நவீன குடும்ப உறவு முறையும் முதலாளித்துவத்திற்கான கூலி உழைப்பும்

ச. லெனின்


“குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற எங்கெல்சின் இந்நூல் மார்க்சின் மறைவுக்குப் பிறகு எழுதப்பட்டதாகும். மார்க்ஸ் மறைந்த பிறகு “மூலதனம்” நூலின் இரண்டாம், மூன்றாம் தொகுதிகளை எங்கெல்ஸ் பெரும் முயற்சி செய்து வெளிக்கொண்டு வந்தார். அந்தப் பணிகளின் தொடர்ச்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது. 1884 ஆம் ஆண்டு எங்கெல்ஸ் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் இதைக் காண முடியும். 

“ஓர் அர்த்தத்தில், பின்வரும் அத்தியாயங்கள் மார்க்ஸ் விட்டுச் சென்ற ஒரு பணியைச் செய்து முடிக்கும் வகையில் அமைந்தவையே… (எங்களின்) பொருள் முதல்வாத ஆராய்ச்சியின் மூலம், தான் கண்ட முடிவுகளின் தொடர்பில் மார்கனது ஆராய்ச்சி விளைவுகளை மக்களின் முன்பாக வைத்து, அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று மார்க்ஸ் திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் (மார்கனது நூல் வெளியாவதற்கு) நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் கண்டுபிடித்திருந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தைத்தான் மார்கன் தன்னுடைய வழியில் அமெரிக்காவில் மறுபடியும் கண்டுபிடித்தார்” என்கிறார் எங்கெல்ஸ்.

எல்.எச்.மார்கன் என்கிற அமெரிக்க மானுடவியலாளர், அமெரிக்க பூர்வகுடி மக்கள் மத்தியில் வாழ்ந்து அங்கு நீண்ட ஆய்வை மேற்கொண்டார். அதன் முடிவுகளை உள்ளடக்கி “பண்டைய சமூகம்” (Ancient Society) எனும் நூலை 1877ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலை ஆதாரமாகக் கொண்டே எங்கெல்ஸ் இந்த நூலை எழுதினார்.

ஏடறிந்த வரலாறுகள் அனைத்தும் 

1848இல் மார்க்ஸ் எங்கெல்சின் கூட்டுப் படைப்பாக வெளியான வரலாற்று ஆவணமான “கம்யூனிஸ்ட் அறிக்கை”யின் முதல் அத்தியாயத்தின் முதல் வரி “இதுநாள் வரையில் நிலவி வந்த சமுதாயத்தின் வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” என்று தொடங்கும். மார்கனின் படைப்பு வெளியான பிறகே, எங்கெல்ஸ் தனது “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் இந்நூலில்தான் இதுவரையான வரலாறு என்பதை மாற்றி “ஏடறிந்த வரலாறுகள்” எல்லாம் வர்க்கப் முரண்பாடுகளையும், வர்க்கப் போராட்டங்களையும் உள்ளடக்கியது என்று மாற்றுகிறார்.

ஏனெனில், அதுவரை ஏட்டில் ஏறாதிருந்த ஆதிப்பொதுவுடமைச் சமூக வாழ்க்கை முறையை மார்கன் தனது கள ஆய்வின் மூலம் தனது நூலில் எடுத்துரைக்கிறார். அச்சமூகம் வர்க்க முரண்பாடற்ற நிலையை உள்ளடக்கியதாக இருந்தது. இதையே “நமது ஏடறிந்த வரலாற்றின் இந்த வரலாற்றுக்கு முந்தைய, அடிப்படையான, முக்கியமான அம்சங்களைக் கண்டுபிடித்து, மறுபடியும் நிர்மாணித்துக் கொடுத்ததுதான் மார்கனுடைய மகத்தான சிறப்பாகும்.” என்று மார்கனின் பங்களிப்பை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

பல்வேறு நாடுகளில், பல குழுக்களாகவும், குலங்களாகவும் வாழ்ந்து வந்த மனிதக் கூட்டம் தன்னகத்தே பலவிதமான வாழ்க்கை முறைகளை கொண்டிருந்தது. அதில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் எவ்வாறு குடும்பம் உள்ளிட்ட சமூக நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை எங்கெல்ஸ் இந்த நூலில் விளக்குகிறார். மேலும் தனிச்சொத்தின் உருவாக்கம், வளர்ச்சி, கெட்டிப்படுதல், எவ்வாறு ஒருதார மணம் மற்றும் குடும்பம் உள்ளிட்டவற்றில் ஒரு வரைமுறையை ஏற்படுத்தியது என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.

குடும்பம் 

குடும்பம் என்பது “சென்ற காலத்தில் நடந்ததைப் போல சமுதாயம் முன்னேற, அதுவும் முன்னேறும்; சமுதாயம் மாற, அதுவும் மாறும். அது சமுதாய அமைப்பின் படைப்பு; அதன் பண்பாட்டை அது பிரதிபலிக்கும்….. நெடுந்தூர எதிர்காலத்தில் ஒருதார மணக் குடும்பத்தினால் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் போனால் அதற்குப் பின்னல் வரப் போகின்றவற்றின் இயல்பை ஆரூடம் கூற முடியாது” என்ற மார்கனின் வரிகளை எங்கெல்ஸ் ஒரு இடத்தில் மேற்கோள் காட்டுகிறார். 

அன்று, அதாவது சுமார் 142 ஆண்டுகளுக்கு முன்பு, ஆரூடம் கூற முடியாத விஷயங்கள் இன்றைய முதலாளித்துவ வாழ்க்கை நிலையில் நமக்கு  சில வளர்ச்சிப் போக்குகளை காட்டுகின்றன. ஏனெனில் நவீன குடும்ப உறவு முறையும் முதலாளித்துவத்திற்கான கூலி உழைப்பை உள்ளடக்கியதாகவே உள்ளது. திருமணம் என்கிற பதிவு இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் வாழ்வது (Live in Relation)  சட்டரீதியாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கெட்டியான பழமைவாதம் நிறைந்த வரைமுறைகளை கடந்து,  பிடித்திருந்தால் இந்த உறவை தொடர்வது அல்லது பிரிந்து செல்வது என்ற இந்நிலையை ஒருபடி முன்னேற்றமாகவே அறிவார்ந்த சமூகம் பார்க்கிறது. அதே நேரம் குடும்பம், குழந்தை, ஒரு வரைமுறை ஆகியவை இல்லாத இந்நிலை முதலாளித்துவத்திற்கு தேவையான சூழல் என்பதையும் நாம் கவனிக்க தவறக்கூடாது.


இரவு, பகல், ஓய்வு நாள், குடும்பத்துடன் ஒருநாள் என்பது போன்ற எவ்வித பந்தமும், அதற்காக ஒதுக்க வேண்டிய நேரமும் தேவை இல்லை என்ற நிலையே, தற்போது மாறிவரும் வேலைச் சூழலுக்கு தேவைப்படுகிறது. எல்லா காலத்திலும் ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்தே குடும்ப  முறையும் மாற்றம் கண்டுள்ளது. அதைப்போலவே, காலநேரம் இன்றி தனது உழைப்பை முதலாளிக்கு விற்கும் நிலையை தக்கவைக்கும் போக்கையே நவீன குடும்ப உறவுமுறைகள் வளர்க்கின்றன என்பது கண்கூடு.

எது நாகரிகம் ?

“மலைவாழ் மக்கள் மத்தியில் பாலியல் வல்லுறவு என்பதை நான் கேள்விப்பட்டதில்லை, அதேபோல் திருட்டு என்பதும் அங்கு கிடையாது” என்று பழங்குடியின மக்கள் மத்தியில் பணியாற்றிய ஒருவர் பதிவு செய்துள்ளார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற, பஞ்சமும் பசியும் நிறைந்த இன்றைய நவீன சமூகத்தை பொதுவாக நாகரிக சமூகம் என்றும், மலைவாழ் மக்களின் வாழ் நிலையை அநாகரிகம் என்றும் இங்கு அடையாளப்படுத்தப்படுகிறது.

“அன்றைய மனிதர்களுடைய நிலையை இன்றைய நாகரிக மக்களின் மிகப் பெரும்பாலோருடைய நிலையுடன் ஒப்பிட்டால் அது…. மிகப் பெரும் இடைவெளியுடன் இருப்பதை காண்போம். எனினும் இந்த அமைப்பின் அழிவு தவிர்க்க முடியாதது என்பதையும் நாம் மறக்கக் கூடாது… இனக்குழுக்களின் கூட்டு அதன் வீழ்ச்சியின் ஆரம்பத்திற்கு சமிக்ஞையாக இருந்தது”  என்கிறார் எங்கெல்ஸ். 

அதேநேரம் முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு முடிவுகட்டி எழும் புதிய சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் எங்கெல்ஸ் இந்நூலில் குறிப்பிடுகிறார். அங்கு “பணத்தை கொண்டோ, சமூக ரீதியான இதர அதிகார சாதனைகளை கொண்டோ ஒரு பெண்ணை இணங்கச் செய்யும்படி என்றைக்கும் நேராது. பெண்கள் உண்மை காதலுக்காக மட்டுமின்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் எந்த ஆணுக்கும் என்றைக்குமே இணக்கமாட்டார்கள்; அல்லது பொருளாதார விளைவுகளை பற்றி அஞ்சி தம்முடைய காதலனுக்கு தம்மை கொடுக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படாது.” என்ற உண்மையான, பண்பட்ட நாகரிக  நிலை கம்யூனிச சமூகத்திலேயே சாத்தியம் என்பதை எங்கெல்ஸ் இங்கு சுட்டிக்காட்டுகிறார்.

வரலாற்றுப் பொருள்முதல் வாதம்  

“பொருள்முதல்வாதக் கருத்தமைப்பின்படி (கடைசியாக பார்க்கும் பொழுது) உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் புனருற்பத்தியுமே வரலாற்றில் தீர்மானமான காரணியாகும். ஆனால் இது இருவகையான தன்மை கொண்டது. ஒரு பக்கத்தில் வாழ்க்கைக்குத் தேவையான‌ சாதனங்களை உற்பத்தி செய்வது. அதாவது உணவு, உடை, வீடு ஆகியவற்றையும், அவற்றைப் பெறுவதற்குத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்வதாகும். மறுபக்கத்தில், மனிதர்களையே உற்பத்தி செய்வது – அதாவது மனித இனத்தை பெருக்குவது”  

அதே போல் “சமூக அமைப்பை உற்பத்தியின் இந்த இரண்டு வகைகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு பக்கத்தில் உழைப்பின் வளர்ச்சி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதும், மறுபக்கத்தில் குடும்பத்தின் வளர்ச்சி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதுமே அந்த சமூக அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன.” என்று எங்கெல்ஸ் தனது முன்னுரையிலேயே குறிப்பிடுகிறார்.  இதற்கு ஆதாரமாக மார்கனின் ஆய்வு முடிவுகளை உள்ளடக்கி தான் சேகரித்த தரவுகளைக் கொண்டு வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை எங்கெல்ஸ் இந்நூலில் வலுவாக நிறுவுகிறார்.

சொத்துடைமை வர்க்கத்தின் “அரசு” 

அடுத்தடுத்து வந்த சமூக வளர்ச்சியில் எழுந்த புதிய சமூகத்தில் சொத்துடைமை அமைப்பு எவ்வாறு குடும்ப அமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்தியது என்பது குறித்தும், தலைமை நிலையிலிருந்த பெண்கள், ஆணுக்கு சரிநிகராக இருந்த பெண்கள், எவ்வாறு சொத்து மற்றும் அதன் வாரிசுரிமை என்ற அழுத்தத்தினால் கட்டுப்பாடுகளுக்கும் ஆதிக்கத்திற்கும் உள்ளானார்கள் என்பதை பல்வேறு குலங்கள் மற்றும் குழுக்களின் பழங்கால வாழ்வியலை கொண்டு இந்நூல் விளக்குகிறது.

சொத்துடைமையின் வளர்ச்சி அரசு எனும் ஒரு அமைப்பு உருவாகும் நிலையை ஏற்படுத்தியது. “அரசு என்பது உடைமை வர்க்கத்தின் ஸ்தாபனம்” தான் என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளதை போல் சொத்துடைமை வர்க்கம் தங்களது சொத்துக்களை பாதுகாக்க அரசு எனும் அமைப்பை கட்டமைத்தன. ஏனெனில் “வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்தே அரசு தோன்றியது; அதேசமயத்தில் அந்த வர்க்கங்களுக்கு இடையில்  நடைபெற்ற மோதல்களின் மத்தியிலிருந்தே அது தோன்றியது…. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை நசுக்கிச் சுரண்டுவதற்கு அது புதிய சாதனங்களை பெறுகிறது” (வர்க்கங்களுக்கு இடையேயான)  “சண்டை”யின் கடுமையைத் தணிப்பது. “ஒழுங்கு” என்னும் வரம்புக்குள் அதைக் கட்டுப்படுத்துவது அதன் (அரசின்)  நோக்கமாகும்.” என்று அரசின் தோற்றம் மற்றும் அதன் செயல்கள் குறித்த எங்கெல்ஸ் இந்நூலில் விளக்குகிறார்.

ஆதிப்பொதுவுடைமை சமூகத்தின் வாழ்நிலையிலிருந்து தொடங்கி, வர்க்க சமூகங்களாக அவை வளர்ந்த அம்சங்களையும், சொத்துடைமையை பாதுகாக்க குடும்ப அமைப்பு எவ்வாறு வரைமுறைப்படுத்தப்பப்பட்டது என்றும், அதற்காக பெண்கள் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் இந்நூல் பேசுவதோடு, சொத்துடமை வர்க்கத்தின்  நலன் சார்ந்து அரசு உருவானதையும், வர்க்க நலன் சார்ந்த அதன் செயல்பாடுகளையும் இந்நூலில் எங்கெல்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு விளக்கியுள்ளார்.

மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*

குரல்: தேவி பிரியா

– பிரடெரிக் எங்கெல்ஸ்

சகல செல்வத்தினுடைய தோற்றுவாயும் உழைப்பே என அரசியல் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். உண்மையிலே அதுதான் தோற்றுவாய் – இயற்கைக்கு அடுத்தபடியாக; அதற்கு இயற்கை மூலாதாரமாக வழங்கும் பொருளை அது செல்வமாக மாற்றுகிறது. ஆனால் அளவிடற்கரிய வகையில் அதை விட அது இன்னும் அதிகமும் கூட. ஓர் அர்த்தத்தில், உழைப்பு மனிதனையே படைத்தது என்று நாம் கூறவேண்டிய அளவுக்கு அது மனித வாழ்வு முழுவதற்கும் முதன்மையான அடிப்படை நிபந்தனையாக உள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், இன்னும் திட்டமாக நிர்ணயிக்கப்படாத, மூன்றாம் காலக்கூறு (Tertiary period) எனப் புவியியல்வாதிகள் அறிந்துள்ள பூமியின் வரலாற்றின் ஒரு சகாப்தத்தில் – அதனுடைய முடிவுக்கட்டத்தில் இருப்பதற்கு அதிக சாத்தியக்கூறு உண்டு – மிகவும் உன்னதமான வளர்ச்சி பெற்ற மனிதக் குரங்கு இனமானது வெப்பமண்டலத்தில் – தற்போது இந்துமாகடலின் அடியில் ஒரு வேளை மூழ்கிப்போன ஒரு பெரும் கண்டமாக இருக்கலாம் – ஏதோ ஓர் இடத்தில் வாழ்ந்தது. நம்முடைய இந்த மூதாதையர்களைக் குறித்த ஒரு உத்தேசமான வர்ணனையை டார்வின் நமக்குக் கொடுத்துள்ளார். அவர்கள் முழுமையாகவே உரோமத்தால் மூடப்பட்டிருந்தனர்; அவர்கள் தாடிகளையும் கூர் முனையுள்ள காதுகளையும் பெற்றிருந்தனர் ; மரங்களின் மீது கூட்டங்கூட்டமாக வாழ்ந்தனர்.

