November 2022
-
சோவியத் புரட்சியும் தமிழகமும்
நவம்பர் புரட்சியும், சோவியத் இலக்கியங்களும், சோவியத் மக்களும் அரசும் சாதித்த சாதனைகள் தமிழக இலக்கியப் பரப்பில் பெரும் செல்வாக்கு செலுத்தின. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதுகிறார்: ‘இரஷ்ய ஆட்சி பொதுமக்கள் ஆட்சி. பொதுவுடமை ஆட்சி. அதனைச் சர்வாதிகாரம் என்பது தவறு. இரஷ்யர்கள் கூட்டாக உழைக்கிறார்கள். உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள். தம்மைத் தாமே ஆண்டு கொள்கிறார்கள். அதற்கேற்ற சமூக அமைப்பை அமைத்து அதன் வழியிலே செல்கின்றார்கள். அங்கே இரப்பாரும் இல்லை. புரப்பாரும் இல்லை. ஆண்டியும் இல்லை. Continue reading
-
19 ஆம் நூற்றாண்டு தென் தமிழக சமூக இயக்கம்
நாடார் மக்களின் சமூக இயக்கத்தை விவரிக்கும் போது தென் திருவிதாங்கூர் பகுதியில் (தற்போது கன்யாகுமரி மாவட்டம்) நடந்த முக்கியமான சாதி எதிர்ப்பு எழுச்சியை நாம் தவிர்க்க முடியாது. அங்கு தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்கள் நடத்தப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. Continue reading
-
சோவியத் ஒன்றியத்தின் சோசலிச பொருளாதார சாதனைகள்
உண்மையில் சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு வழிவகுத்தவை எவையெனில், சோவியத்தின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு திட்டமிட்டவகையில் தொடர்ந்த மேற்குலகின் முயற்சிகள்; ரீகன் நிர்வாகத்தின் கூர்மைப்படுத்தப்பட்ட பனிப்போர்; இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளிவர ஒரு வழி கண்டுபிடிக்கத் தெரியாத சோவியத் தலைமையின் இயலாமை ஆகியவையே ஆகும். Continue reading
-
சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !
சோசலிச சமூக அமைப்பு முதலாளித்துவத்தை விடவும் மேம்பட்ட ஒன்று என்பதை அமெரிக்கா நன்கு அறியும். எனவே, கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் தகர்ந்ததைப் போலவே, சீனாவின் வலிமையையும் என்ன விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்க மேலாதிக்கத்தை மையப்படுத்திய உலகமாகவே (ஒரு துருவ உலகமாகவே) நிலைமை தொடர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதனால் அவர்களுக்கு அதீத லாபங்கள் கிடைக்கின்றன. Continue reading
-
குமார் ஷிரால்கர்: ஒரு பன்முகப் புரட்சியாளர்
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாகவும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பாகவும் தனிச் சிறப்பு மிக்க கம்யூனிஸ்ட் புரட்சியாளரான தோழர் குமார் ஷிரால்கருக்கு எனது கரமுயர்த்தி செவ்வணக்கத்தை செலுத்துகிறேன். மேலும் அதிக வலுவோடும், உறுதியோடும், அவர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்வதுதான், நாம் அனைவரும் தோழர் குமாருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். Continue reading
-
சோசலிச பதாகையை உயர்த்திப் பிடிக்கும் சீன கம்யூனிஸ்டுகள் !
பொது உடைமை என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர பலதரப்பட்ட முறைகள் அதனுடன் சேர்ந்து வளரும் முறை, உழைப்புக்கேற்ற விநியோகம் என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர விநியோக முறைகள் அதனுடன் சேர்ந்து நிலைக்கும் முறை, மற்றும் சோசலிச சந்தை பொருளாதார முறை, ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை சோசலிச பொருளாதார முறை, இவையே சீன தன்மைகளைக் கொண்ட சோசலிசத்தின் முக்கிய தூண்கள் Continue reading
-
மார்க்சிஸ்ட் இதழ்களின் கருவூலம்
‘மார்க்சிஸ்ட்’ தத்துவார்த்த மாத இதழ்கள், வெளியான காலத்தில் இருந்து 2021 வரையில், அச்சு இதழ்களை அப்படியே எண்ணியல் (டிஜிட்டல்) வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கோப்புகள் இனி ஆய்வாளர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இணையத்தில் கிடைக்கும். தமிழகத்தின் பல்வேறு துறைகளில் ஆவணங்களை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி பாதுகாக்கும் மகத்தான பணியை மேற்கொண்டுள்ளது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். சி.பி.ஐ(எம்) கருவூலம் முயற்சியில், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துடன் இணைந்து மார்க்சிஸ்ட், செம்மலர் மற்றும் தீக்கதிர் இதழ்கள் டிஜிட்டல் வடிவில்… Continue reading
-
‘சுரங்கம்’ நாவல்: ஒரு ஆய்வு !
பிகாஸ் விகாஸ் என்னும் வங்கமொழிப் பதத்திற்கு ‘வெளிச்சம்’, ‘பிரகாசம்’, ‘வளர்ச்சி’ என பல பொருள் உண்டு. சுரங்க வாயிலில் வெளிச்சம் பரவி, நிரந்தர விடியல் காணும் இந்த புதினத்தின் வெற்றியையும் அவ்வாறே சொல்லலாம். வேற்று மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியில் செய்யப்பட்ட கள ஆய்வில் விளைந்த இந்த நாவல், தமிழில் வெளியானது. பல்வேறு வட்டார மொழிகளில் வெளியாகி உணர்வூட்டுகிறது. அதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது. Continue reading
-
முற்றுகையின் கீழ் இந்திய ஜனநாயகம்…
இந்திய நாட்டில், முதலாளித்துவ சக்திகளின் குறுகிய பார்வை போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கூட, சுதந்திரம் பெற்று ஏழு பத்தாண்டுகள் கடந்த பின்னரும், நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது உயிர்ப்புடன் இருக்கிறது. இவ்வளவு காலம் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணம், இந்திய மக்களும், ஜனநாயக சக்திகளும் இணைந்து நடத்திய போராட்டங்கள்தான். Continue reading
-
திராவிட இயக்கம்: மாற்றைத் தேடும் மறு வாசிப்பு !
திராவிட இயக்கப் பற்றாளர்கள் எந்த நெருக்கடி வந்தாலும் அவற்றை முறியடித்து முன்னேறுவோம் என முழங்கிடலாம். ஆனால், ஒரு வரலாற்றுப் போக்கினை நாம் மறந்துவிடக்கூடாது. எந்தக் கருத்தியலும், அது சார்ந்த இயக்கங்களும் வரலாற்றில் ஒரே வடிவத்தில் மாறுதலுக்கு உட்படாமல் நீடித்ததில்லை. Continue reading