July 2022
-
சங் பரிவாரத்தின் உத்திகள்!
வகுப்புவாதத்திற்கு முக்கியக் காரணம் மதம்தான் என சிலர் கருதுகிறார்கள். அப்படி அல்ல. மதநம்பிக்கையும் மதத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அனைவரும் வகுப்புவாதிகளாக மாறுவதில்லை. மதநம்பிக்கை கொண்ட மக்கள் பலர் இதர மதத்தைச் சார்ந்தவர்களோடு சகோதரத்துவத்தோடும் நேயத்தோடும் வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். வகுப்புவாதத்திற்கு மதம் அடிப்படை காரணம் அல்ல. அதே நேரத்தில் மத நம்பிக்கையாளர்களைத்தான் வகுப்புவாதிகளாக மாற்றுகிறார்கள். Continue reading
-
இந்துத்துவா: உருவாக்கம், திட்டம், பரவல் …
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமீபகால செயல்பாடுகள் வரையிலும் பின்தொடர்ந்து அதன் உள்அம்சங்களை இந்தநூல் விவரிக்கிறது. இந்த விமர்சன கட்டுரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் உருப்பெற்றதிலிருந்து, அதன் மோசடியான உத்திகளின் வழியாக அதிகாரத்தை சுவைக்க வழிவகுத்த ‘ராமஜென்மபூமி’ இயக்கம் வரையிலான காலகட்டம் பற்றியது. Continue reading
-
இங்கிருந்து எங்கே…?
ஜெயகாந்தனது எழுத்தில் இன்றும் நுணுக்க விவரங்களைக் கூறும் ‘யதார்த்த’ப் பண்பு, அதாவது இயற்கையாகப் பாத்திரங்களைத் தீட்டும் ஆற்றல் குறைவின்றியே இருக்கிறது. மனிதாபிமான உணர்வும் இல்லையென்று அடித்துக் கூற இயலாது. ஆயினும் சமுதாய மாற்றத்துக்கு ஆதரவு தருபவராக அவர் இன்று இல்லை. எனவே பிழை எங்கு உள்ளது என்று கவனமாய்த் தேட வேண்டும். Continue reading
-
உலகமய காலத்தில் வாழ்விட உத்தரவாதமும் சமூக நீதியும்
துவக்கத்தில் குடிசை பகுதிகள் இருந்த இடங்களிலேயே அதை மேம்படுத்திடும் திட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். புதிய பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் உழைக்கும் மக்கள் குடியிருக்கும் நிலத்தின் மதிப்பின் மீது தனது பார்வையை செலுத்தியது. அதன் விளைவாக, குடிசை பகுதிகளை மேம்படுத்துவது என்பதிலிருந்து குடிசை பகுதிகளை அகற்றுவது என்கிற நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் வந்தனர். அதற்கு தேவையான காரணங்களையும் கட்டமைத்தனர். Continue reading
-
மார்க்சிய கல்வியின் அவசியம்
பிரச்சினைகளிலிருந்து தீர்வை அடைவதற்கு என்ன வழி என்பது குறித்து இன்றைக்கு மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் முதலாளித்துவ அமைப்பு உருவாக்கிய துயரங்களே என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றனர்? எனவேதான் முதலாளித்துவ அமைப்பை அகற்றி ஒரு புதிய சமூகம் படைக்க வழிகாட்டும் மார்க்சியத்தை சாதாரண மக்களுக்கும் அறியப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. Continue reading
-
ஐஃபோன்: லாபம் எங்கிருந்து குவிகிறது?
காலனி ஆதிக்கம் நிலவிய காலத்தில், ஏகாதிபத்திய நாடுகள் உற்பத்தி ஆலைகளை கட்டுப்படுத்தி வந்தன. இன்று ஏகாதிபத்திய நாடுகள் தொழில்நுட்பத்தையும் உற்பத்தி திறனையும் கட்டுப்படுத்துகிறார்கள். மேலைநாடுகளே பெரும்பான்மையான தொழில்நுட்பத்தை தங்கள் வசமாக வைத்துள்ளார்கள். Continue reading
-
தொழிற்சங்கம் அமைத்தல் அமெரிக்கா மற்றும் இந்திய அனுபவங்கள்…
முதலாளித்துவம் தான் உற்பத்தி செய்யும் சரக்கின் விலையை சந்தையில் தீர்மானிக்கிறது. குறைவான விலைக்கு விற்கும் முதலாளி சந்தையில் வெற்றி கொள்கிறார். அதற்காக சரக்கு உற்பத்திக்கான அடக்க செலவை குறைக்கிறார். அது பெரும்பாலும் உழைப்பு சக்தியின் விலையை குறைப்பதாக அமைகிறது. அதன் மூலம், சரக்கின் விலையை குறைத்து சந்தையில் போட்டியிட முடிகிறது. Continue reading
-
தேசிய குடும்பநல ஆய்வின் தரவுகள் தரும் படிப்பினைகள்
கடந்த முப்பது ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. தேச உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதத்தை மட்டுமே, நாட்டு முன்னேற்றத்திற்கான அளவுகோலாக, முன்வைக்கும் ஆளும் வர்க்க அறிவுஜீவிகள், இக்கொள்கைகள் உழைப்பாளி மக்களுக்கு ஏற்படுத்திவரும் இன்னல்களை, கண்டு கொள்வதில்லை. Continue reading
-
இலங்கை: நெருக்கடியும், படிப்பினைகளும் !
உலகமய, தாராளமய கொள்கைகளை கடைப்பிடித்த பல மூன்றாம் உலக நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. மக்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதால், உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடும் காலமாக இந்த காலம் இருந்து வருகிறது. Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலும் ஸ்தாபனமும்
ஸ்தாபனம் என்பது அரசியல் நிலைபாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பேராயுதம். மையப்படுத்தப்பட்ட கட்சி கமிட்டி (மத்திய குழு), மையப்படுத்தப்பட்ட கட்சியின் ஏடு, தொழில் முறை புரட்சியாளர்கள், ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு, வர்க்க வெகுஜன அமைப்புகளைக் கட்டுவது, ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஏதேனும் ஒரு வெகுஜன அமைப்பில் பணியாற்றுவது, கட்சி திட்டத்தை ஏற்பது உள்ளிட்ட அம்சங்களை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். Continue reading