மரமேறுதல் என்பது கை கால்களுக்கு வித்தியாசப்பட்டதொழில்களைப் பகிர்ந்து விடுகிறது; அவர்களுடைய வாழ்க்கைமுறையில் தட்டையான நிலத்தின் மீது நிலை பெயர்ந்து செல்ல வேண்டிஏற்பட்ட போது இந்த மனிதக் குரங்குகள் படிப்படியாகக் கைகளைப்பயன்படுத்தும் பழக்கத்தைக் கைவிட்டன; மேலும் மேலும் அதிகமாக ஒரு நிமிர்ந்த உடற்பாணியையே அனுசரித்தன. மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலையில் இது நிர்ணயமானதொரு படி ஆகும். தற்போதுள்ள எல்லா மனிதக் குரங்குகளுக்கும் நிமிர்ந்து நிற்கவும் பாதங்களினால் நடக்கவும் இயலும்; ஆனால் அது அவசரகாலங்களிலேதான், அதுவும் விகாரமாகத்தான். அவற்றினுடைய இயல்பான நடை பாதி நிமிர்ந்தும் பாதி குனிந்தும் செல்லும் நடை, அதில் அவை கைகளையும் பயன்படுத்துகின்றன. பெரும்பாலானவை தங்களது முஷ்டியின் விரல் கணுக்களைப் பூமியின் மீது ஊன்றிக் கால்களை உள்இழுத்து நீண்ட கைகளிடையே உடலை ஊசலாட்டிச் செலுத்துகின்றன – நடக்கும் திறனில்லாத ஒருவர் கவைக் கோல்களினால் நடந்து செல்வதற்கு ஒப்பாக இதனைக் கூறலாம்.

பொதுவாக, நான்கு கால்களினால் நடப்பது முதல் இரண்டு கால்களினால் நடப்பது வரை உள்ள இடைநிலைக் கட்டங்களை எல்லாம் இன்றைய மனிதக் குரங்குகளிடமே காணலாம். இருந்தாலும், பின் சொன்ன நடை அவற்றில் எதற்கும் தாற்காலிகமாகச் சமாளித்துக் கொள்வதற்கு மேலாக முக்கியத்துவம் உடையதாக இருக்கவில்லை. உரோமம் படர்ந்த நமது மூதாதையரிடையே நிமிர்ந்த நடை என்பது முதலில் ஒரு விதியாகவும் பின்னர் கால அடைவில் ஓர் அவசியமாகவும் ஆயிற்று, இதற்குள்ளாக கைகளுக்குப் பல்வேறுவகையான இதர வேலைகளின் பொறுப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைப் புரிய முடியும். மனிதக் குரங்குகளிடையே ஏற்கெனவே கைகளும் பாதங்களும் பயன்படுத்தப் படுவதில் சிறிது வித்தியாசம் இருக்கிறது. மேலே சொன்னதற்கொப்ப, மரமேறுவதில் கைகளுக்கும் பாதங்களுக்கும் வெவ்வேறு உபயோகங்கள் உள்ளன. கீழ்ப்படியில் உள்ள சில பாலூட்டிகள் தங்களது முன்பாதங்களை உபயோகிப்பதைப் போல உணவைச் சேகரிக்கவும் பிடிக்கவுமே கைகள் பிரதானமாக உபயோகிக்கப் படுகின்றன.

மரங்களில் தங்களுக்குக் கூடுகளைக்கட்டிக் கொள்ளவும் அல்லது உதாரணமாக சிம்பன்ஸி குரங்கைப் போலத் தங்களை பருவமாற்ற நிலைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கிளைகளிடையே கூரைகள் வேய்ந்து கொள்ளவும் கூடப் பல மனிதக் குரங்குகள் கைகளைப் பயன்படுத்துகின்றன. பகைவர்களிடம் இருந்து காத்துக் கொள்ளத் தங்களது கைகளினால் கழிகளைப் பிடிக்கின்றன; தங்களது கைகளைக் கொண்டு எதிரிகளைப் பழங்களாலும் கற்களாலும் தாக்குகின்றன. அவை கூண்டில் பிடிபடும் போது மனிதர்களிடமிருந்து சில சிறிய செயல்களை ஒத்த வடிவத்தில் செய்யத் தங்களது கைகளைப் பயன்படுத்துகின்றன. இதில்தான், மனிதனை அதிகபட்சம் ஒத்தமனிதக் குரங்குகளின் வளர்ச்சியடையாத கைக்கும் லட்சக்கணக்கான ஆண்டுகளின் உழைப்பினால் உன்னதமான சிறப்பு பெற்றுள்ள மனிதக் கைக்குமிடையே உள்ள பெரிய இடைவெளியை ஒருவன் காண்கிறான். இந்த இரு கைகளிலும் உள்ள எலும்புகளும் தசைகளும் எண்ணிக்கையிலும் பொதுவான இணைப்பு ஏற்பாட்டிலும் ஒரே மாதிரியானவை; ஆனால் எந்தக் குரங்கின் கையும் ஒத்த மாதிரி செய்யமுடியாத நூற்றுக்கணக்கான செயல்களை மிகக் கீழ்ப் படியிலுள்ள ஒரு காட்டுமிராண்டியின் கை செய்ய முடியும் – எந்தக் குரங்கின் கையும் எந்தக்காலத்திலும் மிகக் கரடுமுரடான கல் கத்தியைக் கூட உருவாக்கியதில்லை.

மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலையான பல்லாயிரமாண்டுகளில் நமது மூதாதையர்கள் படிப்படியாகத் தங்களது கைகளைப் பொருந்தியவாறு பழக்கப்படுத்தக் கற்றுக்கொண்ட முதற்செயல்கள் மிக சாதாரணமானவையாக மட்டுமே இருந்திருக்க முடியும். எவரிடையே மிருகங்களையொத்த நிலைக்கு மீண்டும் திரும்பக் கூடிய நிலைமை அதிகமாகவிருக்கவும், அதேசமயத்தில் உடல் துறையிலும் பின்னடைவு ஏற்படுவதும் அனுமானிக்க இயலுகிறதோ, அப்படிப்பட்ட மிகக் கீழ்ப்படியிலிருந்த காட்டுமிராண்டிகளும் கூட அந்த இடைநிலைவாசிகளை விட எவ்வளவோ மேம்பட்டவர்களே. முதல் சக்கிமுக்கிக் கல் மனிதக் கையினால் கத்தியாக உருவாக்கப்படுவதற்கு முன்பு ஒப்பு நோக்கினால் நாமறிந்த வரலாற்றுக்காலம் அற்பமாகிவிடுகிற ஒரு காலக்கூறு கடந்து விட்டிருக்கக்கூடும். ஆனால் நிர்ணயமான அடி எடுத்து வைக்கப்பட்டாகிவிட்டது; கை சுதந்திரம் பெற்று விட்டது; இனிமேற்கொண்டு அது மேலும் மேலும் அதிக நுண்திறத்தைப் பெறமுடியும்; இவ்வாறு பெறப்பட்ட அதிக நெகிழ்ச்சித்திறமும் வழி வழியாக அடையப்பட்டு தலைமுறைக்குத் தலைமுறை பெருகி வந்தது.

இவ்வாறாக கை உழைப்பிற்கான உறுப்பு என்பது மட்டுமல்ல, உழைப்பின் விளைபயனும் அதுவே. உழைப்பு, எப்பொழுதும் புதியசெயல்களுக்குப் பொருந்தியவாறு அமைத்துக் கொள்ளல், இவ்விதத்தில் விசேஷ வளர்ச்சி அடைந்த தசைகள், தசை நார்கள், காலத்தின் மிக நீண்டகூறுகளில் எலும்புகள் இவற்றை வழி வழியாகப் பெறுதல், இவ்வாறுவழி வழியாகப் பெறப்பட்ட நுண்ணயங்களைப் புதிய, மேலும் மேலும்கூடுதலான சிக்கலான செயல்களுக்குத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தல் ஆகியன ஒரு ரஃப யேலின் ஓவியங்களையும் ஒரு தொர்வால்ட்ஸனின் சிற்பங்களையும் ஒரு பகனீனியின் சங்கீதத்தையும் செப்பிடுவித்தையின் விளைவு போல முன்கொண்டு வந்து நிறுத்தத்தக்க மகோன்னதத் தேர்ச்சியை மனிதனின் கைக்கு அளித்தன. ஆனால் கை மட்டும் தனித்து இருக்கவில்லை; அது முழு மொத்தமான, உயர்ந்தபட்ச பல்கூட்டுத்தொகுதியான அங்கஜீவியின் ஓர் உறுப்பாகும். கை என்ன நற்பயனைப்பெற்றதோ, அதை அது பணி புரிந்த உடலமைப்பு முழுவதும் பெற்றது; இது இரண்டு வழிகளில் நடந்தேறியது.

முதலாவதாக, வளர்ச்சியின் பரஸ்பரத் தொடர்பு விதி என டார்வின்அழைத்ததற்கொப்ப உடலமைப்பு அந்த நற்பயனைப் பெற்றது. ஓர்அங்கஜிவியின் தனிப்பட்ட உறுப்புகளின் பிரத்யேகத் தன்மை வாய்ந்தவடிவங்கள் எப்போதுமே மேலீடாக அவற்றுடன் தொடர்பற்றதாகத் தெரிகிற இதர உறுப்புகளின் குறிப்பிட்ட வடிவங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன என்று அந்த விதி அறிவிக்கிறது. இவ்வாறாக ஜீவ அணுக் கருவற்ற சிவப்பு ரத்த அணுக்களையும் முதுகெலும்பின் முதல் எலும்புடன் இரட்டை மூட்டுகளால் இணைக்கப்பட்ட தலையையும் உள்ள எல்லா மிருகங்களும் எவ்வித விதிவிலக்குமின்றித் தங்களது குட்டிகளுக்குப் பாலூட்டப் பால் சுரப்பிகள் பெற்றிருக்கின்றன. அதைப்போலவே, பாலூட்டும் மிருகங்களின் பிளவுபட்ட குளம்புகள் என்பது அசைபோடுவதற்கான பல் கூறடங்கிய வயிற்றைப் பெற்றிருப்பது என்பதுடன் முறையாக இணைக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்டவடிவங்களில் மாற்றங்கள் என்பதில் உடலினுடைய இதர உறுப்புகளின்வடிவங்களில் மாற்றங்கள் என்பன அடங்கியுள்ளன- இந்தத் தொடர்பை நம்மால் விளக்க முடியவில்லையெனினும் இது உண்மையே. நீலக்கண்களைப் பெற்ற தூய வெள்ளைப் பூனைகள் எப்போதுமே அல்லது கிட்டத்தட்ட எப்போதுமே செவிடாக உள்ளன. படிப்படியாக மேலும் மேலும் நிறைவுபெற்று வந்த மனிதக் கையும் இதை ஒத்து ஒரே அளவில் நிமிர்ந்த நடைக்கு உகந்த வகையில் பாதங்கள் பொருந்திவந்தமையும் சேர்ந்து இந்தப் பரஸ்பரத் தொடர்பு இணைப்பின் காரணமாக அங்க ஜீவிகளின் இதர உறுப்புகள் மீது நிச்சயமாக எதிர்ச்செயல் கொண்டன. இருந்தபோதிலும் கூட, யதார்த்த உண்மையைப் பொதுப்படையாக அன்றி அதற்கு மேல் அதிகமாகச் சொல்லுவதற்குச் சாத்தியமல்லாத வகையில் போதுமான அளவுக்கு இந்தச் செயற்பாடுபரிசீலிக்கப் படவில்லை.

உடலமைப்பின் இதர பகுதிகளின் மீது கையினுடைய வளர்ச்சியின்நேரடியான, எடுத்துக் காட்டத்தக்க செயலாட்சி அதைவிட அதிகமுக்கியத்துவம் உடையதாகும். நமது வானர மூதாதையர்கள் சமூகஉணர்வு கொண்டவர்களாக இருந்தனர் என்பது ஏற்கெனவே கவனத்தில்கொள்ளப்பட்டது; மிருகங்களிலேயே மிக அதிக சமூக உணர்வுகொண்ட மனிதனின் தோற்றத்தை சமூக உணர்வில்லாத மிக சமீபத்திய மூதாதையரிடையே தேடுவது சாத்தியமில்லை என்பது தெளிவு. கையின்வளர்ச்சியுடன், உழைப்புடன் இயற்கையின் மீது ஆளுகை கொள்வதுதொடங்கியது; ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தோடும் மனிதனுடையஅறிவெல்லை விரிவாகி வந்தது. இயற்கைப் பொருள்களின் அது வரைஅறியப்படாமல் இருந்த புதிய பண்புகளைத் தொடர்ந்தாற்போலஅவன் கண்டுபிடித்துக் கொண்டிருந்தான். மற்றொருபுறம், பரஸ்பரஆதரவு, கூட்டுச் செயல் என்பதற்கான வழக்குகளைப் பெருக்கியும்ஒவ்வொரு தனி நபருக்கும் இவ்வித கூட்டுச் செயலின் நல்லாதாயத்தைத்தெளிவுபடுத்தியும் சமூக உறுப்பினர்கள் நெருங்கிக் கூடி வர உழைப்பின்வளர்ச்சி அவசியமாகவே உதவி புரிந்தது. சுருக்கமாகக் கூறுவதென்றால்உருவாகிக் கொண்டிருந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதற்கு ஏதோ ஒன்று உள்ளவர்களாகிற நிலையை எய்தினர். தேவைஎன்பது ஓர் உறுப்பைப் படைத்தது; மனிதக் குரங்கின் வளர்ச்சியுறாதகுரல்வளை மெதுவாக ஆனால் நிச்சயமாகச் சுரபேதத்தின் மூலம்இன்னும் கூடுதலான வளர்ச்சி பெற்ற சுரபேதத்தை உற்பத்தி செய்யமாற்றியமைக்கப்பட்டது; வாயின் உறுப்புகள் படிப்படியாக ஒருதீர்க்கமான ஒலிக்குப் பின் மற்றொன்றாக உச்சரிக்கக் கற்றுக் கொண்டன.

