன்று வரையில் சிலி நாட்டில் நம்பிக்கை தரும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசினை ஏற்படுத்த முடியாமலே போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2014 இல் துவங்கிய எரிபொருள் விலை வீழ்ச்சி

2013-2014 ஆண்டுகளில் வெனிசுவேலாவுக்கு பாதகமான இரண்டு முக்கியமான, எதிர்பாராத, அதிர்ச்சியான நிகழ்வுகள் நடந்தேறின. ஒன்று சாவேசின் மரணம், மற்றொன்று பல்வேறு சர்வதேச புறக்காரணிகளால் வீழ்ச்சியடையத் துவங்கிய எண்ணை விலை. 2012-2013 வரையிலும் ஒரு பேரல் 100 டாலருக்குக் குறையாமல் விற்றுக்கொண்டிருந்த ஒரு பேரல் எண்ணை, 30 டாலர் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. வெனி சுவேலாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 98ரூ  த்தையும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50ரூ த்திற்கு மேலும் ஆக்கிரமித்திருப்பது எண்ணை உற்பத்திதான். அதில் 80ரூ த்தை அப்படியே மக்கள் நலத் திட்டங்களுக்கு வெனிசுவேலா திருப்பியனுப்பி ஒட்டுமொத்த தேசத்தையும் ஒருசேர முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருந்த வேளையில், அந்த வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கை இழக்க வேண்டி வந்ததால், வெனிசு வேலாவால் சமாளிக்கவே முடியவில்லை என்பது தான் உண்மை. உற்பத்திச் செலவைக் கூட சமாளிக்க முடியாத நிலை வெனிசுவேலா அரசு எண்ணைத் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டது.

எண்ணை ஏற்றுமதியை மட்டுமே பெரு மளவில் நம்பியிருக்கும் பொருளாதாரத்தைக் கொன்டிருக்கும் ஒரு நாட்டில், சர்வதேச கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சியடையும் போதெல் லாம், அந்நாட்டின்  கடனின் அளவு கூடும். வெனிசுவேலாவிலும் அது நடந்து கொண்டிருக் கிறது. 1980களில் ஒருமுறை சர்வதேச சந்தையில் எண்ணை விலை குறைந்தபோதும், இதேபோன்று வெனிசுவேலாவில் நடந்திருக்கிறது.

இச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, வெனி சுவேலா மீது பல பொருளாதாரத் தடைகளை விதிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் இரன்டு முக்கியமான பிரச்சனைகளில் வெனிசுவேலா சிக்கிகொன்டிருக்கிறது. ஒன்று, அமெரிக்காவுக்கோ அல்லது அமெரிக்கத் தொடர்பில் இருக்கும் நாடுகளுக்கோ நேரடியாக பெட்ரோலை விற்க முடியாமல் போகிறது. அதற்கு சுற்றிவளைத்து சில தீர்வுகள் இருக்கிறபோதிலும், அப்படியாக பெட்ரோலை விற்பதற்கு, ஒரு பேரலுக்கு குறைந்தது 6 டாலராவது கூடுதலாக செலவா கிறது. அதனால் வெனிசுவேலா விற்கிற பெட் ரோலின் விலையும் கூடுகிறது. இதன்காரணமாக வெனிசுவேலாவின் பெட்ரோல் விற்பனையும் குறைகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணைக் கிணறுகளில் இருந்து கள்ள சந்தையில் விற்கப்படும் எண்ணையின் விலை பேரலுக்கு கிடைக்கும்போது, 6 டாலர் கூடுதலாக விற்கப்படும் வெனிசுவேலா பெட் ரோலை வாங்க முன்வரமாட்டார்கள் தானே. ஆக, சர்வதேச பெட்ரோல் விலையும் குறைந்து, வெனிசுவேலாவின் இலாபமும் குறைந்து, விற்பனை யும் குறைந்து போயிருக்கிறது. வெனிசுவேலாவின் எண்ணை விற்பனையில் 40ரூ  அளவிற்கு ஏற்கனவே முன் தேதியிட்டு எண்ணை வழங்குவதாக வாக் குறுதி வழங்கி கொடுக்கப்படுபவைதான். ஆக அதற்கான காசும் வந்து சேராது. 15,000 ரூபாய் மாத வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் ஒரு குடும்பத்தின் மாத வருமானம், திடீரென 5,000 ஆக மாறினால், என்னவாகும்? செலவை சமாளிக்க கடன் வாங்குவதும், அந்தக் கடனுக்கு வட்டி கட்ட மீண்டும் கடன்வாங்குவதும், அந்தக் கடனை அடைக்க மீண்டும் கடன் வாங்குவது மாகத் தானே இருப்போம். ஏறக்குறைய வெனிசு வேலாவும் அப்படியான சிக்கலில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறது. வேறு வருமானத்தை உருவாக்கு தற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் இப்படி யான பிரச்சனையை எதிர்கொள்வது கடினமான தாக இருக்கிறது வெனிசுவேலாவிற்கு.

ஒரு நாளைக்கு சராசரியாக 15 இலட்சம் பேரல்கள் வரையிலும் உற்பத்தி செய்து கொண்டிருந்த வெனிசுவேலா, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்குப் பின்னர் 9 இலட்சம் பேரல்கள் அளவுக்கே உற்பத்தி செய்ய முடிகிறது. அதுமட்டுமில்லாமல் தனக்கு அருகாமையில் இருக்கும் நாடுகளுக்குக் கூட சுதந்திரமாக விற்பனை செய்யமுடியாத காரணத்தில் வெகுதூரத்தில் இருக்கும் ஆசிய கண்டத்து நாடுகளுக்குத் தான் ஏற்றுமதி செய்யவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டிருக்கிறது. 2019 இல் இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணையில் 70ரூ  அளவிற்கு ஆசியாவிற்குத்தான் விற்றிருக்கிறது.

கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நாளைக்கு 10 இலட்சம் பேரல்கள் (கடந்த காலங்களில் 20 இலட்சத்திற்கும் அதிகமான பேரல்கள்) வரையி லும் உற்பத்தி செய்ய வேண்டிய ஒப்பந்தங்கள் கிடைத்திருந்தும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சில நாடுகள் பின்வாங்கியிருக்கின் றன. அதனால் உற்பத்தியும் விற்பனையும் தொடர்ந்து குறைந்துகொண்டே தான் இருக்கின்றன.

தென்னமெரிக்காவில் புதிய வலதுசாரி அரசுகளின் உருவாக்கம்

ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களையும் இயற்கை வளங்களையும் எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு சுரண்டி, திவாலாக்கிவிட்ட பின்னர் அங்கிருந்து தனது மூலதனத்தையும் அதுவரை பெற்ற இலாபத்தையும் அள்ளிக் கொண்டு வேறெங்காவது நகர்ந்துவிடும் முதலாளித்துவம். பின்னர் அதனை சரிசெய்வதற்கு மாற்று சக்தி களும் முற்போக்கு அமைப்புகளும் இடதுசாரி களும் அரும்பாடுபட்டு அத்தேசத்தையும் அதன் மக்களையும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான வாழ்க்கைக்கு மீட்டெடுத்து வரும் பணியினை மேற்கொள்வார்கள். ஓரளவுக்கு அத்தேசம் எழுந்து நிற்கிற தருவாயில், மீண்டும் சுரண்டு வதற்கு முதலாளித்துவம் வண்டிபிடித்து சரியான நேரத்திற்கு வந்து சேரும். இதனை தென்னமெரிக்க நாடுகளின் வரலாற்றை உற்று நோக்கினாலே விளங்கிக்கொள்ளலாம்.

கடுமையான நிதிநெருக்கடிகளை உருவாக்கி விட்டு அர்ஜன்டைனா, ஈக்வடார், வெனிசுவெலா என பல நாடுகளிலிருந்து காலங்காலமாக சுரண்டியவர்கள் இரவோடு இரவாக தப்பித்து ஓடிவிட்டு, நிலைமை ஓரளவுக்கு சீரானதும் மீண்டும் புதிய பெயர்களாகவும் புதிய கட்சிகளா கவும் திரும்ப வந்துகொண்டிருக்கின்றனர்.

2002 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகளில் மட்டும் தென்னமெரிக்க நாடுகளில் 7 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து இயல்பான நடுத்தர வாழ்க்கைக்கு கொண்டு வந்தது அக்காலகட்டத்தில் ஆட்சி செய்து வந்த தென்னமெரிக்க இடதுசாரி அரசுகள்தான். அவர்களில் பிரேசிலில் மட்டுமே 3 கோடி பேரின் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பிரேசிலில் சமீபத்தில் அதிதீவிர வலதுசாரியான பொல் சோனாரோ சமீபத்திய தேர்தலில் அமோ கமாக வென்று  பிரேசிலின் அதிபராகியிருக்கிறார். இராணுவத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்கி வைப்பதை ஆதரித்துப் பேசிவருபவர் அவர். இடதுசாரிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்த இராணுவ ஆட்சியையும் அப்போது நடத்தப்பட்ட சித்தரவதைகளையும் கூட பாராட்டிப் பேசுகிறார். தென்னமெரிக்காவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் பாதிக்கும் மேலான பகுதிகளை உள்ளடக்கிய தேசம் பிரேசில். அதிலும் வெனிசுவேலாவோடு 2,199 கிலோ மீட்டர் நீண்ட எல்லையைக் கொண்டிருக்கும் நாடும் கூட.

