புத்தகங்கள்
செவ்வியல் மார்க்சிய இலக்கிய நூல்கள் மற்றும், நூல் விமர்சனங்களின் தொகுப்பு.
-
லெனின் நினைவு நூற்றாண்டு : லெனினது வரலாற்றுப் பரிசோதனை
என். குணசேகரன் கடந்த நூறு ஆண்டுகளில் லெனின் பற்றி அடுக்கடுக்காக பல நூல்கள் இடைவிடாமல் வெளிவந்துள்ளன. அவற்றில் பல நூல்கள் லெனினின் சிந்தனைகள் மீது தாக்குதல் தொடுத்து எழுதப்பட்டவை. அவரை அவதூறு செய்தும், அவரது புரட்சிகர செயல்பாடுகளை இழித்தும், பழித்தும் எழுதப்பட்ட பல நூல்களும் வெளிவந்துள்ளன. அவரைப் பற்றிய நூல்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ஒரு உண்மை மறைக்க முடியாதது. உலக சிந்தனைப் பரப்பில் லெனினது தாக்கம் நீடித்துக் கொண்டே இருக்கிறது என்பதே அந்த உண்மை. அவரைப் பற்றிய… Continue reading
-
லெனின்: வர்க்கப் போராட்ட நடைமுறை உத்திகளின் வித்தகன்
எம். பசவபுன்னையா 1970ஆம் ஆண்டு தோழர் லெனினுடைய பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, தோழர் எம். பசவபுன்னையா லெனின் குறித்து எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமான சூழ்நிலை குறித்த திட்டவட்டமான ஆய்வு என்ற அடிப்படையில் லெனின் உருவாக்கிய நடைமுறை உத்திகள் குறித்து, தோழர் பசவபுன்னையா மிக ஆழமாக எழுதியிருந்தார். அதிலிருந்து சில பகுதிகள்… மார்க்சிய அறிவுக் கருவூலத்திற்கும், உலகப் பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சிக்கும் அவர் அளித்திருக்கும் பங்கினை நினைவு கூறும் வகையில், அவரது… Continue reading
-
நூல் விமர்சனம்: ஜான் ஸ்மித் எழுதிய 21ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம்
இந்த நூல் பத்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் அத்தியாயமான “உலகளாவிய சரக்குகள்” என்பது 2013ஆம் ஆண்டு வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள தொழிற்பேட்டையில் ராணா பிளாசா என்ற 8 மாடி கட்டிடம் நொறுங்கி போய் அதில் 1,333 தொழிலாளர்கள் இறந்து போன சம்பவத்தை விவரிப்பதுடன் தொடங்குகிறது. இந்த விபத்தில் 2,500 பேர் காயமடைந்தனர். விபத்திற்கு முன்பே கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, அதை மூட வேண்டும் என உத்தரவிட்டும், தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வோம் என மிரட்டியும் நிர்வாகம்… Continue reading
-
திராவிட இயக்கம்: மாற்றைத் தேடும் மறு வாசிப்பு !
திராவிட இயக்கப் பற்றாளர்கள் எந்த நெருக்கடி வந்தாலும் அவற்றை முறியடித்து முன்னேறுவோம் என முழங்கிடலாம். ஆனால், ஒரு வரலாற்றுப் போக்கினை நாம் மறந்துவிடக்கூடாது. எந்தக் கருத்தியலும், அது சார்ந்த இயக்கங்களும் வரலாற்றில் ஒரே வடிவத்தில் மாறுதலுக்கு உட்படாமல் நீடித்ததில்லை. Continue reading
-
சாவர்க்கர்: முகத்திரைக்குபின்னால் !
சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம் சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின் கொடூரமான அடக்குமுறையை எதிர்கொண்டிருந்த சமயத்தில்… Continue reading
-
இந்துத்துவா: உருவாக்கம், திட்டம், பரவல் …
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமீபகால செயல்பாடுகள் வரையிலும் பின்தொடர்ந்து அதன் உள்அம்சங்களை இந்தநூல் விவரிக்கிறது. இந்த விமர்சன கட்டுரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் உருப்பெற்றதிலிருந்து, அதன் மோசடியான உத்திகளின் வழியாக அதிகாரத்தை சுவைக்க வழிவகுத்த ‘ராமஜென்மபூமி’ இயக்கம் வரையிலான காலகட்டம் பற்றியது. Continue reading
-
இங்கிருந்து எங்கே…?
ஜெயகாந்தனது எழுத்தில் இன்றும் நுணுக்க விவரங்களைக் கூறும் ‘யதார்த்த’ப் பண்பு, அதாவது இயற்கையாகப் பாத்திரங்களைத் தீட்டும் ஆற்றல் குறைவின்றியே இருக்கிறது. மனிதாபிமான உணர்வும் இல்லையென்று அடித்துக் கூற இயலாது. ஆயினும் சமுதாய மாற்றத்துக்கு ஆதரவு தருபவராக அவர் இன்று இல்லை. எனவே பிழை எங்கு உள்ளது என்று கவனமாய்த் தேட வேண்டும். Continue reading
-
அமெரிக்கா எப்படி ‘ஏகாதிபத்தியமாக’ நிலவுகிறது?
அமெரிக்காவும், சுயநலம் மிக்க அதன் கூட்டாளிகளும் முதலில் ஒரு நாட்டின் மீது பொருளாதார தாக்குதலை முன்னெடுக்கிறார்கள். பிறகு அந்த நாட்டு மக்களிடையே கலகங்கள் தூண்டப்படுகின்றன. ஆட்சி மாற்றங்கள் இவ்வாறு திணிக்கப்படுகின்றன. Continue reading
-
சாதிக்கு எதிரான களப் போராட்டங்களில் விளைந்த நூல் !
கே.பாலகிருஷ்ணன் “சாதி – வர்க்கம் – விடுதலை” என்ற இந்த நூல் இந்திய சமூகத்தில் ஊடுபாவாக நீடித்து நிலைத்திருக்கும் சாதியம் பற்றிய ஓர் ஆய்வுநூலாக வெளியிடப்படுகிறது. பல சிறந்த படைப்புகளை வெளியிட்டு பதிப்புலகில் முத்திரைப் பதித்துவரும் பாரதி புத்தகாலயத்தின் ஆய்வுப் படைப்புகளில் இது மேலும் ஒரு புது வரவாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் கடந்த 25 ஆண்டு காலமாக எழுதிவந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. 32 பகுதிகள், 300 பக்கங்கள்… Continue reading
-
கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் : பகுதி 1 (சுருக்கம் மற்றும் ஒலி நூல்)
கம்யூனிசத் திசைவழியில் ஓவனின் முன்னேற்றம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தது. வெறுமனே ஒரு கொடையாளியாக மட்டும் ஓவன் இருந்தவரை, அவருக்குச் செல்வமும், பாராட்டும், மதிப்பும், புகழுமே வந்து குவிந்தன. ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியல் வல்லுநர்களும், பிரபுக்களும் அவரின் கருத்துகளை ஆமோதித்து ஆங்கீகரித்தனர். ஆனால், அவர் தம்முடைய கம்யூனிசக் கொள்கைகளை முன்வைத்தபோது, நிலைமை முற்றிலும் வேறானது. Continue reading