உழைப்பிலிருந்தும் அதனுடைய மாற்றப் போக்கிலிருந்தும் மொழியின் பிறப்பை விளக்குவது ஒன்றே சாலவும் பொருத்தமுடையது என மிருகங்களுடன் ஒப்பிட்டு நோக்குங்கால் நிரூபிக்கப்படுகிறது. மிக அதிகபட்சம் வளர்ச்சி பெற்ற மிருகங்களுக்கும் தங்களுக்குள்பரஸ்பரத் தொடர்பு கொள்ள அவசியமான அந்தச் சிறிய அளவுக்கும்கூடத் தீர்க்கமான பேச்சு தேவைப்படுவதில்லை. இயற்கை நிலையில்அதற்குப் பேசுவதற்கு அல்லது மனிதப் பேச்சைப் புரிவதற்குச்சாத்தியப்படவில்லை என்பதினால் தனக்கு ஏதோ ஒரு தடை இருப்பதானஉணர்ச்சி எந்த மிருகத்திற்கும் இல்லை. மனிதனால் பழக்கப்படும்பொழுது இது முற்றாகவே வேறுபடுகிறது. நாயும் குதிரையும்மனிதனுடன் கொண்ட நட்புக் கூட்டு காரணமாக, அவற்றினுடையகருத்து வீச்சின் எல்லைக்குள், எம்மொழியையும் புரிய எளிதாகக் கற்றுக்கொள்ளுகிற அளவுக்குத் தீர்க்கமான பேச்சைக் கூர்ந்து கேட்கக் கூடியகாதுகளை வளர்த்துக் கொண்டுள்ளன. மேலும், அவற்றுக்கு முன்புஅப்பாற்பட்ட தாக இருந்த, மனிதனின் பால் அபிமானம், நன்றியுணர்வு,முதலான உணர்ச்சிகளைக் கொள்ளுவதற்கான திறனையும் அவைபெற்று உள்ளன. இப்படிப்பட்ட மிருகங்களுடன் அதிகமாகப் பழகவாய்ப்புள்ள ஒருவன், அனேக வழக்குகளில் அவை இப்பொழுதுபேசுவதற்குச் சாத்தியமற்ற தங்களது நிலையை ஒரு குறைபாடாகஉணருகின்றன என்ற நம்பிக்கையிலிருந்து எளிதாகத் தப்பிக்க முடியாது;இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக, இந்தக் குறைபாடு இனி நேர் செய்யமுடிகிற ஒன்றல்ல; ஏனெனில் அவற்றினுடைய வாய்த் தொனிஉறுப்புகள் ஒரு திட்டமான திசையில் மிகப் பிரத்யேகத் தன்மை பெற்ற விட்டன.

ஆனாலும் வாய்த் தொனி உறுப்புகள் உள்ளவற்றில் இந்தத்திறமின்மையும் குறிப்பிட்ட வரையறைகளுக்குள் மறைந்து விடுகிறது.பறவைகளின் குரல் கொடுக்கும் உறுப்புகள் மனிதனுடையவற்றை விடஎவ்வளவு மாறுபட முடியுமோ அவ்வளவு மாறுபட்டிருந்தாலும் கூட,எல்லா விலங்குகளிலும் பறவைகள் மட்டுமே பேசுவதற்குக் கற்றுக்கொள்ள வல்லவை: மிகவும் அருவருக்கத்தக்க குரலைக் கொண்டுள்ளகிளிதான் மிகச் சிறப்பாகப் பேசுகிறது. கிளி என்ன பேசுகிறதோ, அதைப்புரிந்து கொள்வதில்லை என்று யாரும் ஆட்சேபிக்க வேண்டாம்.மனிதர்களுடன் பேசவும் நட்புறவு கொள்ளவுமான இன்பத்திற்காகமட்டும் கிளி ஒரேயடியாய் மணிக் கணக்கில் பேசும்; தொடர்ந்தாற்போலத்தனது சொற்செல்வம் முழுவதையும் திரும்பத் திரும்ப ஒப்பிக்கும் என்பதுஉண்மையே. ஆனால் அதனுடைய கருத்துகளின் வீச்சு எல்லைக்குட்பட்டுதான் சொல்வதைப் புரிந்து கற்றுக்கொள்ள முடியும். வசைச் சொற்களின்பொருளைப் பற்றிய கருத்தைப் பெறத்தக்க வகையில் ஒரு கிளிக்குஅவற்றைச் சொல்லிக் கொடுங்கள் (வெப்ப மண்டலத்திலிருந்துதிரும்புகிற மாலுமிகளின் ஓர் இன்பமான பொழுதுபோக்கு இது); பிறகுஅதைத் தொந்தரவு செய்யுங்கள்; வசைச் சொற்களை பெர்லினில் உள்ளஒரு தள்ளுவண்டிப் பழம் விற்பவனைப் போல மிகப் பொருத்தமாகஉபயோகிக்க அது தெரிந்து கொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிவீர்கள். தின்பண்டங்கள் கொடுக்கக் கெஞ்சும் போதும் இது பொருந்துகிறது.

முதலில் உழைப்பு, அதன் பின்னரும், அத்துடன் சேர்ந்தும் பேச்சு-இந்த மிக முக்கியமான இரண்டு தூண்டுகைகளின் செயலாட்சியினால்மனிதக் குரங்கின் மூளை படிப்படியாக மனிதனுடைய மூளையாகமாறியது; இது அதை ஒத்ததாக இருந்தபோதிலும் அதை விட இன்னும்பெரிதாகவும் இன்னும் நேர்த்தியாகவும் இருந்தது. மூளையின்வளர்ச்சியுடன் கைகோத்துக் கொண்டு அதனுடைய மிக உடனடியானகருவிகளான புலன்களின் வளர்ச்சியும் சென்றது. பேச்சின் படிப்படியானவளர்ச்சியுடன் ஒத்த வகையில் கேட்கும் உறுப்பும் செம்மையடைவதுஎன்பது தவிர்க்க முடியாமல் தொடர்ந்ததைப் போல மூளையின் வளர்ச்சிமுழுவதையும் தொடர்ந்து எல்லாப் புலன்களும் செம்மையடைந்தன.மனிதனுடையதை விடப் பருந்தின் கண்கள் மிக தூரத்தைப் பார்க்கின்றன;ஆனால் மனிதனுடைய கண்கள் பருந்தினதைவிடக் கணிசமாகவேஅதிகமானவற்றைப் பொருள்களில் உய்த்துணருகின்றன. மனிதனதைவிட நாயின் முகரும் உணர்வு மிகக் கூர்மையானதே; ஆனாலும்மனிதனுக்கு வெவ்வேறான பொருள்களைக் குறிக்கிற திட்டமானஅறிகுறிகளாக உள்ள வாசனைகளில் நூற்றில் ஒரு பகுதியைக் கூடஅதனால் வகைவேறுபாடு காணமுடியாது. மனிதக் குரங்கு ஸ்பரிசஉணர்வைக் கரடுமுரடான, ஆரம்ப நிலையில் மட்டுமே பெற்றிருக்கும்;மனிதக் கையின் வளர்ச்சியுடன் அக்கம்பக்கமாகவே, அதுவும் உழைப்பின்மூலமாக, வளர்ச்சி பெற்றது.

மூளை, அதன் பணியாட்களான புலன்கள், மேலும் மேலும் தெளிவுபெறும் பகுத்தறிவு, பொதுமைப்படுத்தவும் முடிவு காணவும் உள்ள திறன்ஆகியவற்றின் வளர்ச்சி உழைப்பின் மீதும் பேச்சின் மீதும் ஏற்படுத்தியஎதிர்ச் செயற்பாடு உழைப்பு, பேச்சு இவற்றின் கூடுதலான வளர்ச்சிக்குத்திரும்பத் திரும்பத் தூண்டுகைகளை அளித்து வந்தது. மனிதக்குரங்கிலிருந்து வேறுபட்டவனாக மனிதன் இறுதியாக மாறியவுடன்இந்த வளர்ச்சி முற்றுப்பெற்று விட வில்லை; ஆனால் ஒட்டுமொத்தத்தில்கூடுதலான வலு மிக்க முன்னேற்றத்தைப் பெற்றது; இது வெவ்வேறுகாலங்களில் வெவ்வேறு மக்களினங்களிடையே அளவிலும் திசையிலும்மாறுபடவும் அங்குமிங்கும் ஸ்தல அல்லது தற்காலிகப் பின்னேற்றத்தால்இடைமறிக்கப்படவும் செய்தது. இந்தக் கூடுதலான அபிவிருத்தி,முழு வளர்ச்சி பெற்ற மனிதன் தோன்றியவுடன் செயலுக்கு வந்தபுதியதோர் ஆக்கக் கூறான சமூகம் என்பதினால் ஒரு புறத்தில் வலுவுடன்முன்னோக்கி உந்தப்படவும் மறுபுறம் இன்னும் திட்டமான திசைகளில்வழி நடத்தப்படவும் செய்தது.மரமேறிகளான குரங்குகளின் கூட்டத்திலிருந்து மனித சமூகம்தோன்றுவதற்குள் லட்சக்கணக்கான ஆண்டுகள் – மனிதனுடையஆயுளில் ஒரு வினாடிக்கு இருப்பதை விட அதிக முக்கியத்துவம்இதற்குப் பூமியின் வரலாற்றில் ஏதும் இல்லை*– நிச்சயமாகவேகடந்து சென்றன. ஆனால் இறுதியாக அது தோன்றத்தான் செய்தது.

குரங்குகளின் ஒரு கூட்டத்திற்கும் மனித சமூகத்திற்கும் இயல்பு ரீதியானவேறுபாடாகத் திரும்பவும் நாம் எதைக் காண்கிறோம்? உழைப்பு.பூகோளச் சூழ்நிலைகளால் அல்லது அண்டையிலுள்ள மந்தைகளின்எதிர்ப்பால் வரையறை செய்யப்பட்ட தீனிப் பிரதேசத்திற்குள்இரை தேடிக் கொண்டிருப்பதுடன் ஒரு மனிதக் குரங்குக் கூட்டம்திருப்தியடைந்தது; புதிய தீனிப் பிரதேசங்களைப் பெறுவதற்காக அதுகுடி பெயர்ச்சிகளை அல்லது போராட்டங்களை மேற்கொண்டது; தனதுகழிவுப் பொருளைக் கொண்டு அப்பிரதேசங்களுக்குத் தன்னுணர்வின்றிஉரமளித்ததைத் தவிர்த்து அவை இயற்கை நிலையில் அளித்ததற்குமேலாக வலிந்தெடுக்க அது திறனற்றிருந்தது. எல்லாத் தகுந்ததீனி நிலங்களும் வியாபிக்கப்பட்டவுடன் மனிதக் குரங்குகளின்மொத்த தொகையில் பெருக்கம் ஏற்படவில்லை; அதிகபட்சம்அவற்றின் எண்ணிக்கை ஒரே நிலையில் தங்கிவிட்டது. ஆனால் எல்லாமிருகங்களும் பெருமளவு உணவை விரயம் செய்கின்றன; அத்துடன்கூடுதலாக, உணவின் அடுத்த தலைமுறையை முளையிலேயே அழித்துவிடுகின்றன. வேட்டைக்காரனைப் போலன்றி ஓநாய் தனக்கு அடுத்த ஆண்டிற்குக் குட்டிகளை உணவாக அளிக்கும் பெண்மானை விட்டுவைப்பதில்லை; முழு வளர்ச்சி பெறுவதற்கு முன்னரே இளம் புதர்களைத்தின்று விடுகிற கிரேக்க நாட்டு வெள்ளாடுகள் நாட்டிலுள்ள எல்லாமலைகளையும் பசுமையின்றி வெறிச்சோட வைத்தன. மிருகங்களின்இந்தச் “சூறையாடும் பொருளாதாரம்”, இனவகைகள் தங்களதுவழக்கமான உணவைக் கைவிட்டு இதர வகைக்கு ஏற்றவாறு தங்களைஅமைத்துக் கொள்ள நிர்ப்பந்தித்து அவை படிப்படியாக நிலைமாறுதல்அடைவதில் முக்கியப் பாத்திரம் வகிக்கிறது: இதன் புண்ணியத்தால்அவற்றின் ரத்தம் ஒரு வேறுபட்ட இரசாயன ஆக்கத்தைப் பெறவும்உடலமைப்பு படிப்படியாக வேறுபடவும் செய்கிறது; அதே பொழுதில்தங்களைத் திருத்தியமைத்துக் கொள்ளாத இனவகைகள் சிறுகச் சிறுகஇறந்து விடுகின்றன. நமது மூதாதையர்கள் மனிதக் குரங்கிலிருந்துமனிதனாக மாறியதில் இந்தச் சூறையாடும் பொருளாதாரம் பெரும்அளவில் நற்பங்காற்றியுள்ளது என்பதில் யாதோர் ஐயமும் இல்லை.

மனிதக் குரங்குகளில் புத்திக் கூர்மையிலும் சூழ்நிலைமைகளுக்குப்பொருந்தியவாறு அமைத்துக் கொள்வதிலும் மற்றெல்லாவற்றையும் விடமேலோங்கி நின்ற ஓர் இனத்தில் இந்தச் சூறையாடும் பொருளாதாரம்உணவாக உபயோகிக்கப்பட்ட செடிகளின் எண்னிக்கையைத்தொடர்ந்து பெருக்குவதற்கும் உணவு வகைச் செடிகளின் உண்ணத்தக்கபகுதிகளை மேலும் மேலும் கூடுதலாக உண்ணப்படுவதற்கும் இட்டுச்சென்றது. சுருக்கத்தில், “உணவு மேலும் மேலும் பல்வகையதாயிற்றுஉடலுக்குள் செல்லும் பொருட்சத்துகளின் வகையும் அவ்வாறேயாயிற்று;இந்தப் பொருட்சத்துகளே மனிதனாக மாறுவதற்கான இரசாயனஆதாரப்படிகளாகும். ஆனால் அவை அத்தனை சேர்ந்தும் கூட இன்னும்உழைப்பு என்ற சொல்லிற்குப் பொருத்தமான பொருளைப் பெற்றுவிடவில்லை. உழைப்புக் கருவிகளைச் செய்வதிலிருந்தே உழைப்புஆரம்பமாகிறது. நாம் காண்கிற மிகப் புராதனமான உழைப்புக்கருவிகள்-இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள, வரலாற்றுக் காலத்திற்குமுற்பட்ட மனிதனின் வழிவழியாக வந்த உடை மைகளைக் கொண்டும்வரலாற்றுக் காலத்தின் ஆரம்ப மக்களுடையவும் மிக மிக முதிர்ச்சியற்றதற்காலத்துக் காட்டுமிராண்டிகளுடையவும் வாழ்க்கைப் பாங்கைக்கொண்டும் நிர்ணயிப்பதெனில் மிகப் புராதன உழைப்புக் கருவிகள் தான்என்ன? வேட்டையாடுவதற்கும் மீன் பிடிப்பதற்குமான அக்கருவிகளில்முன்சொன்னவை அதே சமயத்தில் ஆயுதங்களாகவும் பயன்பட்டன.