வெனிசுவேலாவுடன் 2,219 கிலோமீட்டர் அளவிற்கான எல்லையைக் கொண்டிருக்கும் கொலம்பியாவும் வெனிசுவேலாவில் குழப்பம் விளைவிக்க உதவும் நாடாக இருந்துவருகிறது. 1998-ல் சாவேஸ் ஆட்சியைப் பிடித்த அதே வேளையில், கொலம்பியாவுடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. “ப்ளான் கொலம்பியா” என்கிற பெயரில் துவக்கப்பட்ட அத்திட்டத்தின் மூலம் போதைப்பொருள் கடத் தலைத் தடுக்க கொலம்பியாவுக்கு அமெரிக்கா உதவும் என்பதுதான் ஒப்பந்தம். 2000-ம் ஆண்டில் அதற்கு அதிகாரப்பூர்வமாக அமெரிக்க காங்கிர சின் அனுமதியும் கிடைத்துவிடுகிறது. உடனே 500 அமெரிக்க இராணுவப்படையினரும் 300 அமெரிக்க ஒப்பந்தப் படையினரும் கொலம் பியாவிற்குள் நுழைந்தனர். அதுவே 2004-ல் 800 அமெரிக்க இராணுவப்படையினராகவும் 600 ஒப்பந்தக்காரர்களாகவும் அதிகரித்தது. ஆனால் அதேகாலகட்டத்தில் கொலம்பியா வழியாக அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட போதைப்பொருளின் அளவும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே தான் இருந்தது. ஆனால் கொலம்பிய அரசுகள் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு, உதவி என்கிற பெயரில் கோடிக்கணக்கில் கொலம்பியாவுக்கு அமெரிக்கா வாரி இறைத்த தும் ஒரு முக்கியமான காரணம்.

அமெரிக்காவைப் பொருத்தவரையில் கொலம் பியாவில் இராணுவ தளவாடம் அமைத்தால், அதற்கு அருகிலிருக்கும் வெனிசுவேலா, ஈக்வடார், ப்ரேசில் போன்ற இடதுசாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்க வும், தேவைப்பட்டால் ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியும் என்பதாலேயே எவ்வளவு செலவு செய் தாலும் கொலம்பியாவை மட்டும் தன் கட்டுப் பாட்டில் வைத்துகொண்டே இருக்க விரும்பியது அமெரிக்கா. வழக்கம்போல உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அட்டூழியங்கள் நிகழ்த் தும் அமெரிக்க இராணுவம் கொலம்பியாவை யும் விட்டுவைக்க வில்லை. 2003-2007 வரை யிலான ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, கொலம்பியாவில் அமெரிக்க இராணுவப் படையினர் 54 சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர அமெரிக்க இராணுவப்படையினர் இருக்கும் பகுதிகளில் வாழும் பெண்களை கட்டாயப் படுத்தி பாலியல் தொழில் செய்ய வைத்திருப் பதாக மனித உரிமை ஆர்வலர்களின் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இன்றைக்கு வெனிசுவேலா குறித்து எதிர்மறையான செய்திகளை வெளியிட் டுக் கொண்டே இருக்கிற சர்வதேச ஊடகங்கள், அமெரிக்கப் படைகள் குடியிருக்கும் கொலம் பியாவில் தான் உலகிலேயே சிரியா, சூடான் நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிகப்படியாக, 50 இலட்சம் மக்களுக்கும் மேல் உள்நாட்டு அகதிகளாக தங்கள் வாழ்விடங்களைவிட்டு வெளியேறி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறார்கள் என்பதை மறைக்கின்றன. ப்ரேசிலில் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்ததும், ஈக்வடாரில் ரஃபேல் கொரேயா என்கிற இடதுசாரி அதிபருக்கு அடுத்ததாக அதிபராகியிருக்கும் மொரானோ மேற்குலகிற்கு எதிராகப் பேசாத போக்கினைக் கடைப்பிடிப்பதாலும், கொலம்பியாவில் இருக் கும் அமெரிக்கப் படையினருக்கும் வெனிசு வேலா ஒன்றுதான் வேலை என்றாகிவிட்டது.

அதனால் கொலம்பியா-வெனிசுவேலா எல்லை யில் குழப்பம் விளைவிப்பது, பெட்ரோலிய பொருட்களின் கள்ள சந்தையை உருவாக்குவது, போலி பொலிவார் பண நோட்டுகளை அச்சிட்டு உள்ளே இறக்குவது, வெனிசுவேலாவின் இறக்கு மதியில் கைவைப்பது, வெனிசுவேலா சந்தையில் பொருட்களை மொத்தமாக வாங்கி தட்டுப்பாடு களை உருவாக்குவது என தொடர்ந்து கொலம் பியா வழியாகவே அமெரிக்கா அனைத்தையும் சாதித்துக் கொள்கிறது.

அதேபோல 2008-ல் தென்னமெரிக்க நாடு களின் கூட்டமைப்பை வெனிசுவேலாவின் சாவேஸ், ஈக்வடாரின் ரஃபேல் கொரேயா, பொலிவியா வின் இவா மொரால்ஸ் உள்ளிட்டோர் இணைந்து உருவாக்கினர். பன்னிரண்டு தென்னமெரிக்க நாடுகள் அதில் இணைந்திருந்தன. கடந்து சில ஆண்டுகளாக தென்னமெரிக்காவில் ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கும் வலதுசாரிகள், அந்த கூட்டமைப்பையே இல்லாமல் செய்யும் முயற் சியாக, ப்ரோசூர் (தென்னமெரிக்க முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு) என்கிற அமைப்பை உருவாக்கியிருக்கின்றன. ப்ரேசில், ஈக்வடார், சிலி, அர்ஜன்டைனா, கொலம்பியா, பராகுவே, உருகுவே மற்றும் கயானா ஆகிய எட்டு நாடுகள் இணைந்திருக்கின்றன. வெனிசு வேலா அங்கம் வகித்த தென்னமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் தலைமைக் கட்டிடத்தையே காலி செய்துவிட்டு வெளியேறுமாறு ஈக்வடார் அதிபர் மொரானோ கட்டளையிட்டிருக்கிறார்.

இறுதியாக…

வெனிசுவேலாவுக்கு பெட்ரோலை விற்க வேண்டும்; சீனாவுக்கோ அதிகமாக பெட்ரோல் வேண்டும். ஆக வெனிசுவேலாவுக்கு எந்தக் கேள்வியும் கேட்காமல் சீனா பண உதவி செய்து வருகிறது. அதற்கு பதிலாக வெனிசுவேலாவும் பெட்ரோல் அனுப்பி வைக்கிறது. சீனாவுக்கு சென்று சேர்கிற பெட்ரோலை நிறுத்தினாலே சீனாவின் வளர்ச்சியை நிறுத்திவிடலாம் என்று நினைக்கிற அமெரிக்கா, சீனாவுக்கு பெட்ரோல் வழங்குகிற ஒவ்வொரு நாட்டையும் குறிவைக் கிறது. அதன் ஒரு அம்சமாகத்தான் ஈரானுடன் போர் தொடுக்கவும், வெனிசுவேலாவின் மதுரோ வின் ஆட்சியைக் கவிழ்க்கவும், சீனாவுக்கு பெட்ரோல் கொண்டுசெல்லும் கப்பல்களின் பாதையில் இருக்கும் இலங்கையில் நுழைந்து இராணுவத் தளவாடத்தை அமைக்கவும் அமெரிக்கா துடி யாகத் துடித்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் வெனிசுவேலாவில் மட்டுமே தேர் தலின் மூலமாக ஆட்சியைப் பிடிக்க அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்கா நினைத்தால் இன்றைய தேதிக்கு அங்கே தேர்தலின் மூலமே மதுரோவின் ஆட்சியை எதிர்க்கட்சியின் வசம் கொண்டு சேர்த்துவிடமுடியும். ஏனெனில், ஏற்கனவே வெனிசுவேலா நாடாளுமன்றத்தில் மதுரோவின் கட்சி பெரும்பான்மையை 2015-ல் நடந்த தேர்தலில் இழந்துவிட்டது. ஆனால், மக்கள் நல சட்டங்களும் அரசியலமைப்பும் இருக்கிற இதே கட்டமைப்பில் ஆட்சியைப் பிடித்தால் அது பெரியளவுக்கு நன்மை தராது என்பதால், சாவேஸ் வருகைக்கு முன்பிருந்ததைப் போன்ற வெனிசுவேலாவை உருவாக்கி அதில் தான் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே அமெரிக் காவின் திட்டமாக இருக்கிறது. அப்போதுதான் இனி ஒருபோதும் சோசலிசம் பேசுபவர்களின் அரசு உருவாகாமல் தடுக்கமுடியும் என்பதை அமெரிக்கா நன்றாகவே உணர்ந்திருக்கிறது. அதற்காகத்தான் அவ்வப்போது சதிசெயல்  களை முடுக்கிவிட்டுக் கொண்டே இருக்கிறது.

