என். குணசேகரன் கடந்த நூறு ஆண்டுகளில் லெனின் பற்றி அடுக்கடுக்காக பல நூல்கள் இடைவிடாமல் வெளிவந்துள்ளன. அவற்றில் பல நூல்கள் லெனினின் சிந்தனைகள் மீது தாக்குதல் தொடுத்து எழுதப்பட்டவை. அவரை அவதூறு செய்தும், அவரது புரட்சிகர செயல்பாடுகளை இழித்தும், பழித்தும் எழுதப்பட்ட பல நூல்களும் வெளிவந்துள்ளன. அவரைப் பற்றிய நூல்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ஒரு உண்மை மறைக்க முடியாதது. உலக சிந்தனைப் பரப்பில் லெனினது தாக்கம் நீடித்துக் கொண்டே இருக்கிறது என்பதே அந்த உண்மை. அவரைப் பற்றிய…
ஆர். எஸ். செண்பகம் திவாலுக்கு வந்த நவீன தாராளவாதக் கொள்கைகள் பொருளாதார வளர்ச்சியும், அனைத்து மக்களின் முன்னேற்றமும் வேண்டுமெனில், நவீன தாராளவாதக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னது இன்று பொய்யாகியுள்ளது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதன் காரணமாக, பெருந்துன்பங்களுக்கு மக்கள் ஆளாவது மட்டுமின்றி, உலக அளவில் பொருளாதார நெருக்கடி நீடித்து நிலைத்து நிற்கிறது. தெற்குலக நாடுகள் உலகளாவிய கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. வருமான ஏற்றத்தாழ்வுகள், பொருளாதாரச் சுரண்டல்கள், செல்வாதார ஏற்றத்தாழ்வுகள் என ஏராளமான…
தாமஸ் ஐசக்தமிழில்: க.சுவாமிநாதன் மோடி ஆட்சியின் 10 ஆண்டுகள் பற்றி பா.ஜ.க செய்யும் பிரச்சாரமும், நமது பதில்களும் இங்கு தரப்பட்டுள்ளது. பிரச்சாரம் – 1 2029இல் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக வளர உள்ளது. இதோ “மொத்த உள்நாட்டு உற்பத்தி” (GDP – Gross Domestic Product) வளர்ச்சியில் இந்தியாவின் ரேங்க் 2014 – 102015 – 72019 – 62022 – 5 (பிரிட்டனை முந்தி)2027 – 4 (ஜெர்மனியை விஞ்சும்)2029 – 3…
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா 2014ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடியும் இதர பாஜக தலைவர்களும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்ற வகையில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினர். போடப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகளில் 31 சதமான வாக்குகளை (மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 25%) ஆதரவும் பெற்று 16ஆம் மக்களவையில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்றது. அனைத்து கருப்பு சொத்துக்களையும் கண்டுபிடித்துக் கைப்பற்றி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒவ்வொரு வங்கி…
பேரா. ஆர். சந்திரா மானுட விடுதலை என்பது பெண்களின் விடுதலையுடன் இணைந்தது. சமுதாயத்தின் ஒரு பாதியாக இருக்கும் பெண்கள் ஒடுக்கப்படும் வரை, மானுட விடுதலை சாத்தியம் இல்லை என்பதை மார்க்சும், ஏங்கல்சும், லெனினும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஒரு சமுதாயம் முன்னேறுவதை கணிப்பதற்கு அங்கே வாழும் பெண்களின் அந்தஸ்தை ஓரு சிறந்த அளவுகோலாக கருத வேண்டும். விடுதலை போராட்டமும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் சுதந்திர இந்தியாவில் மக்கள் இயக்கங்களும் இந்தியாவில் பெண்கள் நிலையில் முன்னேற்றத்தை முன்னெடுத்துள்ளன. பெண்கள்…
பேரா. டி. ஜெயராமன் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை COP28 மாநாடு துபாயில் நடைபெற்றது. இது உலக வெப்பமயமாதலில் இருந்து வரும் ஆபத்துக்களை எப்படி சந்திப்பது என்பது குறித்து அனைத்து நாடுகளும் இணைந்து நடத்திய மாநாடு. உலக வெப்பமயமாதலை தடுக்க 1992ஆம் ஆண்டு 192 க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து செய்துகொண்ட ஒரு ஒப்பந்தம்தான், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு என்றறியப்படுகிறது. (United Nations Framework…