வேட்டையாடுதல், மீன் பிடித்தல் என்றால் தாவர உணவை மட்டும்உட்கொள்வது என்பது மாறி அத்துடன் இறைச்சியையும் உபயோகிக்கிறநிலை ஏற்பட்டது என்று பொருள்; மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலை மாற்றப்போக்கில் இது மற்றொரு முக்கியமான படியாகும். அங்கஜீவியின் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான எல்லாமுக்கியமான ஆக்கக் கூறுகளும் ஏறக்குறையப் பக்குவப்பட்ட நிலையில் இறைச்சி உணவில் உள்ளன; ஜீரணத்திற்கு ஆகும் நேரத்தைக் குறைத்ததின் மூலமாக அது தாவர வாழ்விற்கு ஒத்த, உடலின் தாவரத் தன்மை சார்ந்த இதர மாற்றப்போக்குகளையும் குறைத்தது; இவ்வாறு மிருக வாழ்வுஎன்பது செயல்திறனுடன் வெளிப்பட்டுச் செயல்படுவதற்குக் கூடுதலானநேரம், பொருள், சக்தி ஆகியவற்றை அது பெற்றுக் கொடுத்தது. உருவாகிவந்த மனிதர் தாவர இனத்திலிருந்து விலகிச் சென்ற அளவுக்கு மனிதர் மிருகத்தை விட மேல் நிலைக்கு உயர்ந்தார். இறைச்சியுடனேயே அக்கம்பக்கமாக ஏற்பட்டதாவர உணவின் பழக்கம் காட்டுப் பூனை, காட்டு நாய் ஆகியவற்றை மனிதனுக்கு ஊழியர்களாக மாற்றியதைப்போலவே, தாவர உணவிற்கு அக்கம்பக்கமாக இறைச்சி உணவையும்பொருந்த அமைத்துக் கொண்டது உருப்பெற்று வந்த மனிதன் உடல்வலுவையும் சுதந்திரத்தையும் பெறுவதில் நற்பங்காற்றியது. ஆயினும் இறைச்சி உணவு மிக அதிகபட்சம் மூளைக்கே நற்பயனை விளைவித்தது; அதனுடைய ஊட்டத்திற்கும் வளர்ச்சிக்கும் தேவையான பொருள்களை இப்பொழுது இன்னும் செழுமையாக அது பெற்றது; எனவே தலைமுறைக்குத் தலைமுறை அதிக விரைவாகவும் முழுநிறைவாகவும் அபிவிருத்தியடைய அதற்குச் சாத்தியமாயிற்று. தாவர உணவு உண்போருக்கு முழு மதிப்புக் கொடுத்த போதிலும், சொல்லவேண்டியதென்னவெனில் இறைச்சி உணவின்றி மனிதர் வாழ்நிலைபெற்று விடவில்லை. இறைச்சி உணவினால் ஏதோ ஒரு காலத்தில் நாமறிந்த சகல மக்கள் இனங்களிலுமே நரமாமிசப்பட்சணியாக மாறஅது இட்டுச் சென்றது எனினும் (பெர்லின் வாசிகளின் மூதாதையர்களானவெலெடாபியன்கள் அல்லது வில்ட்ஸியன்கள் ஆகியோர் பத்தாவதுநூற்றாண்டு வரைக்கும் தங்களது பெற்றோரை உண்பதை வழக்கமாகப்பெற்றிருந்தனர்) அது இன்று நமக்கு முக்கியமல்ல.

இறைச்சி உணவு நிர்ணயமான முக்கியத்துவம் உடைய இரண்டு புதியமுன்னேற்றங்களுக்கு இட்டுச் சென்றது – நெருப்பைப் பயன்படுத்தல்,மிருகங்களைப் பழக்குதல். முதலாவது அரை ஜீரண நிலையில் உணவைவாய்க்கு வழங்கியதால் ஜீரண மாற்றப்போக்கை மேலும் சுருக்கியது;இரண்டாவது வேட்டையாடுவதோடு கூட இறைச்சி இன்னும்அபரிமிதமாகவும் ஒழுங்காகவும் கிடைப்பதற்கான புதியதொருதோற்றுவாயைத் திறந்து விட்டது; மேலும், பாலிலும் அதைச்சேர்ந்த விளைபொருள்களிலும் ஊட்டத்தில் இறைச்சிக்குக் குறைந்தபட்சம் சமமான மதிப்புள்ள புதியதோர் உணவுப் பண்டத்தைஅளித்தது. இவ்வாறு இவ்விரண்டு முன்னேற்றங்களும் மனிதனுடையவிடுதலைக்குப் புதிய சாதனங்களாக விளங்கின. மனிதனுடையவும்சமூகத் தினுடையவும் அபிவிருத்திக்கு அவை மகத்தான முக்கியத்துவம்உடையனவாக இருந்தாலும், அவற்றின் மறைமுக விளைவுகளைப் பற்றிஇங்கு நாம் விரித்துக் கூறினால் அது நம்மை வேறு புறம் வெகு தூரம்இட்டுச் சென்று விடும். உண்ணத்தக்கவற்றை எல்லாம் உண்ணக் கற்றுக்கொண்டதைப் போலவே மனிதன் எந்த சீதோஷ்ண நிலையிலும் வாழவும்கற்றுக்கொண்டான். குடியிருக்கத்தக்க உலகம் முழுவதிலும் அவன் வியாபித்தான்; தனது சொந்தப் போக்கில் அதை முழுமையாகச் சாதித்தஒரே மிருகம் அவனே. எல்லா சீதோஷ்ண நிலைகளுக்கும் தங்களைப்பழக்கப்படுத்திக் கொண்ட இதர மிருகங்கள் – வீட்டுப் பிராணிகளும்பூச்சி இனங்களும் – தங்களது சொந்தப் போக்கில் சுயேச்சையாகஅவ்வாறு மாறவில்லை; மனிதனுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச்சென்றே அவ்வாறு மாறின. ஒரே மாதிரியான வெப்ப சீதோஷ்ணநிலை நிலவிய தனது அசல் குடியிருப்புப் பிரதேசத்திலிருந்து மனிதன்வேனிற்காலம், பனிக்காலம் என வருடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளகுளிர் பிரதேசங்களுக்குப் பெயர்ந்து சென்றதானது புதிய தேவைகளை– குளிரையும் ஈரத்தையும் எதிர்த்துக் காப்பாகப் புகலிடமும் உடுப்பும்என்பதாக – படைத்தது; இதனால் உழைப்புக்கான புதிய துறைகளும்செயலுக்கான புதிய வடிவங்களும் தோன்றின; இவை மேலும் மேலும்மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்தின.

கைகள், பேச்சு உறுப்புகள், மூளை இவற்றினுட ையஒருங்கிணைப்பான செயற்பாட்டினால் – ஒவ்வொரு தனி மனிதனிடத்தில்மட்டுமின்றிச் சமூகத்திலும் கூட-மனிதர்கள் மேலும் மேலும் சிக்கல்மிகுந்த காரியங்களை நிறைவேற்றத் திறன் பெற்றனர்; மேலும்மேலும் உயர்ந்த குறிக்கோள்களைத் தங்களுக்கு நிர்ணயித்துக்கொள்வதும் அவற்றை அடைவதும் அவர்களுக்குச் சாத்தியமாயிற்று.ஒவ்வொரு தலைமுறையின் வேலையும் கூட வித்தியாசப்பட்டது;கூடுதலான செய்நேர்த்தியும் பல்வகைத் தன்மையும் அது பெற்றது.வேட்டையாடுவது, கால்நடைகளை வளர்ப்பது என்பதுடன்விவசாயமும் சேர்ந்தது; அதைத் தொடர்ந்து நூற்பு, நெசவு வேலைகள்,உலோக வேலைகள், மண் பாண்டங்கள் செய்தல், கடற்பயணம்ஆகியனவும் வந்தன. வாணிபம், தொழில் இவற்றுடன் இறுதியாகக்கலைகளும் விஞ்ஞானமும் தோன்றின: குலங்கள் தேசங்களாகவும்அரசுகளாகவும் வளர்ந்தன. சட்டமும் அரசியலும், அவற்றோடுமனிதனுடைய உள்ளத்தில் மனித விவகாரங்களின் அந்த வினோதமானபிரதிபிம்பமான மதமும் எழுந்தன. உள்ளத்தின் விளைபொருள்களாகமுதலாவதாகத் தோற்றமளித்தவையும் மனித சமூகங்களில் மேலாதிக்கம்செலுத்தியவையுமான இந்த எல்லாப் பிம்பங்களுக்கும் எதிராகஉழைக்கும் கையின் மிகையான தன்னடக்கம் உள்ள விளைபொருள்கள்பின்னணிக்குச் சென்றன; சமூக வளர்ச்சியின் மிக ஆரம்ப கட்டத்திலேயே(உதாரணமாக, புராதனக் குடும்பத்திலேயே) உழைப்புக்குத் திட்டம்வகுத்த உள்ளம் தன்னுடையதன்றி இதர கைகளால் அவ்வாறுதிட்டமிடப்பட்ட உழைப்பை நிறைவேற்றவும் சாத்தியமாக்கியதால்அது இன்னும் கூடுதலாகவே நிகழ்ந்தது. நாகரிகத்தினுடைய துரிதவளர்ச்சியின் பெருமை முழுவதும் உள்ளத்திற்கே, மூளையின் வளர்ச்சிக்கும் செயலுக்குமே வழங்கப்பட்டது. (எவ்வாறாயினும் உள்ளத்தில்புலன் நுகர்ச்சி செய்யப்பட்டு அதில் பிரதிபலிக்கிற) தங்களுடையதேவைகளிலிருந்தன்றிக் கருத்துகளிலிருந்தே எழுகின்றன என்று தங்களுடைய செயல்களை விளக்க மனிதர்கள் வழக்கப்படுத்திக்கொண்டனர்; எனவே காலப் போக்கில், விசேஷமாகப் பண்டைய உலகின்வீழ்ச்சிக்குப் பிறகு மனிதர்களின் மனதில் மேலாதிக்கம் செலுத்தியஒரு கருத்துமுதல்வாத உலகக் கண்ணோட்டம் எழுந்தது. டார்வின்கருத்தோட்டத்தைச் சேர்ந்த அதிகப் பொருள்முதல்வாத இயற்கைவிஞ்ஞானிகள் கூட மனிதனுடைய ஆரம்ப பிறப்பைக் குறித்து ஒருதெளிவான கருத்தை இன்னும் கூடப் பெற இயலாத அளவுக்கு அதுஇன்னும் மனிதர் களை ஆட்சி செய்து வருகிறது; ஏனெனில் அதனுடையகருத்தியல் செல்வாக்கின் கீழ்ப்பட்டுள்ள அவர்கள் அதில் உழைப்புஆற்றியுள்ள பங்கை அங்கீகரிப்பதில்லை.

ஏற்கெனவே சுட்டிக் காட்டியது போல, மிருகங்கள் தங்களதுசெயல்களால் – மனிதனைப் போலவே, ஆனால் அந்த அளவுக்குஇல்லாமல் இருந்தாலும் – சுற்றுச்சார்புகளை மாற்றுகின்றன; இந்தமாற்றங்கள் தங்களது முறைக்கு அவற்றை நிகழ்த்தியவர்களின் மீதுஎதிர்ச்செயல் புரிந்து அவர்களை மாற்றுகின்றன என்பதையும் கண்டோம்.இயற்கையில் எதுவுமே தனிமைப்பட்ட நிலையில் நிகழ்வதில்லை.ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றையும் பாதிக்கிறது, பாதிக்கப்படுகிறது.பெரும்பாலான இனங்களில் இந்தப் பல தரப் பட்ட இயக்கமும் பரஸ்பரச்செயற்பாடும் மறக்கப்படுவதால் மட்டுமே நமது இயற்கை விஞ்ஞானிகள்மிக எளிய விஷயங்களிலும் கூட ஒரு தெளிவான உட்பார்வைபெறுவதினின்றும் தடுக்கப்படுகின்றனர். கிரேக்க நாட்டில் வெள்ளாடுகள்காடுகள் புத்துயிர் பெறுவதை எப்படி தடுத்தன என்பதைக் கண்டோம்;செயின்ட்ஹெலேனா தீவில் ஆரம்பத்தில் குடியேறியவர்களால் கொண்டுவரப்பட்ட வெள்ளாடுகளும் பன்றிகளும் ஏறக்குறையப் பூரணமாகவேஅங்கிருந்த பழைய செடிகொடியினத்தையே ஒழித்து விடுவதில் வெற்றிகண்டு, பின்னால் வந்த மாலுமிகள், குடியேறியவர்கள் இவர்களால்கொணரப்பட்ட செடிகள் பரவுவதற்கு இவ்வாறு வழி வகுத்தன.

ஆனால் மிருகங்கள் சுற்றுச்சார்புகள் மீது எவ்வித உட்கருத்தின்றிஅவற்றைப் பொறுத்த வரை தற்செயலாகவும் நிரந்தரமான பாதிப்பைநிகழ்த்துகின்றன. ஆனால் மனிதர்கள் மிருகங்களிடமிருந்து விலகிச்செல்கிற அளவுக்கு இயற்கையின் மீது அவர்களின் பாதிப்பு முன்கூட்டியேநிர்ணயித்த, திட்டமான குறிக்கோள்களை நோக்கிய திசைமுகம் கொண்ட,முன்னரே சிந்தித்துத் திட்ட மிட்ட செயலின் இயல்பை மேலும் மேலும்கொள்கிறது. அவை என்ன செய்கின்றன என்பதை உணராமலேயேமிருகங்கள் ஓர் இடத்தில் உள்ள செடிகொடியினத்தை அழிக்கின்றன.மனிதன் அதை அழிப்பது அவ்வாறு செய்வதினால் விடுபடுகிறநிலத்தில் வேளாண்மைப் பயிரை விதைக்க அல்லது மரங்களை அல்லதுதிராட்சைக் கொடிகளை நடு வதற்காகவேயாம்; விதைப்பதைப் போலப்பல மடங்கை அவை அளிக்கின்றன என்பதை அவன் அறிவான்.உபயோககரமான செடிகளையும் வீட்டுப் பிராணிகளையும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அவன் மாற்றி கண்டங்கள் அனைத்தின் மாவடை, மரவடை வகைகளையே இவ்வாறு மாற்றிவிடுகிறான்.

இதை விட இன்னும் அதிகமாக. செயற்கை இனப் பெருக்கத்தின் மூலம்செடிகளும் மிருகங்களும் மனிதனுடைய கையினால் அடையாளம்தெரியாத அளவுக்கு மாற்றப்படுகின்றன. நமது தானிய வகைகள்எந்தக் காட்டுச் செடிகளிலிருந்து தோன்றினவோ, அவை பயனற்றவகையில் இன்னும் கூடத் தேடப்பட்டு வருகின்றன. மிகவித்தியாசப்பட்ட வளர்ப்பினங்களைச் சேர்ந்த நமது நாய்கள் அல்லதுஇவற்றிற்குச் சமமான எண்ணிக்கையுள்ள வளர்ப்பினங்களைச் சேர்ந்தகுதிரைகள் எந்தக் காட்டு மிருகங்களின் வழிமரபாக வந்தன என்பதைக்குறித்து இன்னும் சர்ச்சை உள்ளது.