வெனிசுவேலாவைப் பொருத்தவரையில் 95ரூ  ஏற்றுமதியான பெட்ரோலிய உற்பத்தியைத் தவிர மற்ற துறைகளையும் அதிவேகமாக மக்கள் பங் களிப்புடன் வளர்த்தெடுக்க வேண்டும் என்றா லும், இன்றைக்கு இருக்கிற மிகநெருக்கடியான சூழலிலிருந்து மீண்டு வருவதற்கு முதலில் எண்ணை உற்பத்தியில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். அமெரிக்கா விதித்திருக்கிற தடை களை உடைத்தோ, தாண்டிச் சென்றோதான் அதனை சாதிக்க முடியும். எப்போதும் காலங் காலமாக அமெரிக்க டாலரின் மூலமாகவே நடைபெற்றுவரும் எண்ணை விற்பனையை வேறு நாணயத்தில் செய்ய வேண்டும். அதன் ஒரு முயற் சியாகவே பெட்ரோஸ் என்கிற நாணயத்தை உருவாக்குவதாக மதுரோ சமீத்தில் அறிவித்தார். அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை களை ஒன்றுமில்லாமல் செய்திடலும் வேண்டும்.

தென்னமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பை அழித்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக் கடியையும், கொலம்பியா வழியாக பயங்கரவாத மற்றும் இராணுவ நெருக்கடியையும், பொருளா தாரத் தடைகளைத் திணித்து சர்வதேச ஏற்றுமதி -இறக்குமதிகளை தடுத்து கடன்சுமையை ஏற்றிய நெருக்கடியையும், உள்நாட்டிலேயே அதிதீவிர வலதுசாரிகளுக்கு பணமாகவும் ஆயுதமாகவும் கொடுக்கிற நெருக்கடியையும் வெனிசுவேலாவின் மக்கள் ஒருங்கிணைந்து தங்களின் சக்திக்கேற்ப குரல் கொடுத்து எதிர்த்துக் கொண்டே இருக் கிறார்கள்.

உலகிலேயே அதிகமான எண்ணை வளத்தைக் கொண்டிருக்கிற நாடான வெனிசுவேலாவை தனக்கு ஆதரவான நாடாக மாற்றிவிட்டால், அதன்பிறகு தென்னமெரிக்கா முழுவதையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ளலாம் என்பதும் அமெரிக்காவின் கனவு. வெனிசுவேலாவை அவர்களிடம் காவு கொடுப்பதன்மூலம், அங்கே இலவசமாகவும் எல்லொருக்கும் சமமாகவும் கிடைக்கத் துவங்கியிருக்கிற கல்வியும் மருத்துவ மும் இன்னபிற அத்தியாவசிய வசதிகளும் பறிக் கப்பட்டுவிடும். எண்ணைக் கிணறுகள் அனைத் தும் வெனிசுவேலாவுக்கு சற்றும் தொடர் பில்லாத பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடும். அதனை முறியடிப்பதும், சர்வதேச நேச சக்திகளைத் திரட்டி அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் திமிர்த்தனைத்தை வளரவிடாமல் தடுப்ப தும் உலகின் குடிமக்களாகிய நம் ஒவ்வொரு வரின் கடமையுமாகும்.…

தடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா!

கியூபாவின் ராணுவ சர்வாதிகாரி படிஸ்ட்டா அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது ஃபிடல் தலைமையிலான புரட்சிகர குழு தாக்குதல் துவக்கிய நாள் 1953ம் ஆண்டு ஜூலை 26. 1959 ஜனவரியில் புரட்சி வெற்றி பெற்று, தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்த நாள் முதல், கியூபாவின் தேசிய விடுமுறை தினமாக ஜூலை 26, அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு அலுவலகங்களில் இனிப்பு வழங்கும் விழாவாக காண இயலவில்லை. இல்லம் தோறும் இனிப்பு தயாரிப்பையும், விநியோகத்தையும், கோலாகல கொண்டாட்டங்களையும், கியூபா முழுவதும் காணமுடிகிறது. ஒவ்வொரு அருகமைப் பகுதி (Neighbour hood) குடியிருப்புகளிலும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இடம் பெறுகிறது. புரட்சி குறித்து அறிந்த முதியவர் முதல் வரலாற்றைக் கற்றுக் கொள்ளும் குழந்தைகள் வரை அனைவரும் பங்கேற்பதாக இருக்கிறது.

”அக்னி குஞ்சொன்று கண்டேன்,
அதை ஆங்கோர் காட்டிடை,
பொந்தினில் வைத்தேன்,
வெந்து தனிந்தது காடு”

என்ற வரிகள் இந்தியாவின் விடுதலை வேட்கையைத் தூண்டும் வகையில், பாரதி பாடியது. அதேபோல் தென் அமெரிக்காவின் இன்றைய இடதுசாரிகள் தலைமையில் ஆட்சியமைப்பிற்கும், அரசியல் மாற்றங்களுக்கும், சின்னஞ்சிறிய கியூபா அக்னிக் குஞ்சாக இருந்து, பற்றி எரியும், அரசியல் ஈர்ப்பைக் கொண்டதாக வளர்ந்து வருகிறது.

கியூபா குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம், “பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெறாவிட்டாலும், கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வந்த கியூபாவைத் தனிமைப் படுத்துவது என்ற கொள்கையின் தோல்வியை, அமெரிக்க அதிபர் ஒபாமா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்”, என்று கூறுகிறது. இப்படி மதிப்பீடு செய்ய காரணமாக, இரண்டு நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒன்று அமெரிக்கா கியூபாவுடன் தனது அரசு முறை உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் என அறிவித்தது. இரண்டு 17 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க சிறையில், உளவாளிகள் என குற்றம் சுமத்தி, வேண்டுமென்றே சிறையில் அடைக்கப் பட்டிருந்த 5 கியூபர்களை அமெரிக்க அரசு விடுதலை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானதும் ஆகும்.
மேற்படி இரண்டு நிகழ்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான நிர்பந்தம் காரணமாக உருவானது. குறிப்பாக அமெரிக்காவிற்கு நெருக்கமாக அமைந்துள்ள, தென் அமெரிக்க நாடுகள் ஏற்படுத்திய தாக்கம் ஆகும். தென் அமெரிக்க நாடுகள் பற்றியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. ”ஹியுகோ சாவேஸ் மரணத்தால் ஏற்பட்ட பின்னடைவைக் கடந்து, வெனிசுவேலா மற்றும் இதர தென் அமெரிக்க இடதுசாரி அரசாங்கங்களும், நவீன தாராளமயம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்குச் சவால் விடுத்து, தமது மாற்றுப்பாதையில் முன்னேற கடுமையாகப் போராடி வருகின்றன” என்பது தீர்மானத்தின் முக்கிய வரிகள். கியூபாவுடன் அமெரிக்கா தனது உறவை புதுப்பித்துக் கொள்ள முன் வந்தது, இந்தப் பின்னணியில் தான் எனத் தீர்மானம் சுட்டுகிறது. மேலும் தென் அமெரிக்காவின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து அளித்த குரல், கியூபா தனிமைப் படுத்தப்படக் கூடாது என்பதாகவே இருக்கிறது. அமெரிக்காவால் அதைப் புறக்கணிக்க முடியவில்லை, என தீர்மானம் மதிப்பீடு செய்கிறது.

இது கியூபா மீதான மனிதாபிமான உணர்வு என்பது மட்டுமல்ல. கியூபாவின் அரசியல் மீதான நாட்டமும், கியூபா பின்பற்றி வரும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள், மீதான ஈர்ப்பும் இணைந்த ஒன்று ஆகும்.

குரலின் வலிமை:
உலகறிந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், கேபரியேல் கார்சியா மார்க்வஸ், ஃபிடல் காஸ்ட்ரோ குறித்துக் குறிப்பிடும்போது, சொன்ன வார்த்தைகள் ”குரலின் வலிமை”. “காதுமடல்கள் சிலிர்க்க, தங்களின் அன்றாட வேலைகளை மறந்து, இந்தக் குரலின் வலிமையில் லயித்துப் போனார்கள், நேரம் செல்ல செல்ல, தங்களின் வேலைகளைச் செய்து கொண்டே, காதுகளை, ஃபிடல் காஸ்ட்ரோ விண் உரையின் மீது வைத்த வண்ணம் செய்து கொண்டிருந்தனர். அது ஏழு மணிநேர உரை, நாங்கள் தங்கியிருந்த ஸ்டார் ஹோட்டல் துவங்கி, தெருக்கள், வேலைத்தலங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும், அந்த உரை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. கைகள் வேலையில் இருந்தாலும், கவனம் ஒலித்த குரலில் இருந்ததைக் காண முடிந்தது”, என மார்க்வஸ் தன்னுடைய முதல் கியூப அனுபவம் பற்றி, இவ்வாறு எழுதியுள்ளார்.

