எதிர்ப்புரட்சி வரலாற்றில் வேர் பிடித்த ஆர்.எஸ்.எஸ்.
அசோக் தவாலே மராட்டிய மாநிலம் நாக்பூரில் 1925 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. பாசிசத் தன்மைகொண்ட இந்த அமைப்பின் தோற்றத்தை விளக்கும்போது, 1919-24 கிலாபத் இயக்கம், 1922 செளரி செளராவில் நடைபெற்ற சம்பவங்களின் காரணமாக ஒத்துழையாமை இயக்கத்தை திடீரென்று மகாத்மா காந்தி திரும்பப் பெற்றுக் கொண்டதால் ஏற்பட்ட பொதுவான ஏமாற்றம் ஆகிய பின்னணியை காரணியாக குறிப்பிடுவார்கள். இவை முக்கியமானவை என்றாலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மராட்டிய மாநிலத்தில் ஏற்பட்ட ஆழமான சமூக, அரசியல் மாற்றங்களுக்கான எதிர்வினையாக […]