முன்கூட்டியே சிந்தித்த, திட்டமிட்ட முறையில் செயல்படமிருகங்களுக்கு உள்ள ஆற்றலைக் குறித்து சர்ச்சை புரிய நமக்குமனதிற்படாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இதற்குஎதிர்மாறாக, எங்கெங்கு புரோடோபிளாஸம், உயிருள்ள அல்புமின்நிலை வாழ்ந்து எதிர்ச்செயல் புரிகிறதோ, அதாவது திட்டமான புறநிலைத்தூண்டுகைகளின் விளைவாக மிகச் சாதாரணமானவையாக இருந்தாலும்திட்டமான சலனங்களை உண்டாக்கி நிறைவேற்றுகின்றதோ,அங்கெல்லாம் கரு உருவத்தில் திட்டமிட்ட செயல்முறை நிலைவாழ்கிறது. ஒரு நரம்பு அணு இருக்கிறதா என்பது ஒரு புறமிருக்க ஓர்அணு கூட இன்னும் இல்லாத இடத்தில் கூட இவ்வாறான எதிர்ச்செயல்நிகழ்கிறது. பூச்சிகளை உண்ணும் செடிகள் உளவிழிப்பின்றிச் செய்தாலும்கூட தங்களுடைய இரையைப் பிடிக்கும் முறையில் திட்டமிட்டசெயலின் ஏதோ ஒன்று இருக்கிறது. மிருகங்களில் உளவிழிப்புள்ளதிட்டமிட்ட செயலுக்கான திறன் என்பது அவற்றின் நரம்பு மண்டலஅபிவிருத்தியுடன் தகவுப் பொருத்தம் உடையதாகும்; பாலூட்டிகளில்அது இன்னும் கணிசமான உயர் மட்டத்தை அடைகிறது. இங்கிலாந்தில்நரி வேட்டையின்போது தன்னைத் துரத்துகிறவர்களிடமிருந்துதப்பிக்க ஸ்தலத்தைப் பற்றிய தனது சிறந்த அறிவை நரி எவ்வாறுஒரு பிழையுமின்றி உபயோகிக்கிறது என்பதையும் மோப்பத்தைஇழக்கும்படிச் செய்ய நிலத்தில் உள்ள எல்லாச் சாதகமானஅம்சங்களையும் அது எவ்வளவு நன்கு உணர்ந்து பயன்படுத்துகிறதுஎன்பதையும் ஒருவன் தினசரி கவனிக்க முடியும். மனிதனுடன் உறவுபூண்டதின் புண்ணியத்தால் மிக ஓங்கிய வளர்ச்சி பெற்ற நமது வீட்டுப்பிராணிகளிடையே குழந்தைகளுக்குச் சரி ஈடாக உள்ள சூழ்ச்சித்திறமுள்ள செயல்களை ஒருவன் இடைவிடாமல் கவனிக்கமுடியும்.தாயின் கர்ப்பத்தில் உள்ள மனிதக் கருவின் வளர்ச்சி வரலாறு பலபத்து லட்சம் ஆண்டுகளாக நடந்தேறிய நமது மிருக மூதாதையர்களின்புழுவிலிருந்து தொடங்கிய உடல் பரிணாமத்தின் சுருங்கிய புனர்நிகழ்வேயாம்; இதைப் போலவே, மனிதக் குழந்தையின் உள வளர்ச்சிஅதே மூதாதையர்களின்-குறைந்த பட்சம், பிற்காலத்தவருடைய-அறிவுத் துறை வளர்ச்சியின் இன்னும் கூடுதலான சுருங்கிய புனர்நிகழ்வு மட்டுமேயாகும். ஆனால் எல்லா மிருகங்களின் எல்லாத் திட்டமிட்டசெயல்கள் சேர்ந்தாலும் பூமியின் மீது அவற்றினுடைய மனோசித்தத்தின்முத்திரையை இடுவதில் அவை வெற்றி பெற வில்லை. அதுமனிதனுக்கே விடப்பட்டது.

சுருக்கத்தில், ஒரு மிருகம் தனது சுற்றுச் சார்பைச் சும்மா பயன்படுத்தமட்டுமே செய்கிறது; தனது வெறும் இருத்தலால் மட்டும் இதில்மாற்றங்களை உண்டாக்குகிறது; மனிதன் தனது மாற்றங்களால் தனதுகுறிக்கோள்களுக்கு அதை ஊழியம் புரியச் செய்கிறான், அதற்குஎசமானனாகிறான். மனிதனுக்கும் இதர மிருகங்கள் அனைத்திற்கும்உள்ள இறுதியான, சாராம்சமான வித்தியாசம் இதுவே: இந்தவித்தியாசத்தை நிகழ்த்துவது உழைப்பே என்பதை மீண்டும் ஒரு தடவைகுறிப்பிட வேண்டும்.

*

இருந்தபோதிலும் இயற்கையின் மீது நமது மனித வெற்றிகளைவைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றிஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொருவெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கிற விளைவுகளைநிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது, மூன்றாவதுநிலைகளாக நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறுபட்ட பலன் களையும்அளிக்கிறது; இவை பல தடவைகளிலும் முதலில் சொன்னதைரத்து செய்துவிடுகின்றன. மெசப்பொடேமியா, கிரீஸ், ஆசியாமைனர், இன்னும் இதர இடங்களிலும் சாகுபடி நிலங்களைப்பெறுவதற்காகக் காடுகளை அழித்த மக்கள் காடுகளை அழித்ததுடன்கூடவே நீர்த் தேக்கங்களையும் தண்ணீர் ஒருங்கு சேரும் இடங்களையும்ஒழித்ததினால் அவர்கள் அந்த நாடுகளின் தற்போதைய திக்கற்றநிலைக்கு அடிகோலியதாகக் கனவும் கூடக் காணவில்லை. ஆல்ப்ஸ்மலைகளில் குடியேறிய இத்தாலியர்கள் வட புறச் சரிவுகளில் அவ்வளவுபரிவுடன் பேணிக் காக்கப்பட்ட பைன் மரக் காடுகளைத் தென் புறச்சரிவுகளில் பூரணமாக வெட்டிப் பயன்படுத்தி விட்டபொழுது, அவ்விதம்செய்ததின் மூலம் அப்பிரதேசத்துப் பால் பண்ணைத் தொழிலின் அடிவேர்களையே வெட்டி விட்டதின் சூசகத்தையும் கூடக் காணவில்லை;அதன் மூலம் வருடத்தின் பெரும் பகுதியில் மலைச் சுனைகளுக்குத்தண்ணீர் இல்லாமல் செய்து விட்டதைப் பற்றியும் மழைக் காலங்களில்கூடுதலான வெள்ளப் பெருக்குடன் அவை சமவெளிகளில் பாய்வதற்குவகை செய்யப்பட்டது என்பதைப் பற்றியுமோ, அந்த அளவு சூசகமும்கூடக் காணவில்லை. ஐரோப்பாவில் உருளைக் கிழங்கை யார் பரவவைத்தனரோ, அவர்கள் அந்த மாச்சத்துள்ள கிழங்குகளுடன் அதேசமயத்தில் கண்டமாலை என்ற வியாதியையும் கூடப் பரப்ப ஏதுவாயினர் என்பதை அவர்கள் அறியவில்லை. இவ்வாறாக அயல்நாட்டு மக்கள்மீது வெற்றிவாகை சூடியவனைப் போல, இயற்கைக்குப் புறத்தில்நிற்கும் ஒருவனைப் போல, இயற்கையின் மீது எவ்விதத்திலும் நாம்ஆளுகை புரியவில்லை என்பதும் அதற்குப் பதிலாக நமது சதை, ரத்தம்,மூளை இவற்றுடன் இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம் அதன் நடுவில்வாழ்கிறோம் என்பதும் இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டுஅவற்றைப் பொருந்தியவாறு கடைப்பிடிப்பதில் இதர எல்லாப்பிராணிகளைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்பதிலேயேஅதன் மீது நமது ஆளுகை அடங்கியுள்ளது என்பதும் ஒவ்வொருபடியிலும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.

உள்ளபடியாகவே, கடந்து போகும் ஒவ்வொரு நாளும் நாம்இந்த நியதிகளை மேலும் நன்கு புரிந்துகொண்டும் இயற்கையின்பரம்பரையான செல்வழியில் நாம் குறுக்கிடும்போது உண்டாகும் உடனடிவிளைவுகளையும் எதிர்காலத்தில் நிகழும் விளைவுகளையும் புலனாக்கிக்கொண்டும் வருகிறோம். குறிப்பாக, இந்த நூற்றாண்டில் இயற்கைவிஞ்ஞானங்களில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றங்களுக்குப்பிறகு குறைந்தபட்சம் நமது தினசரி உற்பத்திச் செயல்களின்இயற்கையான எதிர்கால விளைவுகளையும் கூட உணரவும் எனவேஅவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையில் எப்பொழுதையும்விட இன்றுள்ளோம். இது முன்னேற்றம் அடைய அடைய மனிதர்கள்இயற்கையுடன் தங்களுக்குள்ள ஒருமைப்பாட்டை மேலும் மேலும் உணருவது மட்டுமின்றி – ஐரோப்பாவில் பண்டையகிரேக்க – லத்தீன் நாகரிகம் �ணமடைந்த பிறகு தோன்றி கிறிஸ்துவமதத்தில் மிக அதிக நுட்பம் பெற்ற, மனது – பருப்பொருள் என்பதையும் மனிதன் – இயற்கை என்பதையும் உடல் – ஆன்மா என்பதையும்வேறுபடுத்தி எதிர்நிலைப்படுத்துகிற பொருளற்ற, இயற்கைக்குமுரணான கருத்தானது மேலும் மேலும் சாத்தியமில்லாமல் போகும். உற்பத்தித் துறையில் நமது செயல்களின் கூடுதலான தொலைவிலுள்ளஇயற்கையான பலன்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதில் ஒருசிறிதைக் கற்றுக்கொள்ள நமக்குப் பல்லாயிரமாண்டுகள் உழைப்புதேவைப்பட்டது; ஆனால் இந்தச் செயல்க ளி ன் கூ டு த ல ா னதொலைவிலுள்ள சமுதாய ரீதியான பலன்களைப் பற்றியது இன்னும்அதிகக் கடினமுள்ளதாக இருக்கிறது. உருளைக் கிழங்கைப் பற்றியும்அதன் பலனாக விளைந்து பரவிய கண்டமாலை வியாதியைப்பற்றியும் மேலே சொன்னோம். ஆனால் உருளைக் கிழங்கு உணவுடன்தொழிலாளிகள் கட்டுப்பட்டுப் போனதால் பல நாடுகளில் பாமரமக்கள் பகுதிகள் அனைத்தின் வாழ்க்கை நிலைமைகளில் நிகழ்ந்தவிளைவுகளுடன் ஒப்பிட்டு நோக்கினாலும் அல்லது உருளைக்கிழங்கு ஒன்றை மட்டுமே அல்லது கிட்டத்தட்ட அதை மட்டுமேஉணவாகக் கொண்ட ஐரிஷ் மக்களில் பத்து லட்சம் பேரைப் புதைகுழிக்கு அனுப்பியும் அத்துடன் இருபது லட்சம் பேரைக் கடல்கடந்து குடிபெயரவும் செய்த, அயர்லாந்தில் 1847இன் உருளைக்கிழங்கு நோய் நிகழ்த்திய பஞ்சத்துடன் ஒப்பு நோக்கினாலும்கண்ட மாலை என்பது எந்த மூலைக்கு? மதுபானங்களை வடிக்கஅராபியர்கள் கற்றுக் கொண்ட போது, அவ்விதம் செய்ததின் மூலம்அவர்கள் அப்பொழுது இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தஅமெரிக்கக் கண்டத்தின் பூர்வீகக் குடிகளைக் களைந்தெறிவதற்கானபிரதான கருவிகளில் ஒன்றைச் சிருஷ்டித்துக் கொண்டிருப்பதாகஅவர்கள் மூளையில் கிஞ்சிற்றும் தோன்றவில்லை. அதன் பின்னர்அந்த அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தபொழுது, அவ்வாறுசெய்ததின் மூலம் ஐரோப்பாவில் என்றோ ஒழிக்கப்பட்டுப் போனஅடிமைத்தனத்துக்குப் புத்துயிரளிப்பதாகவும் நீக்ரோ அடிமைவர்த்தகத்திற்கு அடிகோலுவதாகவும் அவர் அறியவே இல்லை.பதினேழாவது, பதினெட்டாவது நூற்றாண்டுகளில் நீராவி எஞ்சினைப்படைக்க உழைத்த மனிதர்களுக்கு, உலகம் முழுவதிலும் வேறு எதைக்காட்டிலும் சமூக உறவுகளைப் புரட்சிகரமாக்குகிற ஒரு சாதனத்தைஅவர்கள் தயாராக்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற எண்ணமேஇல்லை; விசேஷமாக ஐரோப்பாவில் ஒரு சிறுபான்மையோர் கையில்செல்வத்தைக் குவித்தும், பெரும்பான்மையோரின் உடைமைகளைப்பறித்தும் இந்தச் சாதனம் முதலில் முதலாளி வர்க்கத்திற்குச் சமூக,அரசியல் மேலாதிக்கத்தை அளிப்பதையும் ஆனால் பிற்பாடுமுதலாளி வர்க்கம் துக்கியெறியப்படுவதிலும் எல்லாவித வர்க்கப்பகைமைகளும் ஒழிக்கப்படுவதிலும் மாத்திரமே முடிவு பெறக் கூடிய,முதலாளி, பாட்டாளி வர்க்கங்களிடையில் வர்க்கப் போராட்டத்தைத்தோற்றுவிப்பதையும் தனது விதியாகக் கொண்டிருந்தது. ஆனால்இந்தத் துறையிலும் கூட நீண்ட, அடிக்கடி குரூரத் தன்மை வாய்ந்தஅனுபவத்தின் மூலமாகவும் வரலாற்று விஷயாதாரங்களை சேகரித்துப்பகுப்பாய்வு நடத்தியதின் மூலமாகவும் நமது உற்பத்திச் செயல்களின்மறைமுகமான, மேலும் தொலைவிலுள்ள சமூக விளைபயன்களைப்பற்றித் தெளிவானதொரு கண்ணோட்டம் பெற நாம் படிப்படியாகக்கற்று வருகிறோம்; எனவே இந்த விளைபயன்களையும் கட்டுப்படுத்திமுறைப்படுத்த ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்தது.