இது ஏதோ ஒரு புகழ்ச்சிக்காக பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல. பேச்சு என்பது தனிச்சிறப்பாக இருந்தாலும், ஃபிடல் தனது, அரசியல் உறுதியைக் குறிப்பாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை வெகுமக்கள் முழுமையாகப் பங்கேற்கும் திருவிழாவாக, மாற்றிக் காட்டிய பெருமை கொண்டவர். உதாரணமாக 6 வயது சிறுவன் ஏலியன் கோன்சலாஸ், அவனுடைய பெற்றோரிடம் இருந்து பிரிந்து, அமெரிக்காவின் மியாமி யில் குட்டிவைக்கப்பட்டிருந்த விவகாரத்தில், கியூபா முழுவதும் நடந்த போராட்டத்தைக் குறிப்பிடலாம். இறுதியில் அமெரிக்காவின் நீதிமன்றம், ஏலியன் என்ற சிறுவனை அமெரிக்காவில் வைத்து இருக்கக் கூடாது. அவன் பெற்றோருடன் வசிக்க அனுமதிக்க வேண்டும், அதற்காக அவனை கியூபாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும், எனத் தீர்ப்பு வழங்கியது. ஒரு குழந்தைக்கும், தந்தைக்குமான உறவை அமெரிக்கா, கியூபாவிற்கு எதிராகப் பயன்படுத்த நினைத்தது, இறுதியில் கியூப மக்களின் போராட்டங்களால், அமெரிக்கா அம்பலப்பட்டு நின்றது. 2001 ம் ஆண்டில் அந்தச் சிறுவன் ஹவானா நகரத்திற்கு வந்த போது, ஃபிடல் தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.

மற்றொரு உதாரணம் எழுத்தாளர் மார்க்வஸ் குறிப்பிடுகிறார், “ஒருமுறை எங்களுடன், சேகுவேரா சுற்றி வளைத்துக் கொல்லப்பட்டது குறித்தும், மொண்டென் அரண்மனை முற்றுகையிடப்பட்டு, அலெண்டே கொல்லப்பட்டது குறித்தும் ஃபிடல் ஆற்றிய உரைகள் வரலாற்றுச் சொற்சித்திரங்கள்” என்கிறார். லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான, வெளிநாட்டுக்கடன் குறித்து ஃபிடல் ஆற்றிய உரை மிகச் சிறப்பு வாய்ந்தது. “இந்தக் கடன் திருப்பிச் செலுத்த முடியாதது. கடனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள விளைவுகள், பொருளாதார வீழ்ச்சி, சமூக பொருளாதார பாதிப்புகள், சர்வதேச உறவுகளில் பின்னடைவு என சகல பரிமாணத்தையும் தொட்டு, லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமைக்கான வரைவாக நீட்சி பெற்று, வானத்தைப்போல் விரிந்து பரந்து, அந்த உரை அமைந்ததாகக் கூறுகிறார். அந்த விவாதங்களின் தொடர்ச்சியாக, ஹவானாவில் மிகப்பெரிய கருத்தரங்கம் நடத்தி, பல துறை நிபுணர்களைப் பங்கேற்கச் செய்து, அவரின் வரைவு தீர்மானத்தைக் காட்சிப்படுத்தினார். அதுவே பின்னாளில், பொலிவாரிய மாற்று வங்கி அல்லது, லத்தீன் அமெரிக்க கரீபியன் நாடுகளின் சமூகம் போன்ற அமைப்புகள் உருவாக அடித்தளம் இட்டது.

வக்கிரமான தடைகள்:
இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகின் எல்லாத் திசையிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த ராணுவ நடவடிக்கைகளை கையாள்வதைப் பார்க்கிறோம். 100க்கும் மேற்பட்ட நாடுகளில், அமெரிக்கா தனது ராணுவ நிலைகளைக் கொண்டுள்ளது, என மைக் மார்க்வஸ், என்ற எழுத்தாளர் தனது ”பேரரசு என்பதன் பொருள் என்ன?” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். இந்நிலையில் கியூபா அமெரிக்காவின் மிக அருகில் உள்ள நாடு. அங்கு புரட்சி நடைபெற்றதையோ, தனது பொம்மை அரசான பாடிஸ்ட்டா விரட்டப்பட்டதையோ, சோசலிச அரசியல் கொள்கை உருவானதையோ அமெரிக்காவினால் அங்கீகரிக்க முடியவில்லை.

ஒரு சில தடைகள் அல்ல, ஏராளமான பொருளாதார தடைகளை அமெரிக்கா கியூபா மீது விதித்தது. அதாவது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள், 10 சதம் அளவிற்கு அமெரிக்க உதிரிபாகத்தைக் கொண்டிருக்குமானால், அப்பொருள் கியூபாவிற்கு அனுப்பப்படக் கூடாது, என்ற தடையை அமெரிக்கா விதித்தது. சர்வதேச நாணய பரிவர்த்தனையாக அமெரிக்காவின் டாலர் இருந்தாலும், அதை கியூபா பயன்படுத்தக் கூடாது. லத்தீன் அமெரிக்க நாடுகளில், “கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உலக வங்கி மற்றும் அமெரிக்க கண்டத்தின் வளர்ச்சி வங்கி ஆகியவையிடம் இருந்து கடன் பெற இயலாத, ஒரே நாடு கியூபா”, என ஃபிலிப் பெரஸ் ரோக, என்ற எழுத்தாளர், லத்தீன் அமெரிக்கா ஒரு பார்வை, என்ற இதழில் குறிப்பிடுகிறார்.

ஃபர்ஸ்ட் கரீபியன் இண்டர்நேசனல் பேங்க் மற்றும் இங்கிலாந்து வங்கியான பார்க்லேஸ் ஆகியவை, கியூபாவுடன் செய்து கொண்ட பலக் கோடி டாலர் ஒப்பந்தங்களை, அமெரிக்காவின் மிரட்டல் காரணமாக நிறுத்திக் கொண்டன. ஏனென்றால் சுவிட்சர்லாந்து நாட்டின், வங்கியான யுபிஎஸ், கியூபாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக, 100 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஐரோப்பாவின் பெரிய நிறுவனமான சிரான் கார்ப்பரேசன் குழந்தைகளுக்கான நோய் தடுப்பு மருந்து வர்த்தகத்தை மனிதாபிமானம் கருதி, கியூபாவுடன் செய்து வந்தது. இதற்காக, அந்த நிறுவனத்திற்கு 168500 டாலர் அபராதம் விதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனம், கியூபாவுடன் தனது வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டது. அமெரிக்க நிறுவனமான, ஜெனரல் எலெக்ட்ரிக், ஃபார்மாசியா, அமெர்ஷம் ஆகிய சுவிஸ் மற்றும் இங்கிலாந்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, கியூபாவுடனான வர்த்தகத்தை தடை செய்தது.

கனடா நாட்டின் ஷெரிட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்கள், கியூபாவுடனான வர்த்தகத்தை நிறுத்தாததால், அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப் பட்டார்கள். அமெரிக்காவின் தடைகளை மீறி செயல் பட்ட அமெரிக்க குடிமக்கள் 316 பேர், 537 விதமான அபராதங்கள் விதிக்கப்பட்டு 2005 அக்டோபர் 12 அன்று, அமெரிக்க அரசினால் தண்டிக்கப்பட்டார்கள். 2004ம் ஆண்டில் மட்டும், 77 நிறுவனங்கள், வங்கிகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை, அமெரிக்காவின் தடையை மீறி, கியூபாவுடன் உடன்பாடு கண்ட காரணத்திற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து எண்ணற்ற நிகழ்வுகளை, ஃபிலிப் பெரஸ் ரோக, குறிப்பிடுகிறார்.

2005 ஏப்ரல் 29ல், அமெரிக்க அதிபர் புஷ், அமெரிக்காவின் வங்கிகளில், கியூபாவைச் சேர்ந்தோர் வைத்து இருந்த, சட்ட விரோதமான 198 மில்லியன் டாலர் பணத்தை, அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் இருந்து, கியூபாவிற்கு எதிராகச் செயல்பட்ட, தீவிரவாத இயக்கத்திற்கு அளிக்க வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டார். இத்தகைய தடைகள் துவக்கத்தில் இருந்தே அமலாகி வருகிறது. சோசலிச சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, 1992ல் சீனியர் புஷ் ஆட்சியில் கியூபா ஜனநாயகச் சட்டம் என்ற பெயரில் டாரிசெல்லி தடை மசோதாவை அமல்படுத்தி தனது ஆதரவு நாடுகளையும், கியூபாவுடனான, வர்த்தகத் தொடர்பைத் துண்டிக்கச் செய்தது. இதைத் தொடர்ந்து 1996 கிளிண்டன் தலைமையிலான, ஜனநாயகக் கட்சியின் ஆட்சியிலும் ஹெல்ம்ஸ் – பர்ட்டன் சட்டத்தின் மூலம், சர்வ தேச அளவில், எந்த ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு கியூபாவுடன் வர்த்தக உடன்பாடு கண்டால், அது அமெரிக்காவின் எதிரியாகப் பிரகடனப் படுத்தப்படும், என அறிவித்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத் தடையை சந்தித்து வந்தாலும், கியூபா அமெரிக்காவின் மிரட்டலுக்கும், தடைக்கும் அடிபணியவில்லை. இத்தகைய தடைகளால், கியூபா சுமார் 83 ஆயிரம் மில்லியன் டாலர் (சுமார் 15லட்சம் கோடி ரூபாய்) இழப்பைச் சந்தித்துள்ளது. இவ்வளவு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், தனது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் எதிலும் கியூபா கை வைக்கவில்லை. மாறாக மக்களை எளிமையானவர்களாக வாழ வேண்டுகோள் விடுத்தது. இறக்குமதி செய்து பயன்படுத்தும் பொருள்களைத் தவிர்க்க வேண்டுகோள் விடுத்தது. இதற்கு மக்கள் செவி சாய்த்தனர், என்பதில் இருந்தே இன்றைய கியூபாவின் வளர்ச்சியை மதிப்பிட முடியும்.