எனினும் இவ்வாறு முறைப்படுத்தல் என்பதற்கு வெறும் அறிவுமட்டும் போதாது; ஏதோ ஒன்று அதிகமாகவும் தேவையாகிறது. இன்றுவரை நிலைப்பிலுள்ள நமது உற்பத்தி முறையில் ஒரு முழுப் புரட்சியும்,அதே சமயத்தில் நமது இன்றைய சமூக அமைப்பு முழுவதிலும் ஒருபுரட்சியும் தேவைப்படுகின்றன.

இதுவரை நிலைப்பிலிருந்து வரும் எல்லா உற்பத்தி முறைகளும்உழைப்பினுடைய மிக அடுத்த, நேரடியான பயன் அளிக்கிற விளைவைப்பெறுவதை மட்டுமே வெறும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. பிற்பாடு மட்டுமே வெளிப்படுகிற, படிப்படியாகத் திரும்பத் திரும்பச்செய்யப்படுவதாலும் திரட்சி பெறுவதினாலும் மட்டுமே பயன்தருகின்ற மேலும் கூடி வரும் விளைவுகள் பூரணமாகவே உதாசீனம்செய்யப்பட்டன. முதலாக இருந்த நிலப் பொது உடைமை, ஒருபுறம், உடனடியாகக் கிட்டக்கூடியதுடன் மட்டுமே பொதுவாகவரையறுக்கப்பட்ட அறிவு வரம்பு பெற்ற மனிதகுல வளர்ச்சிமட்டத்துக்கு ஒத்திசைந்திருந்தது; மற்றொரு புறம், அது இந்தப்பூர்வீகத் தன்மை வாய்ந்த பொருளாதாரத்தின் சாத்தியப்பாடுள்ள தீயவிளைவுகளை நேர் செய்ய இடமளிக்கிற நிலத்தின் ஓர் உபரியைமுன்னூகம் செய்து கொண்டது. இந்த உபரி நிலம் தீர்ந்த பிறகுபொதுவான உடைமை என்பதும் நசித்தது. இருந்தாலும் உற்பத்தியின்உயர் வடிவங்கள் அனைத்தும் மக்கள்தொகை பல்வேறு வர்க்கங்களாகப்பிரிக்கப்படுவதற்கும் அதன் மூலம் ஆளும் வர்க்கம், ஒடுக்கப்படுகிறவர்க்கம் இவற்றிடையே பகைமை தோன்றுவதற்கும் இட்டுச் சென்றன.இவ்வாறாக ஆளும் வர்க்கத்தின் நலன்களே உற்பத்தியை முன்னோக்கிநடத்திச் செல்லும் காரணியாக அமைந்தன; ஏனெனில் ஒடுக்கப்பட்டமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பண்டங்களை அளிப்பதுடன்உற்பத்தி கட்டுப்பட்டு விடவில்லை. மேற்கு ஐரோப்பாவில் ஓங்கிப்பரவியுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையில் இது முழுக்க முழுக்கஅமுலாக்கப்பட்டுள்ளது. உற்பத்தியிலும் பரிவர்த் தனையிலும்மேலாதிக்கம் கொண்டுள்ள தனிப்பட்ட முதலாளிகள் தங்களுடையசெயல்களின் மிக உடனடியான பிரயோசனமுள்ள பலன்களைப் பற்றிமட்டுமே கவலைப்பட முடிகிறவர்களாக உள்ளனர். உண்மையில்இந்தப் பிரயோசனமுள்ள பலன் என்பதும் கூட-உற்பத்தி செய்யப்படுகிறஅல்லது பரிவர்த்தனைக்குட்படுகிற பண்டத்தின் பிரயோ சனம் என்பதேபிரச்சனையாக இருப்பதால் – பின்னணிக்குள் வெகு தூரம் பின்வாங்கிப்போய், விற்பனையினால் கிடைக்கும் லாபம் மட்டும் ஒரே உந்தும்சக்தியாகிவிடுகிறது.

முதலாளி வர்க்கத்தின் சமூகவியலான, மூலச் சிறப்புள்ள அரசியல்பொருளாதாரம் உற்பத்தி, பரிவர்த்தனை ஆகிய துறைகளில்உண்மையாகவே குறிக்கோள்களாகக் கொள்ளப்படுகின்ற மனிதச்செயல்களின் சமூக விளைவுகளை மட்டுமே பிரதானமாக ஆராய்கிறது.சமூக அமைப்பின் தத்துவார்த்த வெளியீடாக உள்ள அத்துடன் இதுமுழு ஒத்திசைவு உள்ளதாகவே இருக்கிறது. தனிப்பட்ட முதலாளிகள்உடனடியான லாபத்திற்காக உற்பத்தியிலும் பரிவர்த்தனையிலும்ஈடுபட்டிருப்பதால் முதலில் மிக நெருங்கிய, மிக அடுத்துள்ளவிளைவுகள் மட்டுமே கணக்கிலெடுக்கப்பட வேண்டும். ஒரு தனிப்பட்டஉற்பத்தியாளன் அல்லது வியாபாரி உற்பத்தி செய்த அல்லது விலைக்குவாங்கப்பட்டசரக்கை வழக்கமான பேராசைப்பட்ட லாபத்துடன் விற்கும் வரை அவன் அத்துடன் திருப்தியடைகிறான்; அதன் பிறகு அந்தச்சரக்கிற்கோ அல்லது அதை வாங்குபவர்களுக்கோ என்ன நேர்கிறதுஎன்பதைப் பற்றி அவன் கவலை கொள்பவனாக இல்லை. அதேசெயல்களின் இயற்கை விளைபயன்களுக்கும் இதுவே பொருத்தமாகஉள்ளது. கியூபாவில் மலைச் சரிவுகளில் இருந்த காடுகளைத் தீயிட்டுக்கொளுத்தி மிகவும் உயர்ந்த லாபகரமான காப்பிச் செடிகளின் ஒருதலைமுறைக்குப் போதுமான உரத்தை அந்தச் சாம்பலிலிருந்து பெறஸ்பானிய காப்பித் தோட்ட முதலாளிகள் என்ன கவலைப்பட்டார்கள்-வெப்பப் பிரதேசத்துக் கன மழை பின்னால் பாதுகாப்பற்ற மேல்படிவமண் முழுவதையும் அடித்துக் கொண்டு போய் பாறைகளை மட்டும்மொட்டையாக விட்டுச் சென்றது என்பதைப் பற்றித்தான் அவர்கள்என்ன கவலைப்பட்டார்கள்! சமூகத்தைப் போலவே இயற்கைசம்பந்தமாகவும் கூட இக்காலத்திய உற்பத்தி முறை உடனடியான, மிகஉருப்படியான விளைவுகளைப் பற்றி மட்டுமே பிரதானமாக அக்கறைகொண்டுள்ளது; பிறகு இந்த நோக்கத்தின் பால் திசைமுகம் திரும்பியுள்ளசெயல்களின் எதிர்கால விளைவுகள் மிக வேறுபட்டவையாக, இயல்பில்பெரும்பாலும் நேர் முரணானவையாக மாறிவிடுகின்றன என்றும்தொழில்துறையின் பத்தாண்டு கால சக்கரவட்டச் செல்வழி காட்டியதுபோல அளிப்புக்கும் தேவைக்கும் இருந்த நல்லிணக்கம் நேர் எதிரானதாக-“வீழ்ச்சியில்” *ஜெர்மனியும் கூட சிறிது பூர்வாங்க அனுபவத்தை அதைக்குறித்து பெற்றது-மாறி விடுகிறது என்றும் தன் சொந்த உழைப்பைஅடிப்படையாகக் கொண்டுள்ள தனி உடைமை அத்தியாவசியமாகவேஉழைப்பாளிகளின் உடைமை கவரப்பட்டு வெளியேற்றப்படுவதாகவளர்ந்து உழைப்பாளிகளல்லாதவர் கைகளில் மேன்மேலும் செல்வம்குவிக்கப்படுகிறது என்றும் மேலும் ஆச்சரியம் வெளியிடப்படுகிறது….**

1876 இல் பி. எங்கெல்சினால்எழுதப்பட்டது…

  • இக்கட்டுரை முதலில் “அடிமைப்படுத்தலின் மூன்று முக்கியமான வடிவங்கள்” என்னும் விரிவான நூலுக்கு ஒரு முன்னுரையாகத் திட்டமிடப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை; ஆகையால் முடிவில் எங்கெல்ஸ், அவர் எழுதிய முன்னுரைக்கு “மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்” என்னும் தலைப்பைக் கொடுத்தார். மனித உடலமைப்பின் உருவாக்கத்தில் உழைப்பு மற்றும் கருவிகளின் உற்பத்தி வகித்த ஜீவாதாரமான பாத்திரத்தை எங்கெல்ஸ் ஆராய்கிறார்; நீண்ட வரலாற்றுப் போக்கின் விளைவாகக் குரங்கு குண ரீதியில் புதிய
    பிறவியாக, மணிதனாக எப்படி மாறியது என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார். இக்கட்டுரை அநேகமாக 1876 ஜூனில் எழுதப் பட்டிருக்க வேண்டும்.
  • இங்கு கையெழுத்துப் பிரதி துண்டாக நின்றுவிடுகிறது.-ப.ர்,

கார்ல் மார்க்ஸ் 200: தத்துவ வாசிப்பு

என்.குணசேகரன்

மனித சமூக வரலாற்றின் உயிர்நாடியான ஒரு உண்மையை கம்யூனிஸ்ட் அறிக்கை கொண்டுள்ளது.

“இது வரை இருந்து வரும் சமூகத்தின் வரலாறு அனைத்தும், வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” இந்த பொன்னான வரிகள் ஒரு புதிய வரலாற்றுப் பார்வையைக் கொண்டுள்ளது. முதலாவதாக, சமூகத்தை வர்க்கங்களின் தொகுதி என்று அணுகும் முறையை இது வழங்குகிறது. அடுத்து, வர்க்கங் களுக்கிடையே எழும் முரண்பாடுகளினால் நடக்கும் போராட்டங்கள்தான், வரலாற்றின் உந்து சக்தி என்ற புதிய வரலாற்று வெளிச்சத்தை நமக்கு வழங்குகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு, மார்க்சியத்தின் மகத்து வமாகும். வர்க்கங்களிடையே நடக்கும் போராட்டம் உற்பத்தி மற்றும் பொருளியல் தளத்தில் மட்டும் நடப்பதல்ல. அரசியல், சட்டம், பண்பாடு என பல தளங்களில் நடைபெறுகிறது.அதில் முக்கியமான தளம் தத்துவம். பல சந்தர்ப்பங்களில் நேரடிக் காட்சியாக இது தெரிவதில்லை. ஆனால் சமூகத் தில் நடக்கும் வர்க்கப் போராட்டங்கள் வலுவான தாக்கத்தை தத்துவத்தில் ஏற்படுத்துகின்றன.

தத்துவம் – அறிமுகம்
தத்துவச் சிந்தனை மிகவும் பழமையானது. பண்டைய கிரேக்கத்திலும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தத்துவ விவாதங்கள் நடந்து வந்து உள்ளன. ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதற்கான தேடலை ஒருவர் மேற்கொண் டால், அவரை தத்துவவாதி என்று அழைப்ப துண்டு.

philosophy  என்ற ஆங்கில சொல் இரண்டு கிரேக்க சொற்களைக் கொண்டது. philo என்பதற்கு நேசித்தல் என்றும் sophia என்பதற்கு அறிவு என்றும் பொருள்படும். அறிவை நேசித்தல் என்ற பொருள் கொண்டதாக தத்துவம் என்ற துறை புரிந்துகொள்ளப்பட்டது.
மனிதர்கள் பகுத்தறிவு கொண்ட ஒரு உயிரினம். பகுத்து அறியும் ஆற்றல் உள்ளதால், அவர்கள் எப்போதும் அறிவுத் தேடல் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். மனித இனத்தின் இந்த அறிவுத் தேடல் தேவையை நிறைவேற்றுவதற்கு தத்துவத் துறை பயன்பட்டு வந்துள்ளது.
தனது வாழ்க்கையையும் தனது இருப்பையும் பற்றி, அறிந்து கொள்ளவும், தான் வாழும் உலகமும் அதைச் சுற்றியுள்ள இயற்கையையும் பற்றி அறிந்து கொள்ளவும் மனிதர்கள் இடையறாது ஆர்வம் கொண்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். இதில் உருவாகும் அறிவே தத்துவம்.
இயற்கை, சமூகம், மனிதர்கள் என்ற பரிமாணங் களில் தத்துவ செயல்பாடு அமைந்துள்ளது. தத்துவா சிரியர்கள் இயற்கை, உலகம், பிரபஞ்சம் ஆகியவற்றின் இருப்பு பற்றியும் மனிதர்கள் உள்ளடங்கிய சமூகத்தின் இருப்பு பற்றியும் சிந்தித்து வந்துள்ளனர்.

மார்க்சியத்தின் வரையறை
தத்துவம் அனைத்து அறிவியல் துறைகளுக் கும் தாய் போன்று விளங்கியது. இயற்கை அறிவியல், பௌதிகம் போன்ற துறைகளில் புதிதாக சேர்ந்திடும் அறிவுப் பங்களிப்பு அனைத்தும் தத்துவமாகவே பார்க்கப்பட்டது. 1729-ம் ஆண்டில் நியூட்டன் எழுதிய நூலின் தலைப்பு,” இயற்கைத் தத்துவத்தின் கணிதக் கோட்பாடுகள்”. அன்று பௌதிகம், கணிதம், வானவி யல் போன்ற அனைத்தும் தத்துவ அறிவின் பிரிவு களாகவே கருதப்பட்டன.
தத்துவம் பற்றி பல பார்வைகளும், வரையறை களும் நிலவி வந்த சூழலில் மார்க்சியத்தின் வருகை ஒரு புதிய தடத்தினை உருவாக்கியது.
எங்கெல்ஸ் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை பற்றி எழுதுகிற போது குறிப்பிடுகிறார்.