சோசலிச நாடுகளின் பின்னடைவும் – கியூபாவின் அரசியலும்:

உலகின் ஆதர்ச சக்தியாக விளங்கிய சோவியத் யூனியன் சிதருண்டு, சோசலிச கொள்கைகளைக் கைவிட்ட போது, கியூபா கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தான் எதிர்பார்த்து இருந்தனர். உண்மையில் பாதிப்பு இருந்தது. கியூபாவின் சர்க்கரை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதி நின்றுபோன நிலையில், அதை எதிர்கொண்டு முன்னேறிய சோசலிச நாடு என்ற பெருமைக்குரியது கியூபா.

அமெரிக்காவின் ஹெல்ம்ஸ் – பர்ட்டன் சட்டத்தின் காரணமாக, கியூபாவின் சர்க்கரையை இறக்குமதி செய்து கொண்டிருந்த 17 நாடுகள், தங்களின் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டன. ஏற்கனவே சோவியத் யூனியனின் இறக்குமதி நின்று போன நிலையில், கியூபா நிலை குழைந்து விடும் என எதிர்பாத்தார்கள். மாறாக கியூபா தனது சந்தை வியூகத்தை உள்நாடு சார்ந்ததாக மாற்றிக் கொண்டது. கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்க கியூபர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதற்கு செவி சாய்த்த மக்கள்,

1. வட அமெரிக்க முறை வாழ்வை நிறுத்தி, எளிய ஆற்றல் முறை வாழ்விற்குத் திரும்பினர்.
2. கூட்டு வாழ்வின் மூலம் எரிசக்தி பயன்பாட்டைக் குறைத்தார்கள்.
3. நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்குமான வாழ்முறை இடைவெளியைக் குறைத்தார்கள்.

12 மணிநேரம் மின்வெட்டு, மக்கள் தங்களின் பெட்ரோல் வாகனங்களான மகிழ்வுந்து, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கைவிட்டு பொதுவாகணங்களான பெரிய டிராம் பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு, முடிந்த அளவு நடந்தே செல்வது அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்துவது, என்ற அரசின் வேண்டுகோள். ஆகியவற்றை எதிர் கொண்ட விதம் வளரும் நாடுகள் பலவும் பின்பற்ற வேண்டிய ஒன்று. நாட்டின் மக்கள் அத்துணை பேரும் ஒத்துழைக்காமல் இந்தத் துணிச்சலான முடிவை, ஒரு அரசு எடுத்திட முடியாது. இங்கேயும் கியூபாவின் அரசின் தலைவர் பொறுப்பில் இருந்த ஃபிடலின் குரலின் வலிமையை உணர முடியும்.

இவை சாதாரண வேண்டுகோள் என்பதை விடவும், இக்கொள்கையைப் பின்பற்றுவதற்கும், அதைத் தொடர்ந்து, மேற்படித் துறைகளில் மேம்பாடு காண மக்களின் ஒத்துழைப்பை நாடவும், சாலைகளில் சின்ன சின்ன விளம்பரங்களைப் பார்க்க முடியும். மின்னாற்றல் புரட்சி, விவசாயப் புரட்சி, சோசலிசமா? பார்பாரிசமா? (சமத்துவமா? காட்டுமிராண்டித் தனமா?) என்ற சிறிய அளவிலான, ஃபிளெக்ஸ் விளம்பரங்கள் சாலையின் ஓரத்தில், யாருக்கும் இடையூறு இல்லாமல், ஆனால் பார்வையில் படும்வகையில் திட்டமிட்டு வைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். மக்களின் உணர்வோடு கலந்ததாக மேற்படி விளம்பரங்கள் அமைந்தன.

இது உள்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. அதேபோல் உலக அளவிலான மக்களின் ஆதரவையும் கியூபா திரட்டியது. ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், கியூபா ஆதரவு மாநாடு, 4 முறை நடந்துள்ளது. தமிழகத்தின் சென்னை மாநகரில் 2வது ஆசிய – பசிபிக் மாநாடு, 2006 ஜனவரி, 20,21 தேதிகளில் சிறப்புற நடத்தப்பட்டது. இதுபோல், பல்வேறு கண்டங்களில் நடந்த மாநாடுகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க நடவடிக்கைகளை அம்பலப்படுத்திடவும், கியூபாவிற்கான ஆதரவை வென்றெடுக்கவும் உதவியது. இது மிகப்பெரிய அளவில் பேசப்பட வேண்டிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் ஆகும்.

லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான நட்பு:
அமெரிக்கா உலகின் பல நாடுகளை இணைத்து, கியூபாவிற்கு எதிரான தடைகளை உருவாக்கி, நிர்ப்பந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் கியூபா மிகச் சாதாரணமாக தனது அண்டை நாட்டினரை மிக நெருக்கமான நண்பர்களாக மாற்றிக் கொண்டிருந்தது. லத்தீன் அமெரிக்கா முழுவதுமே, அமெரிக்காவிற்கான செல்வ சுரங்கமாக இருந்தது. அந்தளவிற்கு நேரடி சுரண்டல் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது. கடந்த 500 ஆண்டுகளாக லத்தீன் அமெரிக்காவின் 85சதம் நிலம் அமெரிக்க ஆதரவு கைக்கூலிகளின் வசம் இருந்தது. உலகமயம் என்ற சொல் உருவாகும் முன்பே அதன் கொடூர மாதிரிகளை, அமெரிக்கா லத்தீன் அமெரிக்க நிலங்களில் தான் அமலாக்கிப் பார்த்தது.

அங்கு இருந்த பொம்மை அரசுகளைத் தூக்கி எரியும், புரட்சிக்குழுக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த பின்னணியில் தான், கியூபாவின் அரசியல் உறுதியும் ஒரு இணையாகச் செயல்பட்டு வந்தது. வெனிசூவேலா வில் சாவேஸ் தலைமையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், 2சதம் பேரிடம் மட்டுமே இருந்த நிலத்தை அபகரித்து, 63 சதமான வெனிசூவேலாவின் ஏழைமக்களுக்கு வழங்கினார். இதேபோல் பொலிவியா, சிலி, அர்ஜெண்டைனா, நிகரக்குவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், பன்னாட்டு நிறுவனங்களை நாட்டுடைமையாக அறிவித்தது ஆகியவை, மேற்படி அரசியல் ஒற்றுமையின் வெளிப்பாடு என்றே கருதிட முடியும்.

2005ம் ஆண்டில் ஃபிடல் வெனிசூவேலாவிற்கு சென்ற போது, அவருக்கு வெனிசூவேலா அரசின் விருதான அன்கோஸ்தூரா வழங்கப்பட்டது. சாவேஸ் உரையாற்றுகிற போது, “எங்கள் சகோதரரை, தோழரை, புரட்சிப்போராளியை, இந்தக் கண்டத்தின், பெருங்கடலின், சொர்க்கத்தின் மாண்பைக் காத்தவரை நாங்கள் வரவேற்கிறோம்”, என உணர்ச்சி மேலோர்கள்க் கூறினார். அதே ஆண்டில் தான், அமெரிக்கா முன்வைத்த, அமெரிக்க கண்ட நாடுகளுக்கான திறந்த வர்த்தக தளம் என்ற அமைப்பிற்கு எதிராக, அமெரிக்க நாடுகளுக்கான பொலிவாரிய மாற்று, என்பதை அறிவித்தனர். இவை கியூபா லத்தீன் அமெரிக்காவிற்கான அரசியல் வழிகாட்டி, என்ற அங்கீகாரத்தை வெளிப்படுத்துகின்றன.

இத்தகைய தொடர் முயற்சிகளின் பலனாகத் தான் கியூபா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா விலக்க வேண்டும் என்ற தீர்மானம், ஐக்கிய நாடுகள் சபையில், கியூபாவினால் 17 முறை முன்வைக்கப்பட்டு, 195 நாடுகள் கொண்ட அவையில் அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளின் எதிர்ப்பால் தொடர்ந்து ரத்து ஆகி வருகிறது. இந்த நடவடிக்கைகள், கியூபாவைத் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக அமெரிக்காவைத் தனிமைப்படுத்தியுள்ளது.

தன்னிறைவுக்கான வளர்ச்சியை நோக்கி:
வெனிசூவேலாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கியூபாவிற்கான எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய உதவியது. சுற்றுலாவில் கியூபா செலுத்திய கவனம், மிகப்பெரிய அந்நிய செலாவணியை ஈட்டித் தந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து, மொத்தமாக கியூபாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவியது. குறிப்பாக விவசாயத்தில் கியூபா மேற்கொண்ட நடவடிக்கை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
2000 ஆண்டுகளின் துவக்கத்தில் தோமஸ் ஃபோர்கே என்ற பத்திரிகையாளர், ஃபிடலிடம் நடத்திய உரையாடல், புத்தகமாக தமிழிலும் வந்துள்ளது. நேருக்குநேர் என்ற அந்த புத்தகத்தைத் தமிழில் அமரந்த்தா என்ற எழுத்தாளர் மொழி பெயர்த்துள்ளார். அதில் ஃபிடல் தனது கருத்தை பதிவு செய்கையில், “ ஒரு கட்டத்தில், விவசாயம் குறித்து குவியல் குவியலாக புத்தகங்கள் படித்தேன். குறிப்பாக மேய்ச்சல் நிலம், மாற்றுப் பயிர்கள் குறித்து ஆழமாகப் படித்தேன், வெப்ப மண்டல விவசாயம், விவசாய நுணுக்கங்கள் குறித்து 100 புத்தகங்களாவது படித்திருப்பேன்”, எனக் கூறுகிறார்.

இந்தப் பின்னணியில் தான் கியூபாவின் விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காண வேண்டும். ஃபிடல் இத்தகைய விவாதங்களை நடத்துகிற போது, அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் மேலும் கற்பதும், அதற்கேற்ப மாற்றங்களை மேற் கொள்வதும், வேகமான செயல்பாடு நடைபெறுவதும் சாத்தியமாகும். 1990 – 2000 ஆண்டுகளில் கியூபாவின் விவசாயம் 6 மடங்கு அதிகரித்தது. விவசாய நிலங்களில் அளவு 4 மடங்கு அதிகரித்தது. காய், கனிகளின் உற்பத்தியைப் பெருக்கி, அரிசி, கோதுமை ஆகியவற்றின் உற்பத்தியைக் குறைத்துள்ளனர். பலரும் ஹவானாவில் இருந்து கிராமங்களுக்கு திரும்பிச் செல்லும் அளவிற்கு விவசாயத்தில் கூலி கிடைத்தது. நகரங்களில் மொட்டைமாடி தாவர பயிர் முறை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கோழி, முயல், பன்றி, போன்ற இறைச்சிக்கான விலங்குகளை புறநகர் மற்றும் கிராமப்புற வீட்டு மேல் தளங்களில் வளர்க்கும் முறை உருவானது. விவசாயப் பண்ணைகளை, அரசின் ஆலோசனைப்படி பெண்கள் நடத்துகின்றனர்.

கியூபாவின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்களிப்பு செய்திருப்பது கல்வி. அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. “லத்தீன் அமெரிக்காவில் மாபெரும் குற்றமொன்று இழைக்கப்பட்டு வருகிறது. நிலத்தின் விளைபொருளினாலேயே, முழுமையாக வாழ்ந்து வரும் நாடுகளில், மக்கள் நகர வாழ்க்கைக்கான அடிப்படையில் அறிவூட்டப்படுகிறார்கள். பண்ணை வாழ்க்கை முறையில் பயிற்றுவிக்கப் படுவதில்லை. தமது மக்களை அவர்களின் உணர்வுகளின் போக்கிலும், சிந்தனைப் பயிற்சியிலும் கல்வியூட்டும் நாடே சிறந்த நாடு. கல்வி வளமிக்க நாடு என்றும் வலிமையுடனும், சுதந்திரத்துடனும் திகழும்”, என ஃபிடல் மான்கடா படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் காரணமாக, கைதியாக, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, குறிப்பிடுகிறார். இதுவே புரட்சிக்குப் பின் அமலாக்கப் பட்ட துவக்க கட்ட கல்விக் கொள்கையாக இருந்தது. புரட்சி முடிந்த ஒரே ஆண்டில், கியூபா முழு எழுத்தறிவு பெற்ற நாடாக வளர்ச்சி பெற்றது.

வியத்தகு மருத்துவ வளர்ச்சி:
கியூபாவிற்கு, எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கான மருந்து கலந்த இறைச்சியை பிரேசில் நாட்டு நிறுவனம் வழங்கி வந்தது. ஆனால் அமெரிக்கா தனது தடை உத்தரவினால், பிரேசிலில் இருந்து இறக்குமதியான இறைச்சியை தடை செய்தது. இன்றைய கியூபாவோ, தனது சொந்த முயற்சியில் மருத்துவத் துறையில் பெரு வளர்ச்சி கண்டுள்ளது. எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்கு எய்ட்ஸ் நோயில் இருந்து விடுதலை பெற்றுத் தர தக்க அளவிற்கு, மருத்துவத் துறையில் வளர்ச்சி கண்டுள்ளது.

கியூபா அரசு வட அமெரிக்கா மீது பல குற்றங்களை முன்வைத்துள்ளது. அதில், “வட அமெரிக்க அரசின் பயங்கரவாதங்கள் எங்கள் மக்களின் மீது ஏற்படுத்தியுள்ள குறிப்பிடத்தக்க தீய விளைவுகள் குறித்தது. டெங்கு வகை – 2 நோய் பரப்பும் திறன் பெற்ற ஏடிஸ் ஏகிப்தி எனும் வகைக் கொசுவை வாங்கிப் பரப்பினார்கள் என்பதை, 1979ம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் பற்றிய நிகழ்வில், கர்னல் ஃபிலிப் ரஸ்ஸல் அளித்த தகவல் கூறுகிறது. ஒமேகா 7 என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவன், எட்வர்ட்டோ அரோசினோ, கியூபாவில் டெங்கு காய்ச்சலைப் பரப்பியதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டான்.

இதை எதிர் கொள்ள கியூபாஉயிரி தொழில் நுட்ப வளர்ச்சியை, முக்கிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப செயல்பாடாக மாற்றிக் கொண்டது. இதன் வெற்றியாக டெங்கு 2 வகையான நோய்க்கு எதிர்வினையாற்றி, பாதிக்கப்பட்டோரை விரைவில் விடுவிக்கும் சாத்தியக் கூறுகளை உருவாக்கியது. நாலாயிரம் கியூப அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். புரதம், ஹார்மோன், ஊசிமருந்து, நோய் கண்டுபிடிப்பு முறை, கலப்பிணங்கள் என பல்வேறு கோணங்களில் தேவையில் இருந்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர், என பத்திரிகையாளர் தோமஸ் ஃபோர்கே கூறுகிறார்.

உலகமே மிரண்டு போயிருந்த எப்போலா வைரஸ்க்கு எதிர் மருந்தைக் கண்டறிந்து, வெற்றிகரமாக செயலாற்றியமைக்காக கியூபாவை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பாராட்டியுள்ளது. ஆயிரம் குழந்தைகளுக்கு 4.5 குழந்தைகள் என்கிற அளவிற்கு இறப்பு விகிதம் கியூபாவில் உள்ளது. அமெரிக்காவில் 6.1 எனவும், இந்தியாவில் 49 எனவும் உள்ளது. இது குறித்து ஃபிடல் ”சிசு மரணத்தை 20 லிருந்து குறைக்க மிக செலவு பிடித்தது. நம்மால் அதைக்குறைக்க முடியும் என்றால், அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஆயிரக்கணக்கானக் குழந்தைகள் மரணம் அடையும் நாட்டில் மனித உரிமைகள் எப்படி இருக்கும்?” என கேள்வி எழுப்புகிறார்.

சூறாவளியும் அடிபணியும்:
கியூபாவிற்கு மற்றும் ஒரு பொருளாதாரத் தொல்லை தருவது, தீவைச் சுற்றி அடிக்கும் சூறாவளி ஆகும். இதை எதிர் கொள்வதில், மனித இழப்பைத் தடுப்பதில் பெரும் சாதனையை கியூபா செய்துள்ளது. 1944 ல் இருந்து வீசிய சூறாவளிகளிலேயே, மிச்சேல் 2001 தான் மிகப்பயங்கரமானது. இந்தத் தாக்குதலில் இருந்து பல்லாயிரம் மக்களைக் காப்பதில் கியூபா வெற்றி கண்டது சாதாரணமானது அல்ல. சுமார் 70 ஆயிரம் மக்கள் மிச்சேல் சூறாவளியின் போது பாதிக்கப்பட்டார்கள், ஆனால் 4 பேர் மட்டுமே பலியாயினர். 8 பேர் மட்டுமே காயமடைந்தனர். கியூபா ஒரு ஏழை நாடு என்பதை வைத்துப் பார்க்கும் போது, இந்தச் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

ஆக்ஸ்ஃபேம் என்ற ஆய்வு நிறுவனம் 1994 – 2003க்கு இடைப்பட்ட காலத்தில், 129 சூறாவளிகள் வீசியுள்ளன. இதில் 19 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். கியூபாவின் பொருளாதார நெருக்கடி, போக்குவரத்து வசதிகள் மற்றும் இதர வசதிகளை வைத்துப் பார்க்கும் போது, கியூபா சாதித்துள்ளது என்றே கூற வேண்டும், என பதிவு செய்துள்ளது. கியூபாவின் அனைத்து மட்டத்திலும், ஆய்வு மேற்கொண்ட ஆக்ஸ்ஃபேம், அசையா சொத்து மற்றும் அசையும் சொத்து என இரண்டு அம்சங்களை கியூபாவில் கண்டதாகக் கூறுகிறது.