“எல்லாத் தத்துவங்களுக்கும் அடிப்படைக் கேள்வி, இருத்தலுக்கும், சிந்தனைக்கும் இடையே யான உறவு பற்றியதுதான்’’
அதாவது, புற உலகு சார்ந்த பொருட்களுக் கும், அதனையொட்டி எழுகிற மனித சிந்தனைக் கும் உள்ள உறவு குறித்து தத்துவங்களும் தத்து வவியலாளர்களும் தொடர்ந்து சிந்தித்து வந்துள்ளனர்.
இது எப்போது துவங்கியது? இதற்கும் எங்கெல்ஸ் ஒரு சுவாரசியமான விளக்கத்தை தருகிறார்:

“தங்களது உடல் அமைப்பு பற்றி, எந்த அறிவும் இல்லாத ஆதிகால மனிதர்கள், தாங்கள் கண்ட கனவுகளில் வந்த ஆவி கற்பனை உருவங்களின் தாக்கத்தால், தங்கள் எண்ணங்களும் உணர்வு களும் உடலின் செயல்பாடுகள் அல்ல; உடலில் இருக்கும் ஆன்மாதான் அவற்றுக்குக் காரணம்; அது மரணத்தின்போது, உடலை விட்டு வெளியேறி விடுகிறது என்று கருதினர். அன்றிலிருந்து மனிதர் கள் தங்கள் ஆன்மாவிற்கும் புற உலகத்திற்குமான உறவு பற்றி ஆராயத் துவங்கினர்.” இந்த அற்புத சித்தரிப்பு, தத்துவத் துறையின் துவக்கத்தை எளிமை யாக எடுத்துரைக்கிறது.
இந்தக் காலங்களுக்குப் பிறகுதான் தத்துவ சண்டைகள் துவங்கின. தத்துவக் களத்தில் போரிடும் இரு முகாம்களை எங்கெல்ஸ் விளக்குகிறார்.
ஆன்மா, புற உலகு உறவு பற்றி “…பதிலளித்த தத்துவவாதிகள் இருகூறாகப் பிரிந்தனர். ஆன் மாவை இயற்கைக்கு முதன்மையாக கருதியவர் கள் கருத்துமுதல்வாத முகாமாகப் பிரிந்தனர். இயற்கையை பிரதானமாக முதன்மைப்படுத்திய வர்கள் பொருள்முதல்வாத முகாமாக இயங்கினர்.”
மார்க்சியத்தின் இந்த வரையறை அடிப்படை யில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் பொருள் முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். இவ்வாறு, தத்துவத்தில் அதுவரை நீடித்து வந்த குழப்பங்களுக்கு எல்லாம் மார்க்சிய தத்துவம் தீர்வு கண்டது. இந்த புதிய பார்வை, தத்துவ வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

கருத்து முதல் வாதம்
பல்கலைக்கழக தத்துவப் பாடங்களில் கருத்து முதல்வாதம் என்ற சொற்றொடர் பயன்படுத்தப் படுவதில்லை. இந்த தத்துவ முறைக்கு பல சொற் கள் பயன்படுத்தப்படுகின்றன. மீமெய்யியல் (அநவயயீhலளiஉள) என்பது உள்ளிட்டு பலவாறு சொற் கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. தமிழில் அப்பாலைத் தத்துவம் என்ற சொற்றொடர் பயன்பட்டு வந்துள்ளது.
புலன்கள் உணரும் பொருட்களுக்கு அப்பால், புலன்களால் உணர முடியாதவற்றை விவாதிக் கும் தத்துவமுறை என்பதால் இது அப்பாலைத் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு தூண் இருக்கிறது என்றால் சாதாரணமாக அது எந்த மூலப்பொருட் களால் ஆனது என்று விளக்கம் கூறலாம். ஆனால் அப்பாலைத் தத்துவம் அந்த தூணுக்குள் உள்ள ‘மறைபொருளைப்’ பற்றி பேசுகிறது. இறுதியாக, “தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்” என்று அது முடிவு கூறும். அதாவது கடவுள்தான் எல்லாம் என்று இறுதியாக வந்தடையும் தத்துவ முறை அது.

இந்த அப்பாலைத் தத்துவம் அரிஸ்டாட்டில் காலத்திலும், அதற்கு இணையாக அதே காலங் களில் இந்தியாவிலும் பெரும் செல்வாக்குடன் தத்துவத் துறையில் செயல்பட்டது.

மேற்கண்ட எடுத்துக்காட்டில், தூண் கட்டப் படுகிற மூலப்பொருட்களும், தூணின் வடிவமும் மாறலாம்; ஆனால், ’மறைபொருளாக’ உள்ள ஒன்று எப்போதும் மாறுதலுக்கு உள்ளாவதில்லை, அது நிரந்தரமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த அநவயயீhலளiஉள என்ற சொல்லுக்கு பிந்தைய காலங்களில் மாறாநிலை தத்துவம் என்று அழைக்கிற வழக்கம் ஏற்பட்டது.

சமூகத்தில் எடுத்துக்காட்டு கூற வேண்டுமானால், சாகாவரம் பெற்ற, மாறாத, மாற்ற முடியாத சமூகம் முதலாளித்துவ சமுகமே என்கிற பார்வையைக் குறிப்பிடலாம்.

பொருட்கள், சமூக நிகழ்வுகள் அனைத்தும் மாறாதவை என்ற பார்வை கொண்டது மாறா நிலைத் தத்துவமாகும். இதற்கு நேர் எதிரான தத்துவ முறை, இயக்கவியல் எனப்படும். மார்க் சிற்கு முந்தைய இயக்கவியலானது, கருத்து முதல்வாத குழப்பங்களுடன் இருந்தது. அதனைப் பொருள்முதல்வாதத்துடன் இணைத்து இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவ முறையினை மார்க்சும், எங்கெல்சும் படைத்தனர்.

கிழக்கு,மேற்கு தத்துவங்கள்
தத்துவங்களை மேற்கத்திய தத்துவம், கிழக்கு தத்துவம் என வகைப்படுத்தி பயில்கின்றனர். ஆனால் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னைகளில் பிர தேசம், நாடு வித்தியாசங்கள் இருப்பதில்லை. மனித சிந்தனைக்கும் இயற்கைக்குமான தொடர்பு குறித்து, எல்லாத் தத்துவங்களும் ஒரு நிலைபாடு எடுத்து விளக்குகின்றன. எங்கெல்ஸ் குறிப் பிட்டது போன்று இயற்கையா? சிந்தனையா? என்ற கேள்விக்கு விடை கண்டதில், எது மூல முதலானது என்பதனையொட்டி, இரு பிரிவு களாக கிழக்கு, மேற்கத்திய தத்துவங்களும் வகைப்படுத்தப்படுகின்றன.

தத்துவங்களின் கால வரிசையை ஆராய்கிற போது மனித நாகரிகங்களின் வளர்ச்சியோடு இணைந்ததாக தத்துவங்கள் தழைத்திருக்கின்றன. இது மேற்கு, கிழக்கு உள்ளிட்டு உலகத் தத்துவங் கள் அனைத்துக்கும் பொருந்தும். இந்திய தத்து வத்தில் வேதங்கள் தோன்றியதாக கணிக்கப்படும் காலத்திலிருந்தே பொருள் உருவாவது பொருளி லிருந்துதான் போன்ற துவக்க கால பொருள் முதல்வாத தத்துவக் கருத்துக்களும் தோன்ற ஆரம்பித்தன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற தத்துவ முறையாக சார்வாகம் அல்லது உலகாயதம் எனப்படும் இந்திய பொருள் முதல்வாத தத்துவம் வளர்ந்தது. இந்த உலகு, மனிதர்கள் எல்லாம் காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம் ஆகியவற்றிலிருந்து தோன்றியதாக இந்தியப் பொருள்முதல்வாதம் கருதியது.

இதே காலங்களில் கிரேக்கத்தில் தேல்ஸ் என்ற தத்துவவாதி வாழ்ந்திருக்கிறார். அவர் தண்ணீர் தான் மூலாதாரப் பொருள் என்றும் அதிலிருந்து, உலகமும், பிரபஞ்சத்தின் தோற்றமும் நேர்ந்ததாக பொருள்முதல்வாத நிலையினைக் கொண்ட தத்துவத்தை உருவாக்கியவர். அவருக்குப் பிறகு காற்றுதான் முதன்மையானது என்ற தத்துவ நிலைபாட்டைக் கொண்ட அநேக்சிமினஸ் வாழ்ந் திருக்கிறார். இவ்வாறு கிழக்கிலும், மேற்கிலும் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் வளர்ந்து வந்துள்ளன.

இந்திய சமூகத்தில் நிலவுடைமை சமூகம் நிலைபெற்று, ஆளுகின்ற வர்க்கங்கள் நிலப் பிரபுத்துவ சக்திகளாக வலுப்பெற்ற நிலை, நால் வருண சாதிய அமைப்பு இறுக்கமாக வேரூன்றிய சூழல் ஆகியவற்றால், பொருள்முதல்வாதம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
மனித சமூக வளர்ச்சி ஏற்பட்ட சூழலில் ஆன்மீக தத்துவங்களும் கருத்துமுதல் வாத தத்துவங்களும் மேலாதிக்கம் செலுத்தத் துவங்கின. சமூகம் வர்க்கங்களாக பிரிந்து, தொடர்ந்து வந்த வர்க்கப் போராட்டத்தில் நிலவுடைமை சமூகம் பரிணமித் தது. இந்த சூழலில்தான் கருத்துமுதல்வாதம் ஆதிக்கம் செலுத்தியது.

ஆக, மேலாதிக்கம் செலுத்தும் சொத்துடைமை வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக் கும் நடைபெறும் வர்க்கப் போராட்டம் தத்துவத் துறையில் கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள் முதல் வாதத்திற்குமான போராட்டமாக நடை பெற்று வந்துள்ளது. இதனை தத்துவ வரலாறு முழுவதும் காண முடியும்.

மதமும் தத்துவமும்
மதங்களின் தோற்றம், வளர்ச்சிக்கும் தத்துவ வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இயற்கையின் இயக்கங்களின் மீது ஏற்பட்ட மனித உணர்வுகள், சிந்தனைகள், மத வழிபாட்டு முறைகளாகவும் தத்துவ விளக்கங்களாகவும் பரிணமித்து வந்துள்ளன. பல தத்துவங்களில் மத நம்பிக்கை எது, தத்துவக் கருத்து எது என்று பிரித்து தெரிந்துகொள்ள இயலாத அளவிற்கு இணைந்துள்ளன.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் மதத்தை யும் தத்துவத்தையும் பிரித்து பார்ப்பது மட்டு மல்லாது, மதம் உருவானதற்கான சமூகச் சூழல், பொருளாதாரக் காரணிகளை ஆராயவும் கற்றுக் கொடுக்கிறது.
இந்தியத் தத்துவம் மதம் சார்ந்தது என்றும் ஆன்மீகத் தன்மை கொண்டது என்றதுமான கருத்துக்கள் இன்றளவும் ஆழமாக வேரூன்றி வந்துள்ளன. இந்தியாவின் குடியரசுத் தலைவ ராக இருந்த தத்துவ ஆசிரியரான டாக்டர் ராதா கிருஷ்ணன் “இந்திய தத்துவம் என்பது சாரம் சத்தில் ஆன்மீக தத்துவம்” என்று எழுதியுள்ளார். அதாவது இந்திய தத்துவத்தில் கடவுள் மறுப்புக் கொள்கைகள் எதுவும் இல்லை என்று அடிப் படையற்ற கருத்து சொல்லப்பட்டு வந்துள்ளது. இதனை உடைத்தெறிந்த பெருமை தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்களையே சாரும். இந்தியத் தத்துவத்தில் தொன்மைக்காலமாக நிலைத்திருந்த நாத்திக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்து, இந்திய தத்துவம் ஆன்மீக தத்துவமே என்ற வாதத்தின் பொய்மையை தோலுரித்துக் காட்டினார் அவர்.

தத்துவ இயக்கத்தின் அடிப்படை
பல்வேறுபட்ட தத்துவ சிந்தனைகள் உருவா வதற்கு எது அடிப்படை? இந்தக் கேள்விக்கான விடையினை மார்க்சியத்தில்தான் பெற முடியும். குறிப்பிட்ட மக்கள் சமூகத்தில் நிலவும் சமூக உற்பத்தி நிலைமைகள்தான் குறிப்பிட்ட தத்துவப் போக்கு தோன்றிட அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

எடுத்துக்காட்டாக இந்தியாவில் பௌத்த தத்துவம் தோன்றிய வரலாற்றைக் குறிப்பிடலாம். மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் இதனை கீழ்கண்டவாறு விவரிகின்றார்:

“வட இந்தியாவில் பேரரசுகள் காலத்தில், வேள்விகளையும், வேதமுறைகளையும் எதிர்த்து, சமணமும், பௌத்தமும் இயக்கம் கண்டன. சாதி அடிப்படையிலான சனாதன அமைப்பு தொலை தூர வர்த்தக வளர்ச்சிக்கு தடையாக இருந்தன. தொலைதூர வர்த்தகம் வளர சமணப் பள்ளி களும் மடங்களும் பேருதவி புரிந்தன… பல்வேறு சமூகக் குழுக்களை ஏற்றுக் கொள்ளும் சமத்துவக் கொள்கை கொண்ட பௌத்தமும் சமணமும் இயல்பாகவே வர்த்தக வளர்ச்சிக்கு உதவின.”

சமூகத்தில் நிலவுடைமையோடு சேர்ந்து வணி கப் பொருளாதாரம் வளரத் துவங்கிய காலத்தில் பௌத்தம் வளரத் துவங்கியது. ஏற்கனவே வேளாண்மை உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்ட மக்கள் ஆன்மிக தத்துவப் பிரிவுகள் மற்றும் வேதங்களின் பெயரால் அடிமைகள் போன்று நடத்தப்பட்டு வந்தனர். அவ்வாறு வாழ்ந்த நிலையில் வணிக வளர்ச்சித் தேவைகளின் விளை வாக உருவான பௌத்தம் அடக்கப்பட்ட மக்க ளின் குரலாக உருவெடுத்தது.

மேலை நாடுகளிலும் இப்படிப்பட்ட தத்துவ வெளிப்பாடுகளை காணலாம். ஐரோப்பிய சமூ கத்தில் 15-ம் நூற்றாண்டுகளில் நகரங்களும் வணி கமும் தொழிற்சாலைகளும் வேகமாக வளரத் துவங்கின. நிலப்பிரபுத்துவ சமூக அமைப் பிலிருந்து முதலாளித்துவ சமுகமாக மாறும் கட்டமாக அது இருந்தது. அறிவியல் வளர்ச்சி யும் இந்த நிகழ்வுப்போக்கிற்கு உறுதுணையாக அமைந்தது.

இந்த சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு, புதிதாக ஆளும் வர்க்கமாக உருவெடுத்த முதலாளித்துவ வர்க்கங்களின் தேவைகளை பிரதிபலிப்பதாக அன்றைய தத்துவ வளர்ச்சி ஏற்பட்டது. திதராட் உள்ளிட்ட பிரெஞ்சு தத்துவவாதிகள், மார்க் சுக்கு முந்தைய காண்ட், ஹெகெல் போன்ற தத்துவவாதிகளை குறிப்பிடலாம். அறிவியல் வளர்ச்சி ஏற்பட்ட சூழலில் இவர்களில் பலர் பொருள்முதல்வாதிகளாக இருந்தனர்.

எனவே தத்துவ வரலாறு படிப்பவர்கள் மார்க்சின் கீழ்க்கண்ட கூற்றினை ஆழமாக உணர வேண்டும்: “…பொருளாதார வாழ்க்கையின் உற்பத்திமுறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க் கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை. அவர் களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர் களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது… ”

சமூக வாழ்க்கை நிலையில் பொருளாதார உற்பத்தி முறை முக்கியமானது. அதுவே அறிவுலக வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று மார்க்ஸ் கூறுகிறபோது, தத்துவமும் அதில் அடக்கம். தத்துவமும் உற்பத்தி முறை இயக்கத்திற்கு ஏற்ற தாக இயங்குகிறது. உற்பத்தியில் கட்டுப்பாடு கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் தத்துவம் பயன்படுகிறது.