அசையா சொத்து எனும் போது, தேசிய பாதுகாப்புத் துறை, முன்னெச்சரிக்கை அமைப்புகள், தேவையான அனைத்துக் கருவிகளும் கொண்ட மீட்புக் குழுவினர் மற்றும் அவசர கால சேமிப்புக் கிட்டங்கிகள் ஆகியவை கியூபாவின் அசையா சொத்துக்கள் ஆகும். சமூகத்தைக் கட்டமைப்பது, மக்கள் ஆதரவைப் பெறுவது, மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் உண்மையான தெளிவான அரசியல் உறுதி, ஈடுபாடு, பேரிட்டர் விழிப்புணர்வு அதை எதிர்த்துச் சமாளிக்கும் விவரக்களைத் தரத் தக்க கல்வியறிவு கொண்ட மக்கள் தொகை என்பது அசையும் சொத்து, இதன் காரணமாகவே, கியூபா சூறாவளிகளின் பெரும் தாக்குதலில் இருந்து தப்ப முடிகிறது. வேறு எந்த அரசுகளாலும் இந்தக்கைய சாதனையை நிகழ்த்த முடியவில்லை, என பகிரங்கமாகக் குறிப்பிடுகிறது.
நிறைவாக கியூபா தனது புரட்சிக்குப் பின் அடைந்த வெற்றிகளும், தற்போது சோசலிச முகாம் இல்லாத நிலையில் 25 ஆண்டுகளாக எதிர் நீச்சலில் செய்திருக்கும் மகத்தானச் சாதனைகளும், ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்ட உணர்வை, காட்டுத் தீயாக வளர்க்கிறது. வாழ்க கியூப புரட்சி தினம்.

உதவிய நூல்கள்:

1. ஃபிடல் காஸ்ட்ரோ உரைகள் – 1997 – சவுத் விஷன் வெளியீடு
2. குற்றவாலிக் கூண்டில் வட அமெரிக்கா – 1999 – பரிசல் வெளியீடு
3. குரலின் வலிமை – 2005 – வாசல் வெளியீடு
4. சாவேஸ் – 2006 – வாசல் வெளியீடு
5. நேருக்கு நேர் – 2002 புதுமலர், கோவை வெளியீடு
6. சூறாவளியும் அடிபணியும் – 2006 – என்.சி.பி.ஹெச்
7. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – 21வது காங்கிரஸ் அரசியல் தீர்மானம்
8. Cuba The Blockade and The declining Empire – 2005 – Pablo Neruda School of Spanish

புதிய மனிதன் ஹியுகோ சாவேசும் பொலிவேரியன் புரட்சியும்

“உலக நாடுகளிடையே அரசியல் ஒத்துழைப்பை தேடிய  வெனிசுலா அதிபர் ஹியுகோ ரபேல் சாவேஸ் பிரியாஸ்  இன்று இல்லை. அமெரிக்க கார்ப்பரேட் அதிபதிகளும், சி.ஐ.ஏயும் இனைந்து சாவேசை அகற்றி அரசை நிலைகுலைய செய்ய  நடத்திய சதிகளை தோற்கடித்தவர் புற்றுநோயிடம் தோற்றுவிட்டார். பேரழிவு ஆயுதக் குவியல்கள் மற்றும் கரன்சி பலத்தைக் கொண்டு ஏக துருவ உலகை நிறுவ எத்தனிக்கும் ஏகாதி பத்தியவாதிகளை “கந்தக  நாற்றமடிக்கும்  மிஸ்ட்டர் டேன்ஜர்” என்று ஐ.நாவில் விளித்த அந்த குரலை இனி கேட்க முடியாது.

Venezuelan President Hugo Chávezமத்திய ஆசிய எண்ணை வள நாடுகளின் ஆட்சியாளர்கள் போல் மேல் தட்டு மக்களின் ஆடம்பர வாழ்விற்காக எண்ணை வளத்தை பகாசூர எண்ணை நிறுவனங்களிடம்  அடகு வைக்காமல் சொந்த நாட்டு உழைக்கும் மக்கள் குடிமையில் உயரவும், கல்வி ஞானம் பெறவும், உலக நாடுகளின் ஏழைகளை நெறுக்கும் வறுமைப் பிடியை சற்று தளர்த்தவும் வெனிசுலா எண்ணை வளத்தை அற்பணம் செய்த அந்த கரங்கள் ஓய்வெடுக்க சென்றுவிட்டன. எண்ணை வளத்தை டாலராக குவிக்காமல் இருப்பதால் வெனிசுலாவின் பொருளாதாரத்தை சாவேஸ் சீர்குலைக்கிறார்  என்று மேலை நாட்டு எல்லா ரக பொருளாதார நிபுணர்களும் பீதியை கிளப்பினர். “ டாலர் அல்ல, தொழில் நுட்பம் தெறிந்த உழைக்கும் கரங்களே செல்வத்தை உருவாக்குகிறது. நாணயத்திற்கு மதிப்பை கொடுக்கிறது என்ற உண்மையை அறியாத முட்டாள்தனம் பீதியை கிளப்புகிறது, வெனிசு‍லா உழைப்பாளிகளே! விஞ்ஞான தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறுங்கள்! நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த பிற நாடுகளோடு ஒத்துழையுங்கள் என்று நம்பிக்கை ஊட்டிய அந்த குரல் தூரத்தே சென்றுவிட்டது.

சென்ற இடமெல்லாம் “இன்றைய தேதிகளில் முதலாளித்துவம் என்பது வருடத்திற்கு 26 லட்சம் ஏழைகளை உற்பத்தி செய்து உலகை நரகமாக்கும் எந்திரமாக இருக்கிறது. புதிய மேன்மைப்பட்ட உலகை அடைய சோசலிசமே சரியான பாதை,” என்ற இடி முழக்கம் எங்கே என்று நம்மை ஏங்கவைத்து சென்றுவிட்டது.  பணக் குவியலை திரட்ட வெறிகொண்ட சிலரின் சுயநலனுக்கு மக்கள் பலியாக கூடாது என்று  நேர்மையுடனும், மன உறுதியுடனும் பாடுபட ஒரு  புதிய மனிதனாக வாழ்ந்து காட்டிய ஒருவரை உலகம் இழந்துவிட்டது.

சேகுவேரா என்ற மாமனிதன் எத்தகைய புதிய மானுடத்தை உருவாக்க உயிரைக் கொடுத்தாரோ அந்த புதிய மனிதனாக வாழ்ந்து காட்டிய சாவேஸ் இன்று இல்லை. “ நான் என் இதயத்தை தருகிறேன். உன் உள்ளங்கையில் விடிகிற வரை மடக்கிவைத்துக்கொள். விடிந்தவுடன் கையைவிரி ஒளிபட்டு எனது இதயம் துடிக்கட்டும்” என்று ஒரு கொரில்லா போர் வீரன் காதலிக்கு எழுதி வைத்துவிட்டு போருக்கு சென்றதைப் போல சாவேஸ் தனது இதயத்தை புதிய உலக உறவை உருவாக்கும் ஆற்றல் படைத்த பாட்டாளி வர்க்கத்தின் உள்ளங் கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

யார் இந்த ஹியுகோ ரபேல் சாவேஸ் பிரியாஸ்?

1954ல் வெனிசுலா நாட்டின் சபனேட்டா என்ற கிராமத் தில் ஒரு பள்ளி ஆசிரியர் குடும்பத்தில் 7 குழந்தைகளில் ஒருவனாக சாவேஸ் பிறந்தார். வறுமையின் காரணமாக சவேசையும் அவனது அண்ணனையும் பெற்றோர்கள் பாட்டி வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். குழந்தை பருவத்தில், வேதனை, வறுமை, சோத்துக்கு பஞ்சம் இருந்தாலும்  தாயினும் சாலப் பறிந்து அரவவனைக்கும் பாட்டியால் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இல்லை என்று சாவேஸ் தனது குழந்தைப்பருவத்தை நினைவு கூறுகிறார். அருகிலிருந்த சர்ச்சில் இருந்த பாதிரியாருக்கு பூசைக்கு உதவியாளனாக வேலை செய்ததால் படிப்பிற்கு இடைஞ்சலில்லாமல் பள்ளி பருவம் கழிந்தது. பாட்டியிட மிருந்த நேர்மை,  ஏசுவின் மனிதாபிமானம், பிறருக்கு உதவு வதில் மகிழ்ச்சி சிறுவனையும் பற்றிக் கொண்டது.