ஆனால் இதனை இயந்திரகதியில் பார்ப் பதை மார்க்சியம் ஏற்கவில்லை. தத்துவ நிலை பாடுகளை உன்னிப்பாக ஆராய வேண்டும் என்பதுடன் அதன் பின்னணியாக உள்ள உற்பத்தி முறை மற்றும் சமூக சூழலை கருத்தில் கொள்ள வேண்டுமென மார்க்சியம் வழிகாட்டுகிறது.

தத்துவத்தின் இலக்கு
பொருளியல் துறையில் நிகழும் மாற்றங்கள் – தத்துவத் துறை இயக்கம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தாக்கம் செலுத்துகின்றன என்பதனை மறந்திடக் கூடாது. பாட்டாளி வர்க் கத்திற்கு சுரண்டலிலிருந்து விடுதலை பெறும் போராட்டத்தினை ஊக்குவிக்கும் முக்கிய காரணி யாக முற்போக்கான தத்துவ வளர்ச்சி திகழ்கிறது.

சமூக உருவாக்கத்துடன் இணைத்து தத்துவ வரலாற்றை அறிதல் அவசியம். தொன்மைக் காலம் சமூக ஏற்றத் தாழ்வுகளின் துவக்க காலம். அதிலிருந்து தொடங்கி, இன்று வரை, உற்பத்தி உபரியைக் கையகப்படுத்தும் அதிகாரமும் வலிமையும் கொண்டோர் அறிவுத் தளத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். எனவே தத்துவமும் ஒடுக்குவோரின் குரல் ஒரு புறமும், ஒடுக்கப்பட் டோரின் குரல் மறுபுறமும் என இரு வகைப் போக்குகள் கொண்டதாக இருந்துள்ளது.

இந்நிலையில் தத்துவத்தின் இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?
“தத்துவஞானிகள் உலகை பல்வேறு வகை களில் வெளிப்படுத்தி விளக்கியுள்ளனர்; ஆனால் மையமான பிரச்னை என்னவென்றால், உலகை மாற்றுவதுதான்.” என்பது கார்ல் மார்க்சின் கூற்று. மார்க்சிய தத்துவமான வரலாற்றியல், இயக்க வியல் பொருள்முதல்வாதம் இந்த நோக்கத் துடன் செயலாற்றுகிறது.

நடைமுறை வாழ்க்கையிலிருந்து விலகிய, அந்நியப்பட்ட ஒரு துறையாக இருந்த தத்துவத்தை நிஜ உலகில் மனிதர்கள் நடத்தும் போராட்டத்தோடு இணைத்தவர் காரல் மார்க்ஸ். மனிதம் மேம்படு வதற்கு தத்துவம் கருவியாக பயன்பட, வழி காட்டும் தத்துவமாக மார்க்சியம் விளங்குகிறது. இதனால், மார்க்சியம் இதர தத்துவங்களிலிருந்து மேம்பட்டு நிற்கிறது.

சமகால சவால்கள்

சமூகத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத் தும் தேவையில் நின்று, கடந்த காலத் தத்துவங் களை கற்று உணர்ந்தால், எதிர்காலத் தத்துவப் புரிதல் புதிய திசையில் பயணிக்கும். சுரண்டப் படும் மக்களுக்கு உன்னத வாழ்வு மலர அது உதவிடும். மானுடத்தின் பல பிரச்னைகளை பல பரிமாணங்களில் கற்றிட தத்துவம் துணை நிற்கிறது. தெளிவாக அணுகிடவும், மோதிக் கொள்ளும் பல கருத்துக்களை ஆராய்வதற்கான வழிமுறைகளையும் அது நமக்கு கற்றுத் தருவதால் தத்துவம் பயில்வது அவசியமானது.

இந்தியாவில், இன்றைய நிலைமைகளை எதிர்கொள்ளவும், தத்துவம் தேவை. இன்று, முக்கியமான கேள்வி இது: இன்றைய ஆர்.எஸ். எஸ் சங்பரிவாரங்களின் இந்துத்துவத்தைதத்து வப் பார்வையில் எப்படி புரிந்து கொள்வது?

முதலாவதாக நம்பிக்கை என்பதனை இந்துத்துவம் முன்னிறுத்துகிறது. நம்பிக்கை என்று சொல்கிறபோது மனிதர்களுக்கு அப்பாற் பட்ட சக்தி என்ற பொருளில் பயன்படுத்தப்படு கிறது. மனிதர்களால் எதுவும் செய்ய இயலாது என்கிற உணர்வும் இதில் அடங்கியிருக்கிறது. அந்த சக்தி கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்றும் பகுத்தறிவிற்கு அதில் இடமில்லை; அறிவியலுக்கு முற்றாக இடமில்லை என்ற கூறுகளும் இந்த நம்பிக்கை பரிமாணத்தில் அடங்கியிருக்கிறது.

இரண்டாவதாக நம்பிக்கை என்பதில் இந்துத் துவம் இந்து மத நம்பிக்கையை முன்னிறுத்து கிறது. இந்து மத நம்பிக்கை என்றால் அனைத்து இந்து மதப் பிரிவுகளையும் இந்துத்துவம் பிரதி பலிக்கவில்லை. இந்து மதத்திலேயே மிகவும் பிற்போக்கான மதக்கூறுகளை அடையாளப் படுத்தி சுவீகரித்துக் கொண்டது இந்துத்துவம். ஆனால், தங்களது பார்வையே உண்மையான இந்து மதம் என சித்தரித்து சாதாரண மத நம்பிக்கையாளர்களை அவர்கள் திரட்டுகின்றனர். அந்த திரட்டலுக்கு இதர மதங்கள்? மீது வெறுப்பை வளர்ப்பது, அவர்களது முக்கிய தந்திரம். இது, அரசியல் அதிகாரத்திற்கான திரட்டல். இது, ஜனநாயக விரோதமானது.

இந்திய தத்துவத்தில் பரிணமித்த பல கருத்தாக் கங்களில் மறைக்கப்பட்ட பல கூறுகள் உண்டு. இதற்கு,தொடக்க கால சிந்தனைகளான உபநிட தங்களின் சில பிரிவுகளில்,உலகினை ஆராய பொருள்முதல்வாத சாயலில் பகுத்தறிவைப் பயன்படுத்திய விதம், பிந்தைய போக்குகளான துவைதம், வசிஷ்டாத்வைதம் போன்ற பல சிந்தனை களில் அடங்கியிருந்த மனிதநேயம், பன்முக சிந்தனை களை மதிக்கும் போக்கு, போன்றவைகளைக் குறிப்பிடலாம். ஆனால், இந்த கூறுகள் அனைத் தையும் நிராகரிக்கும் சித்தாந்தப் பார்வை கொண்டது இந்துத்துவம். ஆக, இந்திய தத்துவம், இந்து மத நம்பிக்கை ஆகிய இரண்டிலும் மிக பிற்போக்கான போக்கினையே இந்துத்துவம் கொண்டுள்ளது.

எனவே இந்துத்துவத்தை தத்துவ நோக்கில் ஆராய்ந்தால், அது பொருளின் இருப்பையே முற்றாக மறுக்கும் தன்மை கொண்டது என்பதை அறிய முடியும். இதனால், இந்துத்துவத்தை அகநிலை கருத்துமுதல்வாதம் எனும் பிரிவில் தான் சேர்க்க வேண்டும். அதாவது, பொருளை மறுத்து, பொருளாயத உலகு மாயையானது என்ற கருத்தை அது விதைக்கிறது. ஒரு சக்தி அல்லது கடவுள் என்ற பிம்பமே உண்மையானது என்ற நிலைபாட்டை அது கொண்டுள்ளது. உண்மையில் கடவுள் என்ற கருத்தாக்கத்தை அனைத்து சக்தியும் படைத்த தனிநபர் அல்லது தனிநபர் கூட்டமே மக்கள் மேலாண்மைக்கு உகந்தது என்ற உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதனால் தான் நரேந்திர மோடியின் பிம்பம் சாதாரண மனிதர்களிலிருந்து மேம்பட்ட தெய் வீக சக்தி கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது.

எனவே தத்துவத் தளத்திலிருந்தும் இந்துத்து வாவை எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கை என்று அவர்கள் முன்னிறுத்துவதை பகுத்தறிவு, அறிவியல் சார்ந்த பொருள்முதல்வாத கருத்து களை கொண்டு கருத்துரீதியான தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய தத்துவத்தில் முற்போக்கு கூறுகளை உயர்த்திப் பிடிப்பது அவசியம். ஆனால் இந்திய தத்துவம் உருப்பெற்ற வரலாறு முழுவதும் வர்க்க சமுதாயம் வளர்ந்து வந்த வரலாற்றோடு இணைந்தது. இந்த நிலையில் உழைக்கும் வர்க்கங்களின் வர்க்கப் போராட்ட வீரியத்தின் விளைவாக எழுந்த சிந்தனை கீற்றுக்களாக அவற்றை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பழைமையை உயர்த்திப் பிடிப்பதில் எச்சரிக்கை தேவை. பல சந்தர்ப்பங்களில் இது இந்துத்துவத்திற்கு பயன் பட்டுவிடும் நிலை ஏற்படலாம். ஏனென்றால், பழைமையும், பிற்போக்குத்தனங்களும் இந்துத்து வாவின் செயல்பாட்டு தளங்களாக உள்ளது.

அறிவியலோடு தத்துவம்
உலக, பிரபஞ்ச இரகசியங்களை இறைக்கருத்தில் தேடும் போக்கு முடிவில்லாமல் தொடர்கிறது. இந்தியாவில் பொருளின் இருப்பையே மறுத்து, அனைத்தும் மாயை, பொருளே இல்லை அனைத் தும் பிரம்மம் என்று வாதிட்ட அத்வைதம் இன்றும் பல வடிவங்களில் நீடிக்கிறது.
இதற்கு காரணம்? முதலாளித்துவ வர்க்க சமுதாயத்தில் தொடர்ந்து வரும் வர்க்கப் போராட்டம் தான். சுரண்டல் முறைக்கு முற்றுப்புள்ளி வைப் பதற்கு வழிதெரியாமல் பாட்டாளி வர்க்கம் உள்ள நிலையில், இறை கருத்தே மூல முதலானது என்ற தத்துவப் போக்கு தொடரும்.
பொருள்தான் முதலானது, பொருளின் பிரதிபலிப்பே சிந்தனை என்ற அடிப்படையி லிருந்து உலக, பிரபஞ்ச, இயற்கை இயக்கங்களை மார்க்சியம் விளக்குகிறது. அறிவியலோடு இணைந்த இந்த மார்க்சியம் சுரண்டல் முறையிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்ற உத்வேகத்தை அளிக்கிறது.

அறிவியலின் பல துறைகள் வளர்ச்சி பெற்ற நிலை யில் பிரபஞ்சத்தின் தோற்றம், உலகம், உயிர் தோற்றம் பற்றியெல்லாம் ஏராளமான பல கண்டு பிடிப்புக்கள் வெளிவந்த நிலையில் அறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு தத்துவம் பயணிப்பது பயனற்றதாக அமைந்திடும். எனவே, அறிவியல் பார்வையுடன் இணைந்து தத்துவப் பிரச்னைகள் ஆராய்வது இன்றைய முக்கிய தேவை.

மே (2017) மாத மார்க்சிஸ்ட் இதழில் …

கார்ல் மார்க்ஸின் 200-வது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் சூழலில், மே மாத மார்க்சிஸ்ட் இதழ் வெளிவருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பல மக்கள் இயக்கங்களும் ஆண்டு முழுவதும் இந்த கொண்டாட்ட நிகழ்வுகளை பல வடிவங்களில் மேற்கொள்ள உள்ளனர்.

மார்க்சிஸ்ட் இதழிலும்,தொடர்ந்து அவரது வாழ்க்கை குறித்தும், சிந்தனைகள் குறித்தும், விசேட படைப்புக்களை வெளியிட எண்ணியுள்ளோம்.

மார்க்சிய லெனினியம் காட்டும் பாதையில்தான் மார்க்சிஸ்ட் இதழின் அனைத்து படைப்பாக்கங்களும் அமைய வேண்டுமென்ற உறுதிப்பாடு கொண்டது, மார்க்ஸிஸ்ட் இதழ்.

முதலாளித்துவ பொருளாதார முறை மட்டுமின்றி, அதற்கு பக்கபலமாக உள்ள கருத்தியல் அனைத்தையும் அறிவதற்கு மார்க்ஸ் எழுத்துக்களும், மார்க்சியம் உருவாக்கிய இயக்கவியல, வரலாற்றியல்  பொருள் முதல் வாதமும் உதவுகிறது.

முதலாளித்துவ அமைப்பை அறிவதற்கு மட்டுமல்லாமல், அதனை தூக்கியெறிந்து சோசலிசம் படைக்கவும் உலக பாட்டாளி வர்க்கத்திற்கு    வழிகாட்டுவது,  மார்க்சின் எழுத்துக்கள்.

முதலாளித்துவ அறிவுலகம் மார்க்சின் சிந்தனையை மறைக்கவும், திரிக்கவும், திசைதிருப்பவும் முயற்சித்து வருகிறது. அந்த முயற்சிகளை முறியடிக்க கம்யூனிஸ்ட்கள கருத்துப் போராட்டக்களத்தில் தீவிரமாக செயலாற்றிட வேண்டியுள்ளது. மார்க்சிஸ்ட் இதழ் தனது பங்கினை ஆற்றிடும்.

இந்த இதழில் தோழர் ஆத்ரேயா மார்க்சின் 200-வது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி அவரது மகத்தான பங்களிப்பினை விளக்கி கட்டுரை எழுதியுள்ளார்.

வலதுசாரி போக்குகளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தொழிலாளி வர்க்க இயக்கத்தினை சரியான பாதையில் கொண்டு செல்வதில் ஆழமான புரிதல் தேவை. இந்த நோக்கோடு, தோழர்கள் ஏ.கே.பத்பனாபன், ஹேமலதா ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

மேற்கு வங்கத்தில்,மார்க்சிஸ்ட் கட்சி,கட்சி அணிகளுக்கு அரசியல் தத்துவார்த்த கல்வியை அளிக்கும் வகையில் எடுத்த முயற்சியை தோழர் சிரிதிப் பட்டாச்சாரியா விளக்கியுள்ளார்.

அன்றைய சோசலிச சோவியத் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மேன்மை பற்றி சிந்தன் விளக்கியுள்ளார்.
வகுப்புவாத புரட்டல் முயற்சி ஒன்றினை அம்பலப்படுத்திய ஜியா உஸ் சலாம் கட்டுரையை தமிழில் கொடுத்துள்ளார் கி.ரா.சு. கட்சி திட்டம் 5- வது பகுதியை சந்திரா எழுதியுள்ளார். மார்க்சிஸ்ட் இதழ் சந்தா சேர்ப்பும், கருத்தரங்க நிகழ்வுகளும் நன்கு நிறைவுற்றுள்ளன. அனைவருக்கும் ஆசிரியர் குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
– ஆசிரியர் குழு