17வது வயதில்  வெனிசுலா ராணுவ கல்லூரியில் சாவேஸ் சேர்ந்தார். அங்கு நாட்டுப்பற்று மிக்க சில ராணுவ அதிகாரிகளின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டமே சாவேசின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. ராணுவ பாடத்திட்டங்களோடு அரசியல், பொருளாதாரம், அரசாங்க நிர்வாகம் இவைகளைப் பற்றிய பாடங்களும் அந்த பாடத்திட்டத்தில் இருந்தன.  மார்க்சிய நூல்களையும் அவர் படிக்க நேர்ந்தது. அதில் சேகுவேராவின் டைரி. அவரது மனப்போக்கை பெரிதும் மாற்றிவிட்டது. கியூபாவின் காஸ்ட்ரோவை பாசமும், நேசமும்மிக்க தோழனாக அந்த டைரியே சாவேசை கருத வைத்தது. மார்க்ஸ் – எங்கெல்ஸ் நட்பு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்திற்கு புரட்சிகர தத்துவத்தை வழங்கியது போல், பின் நாளில் சவேஸ்- காஸ்ட்ரோ நட்பு  நிதி மூலதனமெனும் பிரேக் இல்லா ரோடு ரோலர் தென் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரத்தை நசுக்காமல் தடுக்கும் அரசியல் பொருளாதார யுக்திகளை  உருவாக்கியது.

மார்க்சிய நூல்களை ஆழ்ந்து கற்றதால் சில எதார்த்தங்களை உறுதியாக பற்றி நிற்க அவருக்கு உதவின. அவரது வார்த்தைகளிலேயே அதை சொல்வதென்றால் “ மானுடத்தின் எந்தப்பகுதியும் தனித்த கிரகமாக அதற்கென தனி இயக்க விதிகளோடு, பிறபகுதி மக்களோடு தொடர்பற்று தனித்து வாழ இயலாது”. “உலகத் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் உதவாமல், ஒத்துழைக்காமல், இனி மானுடம் வாழ இயலாது”. “ஒரு நாட்டு ராணுவம் அந்த நாட்டு உழைப்பாளிமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர சுரண்டும் சதைப்பிண்டங் களுக்கு பாதுகாவலனாக இருக்க கூடாது”.“ பாட்டாளி வர்க்கம் தனது போராட்டங்களிலிருந்து தன்னை புதிய மனித னாக மாற்றிக் கொள்ளாமல் புதிய உலக உறவு சாத்திய மில்லை”.

ராணுவ கல்லூரியை விட்டு வெளியேறும் பொழுது சேகுவேரா கணவு கண்ட ஒரு புதிய மனிதனாக மாற வேண்டும் என்று உறுதி பூண்டார். ராணுவ அதிகாரியாக பதவியேற்றவுடன் வெனிசுலா அரசிலமைப்பு  உழைக்கும் மக்களை ஏழையாக்குகிறது என்பதை கண்டார். 19ம் நூற் றாண்டின் முற்பகுதியில் ஸ்பெயின் மன்னரின் ஆதிக்கத்தி லிருந்த தென் அமெரிக்க பகுதிகளை விடுவிக்க ஆயுதமேந்தி பேராடிய  சைமன் பொலிவர் வழியில்  ஒரு நல்ல மனிதனின் சர்வாதிகாரமே மக்களை  காக்கும் என்ற முடிவிற்கு வந்து ஒத்த மனதுள்ள  ராணுவ  அதிகாரிகளுடன் இனைந்து புரட்சிகர பொலிவேரியன் இயக்கம் – 200 என்ற ரகசிய  அமைப்பு உருவாக்கினார். ஆட்சியை கைப்பற்ற எடுத்த முயற்சி தோற்கவே சிறையில் அடைக்கப்பட்டார். சேகுவேராவின் டைரி அவரது மனச்சாட்சியாக இருந்ததால் மாற்றி யோசித்தார், ராணுவம் வெற்றி பெற  மக்கள் ஆதரவு தேவை மக்களின் ஆதரவு பெற மக்களின் கையில் அதிகாரம் இருக்க வேண்டும். முதலாளித்துவ அமைப்பில் ஜனநாயகம்  உயிரோடு இருக்காது என்பதையும் உணர்ந்தார்.

இப்பொழுது பொலிவேரியன் இயக்கம் அரசியல் இயக்கமாக, பிற நாட்டு இடதுசாரி இயக்கங்களின் ஆதரவோடு காஸ்டரோ வழியில் செல்வது அவசியம் என்ற முடிவிற்கு வந்து அந்த வழியில் நேர்மையாகவும், உறுதியாகவும் செல்ல தொடங்கினார். அதன் விளைவாக வெனிசுலாவில் மக்கள் ஜனநாயக ஆட்சி மலரத் தொடங்கியது. 20 நாடுகளைக் கொண்ட தென் அமெரிக்க கண்டத்தில் பெரும்பாலான நாடுகளில் இடதுசாரிகளின் அரசுகள் வந்துவிட்டன, கொலம்பியாவில் மட்டுமே அமெரிக்க ஆதரவு அரசு உள்ளது. அங்கும் இடதுசாரி அல்லாத அரசுகள் இருக்கிற சிலி போன்ற நாட்டிலும் உலக வங்கியோ, மேலை நாட்டு பன்னாட்டு நிறுவனங்களோ முன்பு போல் வலாட்ட முடியவில்லை. டாலரை நம்பி நிற்கும் நிலையை வெகுவாக குறைக்க இந்த நாடுகள் ஒத்துழைக்க அமைப்புகள் உருவாகிவிட்டன.

சாவேஸ் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் மக்களுக்கு விரோதமாக செயல்பட எத்தனிக்கும்  ஜனாதிபதியை மக்கள் அகற்றும் உரிமையை வழங்கியுள்ளது.  குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கையெழுத்திட்ட மனு தேர்தல் ஆணையத்திடம் அனுப்பினால் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது . இந்த பிரிவை  கடுமையாக எதிர்த்த எதிர்கட்சிகள் 2004ம் ஆண்டில் இதனையே பயன்படுத்தி சாவேசை அகற்ற வாக்காளர் பட்டியலில் செத்தவர்கள் கையெழுத்தையும் சேர்த்து மகஜர் அனுப்பினர். அந்த மகஜரையும் ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை சாவேஸ் சந்தித்தார். உள்நாட்டின் மக்களின் ஒத் துழைப்பு, அண்டை நாடுகளின் அரசியல் ஆதரவு  இவைகளை சம்பாதித்த சாவேசின் அரசியல் நேர்மையை வியக்காமல் இருக்க முடியுமா?

சாவேஸ் இன்று இல்லை

Hugo Chavez funeralஆனால் அந்த புதிய மனிதன் வித்திட்ட அமெரிக்க மக்களின் பொலிவேரியன் புரட்சி தொடரும். அதில் ஏற்ற இரக்கங்கள் வரலாம் ஆனால் அந்த புரட்சி தடைகளை தாண்டி படரும். பல துருவ உலகை உருவாக்கி அமெரிக்க, நாட்டோ ராணுவ  ஏக துருவ அரசியலை புதைகுழிக்கு அனுப்பும் போராட்டமாக அது தொடரும். பெரும் திரள் மக்களை கொல்லும் ஆயுதங்களான அணு, ரசாயன, உயிரியல் ஆயுதங்களை ஸ்டாக்காக வைத்துக் கொண்டதோடு, கரன்சியையும் (அதாவது டாலரை) ஆயுதமாக்கி ஏழை நாடுகளை மிரட்டும் ஏகாதிபத்தியவாதிகளை வெல்ல சாவேஸ் காட்டிய வழியில் உலகம் உருளும். சாவேஸ் மறைவை ஒட்டி 16 நாடுகள்  தேசிய துக்கம் அனுஷ்டிக்கஅறிவுத்துள்ளது. 42 நாடுகளின் அரசியல் தலைவர்கள் வணக்கம் செலுத்த செல்லுகின்றனர். சாவேஸ் வெனிசுலாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே சொந்தமானவர் என்பதின் அடையாளமாகும்.

புதிய மனிதன் சாவேஸ்  புதிய மானுடத்தின் வித்தாகிவிட்டார்.

அவருக்கு மார்க்சிஸ்ட்டின் செவ்வணக்கம்

சாவேஸ் மேற்கோள்:

முதலாளித்துவ அமைப்பில் ஜனநாயகம் இருக்க இயலாது. முதலாளித்துவம் என்பது அநீதி ஆட்சி செய்யும் இடமாகவும், பணக்காரர்கள் ஏழைகளுக்கெதிரான கொடுமை கள் செய்யும் அமைப்பாகவும் இருக்கிறது.. அதிகாரம் பலம் படைத்தவர்கள் பலமற்ற ஏழைகளை நசுக்குகிறார்கள். சட்டத்தின் ஆட்சி மட்டுமே அவர்களை விடுவிக்கு மென்று ரூசோ சொன்னார்.  உலகை ஜனநாயக சோசலிசத் தின் மூலம் மட்டுமே காப்பாற்ற முடியும். ஜனநாயகமென்பது 5 ஆண்டிற்கு ஒரு முறை வாக்குரிமை கொடுப்பது மட்டுமல்ல. அதைவிட அதிகமானது. அது ஒரு வாழ்வியல் வழி. அது மக்கள் கையில் அதிகாரத்தை கொடுப்பது. மேலை நாட்டு முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி என்று கூறப்படுகிற  நாடுகளில் இருப்பதைப்போல்.பணக்காரர்களின் அரசு ஏழைகளை ஆட்சி செய்வதல்ல.

சாவேஸ்,  ஜுன் 2010